உடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்…?

Noble soul

உடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்…? 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் ஞான வித்தை எமக்குள் ஆழமாகப் பதிவு செய்தார்.

பதித்த வித்தை எமக்குள் வளர்ப்பதற்கு “எங்கெங்கெல்லாம் மகரிஷிகளின் அருள்ஞான சக்தி தொடர்ந்து உள்ளதோ… அங்கெல்லாம்…” எம்மைக் கால் நடையாக சென்றுவர கட்டளையிட்டார்.

ஞானிகளின் உடலில் விளைந்த அருள் ஞான சக்திகள் அந்த இடங்களில் பதிந்திருப்பதை படர்ந்திருப்பதை எம்மை நுகர்ந்தறியச் செய்தார்.

மேலும் அதனின் “ஆனந்த நிலையினை” எமக்குள் விளைவித்துக் கொள்ளச் செய்தார்.

பூமியில் மனிதராக பிறந்த நாம்
1.எவ்வாறு இந்த உடலை விட்டு வெளியே செல்ல வேண்டும்?
2.சென்றபின் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும் என்று அதையும் குருநாதர் செய்து காட்டுகின்றார்.
3.உயிரான்மாவை உடலை விட்டுபிரியச்  செய்கின்றார்… “ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்”.
4.ஒளியின் சுடராக ஆனபின் இந்த உயிரான்மா எந்த நிலையில் இருக்கும்? என்பதையும் நிலைக்கச் செய்து காட்டுகின்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துருவ நட்சத்திரத்தின் இயல்புகளைக் காட்டி அதிலிருந்து ஆற்றல்மிக்க சக்திகள் வருவதை எம்மை நுகரும்படி செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எமக்கு எவ்வாறு பெறும்படி செய்தாரோ அதே வழியில் தான் உங்களுக்கும் பெறச் செய்துகொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிர் வழி சுவாசியுங்கள்.

பேரருள் பேரொளியின் உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக “ஒளியின் சுடராக” விளைகின்றது.

நீங்கள் அனைவரும் அதனைப் பெறவேண்டும் என்பதற்காக அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

1.நீங்கள் எந்த அளவிற்கு உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
2.அந்த அளவுக்கு ஆழமாக
3.யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகின்றன.

யாம் கொடுக்கும் உபதேசங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் வாழ்வில் கடைப்பிடித்துப் பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
1.உங்கள் உயிரை எண்ணி ஏங்கும்போது
2.அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து
3.உங்களிடத்தில் தீமையின் தன்மைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

இந்த உபதேசத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளும் அன்பர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த இவ்வுலகில் நஞ்சான நிலையை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும்
2.மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்
3.“என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளி சரீரத்தை பெறவேண்டும் என்று
4.நெஞ்சில் அவா கொண்டு இதை வெளிப்படுத்துகின்றோம்.

குருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து வரும் அனைவருக்கும் எமது அருளாற்றலைப் “பூரணமாக” வழங்குகின்றோம்.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை மகாஞானிகளின் அருளாற்றலின் துணை கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம் விண்ணும் மண்ணும் போற்றும் மகாஞானிகளில்… “நீங்களும்” ஒருவராக இருப்பீர்கள்.

“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”

 

Light world.jpg

“ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு”

நட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து புவி ஈர்ப்பில் அது சிறுகச் சிறுக வளர்ந்து வைரமானபின் அது வெடித்து தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.

இதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது “அறிவின் வளர்ச்சி, அறிந்திடும் வளர்ச்சி”, வருகின்றது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று,  நமது ஜீவ அணுக்களின் துணை கொண்டு கண்களின் வழி ஒரு உணர்வின் அறிவினை அறியும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ அதைப்  போன்று நமது உயிர் மின் அணு போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது, அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின் அணுக்களாக இயங்குகின்றது.

எப்படி மேட்டூரில் மின் அணுவினை உருவாக்கும் பொழுது நம் வீட்டில் எந்தெந்தப் பொருள்களில் அதை இணைக்கின்றோமோ அந்த மின் அணு அதை இயக்கி அதன் வழி காண்கின்றோம்.

இதைப் போன்றுதான் நமது உயிரின் துணை கொண்டு உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின் இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும் நமது உயிரே சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.

நாம் எப்படி ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ அதைப் போன்றே நமது உயிரும் அந்த  நிலை பெறுகின்றது. சூரியனின் துணை கொண்டு அந்த மின் அணுக்கதிர்கள் நம் உடலில் உள்ள மின் அணுக்களை இயக்குகின்றது.

இருப்பினும் பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு மனித உடலில் விஷத்தினை வென்றவன் அகஸ்தியன்.

விஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று,ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி அருள் மணம் பெற்று ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே உயிரணுக்களை வளர்த்து துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

27  நட்சத்திரங்களும், கடும் விஷத்தன்மை கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால் வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப் பொடி செய்து சாப்பிட்டால் மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.

ஆனால்  விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே உலகத்தை இயக்குகின்றது.

இன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால், விஷத்தின் தாக்குதலால்தான் வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது.

நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான் துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதைப் போன்று ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான் இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளதை நாம் அறிதல் வேண்டும்

நமது ஆறாவது அறிவால் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் எளிதில் பெறுவது என்றால் மிகவும் கடினம். குருவின் துணை இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.

ஆகவேதான் உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.
1.நாம் ஒவ்வொரு நாளும்
2.உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது
3.இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று  உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
1.உயிரின் துணை கொண்டு  துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது
2.குருநாதர் எனக்கு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
3.நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

உங்களுக்குள் நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு இதை உபதேசிப்பது.

ஆகையினால் மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.

ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால் ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம் உப்பு போன்ற நிலைகள் இருந்தால் அது  காரத்தின் சுவையாக மாறும். பாலின் தரத்தின் சத்தைக்  காண முடியாமல் போய்விடும்.

நாம் எத்தனையோ கோடி  உடல்களில் இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி உணவாக உட்கொண்டோம்.

இப்படிப் பல நரக வேதனைப்பட்டு தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம்  மனித உடல் பெற்றது நமது உயிர்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும் ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து அதன் உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று இன்று மனிதனான  இந்த உடலுக்குப் பின்
1.உயிர் நம்மை உருவாக்கியது என்று
2.எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு
3.என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவில் விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும் ஞானம்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை.

அதைப் பெறும் நிலையாகத்தான் இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம்.

ஆகையால், நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான் இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது

1.நாம் இந்த உடலை  விட்டு  எந்த நிலையில் சென்றாலும்
2.ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்)
3.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில் நாம் இணைந்திடல் வேண்டும்.

அங்கே இணைந்து விட்டால் அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும் அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள் அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள் என்றும் ஏகாந்த நிலை என்ற அந்த நிலை பெறுவது.., “இந்த மனித உடலில்தான்”.

ஆனால் நம்முடைய இந்த சந்தர்ப்பம் மிகப் பெரிய சக்தி வாய்ந்த குருவின் அருளைப் பெற்றதினால் நம் அனைவருக்கும் அந்தப் பாக்கியம் கிடைத்துள்ளது.

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம்.

இந்தத் தியானத்தின் மூலம் நம்முடைய முன்னோர்களையும் குலதெய்வங்களையும் “சப்தரிஷிகளாக… ஆக்க முடியும்”

Big Dipper - Kalki.jpg

இந்தத் தியானத்தின் மூலம் நம்முடைய முன்னோர்களையும் குலதெய்வங்களையும் “சப்தரிஷிகளாக… ஆக்க முடியும்…!”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரியும் முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அங்கே அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விட்டுப் பிறவா நிலை எண்ணும் அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

சிலர் கேள்விகள் கேட்கலாம், எங்கள் மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்று பல காலம் ஆகிவிட்டது. அவர்களை எப்படிச் செலுத்துவது..? அது முடியுமா…?” என்று எண்ணலாம்.

1.அவர்கள் பகைமை கொண்டிருந்தால் பகைமை கொண்டவர் உடலுக்குள் சென்றிருப்பார்கள்.
2.பாசத்துடன் வாழ்க்கையில் சென்றிருந்தால் பாச உணர்வு கொண்ட உடலுக்குள் சென்று பேயாக உருவாகி அங்கே நோயாக உருப்பெறச் செய்வார்.
3.அதே சமயத்தில் துர் மரணம் அடைந்து எந்தப் பக்தியுடன் சென்றதோ அத்தகைய பக்தி கொண்ட உடல்களில் சென்றிருக்கும்.
4.இதைப் போன்ற நிலைகளில் இருந்தாலும் அந்த உடல்களை விட்டு வெளி வந்தபின்
5.அந்த உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சாதாரணமாக அதனின் இரத்த சம்பந்தம் உள்ள அவரைப் பற்றி எண்ணுபவர்கள் இருக்கும் வரை கடைசி நிலைகளில் எந்த உணர்வை அதிகமாக எண்ணியிருந்ததோ அந்த இடங்களில் தான் சுழன்று கொண்டிருக்கும்.

குறைந்தது மற்றொரு உடல் பெறுவதற்கு அதனுடய முந்தைய நிலைகள் மறக்கப்பட்ட பின் 150-200 ஆண்டுகளுக்குப் பின் தான் மறு (புதிய பிறப்பு) உடல் பெறும்.

(ஆனால், மிருக உடல்களுக்குள் சென்றிருந்தால் விண் செலுத்த முடியாது)

பௌர்ணமி அன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து
1.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும்
நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.

அவ்வாறு தியானித்த அந்த வலுவின் துணை கொண்டு எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் எளிதில் செலுத்திவிடலாம்.

1.நாம் உடலுடன் உள்ளோம்.
2.அவர்கள் உயிரான்மாக்கள் எடையற்றது.
3.இயந்திரம் போன்று நாம் உந்தித் தள்ள முடியும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வே உங்கள் உடல். இதைப் போன்று தினசரி தியானித்து அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று அங்கே இணைத்தல் வேண்டும்.

அவர்கள் இருக்கும் இன்னொரு உடல்களிலிருந்து அது எந்த நேரம் வெளி வரும் என்று சொல்ல முடியாது.

1.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் அங்கே அந்த ஆன்மாவில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்.
2.வெளியேறிய பின் இதைப் போன்று நாம் தியானித்ததன் வலு கொண்டு
3.இன்னொரு உடலுக்குள் போகாதபடி அவர்களை விண்ணிலே செலுத்த முடியும்.
4.உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க முடியும்… சப்தரிஷிகளாக ஆக்க முடியும்…!
5.ஆகவே பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாக மீண்டும் மற்றொரு உடலுக்குள் போகாது தடுக்க முடியும்.

நாம் நமது மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் தான் நாம் அங்கிருந்து எளிதில் சக்திகளைப் பெற முடியும்.

இந்த வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். நமக்குப் பின் நம் குழந்தைகள் நம்மை விண் செலுத்துவார்கள். அன்றைய ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அடையலாம். சாஸ்திரப்படி இது தான் ஞானிகள் சொன்னது.

அதை விட்டு விட்டுச் சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஆற்றிலேயும் கடலிலேயும் கரைத்தால் அதனால் எதுவும் பலன் இல்லை.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.
2.நமக்குச் சொந்தமானது உயிர் ஒன்று தான்.
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுவதே அழியாதது. அதுதான் வேகா நிலை.
4அப்படி அடைந்தவர்கள் சப்தரிஷிகள் இன்று சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.
5.நம் முன்னோர்களையும் நாம் சப்தரிஷிகளாக ஆக்க வேண்டும்.

“பிறரைக் காத்திட வேண்டும்” என்று செயல்பட்ட மகான்கள் விண்ணுலகம் சென்ற நிகழ்வு

Light world.jpg

“பிறரைக் காத்திட வேண்டும்” என்று செயல்பட்ட மகான்கள் விண்ணுலகம் சென்ற நிகழ்வு 

நான் ஏதோ.., “கதை சொல்கிறேன்” என்று எண்ணி விடாதீர்கள்.

இயற்கை நிலைகளில் பித்தனைப் போன்று இருந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேச வாயிலாக அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார்

“மனிதனும் தெய்வமாக வேண்டும்.., தெய்வ நிலை கொண்டு வேகா நிலை பெற வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் வெளிப்படுத்தினார்.

1.மண்ணுலகில் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.
2.அவர்களை அறியாத தீமைகள் நீங்க வேண்டும்
3.மனிதனை மனிதனாக்க வேண்டும்.
4.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்.
6.பற்றுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற நிலையை உணர்த்திய இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், மகாத்மா காந்தி போன்ற இன்றைய நிலையில் எத்தனையோ ஏனைய ஞானிகளும் மகான்களும் நம் பூமியிலே வாழ்ந்தார்கள்.

இதைப் போல ஓவ்வொரு மகானும் சொல்லி இருந்தாலும் அவர்களைப் பின்பற்றியவர்கள் என்ன செய்தார்கள்?

இராமலிங்க அடிகள் இந்த உடலைப் விட்டு பிரிந்த பின் அவரை யாரும் விண் செலுத்தும் நிலை இல்லை. அவரைப் போற்றி துதிக்கும் நிலைதான் இருந்ததை தவிர பற்றுடன் பற்றித் தங்களுடைய வாழ்க்கைக்காகப் பற்றும் நிலை தான் வந்தது.

அவர்களுடைய அன்பைப் பெற்றனர். இந்த மனித வாழ்க்கையைத்தான் எண்ணி அவர்களிடம் வேண்டியிருந்தார்கள். ஆனால், அவர்கள் உடலை விட்டு அகன்ற பின் மகான்களின் ஆன்மாக்களை யாரும் விண் செலுத்தவில்லை.

ஆகவே இது காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள். பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள்.

சூரியன் எவ்வாறு தனக்குள் ஒளியின் சுடராக அனைத்தையும் மாற்றுகின்றதோ அதே போல மகரிஷிகள் எவ்வாறு மாற்றினரோ எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்று அத்தகையை மகான்கள் எண்ணினாலும் “விண் செல்லும் ஆற்றலை..,” அவர்களும் கற்றுணரவில்லை.

மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. “விண் செல்ல வேண்டும்” என்று யாரும் எண்ணவில்லை.

இத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு. “நீ முதலில் அவர்களை விண் செலுத்து” என்று அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.

காந்திஜி “மதங்கள் இல்லை.., பேதங்கள் இல்லை” என்று உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வெளிப்படுத்தினார்.

மக்களுக்குள் ஐக்கியமாக வாழ்ந்து மனிதன் என்ற ஆறாவது அறிவை கொண்டு நாம் அனைவரும் தீமைகளிலிருந்து விலகி நின்று உலக மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நிலைகள் கொண்டு எடுக்க வேண்டும் என்று உணர்த்தினார்.

அவ்வாறு அவர் உணர்த்தினாலும் இவர்களுடைய வேட்கையின்  நிலைகள் கொண்டு வெறி கொண்ட உணர்வு கொண்டு அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சுட்டு வீழ்த்தினார்கள்.

காந்திஜியின் எண்ணங்கள் அப்பொழுதும் மற்றவர் மேல் பகைமை கொள்ளாது “இராமா… இராமா…” என்று உயர்ந்த குணத்தைச் சாந்தம் கொண்டு பிறருக்கு.., “என்னால் தீங்கு வரக்கூடாது” என்றுதான் எண்ணினார்.

அப்படி எண்ணினாலும் அவர் விண் செல்ல வேண்டும் என்ற நிலை அறவே அற்று விட்டது.

அத்தகைய மகான்களை எல்லாம் இன்று போற்றித் துதிக்கின்றோம். ஆனால், அதன் மறைவிலே பல தவறுகள் செய்வோரும் இன்று உண்டாகி விட்டார்கள்.

அவர் செய்த நன்மைகளைப் புகழ்கின்றோம். ஆனால் புகழ்ச்சி நிலைகள் கொண்டு மனிதர்கள் தங்களுடைய சுக போகங்களுக்காகத் தவறு செய்யும் நிலைகளாக அதை உருமாற்றி விட்டார்கள்.

இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்கே எமது குருநாதர் இதையெல்லாம் சொன்னார்.

உலகில் எத்தனையோ மகான்கள் தோன்றினர். ஆனால் அந்த மகான்களின் உபதேசங்களை இந்த மனித வாழ்க்கைக்குத்தான் பின்பற்றினார்களே தவிர அவர்கள் காட்டிய அற நெறிகளை யாரும் பின்பற்றவில்லை.

1.இந்த மனித வாழ்க்கையைச் சதம் என்றே எண்ணினார்கள்.
2.சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்.
3.சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு
4.சதமற்றுப் புழுவைப் போல இன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.

இதனின்று மீட்டிட வேண்டும் என்பதற்கே சொல்கிறேன் நான் கொடுத்த அருள் உணர்வின் ஞான வித்தை உன்னுள் வளர்த்து விடு என்றார் குருநாதர்.

பிறரைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அந்த மெய் ஞானிகளுடன் இருந்து தனித்து நின்று “நீ விண் செலுத்து” என்றார்.

அவர்களின் துணை கொண்டு இந்தப் புவியிலே விளைந்த அந்த ஆன்மாக்களைச் “சப்தரிஷி மண்டலத்துடன்…, இணைக்கக் கற்றுக் கொடுத்தார்” மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கிறது?
2.எதனின் உணர்வை உனக்குள் கவர வேண்டும்?
3.எதனின் வலுவின் துணை கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்?
4.அந்த ஆன்மாக்களை உந்தி விண்ணிலே வீசி விட்டால் அந்த ஞானிகள் அருகிலே செல்லும்போது உடல் பெறும் உணர்வைக் கரைத்து விடுகின்றது.
5.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது? என்று அவர் எம்முடன் இருந்தே இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் “நானல்ல…,” குருநாதர் காட்டிய உணர்வின் தன்மையே இது.

ஒரு மரம் எவ்வாறு தன் மணத்தின் தன்மை கொண்டு அதனுடைய உணர்வு கொண்டு இயக்குகின்றதோ இதைப்போல ஒரு மனிதனுக்குள் எடுத்துக்கொண்ட உணர்வின் செயல் எதுவோ அதனின் நிலைகளையே பேசுவர். அதனின் நிலையிலேயே வலுப்படுவர்.

இதைப்போல மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருக்குள் விளைந்த ஆன்ம ஞானத்தை மெய் உணர்வின் தன்மையை விண்ணில் வளர்ந்துக் கொண்டிருக்கும் உணர்வுகளைப் பரப்பும் மார்க்கத்தைக் காட்டினார்.

1.மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று வாழ்ந்த மகான்கள்
2.சாதாரண வாழ்க்கையிலிருந்து அவர்கள் ஆன்மா பிரிந்த பின்
3.மீண்டும் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை முதலில் விண் செலுத்து என்றார்.
4.அவருடன் இருந்து அந்த மகான்களை விண் செலுத்தினோம்.

இராமலிங்க அடிகள், போகர், இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகாநந்தர், இராகவேந்திரர், ஐயப்பன் இவர்களையெல்லாம் விண் செலுத்தச் செய்தார் குருநாதர்.

அதனின் நிலை கொண்டுதான் அவர்களின் தத்துவத்தை இன்று நாம் பருகும் நிலையாக எமக்குள் அந்த உணர்வின் சத்தை ஊட்டி நீ இவ்வாறு பருக வேண்டும் என்று உணர்த்தினார்.

அவர்கள் முதலில் விண் செல்லும் போது எல்லோரும் ஐக்கிய உணர்வு பெற வேண்டும் என்று எண்ணச் செய்தார்.

1.அவர்கள் விண் செல்லும் போது
2.அவர்களின் உணர்வின் தன்மை உனக்குள் வருவதும்
3.உன் சொல்லைக் கேட்டுணர்ந்தோரும் ஐக்கிய உணர்வும் மெய் உணர்வைப் பெறும் தகுதியையும் பெறுகின்றனர் என்றார்.

இதைப் போல் நம்மை வளர்த்த தாய் தந்தையர்களின் மூதாதையர்களும் நம்மை வளர்த்திட எத்தனை நிலைகள் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி என்று சொன்னால் அவருடைய சிரமத்தையும் பார்க்காது நமக்கு எத்தனையோ நிலைகளைச் செய்தார்கள்.

அதே போல் அந்த ஆன்மாக்களையும் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செலுத்த வேண்டும் என்று இத்தகைய நிலைகளையும் குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகக் காட்டினார்.

ஆனால், இன்றைய நிலையில் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த முன்னோர்கள் குல தெய்வங்கள் குடும்பத்தை காத்திட்ட நிலைகள் கொண்டு அவர் ஆன்மாக்கள் பிரிந்து சென்றபின் என்ன செய்கின்றார்கள்?

அமாவாசை அன்று இருண்ட நாளில் அவருக்கு வேண்டிய உணவை வைத்து அவர்களுக்கு வேண்டிய மற்றவைகளையும் படைத்து அழைக்கின்றார்கள்.

அவர்களை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கே இழுத்துப் பழகி விட்டனரே தவிர ஒளி என்ற சரீரம் கொண்ட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் இணைக்கும் நிலை முழுவதுமே அற்றுப் போய்விட்டது.

ஐதீகம் சாஸ்திரம் என்ற நிலைகள் இருளான அமாவாசை நாள்களில் அவர்கள் உணவாக உட்கொண்ட நிலைகள் கொண்டு அவர்களை ஏங்கி இந்தப் புவிக்குள் இழுக்கும் நிலைகளாகச் சாஸ்திர விதிகளை மாற்றி விட்டனர்.

ஆனால், அவர்களுக்கு உணவு எப்படிக் கொடுக்க வேண்டும்?

பிறவா நிலை பெற்ற அருள் மகரிஷிகளின் உணர்வை என்றென்றும் அவர்கள் உணவாகப் பெற்று அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு நாம் விண் செலுத்த வேண்டும்.

“அங்கே இணைத்து” உடல் பெறும் உணர்வைக் கருக்கி விட்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக ஒளிச் சரீரம் பெறச் செய்தல் வேண்டும்.

இவ்வாறு தீமையை ஒடுக்கி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதை நீ பருகு என்றார். “எல்லோருக்கும் அதைக் கிடைக்கச் செய்” என்றார்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

இறந்தவர்களின் ஆன்மாக்களைச் சாந்தி அடையச் செய்ய வேண்டிய முறை

இறந்தவர்களின் ஆன்மாக்களைச் சாந்தி அடையச் செய்ய வேண்டிய முறை…? 

பொதுவாக இன்று குடும்பத்தில் உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் என்ன செய்வார்கள்?

1.நேற்று வரை நன்றாக இருந்தீர்கள்.
2.நன்றாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள்
3.எங்களுக்கெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தீர்கள்,
4.”இன்று இப்படிப் போய்விட்டீர்கள்…!” என்று சொல்லி எண்ணி எண்ணி அழுவார்கள்.

அதாவது சொந்தம் அதிகமாக இருந்ததால் இப்படி அழுவார்கள். இப்படிச் செய்தால் அந்த உணர்வின் தன்மை என்ன ஆகும்?

1.இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டாய்… இன்னும் நீ கஷ்டப்படு…!
2.என் உடலுக்குள் வந்து என்னையும் கஷ்டப்படுத்து…!
ஆக மீண்டும் இந்த நரகத்துக்குத்தான் அழைக்கிறார்கள்.

பாசத்தால் அவர்களை எண்ணி ஏங்கினால் உடலைவிட்டுப் பிரிந்த அந்த ஆன்மா – நாம் உடலுடன் இருப்பதல் நம் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நம் இரத்தத்தில் இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழலத் தொடங்கும்.

சிறிது நாள்களுக்குப் பின் உங்களுக்குக் கை கால குடைச்சல் வரும் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட துன்பங்களையும் நோய்களையும் இரத்தத்திலிருக்கும் அந்த ஆன்மா நம் உடலுக்குள் பெருக்கத் தொடங்கும்.

கடைசியில் நாமும் கடுமையான வேதனைப்பட்டுத் தான் உடலை விட்டுப் பிரிய நேரும். இதைத் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நமக்கு ஞானிகள் காட்டிய அருள் வழி… அந்த மெய் வழி எது…?

நல்ல வழியில் வாழ்ந்து எங்களுக்காகப் பல துன்பங்களையும் பட்டு எங்களுக்கு வாழ வழி செய்தீர்கள்.
1.இனிமேல் நீங்கள் என்றுமே துன்பமே இல்லாத
2.பேரின்ப பேருவாழ்வு என்ற பேரானந்த நிலை அடைய வேண்டும்.
3.ஏகாந்த நிலை என்ற உயிருடன் ஒன்றி அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ள வேண்டும்.

எங்கே…?

துருவ நட்சத்திரத்தின் ஈர்பபு வட்டத்திற்குள் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களைச் செலுத்த வேண்டும். இதுதான் ஞானிகள் சொன்ன முறை.

யாராவது நாம் இப்படிச் செய்கிறோமா…? சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் இதெல்லாம் மாறி இன்று மந்திரங்களைச் சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைச் செய்து மீண்டும் ஒரு உடல் பெறும் நிலைக்குத்தான் செயல்படுத்துகிறோம்.

இப்படிச் செய்யவில்லை என்றால் தோஷம் என்று சொல்லி ஞானிகள் காட்டிய அந்த மெய் வழிகளையே பெறவிடாதபடி செய்துவிட்டார்கள் அன்று ஆண்ட அரசர்கள்.

இன்றும் நாம் அதையே பிடித்துக் கொண்டு நல்லதை தேடிக் கொண்டேயுள்ளோம். அதைப் பெறும் தகுதியையும் இழந்திருக்கின்றோம்.

நீங்கள் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடவேண்டும்.

குடும்பத்தில் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் எல்லோரும் ஒன்று சேர்த்து காலை துருவ தியானத்தில் அவர்களை நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் விண் செலுத்திப் பழக வேண்டும்.

அவர்களை விண் செலுத்தினால் பரம்பரை நோய் என்ற நிலைகள் நமக்குள் வராது. அதே சமயத்தில் அந்த ஆன்மாவும் ஒளியின் சரீரம் பெறுகிறது.

ஒரு 48 நாள்கள் குடும்பத்திலுள்ளோர் வேறு வேறு ஊர்களிலிருந்தாலும் ஒரே நேரத்தில் எல்லோரும் அமர்ந்து ஒரு 10 நிமிடமாவது தியானம் செய்து அந்த ஆன்மாக்களை விண் செலுத்தினால் நீங்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழமுடியும்.

உங்கள் குடும்பத்தில் அறியாது வரும் சாப வினைகள் தீய வினைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும். இந்த உடலுக்குப் பின் நாமும் நம் முன்னோர்கள் சென்ற அந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.

“சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்” என்ற எண்ணமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக இருத்தல் வேண்டும்.

மனிதனுடய கடைசி எல்லை அது தான்.

அதைத்தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

நினைவு நாள் என்றால் என்ன…? – விளக்கம்

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நினைவு நாள் எப்படிக் கொண்டாட வேண்டும்…?