புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வரச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

third eye glow opening

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வரச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

 

மகாபாரதத்தில் உயிரின் இயக்கத்தைப் பூஷ்மர் என்று வியாசகர் காட்டுகின்றார். பத்தாவது நாள் போரில் பூஷ்மர் வீழ்வதாகவும் ஆனால் அதே சமயத்தில் போர் முடியும் வரையிலும் அம்புப் படுக்கையில் படுத்திருப்பாதாகவும் காட்டியிருப்பார்.

பத்தாம் நாள் போரில் அர்ச்சுனன் பூஷ்மரை எப்படி வெல்கிறான் என்றால்
1.சிகண்டியைப் பீஷ்மருக்கு முன்னாடி நிறுத்தப்படும் பொழுது அவர் போர் செய்வதை நிறுத்திவிட்டு அம்பு எய்துவதைத் தாழ்த்துவார்.
2.அந்த நேரத்தில் நீ அம்பை எய்து அவரைக் கொல்ல வேண்டும் என்று தான் கண்ணன் அர்ச்சுனனிடம் சொல்வான்.

இதில் சிகண்டி என்பது துருவ நட்சத்திரம். கண்ணன் என்பது நமது கண்கள். அர்ச்சுனன் என்பது நம்முடைய கூர்மையான எண்ணங்கள்.

1.அதாவது நம்முடைய கூர்மை (இச்சைப்படும் எண்ணங்கள்) தீமையின் பக்கம் வலுவாக இருக்குமானால்
2.உயிர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து
3.அதை நமக்குள் கௌரவர்களாகச் சிருஷ்டிக்கின்றது.
4.நம்மால் நல்ல குணத்தைக் காக்க முடிவதில்லை.

அதே சமயத்தில் வலுவில்லாத உணர்வின் எண்ணங்களை எடுத்தோம் என்றால் உயிர் அதை நமக்குள் எடுத்து உடலாகச் சிருஷ்டிப்பதில்லை.

ஆனால் உடலுக்குள் 1008 குணங்களில் உருவான அத்தனை அணுக்களுக்கும் உயிர் உணவாக எடுத்து வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நம்மால் நல்லதை வலுவாக நம் எண்ணத்தால் எண்ணி எடுக்க முடியுமா என்றால் முடியாது…! ஏனென்றால் உயிர் தாயாக இருந்து உடலில் இருக்கும் அணுக்களை வளர்க்கிறது.

பீஷ்மரை (உயிரின் இயக்கத்தை) நேரடியாக யாரும் போரில் வெல்ல முடியாது என்பதனால் தான் கண்ணன் திருட்டு வழியைக் காண்பிக்கின்றான் என்று வியாசகர் உணர்த்துகின்றார்.
1.நம் உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்த வேண்டும் என்றால்
2.உயிரின் இத்தகைய செயலாக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

அதனால் பேடியைப் (ஆணும் இல்லை பெண்ணும் இல்லை) போன்ற நிலையில் உள்ள சிகண்டியை பூஷ்மருக்கு முன் நிறுத்தச் சொல்கிறான் கண்ணன்.

உதாரணமாக நாம் கிரகணம் என்று சொல்கிறோம் அல்லவா. கிரகண நேரத்தில் எந்தக் கோள் இடைமறிக்கின்றதோ அந்த நேரத்தில் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருக்கும் சூரியனின் ஒளிக்கதிர்களை அது தடைப்படுத்துகின்றது.

தடைப்படும் சமயத்தில் சூரியனின் கதிர்களுக்குப் பதிலாக தடைப்படுத்தப்பட்ட கோளின் சத்துக்கள் போய்ச் சேர்கிறது.
1.கிரகணம் பிடிக்கும் கோள் நல்லதாக இருந்தால் பலன் கிடைக்கும்.
2.ஆனால் கேதுவோ ராகுவோ போன்ற கோள்கள் கிரகணம் பிடித்தால் விஷத் தன்மைகள் தான் பரவும்.
3.இது போன்று தான் நம் உயிர் வழியாக… உயிர் மூலமாக…
4.உடலுக்குள் புகும் தீமைகளை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற… நஞ்சினை வென்ற… உணர்வினை ஒளியாக மாற்றிய… அந்தத் துருவ நட்சத்திரத்தினை உயிருக்கு முன்னாடி புருவ மத்தியில் அடைப்பாக… கிரகணமாகக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரம் என்ன செய்யும் என்று நமக்குத் தெரியாத நிலையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அவருடைய துணையுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிரிலே இணைக்கப்படும் பொழுது தீமைகள் முழுவதுமே தடைப்படுத்துகின்றது…!

எப்படி…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அந்த அகஸ்தியன் துருவனாகித் திருமணமானபின் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். வேகா நிலை பெற்று விண்ணுலகம் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் தான்.

தன்னுடைய வாழ்க்கையில் அவன் அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து சர்வ தீமைகளையும் வென்று சரவ நஞ்சினையும் வென்று எதையுமே ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம்முடைய புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி
1.உயிரிலே மறைப்பாக அல்லது அடைப்பாகப் போடப்படும் பொழுது
2.அந்த அகஸ்தியன் எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றினானோ அதே போல் நாமும் அந்த நிலை பெற முடியும்.
3.உயிரின் செயலாக்கங்கள் தணிந்து
4.உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் மெய் ஞானிகளின் இயக்கமாக நமக்குள் ஆகி
5.வாழ்க்கையில் இருள் சூழும் நிலையை நாம் மாற்றிட முடியும்.

அதனால் தான் மகாபாரதத்தில் பத்தாம் நாள் போரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வியாசகர் உணர்த்திக் காட்டியிருப்பார்.

நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளையும் துன்பங்களையும் சந்திக்கின்றோமோ அந்த நேரத்தில் எல்லாம் உடனடியாக
1.கண்ணன் காட்டும் அந்தத் திருட்டு வழியில் கண்களின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அங்கே நிலை நிறுத்தினோம் என்றால்
3.வெளியிலிருந்து வரும் எந்தத் தீமையும் நம்மை இயக்க முடியாது.

மாறாக நாம் எடுக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக நாம் இயங்கி நம்மையும் காத்து மற்றவரையும் காக்கக் கூடிய சக்தியாக நம்முடைய செயல்கள் அனைத்தும் அமையும்.

என்னுடைய அனுபவத்தில் இதைத்தான் செய்து கொண்டுள்ளேன்…!

அன்றாட வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்திக்கு எந்த அளவுக்குக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவிற்கு நாம் தீமைகளை அகற்றும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

அகஸ்தியனைப் பின்பற்றியவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் நாம் அனைவரும் அடைய முடியும்.

Leave a Reply