எதிர்பாராது வரும் அதிர்ச்சிகளிலிருந்து உடனடியாக மீளத் தியானிக்க வேண்டிய முறை

Remote power energy

எதிர்பாராது வரும் அதிர்ச்சிகளிலிருந்து உடனடியாக மீளத் தியானிக்க வேண்டிய முறை 

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்?

திடீரென்று ஒரு சுழிக் காற்று வருகின்றது. எதிர்பாராது ஒரு விஷத் தன்மையை நுகர்ந்துவிடுகின்றோம் சிறு மூளை பாகம் சென்றுவிடுகின்றது. நமக்குள் இரத்தத்தை வடிகட்டும் அந்த உணர்வின் உறுப்புகளை நிறுத்திவிடுகின்றது.

அல்லது அந்தச் சுவாசப் பையிலே இத்தகைய இயக்கச் சக்திகள் வந்தால் ஹார்ட் அட்டாக் (HEART ATTACK). ஹார்ட் அட்டாக்கிலே பலவிதம் உண்டு.

உறுப்புகளை இயக்கும் அந்தச் சிறு மூளை பாகம் தாக்கிவிட்டால் இந்த உறுப்புகள் அப்படியே நின்றுவிடும்.

ஒரு வாத நோய் வந்தால் கை கால்கள் மற்றும் அங்கங்கள் ஒரு பக்கம் செயலிழந்துவிடுகின்றதோ இதைப் போல நுண்ணிய அலைகளை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வின் இயக்கங்களில் சிறு மூளைப் பாகங்களில் அந்த உணர்ச்சியைத் தடைப்படுத்தி அதை இயக்காது தடைப்படுத்தி விட்டால் ஹார்ட் அட்டாக்.

டாக்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

இருதயத்தில் மூன்று வால்வுகளில் இருக்கக்கூடிய நிலைகளில் அதில் அடைப்படும் பொழுது வலி வந்து செல்லும்.

ஆனால் ஹார்ட் அட்டாக் என்பது உணர்வின் தன்மை எடுத்தவுடன் இயக்கவில்லை என்றால் விரிந்ததைச் சுருக்காது அதே மாதிரி சுருங்குவது விரியாது. அதற்கப்புறம் விரிய முடியாது போய்விட்டால் மூச்சு இழுக்கும் சக்தி வராது.

மடிந்துவிடுவார்கள். இது வேறு. ஹார்ட் அட்டாக் இத்தனைவிதமான நிலைகளில் வருகின்றது.

தியானம் செய்து கொண்டிருக்கின்றேன் திடீரென்று வந்தது என்றால் உடலை விட்டுப் போவது அல்ல. இந்த விஞ்ஞான விஷத்தின் தன்மையால் கதிரியக்கங்கள் பரவினால் அது நமக்குள் புகாத வண்ணம் பாதுகாத்துப் பழக வேண்டும்.

உயிரைக் கடவுளாக எண்ணி எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அருள் ஒளி படரவேண்டும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று குருநாதர் காட்டிய வழியில் அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம்.

தியானிக்கும் பொழுது இதை எண்ணி எடுத்தால் எளிதில் பெற முடியும். அந்த மகரிஷிகளைத் தொடர்பு கொள்ளும் அந்த நினைவைக் கொண்டு வந்தீர்கள் என்றால் உங்கள் வளர்ச்சிக்கு அது உதவும்.

தலை வலி மேல் வலி கைகால் வலி என்று எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக்கொதிப்பு நீங்க வேண்டும் என்று எண்ணத்தை வலுப்படுத்தி எண்ணினால் அதையெல்லாம் மாற்ற முடியும்.

இந்தப் பழக்கத்திற்கு வரும் பொழுது தீமைகளை மாற்றி இனி எந்த விஷத்தன்மை வந்தாலும் அதை மாற்றியமைக்கும் வல்லமை நாம் பெறுகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply