தினசரி உபதேசம்

இன்றைய உலகச் சூழ்நிலையிலிருந்து தப்ப முடியுமா…!

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருகின்றது. ஆனால் ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்த ஒருவனை நினைத்தே குடும்பம் சிக்குண்டு சுக்குநூறாகத் தெறித்து விடுகின்றது. எவ்வளவு கோடிச் செல்வம் இருப்பினும் இதைப் போல் நிகழந்துவிடுகிறது

சூரியனை மையமாக வைத்து ஒரு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றதோ நம் உயிர் சூரியனாக இருந்து இந்த உடலை இயக்குகிறது.

பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்ததிரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி… அது உமிழ்த்துவதைக் கோள்கள் உணவாகக் கவர்ந்து… கோள்களிலிருந்து வருவதைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்து உட்கொள்கின்றது,

இதைப் போல் பிறருடைய உணர்வுகள் வெளி வருவதை நம் எண்ணத்தால் (நட்சத்திரம் போல்) கவர்கின்றோம். கவர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் உடலாக (கோள்கள் போல்) அந்தச் சத்தாக விளைகின்றது. உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை உயிருடன் சேர்த்து உயிராத்மாவாக (சூரியனைப் போல்) விளைகின்றது.

ஆகவே…
1.பிறரிடம் இருந்து வரும் உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கவர்ந்து
2.அந்த உணர்வுகள் நம் உடலாக ஆக்கப்படும் போது
3..நமக்குள் தெளிந்திடும் உணர்வாக உயிருடன் ஒன்றி…
4.அந்த ஞானியின் உணர்வுடன் நாம் இணைப்போம் என்றால்
5.அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றது போன்று நாமும் பெற முடியும் என்பது தான் ஆலயங்களின் தத்துவம்.

ஆனால் அந்த ஆலயத்தில் இப்பொழுது நாம் எப்படிப் போகின்றோம்…?

வெளியில் கடைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்கின்றனர் காசுக்காக. ஆனால் அவர்களும் இந்தத் தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் தான்.

சாமி பேரைச் சொல்லி ஏமாற்றுகின்றான். அதே சமயத்தில் அர்ச்சனை என்று இங்கே காசைக் கொடுத்து ஏமாற்றச் செய்கின்றான்.

அதை எல்லாம் செய்தால்…
1.ஆண்டவன் நமக்கு அதைச் செய்வான் இதைச் செய்வான் என்று
2.நம் ஆசைக்குகந்தபடி தான் நாமும் அங்கே நடக்கின்றோம்.

ஆனால் ஆலயம் என்பது நம்மைப் புனிதமாக்கும் இடமாகும்…!

பெரும்பகுதியான ஆலயங்களுக்கு முன்னாடி பார்க்கலாம்… தெய்வத்தின் பேரைச் சொல்லி நமக்கு நாமே ஏமாற்றும் நிலை தான் அதிகமாக இருக்கின்றதே தவிர… “ஆலயம் வரும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நிலைகள் இல்லை…!”

1.சாமிக்காக அபிஷேகம் ஆராதனை என்றெல்லாம் காட்டி
2.அந்த உணர்வினை நுகர்ந்தால் (ஐந்து புலனறிவாலும்) நமக்குள் பஞ்ச அமிர்தமாக அந்தச் சக்திகள் இணையும் என்று
3.ஆறாவது அறிவினைத் தெளிவுற எடுத்துரைத்த அந்த போகனின் நிலையை எடுத்துக் கொள்ளாது…
4.போகன் காட்டிய அறவுரைகளை அழித்துவிட்டு மனிதனின் நல்ல எண்ணங்களை அழித்திடும் நிலையாக
5.வியாபார ஸ்தலமாகத் தான் ஆக்கி விட்டார்கள்.

இங்கிருந்து நாம் அருள் ஒளி பெறவேண்டும் என்று சென்றாலும் புனிதத் தன்மை இழக்கும் நிலைகளைத் தான் அங்கே காணுகின்றோம். அங்கே நிர்வகிப்பவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஆலயத்தின் மறைவில் தனக்குப் பொருள் தேட வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்.

1.அந்த மெய் ஞானிகள் காட்டிய தத்துவங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.ஒவ்வொரு மனிதனும் முழுமை பெறவேண்டும்…
3.இந்தப் பூமியில் இருளைப் போக்க வேண்டும்… தீமைகள் அகல வேண்டும்… என்ற நிலைகளை வழி காட்டவில்லை.

அந்த மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை நாம் யாரும் பெறவில்லை. இன்று யாம் (ஞானகுரு) அதை எல்லாம் சொன்னாலும்
1.இதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாது
2.இதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைகளில் தான் உள்ளனர்.

ஒரு மது குடிப்பவரிடம் போய்… “நீ குடிக்காதே…!’ என்றால் ஐயா… உங்களுக்கு என்ன தெரியும்…? இதைக் கொஞ்சம் போட்டால் சொர்க்கமே வரும்… நீங்களும் கொஞ்சம் குடித்துப் பாருங்கள்…! என்று நம்மிடமே திரும்பச் சொல்வார்கள்.

அதைப் போன்று தான் அநாகரீகமான நிலைகளில் அதர்வண வேதத்தின்படி இந்த நிலைகள் உருவாக்கப்பட்ட நிலைகளே இன்றும் உள்ளது.

இன்னென்ன மந்திரங்களைச் சொல்லி விட்டால் அந்த இறைவன் இறங்கி வந்து உனக்கு எல்லாம் செய்வான்..! என்ற நிலைகளில் மந்திர உச்சாடணங்களை அங்கே சொல்லி அதை ஆழமாக நமக்குள் பதிவு செய்து விட்டனர்.

அந்த உணர்வின் சக்திக்கு நாம் வந்த பின் ஒரு போதை ஏற்றியது போன்று இதிலிருந்து மீளாது சிக்கிக் கொண்டு…
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் அழிவில் இருந்து தப்ப முடியாதபடி
2.இருள் சூழ்ந்த நிலைகளாகப் போகும் நிலையே அதிகமாக உருவாகிக் கொண்டுள்ளது

ஆக ஐதீகம் என்றும் சாஸ்திரம் என்றும் மனிதனுடைய நிலைகளில் ஆசைகளைத் தான் வளர்க்கப்பட்டுள்ளது.

மனிதன் என்றால் ஆசை இருக்கத் தான் செய்யும். ஆனால்…
1.அதைத் தணியச் செய்யும் சக்தியான அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து
2.நமக்குள் இருள் சூழும் அந்த நிலைகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று
4.அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் செல்வோம் என்றால் இனி தப்பலாம்…!

தீமையை விழுங்கும் ஞானிகள் உணர்வுகளை நாம் பெற வேண்டும்

காற்றிலே பரவிப் படர்ந்துள்ள அகஸ்தியன் மூச்சலைகளை நுகர… “குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி”

நம்மை அறியாது தவறு செய்தால் வேதனைப்படலாமா…?

உயிரின் இயக்க இரகசியம் 

நல்லது பெற முடியாதவர்களுக்கு வழி காட்டு என்றார் குருநாதர்

ரிஷிகேஷில் 1000 வருடம் தவமிருந்தவர்

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்

 

நம்முடைய சகஜ வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலமும் சோர்வும்… சோர்விலிருந்து ஏற்படும் கோபமும்… கோபத்தினால் உண்டாகும் ஆத்திரமான வெறியுணர்வுகளாலும்…
1.இதிலிருந்து விடும் சுவாசத்தினால் ஏற்படும் உடலின் அமில சக்தி மாறுபட்டு
2.அதிலிருந்து பல உபாதைகளை நாமே நம் உடலுக்குள் ஏற்றிக் கொள்கின்றோம்.

கோபம் ஏற்பட்டவுடன் நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் துரிதம் கொள்கின்றது. அந்த நிலையில் நாம் எடுக்கும் சுவாசமே கடினமாக நம் உடலில் ஏறுகின்றது.

1.இக்கனமான சுவாசத்தை ஈர்க்க ஈர்க்க…
2.நம் உடலிலுள்ள அனைத்துப் பாகங்களும் ஒருநிலைப்படாமல் துடிக்கும் நிலை கொள்கின்றது.

அதனால் நம் உடலிலுள்ள இரத்த நாளங்கள் துரிதமாகச் செயல்பட்டு மனிதனின் உடல் நிலைக்கே மூலகாரண வித்தாக இருக்கும் நல் நிலைகள் மாறி பல வியாதிகள் ஏற்படும் நிலைக்கு நாம் ஆளாக வேண்டியுள்ளது.

மனச் சஞ்சலத்திலிருந்து நாம் ஏற்றிக் கொள்ளும் நிலைதான் நமக்கு ஏற்படும் தொடர் நிலையெல்லாம்…!

1.சஞ்சல நிலை ஏற்பட்டவுடன் மன நிலையை அமைதிப்படுத்தி
2.அதனால் ஒரு நிலை கொண்ட சுவாசத்தை ஈர்த்தால் சஞ்சலத்திற்குத் தெளிவு பெறலாம்.
3.தெளிவை நாமே தான் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

உதாரணமாக நாம் செய்யாத தவறுக்காக ஒருவர் ஏசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஏசலைக் கொண்டு இப்படிச் செய்கின்றாரே… நாமென்ன தவறு செய்தோம்…? என்று எண்ணுகின்றோம்.

ஆனாலும்… நம்மிடம் தவறில்லாத பொழுது நம்மை ஏசுபவனை ஆத்திரத்துடன் எண்ணி…
1.இப்படியெல்லாம் செய்பவன் அவனே அந்தத் தண்டனையை அனுபவிக்கட்டும் என்று
2.தவறு செய்பவன் இருக்க நம்மையே நாம் தவறாக்கிக் கொள்கின்றோம்.

நம் எண்ணத்தில் அவன் ஏசும் சொல்லை ஏன் அண்டவிட வேண்டும்…?

1.அவர்கள் நல் உணர்வு பெறட்டும்… நல் வழி படட்டும் என்ற எண்ணத்தில்
2.நம்முடன் அச்செயலை மோத விடாமல் எண்ணும் பொழுது நம் உணர்வே நலம் பெற்று
3.நம் எண்ணத்தில் தீட்சண்ய சொல் தாக்காமல் நம்மைப் புனிதப்படுத்திக் கொண்டால்
4.நம்மையே நாம் பல இன்னல்களிலிருந்து காத்துக் கொள்கின்றோம்.

வினை செய்தவனிருக்க வினைப்பயனை நாம் ஏன் ஏற்க வேண்டும்…?

ஏனென்றால் பிறரை ஏமாற்றியோ வஞ்சனை செய்தோ துவேஷித்தோ வருபவனெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றி வாழ்கின்றான். பிறரை ஏமாற்றுவதாக எண்ணி தன்னையேதான் ஏமாற்றி வாழ்கின்றான்.

1.மன நிலையை ஒரு நிலைப்படுத்தி…
2.சமமான வரையறை கொண்ட வாழ்க்கைதனை வாழும் பக்குவத்திற்குப் பல நெறி முறைகள் உண்டப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனக் கவலையில் இருந்து விடுபடுவதற்காக வேண்டித் தண்ணீ போடுவார்கள். குடித்தபின் எல்லா கவலையையும் மறந்து விடுவார்கள்.

தண்ணீ போடுகிறவர்கள் மாமிசமும் அதிகமாகச் சாப்பிடுவார்கள்.

கடைசியில் இந்த உணர்வெல்லாம் சேர்த்துச் சேர்த்து இவர்களுக்குள் இந்த நிலை நிறுத்த முடியாதபடி வந்து விடும். உயிரான்மாவில் அந்த வாசனை அதிகமாகிவிடும்

இவர்கள் இறந்த பிற்பாடு எங்கே போவார்கள்…?

மந்திரக்காரர்கள் தண்ணீ கறி இரண்டையும் வைத்து என்ன செய்வார்கள்?

ஆரம்பத்தில் இந்த மந்திரங்கள் உற்பத்தி செய்வது எல்லாமே அந்தச் சோமபானம் வைத்துத்தான். அதனால் சில மயக்க நிலைகளை ஏற்படுத்தித்தான் வசியப்படுத்துவார்கள். மது இல்லாத மந்திரம் கிடையாது.

மந்திரத்தை எப்படி உருவாக்கினார்கள் என்ற நிலையில் முழுமையாக இப்போது நான் (ஞானகுரு) சொல்லத் தயாராக இல்லை. அது நமக்கு ஆகாத வேலை.

சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் மாமிசத்தையும் தண்ணீயையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்கள் இருக்கின்றது. ஜெபித்து இந்த ஆத்மாக்களைப் பிடித்து இழுத்துக் கொள்வார்கள்.

ஏனென்றால் தண்ணீ போடும் பழக்கம் ஏற்படுவதன் காரணமே
1.பெண்டு பிள்ளைகள் மீது கவலை அதனால் அவஸ்தைப்படுவது,..
2.பிறிதொருவர் அவமரியாதையாகப் பேசினார் என்னால் தாங்க முடியவில்லை…
3.வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தேன் அந்தக் கவலையை மறக்க முடியவில்லை..
4.இந்த மாதிரி இருப்பவர்கள் கதி எல்லாம் இறந்த பிறகு மந்திரக்காரன் கையில் போய்ச் சிக்கும்.
5.இந்தக் கறியும் தண்ணியைச் சாப்பிட்டு இருப்பவர்கள் மந்திரக்காரனுடைய பிடியில் ரொம்ப சீக்கிரம் போய்ச் சிக்கிவிடும்.

அப்புறம் சிக்கிய பின் என்ன கத்தினாலும் முடியாது. அது அங்கே போய்ச் சிக்கிக் கொண்டதும் அவர்கள் என்ன செய்கின்றனர் தெரியுமா இல்லையா…!

காசைக் கொடுத்து அடுத்தவர்களைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தகைய மந்திரக்காரர்களை நாடுகின்றனர்.

காசை வாங்கிக் கொண்டு ஆகாதவர்கள் உடலில் இந்த ஆவிகளை ஏவி விடுவார்கள். அங்கே போய் எல்லாக் கெடுதலையும் செய்து அது சாப்பிடும். அங்கே நிர்மூடத்தனமான வேலைகளைச் செய்யும்.

ஏற்கனவே வாழ்ந்த உடலில் பல வேதனைகள் ஆன்மாவில் இருக்கிறது. அடுத்து மந்திரக்காரன் கையில் சிக்கி அடுத்த உடலில் போய் அங்கே இன்னும் அதிகமான விஷத்தையெல்லாம் இழுத்துக் கொண்டு இந்த ஆவி வரும்,

விஷங்கள் அதிகமான பின் மீண்டும் அதை எடுத்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த வேதனையான உணர்வு இன்னொரு உடலில் போய் என்ன செய்யும்?

அவனைத் திருப்பி அடித்துக் கொல்லும்.

எதிலெல்லாம் ஏவினானோ கொன்று விட்டு மீண்டும் பிறவிக்கு வரப்போகும் போது விஷமான உயிரினமாகத்தான் உருவாகும்.

உருவான பின் அந்த உடலில் உடல் உறுப்புகள் என்ன செய்யும்…? சாப்பிடும் பொழுது மிகவும் அவஸ்தைப்பட்டுத் தான் சாப்பிட வேண்டும். சில உயிரினங்களைப் பார்க்கின்றோம்.

பாம்பு தேள் சில விஷப் பிராணிகள் மற்றதைத் தன் விஷத்தால் கொன்றுவிடும். ஆனால் அதைச் சாப்பிடும் பொழுது நரக வேதனைப்படும். அது எத்தனை அவஸ்தை எல்லாம் படுகின்றது.

1.பல உடல்களுக்குள் சென்று எல்லாவற்றையும் வேதனைப்படச் செய்தாய்
2.முழுவதும் நஞ்சாக நீ உருவாக்கினாய்.
3.இப்பொழுது நீ அவஸ்தைப் படு…! என்று இந்த உயிர் செய்யும்

தண்ணீ போடுகிறவர்கள் நீங்கள் யாரும் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். தண்ணீ போட்டதன் விளைவுகள் சீக்கிரம் மந்திரவாதிகளிடம் போய்ச் சிக்கிக் கொள்வீர்கள்.

இன்றைக்கு மந்திரம் ஜாஸ்தியாக (வியாபாரமாக) வந்து விட்டது. எங்கே பார்த்தாலும் “ஒருவரைத் தொட்டு…” புத்தியை மாற்றி விட்டுக் காசை எடுத்துக் கொண்டு செல்கின்றவர்கள் நிறைய வந்தாகி விட்டது.

டிரெயினில் உட்கார்ந்து கூட்டத்திற்குள் இருந்து வந்தால் “நகையைக் கழற்றிக் கொடு…!” என்று வாங்கிக் கொண்டு போகக்கூடிய நிலைமை வந்து விட்டது.

ஏனென்றால் விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இன்றைக்கு மந்திரங்கள் நிறைய வந்துவிட்டது. இந்த விஞ்ஞான உலகில் சில
1.விஞ்ஞானச் செயல்களை அழிப்பதற்கும் கூடச்
2.சில வேலைகளைச் செய்கின்றனர்.

ஏனென்றால் வாழ்வதற்கு எவ்வளவு பெரிய வசதி இருந்தும் சிறு விஷயங்கள் நடந்ததென்றால் அந்த விஷத்தன்மையில் இருந்து மீளாத நிலைகளில் இருக்கின்றோம்.

கடைசியில் எங்கே கொண்டு போய் விடும்?
1.மந்திரக்காரனிடம் போய்
2.ஆகாத உடலுக்குள் சென்று பேயாகப் போய் ஆட்டிப் படைத்து கொண்டே இருக்கும்.
3.அங்கே அத்தனை வேலையும் செய்யும்.

இதைப்போல நிலைகள் நம்மை அறியாமலே இயக்கிக் கொண்டு இருக்கக்கூடிய நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக்கொள்ள வேண்டும்.

“நான் தவறாகச் சொல்கின்றேன்…!” என்று யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இயற்கையில்
1.மந்திரக்காரர்களின் செயல்களையும்
2.உடலை விட்டுப் போகும் உயிரான்மாக்களை எப்படிக் கவர்கிறார்கள் என்ற நிலையும்
3.அது என்னென்ன அல்லல்படுகிறது என்றும்
4.நேரடியாகவே இழுத்துக் காண்பித்தார்.

1.இன்னென்ன நிலைகளை நீ சொல்லு என்றார்
2.இந்த ஆவிகள் என்ன செய்கிறது என்று பார்…!
3.தண்ணீ போட்டவர்களை இறந்தவுடனே சுலபமாக வந்து அழைத்துக் கொள்ளலாம்…! என்று காட்டினார்
4.என்னென்ன வேலைக்கு நீ பயன்படுத்திக் கொள்கிறாயோ நீ வைத்துக்கொள்…! என்றார் குருநாதர்.

மந்திரத்தை சொல்லி அவர்களை இழுத்துக் கெட்ட வேலைக்குப் பயன்படுத்தினால் அப்புறம் இந்தப் புத்தியெல்லாம் உன்னிடம் வந்து அவர்கள் பின்னால் “நீ போக வேண்டியதுதான்…! என்று அதையும் சொல்லி விட்டார் குருநாதர்.

இப்படிச் செய்தாய் என்று சொன்னால் கடைகியில் உன் கதியும் அப்படித்தான் வந்து விடும் என்று காட்டினார்.

ஆனால் அவர்கள் அந்தத் தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும் என்று எண்ணினால் நீக்கும் உணர்வுகள் உனக்குள் வருகின்றது என்று இதைச் சொல்லிக் காண்பித்தும் நேரடி அனுபவமாக செய்து காட்டி உணர்த்தவும் செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் எனக்கு இடைஞ்சல் செய்தவனை எண்ணுகின்றேன். “என் பிள்ளை படிக்கவில்லையே… நாளைக்கு எதிர்காலம் என்ன ஆகுமோ…!” என்று நான் எண்ணிச் சிந்திக்கின்றேன்.

அப்பொழுது இந்தச் சிந்தனை எங்கே போகின்றது?

என் பிள்ளை படிக்கவில்லை என்றால் நாளை அவன் எதிர் காலம் என்னவாகும் என்று நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் என்றால் போதும்…! (ஒரு நல்ல பையனைப் பற்றிக் கூடச் சிந்திக்க மாட்டோம். நல்லது எண்ணத்திற்கு வராது.)

இவன் சொன்னபடி கேட்கவில்லை…. படிப்பு சரியாக இல்லை… என்ற இந்த நிலையில் இருந்தால்
1.அவனைப் பற்றியே எண்ணி
2.அவன் உயர்ந்தவனாக வர வேண்டும் ஆனால் வரவில்லையே என்று எண்ணிக் கொண்டே இருக்கின்றேன் என்றால்
3.நான் இறந்த பிற்பாடு இந்த உயிராத்மா அவன் உடலுக்குள் தான் போகும்.

அவனை எண்ணியே வேதனைப்பட்டேன். அந்த வேதனையான நிலைகள் எனக்குள் நோயாக வந்தது. நோயாக உருவான இந்த உயிராத்மா நான் இறந்த பிற்பாடு என் பையன் உடலில் தான் போகும்.

அங்கே போய் அங்கே நல்லதை விளைய வைக்கின்றதா…? என்றால் இல்லை. அவனை வீழ்த்தச் செய்வேன்.

மந்திரங்கள் தந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள்
1.மனித உடலில் விளைந்த உணர்வு எண்ணங்களைத் தனக்குள் கவர்ந்து கொண்டவர்கள்
2.வாமன அவதாரம் என்று சொல்வார்கள்.

இதுகளெல்லாம் மந்திரத்தாலே அப்போதைக்கு அப்போது அந்தந்தக் காரியங்களை ஜெயித்துக் கொண்டு வந்தவர்கள்.

அதை எல்லாம் “தெய்வப் பண்புகளிலே பார்க்கப்பட்டு…” அந்த உணர்வின் தன்மை திசை திருப்பி அன்றைய வாழ்க்கையை எப்படியோ பொழுது போக்க வேண்டும் என்று செய்வார்கள்.

வீட்டில் மாடி கட்டுவதற்கு பொய்ப் பந்தலைக் கட்டி அதன் மேலே தளம் சுவர் எழுப்பிக் கட்டுவோம். செய்து முடித்தபின் பொய்ப் பந்தலை உடனுக்குடனே எடுத்து விடுவது போல் தான் மந்திரம் சொல்வதை அது நிரந்தரமாகக் கட்டி விட்டார்கள்.

1.மனித உடலிலே விளைய வைத்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
2.இந்த மனித வாழ்க்கையிலே தன்னுடைய பேருக்கும் புகழுக்கும்
3.தன் சுகபோகங்களுக்கும் எண்ணி எடுத்துக் கொண்டது தான் இந்த மந்திர ஒலிகள்.

அந்த மந்திர ஒலிகள் எங்கிருந்து வந்தது?

ஒரு மனித உடலில் விளைய வைத்த அந்த எண்ணங்களைக் கவர்ந்து தனக்குள் அது உருவாக்கித் தன்னுடன் இயக்கச் செய்யும் நிலையே அது.

சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் குணம் கொண்டு ஒரு ஆன்மா நம் உடலில் எப்படி நுழைந்து விடுகின்றதோ இதைப்போல
1.செயற்கையில் ஒரு மனிதன் மந்திர ஒலிகளைப் பரப்பச் செய்து
2.அந்த மந்திரத்தை எவன் உருவாக்கினானோ
3.அந்த மந்திர ஒலி கொண்டே மீண்டும் தனக்குள் கவர்ந்து
4.இன்னொரு ஆத்மாவினுடைய செயலைத் தனக்குள் கவர்ந்து கொள்வது
5.இது தான் மந்திரம்.

கவர்ந்து கொண்ட நிலைகள் கொண்டு சில காலம் இன்னொரு உடலுக்குள் போய்ப் பேயாகவும் அருளாகவும் தெய்வமாகவும் செயல்படுத்தி மாற்றிக் காட்டலாம்.

பல வித்தைகளைச் செய்து காட்டலாம். ஆனால் பயன் ஒன்றுமே இல்லை. அப்படிச் செய்தவர்கள் அனைத்தும் மீண்டும் விஷத்தின் தன்மை கொண்டு பாம்பாகவோ தேளாகவோப் பிறந்து தான் மீண்டும் மனிதனாக வரவேண்டும்.

இதைப்போல நாம் மந்திரம் என்ற இந்த நிலைகளில் இருந்து விடுபட்டு பத்தாவது நிலையான கல்கி என்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.

ஏனென்றால் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் நம்மை அறியாமல் நமக்குள் சென்ற இந்த அழுக்கினைத் துடைக்கத்தான் இந்தத் தியானம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பக்தி நிலைகளில் நாம் போகும் போது கோயில்களுக்குப் போகிற இடத்திலே சிலர் ஆண்டவன் எனக்கு நேரிடையாகச் சொல்கிறான் என்று சொல்வார்கள்.

இந்த மாதிரிச் சொல்லிக் கொண்டு பழனியில் ஒருவர் இருந்தார். நான் மிலிட்டரிக்குப் போய் விட்டு வந்தேன். அது… இது… என்று சொல்கிறார்.

ஜோசியங்களை சொல்லிக் கொண்டு அது இப்படி நடக்கிறது. அப்படி நடக்கிறது என்றெல்லாம் சொல்வார்.

உங்கள் வீட்டில் இந்தச் சக்கரத்தை வைத்திருந்தால் மிகவும் நல்லது என்று சொல்வார். அதைக் கொடுத்துக் காசுகளை வாங்குவார்.

கோயில்களுக்கு வருபவர்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டு அவர்களை எப்படி மடக்குவது என்று சில வேலைகளைச் செய்வார்.

நான் (ஞானகுரு) சித்து ஆகியிருக்கும் நிலையில் அவரைச் சந்திக்கும் போது சொன்னேன்.

உன்னுடைய மந்திர வித்தை சிறிது காலம் செல்லும். ஆனால் இது உன்னையே வீழ்த்தும். நீ முழுமையாகக் கற்றுக் கொள்ளவில்லை.

காசைக் கொடுத்து நீ வாடகைக்கு வாங்கி இந்த வேலையைச் செய்கிறாய்.
1.அற்பக் காசுக்காக இதைச் செய்கிறாய்.
2.அந்த வினைகளை எப்படி நீ தெரிந்து கொள்ளப் போகின்றாய் பார்…! என்றேன்.

அதெல்லாம்… என்னால் எதை வேண்டும் என்றாலும்… செய்ய முடியும்…! என்றார். கடைசியில என்ன செய்தார்…?

ஒருவரைக் கொல்வதற்காக வேறொருவரிடம் சக்தியை வாங்கி வைத்துப் பழனி வையாபுரி குளத்தில் வைத்துச் செய்தார். அவர் அங்கேயே செத்து மடிந்தார்.

இதே மாதிரி பழநி பஸ் ஸ்டாண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி. இதே மாதிரி கோவிலுக்குப் போவோரை ஒருவர் மடக்கிக் காசுக்காகச் செய்து கொண்டிருந்தார்.

ஒருவர் அவர் இரண்டு சம்சாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

சார்…! இங்கே வாருங்கள்…! என்றார். நீங்கள் உங்கள் பாக்கெட்டில் வைத்திருந்த காசெல்லாம் காணாமல் போய்விட்டது…! என்றார்.

அதெல்லாம்… “ஒன்றும் இல்லை…!” என்றார்கள் அவர்கள்.

“இல்லை இல்லை… நீங்கள் பாருங்கள்…!” என்றார்.

உங்கள் பாக்கெட்டில் இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது… பாருங்கள்…! என்றார்.

“பணம் காணாமல் போய்விட்டது…!” என்று சொல்லிவிட்டு இன்னென்ன நம்பர் உள்ள காசு இருக்கிறது என்று சொல்லி அதை அவர்கள் பார்த்தவுடனே இவர் மீது முழு நம்பிக்கை வந்துவிடுகிறது.

அப்புறம் “போனது வந்தது… சண்டை போட்டது… அவர் வாழ்க்கையில் நடந்தது…” எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினார்.

எல்லாம் அவர்கள் கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் முருகன் உங்களுக்கு நிறைய இந்த மாதிரி அருள் கொடுத்திருக்கின்றார். சரி…! நீங்கள் மலைக்குப் போய் முருகனைத் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

முதலில் “வெறும் ஒரு ரூபாய் தான்… அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்…!” என்று சொல்லிக் கவர்ச்சி செய்து கொள்கிறார்கள்.

அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்?

உங்களை மடக்குவதற்காக எதிரிகள் இருக்கின்றார்கள். அதைச் சரி செய்ய வேண்டும்…! எதற்கும் ஒரு ஐநூறு ரூபாய் கொடுங்கள். அப்புறம் நல்லதான பிற்பாடு மிச்சத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்று கேட்கிறார்.

“அதற்காக உங்களுக்குச் சக்தி தருகிறேன்…! என்று சொல்லிக் கோவிலுக்கு வருபவர்களிடம் சொல்லி ஒவ்வொரு நாளும் இப்படித் தட்டிப் பறிக்கின்றார்கள்.

இந்த மாதிரி ஜோதிடங்கள் நிறைய உண்டு. ஏனென்றால் கரு வித்தைகளை வைத்து அந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி இப்படிச் செய்வார்கள்.

சமுதாயத்தின் மத்தியில் “இப்படி எத்தனையோ பேர்…” மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளார்கள்.

கோவில்கள் இருக்கும் பக்கம் போனால் ஜோசியம் ஜாதகம் மந்திரம், தந்திரம் ஏவல் பில்லி சூனியம் என்று ஏகப்பட்டது இருக்கின்றது. ஏனென்றால் அங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள் அல்லவா…!

இதை வைத்து ஏமாற்றி “இது தான் கடவுள்” என்ற நிலைகளில் முருகனே சொல்வதாகச் சொல்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு இடத்தில் என்ன செய்கிறார்கள்?

எல்லாம் உட்கார்ந்திருக்கின்றார்கள்.

முருகா…! வாடா…! என்று அங்கிருப்பவம் சொல்கிறான். தீபத்தைப் பொருத்துடா…! என்கிறான். “டக்…” என்று அந்தக் கற்பூரம் எரிகிறது.

ஆகா..! உனக்கு முருகன் ஆசி கொடுத்திருக்கின்றார். உனக்கு எல்லாம் நன்றாக இருக்கிறது.. அது இது…! என்று இந்த மாதிரி இரண்டு பேரிடம் சொல்லிக் காசை வாங்குகிறான்.

நல்ல பண்பு உள்ள ஆலயங்களில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

பக்தி கொண்ட மக்களும் அதில் ஏமாற்றம் அடைந்து உண்மையின் உணர்வை அறிய முடியாதபடி
1.இந்த உடலின் ஆசைக்கு இதற்குள் சிக்கப்பட்டுத்
2.தனது பண்புகளை இழந்த நிலையில் இருக்கிறார்கள்.

பெரும் பகுதி பாருங்கள்…! திருவண்ணாமலை ஆனாலும் சரி பழனி ஆனாலும் சரி திருப்பதி ஆனாலும் சரி இப்படிப் பல பேர் அங்கிருந்து இந்த வேலைகளைச் செய்கிறார்கள்.

நாடி சாஸ்திரம் என்று எடுத்துக் கொண்டால் யட்சினி நாடி- அரசர்கள் தனக்குள் அனுபவித்த இப்படி நாடி சாஸ்திரங்கள் உண்டு.

எதன் வழிகளில் அரசர்கள் செய்தார்களோ விஸ்வாமித்திரர் நாடி கௌசிகர் நாடி என்று அன்று வைத்த சிலதுகளை வைத்து நாடிகளைப் பார்த்து நடந்தவைகளைச் சொல்லும். நடக்கப் போவதைச் சொல்லாது.

இதைப் போன்று சில தவறான நிலைகளை செயல்படுத்தப்பட்டுத் தவறின் பாதைக்கே அழைத்துச் செல்கின்றனர். எல்லா மதத்திலும் சரி இதே தான்.

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட ஆன்மாக்களை வைத்து சில மந்திர ஜாலங்களைச் செய்து இது தான் ஆண்டவன் செயல் என்ற நிலையில் செய்கின்றார்கள்.

உண்மையின் இயக்கத்தைப் பெறுவதற்கு மாறாக உடலின் இச்சைகள் கொண்டு பல தவறுகள் நடக்கின்றது. இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

நாம் ஞானிகள் காட்டிய மெய் வழியில் அந்த அருள் ஞானத்தைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுதல் வேண்டும்.

உண்மையின் உணர்வின் தன்மையை உணர்ந்து அந்த ஆலயத்தின் பண்புகளைத் தெளிவாகத் தெரிந்து ஆலயத்தை நாம் மதித்து நடத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தர்மபுரியில் பவானி என்ற ஊரில் ஒருவன் (அக்காவின் மகன்) தன் சின்னம்மாவிடம் தன் செலவுக்காகக் காசு கேட்டு வந்திருக்கின்றான்.

அவன் ஊர் சுற்றித் திரிவதால் பணம் கேட்டதும் அவர்கள் “இல்லை…” என்று சொல்லி உள்ளார்கள்.

நீ என்ன கொடுப்பது…! நானே எடுத்துக் கொள்கிறேன்…! உன்னைக் கொன்று விட்டு நான் எடுத்துக் கொள்வேன் என்று தன் சின்னம்மாவைக் கொன்று விட்டான்.

பணத்தையும் எடுத்துக் கொண்டு ஜாலியாக ஐயாயிரம் ரூபாய் செலவு அளித்து விட்டான்.

சின்னம்மாவைக் கொன்ற பின்னர் சேலத்தில் அவர்கள் அக்கா வீட்டுக்குப் போயிருக்கின்றான். அங்கே போய் “இப்படி ஆகிவிட்டது…! ஆனால் யார்… எவர்…! என்று தெரியவில்லை…” என்று சொல்லி இருக்கின்றான்.

ஏனென்றால் சின்னம்மாவைக் கொன்றவன் இவர்களைக் கொலை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? இந்த உணர்வுகள் அவர்களுக்குச் சந்தேகம் ஆனவுடன் அவனைப் போலீசில் பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.

இன்று இந்த மாதிரி நிறைய நடக்கின்றது. நீங்கள் யாரை நம்பி வாழப் போகின்றீர்கள்?

1.எத்தனையோ கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குகின்றோம்.
2.ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் கல்யாணத்தைச் செய்கின்றோம்.
3.அக்கா மகன் இப்படிச் செய்வான் என்று ஜோதிடத்தில் கூறினார்களா?
4.கல்யாணம் முடிக்கப்படும் போது ஜாதகத்தில் எழுதி இருந்ததா?
5.ஜாதகம் சொன்னவன் ஏன் தவற விட்டான்? சொல்லி இருக்க வேண்டும் அல்லவா…!

அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வது எப்படி என்று ஞானிகள் மக்களை ஒழுங்குபடுத்தி ஒரு சீரான பாதையில் செல்வதற்காக வானவியல் புவியியல் உயிரியலைக் காட்டினார்கள்.

27 நட்சத்திரங்களும் பல விதமான விஷத் தன்மைகள் கொண்டது. அதை அதிகமாகக் கவர்ந்து கொண்ட கோள்களிலும் விஷத் தன்மைகள் பரவி இருக்கும்.

அவைகள் வெளிபடுத்தியதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்புத் தன்மைக்குள் வந்து விட்டால் இங்கே விஷத் தன்மைகள் பூமியிலே பரவுகின்றது.

அது எந்தப் பகுதியில் பரவுகின்றதோ அந்தப் பகுதியில் விஷத் தன்மைகள் பரவி வருகின்றது.

இன்றுள்ள ஜாதகப்படி இன்ன நிலையில் இன்ன நட்சத்திரத்தில் வருகின்றது. அப்போது இன்ன கோள்கள் இன்ன திசையில் சேர்க்கப்பட்டு இந்தக் கோள்கள் இப்படி இயங்குகிறது என்று குறிப்பிட்ட கோள்களின் உணர்வுகளைத்தான் எழுத முடிகின்றது.

இப்படி (நட்சத்திரங்கள் கோள்கள்) கலவையாகி வரக்கூடிய உணர்வுகளைச் சூரியன் எடுத்து தன் உணவாக எடுத்துக் கொள்ளும் நிலைக்குச் செல்லப்படும் போது பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது வந்தவுடனே இழுத்து இங்கே காற்றழுத்த மண்டலத்தில் மோதியவுடனே நெருப்பாகவும் புகையாகவும் ஆவியாகவும் மாற்றி விடுகின்றது.

அப்போது இவர் ஜாதகத்தை இன்னது நல்லது இன்னது கேட்டது என்று இப்படி எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். வானவியலைப் பற்றி ஜாதகத்தில் எழுதியிருந்தாலும் (அந்தக் குறிப்பிட்ட) ஜாதகத்தில் எல்லாம் நல்லதாகும் என்று எண்ணியிருந்தாலும் இந்த விஷத்தன்மையான நிலைகளில் பட்டபின் பல விதமான நோய்கள் வந்து மடிகின்றார்கள்.

பிறகு ஜாதகம் நிஜமாகுமா பொய்யாகுமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

ஜாதகத்தைப் பார்த்து “ஏழரை நாட்டுச் சனியன் வந்துவிட்டான்…” அதனால் என் தொழில் சரி இருக்காது என்று மனதில் பதிவு செய்து கொண்டால் அதற்கு என்ன அர்த்தம்?

அந்த ஜோசியக்காரன் நமக்குள் இதை ஆழமாகப் பதிய வைத்து விட்டான் என்று அர்த்தம்.
1.அப்படிப் பதிந்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் போது
2.”காரியம் தோல்வியாகுமே…” இந்த ஏழரை வருஷம் நாம் எப்படி இருப்பது..? என்று
3.அவன் கூறிய உணர்வுகளை நமக்குள் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துக் கொள்கிறோம்.
4.நாம் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தையும் மன உறுதி கொள்ளும் நிலையும் இழந்துவிடுகின்றோம்.

நமது வாழ்க்கையில் நல்லதை உறுதிபடுத்தும் நிலையையே மாற்றி ஒவ்வொரு கேட்டது நடக்கும் போதும்
1.ஏழரை நாட்டுச் சனி நடப்பதால் இப்படித்தான் இருக்கும்…! என்று
2.நல்லதைப் பெறும் தகுதியையும் நல்லதாக்கும் பண்புகளையும்
3.சுத்தமாகவே இழக்கச் செய்துவிடுகின்றது.

நம் நாட்டைக் காட்டிலும் ஜப்பானில் மத நம்பிக்கை உண்டு. ஜாதக நம்பிக்கை அதிகமாக உண்டு.

ஒரு செருப்பு வைத்தாலும் கூட எந்தத் திசையில் வைத்தால் வைக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். இன்ன வீட்டிற்குப் போனால் இன்ன திசையில் வைக்க வேண்டும் என்றெல்லாம் பார்த்து வைக்கக்கூடிய அந்த அளவிற்குச் சாங்கியங்கள் உண்டு.

ஆனால் அதே ஹிரோஷிமாவில் அணுகுண்டுகள் வெடித்தபின் இவர்கள் சாஸ்திரமோ மதமோ அல்லது கடவுளின் அடிப்படையில் சாங்கியங்கள் செய்த நிலைகளோ அவர்களைக் காப்பாற்றியதா…? அவர்களால் தப்ப முடிந்ததா…? இல்லையே.

எல்லா இடமும் கட்டிடங்களும் கருகியது. அவர்கள் எண்ணமும் கருகியது.

அதே சமயத்தில் ஹிரோஷிமாவில் அந்தக் காற்றலையில் பரவிக் கொண்டிருந்த விஷக் கதிரியக்கங்கள் எங்கெங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் கருவில் உள்ள குழந்தைகள் தாக்கப்பட்டது.

இன்றும் அங்கே கருச் சிதைவாகின்றது. ஊனமாகின்றது. கண்கள் இழக்கப்படுகின்றது. உறுப்புகள் சிதைகின்றது. அந்தக் கதிரியக்கம் கருவில் இருக்கக்கூடிய குழந்தையைச் சிதையச் செய்கின்றது.

புத்தர் காட்டிய அருள் வழியில் அவர்கள் கடைப்பிடித்துச் சென்றாலும் அவர்கள் எழுதிய சாஸ்திரங்கள் இன்று விஞ்ஞான உலகால் நிலைத்து இருக்கின்றதா?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

“இது நிலையற்றது…” என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக மிளகாயைத் தூவுகின்றனர். அல்லது சமையலுக்காக வேண்டி மிளகாயை வறுக்கின்றார்கள். அது கருகிக் காற்றில் வருகிறது.

இங்கே நாம் இருக்கும் பக்கம் வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். நுகர்ந்தால் உங்களுக்கு இருமல் வருகின்றது.

அப்பொழுது நான் சொல்வதைக் கேட்பீர்களா? அல்லது மிளகாய் நெடியைச் சுவாசித்ததும் இருமுவீர்களா?

இந்தத் திசைப் பக்கம் வருகின்றது என்றால் அதை நீங்கள் நுகர்கின்றீர்கள்.
1.அது உங்களை இப்படித் திருப்புகின்றது.
2.ஆனால் நெடி எங்கேயோ இருந்து வருகின்றது.

இதைப் போன்று நமது வாழ்க்கையின் நிலையில் எத்தகைய கொடிய தன்மைகள் வந்தாலும் அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தாது அதிலிருந்து நாம் பிரிந்திருத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில விஷத் தன்மைகளை முறிக்கும் உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து பல மந்திர ஒலிகளாக மந்திரங்களைப் பாய்ச்சப்பட்டு இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்துக் கொண்ட பின் என்ன செய்கின்றது…! என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்னொரு மனித உடலின் வீரிய உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
1.அதற்கென்ற மந்திர ஒலியை எடுத்துக் கண் கொண்டு பார்த்தான் என்றால்
2.புலி அப்படியே தனக்குள் ஒடுங்கிவிடும்.

மனிதனுக்குள் வந்தபின் இதே மந்திரத்தால் தனக்குள் ஜெபித்து அதர்வண வேதம் என்ற நிலைகள் கொண்டு அதை எப்படிப் பக்குவப்படுத்துவது என்று பின் வந்த “அரசர்கள்…” செய்தனர்.

அதே நிலைகள் கொண்டு வந்து (சித்தர்கள் என்ற நிலையில்) காட்டிற்குள் போனால் இந்தப் புலிகள் ஒடுங்கும்.

இந்த மாதிரி மந்திரங்களைக் கற்றுக் கொண்டவர்கள் புலித் தோலை விரித்து வைத்து அந்தப் புலி எப்படி வீரிய உணர்வுகள் எடுத்ததோ இதன் மேல் அமர்ந்து சில மந்திரங்களை ஜெபிக்கின்றார்கள்.

அப்படி உட்கார்ந்து ஜெபித்தார்கள் என்றால் அந்தப் புலியினுடைய உணர்வுகள் இங்கே வந்தபின் புலியைக் கண்டால் எப்படி அஞ்சுகின்றனரோ இதைப் போல பிறர் அஞ்சி ஒடுங்கும் நிலை வருகின்றது.

இந்த இந்த மந்திரத்திற்கு இப்படிச் செய்தால் இப்படி என்று புலித் தோல்களை விரித்து வைத்து அதன் மேல் இருந்து சில ஜெபங்களைச் செய்தார்கள்.

அவன் உடலில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளை நாம் கேட்டோம் என்றால் நாம் அவர்களுக்கு அடிமையாக இருப்போம். இது வசிய மந்திரங்களில் எதன் மேல் உட்கார்ந்து எதைச் செய்வதென்று செய்தார்கள்.

எப்படிப் புலியின் தன்மை அடைந்ததோ புலியின் உணர்வுகளை இவர் நுகர்ந்தால்
1.இவர் எவ்வளவு பெரிய சித்தராக இருந்தாலும் சரி
2.(கடைசியில்) அவர் செத்தவராகத் தான் ஆகின்றார்.
3.இந்தப் புலியின் தன்மை ஆனபின் இந்தப் புலியின் மணமே வரும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு மற்றவர்களை இவர் ஒடுக்கக் கற்றுக் கொண்டாலும் இவர் வெளியிலே சென்றபின் மனிதனின் உணர்வு இவருக்குக் கிடைக்காதபடி இவரை அடிமையாக்கிவிடும்.
1.புலித் தோலில் உட்கார்ந்தார்.
2.கடைசியில் புலிக் குட்டியாகத்தான் போவார்.
3.இது இவர்களுக்குத் தெரியாது.

குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்கினார்.

என்னைச் சில காலம் மான் தோலில் புலித் தோலில் உட்கார்ந்து இந்த உணர்வின் மணங்கள் வரப்போகும் போது இதனால் மற்றவர்களை நீ எப்படி வசியப்படுத்த முடிகின்றது…? என்று காட்டினார்.

முந்தி நான் (ஞானகுரு) மான் தோலை வைத்திருப்பேன். அது தனக்குள் எளிமையாகப் போகும் போது அப்புறம் புலித் தோலையும் வைத்திருந்தேன்.

அந்த உணர்வுகளை நுகரப்படும்போது அந்தப் புலியின் உணர்வுகள் வரப்படும் போது மற்றவர்களை எப்படி அடிமையாக்குகின்றது…? என்று காட்டினார் குருநாதர்.

நீங்கள் வந்தவுடனே இரண்டு வார்த்தை கேட்டால் போதும். நான் சொல்கின்ற மாதிரி பூனைக்குட்டி மாதிரி நீங்கள் வருவீர்கள். இது வசியம்.

சில மந்திரங்களுக்கு இப்படிப்பட்ட இந்தச் சக்தி உண்டு.

ஆளைப் பார்த்தவுடனே அவரை வசியம் செய்ததும் ஆஹா… மகான்…, “பெரிய மகான்…!” என்று நாம் போற்றலாம்.
1.ஆனால் அவரும் மகானாகப் போவதில்லை.
2.நாம் கேட்டவர்களும் மகானாகப் போவதில்லை.
3.உடலின் தன்மை கொண்டு நம் செயலை இழந்தது தான் மிச்சம்.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அகஸ்தியன் தன் தாய் கருவில் பெற்ற சக்தியால் நஞ்சை வென்றிடும் நிலை வரும்போது இவன் காட்டிற்குள் சென்றால் மற்ற உயிரினங்களோ மற்ற மிருகங்கள் எல்லாமே அடங்கிவிடுகின்றது.

அதுதான் அகஸ்தியனைக் காட்டு ராஜா என்பது.

அகஸ்தியனுடைய தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது மிருகங்கள் விஷ ஜெந்துக்களிலிருந்து தன்னைக் காத்ததுக் கொள்ள பல பச்சிலைகளையும் மூலிகைளையும் அரைத்துத் தன் உடலில் பூசியது. அந்த மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.

அந்த மணங்கள் கருவிலிருக்கும் அகஸ்தியருக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தது. அகஸ்தியனுக்கு அந்தச் சக்திகள் சந்தர்ப்பத்தில் உருவானது தான்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு காட்டு விலங்குகளுடன் செல்லப்படும் போது எல்லாமே ஒடுங்கிவிடும். இவன் உடலில் வெளிப்படும் மணத்தை நுகரும் காட்டு விலங்குகள் எல்லாம் அதனுடைய வீரியத்தன்மை குறைவதால் சாந்தமாக ஒடுங்கிவிடுகின்றது.

அகஸ்தியன் காட்டுக்குள் போகின்றான் என்றால் அவன் பின் படையே போகும். அதனால் அகஸ்தியனுக்குக் “காட்டு ராஜா…” என்று பெயரை வைத்தார்கள்.

காடு இருக்கின்றது என்றால் அனைத்திற்கும் ராஜா இவன். தன் வளர்ச்சியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் ஒளியான அணுக்களைசு சுவாசித்தவர்கள் தங்களுக்குள் வளர்த்து இன்று சப்தரிஷி மண்டலமாக அவன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனித வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான நிலைகளாகி வீழ்ந்து விட்டால் என்ன செய்வார்கள்?

சில பேர் வசதியாக இருப்பார்கள். வசதியற்ற நிலைகளில் இருந்தால் ஆண்களாக இருந்தால் அந்தத் துன்பங்களை மறப்பதற்காகப் போதை வஸ்துக்களைப் பயன்படுத்திச் சிந்தனையற்றவர்களாகி விடுகின்றனர்.

பெண்களாக இருந்தால் துன்பத்தைத் தாங்க முடியவில்லை என்றால் “என்ன வாழ்க்கை..!” என்று இந்த உடலை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

விஷத்தை அருந்தி மனித எண்ணமே இல்லாதபடித் தன் உடலை அழித்துக் கொள்கின்றனர்.

எந்த விஷத்தை உட் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்றார்களோ அந்த விஷத்தின் தன்மை உயிராத்மாவில் பரவி விஷம் கொண்ட பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று மறு பிறவியில் பாம்பாக உருவாக்கிவிடும்.

இதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்…!

வீட்டில் கஷ்டம் வந்தால் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு என்ன வாழ்க்கை என்று இவர்கள் வெறுக்கலாம். கடைசியில் சமாளிக்க முடியாத நிலைகளில் விஷத்தை உட்கொண்டால் மீண்டும் பாம்பாகப் பிறக்கிறார்கள்.

ஆண்கள் தன் மனதை மாற்றுவதற்காக வேண்டி போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தன்னை மறந்து நல்ல எண்ணங்களை எல்லாம் இழந்து கடைசியில் உடலை விட்டு இந்த உயிராத்மா செல்லும்போது மந்திரக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

போதை வஸ்துக்களை யார் யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மாமிசமும் உட் கொள்வார்கள். அந்த மாமிசம் இருந்தால் தான் அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும்.

இந்த இரண்டையும் அவர்கள் பயன்படுத்தினால் அந்த உயிராத்மாக்களை மந்திரக்காரர்கள் வெகு சுலபமாகப் பிடித்து விடுவார்கள்.

மாமிசத்தையும் போதை மருந்தையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்களைச் சொன்னால் போதும். உயிராத்மா அந்த மந்திரக்காரனின் கைகளில் போய்ச் சிக்கிவிடும்.

அவனிடம் சென்றபின் பல பல செயல்களைச் செய்யும். கெட்டதையும் செய்யும். நல்லதையும் செய்யும்.

ஒருவருக்கு தலை வலி போக வேண்டுமென்றால் இந்த ஆத்மாவை இழுத்துச் சேர்த்துக் கொள்வார்கள். அவர் நோய் தீரும்.

ஆனால் மந்திரக்காரன் கையில் சிக்கிய ஆன்மா அந்த உடலில் உள்ள நோயையெல்லாம் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொள்ளும். மந்திரக்காரன் ஆட்டிப் படைக்கும் சக்தியாக இருக்கும்.

ஒருவருக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்றால் இந்த உயிராத்மாவை அங்கே ஏவி விடுவார்கள். தொல்லை கொடுக்கும் நிலைகளை அங்கே உருவாக்கி அந்த உணர்வைத் தனக்குள் விளைய வைத்து இன்னும் அதிகமான விஷத் தன்மையாகும்.

1.முதலில் மந்திரக்காரன் கையில் சிக்கும்.
2.பின் பல உடல்களிலிருந்து வேதனையெல்லாம் சேர்க்கும்.
3.அந்த வினைக்கு நாயகனாகப் பாம்பாய் பிறக்கும்.

இன்று மந்திரங்களைக் கற்றுக் கொண்ட உயிராத்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்று அவருடைய நோயை நீக்க.. “டேய் உனக்கு நோயெல்லாம் போய் விடும்…!” என்று மந்திரத்தைச் சொல்லி ஜபிப்பார்.

நோயாளிக்கு உடல் நலமாகிப் போகும். அவர் உடலில் இருந்த நோயெல்லாம் இந்த மந்திரக்காரன் உடலில் வந்து சேர்ந்துவிடும். இது தான் கடைசி முடிவு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எல்லோருமே ஜோசியரிடம் சென்று ஜாதகத்தைக் காட்டி ஜோசியம் கேட்க விரும்புகின்றோம். ஜோசியக்காரர் “ஏழரை நாட்டான் சனியன் பிடித்திருக்கிறது…!” என்று சொன்னால் “சனியனை…” நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம்.

ஏழரை நாட்டான் சனி நான்கு வருடங்கள் கழித்து வருகிறது என்று சொன்னவுடனே இந்த நான்கு வருஷத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக வரும். ஆரம்ப நிலைகளிலே இன்னென்ன இடைஞ்சல் வரும் என்று பதிவு செய்வார்கள்.
1.உங்கள் பையனுக்கு இப்படி ஆகாது,
2.உங்கள் தொழிலில் எது எடுத்தாலும் நஷ்டம் ஆகும்,
3.உங்கள் நண்பர்களுக்குள் பகைமையாகும் என்று
4.ஜாதகத்தின் படி அவர் சொல்லி விடுவார்.

அதை எல்லாம் உங்கள் எண்ணத்தில் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.
மீண்டும் நினைவுக்கு செய்தவுடனே அது என்ன செய்யும்…!

டேப் ரெகார்டில் ஒன்றைப் பதிவு செய்து விட்டு அதனை மீண்டும் போட்டால் என்ன செய்யும்? அதே பாடலைத்தான் பாடும்.

உங்கள் உடலில் ஜோதிடக்காரன் பதிவு செய்ததைத் திருப்பி எண்ணினால் அந்த உணர்வு தான் முன்னாடி வரும்.

நீங்கள் யாரிடம் போய் வியாபாரத்தைப் பற்றிப் பேசினாலும் இந்த உணர்வு வரப்போகும் போது நீங்கள் சொல்லக்கூடிய சொல் அவர் காதிலே பட்டபின் அவர் என்ன செய்வார்…?

அவர் கண் உங்களை உற்றுப் பார்க்கின்றது.

ஏழரை நாட்டான் சனியன் பிடித்து விட்டது… கஷ்டம் இருக்கிறது…! என்று இந்த உணர்வுகள் உங்கள் உடலிலிருந்து வெளி வருகிறது. உங்களை அவர் கூர்ந்து கவனிக்கும் போது நீங்கள் வெளிப்படுத்தும் வாசனையை அவர் நுகர்கின்றார்.

1.நாம் முதலில் சொன்ன சொல்லை அவர் கேட்டறிந்தாலும்
2.உடலிலிருந்து போன வாசனையை அவர் சுவாசித்தவுடனே
3.நம் பலவீனத்தைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது.
4.”நம் வியாபாரம் மட்டமாகத்தான் இருக்கும்…, என்னத்த…?” என்கின்ற நிலையை அது காட்டிக் கொடுத்துவிடும்.

“யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்கிற மாதிரி ஏழரை நாட்டான் சனியன் பிடித்து விட்டது கஷ்டம் வரும் என்று பதிவான நிலைகள் எவ்வளவு பெரிய முயற்சி எடுத்துச் செய்தாலும் அது தான் நினைவுக்கு வரும்.

அந்த ஜோசியக்காரன் கஷ்டம் என்று சொல்லி இருக்கின்றான்…! என்ன ஆகப் போகிறதோ…! என்ற இந்த சந்தேக உணர்வுகள் உடலிலிருந்து அந்த மணமாக வந்து விடும்,

நீங்கள் சொல்லும் போதெல்லாம் உங்கள் உடலில் இருந்து போகக்கூடிய மணம் உங்களை எதிரியாக்கி விடும்.

ஜோசியக்காரன் சொன்னதை ரெகார்டு செய்து வைத்துக் கொண்டு அதன் வழியில் தான் உங்களால் நடக்க முடிகின்றது. ஜோசியப்படி மிகவும் சரியாக நடக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள்.

ஏனென்றால் அவர்கள் சொன்னதை அப்படியே உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டு அந்த எண்ணத்தை வளர்த்து கொண்டால் அதன்படி தான் நடக்கும்.

“எண்ணியது தான் பதிவாகின்றது” என்று (அன்றைய) அரசனுக்கும் சரி ஜோதிடக்காரர்களுக்கும் தெரிகின்றது.

எந்த பக்தியின் தன்மையில் எதை அரசன் அன்று உருவாக்கினானோ அதை மதமாக்கி மதத்தின் அடிப்படையில் மக்களைத் தனக்குள் அடிமைப்படுத்திக் கொண்டு வருவதற்காக “ஜாதகக் குறிப்புகளைக் கொடுத்து” அவனவன் மதத்திற்குத் தகுந்தவாறு இணைத்து எடுத்து வைத்துக் கொண்டார்கள்…!

ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில் அவர்கள் காட்டியதைத்தான் எடுத்து இந்த நேரம் நல்லது… இந்த நேரம் கெட்டது… என்று நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

அந்தச் சட்டப்பிரகாரம் “இப்படித்தான்…!” என்று வகுத்து கொண்ட அந்த ஜாதகக் குறிப்பு தான் பதிவாகி வேலை செய்யும்.

1.அருள் சக்திகளை நமக்குள் கூட்டப்படும் போது
2.அந்த உணர்வின் சக்தி கெட்டதை நீக்கி
3.நல்லதை உருவாக்கும் என்று தான் ஞானிகள் சொன்னார்கள்.

இவ்வாறு அந்த மெய் ஞானியினுடைய உணர்வினைப் பதிவாக்கி இந்த உணர்வின் சக்தியை நீ இப்படி வளர்த்துக் கொண்டால் இந்த வேலையைச் செய்யும் என்று அன்றைக்கு அந்த ஞானிகள் சொன்னார்கள்

மனிதன் தான் எண்ணிய நிலைகளே திருப்பி வேலை செய்கின்றது என்று ஞானிகள் சொன்னதைத்தான் ஜாதகங்களாக எழுதி வைத்து விட்டு “கஷ்ட காலங்களை எல்லாம்…” நாம் வரவழைத்துக் கொள்கின்றோம்.

அதற்கு இடைவெளியில் இந்த இந்த மாதத்தில் நல்லதாக இருக்கும் என்று நினைப்பார்கள். ஆனால் பாலிற்குள் ஒரு விஷத்தைப் போட்டு விட்டால் என்ன செய்யும்?

அந்த நான்கு மாதத்தில் கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் அந்த விஷத்தைத் சுத்தமாக துடைக்க முடியாது.
1.என்னமோ முயற்சி எடுத்தேன்…,
2.கஷ்டம் இன்னும் என்னை விட்டுக் போகமாட்டேன் என்கிறதே…! என்று தான் சொல்வார்கள்.

இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்குள் தெளிவாக்குகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி அந்த உணர்வுகள் விளைந்ததைத்தான் வியாசகர் அன்று வேதங்களாகக் கூறினார்.
1.உருவம்.., திடப் பொருள் என்பது “ரிக்”
2.அந்தப் பொருளிலிருந்து மணங்கள் வரும்போது “சாம”.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது “அதர்வண”.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது “யஜூர்”.

ஒரு சத்து மற்றொன்றை எப்படி அது விழுங்கியது? அதன் மூலமாகப் புதிதாக ஒரு பொருள் எப்படி உருவாகின்றது என்பதை இவ்வாறு நான்கு வேதங்களாகக் காட்டியுள்ளார்.

சூரியனில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் அது ஒன்றோடு ஒன்று சேர்த்து அந்தப் பதிவான உருவான உணர்வுகள் “ரிக்…”

அதே சமயத்தில் அது பூமிக்குள் அது வந்தவுடனே தாவர இனங்களாக மணங்களாக வீச ஆரம்பிக்கின்றது.

மற்ற கோள்கள் அதிகமாக மணங்கள் வீசாது. ஆனால் அதனின் சத்து மற்ற பொருள்களுடன் நெகட்டிவ் பாசிட்டிவ் ஆனவுடனே மணத்தை வீசும் இது “சாம…”

ஒரு வேப்ப இலையை எடுத்துக் கொண்டால் அது மணம் வீசுகின்றது. அது தான் நாதங்கள். இப்படிப் பல நிலைகள்.

ஆனால் அதை எடுத்துச் சாப்பிடும் பொழுது யஜூர். அது பதிவாகின்றது. பதிவான நிலைகள் கொண்டு அது எதை எதை இணைத்து இது ஒன்றாக வேப்ப மரமாக ஆனதோ அது யஜூர் – ஒரு வித்தாக முழுமை அடைகின்றது.

அதே சமயத்தில் அவை ஒன்றை ஒன்று விழுங்குகின்றது “அதர்வணம்…” வலு கொண்டது வலுவற்றதை விழுங்குகின்றது. அப்போது அது விழுங்கி எது வலு கொண்டதோ அதனுக்குக் கீழ் மற்றதை அடிமையாக்குகின்றது.

(உதாரணமாக வேப்ப மரத்தின் மணம் ரோஜாப்பூவின் மணம் விஷச் செடியின் மணம் மூன்றும் ஒன்றானால் கருவேப்பிலையாக உருவாகின்றது)

வலு கொண்டது ஒரு எளிமையானதை விழுங்கினாலும் அதனின் இயக்கம் எப்படி இருக்கிறது?

மிளகாயில் காரம் ஜாஸ்தியாக இருக்கின்றது. அதற்குள் சிறிதளவு “சப்…” என்று இருக்கும் மாவைப் போட்டவுனே மாவு காரமாகத்தான் இருக்கின்றது.

ஆனால் “சப்…” என்று இருக்கும் மாவு அதிகமாகி விட்டது என்றால் மிளகாயின் காரம் உள்ளுக்குள் மறைந்து காணாமல் போய்விடும். காரத்தின் வீரியத்தைக் குறைத்து விடுகின்றது.
1.மாவு அதிகமாக இருக்கும் போது
2.காரத்தைப் போட்டால் ருசியாக இருக்கின்றது.

இதைப் போலத் தான் நம்மிடம் நல்ல குணங்கள் இருப்பினும் “இப்படிச் செய்கின்றார்களே… இப்படிச் செய்கின்றார்களே…!” என்று அடுத்தவர்களின் குறைகளை எடுத்துக் கொண்டோம் என்றால் அது நல்ல குணத்திற்குள் சேர்ந்து சேர்ந்து நல்லது மறைந்து குறையான குணமாக வளர்ந்து விடும்.

அப்பொழுது நல்ல குணத்தால் உடலாக வளர்ந்த பூரிப்பான சதையும் கரையும். இது தான் அதர்வண வேதம் என்பது.
1.நாம் எதனை எடுத்து எதனை அதிகமாக்குகின்றோமோ
2.அதனின் வலு கொண்டு மற்றதை அழிக்கின்றது.

மந்திரம் ஜெபிப்பவர்கள் இந்த மந்திரத்தை நீ 1008 தரம் ஜெபிக்க வேண்டும் 108 தரம் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கென்று சில முறைகள் வைத்து அந்த மந்திரங்களை உச்சாடணம் செய்யச் சொல்வார்கள்.

“இவ்வாறு செய்து கொண்டே வந்தாய்…!” என்றால் உனக்குக் காளி வசியமாவாள். மாரி உனக்கு வசியமாவாள் என்றெல்லாம் சொல்வார்கள்.

நோயான நிலை எதைக் கேட்கின்றாயோ அது மாறி உனக்குள் வந்து எவ்வளவு தீமையை விளைய வைக்கின்றதோ அதைப் போன்று இதைச் சொல்லி மீண்டும் ஒருவருக்கு ஏவினாய் என்றால் “அவர்கள் பூராமே கரைந்து போவார்கள்…!” என்றெல்லாம் அதர்வண வேதத்தில் காட்டுவார்கள்.

தான் எண்ணியபடி மற்றவர்கள் தன்னை வணங்கவில்லை… மதிக்கவில்லை…, என்றால் அந்த எதிரியை வீழ்த்திடும் நிலையாக அவனை அடிபணியச் செய்கின்றேன் என்று மந்திர ஒலிகளை வைத்து இவ்வாறெல்லாம் செய்வார்கள்.

பாலுக்குள் விஷம் பட்டவுடனே நல்ல சத்தை அடக்குவது போல
1.மனிதனுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வைக் கவர்ந்து
2.”நான்” என்ற ஆணவத்தைக் காட்டி மற்றவரை வீழ்த்தத்தான்
3.இந்த மந்திர ஒலிகள் பயன்படுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் உள்ள உண்மைகள் காலத்தால் மறைந்துவிட்டது. எல்லாம் சாங்கிய சாஸ்திரமாகிப் போய்விட்டது.

விநாயகருக்கு அருகம்புல்லை மட்டும் இரண்டு வைத்தால் போதும்…! ஏற்றுக் கொள்வார். அதுவும் முடியாவிட்டால் பக்தியோடு பக்கத்தில் இருக்கும் தழைகளைப் போட்டு “இந்தாப்பா உனக்குச் சாப்பாடு…!” என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்வார் என்று இப்படி மாற்றி அமைத்துவிட்டார்கள்.

அரசன் தான் வாழ உருவாக்கிய நிலைகளில் “சரணாகதி தத்துவமாகத்தான்…” இன்று இயக்கப்பட்டு அதைக் காக்கும் நிலைகளில் தான் எல்லா மதங்களுமே செயல்பட்டுக் கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் குருமார்களாகத் தான் இருக்கிறார்களே தவிர மெய் ஞானிகள் காட்டிய நிலைகளில் இந்து என்றோ முஸ்லீம் என்றோ கிறிஸ்துவன் என்றோ அல்லது மற்ற நிலைகளிலோ எதுவுமே கிடையாது.
1.உணர்வுக்கொப்ப உணர்ச்சியும்
2.உணர்ச்சிக்கொப்ப இயக்கமும் (சொல் செயல்) என்ற நிலைகள் தான் ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

ஆண்டவன் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று ஒரு சாரார் உணர்வைப் பதிவு செய்கிறார்கள். அடுத்து கடவுள் எங்களுக்கு இப்படிச் சொல்கிறார் என்று இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் இந்த இருவருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.

கர்த்தர் வான் வெளியில் இருந்து எடுத்துக் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்த மெய் ஞானிகளின் உண்மை வழிப்படி நமது உயிரே கர்த்தராகிறது.

“ஆண்டவா…” என்று சொல்கிறார்கள். எதனின் உணர்வை எடுத்தோமோ அது நம் உடலாகிறது.
1.இந்த உடலை ஆள்வது யார்?
2.நமது உயிர் தான் – “ஆண்டவா…!”

கட + உள் = கடவுள் – ஆகவே உள் நின்று நம்மை இயக்கி உணர்வை உடலாக உருவாக்குவது “கடவுள்…” உருவாக்குவதால் ”ஈஸ்வரா…” என்று உயிரைச் சொல்கிறார்கள்.

உருவாக்கிய உணர்வுக்குள் நம்மை ஆளும் ஆண்டவனாக இருக்கிறான். நம்மை ஆள்வது அவன் தான்.

நாம் எண்ணிய உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை இரையாக்குகிறார்.
1.இரையின் உணர்வு உடலாகிறது.
2.உணர்வின் இயக்கம் செயலாகிறது… “தெய்வமாகிறது…!” என்று
3.ஆதியிலே தோன்றிய “அகஸ்தியன்” தெளிவாகக் கூறியுள்ளார்.

இதைச் சீராகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த மெய் ஞானிகள் சொன்ன உணர்வுகளை இணைத்து இணைத்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஒன்று போல் வரும்.

கார்… ரேடியோ… போன்ற உபகரணங்களில் அதற்குள் இருக்கும் உறுப்புகளைத் தனித் தனியே செய்கின்றார்கள். அதில் இந்தெந்த உறுப்புகள் (பாகங்கள்) இந்தெந்த வேலைகள் செய்யும் என்று உருவாக்கி வைத்து விடுகிறார்கள்.

அதைச் சேர்த்து இணைத்து முழுமையாக ஆன பிறகு அது அது அதனதன் வேலைகளைச் செய்யும். அந்த உபகரணம் சீராக இயங்கும்.

உதாரணமாக ஒரு மைக் (MIC) வைத்துப் பேசினால் அங்கே சப்தம் வெளி வருகிறது. ஒலியைப் பெருக்கும் ஆம்ப்ளிபையர் (AMPLIFIER) ஒன்றோடொன்று சேர்த்து ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்யும். ஆனால்
1.அதிலே கொஞ்சம் (அழுத்தமாகி எதிர் நிலையானால்) ரிப்பேர் ஆனால்
2.“கரா… புரா… உஸ்ஸ்ஸ்… உய்ய்ய்…” என்று சப்தம் எழுப்பிவிடும்
3.மைக்கில் யார் பெசினாலும் கேட்க முடியாது அர்த்தமும் ஆகாது
4.மீறிக் கேட்டாலும் எரிச்சலாகிவிடும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உணர்த்திய அருள் வழிப்படி அந்த ஞானிகளும் மகரிஷிகளும் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மையின் நிலைகளை உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நாம் சாமியை இப்படிக் கும்பிட்டோம்…! “இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே…?” என்று நினைத்தால் “கரா…புரா…” ஆகிப் போய் விடுகிறது.

நாம் விநாயகரைக் களிமண்ணால் செய்து (விநாயகர் சதுர்த்தி அன்று) எப்படியெல்லாம் கும்பிட்டோமே…, “இவர் இப்படிச் சொல்கிறாரே” என்று
1.இரண்டையும் கிராஸ் (CROSS) பண்ணி நினைத்தீர்களானால்
2.நான் சொல்வதை நீங்கள் CROSS பண்ணிக் கொண்டே..
3.”கரா..புரா…” என்று பண்ணிக் கொண்டே இருப்பீர்கள்.
4.அர்த்தமே உங்களுக்கு ஆகாது.

ஆகவே இயற்கையின் உண்மையின் நிலைகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மெய் ஞானிகளின் உணர்வுகளை முதலில் பதிவு செய்துக் கொள்ளுங்கள். அதைப் பதிவு செய்த பின் உங்கள் வாழ்க்கையில் எது… எப்படி…? என்ற நிலைகள் தெளிவாகத் தெரியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அமாவாசை என்றால் இருள் சூழ்ந்த நாள். அதாவது சூரியனுடைய ஒளிக்கதிர் கிடைப்பது இல்லை.

முன்னோர்களை வணங்குகின்றோம் என்ற நிலையில் சாமி கும்பிடுவதற்காக மந்திரம் சொல்லி யாகங்கள் செய்வோம். அதிலே புஷ்பங்கள் நெய் சோமபானம் எல்லாம் போடுவார்கள்.

அமாவாசை அன்று இந்த உணர்வுகள் எல்லாம் பூமியில் அதிகமாகச் சுற்றி கொண்டிருக்கும்.

நம் மூதாதையர்கள் என்னென்ன சாப்பிட்டார்களோ அதை எல்லாம் வைத்துக் கும்பிடுவோம். அவர்கள் நினைவு மறக்காமல் இருப்பதற்காக எங்களை இப்படி வளர்த்தீர்கள் அப்படிச் செய்தீர்கள் என்று எண்ணி அவர்களை அழைத்துச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கும்பிடுவோம்.

அவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பிற்பாடு நாம் என்ன செய்கிறோம்.

சுட்ட சாம்பலை எடுத்துக் கங்கையிலோ ஆற்றங்கரையிலோ கொண்டு போய்க் கரைக்கின்றோம். கரைத்தால் அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

வீட்டிற்கு வந்த பிற்பாடு சொந்த பந்தம் எல்லாம் ஒன்று கூடி எண்ணையை தேய்த்துக் குளிக்க வைத்து நல்ல புதுத் துணி எல்லாம் கொடுக்கின்றார்கள்.

புதுத் துணியைக் கட்டிக்கொண்டு தலை மகனை மாவிளக்குத் தீபம் ஏற்றச் செய்கின்றார்கள். பின் முக்காடு போட்டுக் கொண்டு அந்தத் தீபம் அணையாதபடி விநாயகர் கோயிலில் போய் அர்ச்சனை செய்து விட்டால் இறந்தவர்கள் மோட்ச லோகம் போவதாகச் சொல்கிறார்கள்

நாம் தீபாவளி அன்று. புத்தாடைகளை அணிகிறோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி விட்டு அருள் உணர்வுகளைப் புத்தாடையாகப் போடுகின்றோம்.

ஆனால் இங்கே ஒருவர் இறந்துவிட்டால் பாவத்தைப் போக்கிவிட்டு சொந்த பந்தங்களைக் கூப்பிட்டுச் சொந்த பந்தத்திற்காக வேண்டிப் புத்தாடைகள் அனியச் சொல்கிறார்கள்…!

நெய் தீபம் ஏற்றிக் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டால் மோட்ச தீபம் என்கிறார்கள்,

இந்த மஹாளய அமாவாசை மிகவும் முக்கியமா முன்னோர்களுக்காக வணங்குவார்கள். ஆனால் அந்த மந்திரவாதிகள் (குடுகுடுப்புக்காரர்கள்) என்ன செய்வார்கள் தெரியுமா…?

நம் வீட்டு வாசற்படியில் இருக்கும் கொஞ்சம் மண்ணை எடுத்துக் கொண்டு செல்வார்கள். வீட்டில் உங்களுக்குத் தெரியாமல் சிநேகிதமாக வந்து தலைமுடியை எடுத்துக் கொள்வார்கள்.

குடுகுடுப்புக்காரன் வந்தால் நம்மிடம் பழைய துணியைத்தான் கேட்பான். கொடுத்துவிடுவோம்

இந்த மூன்றையும் எடுத்துச் சென்று என்னா செய்கிறார்கள்…!

முன்னோர்களின் உணர்வு தான் உடலாக நாம் உருவாகியுள்ளோம். அமாவாசை அன்று சாப்பாடு கொடுத்து அவர்களை நாம் கூப்பிடுவோம். அப்பொழுது அந்த உணர்வு எல்லாம் அங்கே குவிந்து வரும்.

நம் பாதம் பட்ட மண் தலை முடி எல்லாவற்றையும் வைத்து எங்கே அந்த உடலைச் சுட்டார்களோ அல்லது எங்கே புதைத்தார்களோ அங்கே சென்று அதற்கென்ற மந்திரத்தைச் சொல்வார்கள். மதுபானம் மாமிசம் எல்லாம் வைத்து ஜெபிப்பார்கள்.

மந்திரத்தை ஜெபித்தவுடன் இங்கே அம்மா அப்பாவைச் சாப்பாடு வைத்துக் கூப்பிடுவோம்… அவன் மந்திர சக்தியால் இழுக்கும் பொழுது அந்த ஆன்மா அங்கே சென்றுவிடும்.

யாகம் என்றால் என்ன? யாக வேள்வி என்றால் அன்றைய காலங்களில் அதிலே மனிதனைப் பொசுக்கினது உண்டு. ஆடு கோழிகளை குதிரைகளைப் பொசுக்கினது உண்டு.

இராமாயணத்தில் சொல்லியிருப்பார்கள். அசுவமேத யாகம் என்பது, நம் உயிரணு தோன்றியதிலிருந்து புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் மனிதனின் மாற்றங்கள் ஏற்பட்டதற்குத் தகுந்த மாதிரி
1.ஒவ்வொரு மாற்றத்திற்குத் தக்க
2.1008 குணங்கள் உருவான நிலையைத்தான் யாகத்தீயில் போட்டு
3.அந்த ரிக்கியர்கள் மந்திரங்களைச் சொல்லி
4.அதற்கு வேண்டிய சாப்பாடு மற்றும் மயக்கமாக்கும் பல உணர்வுகளைக் கொடுத்து,
5.சோமபானம் என்ற மதுவைக் கொடுத்து நினைவை மாற்றச்செய்து,
6.மந்திரங்களைச் சொல்லிக் கடைசியில் யாகத் தீயில் போட்டுப் பொசுக்குவார்கள்.

மந்திரத்தைச் சொன்னவுடன் அந்த உடலில் (பொசுக்கிய உடலில்) மந்திரவாதி பதிவாக்கிய உணர்வெல்லாம் வெளிவரும்.

உதாரணமாக ஒரு மனித உடலில் நோயாகி விட்டதென்றால் பாசத்தால் அந்த நோயின் உணர்வை நாமும் எடுத்தால் அந்த மனிதன் இறந்தவுடன் அந்த உணர்வு நமக்குள் வந்து அதே நோய் நமக்கு வரும்.

இதைப் போன்ற் மந்திரத்தை ஜெபித்த பிற்பாடு இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் அந்த ஆன்மாக்களைக் கைவல்யம் செய்து கொள்வார்கள்.

கைவல்யம் ஆன பின் சில பக்குவங்களைச் செய்து மற்றவர்கள் மீது ஏவல் செய்வார்கள்.
1.நோய் நீங்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
2.நோயை உருவாக்க வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்
3.ஒரு குடும்பத்திற்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்றால் ஏவல் செய்வார்கள்.

இறந்தவர்களின் உயிரான்மாக்களை இதற்குத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். விஞ்ஞான காலத்தில் வாழ்ந்தாலும் இதையெல்லாம் விஞ்ஞானத்தையும் ஏமாற்றிச் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு வித்திட்டவர்கள் அன்றைய அரசர்கள் தான்.

சரியான முரடனை உண்டாக்கி நாட்டுப் பற்றை ஏற்றி
1.“நீ தான் இந்த நாட்டைக் காப்பாற்றுகின்றாய் என்று சொல்லிக் கொடுத்து
2.அவனுக்குத் தெரியாமலே தீயில் போட்ட பிற்பாடு
3.மந்திரத்தைச் சொல்லி அந்த உயிரான்மாவை எடுத்து வைத்துக் கொள்வார்கள்.
4.தன் நாட்டைக் காக்கும் காவல் தெய்வம் என்று தன் எல்லையின் முகப்பில் வைத்திருப்பார்கள்.

தான் சுகமாக வாழ்வதற்காக அரசர்கள் உருவக்கியது தான் இந்த நிலைகள். குலதெய்வங்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள். பெரும்பகுதியானவர்கள் எங்கள் குலதெய்வம் தீயிலே மாண்டது என்று தான் சொல்வார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஞானிகள் காட்டிய வழிக்கு மாறாக மனிதன் விண் செல்லும் நிலைகளைத் தடைப்படுத்திவிட்டார்கள். இன்று இந்த உண்மைகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள ஆள் கிடையாது.

இதற்கு முன்னாடிச் செய்ததெல்லாம் தப்பா…? என்று வாதத்திற்கு வருவார்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்


பண்டைய அரச காலங்களில் மந்திர சக்தியால் பில்லி சூனியம் ஏவல் என்ற நிலைகளில் செயல்பட்டார்கள்…? அதனின் தொடர்ச்சியாக இன்றும் பல பல இடங்களில் மந்திரத்தால் என்னென்ன தவறுகள் செய்கின்றார் என்பதை குருநாதர் காட்டினார்.

ஒரு வயதிற்கு வந்த பெண்ணை அது திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றவுடனே ஏவல் செய்து விட்டார்கள்.

அந்தப் பெண் விட்டத்தில் அப்படியே தலை கீழாகத் தொங்கும். அப்புறம் கீழே இறக்கி விட்டு விடுவார்கள். இறக்கி விட்ட பின்னாடி ஆகாரம் சாப்பிடப் போனால் உச்சந்தலையில் இருந்து வெறும் இரத்தமாகக் கொட்டும்.
1.சாப்பிட விடாது செய்கின்றது.
2.ஆனால் இத்தனை இம்சைகளையும் பட்டு அது வாழுகின்றது.

இன்னொரு ஆவி அந்த உடலுக்குள் நின்று ஏவல் செய்த நிலைக்கொப்ப எப்படி இம்சிக்கின்றது என்று காட்டுகிறார் குருநாதர். அந்தப் பெண் எந்தத் தவறும் செய்யவில்லை.

எதை எதையெல்லாம் உருவாக்கி அந்த உடலைக் கொன்றானோ கொல்வதற்கு எது மூலமாக இருந்ததோ அதை வைத்து ஏவல் செய்கிறார்கள். ஏவல் வேலைக்காக என்றே இப்படித் தயார் செய்கிறார்கள்,

மந்திரம் செய்பவர்கள் பிறருடைய நிலைகள் அறியாதபடி பொருளுக்காகச் செய்கிறார்கள்.

1.தன்னுடைய புகழைத் தேடவும்
2.தன்னை எல்லோரும் போற்ற வேண்டும் என்றும்
3.தன்னைக் கண்டால் மற்றபர்கள் பயப்பட வேண்டும் என்றும்
4.நிலையற்ற உடலுக்காகவே அவ்வாறு செய்கிறார்கள்.

பிறரை இம்சிக்கச் செய்து பொருளை வாங்கி இவன் அனுபவித்தாலும் இவன் கண்ட வித்தைகள் அனைத்தும் பிறரைத் துன்புறுத்தும் நிலைகளில் தான் செய்து விட்டேன் என்று அகந்தை கொள்வதும் தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அகம் கொண்டு செயல்படுபவர்களையும் குருநாதர் காட்டுகின்றார்.

மனித உடலில் எந்த ஆசையின் உணர்வுகள் விளைய வைத்தார்களோ அதனின் அடிப்படையில் மந்திரங்கள் ஜெபிக்கப்படும் போது அந்த அலைகளைக் கவர்ந்து பெரிய தத்துவ ஞானியாகவும் பெரிய கடவுளாகவும் அவர்கள் செயல்படுத்துகின்றார்கள்.

தனக்கு மீறி எவரும் இல்லை…! நானே கடவுள்…! என்ற நிலையும் மந்திர ஒலிகள் பெற்றவர்கள் அவர் எவ்வாறு அலைகின்றனர்…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஆவியை வைத்துச் செயல்படுத்தும் போது அந்த உடலிலே இம்சைகளைக் கொடுத்தாலும் அவன் (மந்திரவாதி) இறந்தபின் இந்த ஆன்மா எவ்வாறு போகும் என்ற நிலையும் நிலைப்படுத்திக் காட்டுகின்றார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் அவன் எந்த காரியத்தைச் செய்தானோ அதே உணர்வு இவர்களுக்குள் வந்து
1.அடுத்தவன் கையில் சிக்கி இதே காரியத்தைச் செய்து
2.அதில் எத்தனை வேதனைப்படுகின்றான் என்ற நிலையும் காட்டுகின்றார்.

அதே சமயத்தில் மந்திர சக்தி பெற்றவர்கள் மந்திரம் அல்லாது ஞானத்தின் தொடர் கொண்டு ஞானியின் வழியில் செல்ல வேண்டும் என்று அந்த வழியில் செல்ல முற்படுபவர்களுக்கு தீமையான நிலைகளைச் செய்து அவர்கள் பெற முடியாத நிலைகள் எவ்வாறு தடைபடுத்துகின்றனர்..?

ஆகவே ஒரு மந்திரக்காரனிடம் அவனுடைய தொழில் எவ்வாறு இருக்கின்றதென்றால்
1.நீ நன்மையே செய்தாலும்
2.அவன் தீமையின் வலு கொண்டு
3.உன் நல்லதைச் செய்யாது எவ்வாறு தடைபடுத்துவான் என்ற நிலையையும் உணர்த்துகின்றார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட அவனுக்குத் தொல்லைகள் வருவதைப் பார்த்து “அவனுக்கு இப்படித் தான் ஆகவேண்டும்…” என்று நாம் ரசித்தோம் என்றால் அவனுக்குள் வந்த தொல்லைகளும் அந்த துயர உணர்வுகளும் நமக்குள் வந்து அதே உணர்ச்சிகளைத் தூண்டி நமக்கும் அந்த நிலை வந்து விடும்.

துயரப்படுபவன் யாராக இருந்தாலும்… அல்லது நமக்கு ஆகாதவனே துயரப்பட்டாலும்…
1.அவர்கள் அறியாத நிலையிலிருந்து விடுபட்டு
2.அருள் உணர்வுகள் அவர்கள் பெற்று
3.மெய் பொருள் காணும் நிலை பெற்று
4.பற்றும் பாசத்துடன் வளரும் நிலையும் நன்மை செய்யும் உணர்வுகள் அவருக்குள் வளரவேண்டும் என்று
5.இதனை நாம் நுகர்ந்தால் இந்த உணர்வுகள் நம் உயிரான ஈசனிடம் பட்டு
6.அந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலந்து
7.பகைமை என்ற உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கும்.

இதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் சொல்…! இந்த உணர்ச்சிகளை “நீ அனைவருக்கும் பரப்பு…!” என்றார் குருநாதர்.

அதன் வழி உங்கள் உயிரைத்தான் நான் கடவுளாக மதிக்கின்றேன். அவனால் உருவாக்கப்பட்ட உடல் என்ற நிலைகளில் மதித்து மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆரம்பத்தில் என்னைக் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அழைத்துச் சென்றார் குருநாதர். பின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று
1.ஒவ்வொரு உணர்வுகளுக்கும் என்னென்ன உருவங்கள் இருக்கிறது…?
2..அந்தத் தெய்வ குணத்தின் சிறப்பு என்ன…?
3.அதனை எப்படி மக்கள் வளர்க்கின்றனர்…? என்று உணர்த்தினார்.

ஞானிகள் தாம் கண்டுர்ந்த உண்மையின் உணர்வை (மெய்யை) உணர்த்துவதற்கு உருவச் சிலையை அமைத்தனர்.

ஆனால் அதைத் தவறான வழியில் தான் இன்று பயன்படுத்துகின்றனரே தவிர நல்வழிப்படுத்தும் நிலை அற்றுப் போய் விட்டது.

ஆகவே ஒவ்வொரு மக்களுக்கும் ஞானிகள் கண்ட மெய்யை நீ தெளிவுபடுத்த வேண்டும் என்றார் குருநாதர்.

உதாரணமாக குலதெய்வங்களை வணங்குகின்றோம். அதே சமயத்தில் நாம் குலவழியில் எந்தெந்தத் தெய்வங்களை வணங்கிச் செயல்பட்டோமோ அதன் வழி தான் இன்று அந்தந்தக் குடும்பங்களில் பல உட்பிரிவுகளும் அதிகமாக வளர்கின்றது.

அந்தக் குலதெய்வம் எப்படி உருவானது என்ற நிலையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

அன்று ஆண்ட அரசர்கள் மற்ற எதிரிகளை வீழ்த்துவதற்காக சில மந்திரங்களைச் சொல்லிச் செயல்படுத்துவார்கள். அந்த அரசன் ஒரு கூட்டமைப்பாகப் போருக்குச் செல்லும்போது அதிலே ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்வார்கள்.

1.நாட்டைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவரும் சேர்ந்து
2.தன் எதிரியை வீழ்த்தவேண்டும் என்ற உணர்வை அந்தக் குழந்தைக்கு ஊட்டி
3.அதனைத் தீயிலே போட்டுப் பொசுக்கி விட்டு
4.அதிலிருந்து உணர்வுகளைப் (மந்திர ஒலிகளாக) பிரித்து எடுத்துக் கொள்வார்கள்.

அந்த மந்திர ஒலி கொண்டு பிறிதொரு போர் முறையில் வரும் எதிரிகளுக்குள் பாய்ச்சி அடுத்த நாட்டுக்காரர்களைச் செயலற்றவர்களாக ஆக்குவதற்காக அக்காலங்களில் இவ்வாறு செய்தனர்.

இதனை நாம் ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்க்கலாம். குலதெய்வம் யார் என்றால் “நெருப்பிலே மாண்டவர்கள்…!” என்று தான் வைத்திருப்பார்கள்.

அதன் வழி கொண்டு “அவர்களின் ஆடைகளையும் ஆபரணங்களையும்…” வைத்துக் குல வழியில் நாங்கள் வணங்கி வருகிறோம் என்று தான் சொல்வார்கள்.

“இல்லை…” என்று யாரும் இதை மறுக்க முடியாது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

இதை எல்லாம் அந்த அரசக் காலங்களில் வளர்த்துக் கொண்ட அந்தப் பரம்பரை வழிகளில் தான் வருகின்றனர்.

இன்று நம் குடும்பத்தில் மூதாதையர் இறந்து விட்டால் அந்தக் குல வழியில் நாம் அவர்கள் என்னென்ன வழி மார்க்கங்கள் செய்தார்களோ அதே போன்று தான் நாமும் அவர்களை வணங்கி வருகின்றோம்.

வணங்கினாலும் அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அந்தக் குடும்பத்தில் யார் பற்று கொண்டனரோ அந்த உடலுக்குள் மீண்டும் வந்து விடுகின்றது.

வந்த பின் அருளாடத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் குடும்பத்தில் சகோதரர் பத்துப் பேர் இருக்கின்றார்கள் என்றால் (அக்காலங்களில் பத்துப் பேர் உண்டு) அங்கு பங்கு பிரிப்பதில் தவறு நடந்து விட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் போர் செய்து பிரிந்து விடுவார்கள்.

பிரிந்து கொண்ட பின் என்ன நடக்கின்றது…?

1.என் சொத்தை நீ அபகரித்துக் கொண்டாய்…!
2.உன் குடும்பமெல்லாம் சீரழிந்து விடும்…! என்றும்
3.ஒருவருக்கொருவர் சாபம் இட்டுக் கொள்வார்கள்.

ஆக கூட்டாக இருந்து நான் சம்பாதித்தேன். என் பங்கை அவன் எடுத்துக் கொண்டான் என்று பகைமை உணர்வுகள் வந்து விடுகின்றது.

அப்படிப் பகைமை உணர்வு வந்த பின் அந்தக் குலதெய்வம் என்று வணங்கி வந்தவர்கள் அதை வணங்குவதில்லை.

அந்தக் குலதெய்வத்தை வணங்கவில்லை என்றாலும் இந்த இரண்டு பேர் பிரிந்த உணர்வுகளில் உடலை விட்டு உயிராத்மா பிரிந்த பின் இவர் சார்புடைய நிலையில் இந்த ஆன்மா புகுந்து குல வழியாக மாறுகின்றது.

அதைப் போன்று அங்கேயும் சகோதரர் பிரிந்து சென்றார் என்ற நிலையில் இறந்தால் அதே குலதெய்வங்களை வணங்கும் பொழுது
1.உயிருடன் இருக்கும் பொழுதே அவர் தொல்லை கொடுத்தார்…!
2.உடலை விட்டுச் சென்றாலும் புகுந்த உயிரான்மாக்கள் இவர்கள் உடலில் அருளாடும்…!

குலதெய்வங்கள் வணங்கும் குடும்பங்களில் அருளாடும் குடும்பங்களில் இதைப் பார்க்கலாம். அருளாடுபவர்களில் குடும்பங்களில் நிம்மதி இருக்குமா என்றால் இருக்காது.

1.குல வழியில் வரக்கூடிய அனைத்தும்
2.நாம் இந்த மனித உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
3.பழி தீர்க்கும் உணர்வும் பகைமையை வளர்த்துக் கொள்ளும் நிலையும் தான்
4.(அருளாடும் இடங்களில்) குலதெய்வங்களை வணங்கும் பொழுது இம்முறைப்படிதான் வருகின்றது.

குலதெய்வங்களை வணங்குபவர்கள் எல்லாம் இன்றும் ஒவ்வொரு உடலிலும் அந்த உணர்வுகள் கலந்தே தான் வருகின்றது.

ஏனென்றால் சகோதர்களுக்குள் சாபமிட்டு என் சொத்தை அபகரித்துக் கொண்டார் என்ற உணர்வினைத் தொடரப்படும் பொழுது
1.நம் செவிகளிலும் படுகின்றது.
2.அந்த உணர்வுகள் இரத்தநாளங்களில் கலக்கிறது
3.திருமணமாகி வரப்படும் பொழுது கருவிலே வளரும் குழந்தைக்கும்
4.இதே போல அந்த உணர்வுகள் வழி வழி வந்து பழி தீர்க்கும் உணர்வுகள் வளரப்பட்டு
5.உண்மையின் உணர்வை அங்கே மாற்றிக் கொண்டே வருகின்றது.

இதைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்,

மக்கள் அன்பு கொண்டு வாழ்ந்து வரப்படும் பொழுது அங்கே தெய்வீக பண்பையும் உயர்ந்த குணங்களையும் அது வளர்ப்பதற்கு மாறாக பகைமை உணர்வை மாற்றிப்
1.பகைவனை அழிக்க வேண்டும்..
2.அவனைக் கொல்ல வேண்டும்…
3.அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வுகளே குல வழிகளில் வளர்கின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஜாதக ரீதியாக எடுத்துக் கொண்டாலும் மதங்கள் வகுக்கப்பட்ட ஜாதகம் தான் எல்லாம். ஒவ்வொரு மதத்திற்கும் அதற்கென்ற கால நேரங்களை வகுத்துள்ளார்கள்.
1.ஒரு மதம் எனக்கு 1 மணிக்கு நல்ல நேரம் என்கின்றது
2.மற்றொரு மதமோ அது 2 மணிக்கு நல்ல நேரம் என்கின்றது
3.இன்னொரு மதமோ 1.30 மணிக்கு நல்லது என்கின்றது
4.இன்னொரு மதமோ 12 மணிக்குத் தான் எங்களுக்கு நல்ல நேரம் என்கின்றது.

மதத்தின் அடிப்படையில் இப்படிப் பிரிந்தாலும் இனத்தின் நிலைகள் கொண்டு திருமணங்கள் திருப்பூட்டும் போது எடுத்துக் கொண்டால் இனங்களில்
1.எங்களுக்கு மாசி மாதம் தான் நல்ல நேரம்
2.எங்கள் இனத்திற்கு மாசி மாதம் ஒத்து வந்தது
3.எங்கள் இனத்திற்கு ஆடி மாதம் ஒத்துக் கொள்கின்றது
4.எங்கள் இனத்திற்கு மார்கழி மாதம் ஒத்துக் கொள்கின்றது என்று
5.இவ்வாறு இனத்திற்கு ஒரு சட்டத்தை இயற்றி
இதைக் கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்வதாகத் தான் இன்று நடைமுறை சம்பிரதாயங்கள் நடக்கின்றது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

மதம் மக்களைக் காத்தாலும் மக்களைப் பாதாளத்தில் அமிழ்த்துகின்றது, ஓர் மதத்தின் தன்மை அவர்கள் வகுத்துக் கொண்ட நிலைகளில் நியதிகள் இருப்பினும் அதற்குள் இருக்கும் நியதிகளில் இனங்கள் பிரிக்கப்படும் போது அதற்குள்ளும் போர் முறைகளே தான்…!

இனங்கள் பிரித்துக் கொண்ட பின் குலங்கள் பிரிக்கப்பட்டு
1.எங்கள் குலத்திற்கு இந்தத் தெய்வம் ஆகாது
2.இ்தை வணங்கினால் எங்கள் குடும்பத்திற்கு அழிவு
3.உங்கள் தெய்வத்தை நாங்கள் வணங்கினால் எங்கள் குடும்பத்திற்கு அழிவு
4.இப்படி இனங்களுக்குள் தெய்வமும் தெய்வத்திற்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் இதிலேயும் போர் முறை…!

எங்கள் குல தெய்வத்தை மீறி மற்ற இனங்களிலிருந்து எடுத்துக் கொண்ட உங்கள் குலதெய்வம் எங்களுக்கு ஆகவில்லை. அதனால் நீ வீடு புகுந்த நாள் முதல் எங்கள் குடும்பம் சீர் கெட்டு விட்டது என்று இப்படி ஒரு போர் முறை…!

அன்று ஆண்ட அரசர்களால் பிரிக்கப்பட்ட நிலைகளில் நமக்குள் எதனை ஊன்றி வேராக வளர்த்து வைத்திருக்கின்றோமோ அந்த நிலையே தான் நம்மை இயக்குகின்றது. இதைப் போன்று
1.நமக்குள் பதிவு செய்து கொண்ட உணர்வு எதுவோ
2.அதுவே “ஓ…ம் நமச்சிவாய…” என்று உடலாக மாற்றி
3.“சிவாய நம ஓ…ம் உடலாக மாற்றியதை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.அந்த உணர்வின் இயக்கமாக நம்மிடமிருந்து வெளிப்பட்டு இயக்கும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு நாடாவில் நாம் பதிவு செய்து கொண்டதை மீண்டும் அதைக் காந்த ஊசியுடன் இணைக்கப்படும் போது பதிவு செய்ததை அது மீண்டும் அப்ப்டியே பேசுகின்றது.

பல நாடாக்களைப் ஏக காலத்தில் போட்டுப் பதிவாக்கிய பின் அதனை எந்தச் செயல் வேண்டுமோ அதற்குத் தக்க இயக்கப்படும் பொழுது அந்த நாடா ஒலி/ஒளி அலைகளை வெளிப்படுத்துகின்றது.

இதைப் போல உலகில் உள்ள மதங்களில் எத்தனை நிலைகளில் சட்டங்கள் இயற்றினாலும் அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டபின்
1.மீண்டும் அதை நினைவு கொள்ளும் போது
2.நமக்கு (மதத்திற்கு) இது விரோதமானது என்ற நிலைகளுக்குக் கொண்டு வரும்.
3.ஏனென்றால் நமக்குள் இருக்கும் அந்தப் பதிவு தான் நம்மை இயக்குகின்றது.
4.நாம் எண்ணியது அனைத்தையும் நம் உயிரே பதிவாக்குகின்றது.
5.பதிவின் நிலையே நினைவாகி நினைவின் செயலாகத்தான் நாம் இயங்கிக் கொண்டுள்ளோம்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலும் உடலில் உள்ள அணுக்களுக்கும் நினைவைச் செலுத்துதல் வேண்டும்.

நம் உடலிலே துருவ நட்சத்திரத்தின் வலிமை பெறப்படும் பொழுது அந்த ஈர்க்கும் சக்தியால் நம் உடலின் ஈர்ப்பு வட்டத்தில் (ஆன்மாவில்) உள்ள வேதனை மனக்கலக்கம் போன்ற உணர்வுகளை ஈர்க்காது அவைகளை ஒதுக்கித் தள்ளும் சக்தி பெறுகின்றது.

வெறுப்போ கோபமோ ஆத்திரமோ பயங்கரமோ மற்ற எத்தனையோ வகையான உணர்வுகள்
1.நம் உடலைச் சுற்றி அந்த உணர்வுகள் படர்ந்திருப்பதை
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி
3.நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது
4.அது வலு பெற்று நம் உடலைச் சுற்றியுள்ள அந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்தித்
5.தீமையான உணர்வுகளை விலக்கித் தள்ளிவிடும்.

நாம் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நாம் எண்ணும் பொழுதெல்லாம் நம் “விலா எலும்புக்குள்ளும்…” பதிவாகி விடுகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நாம் கொடிய உணர்வுகளைப் பார்த்தாலும்
2.கொடிய உணர்வுகளை நீக்கிய அந்தச் சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும்
3.நமக்குள் இது அதைக் காட்டிலும் வலுக் கூடிக் கொண்டே வரும்.

இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமது “விலா எலும்புகளில் அதைப் பதிவாக்கி… அதனின் கணக்கைக் கூட்டிப் பழக வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“பஸ்ஸில் ஒருவன் அடிபட்டுத் துடிக்கின்றான்…” என்று வைத்துக் கொள்வோம். அடிபட்டு அவன் துடி துடிக்கும் உணர்வுகள் பாவ வினைகள். அவனுக்குள் எத்தனை இம்சைகள் வந்ததோ பார்க்கும் பொழுது அது நமக்குள் வந்துவிடுகிறது.

“ஒருவன் ஆட்டைக் கத்தக் கத்த அறுக்கிறான்…” என்று வைத்து கொள்வோம், பார்த்தவுடன் முகதைச் சுளிக்கின்றோம். ஆட்டின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளி வருகின்றது.

ஆட்டை அறுப்பவன் செய்கின்றான் பாவம், நாம் பார்க்கின்றோம். ஆடு துடி துடிக்கும் உணர்வுகள் நமக்குள் பாவ வினைகளாக வந்து விடுகிறது.

“மற்றொரு ஜீவனை நாய் கடித்துக் குதறுகிறது…” பரிவு மனம் கொண்ட நாம் துடிக்கும் உணர்வைப் பார்க்கின்றோம். அது நமக்குள் வந்துவிடுகின்றது.

1.கொன்று புசித்த உணர்வின் வேகமும் அலைகளாகப் படர்கின்றது
2.தாக்கப்படும் பொழுது துடி துடிக்கும் உணர்வும் அலைகளாகப் படர்கின்றது
3.இந்த இரண்டு உணர்வும் வித்தாகப் பாவ வினைகளாக இணைந்து நம் நல்ல குணங்களைக் கொன்று விழுங்கி
4,நம்மைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற சாப வினைகளையும் பாவ வினைகளையும் நீக்க வேண்டும் என்றால் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு விண்ணிலே ஒளியாக இருக்கும் மகரிஷிகளின் ஆற்றலை நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

விண்ணிலே வாழும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எளிதில் பருகுவதற்குத் தான் “விநாயகனை நாம் வணங்கும் முறையை” ஏற்படுத்தினார்கள் ஞானிகள்.

1.மண்ணுலகில் தான் வாழும் பொழுது
2.தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் அனைத்தையும் நீக்கி
3.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
4.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.ஒவ்வொருவரும் தன் உயிரான ஈசனிடம் வேண்டுவதற்காக விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

தீமையை விளைவிக்கும் உணர்வுகளில் இருந்து தப்புவதற்காக அந்த மகா ஞானியான அகஸ்தியர் அருளாற்றலை இது வரையில் எடுத்துக் கொண்டவர்கள் “எத்தனை பேர்…!” என்று எண்ணிப் பார்க்க முடியவில்லை.

ஏதோ சாமியிடம் (ஞானகுருவிடம்) சென்றோம். அவர் இரண்டு வாக்கைக் கொடுத்தால்
1.நம் குடும்பம் நன்றாக இருக்கும்…
2.தொழில் கிடைத்தால் நமக்கு நன்றாக இருக்கும்…! என்ற
3.இந்த நிலையில் தான் வருகின்றார்கள்.

யாம் உபதேசிக்கும் பொழுது அதிலுள்ள உள் கருத்தினை எடுத்து உங்களுக்கு வேண்டிய உணவை நீங்கள் உட்கொண்டால் தான் அந்த ஞானிகளின் ஆற்றல் உங்களுக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிவு கொண்டுதான் நாம் வாழுகின்றோம். அதே சமயத்தில் சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும்போது அவர்களை நாம் பண்புடன் அணுகி அதைக் கேட்டறிகின்றோம்.

அப்பொழுது அந்த உணர்வுகள் நாம் நுகர்ந்தறிந்தாலும் அது நம் உடலுக்குள் அணுக்கருக்களாக மாறிவிடுகின்றது.

அவர்கள் உடலில் வேதனையால் நோயானபின் தன் குடும்பத்திற்காகச் செல்வமோ சொத்தோ இதைச் சேர்த்து வைத்து இந்த உடலைவிட்டு பிரியப் போகின்றோமே என்ற ஏக்கத்துடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று மரணமடைகின்றார்.

1.அப்பொழுது அவரைப்பற்றி நாம் கேட்டறிந்த உணர்வுகள்
2.நமக்குள் அந்த அணுவின் தன்மை அதிகமாக வளர்ந்திருந்தால்
3.அந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடும்.

அவர் வேதனைப்பட்ட உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அணுக்களாகத் தோன்றி நமக்குள் மன வேதனை கொடுக்கும் நிலையாக முதலில் மாறும்.

அதே சமயத்தில் அந்த வேதனையுடன் வெளிப்பட்ட அந்த ஆன்மா நம் உடலுக்குள் இருந்தால்
1.அது இந்த வேதனை உணர்வை உணவாக எடுத்து
2.அதனுடைய இனங்களை நம் உடலுக்குள் பெருக்கிவிடும்.

அப்படி இருந்தால் இப்பொழுது யாம் சொல்லும் இந்த உபதேசத்தின் உணர்வுகளை நுகரவிடாது தடுக்கும்.

இதைத் தடைப்படுத்தும் நிலைகள் வரப்படும்போது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்ற நிலையில்
2.இப்பொழுது தியானத்தில் உட்கார்ந்திருந்தாலும்
3.எழுந்து ஓட வைக்கும்.
4.ஏனென்றால் அதனுடைய விஷத்தன்மை வீரியம் கொண்டதாக இருப்பதனால் அதன் வழி அதை வழிப்படுத்தும்.

ஆகவே, இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் அதை அடக்கப் பழகிக் கொள்வதற்கே இதைச் சொல்கின்றோம்.

ஆனால் பழகவில்லை என்றால் உடலுக்குள் இருக்கும் ஆன்மா அதன் வழியில் நம்மை அழைத்து சென்றுவிடும். மீண்டும் உடல் பெறும் உணர்வைத் தான் நாம் பெற முடியும்.

உடல் பெறும் உணர்வுகள் இருந்தாலும் இந்த மன வேதனை வரப்படும் பொழுது மன நோயாக வருகின்றது. உடல் நோயாக மாறி பின் இந்த உடலையே மாற்றியமைக்கும் சக்தியாக மனிதனல்லாத உருவாக மாற்றிவிடுகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி தியானத்தில் உட்கார முடியவில்லை.., எண்ணங்கள் எங்கெங்கோ ஓடுகின்றது.., ஒரு நிலைப்படுத்த முடியவில்லை.., இப்படியெல்லாம் சொல்லி “உங்களை எண்ணவிடவில்லை” என்றால்
1.உடனே கண்களைத் திறங்கள்.
2..உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.அந்த அருள் ஒளி எனக்குள் படர வேண்டும். எனக்குள் இருக்கும் இருள் மறைய வேண்டும்.
4.மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். மெய் ஒளியுடன் ஒன்றிட வேண்டும்
5.என் உடலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
6.இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7.என் உடலிலுள்ள ஆன்மா அந்த மெய்ஞானிகளைப் போன்ற உயர்ந்த நிலை
8.என்னுள் இருந்தே பெற வேண்டும் என்று ஏங்கினால் அது நமக்குள் அடங்கும்.

ஆக இவ்வாறு எண்ணும்போது அந்த ஆன்மாக்களுக்கும் நற்பயன் கிடைக்கும். அதே சமயத்தில் நம் உடலில் உள்ள அணுக்களை அந்த ஒளியின் அணுவாக மாற்றிவிடலாம்.

இதை மறவாது செய்து பழகுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான்கு நண்பர்களுடன் நாம் பழகுகின்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நண்பர் என்று பழகிப் பாசத்துடன் ஒன்றிவிடுகின்றோம். அதே சமயத்தில் ஒரு நண்பருக்கு அவர் குடும்பத்தில் சிக்கல் வந்துவிடுகின்றது. அவர் மீது குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைகின்றார்கள்.

அதைத் தாங்காது குடும்பத்தின் மேல் வெறுப்பு வந்தபின் “என்ன வாழ்க்கை…!” என்று அந்த நண்பர் மருந்தைக் குடித்துவிடுகிறார். தற்கொலை செய்து கொள்கிறார்.

அப்பொழுது அந்தக் குடும்பத்தின் மேல் வெறுப்பும் அதே சமயத்தில் சாப உணர்வுகளும் அங்கே வரும்.

என் குடும்பத்தில் இப்படிச் செய்தார்களே.., “அவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…!” என்ற சாப அலைகளை அங்கே பதிவு செய்கின்றது.

சாப அலைகள் அந்தக் குடும்பத்திலுள்ளோர் மீது பதிவாகி விடுகின்றது. இறந்த பின் அந்த உடலில் எந்த நிலைகள் பதிந்ததோ அந்த வீட்டிலும் பதிவாகின்றது.

அவரைச் சார்ந்தவர்கள் உடலிலும் பதிவாகிவிடுகின்றது. அதன் உடலில் எவ்வளவு கெடுதல் செய்ததோ அதுவெல்லாம் இங்கே வந்துவிடுகின்றது.

அதே சமயத்தில் நண்பர் என்ற நிலைகளில் பாசமாகப் பழகி இருந்தார் அல்லவா. மருந்தைக் குடிக்கும் பொழுது

1.“நண்பனே…, நாம் இருவரும் எவ்வளவு பழகியிருந்தோம்…! இந்த மாதிரி ஆகிவிட்டதே…,
2.நான் உன்னை எப்படி வந்து பார்ப்பது?” என்றே தெரியவில்லை.
3.உனக்குத் தெரியாமல் நான் இப்படிச் செய்துவிட்டேன் என்ற எண்ணத்தை அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த ஆன்மா எங்கே போகும்?
4.எந்த நண்பன் மேல் பாசமாக இவ்வாறு எண்ணினாரோ அந்த நண்பனின் உடலுக்குள் வரும்.

எப்படி? ஏன்?

தற்கொலை செய்த நண்பரைப் பற்றி இவர் கேள்விப்படுவார். கேள்விப்பட்டவுடன் நண்பனைப் பற்றிப் பாசத்தால் எண்ணுவார்.

“அடடா.., நேற்று வரையிலும் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தானே… அதற்குள் இப்படிப் போய்விட்டானா…!” என்று இந்த எண்ணத்தை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது இறந்த ஆன்மா இங்கே வந்துவிடும்.

பாசத்தால் எண்ணும்பொழுது இரண்டு பேரின் எண்ணங்களும் ஒன்றும்போது ஆன்மா நண்பரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட ஆன்மா அந்தக் குடும்பத்தில் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்ததோ இவை அனைத்தும் நண்பர் உடலுக்குள் ஆகி…, “இல்லாத கஷ்டங்களை எல்லாம்” அவருக்கு உண்டாக்கும்.

இவரும் தவறு செய்யவில்லை. அவர்களும் தவறு செய்யவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்தில் இந்தச் சாப அலைகள் அதன் தொடர்பு கொண்டு இது வளர்ந்து கொண்டே இருக்கும்.

இது ஒவ்வொரு குடும்பத்திலும் இது இல்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு வகையிலும் இதனுடைய தொடர்பு இல்லாது இருக்காது.

இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

யாராக இருந்தாலும் சரி…, “உடலை விட்டுப் பிரிந்துவிட்டார்கள்…,” என்று கேள்விப்பட்டாலே உடனே நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

அடுத்து எங்களுடன் நண்பராகப் பழகிய உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

1.உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.உயிருடன் ஒன்றிய “ஒளியின் சரீரம் பெறவேண்டும்”
என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இதைப் போன்று குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டாகத் தியானித்து அந்த உயிரான்மாவை எளிதில் விண் செலுத்தலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் பிச்சையோ யாசகமோ எடுத்துக் கொண்டு வருகின்றார் என்றால் அவனிடத்தில் கடும் வேதனையும் சங்கடமும் துன்பமும் இருக்கும்.

விரக்தியின் நிலைகள் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராது நம்மிடத்தில் யாசகத்திற்கு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனைக் கடுமையான சொற்கள் கொண்டு திட்டும் பொழுது பதிலுக்கு அவன் கடுயான வாக்கு கொண்டு நம்மைச் சொல்லிவிட்டால் அந்த வாக்கு உடனடியாகப் பலிக்கும்.

ஏனென்றால் அது நஞ்சின் தன்மை.

நான் (ஞானகுரு) பல வருடங்கள் சிரமப்பட்டு பல ஆற்றல்கள் பெற்று நீங்கள் நலம் பெறவேண்டும் என்று ஒரு வாக்கைக் கொடுத்தால் அந்த வாக்கை நீங்கள் ஏற்றுக் கொண்ட நிலைகளுக்கொப்பத்தான் அது நல்லதாகின்றது.

இது கால தாமதமாகும்.

நான் கொடுத்த வாக்கின்படி நல்லதாக ஆனாலும் நீடித்த நாள் அது செயல்பட வேண்டும் என்றால் உங்கள் எண்ணத்தைக் கொண்டு அதை ஊடுருவச் செய்து நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு தீயவனின் சக்தியோ அவன் சாபமிட்டால் அந்த உணர்வுகள் உடனடியாக வேலை செய்யும்.

பாலுக்குள் விஷம் பட்டால் அந்த விஷமான பாலைக் குடித்தால் எப்படி நஞ்சாக மாய்த்துவிடுகின்றதோ அதைப் போல சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் சாபமிடுகின்ற நிலைகள் அப்படி விஷத் தன்மை வாய்ந்தது தான்.

நம்மைச் சாபமிட்டான் என்றால் நாம் என்ன செய்வோம்?

என்ன சொன்னாய்…? என்று எதிர்த்துக் கேட்போம். அவன் மீண்டும் ஏதாவது சொன்னால் அடிக்கத் துணிவோம்.

அந்த ஆத்திரத்தை நாம் ஊட்டப்படும் பொழுது அவன் மீண்டும் கடுமையான சொற்களைச் சொன்னால் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடும்.

அவ்வாறு சேர்ந்துவிட்டால் அந்தச் சாப அலைகள் குடும்பப் பரம்பரைக்குள் வந்துவிடும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது ஆட்டிப் படைத்துவிடும்.

செல்வம் இருக்கும். ஆனால் உடலுக்குள் துன்பம் இருக்கும். அவர்களுக்குள் மகிழ்ச்சி இருக்காது. ஆசையின் நிலைகளில் அதிகமாகப் பேசலாம். இதைப் போன்ற துன்புறும் நிலைகள் நிச்சயம் வந்தே தீரும்.

ஆனால் சாபமிட்டவன் அது எப்படி ஏழ்மை என்ற நிலைகளில் எப்படியெல்லாம் துன்பம் அனுபவித்தானோ
1.பணமில்லாது உள்ளுக்குள் வேதனை கொண்டு அனுபவித்தாலும்
2.பொருள் இல்லாததால் அவன் தாங்கும் சக்தி இருக்கின்றது.
3.ஏனென்றால் அந்த விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அவன் தாங்கிக் கொள்ள முடிகின்றது.

செல்வச் செழிப்புடன் ஆனந்தமாக இருப்பவர்கள் இத்தகைய சாபத்தினால் அவர்களுக்கு வேதனையாகிவிட்டால் அவர்களுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இல்லை.

வேதனைகள் அதிகமாக இருக்கும். பொருள்கள் எல்லாம் இருக்கும். உள்ளுக்குள் அதைச் சுவைக்கும் நிலை இல்லை. மகிழும் நிலை இல்லை.

உடல் முழுவதற்கும் நரகத்தை அனுபவிப்பது போல் ஒவ்வொரு நிமிடமும் வேதனையை அனுபவிப்பார்கள். இதைப் போன்ற வேதனையான உணர்வுகளை இந்த உடலில் விளையை வைத்தால் உடலை விட்டுச் சென்ற பின் எதுவாகப் பிறக்க முடியும்?

மிருகங்கள் அனைத்தும் விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொண்டது. அதைப் போல இவர்கள் இறந்தால் இவர்கள் உடலிலிருக்கக்கூடிய வேதனையான உணர்வின் அணுக்கள் விளைந்த அனைத்துமே அந்த செல்கள் உயிராத்மாவில் சேர்ந்து மிருகத்தின் தன்மையாகத்தான் பிறக்க முடியும்.

மிருகத்தின் அலைகளின் உணர்வுகள் சேர்க்கப்பட்ட அணு செல்கள் அந்த வாசனை வரப்போகும் பொழுது இவன் எத்தனை அநாகரிகமான முறையில் சாபமிட்டானோ அந்தச் சாபத்தின் நிலைகளுக்கொப்ப உடல் உருமாறிவிடும்.

ஒரு மெய்ஞானி சொல்லக்கூடிய வாக்கைக் காட்டிலும் ஏழ்மையிலே தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உணர்வின் விஷத்தன்மைகள் அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யும்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் யாம் சொல்லும் முறைப்படி கணவனும் மனைவியும் தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் சரியானபடி செயல்படுத்துதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ நிலைகளைப் பத்திரிக்கை வாயிலாகவும் தொலைக்காட்சி வழியாகவும் தினசரி பார்க்கின்றோம்.

தொலைக்காட்சி வழியாகப் பார்த்தோம் என்றால் உலகில் நடக்கின்ற அசம்பாவிதங்களை எல்லாம் “ஆ…” என்று பார்க்கின்றோம். கண்கள் அப்படியே அதை ஈர்த்து நமக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றது.

டி.வி.யில் அந்தக் காட்சிகளைப் பார்க்கும் பொழுது நம் நினைவு முழுவதும் அங்கே அந்த இடத்திற்கே போகின்றது. அங்கே பரவியிருக்கும் நினைவையே நாம் சுவாசிக்க நேர்கின்றது.

அவ்வாறு நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்த உணர்வின் தன்மை கொண்டு அவர்கள் செய்த (அசம்பாவித) உணர்வெல்லாம் இந்த விஞ்ஞான அறிவால் நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு நாட்டினை அழிக்கத் தொலைக்காட்சிப் பெட்டி மூலமாக ஒலி அதிர்வுகளைக் கொடுத்து நமக்குள் பதிவாக்கி நம்மை அப்படியே புத்தியை செயலிழக்கச் செய்வதற்கும் விஞ்ஞான அறிவு இன்று சென்றுவிட்டது.

இப்படி ஒலிபரப்பும் நிலைகளில் நாம் டி.வியைப் பார்க்கப்பப்படும் பொழுது நம் மனித எண்ணங்களையே சீரழிக்கும் நிலைகள் வருகின்றது.

விஞ்ஞான அறிவால் கேட்ட உணர்வுகள் நாம் வீட்டிலிருந்தபடியே தீமையின் உணர்வை நமக்குள் வளர்ப்பதும் பகைமை உணர்வுகள் ஊட்டுவதும் ஒருவனை எப்படி மாற்றுவது என்ற நிலைகள் வருகின்றது.

டி.வி.யில் காண்பித்த நிலைகளையும் மற்றவைகளையும் உற்றுப் பார்க்கும் போது (சினிமாவில்) காட்டும் காட்சிகளில்
1.கொலை செய்வது எப்படி?
2.கொலையிலிருந்து தப்புவது எப்படி? என்ற நிலையெல்லாம் வந்த பின் இந்த உணர்வுகளே நமக்குள் பதிவாகின்றது.
தன் வாழ்க்கையில் ஒரு சிரமம் வந்தால் அது மாதிரி நாம் ஏன் இதைச் செய்யக்கூடாது என்ற உணர்வுகள் தூண்டுகிறது. அதன் வழியிலே தான் தவறுகள் அதிகமாக இன்று உலகம் முழுவதும் வளர்கின்றது.

ஆக மொத்தம் விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

மெய் ஞானத்தின் நிலைகளில் பக்தி என்ற நிலை வந்தாலும் அதிலேயும் குறைகளைக் கூறி நல்ல நிலைகள் எடுக்க முடியாதபடி ஆலயங்களையும் அசுத்தப்படுத்துகின்றோம்.

எந்த ஆலயத்திற்குள் சென்றாலும் நம் குறைகளைத்தான் சொல்கின்றோம்.
1.பாவி எனக்குத் துரோகம் செய்தான்…
2.நீ பார்த்துக் கொண்டே இருக்கின்றாயே…!
3.”உன்னைத்தான் நான் வணங்குகின்றேன்…” என்று சொல்லிக்
4.கடவுளையே சாபமிடும் நிலையில் மனிதனின் உணர்வு வந்து விட்டது
5.உனக்குக் கண் இல்லையா…? மூக்கு இல்லையா…?
6.இனி உன்னை எட்டிக் கூட பார்க்கப் போவதில்லை,
7.அவன் செத்தால் தான் உன்னை வந்து பார்ப்பேன் அவன் தொலைந்தால் தான் உன்னை வந்து பார்ப்பேன் என்று
8.பக்தியில் முத்தி்ய நிலைகளாக அஞ்ஞான வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதைப்போன்ற நிலைகளிலெல்லாம் இருந்து நாம் விடுபட வேண்டும். அன்று அகஸ்தியன் கண்ட பேருண்மையின் உணர்வின் வழிப்படி
1.நம் வாழ்க்கையில் விழித்திருத்தல் வேண்டும்.
2.ஒவ்வொரு தீமைகளிலிருந்தும் பகைமையிலிருந்தும் நாம் மாறுபடுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நமது வாழ்க்கையில் சீராக வாழ்ந்து கொண்டிருந்தாலும் இரண்டு தலை முறைக்கு முன்னாடி வாழ்ந்த நம் மூதாதையர்களின் உணர்வுகள் நம்மை இயக்கத்தான் செய்கின்றது.

நம் மூதாதையர்கள் அவர்கள் வாழ்க்கையில் அண்ணன் தம்பிகளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து வரும் பொழுது வரும் சம்பாத்தியத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

உதாரணமாக நான்கு பேர் சகோதரர்களாக இருந்தாலும் சந்தர்ப்ப பேதத்தால் கொடுக்கல் வாங்கல்களில் ஒருவருக்கு குறைத்துக் கொடுக்கும் போது என்ன ஆகின்றது?

ஏனென்றால் ஒரு சகோதரனால் தொழில் செய்ய முடியவில்லை. அவன் நோயின் காரணமாக எழுந்து வரவில்லை என்றால்
1.நாம் தான் உழைத்தோம்…
2.அவனுக்கென்ன கொடுப்பது…? என்று
3.மூன்று பேர் வலுவின் தன்மை வரப்படும் போது நான்காவது சகோதரன் வலுவற்றதாக மாறுகின்றான்.
4.அப்பொழுது அவன் வெறுப்படைகின்றான்.

மூன்று பேரும் சேர்ந்து எனக்கு இப்படிச் செய்து விட்டார்களே…! என்ற வேதனையின் தன்மை வரப்படும் போது இந்த மூன்று பேர் மீதும் வெறுப்பு வருகின்றது.

இந்த வெறுப்பு வளர… வளர… வளர… வெறுப்பான பேச்சுகளைப் பேசப் பேச… மூன்று பேர் மேலேயும் வெறுப்பான உணர்வுகள் பதிவாகின்றது. அதே சமயத்தில் மூன்று பேரும் சேர்த்து இவரைப் பழித்துப் பேசுவதும் அவருக்கு மீண்டும் இன்னல்களை உருவாக்கும் நிலையும் வருகின்றது.

இது தான் “ஓ…ம் நமச்சிவாய… சிவாய நம ஓ…ம்.” அதாவது யார் வெறுப்பாக எண்ணுகின்றாரோ அந்த எண்ணத்தை உயிர் “ஓ…” என்று பிரணவமாக்கி “ம்…” என்று உடலாக்குகின்றது.

வெறுப்பின் உணர்வுகள் ஒவ்வொருவர் உடலிலும் ஜீவ அணுக்களாக உருவாகி உடலான சிவமாகின்றது. உடலாக ஆன உணர்வுகள் சொல் வடிவமாகும் போது அவர் மேல் வெறுப்பாகப் பேசச் செய்கின்றது.

இது தான் “ஓ…ம் நமச்சிவாய…!” நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எதுவோ அதை உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி “ம்…” என்று உடலாக்கி விடுகின்றது. அப்பொழுது சகோதரர்கள் மூன்று பேருக்கும் வெறுப்பின் தன்மை அடைகின்றது. அது ஒரு வித்தாக உருபெற்று விடுகின்றது.

இப்படிப் பேசுகின்றான் என்று சொல்லும்போது இந்த உணர்வும் இந்த மூன்று பேருக்கும் வளர்கின்றது. நான்காவது சகோதரன் தனித்த நிலைகள் இருந்தாலும் அவர்கள் மீது வெறுப்பாக வெறுப்பாக இவர் உடலிலே அது நோயாக மாறுகின்றது. உடல் பலவீனமடைகின்றது.

மூன்று பேரும் வலு கொண்டு இவரைத் தாக்கிப் பேசும் உணர்வுகள் அதிகமாக அதிகமாக
1.இந்த மூன்று உணர்வுகளும் இவர் உடலுக்குள் வரும் போது
2.அவரிடம் உள்ள நல்ல உணர்வுகள் தணிந்து
3.மூன்று பேரும் சேர்த்து… “எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்…!” என்ற எண்ணம் அதிகமாகின்றது.

ஆனால் கடைசியில் இவர் மரணமடையப்படும் போது என்ன எண்ணுவார்?

அண்ணன் தம்பிகளில் மூத்த வரிசை யாரோ… “இவன் கூட இப்படிச் சேர்ந்து எனக்குத் துரோகம் செய்கின்றானே…! பாவி…!” என்று ஏக்கத்துடன் உடலை விட்டுச் சென்றால் இந்த உயிரான்மா அவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது.

இவர் எப்படி நோயால் வேதனைப் பட்டாரோ அந்த வேதனைகள் அனைத்தும் மூத்தவரின் உடலுக்குள் செயலாக்கி அந்த உணர்வுகள் மற்ற குடும்பங்களிலும் பரவத் தொடங்கி விடுகின்றது.

இந்த நிலை வருவதற்குள் அந்தக் குடும்பம் நான்கு விதத்திலேயும் அது வேதனைகள் அனுபவிக்கத் தொடங்குகின்றனர். நலிவடைகின்றனர்.

1.அந்தத் தலைமுறைக்கு அதுவானாலும்
2.பின் வரும் தலைமுறைகளில் வேறு வேறு நிலைகளில் திருமணம் செய்து கொண்டு வந்தாலும்
3.இந்த மூதாதையர்கள் சண்டையிட்ட உணர்வுகள் பதிவாகிப் பதிவாகி
4.பெண்கள் கர்ப்பம் ஆகும் போது பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கின்றது.

அதாவது அந்த நான்கு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சாபமிட்ட நிலைகளில் உன் குடும்பம் நசிந்து போகும்; கண் தெரியாது. குருடாகிப் போவாய்; கால் ஊனமாகும் என்று பேசி இருந்தால்
1.பிறக்கும் குழந்தைகளுக்குள் அது வித்தாக ஊன்றி
2.இந்த உணர்வுகள் வழித் தொடர் கொண்டு
3.கருவிலேயே அது ஊனமான குழந்தையாகத்தான் வரும்.

மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட உணர்வுகளைச் சாபமாக இட்டார்களோ
1.வழி வழி வந்த அந்த உணர்வுகள் தான்
2.பலவிதமான பகைமைகளாக உருவெடுத்து
3.மனிதனின் நிலைகள் (இன்று) மறைந்து கொண்டே வந்து விட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று மனிதனுக்குள் ஒருவருக்கொருவர் பாசமாக அன்பாகத்தான் வாழ்கின்றார்கள்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் சில சிரமங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீளத் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக நண்பர்களையோ உறவினர்களையோ தேடி வருகின்றார்கள்.

ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தை வாங்கிச் சமாளிக்கலாம் என்று வாங்குகிறார்கள்.

சீக்கிரம் திரும்பத் தந்துவிடுவேன் என்று சொன்னபின் அவர்களும் பணத்தைக் கொடுக்கிறார்கள்.

எப்படியோ (ஏமாற்றி) பணத்தை வாங்கிக் கொள்வார்கள். வாங்கிய பணத்தைச் செலவழிக்கின்றார்கள்.

ஆனால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இப்பொழுது கொடுக்க முடியவில்லை. “தருகிறேன்…” என்று சொல்வார்கள்.
1.இரண்டாவது தடவை கேட்கும் பொழுதும் அதே பதில் வருகிறது.
2.மூன்றாவது தடவையும் கேட்டவுடனே என்ன சொல்வார்கள்?

“நான் தான் கொடுக்கிறேன்…!” என்று சொன்னேனே அதற்குள் என்ன அவசரம் என்பார்கள். அன்று
1.தக்க சமயத்தில் தனக்கு உதவி செய்தார்கள் என்ற
2.அந்த நல்ல எண்ணம் வருவதில்லை.
3.ஆக பணத்தைத் திருப்பிக் கேட்பவருக்குச் சரியான பதில் சொல்ல முடியவில்லை.

அப்பொழுது அவருக்குக் கோபம் வரும்.

கோபத்தின் தன்மை பணம் கொடுத்தவருக்கு வரப்படும் போது உதவி செய்தார்கள் என்ற எண்ணம் பணம் வாங்கியவருக்கு மறந்துவிடுகின்றது. அப்புறம் அவருக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

பணம் கொடுத்தவர் என்ன சொல்வார்? பார்… அன்றைக்கு உதவி செய்தேன். பாவிப் பயல் இன்றைக்கு அவன் எனக்குத் தொல்லை கொடுக்கிறான்…! என்பார்.

அப்பொழுது தொல்லையின் உணர்வுகளைத்தான் இவர் உடலிலே வளர்க்க முடிகிறது. தொல்லைகளை நீக்கும் நிலை இல்லை.

இப்படி மனிதனுக்கு மனிதன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உணர்வுகள் இப்படி மாறுகின்றது.
1.பகைமை உணர்ச்சிகள் உருவாகி உடலுக்குள் வந்தவுடன்
2.உறுப்புகள் சீர் கெடுகின்றது. கடும் நோயாக மாறுகின்றது.
3.இந்த நோயை மாற்ற என்ன வழி?

மனிதன் சந்தர்ப்பத்தால் நல்ல குணங்களை நல்ல முறையில் பயன் படுத்தினாலும் வாங்கிய பணத்தைத் திருப்பி அவர்களால் கொடுக்க முடியவில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் அங்கே என்ன நடக்கின்றது?

“என்னைத் தொந்தரவு செய்கின்றார்களே… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள்” என்ற உணர்ச்சிகள் தன்னை அறியாமலே அதிகரித்துவிடுகின்றது.

உண்மையில் அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் இரண்டு தடவை பணத்தைத் திருப்பிக் கேட்டாலே போதும். அங்கே உணர்ச்சிகள் மாறும்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருக்கிறது. “தருகிறேன்…” என்று சொல்வார்.

ஆனால் முயற்சி எடுக்கும் பொழுது வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளால் இவர் செல்வம் தேடுவதும் இழந்து விடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இரண்டு தரம் பணத்தைத் திரும்பக் கேட்டு நிர்ப்பந்தப்படுத்தும் போது அந்த வெறுப்பு காழ்ப்புணர்ச்சியாக வருகின்றது. இந்த வேதனையின் உணர்வைத் தனக்குள் எடுத்தவுடன்
1.ஒன்று இவர் தவறு செய்பவராக மாறுகின்றார்.
2.இல்லை என்றால் அவர் நுகர்ந்த உணர்வு கடும் நோயாக மாறுகின்றது.
3.இதன் உணர்வுகள் இப்படித் தான் போகின்றது.

பணம் கொடுத்தவரோ… பாருங்கள்… அன்றைக்குக் கொடுத்தேன். இன்றைக்கு எதிர்க்கிறான்… கொடுக்காமல் ஏமாற்றுகிறான்.. என்பார்.

ஏனென்றால் இயற்கையில் (உண்மையில்) பணத்தை அவரால் திரும்பக் கொடுக்க முடியவில்லை.

அவருக்கு எப்படியோ நல்ல நேரம் வரட்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய வலு வரவேண்டும். பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் வரவேண்டும் என்று “பணம் கொடுத்தவர்கள்… எண்ணுகிறார்களா…!” என்றால் இல்லை.

அப்படி எண்ண முடியவில்லை.

பணத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற வேதனை உணர்வு தான் வருகிறது. அப்பொழுது அந்த வேதனையைச் சமைக்கும் உணர்வுகள் பணம் கொடுத்தவர் உடலிலும் வருகிறது.

நான் அவ்வளவு உதவி செய்தேன். இந்த மாதிரி எல்லாம் செய்கிறானே என்று இவர் சந்தர்ப்பத்தில் விளைந்த உணர்வுகள் கடன்காரனை எண்ணி எடுக்கும் போது “ஓ…ம்” வெறுப்பான உணர்வுகள் ஜீவனாகி
1.இவனெல்லாம் உருப்படுவானா…?
2.என்னை இப்படி ஏமாற்றுகிறான் பார்…! என்று
3.சாபமிடும் நிலைக்கு வந்துவிடுகின்றார்.

அன்றைக்குக் கேட்டதும் பணத்தைக் கொடுத்தேனே… இவன் உருப்படுவானா…? என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்த்து இந்த உணர்வுகள் உடலிலே விளைகின்றது.

இதே போல உணர்வுகள் அங்கே பணத்தை வாங்கியவர் உடலிலும் படருகிறது. இதை எண்ணும் போது அவரின் செயலின் தன்மையும் இழக்கச் செய்கிறது.

கடைசியில் பணம் கொடுத்தவருக்கும் வேதனை வருகின்றது. பணம் வாங்கியவருக்கும் வேதனை வருகின்றது. நல்லதின் பலனை இரண்டு பேரும் அடைய முடியவில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்காகத்தான் ஆலயங்களில் தீப ஆராதனை காட்டுகின்றார்கள். ஏனென்றால் அப்பொழுது அங்கே மறைந்திருக்கும் பொருள்கள் அந்த வெளிச்சத்தால் தெரிகின்றது.

அப்பொழுது நாம் எண்ண வேண்டியது எது? பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

1.இந்த ஆலயத்திற்கு வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
2.எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
3.என்னிடம் தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
4.என்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
5.என்னைப் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாடிப்பட்டியிலிருந்து ஒரு பையன் வந்தான். அந்தப் பையனுக்கு பத்து வயதுக்கு மேல் ஆனவுடன் உடலெல்லாம் அப்படியே சுருங்கிக் (முடங்கி) கொண்டே வந்துள்ளது.

இங்கே எம்மிடம் வந்தால் சரியாகும் என்று அழைத்து வந்திருந்தார்கள்.

முதலில் நன்றாக நடந்து கொண்டிருந்தான். இப்பொழுது இந்த மாதிரி ஆகிவிட்டது. உடலில் இப்பொழுது எதுவும் வேலை செய்யவில்லை என்றார்கள்.

அப்பொழுது நான் சொன்னேன். உங்கள் மூதாதையர் யாராவது இதே வயதில் கை கால் எல்லாம் அடித்து முடங்கி “அதனால் இறந்திருக்கின்றார்களா…!” என்றேன்.
1.யாராவது அப்படி இறந்திருந்தால்
2.அந்த மாதிரித்தான் “இதுவும் இருக்கும்” என்று சொன்னேன். போய்க் கேட்டு வாருங்கள் என்றேன்.

எனக்குத் தெரியாமல் அது எப்படி இருக்கும்? யாரும் இல்லையே… என்றார்கள்.

நன்றாக விசாரித்துக் கொண்டு வாருங்கள் அப்புறம்தான் என்ன என்று பார்க்க முடியும் என்று சொல்லி அனுப்பினேன்.

அப்புறம் அவரைச் சேர்ந்த ஆட்கள்.., “ஆமாம்… நீங்கள் சொன்ன மாதிரி நடந்திருக்கிறது” என்றார்கள்.

ஒரு பெண் இருந்தது. அவர்கள் ஆசைப்பட்டு ஒருவருக்கொருவர் ஏதோ ஆகவில்லை போலிருக்கின்றது.

அவர்கள் ஆசாரி. அதனால் அந்தப் பெண்ணைச் சுத்தியலில் அடித்துப் போட்டு நகையெல்லாம் கழட்டிக் கொடு என்று சொல்லி ஒரு குழியைத் தோண்டி அதிலே போட்டுக் கொன்று விட்டார்கள்.

“அடப்பாவிகளா…! என் குடும்பம் எப்படி இப்படி ஆனதோ உன் குடும்பமும் ஆகும்…” நான் வேதனைப்பட்டேனோ…, “உன் குடும்பமும் உருப்படியாகாமல் போய்விடும்” என்று அங்கே சாபமிட்டது.

அதற்குப் பின் ஒரு பெண் வாரிசு வந்தால் அந்தப் பெண் குழந்தை எங்கே போனாலும் கல்யாணம் ஆகி அந்த வயதானால் துடிக்கத் துடிக்க இறந்து போகும்.

ஆண் வாரிசு என்றால் அந்தக் கை கால் முடங்கிக் கொண்டே வரும். அது எப்படிக் குறுகி இறந்ததோ அதே மாதிரி இறக்கும்.

இது கரு வழி. இது சாபம்.

நாம் நினைக்கின்றோம் ஒருவரை அடித்து நொறுக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று.
1.ஆனால் சாகும் பொழுது என்ன ஆகும்…?
2.அந்த அலைகள் எல்லாம் உடலுக்குள் வரும்.
3.இதிலிருந்து “யாரும்” தப்ப முடியாது.

நாம் நினைக்கலாம் எல்லாம் கெட்டிக்காரத்தனமாகச் செய்துவிட்டோம் என்று. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மனிதனாகப் பிறந்த பின் எப்படியெல்லாம் ஆகின்றோம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் பற்றி அதிகமாகவும் சொல்ல முடியாது. சொன்னால் பிறகு பயந்து போய்விடுவீர்கள்.

ஏனென்றால் “தவறு செய்துவிட்டால்… அதன் பின்பு என்ன ஆகும்…” என்று ஒரு உதாரணத்திற்கு உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றோம்.

எல்லாம் இப்பொழுது மன தைரியமாக இருப்பீர்கள்.

ஆனால் வீட்டில் சிறிது குறை என்றால் அது கடினமாக ஆகிவிட்டால் “உன்னால் தான் இப்படி ஆகிறது” என்று ஒருவருக்கொருவர் சாபமிடும் நிலைகள் ஆகின்றது.

அதிகமாகி வளர்ந்துவிட்டால் அடித்துக் கொல்லும் நிலைக்கே வந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிய அந்த மகரிஷிகளைப் பற்றிய உணர்வுகளைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் ஞாபகப்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் அனைவருமே பெற்று நம் உயிரைக் காப்போம்.. உலக மக்கள் உயிர்களையும் காப்போம்…!

உயிரோட்டம் உள்ள நம் பூமி தன்னைச் சீர்படுத்திக் கொள்ளும் நெருங்கி விட்டது

 

ஒன்றுடன் ஒன்று மோதுண்டு ஒன்றை ஒன்று பின்னியே அண்ட கோளங்களும் அனைத்து நிலைகளும் உள்ளன.

ஓ…ம் என்ற நாதத்தின் உண்மை நிலையென்ன…? ஓ…ம் என்ற ஒலி எப்படி ஒலிக்கின்றது…? விஞ்ஞானத்தினால் கண்டுபிடித்த மின் விசிறிக்கு அதன் சுழலும் நிலை எப்படி வருகின்றது…?

மின் விசிறி சுழல மின்சாரத்தை அதில் பாய்ச்சியவுடன் அதன் காந்த சக்தியை ஈர்த்து அந்த மின் விசிறி சுழலுகின்றது. சுழலும் நிலையில் காற்றை நாம் எந்த எண்ணில் வைத்துச் சுழல விடுகின்றோமோ அதன் தன்மை கொண்டு அது சுழலுவதற்கு ஏற்ப அது பரப்பிடும் காற்று வருவதை உணர்கின்றோம்.

அதே போல் தான் நம் பூமி சுழல…
1.சூரியனிலிருந்து பாயும் காந்த அலையை நம் பூமி இழுத்து…
2.பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியைக் கொண்டு இக்காற்று ஏற்படுகின்றது.

காற்றுடன் ஒளியும் நீரும் கலந்துள்ளன. நீரின் நிலையுடன்தான் நம் பூமி அவ்வொளியை ஈர்த்து வெளிக்கக்கி… அதிகாற்றாக… பூமியைச் சுழலவிடும் அந்த ஓசைதான் ஓ…ம் என்ற நிலையில் நமக்குத் தெரிகின்றது.

இந்த ஒலியை ஒவ்வொருவரும் உணரலாம்.

ஏனென்றால் நம் பூமி எதையெல்லாம் ஈர்த்து உண்டு கழிக்கின்றதோ அந்தச் சக்தியெல்லாம் நமக்கும் உண்டு.
1.நீரிலிருந்து மின்சாரத்தைக் காந்த அலையுடன் எடுக்கின்றார்கள்.
2.நம் உடலில் உள்ள காந்த மின் அலையை நாம் அறிவதில்லை.

நம் காந்த மின் அலையை நாம் உணரும் பக்குவம் பெற்றோமானால் அதன் தொடரில் நம்மையே அவ்வொளியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பூமி வெளிப்படுத்தும் இக்காற்று மண்டலம்தான் நம் உடலிலும் மோதுண்டு செல்லுகின்றது. சிறு எறும்பையும்… மென்மையான பூவையும் இந்தக் காற்றே மோதிச் செல்கின்றது.

1.இக்காற்று மோதும் இடமெல்லாம் ஒலி பெறுகின்றது.
2.அந்த ஒலியுடனே நீரும் சேருவதினால் ஒளியாகின்றது.
3.காற்று இல்லாவிட்டால் மணம் வீசிடாது.
4.அந்த மணம் பெறவும் அவ்வொளியும் ஒலியும் சேர்ந்துதான் அம்மணமே வீசுகின்றது.

காற்றில் உள்ள ஜீவனுக்கு இக்காற்றினிலேயே படர்ந்துள்ள நீர் தான் ஜீவ சக்தி. நம் பூமியில் வீசிடும் காற்றின் நிலைக்கும் பால்வெளி மண்டலம் மற்ற மண்டலங்களின் நிலைக்கும் பல கோடி மாறுபாடுகள் உண்டு.

ஜீவனுடன் கூடிய அதிசக்தி வாய்ந்த காற்று மண்டலம் நம் பூமியின் காற்று மண்டலம்…!

மற்ற மண்டலங்களின் தன்மையில் இந்நிலை மாறு கொள்கின்றது.
1.நம் பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலத்தில்
2.அக்காற்றுடன் கலந்துள்ள நீர் அலைகள் அதிகம்.

ஒவ்வொரு மண்டலமும் அதன் சுழற்சியில் அதன் சுவாசம் கொண்டு அவை உண்டு வெளிப்படுத்தும் பக்குவ நிலைக்கொப்பத்தான் அதற்குகந்த காற்று மண்டலம் உண்டு.

சூரியன் வளர்ந்து கொண்டே… சக்தியைப் பெற்றுக் கொண்டே… சுழன்று ஓடிக்கொண்டே… அனைத்து மண்டலங்களைக் காத்துக் கொண்டே… இருந்திட்டாலும் “நம் பூமியின் ஜீவ சக்தி சூரியனுக்கில்லை…”

அறிவு வளர்ச்சி பெற்ற ஆத்மாக்களைக் கொண்ட பூமி மட்டுமல்ல நம் பூமி. நம் பூமியின் ஆத்மாவிற்கே அறிவின் சக்தி ஜீவ பூமியப்பா நம் பூமி.

இப்பூமியின் ஆத்மாக்களின் நிலையை மாற்றி…
1.நம் பூமிக்குகந்த நிலையை
2.நம் பூமியின் ஆத்மாவே செயல் கொள்ளப் போகின்றது சிறிது காலத்திற்குள்…!

நாம் தான் நம் விஞ்ஞானத்திற்காக பூமியின் மட்டத்தை நகரங்களாக்கித் தார் ரோடுகளாகவும்… இல்லங்களை அழகுபடுத்தப் பல நிலைகளைச் செய்தும்… பூமியின் ஆத்மா சுவாசிக்கத் தடைப்படுத்தியும்… தாவரங்களின் இன வளர்ச்சியை காடுகளையெல்லாம் அழித்தும்… பூமியின் பொக்கிஷங்களையெல்லாம் நம் உல்லாசச் செயற்கைக்காகப் பாழ்படுத்தி விட்டோமே…!

ஆகவே… நம் பூமியின் ஆத்மா ஜீவன் கொண்டது. அது தன்னைத்தானே காத்துக் கொள்ளும்.

இம்மனித ஆத்மா எப்படி ஒவ்வொரு பிறவியாய்…
1.ஓர் உடல் கெட்டு மறு பிறவிக்கு வந்து.. மறு உடல் எடுத்து வாழ்கின்றனவோ
2.அதைப்போல் நம் பூமியின் ஆத்மாவிற்கும் பூமியின் கோளமென்ற இவ் உருவ உடல் வியாதிப்பட்டுவிட்டது.
3.எந்த நேரத்திலும் அதன் நிலை மாறும் கால கட்டத்தில்தான் நம் பூமியின் ஜீவ ஆத்மாவின் நிலை இன்று உள்ளது.

இதனை உணர்ந்து… நாமும் நம் ஆத்மாவை இக்குறுகிய காலகட்டத்திற்குள் உயர் சக்தி நிலை பெறும் பக்குவ நிலையை எய்திடல் வேண்டும்.

“நம் பூமி ஆத்மாவிற்கே ஜீவனுண்டு…” நம் சக்தியையும் அச்சக்தியே காக்கும் பக்குவத்தை… அந்த வழி முறையை நாம் உணரல் வேண்டும்.

முடிவு நிலையில் உள்ள நாம்… முதல் நிலைக்குச் செல்லும் பக்குவம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தில் நம் சுவாச நிலை சமநிலைப்பட்டவுடன்…
1.நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் எண்ணத்தை ஒரு நிலையில் குவித்து
2.எந்த மகரிஷியை எண்ணுகின்றோமோ அந்நிலை கொண்ட அருள் ரிஷியின் ஒளிக்கதிர்கள்
3.நம் உயிராத்மாவுடன் நாமெடுக்கும் சுவாசமுடன் மோதுண்டு
4.நாம் எடுக்கும் இச்சக்தியின் அருளைக் கூட்டச் செய்கின்றது.

முந்தைய கால புராணங்களிலும் நடைமுறை வாழ்க்கையிலும் ஆண்டவனே வந்து சில நிலைகளைக் கவியாக உணர்த்தியதாக உணர்ந்திருப்பீர்.

பல ஆயிரம் காலங்களாக இம்மனித எண்ண அறிவு வளர்ச்சி கொண்ட நாள் தொட்டே பல ரிஷிகளின் சக்தி நிலை நம் பூமியில் செயல்பட்டு வருகின்றது.

அந்தந்தக் கால நிலைகளுக்கொப்ப இச்செயல் நிலை கலந்து வந்தது.

இன்றைய மனித ஆத்மாக்களின் எண்ணத்தில்… இச்செயற்கை நிலையிலும் புத்தக அறிவின் உறவிலும் செயல்படும் நிலையில் பக்தி கொண்டு உள்ளதால்
1.தன் எண்ணத்தைக் குவித்து
2.சப்த ரிஷிகளின் நிலையுடன் தொடர்பு கொள்ளும் பக்குவ நிலை இக்கலிக்கு வரவில்லை.
3.இன்றைய கலியின் நிலையில் உணரும் பக்குவமும் இல்லை.

சப்த ரிஷிகளின் நிலையுமே இன்றைய இக்கலிக்குகந்ததாகத்தான் எவ்வெண்ணத்தில் மனித ஆத்மாக்கள் செல்லுகின்றனரோ அதே வழித் தொடர்கொண்ட சக்தியைத்தான் அவர்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.

கவியிலும் காவியத்திலும் இன்றைய சக்தி நிலையை உணர்த்தி… அதை ஏற்கும் பக்குவ ஆத்மாக்கள் “சில தான் உள்ளன…!” என்பதனைப் புரிந்தே கால நிலைகேற்ப அருள் ஒளிதான் அவ்வாண்டவனின் ஜெபம் கொண்டவர்களின் நிலையிலும் செயல்படுகின்றது.

நம் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி… இவ்வுலக வாழ்க்கையுடன் நம் வாழ்க்கையை ஜெயித்துக் காட்டிட வேண்டிய பக்குவ நிலை பெறவும் நமக்கேற்படும் அனைத்து நிலைகளிலிருந்து நம் நிலையை உயர்ந்ததாக்கும் செயல் நிலைதான் நமக்கு இன்று தேவைப்படுகின்றது.

அந்நிலை பெறவும்… இயற்கையின் உண்மை நிலையை அறியவும்… நம் எண்ணத்தை அவனிடம் செலுத்தும் பக்குவத்தைத்தான்… இன்றைய நம் நிலை இருந்திடல் வேண்டும்.

1.எண்ணத்தை ஒரு நிலைப்படுத்திக் குவிக்கக் குவிக்க
2.நம் சக்தி உயிரான ஈசனிடம் ஐக்கியப்பட்டு… உரமாய் அவன் சக்தியை நம்முள் ஊன்றச் செய்து
3.அவனும் நாமும் ஒன்றான நிலையில் நம் உயிராத்மாவும் நம் உடலும் இருந்திடும்.
4.இந்த நிலையில் நமக்கு ஏற்படும் நம்மைச் சுற்றியுள்ள எந்நிலையும் நம் அருகில் நெருங்காது.

இவ்வுலக மாற்ற நிலை கூடிய விரைவில் ஏற்படப் போவதினால் நம்மை அதிபக்குவப்படுத்தி நாம் செயல் கொண்டிடல் வேண்டும்.

மனித ஆத்மாக்களுக்குத்தான் இந்நிலையில் புகட்டுகின்றீர்…! மற்ற ஜீவன்களுக்கு அதன் ஆத்மாவைக் காத்திடும் பக்குவம் எப்படி ஏற்படும்…? என்ற வினாவும் எழலாம்.

இன்றைய நிலையில் எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்பவன் இம்மனிதன் தான்…!

மிருகங்களில் சிலவற்றின் நிலையும் பறவைகளில் சிலவற்றின் நிலையும் சில உயர்ந்த நிலையில் வாழுகின்றன. இம் மாற்றத்தினால் பறவைகளில் சிலவற்றின் நிலை சிதறுண்ட நிலையில் செயல்படப் போகின்றது.

பூமிக்கு மாற்றம் வரும் நிலையில் பறக்கும் பட்சிகளுக்குத் தப்ப முடியாதா…? என்று எண்ணலாம்.

காற்று மண்டலமே மாற்றம் கொண்டுள்ள இந்நிலையில் இப்பொழுதே பறவைகளின் எண்ணச் சிதறலின் வளர்நிலை தொடர்பட்டுவிட்டது. இவ்வுலக மாற்றத்திற்குள்ளேயே பறவைகளின் நிலை மிகவும் குறைந்துவிடும்.

நம் பூமியிலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பறவைகளின் நிலை இருந்ததைக் காட்டிலும் படிப்படியாய் இன்று குறைந்துவிட்டது.

மற்ற ஜீவராசிகளின் நிலையும் ஒரு சில இன வர்க்கங்கள் மிகவும் குறைந்து விட்டதற்குக் காரணமே…
1.தாவரங்களை அழித்ததினால் இக்காற்று மண்டலமே விஷத்தன்மை அதிகப்பட்டதிலிருந்து இம்மாற்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
2.முந்தைய காலங்களில் வயல்களில் விளையும் கதிர்களை பட்சிகளிலிருந்து காக்கத் தக்க நடவடிக்கை இருந்திட்டது
3.இன்றைய நிலையில் தாவரங்களை புழு, பூச்சி இவற்றிலிருந்து காக்கும் நிலைதான் அதிகப்பட்டுவிட்டது.

காலங்கள் மாற மாற இன வளர்ச்சியின் நிலையும் மாறிக் கொண்டே வருகின்றது. இப்பூமியில் கல்கியில் தொடர்ந்து இக்கலி வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முடிவு நிலைதான்… இன்று நாமுள்ள நிலை…!

1.முடிவு நிலையில் உள்ள நாம்…
2.முதல் நிலைக்குச் செல்லும் பக்குவ நிலைதான் இங்கு உணர்த்தும் உண்மை நிலை…!

நாம் சுவாசிப்பது எது…? நாம் சுவாசிக்க வேண்டியது எது…?

 

பல கோடித் தாவர இனங்கள் வளர்ச்சிக்குப் பின் பல கோடி உயிரினங்கள் உருவாகி… உணர்வுக்கொப்ப உடல் பெற்று அதிலிருந்து உணர்வின் எண்ணங்கள் இன்றும் ஏராளமாக உண்டு.

1.மற்ற உயிரினங்கள் நுகர்ந்தது ஒரு உடலுக்குள் ஒரு உடல் ஐக்கியமாகி விடுகின்றது
2.ஆனால் மனித உடலுக்குள் உருவான உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தது.

அதை எல்லாம் சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்தந்த உணர்வைத் தாங்கி இன்றும் அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது “சூரியனின் இயக்கச் சக்தியாக…”

சூரியனைப் போல் தான் நாம் உயிரின் தன்மையும்…!

நாம் எதை எல்லாம் நுகர்கின்றோமோ இந்த உயிரின் துடிப்பால் அதை இயக்கிக் கொண்டே உள்ளது… அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உடலை விட்டு உயிர் வெளியே சென்றாலும்
2.இந்த உடலின் தன்மை கரைந்தாலும்
3.உயிருடன் இந்த உணர்வுகள் நிலைத்தே இருக்கும்.

அதாவது… இந்த உயிருடன் நிலைத்து இருந்தாலும் இந்த உணர்வுக்கொப்ப உடல் இல்லை என்றாலும் உடலில் வேதனைப்பட்ட உணர்வுகள் அதிலே நிச்சயம் உண்டு.

ஒரு மனிதன் உடலுக்குள் இது சென்றால் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அங்கேயும் அதே உணர்வாக இயக்கும்.

ஒரு இயந்திரத்தில் நாம் ஒரு நாடாவில் பதிவு செய்து கொள்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதையே நீங்கள் எடுத்து மற்ற எந்திரங்களில் போடும் போது அந்த ஒலி அதிர்வுகளை எடுத்து ட்ரான்சாக்ஸன் கொடுத்து ஒலி/ஒளிப்பதிவைப் பதிவாக்கவும் ஒலி அலைகளைப் பெருக்குவதும் உணர்ச்சிகளைத் தூண்டுவதும் என்று பல செயல்களைச் செயல்படுத்துகின்றோம்.

ஒரு மைக்கின் (MIC) வழி கூடி நாம் சொல்வது போல…
1.இயந்திரமான இந்த உடலுக்குள் ஒரு மனிதனுக்குள் விளைந்த உணர்வை நுகரப்படும் போது
2.உயிரான காந்த ஊசியில் இந்த உணர்வலைகள் படர்ந்து அதன் மூலமாக
3.அந்த எண்ணங்களை அந்த உணர்ச்சிகளையும் நாம் அறிகின்றோம்.
4.அறிந்தாலும் இதை உயிர் உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றி விடுகின்றது.

இந்த இயற்கை நிலைகளை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன் அவனில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.

மனிதனாக வளர்ந்தவர்கள் தீமைகளை விளைய வைத்தாலும் சரி தீமையினுடைய உணர்வுகள் அவர்கள் உடலிலிருந்து வந்தாலும் சரி அடுத்தவர்கள் உடலுக்குள்ளும் ஊடுருவி… அங்கும் அது விளைந்து அதன் உணர்வுகள் இவ்வாறு பரவிக் கொண்டே தான் இருக்கின்றது… அழிவதில்லை…!

ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டான் என்றால் அந்த தற்கொலை செய்து கொண்ட உணர்வின் அலைகள் வெளிப்படும்போது
1.ஒரு மனிதன் பாசத்தால் அந்த உணர்வைக் கவர்ந்து கொண்டால்
2.அதே தற்கொலை செய்யும் உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு
3.இவனையும் தற்கொலை செய்யும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தற்கொலை செய்யும்போது… அவன் உடலை எப்படிச் சிதையச் செய்ததோ இதே உணர்வுகள் வெளி வந்தபின் இதே சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

எப்போது… எந்த மனிதன் சோர்வடைந்து… என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பு அடைகின்றானோ அப்பொழுது இந்த உணர்வுகள் ஊடுருவுகின்றது.

அதே உணர்வுகள்… அதே உணர்ச்சிகள் அவனை இயக்கி… அவனையும் தற்கொலை செய்யும்படி செய்கின்றது. அவனாக அதைச் செய்வதில்லை. (உள் புகுந்த அலைகள் தான் இயக்குகிறது)

இந்த உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்கள் செயலாக்கி அவனை அறியாமலே அந்த உடலை தற்கொலை செய்ய இயக்குகின்றது.

அதைப் போலவே… தீமைகள் வரும்போதெல்லாம்
1.நாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று எண்ணி
2.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதன் உணர்வை நாம் கவர்ந்தால்
4.நமக்குள் தீமையை அகற்றும் உணர்வின் வலுகூடும்.

ஏனென்றால் வலிமை கொண்ட உணர்வுகள் கொண்டு அதை அடக்கி விட்டால் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாக மாறி… அந்த உணர்வின் ஞானமாக நமக்குள் இயக்குவதும்… நம் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் இது உதவும்.

நமது குருநாதர் இத்தகைய உண்மையின் உணர்வை அறிவதற்காக மலைக் காடெல்லாம் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்றார்.

1.மலைப்பகுதியில் அகஸ்தியன் பாதங்கள் பட்ட இடங்களில்
2.அவன் உணர்வுகளை அங்கே புவியில் ஈர்க்கப்படுவதும்
3.அவனின் உணர்வின் எண்ண அலைகள் அங்கே பரவியிருப்பதையும்
4.எந்தெந்த இடத்தில் எவ்வாறு அவன் செயல்படுத்தினானோ
5.அதன் நிலையெல்லாம் உணரும்படி செய்கின்றார்… உணர்த்தி வருகின்றார்

அந்த அலைகள் உலகம் எங்கிலும் கலந்துள்ளது. அதை நீங்களும் பெற வேண்டும்… பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இந்த உபதேசம்.

ஆத்மா பிரிந்து விட்டது என்றால் “ஆத்மா என்பது என்ன…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தும் பக்குவ நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்திட வேண்டும் என்று சொல்கிறோம். அந்த ஆத்மா என்பது எங்குள்ளது…?

இறந்து விட்டால் ஆத்மா பிரிந்து விட்டது…! என்கின்றோம். ஒரு ஜீவ உடல் இறக்கும் பொழுது அவ்வுடலில் இருந்து அவ்வுடலின் “உயிரணுதான்” முதலில் பிரிகின்றது.

1.அவ்வுயிரணுவிற்கும் அவ்வுடலில் உள்ள ஜீவனற்ற ஆத்மாவிற்கும் தொடர்பு கொண்டுதான்
2.அவ்வுடலிலிருந்து ஓர் அங்குல வட்டத்திற்குள் தான் அவ்வுயிரணு
3.அவ்வுடலின் மேல் பகுதியிலேயே அவ்வாத்மாவுடன் இருக்கும்.

ஆத்மா என்பது என்ன…? அவ்வுயிரணு சேமித்த அமில சக்தி தான் ஆத்மா…!

அவ்வுடலை எந்த நிலைப்படுத்துகின்றோமோ அதன் பிறகுதான் அவ்வுடலைச் சுற்றிக் கொண்டே உள்ள அவ்வுடலின் ஆத்மா இந்த உயிரணுவுடன் கலந்து ஆவி உலகிற்கு வருகின்றது.

எவ்வுடலும் அதன் ஜீவன் பிரிந்த உடனே அதனுடைய செயல் நிலை ஏற்படுத்துவதில்லை. அவ்வுடலை எரிக்கும் நிலையில் அதனுடைய உயிருடன் அவ்வாத்மா சுற்றிக் கொண்டு ஆவி உலகில் கலக்கின்றது.

மற்ற நிலையில் அடக்கம் செய்யும் உடலாத்மா அதன் உயிரணுவுடன் சேர்ந்து உடலில்லாமல் செயல் கொள்ளப் பல நாட்களாகின்றன.

1.ஆத்மா என்பது உடலின் அனைத்து உறுப்புகளிலுமே ஆவித்தன்மையில்
2.உடலில் மட்டுமல்லாமல் உடலைச் சுற்றியுள்ள நிலையிலும் படர்ந்துள்ளது.
3.உயிரணுவிற்கும்… ஆவி ஆத்மாவிற்கும்.. ஜீவனுடன் கூடிய ஆத்மாவிற்கும் பொருள் புரிந்ததா…?
4.ஆவி உலக ஆத்மாவிற்கும் ஜீவ உடல் ஆத்மாவிற்கும் மாறுபட்ட நிலை இதுதான்.

ஜீவ உடலை விட்ட ஆத்மாவிற்கு எண்ணத்தின் நிலையைச் செயலாக்கிட பிற எண்ணமுடன் (உடலுடன் கொண்ட) மோதித்தான் அதன் செயல் நிலை இருந்திடும். அதனால் தான் அதில் சிக்கிவிடக் கூடாது என்று சொல்கிறோம்.

நம் எண்ணத்தை ஒரு நிலை கொண்டு ஒவ்வோர் ஆத்மாவும் ஆசையுடன் வாழும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

1.அனைத்திற்குமே ஆசை வேண்டும்
2.அன்பு கொள்ளவும் ஆசை வேண்டும்
3.கோபத்தை விடவும் ஆசை வேண்டும்
4.எந்நிலை செயல் கொள்ளவும் அவ் ஆசை வேண்டும்
5.நமக்குகந்த ஆசையை நாம் ஆசைப்பட்டால்தான் எச்செயலும் நடக்கும்.

பேராசைக்குத் தான் நாம் இடம் தரலாகாது…!

அமுதான உணவானாலும் நாம் நம் உடலுக்கு வேண்டிய அளவுதான் உண்ணுகின்றோம். எப்படி உண்டாலும் அதிகமாய் நம் உடம்பு ஏற்றுக் கொள்கின்றதா…? இல்லையே…!

ஆக… உடலே தனக்குகந்த அளவு உணவைத்தான் செரிக்கும் பொழுது நம் எண்ணத்தையும் அளவுடன் கூடிய ஆசையை எண்ணியே செரிக்கும் பக்குவத்தை நாம் பழக்கப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் உருவாகும் கற்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

ஒன்றுடன் ஒன்று இணைந்து எண்ணிலடங்கா தாவர இனங்கள் உருவாகி அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருப்பெறுகின்றது.

மனித உடல் மடிந்த பின் இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அழுகிய நிலைகள் ஆகும்போது அதிலே புழுக்கள் உருவாகின்றது.

அந்த உடலை உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது உணவாக உட்கொண்டு அதுவும் மடியும்போது அந்த மடிந்த நிலைகள் கொண்டு மற்றொரு ஆகாரத்தை எடுத்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறுகின்றது.

அது போன்ற புழுக்களின் தன்மை மடிந்த நிலையில்… மழைக்காலம் வந்தால் வெப்பமும் மற்றதும் இணைந்து கொண்டபின் பல பல பூச்சிகள் உற்பத்தியாவதைப் பார்க்கலாம்.

இதிலே பெரும்பகுதி மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவு தானியங்களில் இது பட்டால் அதை எல்லாம் அழித்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்பதை குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் செல்லப்படும்போது அக்காலங்களில் எவ்வழியில் மனிதன் வளர்ந்தான்…? மனித உடலில் விளைந்த நிலைகள் எவ்வாறு அலைகளாகச் செல்கின்றது…? என்று காட்டினார்.

1.மனிதனாக வளரும்போது உடலில் அணுக்களாக இருக்கின்றது.
2.மடிந்தால்… உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்ற பின்
3.தனித்து அதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் அந்த உணர்வின் அணுக்களின் தன்மை எதுவோ
4.அதற்குத்தக்க புழுவின் தன்மை அடைகின்றது.

அந்தப் புழுக்களும் மடிந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் மற்ற தாவர இனங்களில் விழுந்து அதை உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது..

தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் புழுத்தன்மையை அடைந்தபின் இந்த உடல் மடிந்தால் இது நுகர்ந்த உணர்வுகளுக்கொப்ப பூச்சிகளின் ரூபங்களாக வருகின்றது.

பார்க்கலாம்… பல விதமான புழுக்களையும் பூச்சிகளையும்…!
1.மழைக் காலத்திற்கு முன்னாடி இருக்காது
2.மழை பெய்த பின் புவியின் வெப்பத்தின் தன்மை கொண்டு… இந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு…
3.உருவாகும் சக்தியும் பெறுகின்றது என்பதனைக் குருநாதர் காட்டுகின்றார்.

இந்த உண்மைகளை குருநாதர் எவ்வாறு காட்டுகின்றார்…?

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு அவன் அறிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

குருநாதர் அதைப் பின்பற்றி எடுத்து அந்த உண்மையின் உணர்வை வெளிப்படுத்தும் போது எமக்குள் பாய்ச்சினார்.
1.சூட்சுமத்தில் நடப்பதைக் காட்சிகளாகவும் அந்த உணர்வை நுகர்ந்தபின்
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவு கொண்டு கற்றுணர்ந்த பின் ஆய்வுக்கூடத்தில் (LABORATORY) வைத்து மனித உடலில் பல பல பரிசோதனைகளைச் செய்கிறார்கள்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது… பித்தப்பையில் கற்கள் உருவாகின்றது என்றால் கற்கள் உருவாகுவதற்குக் காரணம் என்ன…? என்று அன்று மெய்ஞானி கண்டான்

நம் உடலுக்குள் வரும் நோயை போக்க பல விதமான ஆங்கில மருந்துகளை இன்று உட்கொள்கிறோம். இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது அந்த உணர்வின் சத்து இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் சென்ற பின் பித்தசுரபி அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் வடிக்கின்றது.

அப்படி வடிக்கப்படும்போது உறைக்கும் உணர்வு கொண்ட மருந்து அங்கே சேர்ந்தபின் அது உறையும் தன்மையாக வருகின்றது. பித்த சுரபிகளில் கற்களாக உருவாகின்றது.

அதே சமயத்தில் இரத்தத்தில் கலந்து வருவதைக் கிட்னி அது சுத்திகரிக்கக்கூடிய நிலை வரும்போது உப்புத் தன்மை அடைந்திருந்தால் அங்கேயும் உறையும் தன்மை அதிகரிக்கின்றது.

பின் சிறு மணலாக மாறினால் அதனின் வளர்ச்சியின் தன்மை கல்லாக மாறுகின்றது… ஒரு சிலருக்குப் பெரும் கல்லாகக் கூட மாறுகின்றது.

இது எல்லாம்…
1.இந்த இயற்கையின் நிலைகள் ஒவ்வொன்றும் தான் சுவாசித்த நிலைகளும் உணவாக உட்கொள்ளும் நிலைகளும்
2.தான் வாழ்க்கையில் மற்ற உணர்வின் தன்மைகளைக் கவர்ந்திருந்தாலும்
3.அந்த உணர்வுக்குள் ஏற்படும் இரத்தத்தின் கசிவுகளை (உப்பு நீராகக் கசிவது போல்) இது எப்படி மாற்றுகின்றது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

காரணம்… சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும் உணர்வுகளையோ சலிப்பு கொண்டவர்களையோ நாம் காண நேர்கின்றது. உதாரணமாக ஒரு சிறுநீரகக் கோளாறு உள்ள மனிதனை உற்றுப்பார்க்கின்றோம்… பழகுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிகமாக அவரிடம் பழகி இருந்தால் அவனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகரப்படும் போது அவன் உடலில் உணர்வான அந்த உறையும் தன்மை நமக்குள்ளும் வருகின்றது.

1.ஆனால் டாக்டர்கள் பார்க்கப்படும்போது
2.நோயை நீக்க வேண்டுமென்ற உணர்வு வரப்படும்போது இதைக் கவர்வதில்லை.
3.ஒரு இரக்கம் ஈகை கொண்ட டாக்டர் இதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தால் அவருக்கும் இதே நோய் வரும்.

ஆகவே இதைப் போல் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் கலந்து நம் இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது
1.ஒன்றில் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் அதே செயல்களாகச் செயல்படுகின்றது என்று
2.இதையெல்லாம் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.

இது போன்ற விஷத் தன்மைகள் நம் உறுப்புகளில் சேராதபடி தடுக்க வேண்டும் என்பதற்குத்தான் தியானத்தில் அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடல் உறுப்புகளில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும் என்று சொல்கிறோம்.

உறக்கத்தில் வரும் கனவுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் எண்ண நிலையைத் திசை திருப்பிடவும் இவ்வுலகில் பல நிலைகள் பல வழியில் நம்மை வந்து மோதத்தான் செய்யும். நாம் தான் இந்நிலையிலிருந்து நம் எண்ணத்தை ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஞானிகளின் உணர்வுடன் சுழல விடவேண்டும்.

காலையில் துயிலெழுந்து இரவு உறங்கும் காலம் வரை நம் எண்ணத்துடன் பல செயல்கள் மோதுண்டு நம்மைப் பல நிலைகளுக்கு ஆளாக்குவது என்பது மட்டுமல்ல.

பகலில் ஏற்படும் செயல்களின் நினைவுடனே நாம் உறக்கம் கொள்வோமானால்…
1.அந்நினைவின் தொடரில் அதே நினைவுடன் கூடிய இக்காற்று மண்டலத்தில் கலந்துள்ள பல ஆத்மாக்களின் நினைவலைகளும்
2.நாம் நம் செயலின் நினைவலைகளும் உள்ள நிலையில் அதுவும் இதுவும் மோதுண்டு
3.அதன் எண்ணச் சுழற்சியில் நம் எண்ணம் சிக்குண்டு
4.உறக்கத்தில் உள்ள நிலையில் நம் செயல் எண்னத்தின் தொடர் எண்ணத்தில் நம்மைச் செல்லவிடாமல்
5.நம் எண்ணத்துடன் மோதுண்ட பிற ஆத்மாவின் எண்ணச் செயல் நிலையின் எண்ண ஓட்டத்திற்கே
6.நம்மை அவ்வாவி ஆத்மா தூண்டி அதன் எண்ண கலவையின் ஓட்டமுடனே நாம் செல்லும் நிலையில் தான்
7.நமக்கு ஏற்படும் கனவுகளில் நம் வாழ்க்கைக்கும் எண்ணத்திற்கும் ஒட்டாத செயல்களை எல்லாம் கனவில் காணுகின்றோம்.

உடலை விட்ட ஆத்மாக்களுக்கு உணவுமில்லை உறக்கமுமில்லை. மனித ஆத்மாக்கள் உறங்கிடும் வேளையில்… இவ்வாவி உலக ஆத்மாக்கள் தன் எண்ணத்தைச் செயல்படுத்த அதனுடைய எண்ண நிலைகேற்ப ஆத்மாக்களின் நிலைகளில் “நம் வட்டத்திற்குள் வந்து… நம் எண்ணத்தைத் தூண்டுகின்றது…”

இரவில் நாம் காணும் துர்க்கனவானாலும் ஆனந்த நிலை கொண்ட கனவாய் இருந்தாலும் நாம் உறங்கி எழுந்த பிறகு காலையில் நம் நினைவில் வருவதை வைத்து என்ன செய்கிறோம்…?

அதே எண்ண ஓட்டத்தில்…
1.இப்படிக் கனவு கண்டு விட்டோமே…
2.கனவு பலித்திடும் என்று செப்புகின்றனரே…! என்ற எண்ணத்தில் மோதவிட்டு
3.அதே நினைவுத்தொடரில் நாம் எடுக்கும் சுவாசத்தினால்
4.நம் சப்த அலையுடன் இந்நிலையும் கலந்து அதன் தொடர்ச்சியில் நம் செயல் நிலை இழுக்கப்படுகின்றது.

நல்ல ஆனந்த நிலை கொண்ட கனவும் இந்த நிலையே…! கனவில் ஏற்படும் நிலையினாலும் நம் வாழ்க்கையில் சில நிலைகள் தொடர் கொள்கின்றன.

பகலில் மட்டும் நம் செயலின் எண்ணம் கொண்டு நம் நிலை ஏற்படுவதில்லை. பகலிற்கு மேல் இரவிலும் நம் எண்ணம் செயல்படுகின்றது என்பதனை உணர்ந்தீரா…?

நாம் உறங்குவதற்கு முன் ஒரு ஐந்து நிமிடமாவது நம்மையே தியானத்துடன் கலக்கும் நிலைப்படுத்தி நம் தாய் தந்தையரை வணங்கி ஓ…ம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகள் ஞானிகளை எண்ணி அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனே உறங்கினால் உறக்கத்தில் உள்ள நிலையில் நம் உயிரைச் சுற்றியுள்ள நம் ஆத்மாவுடன் நாம் எடுக்கும் இந்தச் சுவாசமே சுழன்று கொண்டிருக்கும்.

அந்த நிலையில் நம் எண்ணமும் நாம் விழித்துள்ள நிலையில் செய்த செயல் எண்ணமும் அதன் தொடரில் நாம் காணும் பல பல (கற்பனை) எண்ணங்களும் தியான நிலையில் உள்ள ஆத்மாவுடன் வந்து மோதுவதுமில்லை. பல கனவுகளைச் சிதறுண்டு நாம் காணவும் முடிந்திடாது.

உறங்கும் நிலையிலும் நாம் நல் சக்திகளை வளர்த்திட முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

செல்வத்தைத் தேடும் ஆசையால் கடைசியில் நாம் வேதனையைத் தான் அனுபவிக்கின்றோம்

 

அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த நஞ்சினை வென்றிட்ட வழிகளிலேயே நாமும் செயல்பட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று உணர்வின் தன்மையை வளர்த்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக உருவாக்கி எத்தகைய நஞ்சினையும் வென்றிடும் ஒளியின் தன்மை பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவன் வழியிலேயே நாமும் சென்று எந்த நேரம் இந்த உடலிலிருந்து நாம் பிரிந்தாலும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திட நாம் ஒவ்வொரு நாளும் முயற்சிப்போம்.

இதை ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் நமது செல்வம் நிலைப்பதில்லை நம் உடலும் நிலைப்பதில்லை.

நிலையில்லாத இந்த உடலுக்கு நிலையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு தேடிய செல்வத்தைச் சீராக பயன்படுத்தத் தவறும் போது அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகி விடுகின்றது.

ஏனென்றால் நாம் சேமித்த செல்வத்தை நம் பிள்ளைகள் செலவழிக்கின்றார்கள் அல்லது கடன் கொடுத்தது திரும்ப வரவில்லை என்றால் அதன் வழி கொண்டு வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.

1.அந்த வேதனைப்படும் நிலையே நமக்குள் எதிரி என்ற உணர்வுகளை உருவாக்கி
2.செல்வத்தைக் காக்கும் செயலை இழந்து
3.உடலின் தன்மை கொண்டு நாம் செல்வத்தைச் சேமித்தாலும்
4.அதனால் வேதனை என்ற உணர்வுகள் நுகர்ந்து இந்த உடலையே அழித்திடும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தச் செல்வம் நம் உடலைக் காப்பதில்லை. அந்தச் செல்வம் நல்ல குணங்களையும் காப்பதில்லை. இருப்பினும் மனிதன் என்ற நிலையைச் சீர்குலையச் செய்து செல்வத்தால் பேரழிவு வருகின்றது.

செல்வம் தேவைதான்… செல்வத்தினைத் தேடும் முறைகள் வேறு. செல்வத்தைத் தேடும் முறைகள இருப்பினும் “போதும்…” என்ற மனம் இருந்தால் செல்வம் தன்னை நாடியே அது வரும்.

ஆனால் தனக்குச் செல்வம் வேண்டும் என்ற நிலை வரப்படும்போது அந்த உணர்வின் இயக்கமாகக் குறைகளைச் செயல்படுத்தத் தான் செய்யும். மற்றவருடைய பொருளை (மனத்தை) அறியத் தெரியாது. உண்மையின் உணர்வை அறியத் தெரியாது.

செல்வத்தையே தேடும் நிலையோ அல்லது அதை நமக்குள் பெறும் நிலையோ வரும்போது
1.ஈகை என்ற நிலை வராது… இரக்கம் என்ற நிலைகளும் வராது…!
2.பண்பென்ற நிலைகளை அழிக்கப்படுகிறது
3.துன்புறுத்தும் உணர்வே அங்கே விளைகின்றது… ஒதுக்கும் நிலையே இங்கு வருகின்றது.

இப்படிப்பட்ட உணர்வின் தன்மைகளத் தனக்குள் எடுக்கும் பொழுது செல்வத்தால் நமக்குள் தீமையின் தன்மை தான் வருகின்றதே தவிர நன்மை இல்லை.

செல்வத்தைப் பெற்றிருந்தாலும்… கடைசியில் செல்வத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்…! என்று பின்னாட்களில் வேதனை என்ற உணர்வே வருகின்றது.

ஆக… தேடிய செல்வத்தால் விஷத்தின் தன்மை தனக்குள் உருவாக்கப்பட்டு உடலிலிருந்து நாம் அகன்ற பின் விஷத்தின் உணர்வு அதிகரித்தால் மனிதன் சிந்தனையை இழக்கப்பட்டு மனிதனல்லாத உடலை உருவாக்கிடும் நிலையே வருகிறது.

இன்னொரு பற்று கொண்ட மனித உடலுக்குள் இந்த உயிரான்மா சென்றாலும்… எடுத்துக் கொண்ட வேதனைப்படுத்தும் உணர்வு கொண்டு ஒருவர் நமக்குக் கொடுக்கவில்லை என்றால் இவன் தான் என்னை வேதனைக்குள்ளாக்கினான் என்று எண்ணினால் அந்த உடலுக்குள் புகுந்து இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கி அதையும் வீழ்த்தத் தான் செய்யும்.

வீழ்த்திய பின் அடுத்து பாம்பினமோ தேளினமோ போன்ற நிலையை உயிர் உருவாக்கி விடுகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

ஏனென்றால் விஷத்தின் தன்மை அதிகரித்தால் அந்த விஷத்தின் துணை கொண்டு மற்றதைக் கரைத்து தான் உணவாக உட்கொள்ளும் இதற்கே உதவும்.

தன் உணவுக்காக ஊர்ந்து சென்று பிறிதொரு எதிரி என்ற நிலை தன்னை தாக்கிடாது அஞ்சி வாழும் நிலையில் நரக வேதனையே அது அனுபவிக்கின்றது. அத்தகைய நரக லோகத்தின் நிலைக்கு நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

1.ஆகவே பல கோடிச் சரீரங்களைக் கடந்து
2.சொர்க்க பூமியாக சொர்க்க உடலாக சொர்க்க லோகமாக உருவாக்கிடும் உயிரை நாம் மதித்திடல் வேண்டும்
3.தீமைகள் நமக்குள் உருவாகாதபடி ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை உருவாக்க வேண்டும்.

ஆன்மாவுக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்து என்ன பயன்…? – ஈஸ்வரபட்டர்

காட்சி:
பாட்டிலில் புனலை வைத்துத் திரவத்தை ஊற்றும் நிலை தெரிகின்றது.

விளக்கம்:
முந்தைய காலங்களில் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்திய ஜெப அருளினால் மட்டும்தான் ஞான நிலை பெற முடிந்தது. எழுதி வைத்துப் படிக்கும் நிலை அன்றில்லை…!

குப்பியில் புனலை வைத்துத் திரவத்தை ஊற்றுவதைக் கண்டோம். அக்குப்பிக்குப் புனல் உள்ளதினால் அதில் ஊற்றும் திரவம் சிந்தாமல் ஊற்ற முடிந்தது.
1.புனல் இல்லாவிட்டால்…
2.எண்ணத்தைச் சிறிது மாற்றினாலும்…
3.அத்திரவம் சிந்தி விடுகின்றது.

இன்றைய ஏட்டு நிலை கொண்டு ஆரம்ப நிலையிலேயே அறியும் பக்குவத்தை நாம் உணரப் பல நிலைகள் எழுத்து வடிவினில் தரப்படுகின்றன.

ஆனாலும் புனலைப்போல் நம் ஆத்மாவுக்குகந்த ஈர்ப்பு நிலையை நாம் உணராமல் வாழுகின்றோம். இம்மனித ஆத்மாவுக்கு மட்டும்தான் காந்த அமில சக்தியுடைய ஈர்ப்பு சக்தி அதிகம்.

இவ்வுலகின் ஈர்ப்பு நிலைக்குகந்த அமில சக்தியில் தாவர வர்க்கங்களும் மற்ற உலோகங்களும் அதற்குகந்த அமிலத்தைத் தான் ஈர்க்கும்.

மற்ற ஜீவ ஜெந்துக்கள் அதன் எண்ண வளர்ச்சியில் எச் சக்தியில் ஜீவன் பெற்றதோ அதன் வளர்ச்சித் தொடரில்தான் செல்லும். அனைத்து நிலைகளையும் உணரும் சக்தி சில ஜீவராசிகளுக்கு இருந்திட்டாலும் செயல்படத்தக்க இயற்கை நிலை இல்லாததினால் மனித ஆத்மாவை ஒத்த செயல் நிலை அவற்றிற்கும் இல்லை.

1.இம் மனித ஆத்மா ஒன்றுக்கு மட்டும்தான் இக்காற்றினில் கலந்துள்ள பல கோடி அமில நிலையினில்
2.தனக்கு வேண்டியதைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டு.

இம் மனித ஆத்மா ஒரு நிலை கொண்ட ஜெப அருள் பெற்று விட்டால் எண்ண சக்தியை ஒரு நிலையில் எண்ணி எடுக்கும் சுவாசத்தில் இருந்து அவ்வெண்ண சக்தியின் தொடர் நிலை கொண்ட அமிலத்தின் ஈர்ப்பினால்… “எதை எண்ணி நம் ஜெபக் குறி உள்ளதோ…” அந்நிலையை நாம் எடுக்கும் சுவாசத்தில் அலையுடன் நம் உயிராத்மா அவ் ஈர்ப்பு காந்த அமிலத்தை நமக்கு ஈர்த்தெடுத்து அளிக்கின்றது.

1.விழியை மூடிக் கொண்டே நாம் எடுக்கும் சுவாசத்திலிருந்து
2.எவ்வெண்ணத்தைப் பாய்ச்சி நம் தியானம் உள்ளதோ
3.அதன் தொடர்நிலை அனைத்தும் விழியுடன் காண்பதைப் போலவே காணலாம்.

இக்காற்றிலுள்ள ஜீவ அணுக்களை நமக்குகந்த அமிலத்தை நம் சுவாசம் எடுக்கும் நிலை பெறல் வேண்டும்.
1.காற்று மண்டலமே இன்றைய நிலையில் விஷத்தன்மை கூடி விட்டது என்றாலும்
2.நம் சுவாசத்திற்கு வேண்டிய நல் அணுக்களை நாம் சுவாசிக்கும் ஈர்ப்பு நிலை பெற வேண்டும்.

இத்தொடர் நிலை ஜெபத்தினால் நம் ஜெப சக்தியில் எவ் அமிலத்தையும் நாம் நமதாக எடுத்திடாமல்.. எம் மண்டலத்திலிருந்தாலும் நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து வாழும் பக்குவத்தை அறியலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு நம் மண்டலத்திலிருந்து பிற மண்டலம் செல்ல நம் பூமியின் அமிலக் காற்றை அதில் செல்லும் ஜீவ ஆத்மாவிற்கு எடுத்துச் சென்றும் பல பாதுகாப்பு நிலைகளைப் புகைப்படமாக்கி இப்பூமிக்கு அறியும் நிலையை ஏற்படுத்தி வர ஏவுகின்றனர்.

ஜெப நிலை கொண்டு தன் உயிராத்மாவிற்கு வேண்டிய அமில சக்தியை இக்காற்று மண்டலத்தில் எக் கோளத்தில் இருந்தாலும் ஈர்க்கும் பக்குவம் பெற்றுவிட்டால் இவர்கள் அனுப்பும் செயற்கைக் கோளில் எப்பாதுகாப்பு சாதனமும் இன்றி ஆகாரம் எடுத்துச் செல்லாமல் இவ்வுடலுடனே குறிப்பிட்ட காலங்களுக்குச் சென்று வர முடிந்திடும்.

1.எண்ணத்தில் ஜெப நிலை பெறல் வேண்டும்
2.அச்சாதனை நிலைபெற்ற ஆத்மாவினால் இச்செயல் நிலை கொள்ள முடியும்
3.பயமும் திகிலும் கொள்ளும் சிறு எண்ணப் பிசிறு உள்ள நிலையிலும் இச்செயல் நிலை சாத்தியமல்ல.
4.இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நிலையிலேயே சப்தரிஷியின் நிலை பெறும் ஆத்மாவினால்தான் அந்த நிலை பெறல் முடியும்.

சூட்சுமத்தில் உள்ளோரின் நிலை வேறு…! இவ்வுடலுடன் கொண்ட சூட்சும நிலை கொள்ளும் ஆத்மாவினால் இச்செயல் நிலை செயல்படுத்திட முடிந்திடும்.

“மனித ஆத்மா ஒவ்வொன்றிற்கும் இச்சக்தி நிலையுண்டு…!” என்பதனை உணர்த்தத்தான் இந்நிலை விளக்கப்பட்டதேயன்றி நம் வாழ்க்கையின் நம் ஆத்மாவின் குறிக்கோளுக்குச் செப்பவில்லை.

இவ்வாத்மாவிற்கு உகந்த சக்தியை உணர்த்திடத்தான் இந்நிலை உணர்த்தப்பட்டது.

இக்கால நிலையுடன் கலந்து வரும் பூகம்பத்தையும் இடி மின்னலையும் எரிமலை கக்கும் நிலையையும் பனிமலை உறையும் காலத்தையும் கடல் கொந்தளிக்கும் நிலையையும் இவ்வுடல் மண்டலத்தில் ஈர்க்கும் நிலைப்படுத்தி உணர்ந்திடலாம்.

பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முதலிலேயே உடலுடன் இருந்த பல ஆத்மாக்கள் பல நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிலைகளையெல்லாம் அறியும் பக்குவம் பெற்று இப்பூமியிலேயேதான் வாழ்ந்தார்கள்.

1.இன்று நாம் நமக்குகந்த உண்மை நிலையை உணராமல் செயற்கையில் மகிழ்ந்து வாழ்கின்றோம்
2.நம் ஆத்மாவையே செயற்கையுடன் ஒன்றச் செய்து விட்டோம்
3.ஆன்மாவுக்குகந்த செல்வ நிலையைப் பெறாமல் வாழ்ந்து என்ன பயன்…?

“சீதா” ஜனகச் சக்கரவர்த்திக்கு வளர்ப்பு மகள் என்றால் அதனுடைய விளக்கம் என்ன…?

 

இராமாயணத்தில் காட்டப்பட்ட ஜனகச் சக்கரவர்த்தி என்பது சூரியன். பூமியிலிருந்து வெளிப்படும் சத்துக்களை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதிலே சுவை கொண்ட உணர்வின் எண்ணங்கள் கொண்டே மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையை உணர்த்துவதற்காக ஜனகச் சக்கரவர்த்தி என்று சூரியனைக் காட்டுகின்றனர்.

ஒரு நிலத்தினைப் பண்படுத்தி நல்ல வித்தினை ஊன்றினால் அதிலே விளைந்த சத்து (வித்துகள்) சீதா என்றும் அதை உணவாக சுவைக்கப்படும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகளை நாம் பெறுகின்றோம் என்று காட்டுகின்றனர்.

1.அதாவது உணர்வின் சத்தைத் தான் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது
2.ஜனக சக்கரவர்த்தி அதைத் தத்தாக எடுத்து (சீதா என்ற சத்தை) அவன் வளர்க்கின்றான் என்ற பேருண்மையைக் காட்டுகின்றார்கள்.

மனிதனில் எடுத்துக் கொண்ட கோபமோ காரமோ மற்ற உணர்வுகள் எல்லாமே சீதா தான். அதைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

ஆனால் காடுகளில் விளைந்த விஷத் தன்மைகளை நாம் நுகர்ந்தால் என்னவாகும்..? நம்மைக் கொன்றுவிடும். இதைப் போல உணர்வுகள் அதனதன் விளைவுகளை… அதன் ஒலி அலைகளைப் பாய்ச்சப்படும்போது அதனுடைய திறமைகளைத்தான் காட்டும்…! என்பதனை உணர்த்துகின்றனர்.

அதே சமயத்தில் ஜனக சக்கரவர்த்தி சுயம்வரத்தை வைக்கின்றார். திறமைகளைக் காட்டுபவர்களுக்கே தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து தருவேன் என்று…!

ஒரு கொடியவன் மற்றவரை வீழ்த்திடும் திறமையைக் காட்டுகின்றான். வில்லிலே நாண் ஏற்றி அம்பை எய்து மற்றவரை மரணமடையச் செய்கின்றான். மற்றதைத் துன்புறுத்தும் நிலைகளையே அவன் உருவாக்குகின்றான்.

முதலிலே சொன்ன மாதிரி காடுகளின் விளையும் விஷச் செடிகளின் உணர்வினை நாம் நுகர்ந்தால் அது நம்மைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால்
1.மனிதனாக உருவான பின்… மனிதன் வளர வேண்டும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உணர்வினை எடுத்து
2.அந்த உணர்வினைச் சீதாவாக எடுத்து சூரியன் வளர்க்கப்படும்போது
3.அதனை நாம் அரவணைக்கும் சக்தியாக எப்படிப் பெற வேண்டுமென்று தான் இராமயாணத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதனை நாம் சற்றும் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

இராமாயணம் என்ற காவியத்தைக் கடவுளாக்கப்பட்டு அந்தக் கடவுளை வேண்டினால்… இராம நாம ஜெபத்தை நாம் ஜெபித்தால் நமக்கு உதவி செய்வான்…! என்று இப்படித்தான் நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

அந்த இராம நாமத்தை நாம் சொன்னாலும் நாம் எந்தக் குணத்தை எடுத்தோமோ அது தான் சீதா. உதாரணமாக…
1.நான் வாழ வேண்டுமென்ற உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.ஒருவன் எதிரியாக வரும்போது அவனைப் பழித்துப் பேசும் உணர்வு கொண்டு
3.அவனைத் தாக்கும் நிலைகளே வரும்… ஒதுங்கி நிற்கும் நிலைகளே வரும்…!

இது போன்ற தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத் தான் சீதாவைத் திருமணம் செய்வதற்காக… தன் மகளைத் திருமணம் செய்ய அவரவகள் திறமைகளைக் காட்டும்படி செய்தார் என்ற நிலையைக் காவியமாகப் படைத்து நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

அவரவர்கள் திறமையைக் காட்டும் போது அங்கே பிறரைத் தாக்கக்கூடிய அம்புகளை வைத்து… மற்றவரைக் குறி வைத்துத் துன்புறுத்தும் இயக்கங்களே வருகின்றது.

ஆனால் பிறரைத் துன்புறுத்தும் அந்த உணர்வின் தன்மையை…
1.இராமன் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்
2.பிறரைத் துன்புறுத்தும் எண்ணத்தையே அக்ற்றி விட்டால் அந்த வேதனை என்ற நிலையே வராது.

சுவை கொண்ட உணர்வினைத் தனக்குள் உணவாக்கும் போதுதான் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நமக்குள் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தக் குணத்தை எடுத்து அரவணைக்கும் தன்மையாகப் பெற்றான்… கல்யாணராமா…!

துன்புறுத்தும் உணர்வை நம் மீது ஒருவன் தாக்கினால் அவனை எதிர்த்துத் தாக்கும் உணர்வே வரும். இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்ளுவான்.

இனிமையான சொல்லைச் சொன்னால் அதையே திருப்பி எனக்குள் இனிமையாகி அரவணைக்கும் தன்மையே மீண்டும் வரும்.

ஆக… சுவை கொண்ட சீதா தன்னுடன் இணைந்து வாழும் சக்தியை உருவாக்குகின்றது என்று எல்லோரும் புரியும் வண்ணம் கொடுத்துள்ளார்கள்.

இராமயாணக் காவியத்தில் உள்ள மூலங்களை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நிலை கொண்ட தியானத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி எடுக்கும் சுவாசத்தினால் இவ்வுடல் என்ற பிம்பத்தை எச்செயலுக்கும் உகந்ததென உட்படுத்தலாம்.
1.எண்ணத்தை ஒரு நிலைகொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.இவ்வுடல் என்ற பிம்பமும் இக்காற்றுடன் காற்றாய்ப் படர்ந்திடும் சக்தியைப் பெறலாம்.

உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களும் ஒரு நிலைப்பட வேண்டும். அந்நிலையில் இவ்வுடலை எந்நிலையில் வருத்தினாலும் அவ்வுடலுக்கு உணர்வு இராது.
1.எல்லா உயிர் அணுக்களும் ஒரு நிலைப்பட்டு தியானத்தில் உள்ள நிலையில்
2.இவ்வுடல் என்ற பிம்பம் ஜீவனற்ற பிம்ப நிலை கொள்கின்றது.
3.அந்நிலையில் அவ்வுடலுக்கு உணரும் சக்தி தடைப்பட்டு விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட ஜெப நிலையுடன் உள்ள உடலை அவ் உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எத்தகைய அறுவை சிகிச்சைகளையும் போதை நிலைப்படுத்திச் செயலாக்காமல் செய்திடலாம்.

உடலில் இருந்தே நீரிலும் நடக்கலாம்… அமரலாம்… உறங்கலாம்… நாம் கனவில் காணும் நிலை போன்று பறக்கவும் செய்யலாம்…! உடலில் பின்னப்படாவண்ணம் எச் செயலையும் அவ்வுடல் தாங்கிடும்.

இவ்வுடல் என்ற பிம்பம் அவ்வுயிராத்மாவிற்குச் சொந்தம்.
1.உயிராத்மாவின் ஆணைப்படித்தான் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் செயல் கொள்கின்றன.
2.உயிராத்மாவின் ஜீவனே இவ்வெண்ணத்தில்தான் செயல் கொள்கின்றது
3.இவ்வெண்ணமே நாம் எடுக்கும் சுவாசத்தினால்தான் நம் உயிராத்மாவை நிலைக்கச் செய்கின்றது என்பதனை உணர்ந்து
4.நம் எண்ணத்தினால் ஒரு நிலை கொண்டு ஜெபம் பெறும் நிலையில் நாம் எடுக்கும் சுவாசம் இருந்திடல் வேண்டும்.

எந்த வகையான மோதலின் நிலையையும் நம் எண்ணத்தில் பற்றாமல் எண்ணத்தைப் பற்றற்றதாக்கி ஒரு நிலை கொண்ட ஜெபம் எடுத்திடல் வேண்டும்.

நம்மை எதிர் நோக்கி வரும் எவ்வெண்ணத்தின் பற்றுதலையும் நம் எண்ணமுடன் ஒரு நிலை கொண்டிடல் வேண்டும்.

தியானத்தில் ஒரு நிலை கொண்டவரின்… அவர்கள் இல்லத்தையும் அவர்களின் உடலையும் அவர்கள் சார்ந்து செய்யும் எத்தொழிலையும் எத்தடங்கலும் இன்றி நல் நிலையாய் செயல் கொண்டிடும்.

1.எண்ணத்தைச் சிதற விட்டு வாழ்ந்திடுங்கால்
2.நமக்கு நடக்கும் எந்நிலையும் சிதறுண்ட நிலையில்தான் நம்மைத் தாக்கும்.

இன்றைய கால நிலையில் தெரிந்தோ தெரியாமலோ இவ்வுலகம் முழுவதுமே ஆத்மீக நெறி உணர்த்த… ஆண்டவனை இவர்களின் செயலுக்கு உகந்த பொருளாக்கி… இன்றைய அரசியலும் சரி… ஆலயங்களும் சரி… “பல ஆவிகளின் வசியத் தொடர்பு கொண்டு இவ்வுலகமே ஆடிக்கொண்டுள்ளது…”

இவ்வுலகினில் மேலை நாட்டில் ஆயிரம் உடல் ஆத்மாக்களை ஒரு மனித ஆத்மா வசியப்படுத்திச் செயல்படுத்தி வந்த நிலையில் இதன் நிலை வெளியுலகிற்கு அறியப்பட்டவுடன் அனைத்து ஆத்மாக்களையும் உடலுடன் வசியப்படுத்திட எண்ணியவன் அவ்வாத்மாவுடன் தன் ஆத்மாவை செயல்படுத்திட அனைத்து உடல்களையும் தன் உடலுடன் அழித்து இன்று அவ் ஓர் ஆத்மாவே அதன் வசியத்தில் அது அழித்த அனைத்து ஆத்மாக்களையும் வசியப்படுத்தி இவ்வுலகத்திலே அதன் நிலையைச் செயல்படுத்திக் கொண்டுள்ளது.

தலைவனாய் வசியப்படுத்திய அவ்வாத்மா உடலுடன் இருந்திருந்தால் அவன் அழித்த மற்ற உடல் ஆத்மாக்கள் இவன் வசியத்திற்கு வந்திருக்காது.

இன்னும் இந்திய நாட்டிலேயே உண்மை நிலை வழி நாமம் கொண்ட சில நிலைகள் நடக்கின்றன. ஆவிகளை வசியப்படுத்தி அதிகார வர்க்கமுள்ளவர்களையும் பொருட்செல்வம் கொண்டவர்களையும் தன் வசியத்திற்கு ஈர்த்து “உண்மை வழி…” என்ற போர்வையில் வாழுகின்றனர்.

இந்நிலையெல்லாம் இக்கலியில் வந்தது மட்டுமல்ல. அரசர்கள் ஆண்ட கால நிலைத்தொட்டே வந்து கொண்டுள்ளது.

ஆவி ஆத்மாவின் வசிய நிலை கொண்டு பல ஊடுருவல் வேலையெல்லாம் செய்வித்து… ஒரு நாட்டுடன் பிற நாடு சண்டை இட்டு போர்க்களம் கொண்டு அவ்வாவிகளுக்கு மற்ற ஆத்மாவின் குருதிகளை உணவாக்கிப் பல தேசங்களைப் பிடித்தார்கள்.
1.அவ்வாவிகளின் எண்ணமும் வெறி உணர்வு கொண்ட ஆக்ரோஷ நிலைப்பட்டு வழி வழியாய்
2.எத்தீய செயலுக்கும் எண்ணத்தில் பயமில்லாமல் இன்றைய பல ஆத்மாக்கள் செயல் கொள்கின்றன.

எவ்வுயிரணுவும்தான் அழிவதில்லையே…!

ஆக… இன்றைய உலகமும் இவ்வுலகினில் உள்ள அரசியல் நிலைகளும் ஆவியின் பிடியில் சிக்குண்ட நிலையில்
1.நமது ஆத்மாவை நாம் ஒரு நிலைகொண்ட ஜெப சக்தியில்
2.சலிப்பு கோபம் குரோதம் இப்படி எண்ணத்தை வளர்க்காமல்
3.நமது ஆத்மாவை ஒரு நிலைகொண்ட தியானம் ஒன்றினால் மட்டும்தான் நல் வழி கொண்டிட முடியுமப்பா…!

நாம் உருவாக்க வேண்டிய “பாதுகாப்பு அரண்”

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் தலையிலிருந்து கால் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்கி உடலில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உருவாகி அந்த அருள் ஞான சக்தி உங்களுக்குள் பெருகும்.

நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களிலே விளையும். நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்போது நீங்கள் உணரலாம். கை கால் குடைச்சலோ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ மன நோயோ இவை அனைத்தும் அகலும்.

அருள் ஞான ஒளி உங்களிலே பெருகும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளையும். உங்களை மகிழச் செய்யும் அணுக்கள் விளையும்.

அருள் ஒளி வளரும் மெய்ப் பொருள் காணும் திறன் பெறுவீர்கள். உங்கள் பார்வையால் உங்கள் நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

பிறருடைய துன்பங்களைப் போக்கும் வலு பெற்றால் பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடைப்படுத்த முடியும் உங்கள் உணர்வால்…!

தியானமிருக்கும் அனைவரது உடலிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிலே படர்ந்து மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாகப் படரும். சகோதர உணர்வுகள் விளைந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அத்தகையை அருள் சக்திகள் கொண்ட உங்கள் மூச்சலைகள் காற்றிலே படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்திட குருவைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களில் படர
2.மகிழ்ச்சி பெறும் உணர்வை வளர்த்திட
3.அந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.அந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக உருவாகி
5.உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் சொல்லாக உருவாக்கும் சீதா இராமனாக எண்ணங்கள் தோற்றுவிக்கவும்
6.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்திடவும்
7.மகரிஷிகள் உணர்வுகள் அரணாக உங்கள் உடலுக்கு அமைந்து
8.இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெரு வாழ்வு பெற்றிடவும்
9.எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கிடவும்
10.உங்கள் உடலைச் சொர்க்க லோகமாக்கி உங்கள் உயிரைச் சொர்க்க வாசலாக அமைத்திடவும்
11.அந்த மாமகரிஷிகளின் அருளாசி படர்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திடவும்
12.உங்கள் பார்வையிலேயே தீமைகளை அகற்றிடவும் மெய் ஒளியைப் பரப்பிடவும்
13.என்றுமே அழிவில்லா வாழ்க்கையாக வாழ்ந்திடவும்
14.மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடும் அருள் ஒளி உங்களில் படர்ந்திடவும்
15.உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகள் வளர்ந்திடவும்
16.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களுக்கு உறுதுணையாக இருந்திடவும்
17.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்திட குரு அருள் உங்களுக்குள் எப்பொழுதும் உறுதுணையாக இருந்திடவும்
18.அந்த அருள் ஞான குரு வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாக விளைந்திடவும்
19.நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்… தியானிக்கின்றேன்…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் குறைந்திருப்பதையும் காணலாம்.

இதைப் போன்ற அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள அதிகாலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும்… இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… நல்ல இரத்தங்கள் உருவாக வேண்டும்… நல்ல ஞானங்கள் எங்களுக்குள் வளர வேண்டும்…. ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிப் பெறுங்கள்.

இப்போது கொடுக்கும் இந்த அருள் ஞான வித்துக்களை உங்கள் நினைவால் நீங்கள் மீண்டும் மீண்டும் எண்ணும்போது
1.உங்கள் உயிரே அந்த அணுக்களை வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உடலில் வளர்த்து
3.மன பலம் மன நலம் பெறச் செய்து
4.அருள் ஒளி பெறும் அருள் ஞான வழியில் அழைத்துச் சென்று
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்…!

ஆகவே
1.எண்ணியதை உருவாக்குவது உயிரான ஈசன்.
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதை காத்தருளுவதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே.

நம்மைக் காத்தருளுவதும்… ஈசனாக இருந்து உருவாக்குவதும்… என்றென்றும் பாதுகாப்பு அரணாக இருந்து நம்மைக் காப்பதும் உயிரே…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகிச் செல்லும் எந்தச் சந்நியாசியாக இருந்தாலும் ரிஷித் தன்மை பெற முடியாது – ஈஸ்வரபட்டர்

ஆத்மீக நெறிக்கு வருபவர்களும் சந்நியாசிக் கோலத்தை மனிதர்களுக்கு உணர்த்தி…
1.குடும்பப் பற்றையும் மற்ற எல்லா ஆசை நிலையையும் துறந்துதான் ஆத்மீக நெறிக்கு வர வேண்டும் என்பதனை ஒரு சாரார் உணர்த்திவிட்டனர்
2.இன்னும் ஒரு சாரார் அப்பக்தியைப் பொருளாக்கி வளரவிட்டு விட்டனர்
3.இன்னும் ஒரு சாரார் தனக்கு அனைத்து நிலைகளும் தெரிந்துள்ளதாகவும்
4.அவ்வாண்டவனே இவர்களின் மூலமாய்த்தான் பிறருக்கு அச்சக்தியை அளிப்பதாகவும் எண்ணத்தில் கொண்டு
5.மடாலயம் கட்டி மத குருக்களாய் அனைவரையும் வணங்கச் செய்கின்றனர்.

எல்லா மதத்திலும் இந்த நிலைதான்…! உலகுடன் பல காலமாய் எண்ணத்துடனே வளர்ச்சியின் பல நிலைகள் வந்துவிட்டன.

இதிலிருந்தெல்லாம் நமது ஆத்மாவை எல்லாமில் எல்லாமாய் அவனருள் எப்படிக் கலந்துள்ளதோ அதைப் போன்றே எல்லாவற்றுடனும் எல்லாமாய்த்தான் நாம் நம் ஆத்மாவைத் தூய்மைப்படுத்திடல் வேண்டும்.
1.அழுக்குப்படிகிறதே…! என்று அஞ்சி ஒதுங்கி விடலாகாது…
2.அழுக்கை அகற்றிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

மண்ணிலிருந்து கரும்பை எடுத்து அதனைச் சாறாக்கும் நிலையில் அதன் நிறமும் அதன் மணமும் கண்ணுற்றால் இதையா நாம் உண்ணுகின்றோம் என்று எண்ணுகின்றோம்…!

அச்சாறே அதனுடன் சில கலவையை ஏற்றிய பிறகு தூய கற்கண்டாய் உள்ள நிலையில் அதன் வெண்மையும் சுவையும் கண்டு நாம் அருவருப்பதில்லை.

அதைப்போல் உலகத்துடன் ஒன்றியுள்ள நாம் பிற ஆத்மாக்களின் தீய எண்ணத்தைக் கண்டு ஒதுங்கிடலாகாது. கரும்புச்சாறு பார்க்க அருவருப்பாய் உள்ளதென்று ஒதுக்கிவிட்டால் கற்கண்டு கிடைக்குமா…?

மற்ற ஆத்மாக்களையும் நம் நிலையினால் தூய்மைப்படுத்த வேண்டுமேயன்றி எதையுமே வெறுத்து ஒதுக்கலாகாது.

ஆதவனுடன் ஆதவனாய் ஜோதி நிலை பெற்றுக் கலந்திட அவ்வாதவன் எப்படி நன்மை தீமை கொண்டு அவ்வொளியைப் பாய்ச்சவில்லையோ அதைப் போல் உலகுடன் கலந்துள்ள பல நிலை கொண்ட எல்லாமில் எல்லாமாய்த்தான் நம் ஒளியையும் நாம் பெறல் வேண்டும்.

வாழ்க்கையுடன் இருந்திட்ட பெரியோர்கள்தான் இன்று அவ்வொளியுடன் ஒளியாய்க் கலந்து ஆண்டவனாய் உள்ளார்கள் என்பதனை யார் வினா எழுப்பினாலும் அவர்களுக்கு விடையளிக்கப்படும்.

1.குடும்பப் பற்றிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் விலகி
2.இமயமலைச் சாரலுக்குச் சென்று ஜெபமிருக்கும் எந்த ஆத்மாவானாலும் சரி
3.அவ்வாத்மாவும் உடலை விட்டுப் பிரிந்த பிறகு மறுபடியும் இவ்வுலகில் பிறந்து வாழத்தான் வேண்டும்.
4.சித்தனாகவும் முனிவனாகவும் சப்தரிஷியாகவும் எந்த நிலையும் பெற முடிந்திடாது என்பதனை இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் நம் எண்ணமுடன் சுவாசத்தை எடுக்கும் முறையில் இருந்துதான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் அமில சக்தி கூடுகின்றது.

ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட எண்ணத்தின் மோதலில் இருந்தும் நாம் தப்பி நல்லுணர்வையே நம் ஆத்மா சேமிக்கும் அமிலமாய் நம்மை நாம் பக்குவப்படுத்திப் பல ஆத்மாக்களை அப்பக்குவ ஜெபத்திற்கு ஈர்த்துச் செயல்படுத்த வேண்டும்.

இதை உணர்ந்து கொண்டு…
1.நான் என்ற தனித்த நிலையை விட்டு விட்டு
2.எல்லாமுடனும் எல்லாமாய் நம் ஆத்மாவும் ஒளிரும் வழி முறை பெற்று
3.எல்லாமே ஒளிரச் செய்யல் வேண்டும்.

தன்னிச்சையாகத் தீமைகளை அகற்றிடும் வல்லமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

 

மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே அழுத்தமாகவும் உங்களுக்குள் தெளிவாக்கவும் சிறிது வேகமாகச் சொல்கிறேன் (ஞானகுரு).

யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மைகளை யார் கூர்மையாக எண்ணி எடுக்கின்றார்களோ அவர்கள் உடலிலே இந்த அணுத் தன்மை பெருகும்.

தீமைகளை அடக்கும் வல்லமை பெறுகின்றீர்கள். புரியவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை கலக்கப்படும் போது அதே தான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக்கை வைத்து எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். ஒரு நாடாவில் முலாம்களைப் பூசி அதை உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகளை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதன் ஒளி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒளிப் பேழைகளில் மாற்றியமைத்து ரூபமாகவும் எழுத்தாகவும் ஆணைகளாகவும் கூட்டுகின்றது.

இதிலே இடைமறித்து எதையாவது தவறுதலாக ஓசை மாறி விட்டால் உடனே அதனின் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.

1.ஏனென்றால் ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்க வேண்டும் என்றால்
2.அல்லது இந்த நேரத்தில் நிறுத்த வேண்டும் என்றால் இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது
3.குறித்த நேரத்தில் இது தாக்கி அந்த இயந்திரத்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிடும்.

இப்படி இயந்திரங்களை இயக்குவதும் விமானங்களை ஓட்டுவதும் இராக்கெட்டுகளை இயக்குவதும் விஞ்ஞானத்தில் செயல்படுத்துகின்றனர்.

இதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற பேழையை அங்கே வைத்து விட்டு அதன் ஒலி அதிர்வுகள் கதிர்களை இயக்கப்படும் பொழுது தொலை தூரத்தில் செல்லும் இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.

இராக்கெட்டுகளில் ஏதாவது குறைகள் இருந்தாலும்…
1.கம்ப்யூட்டர் மூலம் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அதன் கட்டளைப்படி
2.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மீண்டும் சீராக்குகின்றான் மனிதன்.

இதைப் போன்று தான் நமக்குள் நுகர்ந்த தீமையின் விளைவுகளை மாற்ற வேண்டும் என்றால்… “நம் எண்ணத்தின் நிலையை அருள் மகரிஷிகளுடன் ஒன்றச் செய்ய வேண்டும்…”

மகரிஷிகளுடன் நாம் ஒன்றி…
1.அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்கி
2.அந்த எண்ணத்தை இங்கே இயக்கினால் அதன் துணை கொண்டு
3.நமக்குள் சேரும் தீமையின் உணர்வுகளை மாற்றியமைக்க முடியும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஞானிகள் கொடுத்த மெய் ஞானத்தை இழந்து விட்டோம்.
1.மெய் ஞானத்தின் உண்மைகளை அறிந்தால் மனிதனுக்கு உதவும்.
2.பிறவியில்லா நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் அடைய உதவும்.

ஆனால் மனித ஆசையின் உணர்வுகள் கொண்டு ஒவ்வொன்றையும் வளர்க்கப்பட்டால் அது இந்த உடலுக்கே உதவும். இந்த உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மீண்டும் அடுத்த உடலாக மாற்றிவிடும்.

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்ற பின் மெய் ஞானியின் உணர்வுடன் ஒன்றச் செய்யும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றச் செய்யும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

அகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகள்

 

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகி மின்னல்களாகப் பாய்கிறது.

தாய் கருவிலே விஷத்தை வென்றிடும் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அத்தகைய மின்னலை எல்லாம் உற்றுப் பார்க்கின்றான்.
1.பார்க்கும் பொழுது அதிலுள்ள விஷக் கதிரியக்கங்களை அடக்கி
2.அதை எல்லாம் ஒளிக்கதிர்களாக மாற்றும் தன்மையாக
3.தன் உடலில் ஒளியான அணுக்களாக மாற்றும் தன்மை அவனுக்குள் உருவாக்குகின்றது.

இதைப்போல சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையும் அந்தக் குழந்தை உற்றுப் பார்க்கின்றது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதற்குள் நட்சத்திரங்கள் எப்படி உருவானதோ…? அகண்ட அண்டங்கள் எப்படி உண்டானதோ..? இந்த உணர்வெல்லாம் சூரியனுக்குள் உண்டு.

இதன் வரிசைப்படுத்தி வந்த உண்மைகளை எல்லாம் அந்த நட்சத்திரங்களின் சக்திகளை இவன் நுகரப்படும்போது அந்த உணர்வின் எண்ணங்கள் (ஞானமாக) வருகின்றது.

ஒரு குளவி மண்ணைப் பிசைந்து கூட்டைக் கட்டி அதற்குள் புழுவை எடுத்து வந்து வைக்கின்றது. புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. எத்தனையோ உணர்வுகள் கலந்து தான் அந்த விஷத்தின் தன்மை குளவிக்குள் வருகின்றது.

குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டிய பின் அந்த விஷம் புழுவின் உடலுக்குள் சென்று அந்த விஷத்தின் தன்மைகள் கொண்டு துடிப்புகள் அதிகமாகிறது.

அதுவே புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இந்திரீகமாக மாறி அது இந்திரலோகமாக மாறி அந்தப் புழுவின் தன்மை குளவியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் இவன் அறியவில்லை என்றாலும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் வரப்படும் பொழுது நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்களையும் மற்றவைகளையும் இவன் அடக்குகின்றான்.

உதாரணமாக பல நட்சத்திரங்களின் சக்திகள் வந்தாலும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியைச் சூரியன் கவரும்பொழுது அடுத்த நட்சத்திரத்தின் சக்தி அங்கே வந்தால் இந்த இரண்டும் மோதும் போது எர்த் (EARTH) ஆகின்றது.

அப்பொழுது பளீர்…” என்று மின்னுவதும் அந்த உணர்வுகள் மற்றதோடு ஊடுருவதும் அதன் அலைவரிசையில் ஊடுருவும்போது மரங்களில் விழுந்தால் அதைக் கருக்கி விடுகின்றது.

இந்த மின்னல்கள் அடுத்து பூமியின் ஈர்ப்புக்குள் அதிகமாகச் சேர்த்தால் இது கொதிகலனாக மாறுகின்றது.

அணுவைப் பிளந்து அதன் வீரியத்தன்மை கொண்டு அணு உலைகளில் (ATOMIC POWER STATION) வைக்கும்போது அது எவ்வளவு வேகமாக வெப்பத்தை உண்டாக்குகின்றதோ இதைப்போலத்தான் இந்த மின்னல்கள் ஊடுருவி அந்த பூமியின் அடியில் சென்றபின் கொதிகலனாக மாற்றுகின்றது.

வெப்பத்தின் துரிதத்தால் பாறைகள் உருகுகின்றன. உருகிய பின் அந்தப் பாறைகள் கீழே இறங்கப்படும் போது நிலநடுக்கம் வருகிறது. அந்த ஒரு நொடிக்குள் எல்லாம் கூழான பின் இதில் அடங்கி விடுகின்றது.

அதே மின்னல்கள் கடல்களிலும் பாய்கிறது. கடல்களில் உள்ள ஹைட்ரஜன் அது உப்புச்சத்து கொண்டது. அதிலே மின்னல்கள் பரவினால் இது பூராமே அடக்கி மணலாக மாற்றுகின்றது. கதிரியக்கத் தனிமங்களாக உருவாகிறது.

1.இதைப் போலத்தான் அகஸ்தியனுடைய பார்வையில் மின்னல்கள் பட்டாலும்
2.விஷத்தை ஒடுக்கும் சக்தி இவனுக்குள் இருக்கும்போது
3.அந்த உணர்வின் தன்மை கடல் எப்படி தனக்குள் அடக்கியதோ
4.இதே உணர்வின் அணுவாக இவனுக்குள் இவனுக்குகந்த அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
5.அவன் இளமை பருவத்தில் அவனுக்குத் தெரிந்தல்ல.

அவனுடைய சந்தர்ப்பங்கள் அவன் அத்தகைய நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றான். அப்படி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றோம் என்றால் நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

நாம் ஞானத்தின் சக்தி பெறுவது என்பது ஆத்மாவிற்குத் தான்… செல்வத்திற்கும் புகழுக்கும் அல்ல…! – ஈஸ்வரபட்டர்

 

தியான முறையும் ஞான முறையும் பெற்றிட நம்மை நாம் பல பக்குவ நிலைப்படுத்திச் செயல் கொண்டு நாம் அந்த ஞானம் பெறுவது என்பது நம் ஆத்மாவிற்குத்தான்…!
1.நம் எண்ண்ம் செயல் எல்லாமே… “நமக்குச் சாதகமாக”
2.மற்றைய நிலையிலிருந்து தப்பி ஒதுங்கிப் பெறுவதல்ல தியானமும் ஞானமும்.

நம் எண்ணம் செயல் உடல் அனைத்துமே சத்தியம் கொண்டு தூய்மையுடன் நாம் உள்ளோம். மற்றவர்களுக்கு அந்த நிலை தெரியவில்லை என்று எண்ணினாலும் நமக்கு அந்த “நான்” என்ற நிலை வந்து விடுகின்றது.

நம்முள் பல நற்சக்திகளையே ஈர்த்துச் செயலாக்கி வருகின்றோம் என்ற நிலையில் நாம் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள ஆத்மாக்களின் நிலையுடன் நம்மை நாம் ஒன்றித்தான் செயல் கொண்டிடல் முடியும்.

நம் உடலைத் தினமும் நீர் விட்டுக் குளித்துத் தூய்மைப்படுத்துகின்றோம். நம் உடல் தூய்மையாய் உள்ளதென்று நாம் வெளியில் செல்லாமல் இருக்க முடியுமா…?
1.வெளி உலகில் கலந்துள்ள காற்றும் மண்ணும் நம் மேல் படத்தான் செய்யும்
2.மீண்டும் மீண்டும் இவ்வுடலைத் தூய்மைப் படுத்திக் கொள்கின்றோம்.

புற உலகின் அழுக்கு நம் மீது வேண்டும் என்றே படிகிறதென்று நாம் வெளியில் செல்லாமலே இருக்க முடியுமா…?

அதைப்போல் நம் எண்ணம் ஒரு நேர்கோடான சத்தியச் செயலைச் சார்ந்துள்ள நிலையில் நம்மைச் சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களின் நிலையும் நம்மை ஒத்திருந்தால்தான் நாம் அதனுடன் கலந்து வாழ்ந்திட முடியும்.

1.தீய பழக்க வழக்கம் கொண்டவனை விட்டு நாம் விலகித்தான் வாழ வேண்டும் என்று நம் எண்ணத்தில் எண்ணினோமானால்
2.நம் எண்ணத்தில் உள்ள அச் சத்திய நேர்கோட்டின் பிடிக்கு நாம் அடிமைப்பட்டு
3.”நான்” (நான் ஒழுக்கமானவன்) என்ற வைராக்கிய ஆத்மாவாகத்தான் நாம் இருந்திட முடியும்.

நாம் பெற்ற சக்தியை நமக்கே சொந்தமாக்கி நம் ஆத்மாவிற்கு எத்தனை செல்வங்கள் சேமித்தாலும் அதுவும் “நான்” என்ற சக்தியாகத்தான் இருந்திடுமப்பா.

1.நான்… எனது… என்ற அணுவளவு எண்ணத்தில் பிற பேராசை பற்று இருந்தாலும்
2.ஆண்டவனை பூஜிக்கும் பற்றானாலும் சரி
3.தான் கற்ற வித்தையின் பலனை எண்ணினாலும் சரி அந்த நிலை அந்த நானாகிவிடுகின்றது.

பல ஆத்மாக்கள் இயற்கையிலேயே பல உன்னத சக்தியைப் பெற்று வாழ்கின்றனர்… மருத்துவம், விஞ்ஞானம், இயல், இசை, நாடகம், ஓவியம், விவசாயம் எல்லாவற்றிற்கும் மேன்மையான சமையல் திறன்.

இப்படி ஒவ்வோர் ஆத்மாவும் இயற்கையிலேயே உன்னத சக்தி பெற்றிருந்தாலும் அச் சக்தியைத் தன் நலம் நாடாமல் பொருள் ஆசையின் நிலையில் அத் திறனை வளரவிட்டால் “நான் என்ற நிலையில்தான்… அவர்கள் பெற்ற பயன் சிக்குண்டு விடுகின்றது…!”

பொருள் இல்லாவிட்டால் எப்படி ஜீவிதம் கொள்ள முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

பொதுவான நிலைப்படுத்தி அவரவர்கள் பெற்ற பயனைச் செயலாக்கித் தேவை என்ற அடிப்படையில் ஜீவிதத்திற்குகந்த பொருள் நிலை பெற்றுத்தான் அஜ்ஜீவன் நடக்கும்… உண்மைதான்.

ஆனால்… அதற்காக ஆண்டவன் அருளில் பெற்ற அதி பொக்கிஷ செயல் திறமையை நாம் பேராசைக்கு அடிமைப்பட்டு உழலும் காலமாய் இன்றைய கால நிலை உள்ளது.

தேவை என்ற அடிப்படையில் பொருள் சேமிக்கலாம்…!
1.அதி தேவையாக்கி நம்மையே நாம் அதற்கு அடிமைப்பட்டு சேமிக்கும் பொருளினால்தான்
2.இன்றைய இவ்வுலகமே இப்பேராசைப் பிடிக்கு அடிமை கொண்டு வாழ்கின்றது.

காற்றே தான் கடவுள்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காற்றேதான் கடவுள்…! காற்றையே தெய்வமாக்கி நாம் எடுக்கும் சுவாசத்தில் கலக்கவிடுங்கள் என்றெல்லாம் இப்பாடநிலை உணர்த்திய நாள் தொட்டே செப்பி வருகின்றோம்.

ஆனால் மனித ஆத்மாக்களுக்கு…
1.மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதையும் சர்க்கஸில் ஆடும் கோமாளியின் லீலையில் மகிழவும்தான் பேராவல் உள்ளது.
2.மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை மந்திரக்காரன் செய்கிறானே…
3.அதில் உள்ள உண்மை என்ன…? என்று அறியும் நிலை கொண்ட எண்ணமுடையோர் மிகச் சிலர் தான்.

இவ்வுலகமே வேடிக்கையான உலகம் தான்.

உலகம் என்பது இவ்வுலகின் ஜீவ ஆத்மாக்கள்தான்.
1.இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே
2.இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை உணர்த்திட முடியும்.

சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று மண்டலம்) அம்மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.

நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காற்று மண்டலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் அததற்குகந்த அமிலக் காற்று மண்டலமுண்டு.

நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொஞ்சம் கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமுண்டு. அனைத்திற்கும் பொதுவான “சூனிய மண்டலம்” என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று. அதன் தன்மை வேறு…! மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு.

இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப் பொருள் வளர அதற்கு மூலப் பொருளாய் இவ் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப் பொருள்கள் வளர முடியும்.

இந்த இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் சிங்கத்திற்கும் நாய் நரி பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.
1.நம் முன்னோர்கள் வாழை இலையில் சூடான உணவைப் படைத்து
2.நம்மை உணவாக உட்கொள்ளச் செய்ததன் இரகசியம் இது தான்…!

இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப்பொருளையே செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையினால் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின் சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன் ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியில் இருந்து எடுக்காமலும் பணம் தந்து வாங்காமலும் செய்விக்க முடியும்.

அந்தத் தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள் இப்பேராசையில் சிக்கிடாமல் இருப்பதற்கே.

தன் ஆத்மாவையே… தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.

1.நம்முள்ளேயே அனைத்துப் புதையலும் உள்ளன…
2.அழியாச் செல்வப் புதையல் இச்சக்தியை உணர்ந்து
3.நம் சக்தியை வளரவிடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா…!

வெப்பம் காந்தம் விஷம் – இராமா சீதா இலட்சுமணா

 

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் விஷமும் மும்மலம் என்று சொல்வார்கள். அதிலே… தான் நுகர்ந்த மணம் என்ற நிலை இருந்தாலும் அந்த சுவை – சீதா ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.

திடப்பொருளாக மாறும்பொழுது அதனுடைய மணம் ஞானம் சரஸ்வதி என்றும் இதிலே இணைந்த சக்தியை சீதா என்றும் அதன் உணர்வின் தன்மை இந்த மூன்று நிலைகள்
1.வெப்பம் தனக்குள் உருவாக்குவதும்
2.காந்தம் தனக்குள் அரவணைப்பதும்
3.விஷம் இயக்கும் தன்மை வரப்படும்பொழுது
4.நாராயணன் (சூரியன்) லட்சுமி நாராயணனாக அங்கு உருவாகிறது.

சூரியன் விஷத்தின் தன்மையைப் பிரித்த பின் இங்கே அந்தக் காந்தம் இதை மீண்டும் கவர்ந்து கொள்ளும் போது லட்சுமணா. அதே சமயத்தில் சூரியன் மோதி இந்த உணர்வின் தன்மை வெப்பமாகும்போது நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு ஆகின்றான்.

ஆனால் அதனுடன் இணைந்த நிலையோ லட்சுமி ஆகின்றது. ஆக விஷ்ணு லட்சுமி இரண்டும் இணை சேர்க்கப்படும் பொழுது இதனால் பிரிக்கப்பட்ட விஷத்தின் தன்மை தனக்குள் இருக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை தான் லட்சுமணா.

1.ஆக… இந்த வெப்பம் அந்த இராமனாக எண்ணத்தின் நிலை உருவாக்கும் நிலைகள் பெற்றது.
2.காந்தம் தனக்குள் அந்த மணத்தை சீதா அந்தச் சுவையின் தன்மை தனக்குள் இணைத்து மற்றதை வளர்க்கும் தன்மை கொண்டது
3.விஷம் இலட்சுமணா இந்த உணர்ச்சியைத் தூண்டும் (மணத்தை) வல்லமை பெற்றது.

இப்படி மூன்று நிலைகள் கொண்டது.

நுகர்ந்த மணம் ஞானம் என்றாலும் சீதா என்றாலும் நான்காவது நிலை அடைகின்றது. இதனுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது இயக்கச் சக்தியாக மாறும் பொழுது காயத்ரி.. முழுமை பெறுகின்றது.

அதாவது இந்த அணு எதனைக் கவர்ந்ததோ அதன் வலுவாக அது மற்றொன்றுடன் புகப்படும்போது அதனின் செயலாக்கமாக மாற்றும் ஆகவே புலனறிவு ஐந்து என்ற நிலை.

சூரியன் (ஆதிசேஷன்) விஷத்தின் துணை கொண்டு விஷத்தின் உருவால் உருவாக்கப்பட்ட நிலைகள் ஐந்து புலனறிவாக ஐந்து நிலைகளில் இது உருவாக்குகின்றது. இதே விஷத்தின் இயக்க தொடராக…!

இந்த நிலையைக் காட்டுவதற்குத் தான் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டுகின்றார்கள்.

இதனின்று வெளிவந்த உயிரின் தன்மைகள் பல விஷத்தன்மை கொண்ட தாக்குதலில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உயிரின் துடிப்பின் நிலை வரப்படும்போது “உயிரணுவாக மாறுகின்றது…”

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை என்பது ஆண்பாலை உருவாக்கும் தன்மை பெற்றது. ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால் ஒன்றுடன் இணைந்து ஒன்றை வளர்க்கும் திறன் பெற்றது

இயக்கச்சக்தி ஒன்றுடன் ஒன்று மோதும்போது… அதாவது உராயப்படும்போது பூமி சுழற்சியாகி அதனால் வெப்பமாவதும் ஒரு பக்கம் ஈர்த்து தனக்குள் ஒன்றை கருவாக உருவாக்கிறது அல்லவா…!

அதைப் போன்று தான் கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் இரண்டு மோதலும் ஏற்படும்போது இந்த மோதலினால் துடிப்பின் நிலை வருவதும் அந்தத் துடிப்பால் தனக்குள் ஈர்க்கும் சக்தியும் பெறுகின்றது

அத்தகைய ஈர்க்கும் சக்தி பெறுவதற்கு…
1.கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும் வியாழன் கோளால் உருவான நிலைகள் இதனைத் தாக்கப்படும்பொழுது
2.துடிப்பின் நிலைகளாகி மும்மண்டலங்களாக மாறுகின்றது.

ஒன்று விஷம்… ஒன்று ரேவதி நட்சத்திரம் வளரும் பருவம் பெற்றது… மற்றொன்று உறையும் தன்மை பெற்றது. இந்த மூன்று நிலைகள் பெற்று துடிக்கப்படும்போதுதான் இயக்கமாகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு எடுத்தாலும் இன்று பெரும் பெரும் சக்திகளை இயக்கப்பட வேண்டுமென்றால்
1.மூன்று நிலைகள் கொண்ட மூன்று வயர்களை வைத்துத்தான் இயக்குவார்கள்
2.இதைச் சக்தி வாய்ந்த அழுத்தம் (THREE PHASE CURRENT) என்று கூறுவார்கள்.

அதைப் போலத்தான் இந்த உணர்வின் சத்து மூன்றும் சக்தி வாய்ந்த அழுத்தமாக எதனையும் தனக்குள் ஜீரணித்து அணுவின் தன்மை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

துடிப்பால் ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் தன்னுடன் இணைத்து உணர்வின் தன்மை தனக்குள் ஒளிக்கதிராக மாற்றும் திறன் பெறுகின்றது.

ஏனென்றால் பௌதீக நிலையில் உங்களுக்குள் விளக்கத்தைக் கொடுத்து உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

அகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகள் அணுக்களாக நமக்கு முன் உலாவிக் கொண்டுள்ளது

கடவுள் என்றால் என்ன…? உணர்வு என்றால் என்ன…? என்ற நிலையை
1.தனக்குள் இயங்கும் அணுவின் இயக்கங்களையும்
2.விண்ணின் அணுக்களின் இயக்கமும்
3.மண்ணின் அணுக்களின் இயக்கமும்
4.தாவர அணுக்களின் இயக்கமும்
5.தாவர இனச் சத்தை நுகர்ந்தபின் அணுக்களின் இயக்கமும் என்ற இந்த உட்பிரிவினை எல்லாம் அறிந்துணர்ந்ததனால்
6.அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து வைத்துள்ளது.
1.இன்றும் அது இருக்கின்றது… அது அழியவில்லை அழிந்து போகவுமில்லை.
2.அணுக்களாக உலாவிக் கொண்டுள்ளது நம் பூமியில்…!

இங்கு மட்டுமல்ல… நமது சூரிய குடும்பத்தில் நம் பிரபஞ்சித்திற்குள்ளே அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் விண்ணிலும் சரி இம்மண்ணுலகிலும் சரி இது உலாவிக் கொண்டே உள்ளது.

சந்தர்ப்பத்தால் நமக்குள் நுகர்ந்து அதை பதிவாக்கி விட்டால் அதே நினைவின் எண்ணங்கள் வருகின்றது.
1.அதைக் கவர்ந்து நமக்குள் வளர்க்கவும் முடியும்…வளரவும் முடியும்.
2.மற்றோரை வளர்த்திடவும் முடியும்…! என்று இந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
3.அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்த அந்தச் செயலாக்க உணர்வுகள்.

நான் சொல்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்…. நீங்கள் புரிந்து கொள்வதற்கு. ஏனென்றால் இன்றைய உலகில் கற்றுணர்ந்த உணர்வின் நிலைகளை எழுத்தறிவாக பாட உணர்வுகளைக் கொடுக்கப்பட்டு அதனின் பதிவாக்கங்களாகத் தான் வந்துள்ளது.

ஞானியர்கள் உண்மைகளைக் காட்டியிருந்தாலும் அதன் பின் வந்தவர்கள் தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அவர்கள் மதங்களாக உருவாக்கப்பட்டு அவர்களுக்குகந்த சட்டங்களை இயற்றுகின்றனர்.

ஒவ்வொரு மதமும் தனக்குள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டதை அதைப் படித்து உணர்ந்தால் அவை நமக்குள் கடவுளாக இயங்கத் தொடங்குகின்றது “உள் நின்று அந்த உணர்வுகள்…”

ஆகவே ஒவ்வொரு மதமும் அதற்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைப் பதிவு செய்தாலும்… “அதற்குள் இனங்கள் பல” தான் எண்ணிய உணர்வுகளைப் பதிவாக்கப்படும்போது அது உள் நினறு கடவுளாக நம்மை உருவாக்குகின்றது.

இப்படி மதங்களால் எண்ணங்களை உருவாக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அவைகளை நமது பூமியில் பரவச் செய்துள்ளது. அதுவும் இன்றுள்ளது…!

இருந்தாலும்…
1.அந்த மெய்யை நம்மில் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால்
2.அகஸ்தியன் வழியில் நாம் சென்றோமென்றால் தான்
3.அந்த அணுவின் இயக்கப்பொறியின் ரூபங்கள் எவ்வாறு…? என்ற நிலையை நாம் அறிந்திட முடியும்.

நாம் எதையெல்லாம் பெற்று அந்தந்த உணர்விற்கொப்பப் பரிணாம வளர்ச்சி அடைந்து எப்படி வந்தோம்….? இந்த உணர்வின் கலவையால் நமது உயிர் எவ்வாறு நம்மை மனிதனாக உருவாக்கியது…? உடலுக்குப் பின் ஒளியின் தன்மையை எப்படி அடைய வேண்டும் என்ற நிலையையும் நாம் அறிந்திட முடியும்.

அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு நொடியில் ஜீவிதம் பெற்றுச் சில நிமிடங்கள் வாழ்ந்து மறையும் விட்டில் பூச்சிகளும் உயிராத்மாதான். பல கோடி ஆண்டுகளாய் வாழும் மண்டலமும் (சூரியனும்) ஜீவன் பெற்ற ஜீவ ஆத்மாதான். அதனதன் வளர்ச்சியில் அது அது எடுக்கும் சுவாச நிலைகொண்டுதான் நீடித்து வாழும் பக்குவம் கொள்கின்றது.

பல நாட்களாய் நம் உலகம் கலியின் பிடியில் சிக்குண்டிருக்க இன்றைய நிலையில் மீளச் சொல்வதின் பொருளென்ன…? என்ற வினாவும் எழும்பலாம்.

1.இவ்வுலகிற்காக இப்பூமி நிலைத்துச் செயல் கொண்டிட
2.நல் ஆத்மாக்களின் சக்தி நிலை இருந்தால்தான் இப்பூமி வாழ முடியும்.

இப்பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் நற்சக்தியை ஈர்த்து ஞானம் பெற்று இன்று சூட்சுமத்தில் உள்ள அனைத்துச் சித்தர்களுமே…
1.இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் அவர்களின் சக்தி நிலையை உயிராத்மாக்களின் நிலையில் உணர்த்தி
2.நம் பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான்
3.இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன.

எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி ஓ…ம் என்ற நாதத்தை உயிரணுவில் கலக்கவிடும் சத்திய நிலையை ஒவ்வொரு உயிராத்மாக்களுக்கும் உணர்த்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்கு நற்பயன் தேட எவ்வாத்மாவும் செயல் கொண்டிடவில்லை. கொண்டிடவில்லை என்பதன் பொருள் புரியாமல் உள்ளதின் நிலை.

1.பக்தியையே ஜாதகத்தின் வழியில் காணுகின்றனர்.
2.எதிர்காலம் என்பதனையே இவ்வுலகில் வாழும் இக்குறுகிய நிலைக்காக
3.தாமடைந்த இவ்வுடல் கொண்ட ஜீவ ஆத்மாவைச் சிதறவிட்டு
4.பொருளுக்கும் பதவிக்கும் போற்றலுக்குமே வாழ்நாளைக் கழித்து
5.நமக்குக் கிடைத்த இவ்வாய்ப்பின் நழுவ விட்டே வாழ்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள இக்கால சந்தர்ப்பம் என்பது நம் ஆத்மாவை நற்சக்தியுடன் கலக்கவிடும் பக்குவ நிலைக்காகத்தான்…!

நம் உலகினில் பல அரசியலின் தலைவர்கள் தோன்றித் தோன்றிப் பெரும் புகழும் அழிவும் கொண்டெல்லாம் வளர்ந்து வாழ்ந்தனர்.

உலகையே அடிமைப்படுத்தும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்ந்தாலும் அவ்வாத்மாவிற்குப் பேராசை நிலையின் அதி பற்றிருந்ததினால் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிக்குத் தன் ஆசையைப் பூர்த்தி செய்யப் பிறந்து கொண்டே உள்ளது.

1.திருவள்ளுவர் அரசனாக வாழவில்லை
2.தன் ஆத்மாவையே கவியாக்கி ஞான சக்திச் சொற்களை உலகிற்கு உணர்த்த ஆசைப்பட்டுச் செயல் கொண்டார்.

அவர் ஆத்மா இன்றளவும் அவரின் மனையாளின் ஆத்மாவுடன் ஒன்றியே சூட்சுமம் கொண்டு இன்று உலகமே போற்றும் அத் திருக்குறளில் உள்ளார். அவரின் குறட்பாக்களைப் படிக்கும் ஆத்மாக்களின் எண்ணமுடனே அவரின் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

“பேரானந்த நிலை… தெய்வீக நிலை…!” என்பதெல்லாம் நாம் காணும் இன்றைய மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை…! – ஈஸ்வரபட்டர்

 

உலக சக்தி என்பதைத் தனித்து எதனைச் செப்புவது…?

இன்றைய உலகமே பிம்பத்தைத்தான் உலகமாகக் காண்கின்றது. எப்பிம்பமும் நிலைத்த பிம்பமல்ல.
1.இன்றைய பிம்பம் மாறிவிட்டால் காற்றுதான் (ஆவி)
2.அன்றைய காற்று இன்றைய பிம்பம்.

காற்றில் தான் அனைத்தும் உள்ளன. நீரும் காற்றுத்தான் நெருப்பும் காற்று தான். நீரும் ஆவியாகிக் காற்றுடன் கலக்கின்றது. நெருப்புக் கோளங்களும் எரிந்து ஆவியாகிக் காற்றுடன் தான் கலக்கின்றன.

1.அனைத்து பிம்பமும் காற்று தான்.
2.காற்றே தான் கடவுள்
3.அக்காற்றிலிருந்து ஜீவன் கொண்ட அனைத்துமே கடவுள்தான்.

பால்வெளி மண்டலத்தைக் காற்றாய்க் காண்கின்றோம். அப்பால்வெளி மண்டலத்தில் இருந்துதான் ஆதவனாய் உள்ள சூரியனும் பிறந்தான். பூமித்தாயும் வளர்ந்தாள். மற்ற அனைத்துக் கோளங்களுமே பிறந்து… வளர்ந்து… வாழ்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் காற்றில் கலந்துள்ள அமிலமே நீராயும் நெருப்பாயும் ஒன்றை ஒன்று பற்றியே சுழன்று கொண்டு உள்ளது.

1.இவ்வமிலமே திடமாகி… அத்திடத்தில் இக்காற்று பட்டு
2.அதை ஈர்த்து அது வெளிப்படுத்தி… அந்நிலையிலேயே வளர்ந்து
3.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஒன்றின் அமிலம் மற்றொன்றில் கலந்து
4.அது ஈர்த்து சமைத்து வெளிக்கக்கும் அமிலம் மற்றொரு கலவையுடன் சேர்ந்து… அவை எடுத்து அவை வெளிப்படுத்தி
5.இப்படியே மோதுண்டு மோதுண்டு… ஒன்று உண்டு அதன் கழிவு வெளிப்பட்டு
6.அக்கழிவு அதன் இனமுடன் சேர்ந்து அவை உண்டு அவை சமைத்து வெளிப்படுத்தும் அமிலம் படர்ந்தே
7.ஒன்றுடன் ஒன்று மோதுண்டு மோதுண்டு ஜீவன் கொண்டு
8.ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டு மண்டலமாய் உருப்பெற்று
9.அம்மண்டலம் எடுக்கும் உணவு (சுவாசத்தை) கொண்டு அதன் சக்தி நிலை வளர்ந்து
10.அது வெளிப்படுத்தும் அமிலத்திலிருந்து பல நிலை பெற்று
11.பால்வெளி மண்டலத்தை… இக்காற்று மண்டலத்தை… மையமாய்க் கொண்டு சுழலுவது தான்
12.அனைத்து மண்டலங்களும்… நாமும்… எல்லாமுமே…!

ஆவிதானப்பா அனைத்துமே…!

ஆவியான இக்காற்றில் நிறைந்துள்ள அமில சக்தியைக் கொண்டு நம் ஆத்மாவிற்கு உகந்த அமில சக்தியை நாம் பிரித்தெடுத்து உயர்ந்த ஞான நிலைபெறும் பக்குவ அமிலத்தை உணரும் சக்தி பெறல் வேண்டும்.

இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்களெல்லாம் தனக்குகந்த அமிலத்தையே ஈர்த்து வளரும் பக்குவ நிலை உள்ள பொழுது நாமும் அனைத்துமே ஆவிதான்.

நாமும் ஆவிதான் நம் உடலில் உள்ள அனைத்துமே ஆவிதான் என்பதனை உணர்ந்து நமக்குகந்த ஆவி அமிலத்தை எண்ணத்திலேயே ஒரு நிலை கொண்டிடும் பக்குவ நிலைப்படுத்திட வேண்டும்.

1.பக்குவத்திய முறையில் ஞானத்தின் வழித்தொடர் பெற்று
2.ஆவியாய்ப் பிரியப் போகும் பிம்பத்தை பேராசைப் பொருளாய் எண்ணிடாமல்
3.அனைத்தும் ஆவிதான் என்பதனை உணர்ந்து ஒவ்வோர் உடல் கொண்டு வாழ்ந்து பல எண்ணத்தை ஈர்த்து
4.பல கோடி ஆண்டுகளுக்கு ஜீவன் கொண்ட பல பிம்ப உடல்களை ஏற்று ஏற்று (பிறவிக் கடனாக)
5.நம் ஆத்மாவைப் பெரும் இன்னல் படுத்திடாமல் உயர் ஞானம் பெறும் நல்லுபதேசம் பெற்று
6.சித்தாதி சித்தர்களும்… ஞானாதி ஞானியர்களும்… சத்திய ஞானம் பெற்ற சப்தரிஷிகளும் இக்காற்றில்தான் கலந்துள்ளார்கள் என்ற எண்ணம் கொண்டு இவ்வுண்மையை உணர்ந்து
7.ஆண்டவனுக்கு மத வேறுபாடு இல்லை…. எவ்வாண்டவனை வணங்கினாலும் ஒன்றே என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு
8.உம்மின் அன்பை ஆண்டவனாய் ஒருநிலைப்படுத்தி
9.உம் எண்ணத்தில் ஆண்டவனாய் வரித்துள்ளவரையே ஆண்டவனாக்கி உம் எண்ணத்தில் செயல்படுத்தி…
10.நீவிர் எடுக்கும் சுவாசமெல்லாம் உம் உயிர் ஆத்மாவின் அமில வட்டத்தில் ஞானத்தின் சக்தித் தொடரை ஈர்க்கும் பக்குவ நிலை பெறல் வேண்டும்.

ஞானத்தின் வழித்தொடர் பெற்று விட்டால் நம் எண்ணமும் செயலும் ஞானமாகி அதன் தொடர்பிலேயே பல நிலைகளை நாமும் உணர்ந்திடலாம்.

இத்தொடரின் வழியினால் நம் ஆத்மா நம் நிலையில் அக்காற்றுடன் காற்றாய் செயல் கொள்ளும் பக்குவத்தை நம் எண்ணத்தினால்தான் செயல்படுத்திட முடியும்.

உயிரணுவாய்த் தோன்றிய நிலையிலேயே ஈர்க்கும் நிலைப்படுத்தி அவ்வுயிரணு தோன்றிச் சேமித்துச் சேமித்துப் பழக்கப்படுத்தி பல நிலைகளை ஈர்த்த பின் மனித ஆத்மாவாகப் பல நாள் சேமிப்பின் அமிலத்தை வளர்த்துக் கொண்டுள்ள நிலையில்
1.தன் ஆத்மாவைக் காற்றுடன் கலக்கவிடும் பக்குவத்தை உணர்ந்து செயல்படுத்தினால்
2.ஞானம் என்ன…? சித்தென்ன…? சப்தரிஷிதான் என்ன…? சகலத்திலும் சகலமாய் உள்ள அவ் ஆதி சக்தியுடனே ஒன்றிடலாம்.

“பேரானந்த நிலை… தெய்வீக நிலை…!” என்பதெல்லாம் இன்று வாழ்க்கையில் நாம் காணும் இந்த மாயக் கனவு வாழ்க்கையில் இல்லை…! என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

யாம் சொல்வது வெறும் வார்த்தையல்ல – ஞானகுரு

 

நம் வீட்டில் சிறு குழந்தையாக இருப்பது டி.வி.யைப் பார்க்கும் பொழுது அதில் வரும் பாடலோ ஆடலோ அது மனதில் பதிவாகிறது. மற்ற கலக்கம் இல்லாத நிலையில் தான் குழந்தை டி.வி.யைப் பார்க்கின்றது.

இப்படி அந்த ஆடல் பாடல்களை உற்றுப் பார்க்கப்படும் பொழுது மீண்டும் அதே உணர்வுகள எண்ணத்தால் எண்ணும் போது ஆடிக் காட்டுகின்றது… பாடவும் செய்கிறது.

குழந்தை இதை எல்லாம் தெரிந்து செய்யவில்லை. பதிவானது இயக்குகிறது.. இயங்குகிறது.

இதைப் போல் தான் இங்கே யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் அருள் உணர்வுகளை
1.நீங்கள் கற்கவில்லை என்றாலும்… கற்றறியும் திறன் இல்லை என்றாலும்
2.யாம் சொல்வதைக் கூர்ந்து பதிவாக்கப்படும் பொழுது
3.மீண்டும் இதனின் நினைவாற்றல் வந்தால் இந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாக மாற்றும்.
4.உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் தன்மையும் வரும்.

நான் கற்காதவனாக இருந்தாலும் கல்வியற்றவனாக இருந்தாலும் குருநாதர் எனக்குள் அதைப் பதிவு செய்தார். அந்த உணர்வை நுகர்ந்தேன். அந்த உணர்வின் அறிவாக எனக்குள் அது இயக்கச் சக்தியாக வளர்ச்சி அடைந்தது.

1.அப்படி வளர்ச்சி அடைந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதன் செயலாக்கங்களாக… அதே வழியில்… உங்களுக்குள்ளும் உருவாக்கும் நிலைகள் வர வேண்டும் என்பதற்குத் தான் இதனைச் சொல்வது.

ஏனென்றால் நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை…!

குரு அருளின் உணர்வுகளைத் தான் வாக்காக… ஞான வித்தாக… உங்களுக்குள் அது பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கிடும் மனிதர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும்.

இந்தப் பிரபஞ்சம் அழியும் தருவாயில் இருக்கும் பொழுது
1.மனிதனான நாம் அந்த அருள் ஒளியைப் பற்றுடன் பற்றி
2.இனி பிறவியில்லா நிலை அடைந்து
3.என்றும் ஒளியின் சரீரமாக நாம் மாறிடல் வேண்டும். (இந்தப் பிரப்ஞ்சம் அழிவதற்கு முன்)

அந்த நிலை பெறாதபடி இங்கே வேதனை என்ற உணர்வு கொண்டால் மனிதனல்லாத ரூபமாக மாற்றி நரக வேதனைப்படும் உணர்வின் அணுக்களாக மாற்றிவிடும். நஞ்சின் தன்மை அடைந்து விட்டால் மனித உடலை இழந்து விடுவோம்.

அப்படியே தப்பித் தவறி மனிதனாகப் பிறந்தாலும் “அசுர சக்திகள்” கொண்டு செயல்படும் உணர்வாகத் தான் அது மாற்றும். ஆகவே இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதாவது… மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றாலும் மனித உடலில் வாழும் போது “யார் உணர்வைக் கவர்ந்தோமோ” அந்த உடலுக்குள் சென்று தான் இந்த உணர்வைக் கருவாக்க முடியும்.

ஆனாலும் இப்பொழுது வாழும் இந்த மனித உடலில்… நஞ்சு கொண்ட உணர்வுகளால் நல்ல அறிவின் ஞானத்தை இங்கே இழந்து விட்டால்… அந்த உணர்வின் அணுக்களாகத் தான் நம் உயிராத்மாவிலே விளையும்.

உடலை விட்டுப் பிரிந்தாலும் மீண்டும் பற்று கொண்ட மனித உடலுக்குள் நாம் செல்லப்படும் பொழுது இங்கே விளைந்த உணர்வுகள் அந்த மனிதனையும் வீழ்த்திடும் உணர்வைத்தான் உருவாக்கும்.

அங்கே சென்று குழந்தையாகப் பிறக்காதபடி நஞ்சினை வளர்த்திடும் நிலை கொண்டு… மனித ரூபத்தையே மாற்றிவிட்டு… மாற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு வெளி வந்த பின்
1.மனிதனல்லாத உணர்வின் வலு கொண்ட உடலுக்குள்ளே ஈர்க்கப்பட்டு அதனின் ரூபமாக நம் உயிர் மாற்றிவிடும்.
2.இன்றைய செயல் நாளைய சரீரமாக ஆகும்.
3.ஆகவே இன்றைய நம் செயல் எதுவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு நாமும் ஞானியாக வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

தீய வினைகளிலிருந்தும் சாப வினைகளிலிருந்தும் விடுபடுங்கள்

 

நமது வாழ்க்கையில் எத்தனையோ சலிப்பு பட்டவர்கள் சங்கடப்பட்டவர்கள் கோபப்பட்டவர்களை எல்லாம் பார்த்திருப்போம்… நுகர்ந்திருப்போம். அந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் தீய வினைகளாக இருக்கும். அதே போல் நாம் தாய் கருவில் இருக்கப்படும்பொழுது பெற்ற பூர்வமும் இருக்கின்றது.

அதாவது தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது நோயாளியைப் பார்த்திருப்பார்கள் சாபமிட்டவரைப் பார்த்திருப்பார்கள் எத்தனையோ வேதனைப்பட்டோரையும் பார்த்திருப்பார்கள். அதே சமயத்தில் ஒரு சிலருக்குச் செய்வினை செய்திருக்கின்றார்கள் என்றெல்லாம் கூட கேட்டிருப்பார்கள்.

இந்த உணர்வை எல்லாம் தாய் நுகர்ந்த பின் தாய் கருவில் இருக்கும் பொழுது அது பூர்வ புண்ணியமாக நமக்குள் விளைகின்றது.
1.இது எல்லாம் அந்தந்தக் காலகட்டங்களில் அந்த வளர்ச்சிகள் வரும் போது
2.நம்மை அறியாது எத்தனையோ நோய்களாகவோ மற்ற தீமை செய்யும் இயக்கங்களாகவோ வருகிறது.
3..நாமும் தவறு செய்யவில்லை… தாயும் தவறு செய்யவில்லை
3.நுகர்ந்த உணர்வோ தாய் தந்தையரால் நுகரப்பட்டது தான்.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் விஷத் தன்மையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல பல பச்சிலைகளையும் விஷத்தை முறிக்கும் மூலிகைகளையும் நுகர்ந்தது.

1.அந்த உணர்வுகள் தாய் கருவிலே இருக்கும் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகின்றது
2.விஷத்தை முறிக்கும் சக்திகளை அகஸ்தியன் பெறுகின்றான்.
3.அதன் மூலம் அவன் அண்டத்தையே அறியும் அருள் சக்தி பெறுகின்றான்
4.நஞ்சை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றான்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைப் பெற்றால் தான் முதலிலே சொன்ன… அறியாமல் வந்த எத்தனையோ தீய வினைகளிலிருந்தும் தாய் கருவிலே பெற்ற பூர்வம் என்ற நிலைகளிலிருந்தும் ஒவ்வொருவரும் தப்ப முடியும்.

அந்தச் சக்திகளைப் பெற நாம் இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து… ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து
1.எங்கள் வாழ்க்கையில் அறியாது செர்ந்த தீயவினைகளால் விளைந்த சாப வினைகளால் விளைந்த பாவ வினைகளால் விளைந்த பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த
2.கேன்சர் டி.பி. இரத்தக் கொதிப்பு சர்க்கரைச் சத்து ஆஸ்த்மா வாத நோய் முடக்கு வாதம் சரவாங்கி நோய் போன்ற சர்வ நோய்களும் நீங்கி
3.நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று
4.நாங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற்று எங்கள் இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாகி… தெளிந்த மனமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வும் பெற்று.. பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று… தொழில் வளம் பெருகி செல்வம் பெற்று… அருள் ஞானம் பெருகி அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

கூட்டுத் தியானங்களில் இது போன்று எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பின் எந்த நேரம் எண்ணினாலும் அந்த ஆற்றலை எளிதில் பெற முடியும்.

ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே… ஐக்கியமாகிவிடு ஈஸ்வரபட்டாய குருதேவா – ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு மதத்தவரும் ஆண்டவனை அவரவர்கள் உணர்ந்த நிலையில் உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். அனைத்து ஆத்மாக்களுக்குமே நல்லுணர்வு பெற வேண்டுமென்று அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள்ளும் ஓர் எண்ண நிலை ஓடிக்கொண்டுதான் உள்ளது.
1.ஆனால் அவரவர்கள் வளர்ந்த நிலையினால்
2.அந்த நல் உணர்வுகளைச் செயல்படுத்த முடியவில்லை.

பல காலமாய் நல்லுணர்வு கொண்ட சப்தரிஷிகளும் பல மகான்களும் எண்ணங்களில் பக்தியைச் செலுத்தியும் இன்றளவும் செயல் கொண்டுள்ளார்கள்.

ஆனால் இம் மகான்கள் எல்லாம் ஏன் பிறப்பில் வந்து செயலாக்குவதில்லை…?

சப்தரிஷியாய் சகலத்துடன் கலந்திட்ட ஒளி பிம்ப சக்தி பூண்ட ஆண்டவன்களெல்லாம் பிறப்பில் வருவதில்லை. ஏனென்றால் பிறப்பில் வரும் பொழுதே இவ் ஆண் பெண் என்ற இச்சையில்… ஆசையில் உட்பட்டால் அவர்கள் பெற்ற சக்தி தடைப்படுகிறது.

1.ஒவ்வோர் ஆத்மாவும் பிறப்பிற்கு வரும் பொழுது
2.முன் பிறப்பு நிலை மறைக்கப்படுவது இந்த இச்சை நிலையினால் தான்.

பிறப்பிற்கு வந்து விட்டால் முன் ஜென்மத்தில் முந்தைய நாட்களில் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும் “பிறப்பு…” என்று ஆசைப்பட்டவுடனே பெற்ற பலன் சிதறுண்டு இவ்வுலக ஆசையில் சிக்குண்டு விடுகிறது. அதனால்தான் எம் மகான்களும் பிறப்பில் வந்து பிறப்பதில்லை.

ஈஸ்வரப்பட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன்.

பதினாறாவது வயதில் ஈஸ்வரப்பட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார். அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார் “பைத்தியக் கோலம் பூண்டு…!”

பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செய்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்த நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளையூட்டி இவ் உலக மக்களின் பேராசையான “தங்கம்” செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாய் உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல் படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம்மால் அடையும் பலனைப் பற்றித் தான் விரும்பினார்களே தவிர
2.அழியாத பொருளான ஆத்மச் செல்வத்தை யாரும் விரும்பவில்லை.

பல இல்லங்களில் ஈஸ்வரப்பட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானத்தைப் போதிக்க முயன்றோம்…
1.எம்மிடமுள்ள வித்தை என்ன…?
2.அதனால் பெறப்போகும் பயனென்ன…?
3.பயன் என்பதையே அழியப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில்தான் வேணுகோபால நாயகனையும் (ஞானகுரு) பிடித்தேன். அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான்.

அஜ்ஜென்ம ஆசையிலிருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடலைக் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான். அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.

மற்ற ஆத்மாக்களாய் இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம். பல இன்னல்களைத் தந்துதான் அவனை ஞானத்தின் வழித்தொடர் அறிய வைத்தேன்.

1.பல காலமாய் இவ் இன்னலில் இருந்த பிறகுதான் அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்
2.பல ஆசை நிலைகளையும் ஊட்டி விட்டேன்
3.இவ்வாத்மாவையே முடித்துக் கொள்ளலாம் (தற்கொலை) என்னும் சங்கட நிலையையும் ஊட்டிவிட்டேன்.

பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வோர் ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கி பல சக்திகளை வெளிப்படுத்தி பல ஆத்மாக்களுக்கு ஞான வழித் தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்த நிலையிலேயே எமக்குச் சிஷ்யனாக்கி… அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம் என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலேயே விட்டுப் பிரிந்தேன். அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது.

ஈஸ்வரப்பட்டரின் உடலில் இருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாய் இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தினேன்.

எம்மைப் போல் உள்ளவர்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு ரூபத்திலும்… மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்க பல செயல்களைச் செய்விக்கின்றோம்.

1.அனைத்து ஆத்மாக்களுமே எமக்கு ஒன்றுதான்…!
2.எம் செயலை வெளிப்படுத்திட உடல் ஆத்மா ஒன்று தேவை.
3.எம் செயலை ஈர்க்கும் ஞானத்தின் சக்தியைத்தான் எம் செயலுக்குகந்த சக்தியாகச் செயல்படுத்த முடியும்.
4.அதன் வழி வருவோர் அனைவரும் அவர்கள் வேறல்ல யான் (ஈஸ்வ்ரபட்டர்) வேறல்ல என்ற நிலையில் ஐக்கியப்பட்டே
5.எம் செயல் நிலை இவ்வுலகினில நடந்திடும்.

ஈஸ்வரபட்டர் தன்னைப் பற்றிச் சொன்னது

 

“ஈஸ்வரப்பட்டர்…” என்ற நாமமுடைய சூட்சும நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய…
1.எம் நிலையென்பது ஈஸ்வரப்பட்டர் என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் “யாம் செயல் கொண்டதையும்…”
2.எம் சக்தி நிலையை எந்த நிலையில் உணர்த்தி வருகின்றோம் என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசையுண்டு.

கர்நாடக மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில் பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம் அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம் அங்குள்ள குடும்பங்களின் நாமம் எல்லாமே ஈஸ்வர நாமத்தை முதன்மை பெற்று உள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வி அறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன்.

கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் அவ்வாண்டவனே அனைத்தும் என்ற நிலையில்… எண்ணம் குன்றி… ஜீவதித்திற்கு வழியறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில் என் உடலை ஒரு மகான் ஏற்றுக் கொண்டார். என்னை என்பது
1.பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
2.அந்த உடலை விட்டு நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் மீண்டும் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
3.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி…
4.எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம். வந்தோம் என்பதின் பொருள் புரிந்ததா…?

என் உடலை ஏற்ற அம்மகானின் செயல் நிலை வெளிப்படும் நிலையிலிருந்து “நான் வேறல்ல அம் மகான் வேறல்ல…” என்ற நிலையில் அம்மகானேதான் எல்லாமில் எல்லாமாய்ச் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான். இவ்வுடலை ஏற்றுச் செயல் கொண்டார்.
1.இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
2.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்…. அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்…!

மகான்களின் நிலையெல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இப்பூமியில் இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய்ச் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலைபெற்ற மகான்களெல்லாம் அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் ஒவ்வொரு ரூபத்தில் இன்றளவும் வெளிபடுத்திக் கொண்டேதான் உள்ளனர்.
1.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான்
2.அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே… அருளைப் பாய்ச்சி அந்த அருள் வழியில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம்… அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி… இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.

முருகா…! என்ற அந்த நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார் போகர்.

ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்கள்.

1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2.அந்த நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.நாம் வணங்கிக் கொண்டிருக்கும் பல ஆண்டவன்களின் நிலை…!

சாந்த குணம் கொண்டோருக்கு எப்படி இரத்தக் கொதிப்பு வருகிறது…?

சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரின் கோபிக்கும் உண்ர்வுகளைச் சந்தர்ப்பத்தால் காண நேர்கின்றது. அப்பொழுது அவர் வெளிப்படுத்தும் அந்தக் காரமான உணர்வை நுகர்கின்றோம் (சுவாசிக்கின்றோம்).

அவர் வெளிப்படுத்தும் கோப உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் நாம் உற்றுப் பார்த்து அதை நுகரும் போது நம் சுவாசத்திற்குள் வந்து… உயிரிலே பட்டு அந்தக் காரமான உணர்வின் சத்தாக உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் இணைகிறது.

இணைந்து இரத்தத்துடன் கலந்து உடலிலே சுழன்று வரும் பொழுது முட்டையாக மாறி அந்தக் கார உணர்ச்சியைத் தூண்டும் அணுவின் கருவாகின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.

சாந்தமான உணர்வு கொண்டு நாம் இருக்கப்படும் போது அந்த வேகத் துடிப்பு வருவதில்லை. ஆனால் அந்தக் கோபித்தோரின் உணர்வை நுகர்ந்த பின் அது ஓமுக்குள் ஓம் ஆகி சாந்த உணர்வுகளுக்குள் எதிர்மறையாகத் தாக்குகின்றது. துடிப்பு அதிகமாகின்றது… உணர்ச்சி வசப்படுகின்றோம்.

1.இயல்பாக ஒரு கடினமான பொருளை வைத்து மற்றொன்றோடு தாக்கப்படும் பொழுது
2.அங்கே அந்த வெப்பம் உருவாகின்றது
3.அந்த உணர்ச்சியின் வேகத்தினால் வலியும் வேதனையும் அதிகரிக்கின்றது.

இதைப் போன்று தான்
1.அந்த வேகத்தின் உணர்வுகள் (கோபம்) நம் சாந்த உணர்வில் தாக்கப்படும்பொழுது
2.இந்த அணுவிற்குள் ஊடுருவி இது அணுவின் தன்மை அடைந்து
3.அந்தச் சாந்தத்தை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
4.ஓமுக்குள் ஓமாகி மாறி அதனை இது அடக்கும்
5.அதற்குள் இது அடங்கி சாந்தத்தின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.

ஏற்கனவே இருக்கும் சாந்த குணமும் சாந்த எண்ணங்களும்… “தன்னை வளர்க்கும் தன்மை இழந்து…” இந்தக் காரத்தின் உணர்வை இதற்குள் வளர்க்கப்படும் போது அதற்குள் நாம் பார்க்கும் இனத்தை எல்லாம் (மற்ற குணங்களை) அது அடக்கிவிடும்.

ஓமுக்குள் ஓ…ம்… ஓமுக்குள் ஓ..ம்… ஓமுக்குள் ஓ..ம்…! என்ற நிலைகளில் இந்தக் கார உணர்வுகள் இதற்குள் ஒடுங்கி ஒடுங்கி ஒடுங்கி வருகின்றது. நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

இப்படி நல்ல மணத்தை உருவாக்காத நிலைகள் கொண்டு வரப்படும்பொழுது தான் மனிதனுக்கு இரத்தக் கொதிப்பே வருகின்றது.

இரத்தக் கொதிப்பு வந்தோரை டாக்டர் பரிசோதித்தால் அவரின் துடிப்பின் நிலையும் கொதிக்கும் நிலையும் இரத்தத்தில் அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.

நேரடியாகச் சுவாசித்திருந்தாலும் சரி அல்லது வேடிக்கை பார்த்திருந்தாலும் சரி அதை நுகர்ந்தால் இது போன்று ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.அதைத் தூய்மைப்படுத்துவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுத்து
2.அடிக்கடி உங்கள் இரத்தங்களில் அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துத் தூய்மைப்படுத்தும்படி சொல்கிறோம்.

அனைத்திலும் இருக்கும் உயிரே கடவுள் என்று ஏன் சொல்கிறோம்…? – ஈஸ்வரபட்டர்

நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களையும் நம் வசப்படுத்தி நல் அணுக்களாய்ச் செயல் கொள்ளும் பக்குவம் பெறல் வேண்டும் என்று ஏற்கனவே சொன்னேன்.

சுகம் துக்கம் சஞ்சலம் சாந்தம் சகலமும் கலந்த நிலைதான் ஒவ்வொரு மனித ஆத்மாவின் வாழ்க்கையிலும் நடை பெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் நம் உடலுக்குகந்த அமிலத்தன்மை பெற்றுள்ளோம் என்பதல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மனித ஆத்மா பெற்ற நிலையிலிருந்தே அவ்வாத்மாவுக்குகந்த
1.எண்ண சக்தியின் சுவாசத்திலிருந்துதான் மனிதனின் உடல் உறுப்புக்களும் அவ்வுடலின் பிம்பமும் அவ்வுடலின் வண்ணமும் அமைகின்றன
2.எண்ணத்தைக் கொண்டு எடுக்கும் சுவாச நிலைக்கொப்பத் தான் உடலின் பிம்ப நிலையும்
3.அதற்குகந்த அமில சக்தியின் செயல் கொண்டு சேமித்த எண்ணத் தொடரின் நிலைகளும் அவ் உடல் பெறுகின்றது.

மேல் நோக்கிய சுவாசம் கொண்ட தாவர இனங்கள் அவற்றுக்குகந்த ஆகாரத்தைச் சுவாசமாய் மேல் நோக்கியே சூரிய வெப்பத்திலிருந்து இக்காற்றினில் கலந்துள்ள தனக்குகந்த ஆகாரத்தை ஈர்க்கிறது.

அப்படி ஈர்க்கும் தருவாயிலேயே ஒரு நிலை கொண்ட தனக்கு வேண்டிய ஆகாரத்தை மேல் நோக்கிச் சுவாசித்து ஆவியாக்கி ஈர்த்து அவ் ஆணிவேரின் நிலைக்குப் படரவிட்டு பூமியில் வேரினுள் சேமித்துக் கொள்கின்றது.

மேல் நோக்கிய சுவாசம் பெற்ற தாவரங்களின் நிலைக்கொப்ப சக்தி நிலை ஜீவ ஆத்மாக்களுக்கு இல்லை.

நாம் உண்ணும் உணவிலிருந்து அவ்வுணவே அமிலமாகி அந்த அமிலமே நம்மை வளர்க்கின்றது. நம் எண்ணமும் இவ் அமிலத்துடன் கலந்து செயல் கொள்கின்றது.

நம் எண்ணமும்… அந்த அமிலத்துடன் கலந்து செயல் நிலை கொள்ளும் பக்குவம் மேற்கொள்ள… நமக்கு என்று நம் சக்தியை எந்த எண்ணத்தின் சக்தியுடைய ஞானம் பெறும் நிலை எய்துகின்றோமோ அத் தொடர் பெற்றிட நம் எண்ணத்தைச் சமமாக்கினாலன்றி எந்த நற்சக்தியின் வழித்தொடரை அடைவதும் சிரமம் கொள்கின்றது.

1.நம் ஆத்மாவை நாம் நற் ஜெப சக்தியின் வழி பெற்றிட
2.நம் ஆத்மாவும் அப்பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை எய்திட
3.நாம் பக்குவ நிலை கொள்ளும் தருவாயில்
4.நம் நிலையைக் கண்டு ஏளனம் செய்பவரின் எண்ணத்தையும் புகழ்பவரின் எண்ணத்தையும் நம் எண்ணத்துடன் மோதவிடலாகாது.

ஞானத்தின் வழித்தொடர் பெற்றபின் சலிப்பு நிலையையும் சங்கட நிலையையும் பேராசை நிலையையும் நம்மை நாமே ஆட்படுத்தி கொண்டிடலாகாது.

1.பலருடன் கலந்து வாழ்ந்திட முடியவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சும்
2.நாம் சென்றிடும் சத்தியத்தின் வழிக்கு உகந்ததல்ல.

ஞானம் பெற்று நற் சக்தியை ஈர்த்தே சித்து நிலை பெறுவதற்கு இவ்வெண்ணச் சிதறலை மாற்றியே சமமெய்திடும் முறை பெற்றே நம் ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்னும் உணர்வு பெற வேண்டும்.

1.இவ் வாழ்ந்திடும் குறுகிய காலத்திற்காக நம் ஆத்மாவுக்கு உகந்த சக்தியைப் பெறாமல் சிதறவிட்டு வாழ்ந்திடாமலும்
2.நம் ஆத்மாவிற்குத் தான் நல் ஞானத் தொடர் பெற்று சத்தியத்துடன் கலக்கப் போகின்றோமே என்ற அந்த “நான்” என்ற நினைப்பும்
3.நாம் பெறும் சத்திய நிலைக்கு உகந்ததல்ல.

அனைத்து ஆத்மாவுடன் கலந்தே… மற்ற ஆத்மாவிடமிருந்து ஒதுங்கிய நிலை பெறாமல்… “நம் ஆத்மாவிற்கு நற்சக்தியைச் சேமித்திடல் வேண்டுமப்பா…!”

1.உண்ணும் உணவும் அவனே
2.உணரும் உணர்வும் அவனே
3.எண்ணக் கலவையும் அவனே
4.எடுக்கும் ஞானமும் அவனே
5.ஞானத்தின் சத்தியமும் அவனே என்பதனை உணர்ந்து
6.இவ்வுடலும் நம் உணர்வும் இவ்வுலகமும் மற்ற எதுவுமே நமக்குச் சொந்தமல்ல.

அனைத்திலும் அனைத்தாக உள்ள அவ்வனைத்தாண்டவனுடன் ஒன்றிடும் பக்குவத்தைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…! அதனால் தான் உயிரே கடவுள் என்று சொல்கிறோமப்பா…!

நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களையும் நல்லெண்ணம் பெறும் சக்தியாக்கிட நம் சக்தியை வளரவிடல் வேண்டும்…!

தீமைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதை விட அதை நீக்குவதற்காக நாம் எடுக்க வேண்டிய அருள் சக்திகளே முக்கியமானது

 

டாக்டருக்குப் படித்தவர்கள் உடல் கூறில் எந்தக் குறைபாடு வந்தாலும் அந்த நோயைக் கண்டுபிடிப்பார்கள். ஸ்கேன் வைத்து அதிர்வுகள் மூலம் பார்ப்பார்கள். அதன் மூலம் உடலிலுள்ள உறுப்புகளையும் பார்க்கின்றார்கள். நாமும் தெரிந்து கொள்கிறோம்.

அதே சமயத்தில் உங்களிடம் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது வைத்திய ரீதியாகத்தான் பேச வேண்டும். அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு உங்களை நீங்கள் அறிய விரும்பினால் உடலின் ஓட்டத்தினை நீங்களும் பார்க்கலாம்.

ஆனால் இது நமக்குத் தேவையற்றது.

என்ன பார்க்கலாம்…? என்றால்
1.என்னவெல்லாம் தெரிகின்றது என்ற நிலையில்
2.சில பேர் எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
3.அப்படிப் பார்க்கும் போது பார்த்த நிலைகள் கொண்டு அங்கிருக்கும் தீமையைத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.

சில பேர் என்ன செய்கின்றார்கள்…?

மந்திரத்தால் பில்லி சூனியங்கள் ஏவப்படுகிறது அதனால் சில விலை உயர்ந்த பொருட்கள் கூட காணாமல் போகின்றது. குடும்பத்திலும் முடக்கங்கள் ஏற்படுகின்றது.

சாமிக்கு (ஞானகுரு) சக்தி இருக்கின்றதல்லவா…! சாமி எங்களுக்கு இதை எல்லாம் சரி செய்து கொடுக்கலாம் அல்லவா…! என்று கேட்கின்றார்கள்.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாச் சக்திகளையும் எமக்குக் கொடுத்தார் என்று சொன்னோம் என்றால் அதை வைத்து “மந்திர தந்திரம் செய்பவர்களை நான் அடக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.

நான் செய்வேன் என்று சொன்னால் நானா…?
1.குருநாதர் உபதேசித்த உணர்வுகளை நான் எடுத்தேன்
2.அந்த உணர்வின் வழிப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை வந்தது.

குருநாதர் ஞான வித்தை எனக்குள் விதைத்தார்… வளர்த்துக் கொண்டேன்.
1.அதே வழிப்படி உங்களுக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதற்குண்டான சக்திகள் அனைத்தும் இந்தக் காற்றில் இருக்கின்றது.
3.அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
4.உங்களுக்குள் தீமையைப் போக்க கூடிய சக்தியாக அது வரும் என்று தான் சொல்கிறோம்.

நான் செய்தேன் என்றால் இதை நான் செய்யவில்லை…! குருநாதர் காட்டிய வழியில் அருளைப் பெருக்கும் போது அது அந்த வழியை உங்களுக்குள் காட்டும். அதன் வழியில் நீங்கள் செல்லலாம்.

ஏனென்றால் ஆரம்பத்தில் சில பேருக்கு இதைச் செய்யும்போது எனக்கு அந்தக் கடவுள் தெரிகின்றது உடலில் இருப்பது எல்லாம் தெரிகின்றது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

காட்சி என்று தெரிந்தாலே எனக்கு எல்லாம் தெரிகின்றது என்று அடுத்தவருக்குக் குறி சொல்வது போல் சொன்னார்கள்.

கடைசியில் வீணாக அடுத்தவர்கள் கஷ்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வம்பிலே போய் மாட்டிக் கொள்கிறார்கள். கஷ்டத்தைத் தான் வாங்கிக் கொள்கின்றார்கள்.

தெரிந்ததைச் சொல்லப்படும்போது இதில் வருவதைக் கழிக்கத் தெரிய வேண்டுமல்லவா…? அது முக்கியம்…!

ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால் அப்படி எடுக்கவில்லை என்றால் அந்த விஷம் இங்கே வந்து விடுகின்றது. அங்கிருக்கும் தீமைகளைத் தான் மீண்டும் தனக்குள் வளர்க்க முடியுமே தவிர நல்லதை வளர்க்க முடியாது.

அருள் சக்திகளைப் பெறும் பொழுது அந்த உணர்வை நாம் நுகர்கின்றோம்…. தெரியச் செய்கிறது. தெரிந்து கொண்டாலும் அந்த தீமைகள் வருவதை அறிகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறர் உணர்வு நுகர்ந்ததை உடனடியாக நீக்க வேண்டும். அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் புகாது விழிப்புடன் இருக்க வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளால் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.அவ்ர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்.
4.அவர்கள் தொழில்கள் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று
6.நம் உணர்வை இந்த மாதிரி அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

தீமை என்று தெரிந்தாலும் தெரிந்து கொண்டேன் என்பதை விட அதை நீக்கும் அருள் சக்திகளை எடுத்து வலுவாக்க வேண்டும். அதைத் தான் அடுத்தவருக்கும் போதிக்க வேண்டும்.

“எல்லாம் அவன் செயல்” என்பதன் உட்பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எல்லாவற்றுடனும் எல்லாமாய்க் கலந்துள்ள அவ் எம்பெருமானின் நிலையில்
1.எல்லாச் செயலும் அவனால் நடக்கப் பெற்று செயல் கொள்ளக் கூடாதா…?
2.இவ் ஏற்றத் தாழ்வும் எண்ண மாற்றமும் எதற்கப்பா…?
3.எல்லாமும் அவனே…! என்றிருக்க எண்ணிய நிலை ஏன் நடப்பதில்லை…?
4.எண்ணமும் அவனே… செயலும் அவனே… எண்ணமும் செயலும் அவனாய் இருக்க
5.அவனே ஏன் செயல் கொள்ளலாகாது…? என்ற எண்ணம் “நமக்குள்ளே…!”

அனைத்துமே பரம்பொருள்தான். அப் பரம்பொருளின் பொருளாய் உள்ள அனைத்திற்கும் ஏற்றத்தாழ்வு நிலை ஏன்…? அன்பாயும் ஆசையுடனும் அறநெறியுடனும் வாழ்கின்றனர் ஒரு சிலர். வாழ்க்கையையே இன்னலில் மூழ்கவிட்டு நரகமாகவும் வாழ்கின்றனர் ஒரு சிலர்.

எல்லாரும் எல்லாமுமாய்க் கலந்துள்ள அப் பரம்பொருளுக்கு ஏன் இம்மாற்ற நிலை…?

பரம்பொருளினால் படைக்கப் பெற்ற எல்லாப் பரம்பொருளுமே அவன் படைப்பில் சக்தி பெறச் செய்கின்றான். அப்பரம் பொருளின் சக்தியில் சக்தி பெற்று… வழித்தொடர் பெறும் பரம் பொருள்கள்… அப்பரம் பொருளிடமே ஐக்கியப்பட்டு… அதன் தொடர்ச்சியில் பல பரம்பொருள்கள் சுழன்று கொண்டே செயல் கொள்கின்றன.

உயிரணுவாய் உதித்து பல மாற்றங்களில் அவ்வுயிரணு செயல்பட்டு அதன் தொடர்ச்சியிலிருந்து உயிர் ஜீவிதம் பெற்று இஜ்ஜீவிதத்தின் தொடரினால் ஜீவ ஆத்மாவாய் ஜீவ சக்தியுற்று இவ் ஆத்மா நிலைபெற்று ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அவ்வாத்ம நிலையில் ஏழு சந்தர்ப்பங்களில்தான் அவ்வாத்மாவினால் நற்சக்தியான சூட்சுமம் கொள்ளும் வழித்தொடரை அடைய முடியும்.

உயிர் ஆத்மா பெற்ற நிலையிலிருந்து சேமிக்கும் அமிலத்தின் தொடர் இவ் ஏழு சந்தர்ப்பத்தைப் பெறும் வழித்தொடர் கொள்ளும் அமில சக்தியை…
1.இவ் ஏழு தொடரில் ஞானத் தொடர் வழியை அறிந்து
2.அத்தொடரையே தொடராக்கி சக்தி கொண்டிட்டால் அந்நிலையில் சித்து நிலை பெற்று
3.இவ்வாத்மாவைச் செயலாக்கும் சக்தியாய் மண்டல உருப்பெறும் நிலை கொண்டு
4.ஒவ்வோர் உயிராத்மாவின் வட்டத்திலும் ஒவ்வொரு மண்டலமாகிடும் பக்குவம் பெற்று
5.மண்டலத்துடனே வளர்ச்சியுற்று அம்மண்டலமே உலகாய்ச் சுழன்று
6.பல உயிரணுக்களை ஈர்த்து வளர விட்டுச் செயல் கொண்டிட முடியும்.

இவ்வுலகில் மட்டுமல்ல பலகோடி மண்டலங்களும் இப்பால் வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள எண்ணிலடங்கா ஜீவசக்திகளும் அப்பரம் பொருளினால் படரவிட்டவைதான்.
1.கொசுவாயும் சாக்கடைத் திரவமாயும் உள்ளவையும் அப்பரம்பொருளின் ஐக்கியம்தான்
2.ஜோதியுடன் ஜோதியாய் எரிந்திடும் கற்பூரமும் அப்பரம் பொருளின் ஐக்கியம்தான்.

அப்பரம்பொருளான அவ் ஆதி சக்தி அனுப்பிடும் உயிரணுக்களில் அவை அவை எடுக்கும் சுவாச சக்தியைக் கொண்டு தான் அவரவர்களுக்கு அமையும் வாழ்க்கை நிலையும்… செயல் முறையும்… வந்திடும்.

விருந்தில் உணவு படைக்கின்றார்கள். பல பதார்த்தங்கள் இருந்தாலும் நம் எண்ண நிலைக்கொப்ப நம் சுவாசம் எதை ஈர்த்து நம் நாக்கு ருசிப்படுத்துகின்றதோ அவ்வுணவைத்தான் நம் எண்ணம் விரும்புகின்றது.

அதைப்போல் நாம் எடுக்கும் அமில சக்திக்குகந்த சுவாசத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் உயிராத்மாவிற்கும் அப்பரம் பொருளின் ஆசியும் கிட்டுகின்றது.

மண்டலமாகவும் சுழல்வது உயிராத்மாதான்… புழுவாக நெளிவதும் இவ்வுயிராத்மாதான். பரமாத்மாவின் வழி பெற்று வந்த இவ்வுயிரணு எடுக்கும் சுவாசம் கொண்டு நடப்பதுதான் அனைத்துமே…!

மண்டலமாய்ச் சுழன்றாலும் மண்டலத்திற்கும் எண்ணமுண்டு சப்தரிஷிக்கும் எண்ணமுண்டு.

பரமாத்மாவின் நிலையுடன் ஐக்கியப்படும் நிலையென்ன…?

சப்தரிஷியாய் சகலத்திலும் ஒளிர்ந்து ஒளியாய்ச் செயல் கொண்டு சூரியனாய் ஒளி பெற்றாலும் அச் சூரியனுக்கும் “தான்…!” என்ற நிலை வந்து விட்டால் கோடி கோடி கோடி ஆண்டாகப் பெற்ற சக்தியும் இழக்க நேரிடும்.

மனித ஆத்மாவாய் இருந்துதான் ஒளியுடன் கலந்திட முடியும். அவ்வொளியின் ஈர்ப்பினால் மண்டலமாய்ச் சுழன்று செயல் கொண்டிட முடியும்.
1.செயலிலேயே வழித்தொடர் பெற்றுச் சூரியனாயும்
2.சூரியனுக்கு மேல் சக்தி பெற்ற பல சூரியனாயும் சுழன்றிட முடியும்.

அனைத்தையுமே செயல்படுத்திடும் அப்பரம்பொருளிடம் ஐக்கியப்படும் சக்தியைப் பெற்றிடும் சக்தியை அப் பரம்பொருளான அவ் ஆதிசக்திக்குத்தான் தெரிந்திடும் அனைத்துமே.

அவரவர்களுக்கு அளிக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டு பல கோடி ஆண்டுகள் வளர்ச்சியுறல் வேண்டும். இம்மனித ஆத்ம உடலிலேயே வளர்ச்சி பெற்றால்தான் நம் ஆத்மா ஒளியுடன் கலக்க முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் மிருக ஜெந்துவாகி மிருகத்திலிருந்து கொசுவாய் புழுவாய் பிறிதொரு உலக மாற்றத்திலிருந்து இவ்வுயிரணுக்கள் உயிராத்மா நிலை பெற எண்ணிலடங்கா ஆண்டுகளாகலாம்.

அச் சந்தர்ப்பத்தில் நம் ஆத்மா எய்தும் நிலையைக் கொண்டுதான் நம் நிலை உயர்ந்திட முடியும். இதனை உணர்ந்தே…
1.பரம்பொருள் என்பது யாது…?
2.அப்பரம்பொருளுக்கென்ன ஏற்றத்தாழ்வு…? (ஓரவஞ்சனை)
3.ஆண்டவன் அளித்த கஷ்டம்…! என்று இந்த வாழ்க்கையை எண்ணாமல்
4.இன்று வாழும் நம் ஆத்மாவை நல் ஞானம் பெறும் நிலையை எய்திட
5.நம் ஆத்ம நிலை எப்படிச் செயல் கொண்டிடல் வேண்டும்…?
6.எப்படி நம் வாழ்க்கை முறை அமைய வேண்டும்…? என்பதனை உணர்ந்து
7.நம் சுவாசம் சத்தியத்துடன் கலக்கும் நிலையினைப் பெறுதல் வேண்டும்.

அதைப் பெறுவதற்குத் தான் இந்த உபதேசமே…!

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் அவ்வாத்மாவின் உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. எவ்வாத்மாவும் தனித்து வாழவில்லை என்பதனை முதல் பாடமாக உணரல் வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் உள்ள உயிரணுக்கள் அவ்வாத்மாவின் எண்ணத்தைப் பல திசைகளில் மாற்றிச் சென்று வாழச் செயல்படுத்துகின்றது.

அவ்வுயிரணுக்களின் ஆசைக்கும் அதனுடைய தூண்டுதலின் சோர்வுக்கும் நம்மை அறியாமலே நமக்குத் தெரியாமலே அடிமைப்பட்டு சிக்குண்டுள்ளோம்.

நம் ஆத்மா ஞானம் பெற்று ஒளி பெறும் நிலையினால் நம் உடலில் குடி புகுந்துள்ள பிற உயிர் அணுக்களுக்கும் நம்மால் விமோசனம் கிட்டும்.
1.நம் உடலிலுள்ள அமிலத்தை ஞானத்தின் அமிலமாக்கி
2.பரமாத்மாவின் சொத்துத் தான் நாம் என்பதனை உணர்ந்து
3.தீய எண்ணப் பேய்க்கு அடிமை கொண்டிடாமல் நம் ஆத்மா செயல்பட்டால்
4.நம்முள் உள்ள பல கோடி உயிரணுக்களும் இவ்வெண்ணத் தொடரின் சக்தியினால் ஒளிர்ந்திடும்.

ஒவ்வோர் உடலிலிருந்தும் ஒவ்வோர் ஆத்மா பிரியும் பொழுதும் அவ்வுடலுடன் கூடிய உயிரணுக்கள் அவ்வுடலில் எடுத்த சுவாசத்தின் வழித்தொடர் கொண்டே இக்காற்றினில் படர்ந்து சுற்றுகின்றது.

இப்பொழுது நாம் வாழும் இவ்வாழ்க்கை உடலில் உள்ள உயிரணுக்கள் இவ்வுடல் காலத்தில் மட்டும் நம் உடலில் ஏறவில்லை.

ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் எண்ணமுண்டு… சுவாசமுண்டு அமில சக்தியுண்டு…!
1.மனித ஆத்மாவின் உடலில் உள்ள இவ்வுயிரணுக்களினால்
2.இம்மனிதனின் எண்ணத்தை அதற்குகந்த ஆசையின் நிலைக்கொப்பத் திசை திருப்பிட முடிந்திடும்
3.நம் ஆத்மா செயல் கொள்ள முதலில் நம் உடலில் உள்ள உயிரணுக்களை எல்லாம் நம் வசப்படுத்திடல் வேண்டும்.

ஓம் ஈஸ்வரா… என்ற எண்ணத்துடன் புருவ மத்தியில் எண்ணி ரிஷிகள் ஞானியர்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகளை அங்கே ஈர்க்கும் பழக்கம் வந்து விட்டால் உயிருடன் இணையச் செய்ய முடியும். ஜோதி நிலை காண முடியும்… ஒளியுடன் ஒளியாகக் கலக்கலாம்.

சுவாசம் உயர்ந்ததாக இருந்தால் தான் மோட்சத்தை அடைய முடியும் என்று மகாபாரதம் காட்டுகின்றது

 

மனிதனின் உணர்வின் இயக்கங்களைப் பார்த்தோம் என்றால் அவன் அப்படிச் செய்கின்றான்… நான் இப்படிச் செய்கின்றேன்…! என்ற நிலைகளில்
1.நான் தான் செய்தேன்…
2.நான் செய்து கொண்டிருக்கின்றேன்…
3.என்னால் தான் முடியும்…
4.இது அனைத்தையும் நான் செய்தேன்…! என்று பலருக்குப் பல உபகாரம் செய்வார்கள்.

இப்படிப் பல உபகாரம் செய்தவர்களின் உணர்வுகள் “நான்…” என்ற உணர்வு வரப்படும்போது இங்கே கௌரவர்கள் ஆகின்றது.

அதே சமயத்தில் சிறிது குறைவானால் “அன்றைக்குச் செய்தேன்… பார்… இன்று என்னை மதிக்கின்றானா பார்…!” என்று இந்தக் கௌரவ போர் வருகின்றது

தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் போது அவர்களைப் பார்த்தவுடனே குருக்ஷேத்திரப் போர். அதை மீறி உடலுக்குள் போனவுடன் மகாபாரதப்போர் ஆகிறது.

கௌரவம் என்ற நிலைகள் கொண்டு எடுக்கும் உணர்வின் தன்மை புலனறிவு ஐந்து வழியாக உள்ளுக்குள் செல்லும்பொழுது பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்.

போர் என்று உடலுக்குள் வரப்படும்போது நமக்குள் இருக்கும் பல அணுக்களுக்குள் மகாபாரதப்போராக மாறுகின்றது. கலக்கமும் பல நிலைகளும் மற்ற நிலைகளும் இரத்தத்திற்குள் நடக்கும் போது மகா போராக இது உடலுக்குள் நடக்கின்றது.

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களின் உணர்வின் நிலைகளையும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பின் உணர்வை சந்தர்ப்பத்தில் எடுத்து வைத்திருக்கின்றோம்.

அப்பொழுது நாம் நல்லது என்று எண்ணப்படும் பொழுது அதனுடைய நிலைகளை கௌரவர்கள் விடுவதில்லை.

ஒவ்வொரு நாளும் இதைப் போல் நமக்குள் கௌரவப் போர் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்க்கலாம்.
1.என் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
2.மனைவி நல்லது சொன்னால்… மனைவி சொல்வதை நான் கேட்பதா…?
3.மனைவி தப்பு செய்து விட்டால் கணவருக்குத் தெரிந்தால் திருப்பிப் பேசுவார் என்று கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.
4.குழந்தை ஒரு தப்பு செய்து விட்டால் அப்பா திட்டுவார் என்றால் இல்லவே இல்லை பொய் சொல்லும்.
5.அதே சமயத்தில் நாம் நல்லவன் என்று பெயர் எடுத்திருப்போம். சந்தர்ப்பத்தில் அறியாமல் தப்பு செய்திருப்போம். கேட்டால் “இல்லவே இல்லை…” என்போம்.

ஆக… தவறை மறக்கும்போது இத்தகைய கௌரவப் பிரச்னை வருகிறது. ஏனென்றால் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை மூடி மறைக்க என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

ஆனால் இது போன்ற உணர்வின் தன்மை வரும்போது கடைசியில் இந்த வேதனை என்ற உணர்வுகள் வரும். இருளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது. வேதனை என்ற போர் முறைகள் வருகின்றது.

கடைசியில் அடிக்கடி வேதனை என்று நம்முடைய எண்ணங்கள் வரும் பொழுது
1.கண்ணும் (கண்கள் – கண்ணன்) பார்வையை இழக்கின்றது.
2.அர்ஜூனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகள் சோர்வடைகின்றது
3.நமக்குள் வலுவான உணர்வுகள் பீமன் என்ற நிலைகள் அழிகின்றது… தாக்க முடியவில்லை.

மகாபாரதப்போர் முடிவில் கண்களை இழந்தபின் அர்ஜூனனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே திருடிக் கொண்டு போகின்றார்கள். அவனால் தடுக்க முடியவில்லை.

கண் பார்வை (கண்ணன்) இழந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பிரித்து காட்டித் தெளிவாக்குகின்றார்கள்.

அர்ஜூனன் எல்லாவற்றையும் செய்தேன் என்பான். கண்கள் இழந்தபின் என்ன செய்ய முடியும்…? கண் இழந்தபின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நிதர்சனமாகவே காட்டுகின்றார்கள்.

கடைசியில் தர்மன் என்ன செய்கின்றான்….?

இது எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்…
1.மோப்பத்தில் அறிந்து கொண்ட உணர்வுகள்தான் எனக்கு எல்லா வகையிலும் வழி காட்டியது
2.நன்மை தீமை என்று எனக்கு அறியச் செய்தது
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அதன் வழியில் தான் எடுத்தேன்…! என்று தர்மன் சொல்வதாகக் காட்டுகின்றனர்.

அவன் யாருக்கு மோட்சத்தைக் கேட்டான்… என்றால் முதலில் தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு என்று தான் கேட்டான். நாம் சுவாசித்த (நுகரும் சக்தி – மோப்பம்) உணர்வின் தன்மைதான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.

1.தீமை நீக்கும் உணர்வு தான் (சுவாசம்) எனக்கு வழிகாட்டியாக வருகின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைக்கு… “அதற்கே அந்த ஒளியாகும் தன்மை வேண்டும்…” என்று
3.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றான்.

யாராவது இதைப் பற்றிச் சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…! எவ்வளவு பெரிய பேருண்மையைக் காட்டியுள்ளார்கள்.

குருக்ஷேத்திரப் போர் நடப்பதும் கௌரவப்போர் உள்ளுக்குள் நடப்பதும் மேல் வலிகின்றது தலை வலிக்கின்றது என்று உடலுக்குள் நடப்பதைக் காட்டி வெளியிலே ஒருவருக்கொருவர் கௌரவப் போர் வந்தாலும் எல்லாம் ஒன்றாக உள்ளுக்குள் நடக்கும்போது மகாபாரதப்போர் என்று வருகின்றது.

நமது கண்களால் எடுத்துக் கொண்ட உணர்வு எண்ணங்களாக உருவாகி அந்த எண்ணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள் நமக்குள் போர் முறைகளாக எப்படி வருகின்றது…?

உணர்வின் இயக்கம் எந்த நிலையில் இருக்கின்றது…? என்று மகாபாரதப்போர் நம் உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்ற நிலைகளையும் மகாபாரதப் போர் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள் ஞானியர்.

ஒன்றே குலம்… ஒருவனே தேவன் – ஈஸ்வரபட்டர்

 

உபதேசம் புகட்டிய நாள் தொட்டே யான் (ஈஸ்வரபட்டர்) உணர்த்திய உயிர் ஜீவன் சுவாசத்தின் வழி பெற்ற எண்ண ஜெபத்தைத்தான் மையப்படுத்தி உணர்த்தி வருகின்றேன்.

இவ்வெண்ணம் செயல்பட அன்பு சத்தியம் இவற்றின் நியதி பெறல் வேண்டும். சத்திய நிலை பெறப் பல ஆண்டுகளாய் வாழ்ந்து வந்த வழியிலிருந்து இச்சத்தியத்தை நிலைநிறுத்தச் சில கடின நிலைகளை ஏற்க வரும் இத்தருணத்தில் அன்பென்னும் ஆயுதத்தினால் தான் செயல்படும்.

1.இவ் அன்பினாலேதான் எச்செயலையும் நிலைநாட்ட முடியும்.
2.அன்பிற்கு அடிமைப்பட்டதுதான் அனைத்துமே.
3.நம்மை அன்பாக்கி அவ் அன்பையே எல்லா நிலையிலும் செயல்படுத்திடல் வேண்டும்.

ஆனால்… நம் அன்பிற்குப் பிரதிபலனை எதிர்பார்த்துச் செயல்கொள்ளும் நிலைதனை அகற்றல் வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் அன்பு செலுத்துகின்றோமே என்ற நிலையில்
2.அவ்வன்பின் பிரதிபலிப்பிற்காக ஏங்கிடும் எண்ணத்திற்கு
3.நாம் செலுத்திய அன்பும் விரயம் கொள்கின்றது.
4.பிறரின் அன்பிற்காக ஏங்காதீர்….!

நம்மையே அன்பாக்கி அவ்வன்பின் சக்தியை அனைத்திலும் செயல்படுத்திடுங்கள். இவ்வன்பு வழியைப் பெற்று விட்டால் சத்திய நிலை ஏற்பட்டுவிடும்.

பிற அன்பிற்கு அடிமை கொண்டும் விடாதீர்…!

“ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…” என்ற சத்திய நியதியைத்தான் இவ்வுலகமே செப்புகின்றது. ஆனால் அதனைக் கடைப்பிடிக்கும் ஆத்மாக்கள் இப்பரந்த உலகில் கோடியில் சிலர் தான்.

மதங்கள் என்ற ரூபப்படுத்தி ஒரே குலத்தைத்தான் அனைவரும் போதிக்கின்றனர். ஆனால் இவர்களே எம்மதம் சிறந்தது…? என்ற வினாவையும் எழுப்புகின்றனர்.

எம்மதமாயினும்… எச்செயலாயினும்… “அவர்கள் வகுத்த சத்திய நியதியைச் செயல் கொள்ளும் சிறந்த நிலையுடையதுதான்… சிறந்த மதம்…”

இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறிஸ்துவ மதமும் தான் இவ்வுலகினில் தனித்தனி நிலையாய்ச் செயல்கொள்கின்றன. இதன் தழுவலில் பல மதங்கள் ஜாதிகள் என்ற ரூபங்கள் வழி பெற்றுவிட்டன.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நெறி முறைகளுண்டு. அதற்குகந்த தத்துவத்தையும் உணர்த்துகின்றனர் “அவரவர்கள் மதம் சிறந்ததென்று…”

எம் மதத்தவரும் தம் மதத்தின் நிலையைத்தான் பெரிதாகப் போற்றி வருகின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் அம் மதம் பிறந்த கால கட்டத்தை உணர்த்துகின்றனர்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற நிலையினைப் பிரித்துத் தனக்குச் சாதகமான வழி முறைகளை வகுத்துக் கொண்டவன் அவனுக்குகந்த தன்மையில் தன் மதத்தை வளர விடுகின்றான்.

இந்து மதத்தில் ஒரே நிலையையே பலவாக்கி வணங்குகின்றனர். இஸ்லாமிய மதத்தில் அவ் அல்லா என்ற ஒன்றே ஆண்டவன் என்ற சத்திய நிலைப்படி அவ்வழி நிலை செயல் கொள்கின்றது. அவர்கள் வழியில் வந்த குர்ஆனின் வேத வாக்குப்படி இன்றளவும் மாறுகொண்ட ஆண்டவனின் ரூபத்தைக் காணாமல் அல்லா என்ற ஒரே கடவுளைக் காண்கின்றனர்.

கிருஸ்து மதத்தில் பரமபிதா என்ற ஜெபத்தை ஜெபித்து அவ்வழித்தொடர் பெற்றாலும் அதனையே சிலர் இரண்டு நிலைப்படுத்திவிட்டனர். அதிலும் தடங்கல் ஏற்பட்டுவிட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலை.

இந்து மத வழிபாட்டில் இராமரின் நிலையை ஆண்டவனாக்கி இராமருக்கு ஒரு மனைவி… ஏக பத்தினி விரதம் கொண்டவர் இராமர் என்று ஒரு காலத்திலும்… கிருஷ்ணருக்குப் பல மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… முருகருக்கு இரண்டு மனைவிகள் என்று ஒரு காலத்திலும்… இந்துமதச் சட்டத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையினையும் உணர்த்திப் பல வழிகளைச் செயல் கொள்கின்றனர்.

ஆனாலும் தன் செயலுக்குகந்த சாதகப்படி…
1.நம் சட்டத்திலேயே பல ஓட்டைகள் வைத்து
2.மனைவி தாம்பத்ய நிலைக்கு உகந்தவளல்ல என்ற நிலையிருந்தால்
3.மறுமணம் புரியலாம் என்றெல்லாம் சாதப்படுத்தி
4.நமக்குகந்த சத்திய நிலையைக் காலப்போக்கிற்குத் தகுந்த நிலையில் நாம் வாழ்கின்றோம்.

இந்து மதத்தின் பிறப்பு நிலையை அறிந்தாரில்லை…!

ஒன்றே குலம் என்ற நிலையில் ஏற்பட்ட மாற்றத்திலிருந்து பிரிந்து சென்று மதமானதுதான் கிருஸ்து மதமும் இஸ்லாமிய மதமும்.

இந்து மதத்தின் நெறி முறையென்ற வழி நிலை சத்திய நிலையில் உணர்த்துவாரும் இன்றில்லை. இந்து மதத்தின் நிலையிலிருந்துதான் பல சித்தர்கள் வெளிப்பட்டார்கள். ஆனால் சித்தர்கள் உணர்த்தியதை உணர்ந்து செயல் கொள்ள இந்து மதத்தாரின் எண்ணங்கள் கூடிச் செயல்படுத்தவில்லை.

மதங்களில் சிறந்தது எது…? என்பது எம்மதமாயினும் “அச்சத்திய நியதியைக் கடைப்பிடித்துச் செயல்படுமாயின் அதுவே சிறந்தது…”

1.மதம் என்ற பிரிந்த எண்ணத்திற்கே நம் எண்ணத்தை அடிமை கொள்ளாமல்
2.எல்லாம் ஒன்றே… ஒருவனே தேவன்… அத்தேவனின் சக்தி புத்தர்களாய் சகலத்துடனும் கலந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

நோய் வராது தடுக்கும் வழி

 

நாம் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து இன்னல் பட்டுத் தான் மனிதனாக வந்துள்ளோம். இந்தச் சரீரத்திலும்… வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களிலிருந்து விடுபடும் உணர்வைத் தான் நாம் எடுக்க வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகப் பேசுகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம்.

அதிலே ஒருவன் மற்றவனைச் சாபமிட்டு “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்று சொல்கிறான். அதை நாம் கூர்ந்து பதிவாக்கினால் அவன் சொன்ன உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அந்த உணர்வுகள் உமிழ்நீராகும் போது நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து அது இரத்தமாக மாறுகின்றது. உடல் முழுவதற்கும் போகின்றது.

1.அந்தக் கரு முட்டை… (நாசமாக வேண்டும் என்ற வினை – வித்து) எங்கே போய்த் தேங்குகின்றதோ அந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு
2.ஒரு தட்டான் பூச்சி பூக்களில் முட்டையிட்ட பின் பல பல பட்டாம் பூச்சியாக வருவது போல்
3.நம் கல்லீரலிலோ நுரையீரலிலோ இதயத்திலோ அந்த அணுக் கரு போகப்படும் போது
4.இதயம் வடிகட்டினாலும் ஒரு முட்டை போனாலும் போதும்
5.அந்த இடத்தில் வீக்கமாகி இரத்தம் மாசுபடுகின்றது.

அப்பொழுது அந்த அணுவின் மலம் பட்டவுடன் இருதயத்தில் போய் உறைந்து விடுகின்றது. அப்புறம் படக்…படக்… நெஞ்சு வலி வரத் தொடங்குகிறது.

நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றால் எத்தனையோ இலட்சம் வேண்டும். அப்பொழுதுதான் சரி செய்ய முடியும். ஆனாலும் ஆபரேஷன் செய்து எத்தனை நாள் நன்றாக இருக்கின்றோம்…?

சம்பாதித்த காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொஞ்ச நாள் வாழச் செய்கின்றோம். அப்புறம் என்ன செய்கின்றோம்…?

நான் சம்பாரித்தேனே… இப்படியெல்லாம் செய்தேனே… கடைசியில் காசை எல்லாம் இப்படி டாக்டருக்குக் கொண்டு போயி கொடுத்தேனே…! என்று இப்படி ஒரு வேதனை.

அடுத்தாற்படி வீட்டில் இருக்கக்கூடிய சண்டையோ சச்சரவோ குறையுமா என்றால் இல்லை….! பணம் குறைந்தவுடன் இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகும்.

அப்பொழுது இந்த வேதனை அதிகமாகும்போது என்ன செய்கின்றது…? நம் உடலிலே பலவிதமான நோய்கள் வருகின்றது.

என்னடா இது…! ஒன்று போனது… பாக்கி எல்லாம் சேர்த்து நம் உடலிலே இப்படி ஆகிவிட்டதே என்று இந்த உடலில் வேதனையெல்லாம் எடுத்த பிற்பாடு இந்த உயிர் வெளியில் செல்லும் பொழுது என்ன செய்கின்றது…?

அந்த வேதனை என்ற நஞ்சுக்குத் தக்கவாறு உயிரினங்களின் உடலிலே கொண்டு விட்டு விடுகிறது.

ஆக… எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை நாம் மதிக்க வேண்டுமா இல்லையா…?

தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.

தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.

இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்த சக்தி எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?

உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)

“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று பல எண்ணங்கள் வருகிறது. நான் தியானத்தில் உட்கார்ந்தாலும் முடியவில்லை என்பார்கள்.

ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.

அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.

இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.

ஒவ்வோர் ஆத்மாவும் சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எந்தத் தீய சக்தியும் நம்மை அண்டாது

 

“எல்லாம் பரம்பொருளின் ஐக்கியம்தான்…” என்ற எண்ண நிலை செயல்பட்டு அவ் வழித்தொடரில் வாழ்ந்திடும் பக்குவத்தை மனித ஆத்மாக்கள் பெற வேண்டும்.

1.அதன் வழித்தொடரினைச் செயல்படுத்திட நல் உபதேசங்களை ஏற்றிடல் வேண்டும்.
2.அந்த நல் உபதேசத்தையே நற்செயலாக்கிடல் வேண்டும்
3.வயது வரம்பு இதற்கு வேண்டியதில்லை.

பக்தியினால் மட்டும் தான் நல்லதை உபதேசிக்க முடிந்திடும் என்ற கால நிலை இன்று மாறிவிட்டது.

தீயோரைக் காண்பதுவும் தீதே…
தீயோர் சொல் கேட்பதுவும் தீதே…
தீயோருடன் இணங்கி இருப்பதுவும் தீதே…!
என்றெல்லாம் முந்தைய காலத்தில் செய்யுள் படுத்தி உபதேசித்தனர்.

விஷமாகத் தீய சக்தி படர்ந்துள்ள நிலையில் நற்சக்தியை… சத்தியத்தை நிலைநாட்டுபவர்… “கோடியில் ஒருவர் கூட இவ்வுலகினில் மிஞ்சவில்லை…”

இவ்வுலகமே இப் பொருளாசை என்ற பேய்க்கு அடிமைப்பட்டு விட்டது. ஆலயங்களுக்குச் சென்றாலும் இப்பொருள் உள்ளவனுக்குத்தான் முதல் இடம்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை…” என்று எப்பொருளை வைத்து இவ்வாக்கியத்தை அமைத்தார்களோ அதுவே நிலைத்துப் பொருளுக்கே (பணம்) அடிமைப்பட்டு விட்டது இவ்வுலகம்.

பொருள் வைத்துத்தான் எச்சக்தியும் செயல் கொள்கின்றது இன்று இப்பூமியில்…!

பல மடாலயங்கள் அமைத்து அங்கு செயல் புரியும் மடாதிபதிகளே இப்பொருள் உதவி புரிபவரின் நிலைக்கொப்பத்தான் அவர்களை நடத்திடும் நடைமுறை உள்ளது.
1.அவர்களின் சத்தியத்தை நிலைநிறுத்தப் பொருள் வேண்டுமாம்…!
2.பஜனைகள் பாடிட ஆண்டவனின் அடிமை நாமம் பூண்டு ஒவ்வொரு திரு ஸ்தலங்களுக்கும் சென்று
3.அவ்வாண்டவனை எண்ணி துதி பாடப் பொருள் உதவி அளிக்கப்பட்ட பின் தான்
4.அவ்வாண்டவனுக்கும் துதி பாடுகின்றான் அப்பாடகன்.

அவனுக்கு இட்டிருப்பது ஆண்டவனின் நாமம் ஆண்டவனின் அடிமையாம் அவன். ஆனால் அவன் ஆண்டவனிடம் அவனைத் துதித்துப் பாடக் கூலி பெற்றுக் கொள்கின்றான்.

ஆண்டவனை மனமுருக அன்புருக பக்திப் பாடலை இவன் பாடுகின்றானாம்…! பக்தியையே விலை பேசிப் பாடுகின்றனர். அவனைத் துதி பாட பக்க மேள மனித ஆத்மாக்கள் வேறு.
1.ஆண்டவனின் துதி பாடப் பொருள் வாங்குபவனின் பக்தியினால்
2.அவ்வாண்டவனின் அருள் எப்படிக் கிட்டும்…?

தான் பிழைக்க வேண்டாமா…? தன் சுற்றத்தாரை எப்படிக் காப்பாற்றுவது…? என்ற வாதங்கள் புரிவார்கள்.

சோம்பேறி வாழ்க்கையாய் பிறரின் உழைப்பிலிருந்து கிடைக்கப் பெறும் ஊதியத்தை ஏற்று இப்பஜனை பாடித் திரிபவனின் ஆத்மாவெல்லாம் எந்த நிலை பெறும்…?

எங்குள்ளான் அவ்வாண்டவன்…?

பொருள் வாங்கி இசைத்திடும் இசைப்பவனின் இசையும் அப்பொருளுக்குத்தான் அடிமைப்பட்டதேயன்றி “ஆண்டவனுக்கு அடிமைப்படவில்லை…”

1.தன்னுள்ளே உள்ள ஆண்டவனை அன்பாக்கி
2.தன்னை ஒத்த அனைத்து உயிர் ஆண்டவ ஆத்மாக்களிடம் அன்பு பூண்டு
3.தன்னையே அவ்விசையின் இசையாய் பக்தி கமழச் செய்து
4.தன்னைச் சார்ந்தோரையும் அப்பக்தி இசையில் வழி நடத்திடல் வேண்டும்.

ஒவ்வொரு நிலைக்கும் உம்மால் (ஈஸ்வரபட்டர்) மாறு கொண்ட வாதம் உள்ளதே… சாதாரண நடைமுறை கொண்ட மனித ஆத்மாவினால் இச்சக்தி நிலையெல்லாம் பெற முடியுமா…? என்று எண்ணுவீர்.

ஒவ்வோர் ஆத்மாவும் அச்சத்தியம் என்ற நேர் கோட்டைச் செயல்படுத்தினால் எத்தீய சக்தியும் நம்மை அண்டாது.
1.தீயது என்ற சொல்லுக்கே இடமில்லாமல்
2.தீயவர் நல்லவர் என்ற பாகுபாடு எண்ணம் கொள்ளாமல்
3.நம் சத்தியக் கோடு நேராய் இருந்துவிட்டால் எச்சஞ்சலத்திற்கும் இடமில்லை.

தீயோரையும் காணலாம் தீயோர் சொல்லும் கேட்கலாம் தீயோருடனும் வாழலாம். தீயது என்று ஒதுங்கி ஏனப்பா செல்ல வேண்டும்…?

நம் சத்தியத்தின் நேர் வழியினால் நாமும் இவ்வுலகினில் உதித்த உயிரணுதான். தீயோன் என்று ஒதுக்கப்பட்டவனும் நம்மை ஒத்த உயிரணுதான். நம்மால் அத்தீயவனையும் நல்லுணர்வு படுத்திடலாம் என்ற ஜெப நிலை கொள்ள வேண்டும்.

ஒதுங்கி வாழ்வதல்ல வாழ்க்கை…!

பல காலங்களுக்கு முன்னே போகரினால் ஸ்தாபிதம் செய்து வைத்த முருகரின் சிலை நவபாஷானத்தைக் கொண்டு செய்விக்கப் பெற்றது.
1.விஷத்தையே ஆண்டவனின் உருவமாக்கி அபிஷேக ஆராதனை செய்து
2.இம்மனிதர்களை உண்ணச் செய்தான் அப்போகநாதன்.

இது எதை உணர்த்துகின்றது…?

விஷம் என்று ஒதுங்கிச் செல்வதினால் நம்மையும் விஷமாக்கிக் கொள்கின்றோம் பயந்த நிலையில்…!

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அச்சத்திய ஜெபம் ஓங்கல் வேண்டும். சத்திய ஜெபம் பெற்றுவிட்டால் எத்தீய சக்தியையும் நற்சக்தியாக்கிடலாம். நம் உடலில் உள்ள பல கோடி அணுக்களையும் நம் நிலைக்குக் கட்டுப்படுத்திடலாம்.

1.இந்த நிலை பெற்றவனின் ஜெபத்தினால் அனைத்து சித்து நிலைகளையும் கண்டிடலாம்
2.சித்தனுடனே கலந்திடலாம் சிவ பதம் எய்திடலாம்…!

மனித எண்ணங்களின் தடுமாற்றத்தினால் இவ்வுலகமே இம்மனிதனால்தான் விஷம் கொண்டுள்ளது. சஞ்சலம் கொள்ளா அமைதி வாழ்க்கை வாழ்பவனுக்கு அவனின் ஆரோக்கிய நிலையும் பாதிப்பதில்லை. அதன் வழித்தொடரில் எச்சிக்கலும் ஏற்படுவதில்லை.

மனச் சஞ்சலத்துடனும் கோபத்துடனும் உள்ளவன் புசிக்கும் உணவு அவனுக்குச் செரிப்பதில்லை.

அந்த உணவே விஷமாக ஆவியான அமில நிலை கொண்டு இவ்வுடலுக்கு வாய்வு என்ற நிலை ஏற்படுத்தி அங்கங்கு உடல் உறுப்புகளில் தங்கி விடுகின்றது.

சீராய் இவை வெளியேறாவிட்டால் அங்கங்கு தங்கி உள்ள இக்காற்றின் அமிலமே அங்கு உறைந்து மேலும் உண்ணும் உணவைச் செரிக்க விடாமல் இத்தங்கிய வாய்வு அமிலங்கள் உறைந்து கோழையாய் கட்டி நிலைபெற்று சளி பிடித்து தும்மல் எய்தி இருமலாகி இக்கோழை வெளி வரும்வரை இவ்வுடல் மண்டலமே அவஸ்தையுற்று அதன் தொடர்ச்சியில் பல நிலைகள் ஏற்படுகிறது.

அங்குகங்கு தங்கிடும் இவ்வமிலத்தினால் சில உறுப்புகளும் கெடும் நிலை எய்துகிறது. இதன் தொடர்ச்சியில் பல வியாதிகள் மனிதனுக்கு வருகின்றன.

1.நாமே சம்பாதித்துக் கொள்வதுதான் இவ்வியாதியே அன்றி
2.உண்ணும் உணவிலிருந்து மட்டுமோ அல்லது மற்றதிலிருந்தோ
3.நம்மைத் தொற்றிக் கொள்கிறது என்பதல்ல இந்த வியாதியின் அணு.

வியாதியில் அடிப்பட்டவனின் சுவாசக் காற்றினிலே இந்த நிலைகொண்ட அணுவைத்தான் வெளியிடுகின்றான். இவனைச் சார்ந்தவரின் நிலையையும் இவனின் வட்டத்தில் ஈர்த்துக் கொள்கின்றான்.

இவ்வெண்ணத்தின் நிலையை மாற்றுவதால் ஏற்படும் நிலையிலிருந்து நம் ஆத்மா தப்பும் நிலை பெறல் வேண்டும்.

குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களைப் பெற்றால் “நமது” என்று அதைச் சொந்தம் கொண்டாட முடியும்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வுகளை அறிவதற்கும் அந்த ஆற்றலைப் பெறுவதற்கும் 20 வருடம் பல கஷ்டங்களை (ஞானகுரு) அனுபவித்தேன்.

அதை எல்லாம் இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது 10 நிமிடம் கூட உட்கார முடியாமல் எழுந்து செல்பவர்களும் உண்டு. உட்கார்ந்து இருக்கின்றேன்… “கால் வலிக்கின்றது…” என்று சொல்பவர்களும் உண்டு.

சீக்கிரம் சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்று நினைத்தால் இப்படியே என்னத்தையோ அறுத்துக் கொண்டிருக்கின்றார்…! என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்குக் கால் வலி வரும்… இடுப்பு வலி வரும்… கொஞ்ச நேரத்தில் எழுந்து போகலாம் என்ற சொல்லும் வரும்.

ஏனென்றால் இந்த உபதேசத்தின் உணர்வினை நீங்கள் ஈர்க்கவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை இயக்கத்தான் செய்யும். ஆனால் பெற வேண்டுமென்ற ஏக்கமிருந்தால் நிச்சயம் பெறலாம்.

சாதாரணமாக கதாகலாட்சேபம் செய்பவர்கள் சிரிக்கப் பேசுவார்கள். கிண்டல் செய்தால் ஆகா…! என்று சிரித்து எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். நான் அப்படிச் சொல்வதற்கில்லை…!

மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்றால் இருளை அகற்ற முடியும் என்று நிலைக்குத் தான் சொல்கிறேன். பொறுமையுடன் பொறுத்து இருந்து உணர்வின் தன்மை பதிவாகி இதை நுகரப்படும்போது உங்கள் இடுப்பு வலி கால் வலி நெஞ்சு வலி எல்லாம் குறையத் தொடங்கும்.

ஹார்ட் பட…பட.. என்று துடிப்பவர்களும்… உட்கார முடியவில்லை…! என்று சொல்பவர்களும் கூட அமர்ந்து கேட்பார்கள். இதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் உள்ளே போகப் போக உங்களை அது அமைதிப்படுத்திவிடும்.

ரொம்ப நேரம் உட்கார முடியாது என்று சிலர் இருப்பார்கள். அரை மணி நேரத்திற்கு மேல் உட்கார மாட்டேன் என்று சொல்லியிருப்பார்.
1.ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருப்பார்.
2.எப்படி உட்கார்ந்திருந்தோம்…! என்று தன்னை மறந்திருப்பார்.
3.ஏனென்றால் எதன் உணர்வைக் கவர்ந்து கொண்டோமோ அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளரப்படும்போது
4.மற்ற தீமைகள் நமக்குள் நுகர முடியாதபடி தடைப்படுகின்றது.

அருள் உணர்வுகள் வளர்கின்றது தீமையைக் குறைக்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்கில்…” சொல்லி ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

1.உடலைப் பற்றியோ தொழில் நிலைகளைப் பற்றியோ மறந்துவிட்டு
2.சாமி சொல்லும் அந்த அருள் ஒளியை பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
3.எவர் உட்கார்ந்திருக்கின்றனரோ அவருக்கு அந்த அருளுணர்வு பதிவாகின்றது
4.உங்கள் நினைவு தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் நம்முடைய பழக்க வழக்கத்தில் அடுத்தவர்கள் பேசினால் நாம் ஒட்டுக் கேட்போம். நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றான்…! என்ன சொல்கிறான்…? என்ற எண்ணத்தில் ஒட்டுக் கேட்போம்.

ஒட்டுக் கேட்டபின் அந்தத் தீமையின் நிலைகளையே பேச ஆரம்பிப்போம். அவன் செய்யும் தீமையின் உணர்வை ஒட்டுக் கேட்டபின் “அவனை எப்படிக் கெடுப்பது…” என்ற உணர்வுகள் தான் வரும். பதிவான பின் அந்த நினைவே அதிகரிக்கின்றது.

இதைப் போலத்தான் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?
1.உடலுக்குள் நினைவைச் செலுத்தி “நீ இருப்பா… கொஞ்ச நேரம்…!”
2.சாமி சொல்லும் துருவ நட்சத்திரத்தின் அருளை கொஞ்சம் ஒட்டுக் கேட்டுக் கொள்கிறேன் என்று
3.இந்த உணர்வின் தன்மையை இப்படி ஒட்டி வைத்தால் தீமையை நீக்கும் அரும் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

நமது குருநாதர் எம்மை இது போன்று தான் அனுபவத்தைப் பெறச் செய்தார். ஒவ்வொரு நொடியிலும் அதை அறிணந்துணர்ந்து கொள்வற்கு எனக்குள்ளும் தீமைகளைப் பாய்ச்சினார்.

அந்த உணர்வின் நினைவுகள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையை உணரச் செய்தார். அந்தத் தீமைகளிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…? என்று அத்தனை துன்பங்களையும் அனுபவித்து மீள்வதற்குக் காட்டினார்.

ஆய்வுக் கூடங்களில்…
1.இன்று எப்படி ஒரு பொருளின் தன்மை திரவத்தை ஊற்றிப் பரிசோதித்துப் பார்த்து
2.அதிலிருக்கும் உண்மைகள் ஒவ்வொன்றையும் பெறுகின்றோமோ அதைப் போல்
3.என் உடலிலேயே இந்த உணர்வுகளைப் பாய்ச்சி மெய் உணர்வின் தன்மை அறியும்படி செய்து
4.அத்தகைய நிலையை உருவாக்கினார் நமது குருநாதர்.

ஆகவே இதை (குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களை) என்றால் நமது என்ற நிலைகளில் சொந்தம் கொண்டாட முடிகின்றது.

எனது குருநாதர் என்று இருந்தாலும்…
1.அதை நீங்களும் உணர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் போது
2.அந்த குரு வழியில் நமக்குள் “நமது…” என்று ஒன்று சேர்த்து வாழும் தன்மை அங்கே வருகின்றது.

இந்நேர வரையிலும் வலு கொண்டு உபதேசித்த உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தைப் பெறவே இதைச் செய்தது.

இப்பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் “இதுவே ஒரு பெரிய தியானம்…!
1.அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு ஈர்க்கப்பட்டது
2.நீங்கள் நுகர்ந்தீர்கள்…. ஒவ்வொரு நிமிடமும் இதை வளர்த்துக் கொள்ளுங்கள்…!

பொது நலம் கொண்ட ரிஷிகளின் செயலுக்கும் சுயநலம் கொண்டவர்களின் செயலுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இறை ஆத்மாவின் அன்பு கொண்ட சக்தி ஜெபம் பெற்றவர்கள் (ரிஷிகள்) இறைவனாகவே செயல்படுகின்றனர்.

ஒவ்வோர் உயிரணுவையும் தனதாக எண்ணி அவ்வுயிராத்மாக்கள் படும் வியாதியின் சங்கடத்தை இவ் இறை ஆத்மாக்களினால் ஏற்கப் பொறுக்காமல்… அவ்வாத்மா வேறல்ல தனதாத்மா வேறல்ல என்ற நிலைப்படுத்தி… ஒவ்வொரு சிறு உயிரணுவும் அதன் துடிப்பில் வேதனை உறுவதை தன் உயிராத்மாவுடன் கலக்கவிட்டு… “தானே அவ்வேதனைக்கு உடையவனாகி அதை அகற்றிடல் வேண்டும்… மற்ற உயிரணுக்கள் எல்லாமே இன்புறல் வேண்டும்…” என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயலாக்குகின்றார்கள்.

1.ஆனால் அது அது செய்த பாவத்திற்கு அது அனுபவிக்கின்றது
2.நாம் ஏன் வேதனையுறல் வேண்டும் என்ற சுய நல மிக்க ஆத்மாக்களினால்
3.நற்செயலையே செய்து நல்லொழுக்கமே கொண்டு வாழ்ந்து வழி வந்தாலும்
4.மற்ற ஜீவ அணுக்களையும் தனதாக ஏற்காமல் செயல்படுபவன் “சுயநலமிக்கவனாகின்றான்…”

“எல்லா உயிரணுக்களுமே ஒன்றுதான்…!” என்ற எண்ணம் கொண்ட உயிராத்மாக்கள்தான் “ஞான ஒளி…” ஆகின்றார்களே அன்றி சுயநலம் மிக்க ஆத்மாக்களினால் அருள் நிலை பெறுவது கடினம்.

சிறு எறும்பு நம்மை வந்து கடிக்கின்றது. அக்கடி நிலை பொறுக்காமல் அதை நசுக்கி எறிகின்றோம். அவ் எறும்பின் ஜீவன் பிரிந்து விடுகின்றது. அதன் உருவம் நச்சுப்படுகின்றது என்று எண்ணுகின்றோம். அதன் ஜீவன் எங்கு செல்கின்றது…?

அதை நசுக்குபவரின் எண்ணத்திலேயே…
1.அவ் எறும்பு சேமித்த எண்ணத்தையும் அமிலத்தையும்
2.அதை நசுக்குபவனே ஏற்றுக் கொள்கின்றான்.

பல உயிர்களை உணவாக்கி உண்ணுகின்றோம். அதனால் அவைகளுக்கு இம் மனிதர்களின் உடலிலேயே அவற்றின் சக்தியை எல்லாம் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை அறியாமல் நம் நாவின் சுவைக்காக நம்மை அறியாமல் நாம் பலி படுகின்றோம்.

எல்லா உயிர் அணுக்களுக்குமே எண்ணமுண்டு. இவ்வெண்ணத்தில் சேமித்த அமிலத்தின் நன்மை தீமை கொண்ட குண நிலையும் உண்டு.
1.ஓர் உயிர் ஜெந்துவை அழித்து உண்ணும் நாம்
2.அஜ்ஜெந்துவின் நிலையையும் நம்முள் ஏற்றிக் கொள்கின்றோம் என்பதனை உணரல் வேண்டும்.

மனிதர்களில் இருந்துதான் மிருக ஜெந்துவும் பறவைகளும் ஊர்வனவும் வருகின்றன என்று முதலிலே சொல்லியுள்ளேன். மிருகங்கள் மற்றப் பறவைகள் எல்லாம் மனித இனமாக வருவதில்லையா…? என்று எண்ணிடலாம்.

மனிதர்களால் மற்ற ஜெந்துக்களைப் புசிக்கும் நிலையில் அதன் சப்த அலையும் உயிரணுவும் அதன் உடலைப் புசித்தவனின் உடலுக்குள் ஏறிக் கொள்கின்றது.

1.அறிவு வளர்ச்சி நிலை கொண்ட மனித ஆத்மாவில் ஏறிக்கொள்ளும் மிருக ஜெந்திற்கு
2.அம் மனிதக்கூட்டில் இருந்து அம்மனித ஆத்மா பிரிந்த பிறகு
3.மனிதனின் உடலில் ஏறிய இஜ்ஜீவனுக்கும் மனித உருவாய்ப் பிறந்திடும் பக்குவ நிலை பெற்று பிறப்பிற்கு வருகின்றது.

அஜ் ஜெந்திற்கு இம் மனிதனால் விமோசனம் கிடைக்கின்றது…!

இம் மனிதனுக்குத்தான் மற்ற ஜீவனை உண்ட நிலையினால் அதன் குண நிலையின் வழித்தொடர் பெறுகின்றான்.

இந்த நிலையை உணர்ந்து நாம் எல்லா ஜீவ ஆத்மாக்களிடமும் உயிரணுக்களிடமும் “அவை வேறல்ல… நாம் வேறல்ல…” என்ற நிலையில் நம்மையே அவையாக்கி அவையே நாமாகி… “அன்பென்னும் நிலைதனை கனிவாகப் படர விடல் வேண்டும்…!”

இன்று அவை கொசுவாகவும் குருவியாகவும் ஆடாகவும் இருந்திடலாம். அவையும் நம்மைப் போல் ஜீவன் கொண்டவை தான். எல்லா உயிரணுக்களையும் நமதாக எண்ண கனிவு நிலையில் வழி நடந்திடுங்கள்.

இவ்வுலகிற்கும் எண்ணமுண்டு… ஜீவ காந்த அமில சக்தியுண்டு. இவ்வுலகினில் வாழும் அனைத்திற்கும் மனிதன் முதல் எறும்பு வரை அனைத்து ஜீவராசிகளுக்குமே எண்ணமும் உண்டு… அதற்குகந்த காந்த அமில சக்தியுண்டு…!

1.யாருக்கு யாரும் மூத்தவருமல்ல இளையவருமல்ல
2.எல்லாம் அப் பரம்பொருளின் ஐக்கியம் கொண்ட ஆத்மாக்கள் தான்.

ஒரு நாளைக்கு உயிரான ஈசனை எத்தனை முறை நினைக்கின்றோம்…?

 

இயற்கையின் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் எத்தனையோ இம்சைகளை எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார். முழுவதும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப் பட்டேன்.

ஏனென்றால் சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…? அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் உயிர் எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து மனிதனாக உருவாக்கி உள்ளது.
1.ஆனால் அந்த உயிரை மதிக்கமாட்டேன் என்கின்றார்களே…!
2.உடலைத்தான் மதிக்கின்றார்கள்… இந்த உயிரை யாரும் மதிப்பதில்லை.

நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…? இதையாவது மக்களுக்கு எடுத்துச் சொல்… ஆண்டவனுக்கு இந்தச் சேவையைச் செய்…! என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலை ஆளுகின்றது. அப்பொழுது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் குருநாதர்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். குருநாதர் எனக்கு உணர்த்திய இந்த வழிப்படி
1.இப்பொழுது இங்கே சொல்லக் கூடிய உபதேசங்களை நீங்கள் நுகரப்படும்போது
2.அந்த ஆண்டவனுக்கு இந்த உணர்ச்சியின் தன்மை இந்த அருள் உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

எது…?

கோவிலில் பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அந்த நல்ல குணத்திற்குப் பாலாபிஷேகம்…! அதாவது நம் நல்ல குணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் “அந்தப் பாலைப்போல் மனம் பெற வேண்டும்…” என்று நாம் எண்ண வேண்டும்.

ஆனால் வேதனை உணர்வை எடுக்கப்படும் பொழுது பாருங்கள். இந்த வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வார்கள். இந்த உயிரில் அந்த வேதனை தான் அபிஷேகம் ஆகும்.

வேதனை உணர்ச்சிகள் முன்னாடி இருக்கின்றது. அப்பொழுது பாலாபிஷேகம் செய்தால் என்ன செய்யும்…?
1.விஷத்தில் பாலை ஊற்றினால் என்ன செய்யும்…! பாலும் விஷமாக மாறிவிடும்
2.அது போல் தான் யாம் கொடுக்கும் வாக்கும் பயனற்றதாகப் போகும்.

நான் பல முறை சொல்லியிருக்கின்றேன். இதைப் பயனற்றதாக ஆக்காதீர்கள் என்று. சிரமப்பட்டு சம்பாதித்த சொத்து அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழக வேண்டும்.

1.உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும்
2.அவனை மதித்து அந்த அருளை பெற்றீர்கள் என்றால்
3.இந்த உடலுக்குப் பின் நீங்கள் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

என்ன தான் ஆபரேஷன் செய்து உடலை நலம் பெறச் செய்தாலும் அடுத்தாற்படி மனிதனின் கடைசி முடிவு எங்கே செல்கிறது…! எடுத்துக் கொண்ட விஷமான உணர்வுக்குத் தக்க… இந்த உயிர்… நீ செய்தாய் அல்லவா…! என்று விஷம் கொண்ட உயிரினங்களில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

ஆனால் இதை எல்லாம் நமக்குள் தெரியச் செய்வது கார்த்திகேயே… சேனாதிபதி…! பாதுகாக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது.

1.அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால்..
2.நாம் இன்றைக்கு மனிதன்… நாளைக்கு எடுத்துக் கொண்ட வேதனைக்குத் தக்க வேறு ஒரு உருவம்.

இது போன்ற நிலைக்கு உயிர் மாற்றிவிடும் என்ற நிலைகளில் தான் இத்தனையும் என் உடலில் பாய்ச்சி
1.நீ கெட்டதை நுகரப்படும்போது அது என்ன செய்கின்றது…?
2.எவ்வளவு நேரத்தில் அது உடலில் என்னென்னவெல்லாம் செய்கின்றது…? என்று குருநாதர் காட்டினார்.
3.அவஸ்தைப்பட்டுத்தான் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பின் அதை எப்படித் திருத்துவது என்று குருநாதர் சொன்ன நிலைகளைத் திருப்பி எடுத்து எனக்குள் மாற்றி அமைத்துக் கொண்டேன். அதைத் தான் இப்பொழுது உங்களிடம் சொல்கின்றேன். அதை நீங்களும் எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

உயிரணு தோன்றி உணர்வின் தன்மை முழுமையானது துருவ நட்சத்திரம்…! அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உங்களுக்குள் செலுத்தி எப்படியாவது அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

1.“உயிரான ஆண்டவன் உங்களை ஆண்டு கொண்டிருக்கின்றானே…”
2.அவனுக்கு என் சேவையை நான் செய்வதற்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் அனுப்பி வைக்கின்றேன்.

ஆனால் அப்படி அனுப்பும் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கஷ்டத்தையும் வேதனையையும் எண்ணிக் கொண்டு வந்தால் எப்படி உள்ளுக்குள் போக போடுவீர்கள்…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

இந்த நாடு… உலகம்… காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக உள்ளது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் அல்லவா…!

பிறந்துவிட்டோம்… மனிதராக வளர்ந்துவிட்டோம் மனிதனுக்குபின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் அதுதான் கடைசி நிலை…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குபவன் உயிர். அது ஈசனாக இருக்கிறது. உருவாக்கிய உணர்வு உடலாகி சிவமாகின்றது. உடலான இந்தச் சிவத்திற்குள் தீமையை நீக்கிய உணர்வு மணம் அந்தக் குணம் ஆறாவது அறிவாக இருக்கின்றது.

1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.ஒளியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து
4.உங்களைத் தெளிவாக்கி கொள்ளுங்கள் என்று தான் யாம் சொல்கிறோம்.

அந்தத் தீமையை நீக்கிய உணர்வின் தன்மையை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலிலுள்ள இரத்தத்தில் கலக்கப்படும்போது அந்த ஒளியான அணுக்கள் உங்களுக்குள் பெருகும்.

எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் ஆண்டவன் ஆகலாம் – ஈஸ்வரபட்டர்

 

இங்கே கொடுக்கும் உண்மைகளைப் படிக்கும் ஒவ்வோர் உயிர் ஆத்மாவும் இவ் விஷமாய்க் கலந்துள்ள காற்றின் சக்தியிலிருந்து உன்னத நிலை பெறல் வேண்டும்.
1.நம் உயிராத்மாவிற்கு வேண்டிய அழியாச் சொத்தை சேமித்திடல் வேண்டும்.
2.நம் உயிராத்மாவை உன்னதப் பொக்கிஷமாக்கி அவ்வொளியுடனே ஒளியாய்க் கலந்திடல் வேண்டும்.

இன்று வாழும் நிலையில் விஷத்தன்மை வாய்ந்த காற்று அலையில் சிக்குண்டு இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள இம்மனித உடல் வாழ்க்கையை ஏக்கத்தினாலும் பேராசை வெறியினாலும் சலிப்பினாலும் ஆத்மா பிரிந்து சென்று அவ்வெண்ண அலையுடனே ஈன ஜெந்துவாய் அதன் ஈர்ப்பலையில் சிக்கி அதன் வட்டத்திற்குள் நம் உயிராத்மா சென்று வாழும் பிடியிலிருந்து மீண்டு செயல் கொள்ள வேண்டுமென்றால் நம் வாழ்க்கையைப் புனிதமாக்கி ஜெபம் கொண்டிடல் வேண்டும்.

1.ஈஸ்வர நாமத்தை ஜெபித்திட்டால் மட்டும் நம் ஜெபம் சக்தி பெறுவதில்லை
2.நம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னலில் இருந்தும் நாம் மீள வேண்டும்.

பக்தி என்ற நிலையில் நம் எண்ணத்தில் அப்பரந்தாமனையே எண்ணிப் பல நாள் பூஜித்து வணங்கி நாம் முக்தி எய்திட அப்பரந்தாமனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும் பக்தி ஜெபத்தில் ஈடுபட்டு வழி வந்திடும் நிலையில்
1.நம் வாழ்க்கையில் ஏற்படும் நம்மைச் சார்ந்தவரின் நிலையினாலும் மற்றவர்களின் நிலையினாலும்
2.நம் பூஜையில் குறுக்கிடும் நிலையோ அல்லது அவர்களினால் நம் ஜெபம் தடைபடுகின்றதே என்ற ஏக்கத்தினாலும்
3.நம் எண்ணத்தைச் செலுத்தினாலும் நம் ஜெபம் நமக்குக் கைகூடாது.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் ஒவ்வோரு சக்தி நிலையுண்டு. அச்சக்தி நிலையை வெளிப்படுத்திடப் பக்குவ நிலை வேண்டும்.

உதாரணமாக நம் இல்லத்தில் நாம் சமைக்கும் பதார்த்தத்தில் எப்பதார்த்தத்தை மையப்படுத்திச் சமைக்கின்றோமோ அதன் நிலையில் உப்போ புளிப்போ காரமோ எச்சுவை அதிகப்படுகிறதோ அந்நாமம்தானே அப்பதார்த்தம் பெறுகிறது. நீங்கள் செய்த பதார்த்தத்தின் நாமம் மாறி “ஒரே உப்பு” என்று நாமம் பெறுகிறது.

அது போல் பக்குவ நிலை மாறு கொண்டால் நம் உயிராத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து நம் எண்ண நிலை மாறு கொண்ட ஏக்கத்தில் நம் உயிராத்மா பிரிந்து விஷமாய்க் கலந்துள்ள இக்காற்றினில் நம் ஆத்மா தத்தளிக்க நாமே நம் ஆத்ம சக்தியைச் சிதற விடுகின்றோம்.

நாம் செய்யாத ஒரு செயலுக்கு மற்றவரினால் கடும் சொல்லோ எதிர்ப்பு நிலையோ ஏற்படும் தருவாயில்…
1.நாம் சத்தியவனாய் உள்ளோம் நம்மை ஏன் வீண் இகழ்ச்சி செய்கின்றனர்…?
2.ஆண்டவா அவனைப் பார்த்துக்கொள்… அவனைச் சும்மா விடலாகாது
3.நம் சத்தியத்தை அவன் மீறி நம்மைத் துவேஷிக்கிறான் என்ற எண்ண நிலையில் நம் எண்ணத்தைச் செலுத்தி
4.ஆண்டவனை வணங்கி அவன் செய்த பாவத்திற்கு நாம் எண்ணும் நிலையிலேயே
5.நம்மையே நாம் தண்டனைப்படுத்திக் கொள்கின்றோம்.

இவ்வுணர்வின் நிலையினால் நம் உடல் நிலையும் பாதித்து அதன் வழித் தொடரில் பல இன்னல்களை நாம் அடைகின்றோம்.

நாம் அறிந்தே நமக்கு ஒருவர் தீங்கு இழைக்கின்றார். நம்மை ஏமாற்றி வஞ்சனைப்படுத்தி வாழ்கின்றாரே அந்நிலையைப் பார்த்து நாம் எப்படிச் சும்மா இருத்தல் முடியும்…? என்று எண்ணத்தில் சலிப்புத் தோன்றலாம்.

நம்மை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டு ஏமாற்றுபவர்கள் எல்லாம் நம்மை ஏமாற்றவில்லை. “அவர்களையே அவர்கள் ஏமாற்றிக் கொள்கிறார்கள்…”

ஒருவரின் மேல் குரோதத்தை வளர்ப்பவனும் பொறாமை கொண்டு ஏக்கப் பெருமூச்சு விடுபவனும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்ளவில்லை…. ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.

அவனையேதான் அவன் பொறாமைப்படுத்துகின்றான்… ஏக்கப்படுத்தி கொள்கின்றான்…! இது தான் உண்மை.

அது போன்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் சிக்காது…
1.நாம் நம் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி
2.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! எனக்கு நல்ல மனதைத் தா
3.அவனுக்கும் நல்லுணர்வு கொண்ட நற்சக்தியை வளரவிட்டு நல்லவனாய் ஆக்கிடுங்கள் என்ற
4.இந்த ஜெபத்தைத்தான் நாம் பெறல் வேண்டும்.

அவர்கள் செய்யும் வினையல்ல அது. அவர்களை ஆட்டி வைக்கும் துர் சக்தி தான் அதுவேயன்றி “ஆண்டவனின் அருளில் உதித்த அனைத்து உயிராத்மாவுமே ஒன்றுதானப்பா…”

இக்காற்றினில்தான் அனைத்துமே கலந்துள்ளன. தீயவனாய் எவனும் பிறந்திடவில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலையினால் ஏற்படும் இத்தீய சக்தியின் பிடியிலிருந்து மீள முடியவில்லை.

இன்று மட்டும் வந்த நிலையல்ல இது…!

பல காலமாய் இம் மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியில் குரோத வெறியுணர்வினால் அரசர்கள் ஆண்ட காலத்தில் பேராசையில் அவர்கள் நாடு பிடிக்கப் போர் என்ற நிலையில் பல ஆத்மாக்களை இக் குரோத எண்ணத்தில் போர்க்களத்தில் உயிர் நீத்த ஆத்மாக்களின் நிலையின் வழித்தொடரினால் வந்த வினை தானேயன்றி “இன்று வாழும் நம் மனித ஆத்மாக்களினால் வந்த நிலையல்ல இந்நிலை…”

இதிலிருந்து மீளுவதற்குத்தான் நம் ஆத்மாவை எப்படிச் செயல்படுத்திடல் வேண்டும்…? நம் எண்ணத்தைக் கொண்டு நம் உயிராத்மா அடையப் போகும் நிலைதனை உணர்ந்து சத்தியத்தின் சக்திவானாய் சக்தி பெற்றிடல் வேண்டும்.

தீயவர்கள் என்று ஒதுங்கி வாழ்ந்திடல் ஆகாது…!

நாம் எடுக்கும் நல்லுணர்வின் ஜெபத்தினால் நம் எண்ணத்தின் சுவாசத்தைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்திட்டாலும்
1.அன்பான சுவாசத்தை அவர் எண்ணமுடன் நம் எண்ணம் கலக்கச் செய்து
2.அவரையே நம் எண்ணத்தினால் புனிதமடையச் செய்திடலாம்.
3.நம் எண்ணச் சக்திக்கு உகந்த நிலைதனை நாம் உணர்ந்திடல் வேண்டும்.

பல மகான்களும் சப்தரிஷிகளும் இவ்வெண்ண சக்தியில் உயர்வு பெற்று மகான்கள் ஆனார்களேயன்றி “கடும் ஜெபத்தினாலோ விரதத்தினாலோ யாக குண்டங்கள் வளர்த்து பூஜித்ததினாலோ அம்மகான் நிலை பெறவில்லை…!”

எண்ணத்தில் உயர்ந்த ஞான சக்தி பெற்றவன் தான் ஞானியாகவும் சித்தனாகவும் ரிஷியாகவும் ஆனானேயன்றி பக்தியைக் கொண்டு ஆண்டவனை வணங்கி… பூஜித்து நற்சக்தியைப் பெறவில்லை…!

அவரவர்களுக்குள் உள்ள ஆத்மாண்டவனை இவ்வெண்ணத்தினால் பூஜித்துப் புனிதப்படுத்தி பக்குவ நிலை பெற வேண்டுமேயன்றி “பஜனை பாடி கோவிந்தனை அழைத்து எவ்வாண்டவனின் ஜெபத்தையும் பெற முடிந்திடாது…”

ஒவ்வோர் ஊர்களுக்கும் சென்று மக்களுக்கெல்லாம் நல்லுணர்வு பெற அக் கோவிந்த ஜெபம் பாடினால் மட்டும் நல்லுணர்வு பெற முடிந்திடாது.
1.எண்ணத்தைத் தூய்மை கொண்டு வணங்கிடுபவன் தான் ஆண்டவன் ஆகலாமேயன்றி
2.அவ் ஆண்டவனின் சக்தியைப் பெற எப்பூஜையும் பஜனையும் வழி நடந்திடாது.

நன்றாக இருப்பவர்களுக்குத் திடீரென்று இருதய அடைப்பு (அட்டாக்) ஏன் வருகிறது…?

 

நாம் சாப்பிடுகின்ற ஆகாரத்திற்குள் நல்ல வாசனையான பொருளைப் போட்டு. ருசியாகத் தான் சாப்பிடுவோம். சத்துள்ளதை எல்லாம் அதிலே போடுகின்றோம். ஆனால் அதற்குள் மறைந்து இருக்கும் அந்த விஷமான சத்தை நம் உயிர் என்ன செய்கிறது…?

அந்த நஞ்சை எல்லாம் பிரித்து மலமாகக் கொண்டு வருகின்றது நம் உடல். அதாவது உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சைப் பிரிக்கக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று இப்படி இருக்கப்படும்போது அதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

உதாரணமாக… வியாபாரத்தில் நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை… ஏமாற்றுகின்றான்…! என்று தெரிகின்றது. இது கார்த்திகேயா.

ஏமாற்றுகிறான் என்று சொன்னவுடனே நாம் வேதனைப்படுகின்றோம். நம் தலை சுத்துகின்றது. கொடுத்தேனே என்னை ஏமாற்றுகின்றானே…! என்று இதுவும் தெரிகின்றது கார்த்திகேயா.

ஏமாற்றுகின்றான் என்று சொல்லும்போது நாம் இன்னொன்று என்ன நினைக்கின்றோம்…? அந்த நேரத்தில் இன்னொருவருக்கு நாம் காசு கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம்.

ஏனென்றால் கடனுக்கு வாங்கித் தான் நாமும் தொழில் செய்கிறோம். பொருள் வாங்கியவரிடம் பணம் கொடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டுத் தான் நாமும் வாங்குகின்றோம். அந்த நாணயத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் பொருளை விற்கும் போது நம்மிடம் வாங்கியவன் பணத்தைக் கொடுத்தால் தான் நாம் வாங்கியவருக்குக் கொடுக்க முடியும் என்ற நிலையில் நாமும் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது…?

அதை நினைத்தாலே கோபம் வரும்… கண்கள் சிவக்கும்…! நரம்பு மண்டலமெல்லாம் விடைக்கும். இப்படி ஆகின்றதே என்று அந்த நேரத்தில் வேதனையும் விஷமும் சேர்த்தால் எப்படி இருக்கும்…?

இந்த உணர்வுகள் எல்லாம் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலிலே கை கால் குடைச்சலை உண்டாக்கும். சில பேருக்கு மூட்டு மூட்டிற்கு வலி இருக்கிறது… என்று சொல்வார்கள்.

அதாவது “சரவாங்கி நோயாகி விட்டால் மூட்டு மூட்டுக்கு வலி வந்துவிடும். அதே சமயத்தில் எவ்வளவு திடமாக இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு வரப்படும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் இந்த கோபமும் வேதனையாக ஆன பிற்பாடு நமது கவன நரம்பில் சென்று அங்கே இந்த அழுத்தம் ஆன பிற்பாடு என்ன செய்கின்றது…?
1.பலூன் மாதிரி உப்பிவிடும்
2.பலூன் மாதிரி உப்பிவிட்டது என்றால் நம் இருதயத்தை சரியாக இயக்க முடியாது
3.மூச்சு இழுத்தது கீழே இறங்காமல் நிற்கும்.
4.அப்படியே ஹார்ட் அட்டாக் ஆகிறது… உடனே இறந்தவர்களும் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் இரத்தம் போகும் நுண்ணிய நாளங்கள் வெடித்து விட்டதென்றால் அப்படியே சுத்தமாவே நின்றுவிடும்.

1.நாம் நினைக்கின்றோம் சாதரணமான நிலைகள் என்று….!
2.ஆனால் நாம் பார்க்கின்ற உணர்வெல்லாம் நம் உடலிலே இப்படிச் செய்து கொண்டே இருக்கும்

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நாம் சம்பாரிக்க வேண்டும் என்று நினைத்தோம் தொழிலில் லாபம் வரும் என்று நினைத்தோம். நாம் ஏமாற்றவில்லை…! இங்கே வாங்கிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடன் வாங்கினோம்.

கொஞ்சப் பணம் இருந்தாலும் கடனுக்கு வாங்கி வியாபாரம் செய்து இதிலே லாபம் வரும் என்று தான் ஆசையுடன் இருக்கின்றோம். கடையில் நம் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்றும் கார்த்திகேயா அது நமக்குத் தெரிகின்றது.

ஆனால் பணம் திரும்ப வரவில்லை என்று தெரிகின்றது. நாம் பொருள் வாங்கியவர்கள் நம்மிடம் பணத்தைக் கேட்பார்களே…? அவர்களுக்கு என்ன சொல்வது…? என்கிற பொழுது நாம் மயங்கி விடுகின்றோம்.

அந்த மாதிரி நேரத்தில் யாம் (ஞானகுரு) உங்களுக்கு உபதேசித்த அருள் வழிப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள்.

1.கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2,அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும்.
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
5.நமக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இவ்வாறு செய்தால் பணம் வந்து சேரும். வேதனையோ கோபமோ வராது… நோயாகவும் மாற்றாது.

ஆசை இருக்கலாம்… பேராசை இருக்கக்கூடாது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியனிலிருந்து கிடைக்கப் பெறும் காந்த அமில சக்தியினால் மட்டும் நம் உலகிற்கு ஒளி பாய்வதில்லை. நம் உலகமும் அதனை ஈர்க்கும் நிலைதனைப் பெறல் வேண்டும்.

அந்தக் காந்த அலைகளை நம் பூமி ஈர்த்து அதன் வட்டத்திற்குள் சுழலவிட்டு அச்சுழற்சியில் இருந்து சூரியனின் ஒளி அமிலத்தை மென்மேலும் ஈர்த்துச் செயல் கொள்ளாவிட்டால் நம் உலகிற்கு சக்தி ஏது…? செயல் ஏது…? இவ்வுலகமே ஏது…?
1.சூரியனின் படைப்பில் சக்தியை அளித்தாலும்
2.நம் பூமி ஈர்த்து செயல் கொள்ளாவிடில் நம் பூமிக்கு ஜீவனில்லை.

அதைப் போல் ஒவ்வோர் உயிராத்மாவும் ஆண்டவன் படைப்பில் அதனதன் சுழற்சியில் ஏற்படுத்திக் கொண்ட அமில சக்தியின் வட்டத்தின் வளர்ச்சியில் தான் அதனின் வாழ்க்கை நிலை அமைகின்றது.

பல பிறப்புகளை ஏற்கும் நம் உயிராத்மா ஒவ்வொரு பிறப்பிலும் சேமிக்கும் அமில சக்தியில் நற்சக்தியும் தீய சக்தியும் கலந்தே வழி வருகின்றோம்.

ஒவ்வொரு பிறப்பிலும் இந்நிலையில் ஒரு பிறப்பில் சேமித்த நற்பயனும் தீய பயனும் மற்றொரு பிறப்பில் ஏற்றத்தாழ்வு கொள்கின்றது. இதன் நிலையில் தொடர்பு கொண்டு நாம் செய்திடும் நிலையல்ல இது.

நாம் வளர்த்த எண்ண நிலை நம்முள் கலந்துள்ள தொடர் நிலையென்ற வழியிலேயே வழி பெற்றால் நாமெல்லாம் இன்று மனித ஆத்மாக்களாய் வாழ்ந்திடும் இப்போக்கிஷமான வாழ்க்கைதனை ஈன நிலைக்கு நாமே அடகு வைக்கிறோம்.

“அடகு” என்றவுடன் திரும்பவும் பெறும் நிலைகல்லவா செப்புகின்றார் என்று உணருவீர்…!
1.ஆம்… இன்று இக்கலியில் நம் உயிராத்மா கொண்ட இப்பொக்கிஷ வாழ்க்கையை அடகு வைத்துவிட்டால்
2.நாம் அதனைப் பெறும் காலம் பல நூறு கோடி ஆண்டுகள் ஆகலாம்.

பல காலமாய்ச் சேமித்து உயிர் ஆத்மாவாய் மனித உடல் கொண்ட எண்ண வளர்ச்சியில் அறிவுப் பொக்கிஷ வாழ்க்கைதனைப் பெற்ற நம் ஆத்மாவின் நிலையைப் பெற்றிருக்கிறோம் என்பதனை உனர்தல் வேண்டும்.

இன்று இந்த வாழ்க்கையில் ஏற்படும் சஞ்சலங்களுக்கு அடிபணியாமல் நம்முடன் (நம் எண்ணமுடன்) மோதிடும் பல நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் சம நிலைப்படுத்தும் பக்குவநிலை பெறல் வேண்டும்.

இம்மனித ஆத்மாக்களினால் மட்டும்தான் ஜீவ சக்தியை ஒளிபெறும் சக்தியாக்கிடல் முடிந்திடும்.

மனித ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று அஜ்ஜோதியுடன் ஐக்கியமாகி… அஜ் ஜோதியின் வட்டத்தை வளரவிட்டே மண்டலமாய் ஜீவன் கொண்டு வளர்ச்சி பெற்று… வளர்ச்சியில் உயிரணு தோன்றி அதன் வளர்ச்சியிலேயே அமில நிலை பல பெற்று… மண்டலமாய் உருளும் சக்தியும்.. உயிராத்மாவாய் வாழும் நிலையும்… அதன் தொடர் நிலை அனைத்துமே “இம் மனித ஆத்மாக்களுக்குத்தான் உண்டு…”

1.மண்டலமாய் சுழல்வதுவும் இவ்வாத்மாக்களே
2.கொசுவாய்க் கழிவின் சுவாசத்தை ஈர்த்து வாழ்வதும் இம்மனித உயிராத்மாவே
3.இவ்வெண்ண சக்தியில் நிலை கொண்டு அமைவதுவே அனைத்துமே.

நாம் பிறப்பெடுத்து வாழ்வதெல்லாம் நம்மை அவன் அனுப்பி வைத்து நம் சக்தியை எப்படி வளர்த்துக் கொள்கின்றோம் என்று பார்க்கத்தான் என்ற எண்ணமும் வேண்டும்…!

அன்றைய நாளில் மனித ஆத்மாக்களைப் அருள் நிலையில் தான் உயர்வுபடுத்திட முடியும் என்ற தத்துவத்தை உணர்த்தி ஆலயத்தை அமைத்தார்களே அன்றி “ஆலயத்திற்குச் சென்றால் தான் அவனருள் கிட்டும்…!” என்ற நிலையில்லை.

எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரவர்களுக்குகந்த அமில சக்தியையே ஒளி சக்தியாக்கி வழி பெறல் வேண்டும்.
1.ஆசையும் அன்பும் அளவுடனே இருந்திடட்டும்
2.ஆதி ஆசைக்கும் அதி அன்பிற்கும் வழிபட்டால் பேராசைக்குப் பிடிபடும் நிலையில்
3.சலிப்பும் சஞ்சலமும் வெறுப்பும் கொண்டே இதன் வழித்தொடரினால் ஏற்படும் கோபங்களும்
4.அதிலிருந்து ஏற்படும் வைராக்கியத்தின் உறுதியும்
5.எச்சிரமப்பட்டாலும் அடைந்தே தீருவேன் என்ற வெறியின் உந்தலினால்
6.நம்மையே நாம் சிதறவிட்டு வாழ்கின்றோம்.

அன்பும் ஆசையும் இல்லாவிட்டால் உலகமே இல்லை. நற்சக்தியின் பொக்கிஷ சக்தியே இவைதான். ஆனால்
1.இவற்றிற்கே அடிமைப்பட்டு பேராசை நிலையில் செல்லும் எவையுமே
2.அவ்வன்பிற்கும் ஆசைக்கும் எதிர் சக்திதான்…!

உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் யாராவது சிந்திக்கின்றோமா…

 

சில ஜோதிடம் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்…? வருவோரை உற்று நோக்கி நுகர்ந்து நுகர்ந்து பார்ப்பார்கள். ஏதாவது உணர்வு ஒன்றைச் சொல்வார்கள்.

1.சொல்லும்போது நம் தலை அசைவதைப் பார்ப்பார்கள்.
2.“ஓ… இப்படியெல்லாம் இருக்கின்றது…!” என்று (அறிந்து கொண்டு) ஒரு கேள்வியைப் போடுவார்கள்.
3.உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கஷ்டம் இருக்கின்றது என்று தொடர்வார்கள்.

அதாவது வாஸ்து சாஸ்திரக்காரர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே உங்கள் முகத்தைப் பார்ப்பார்கள். சில மந்திரங்கள் சொல்லி முகத்தைப் பார்த்து வீட்டைப் பார்த்தவுடன் என்ன செய்வார்கள்…?

வீட்டில் பையன் ஏதாவது தொல்லை செய்கிறானா…? என்பார்கள்.

ஆமாம்…! என்று சொன்னால் போதும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அப்படியே வரிசையாக எடுத்துச் சொல்லிவிட்டு கடைசியில் இரண்டு வார்த்தையைச் சொல்லி விட்டுக் காசைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டு உங்கள் வீட்டை மாற்றி அமைப்பீர்கள்…!

ஆனால் வீட்டில் பத்துப் பேர் இருப்பார்கள். அதிலே ஒருவர் இனம் புரியாதபடி ஒரு ஆக்சிடண்ட்டைப் பார்க்கின்றான். அதிர்ச்சியால் புத்தி பேதலித்துப் போகின்றது.

அப்போது அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது இந்த வேதனை எல்லோருக்கும் வந்தால் அவன் சொன்ன வாஸ்து என்ன செய்கின்றது…?

வாஸ்து என்றால் யார்…?

1.உயிர்…! வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
2.நாம் நுகர்வதையெல்லாம்… சுவாசித்ததை எல்லாம்… உருவாக்கக் கூடியது “நம் உயிர் தான்…” என்று இந்த இடத்தில் காட்டுகின்றார்கள்.

தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வு உடலுக்குள் வரப்படும்போது வாசுதேவனுக்கும் தேவதிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான். “பார்க்க வேண்டும்…” என்ற இந்த உணர்வுகள் கொண்டு கண்கள் தோன்றுகின்றது என்று காட்டுகின்றான்.

ஜோதிடக்காரன் சொன்னதைக் கேட்டால் வாசுதேவன் (உயிர்) என்ன செய்கின்றான்…? அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் உருவாக்கிவிடும்.

உங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றதா…? என்றால் ஆமாம் என்று சொல்கின்றோம்.

அடுத்தாற்படி இந்த வீட்டின் வாசலை உடைத்தால்தான் சரியாக இருக்கும் என்பான். வீட்டின் நிலையை இப்படி மாற்றி வை என்பான் அல்லது இந்த ஓரத்தில் ஏதாவது ஒன்றை வை என்பான்.

அவன் சொன்னபடி வைத்துவிட வேண்டும். வைக்கவில்லை என்றால் நான் அன்றைக்கே சொன்னேன் நீ வைக்கவில்லை என்ற நிலையானால்… அந்த வேதனையால் என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ…? என்று இந்த உணர்வின் தன்மை மீண்டும் அதையே வளர்த்துக் கொள்ளும்.

இன்னொன்றும் சொல்வார்கள். நியுமராலஜி…! அம்மா அப்பா வைத்த பெயரெல்லாம் ஒழுங்காக முழுதாக இருக்கும். உங்கள் பெயரில் இந்த எழுத்தை இப்படிப் போட்டீர்கள் என்றால் உங்கள் எதிர்காலம் நியுமராலஜிப்படி நன்றாக இருக்கும் என்பார்கள்.

இந்த எழுத்துக்களை அந்த நம்பர்கள் பிரகாரம் இப்படிப் போட்டால் ராசியாக வரும் என்று அவன் சொன்னதைக் கேட்டுப் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கின்றோம்.

ஏனென்றால் நமக்குள் இருக்கும் வேதனை உணர்வை நீக்க வேண்டும் என்றால் அதை எல்லாம் நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

தப்பாக நினைக்க வேண்டாம்…!
1.இன்றைக்கு இந்த உடலின் இச்சைக்குத் தான் வாழுகின்றோமே தவிர
2.உடலுக்கு பின் என்ன…? என்ற நிலைகளை நாம் சிந்திக்கவே இல்லை.

எப்படி இருந்தாலும் இந்த உடல் மடிகின்றது. ஆனாலும் உடலிலே வாழ்வதற்குத்தான் இத்தனை செல்வங்களை கோடிக் கோடியாக வைத்துள்ளார்கள்.

இராமயாணத்தில் என்ன செய்கின்றார்கள்…? என்றால் தனுசுகோடி. தனுசு என்றால் இப்பொழுது நான் சொல்லும் உணர்வுகள் உங்களைத் தாக்குகிறது… தனுசு. அதே நேரத்தில் இந்த உபதேசங்கள் உங்களை மகிழச் செய்யும் தனுசு.

தனுசு என்றால் அம்பு சமஸ்கிருதத்தில்…!

கோடிக்கரை என்ற கடைசி எல்லையில் மனிதப் பிறவியில் இப்பொழுது நிற்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் அகற்றினால் தனுசுகோடி.

ஒளி உடல் பெறவேண்டும் என்ற நிலையில் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று அடைய வேண்டும். அது தான் நம் சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள்.

இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கிடுங்கள் – ஈஸ்வரபட்டர்

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவரவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழிபெற்று வந்தார்கள். இன்றும் வருகிறார்கள்…!

“திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா…” என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்றும் நடத்துகின்றனர். அவரின் நிலையென்ன…?

இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்…! அவர் உடலில் செயல் கொண்டவர்… அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி அவ் இசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி.

அத் தியாகராஜரின் உயிராத்மாவே இசையுடன் கலந்து அவ் இசை ஞானம் பொழிந்திடும் இசையுள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையையே பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அவ் இசையுடனே ஒன்றிவிடுகிறார்கள். இசை ஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

1.இசை ஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையெல்லாம்
2.அவர்கள் இசைக்கும் இசையே அவர்களின் உயிராத்மாவையே
3.இசையமுதின் அமில சக்தியை அவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்து
4.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
5.இசைக்கும் இசையெல்லாம் ஈசனின் இசையாக்கி…
6.தன் உயிராத்மாவையே ஈசனாக்கிடும் போது இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ் இசையமுதம் பெரும் சொத்தப்பா…!

இசைக்கும் இசையிலேயே ஒவ்வோர் உடலிலும் உள்ள உயிர் அணுக்கள் அனைத்துமே அவ் இசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில்தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவுமில்லை.

வாழ்க்கையே அமுதிசையாக்கி அப்பக்திச்சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாய் இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. அருள் மணம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்த நிலையுணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

ஒவ்வோர் ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழி நடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால் அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வோர் ஆத்மாவும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டுநிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வழிபெற்று வருகின்றது.
1.ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது
2.இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படித்தான் வளர் நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில்தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனாலும் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு
1.இன்றளவும் ஒவ்வோர் ஆத்மாவும் வழி வந்த நிலையிலேயே
2.நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…!

ஜெப சக்தியினால் நம் உயிராத்மா எந்த நிலை பெறுகின்றது…? ஜெப சக்தியிலிருந்து நம் உடம்பிலுள்ள அமில சக்தியை எப்படித் தூய்மை கொண்டிடலாம் என்பதை உணர்ந்திடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பயன்படுத்த வேண்டிய சரியான முறை

 

நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆர்வப்படுகின்றோம். ஆனால் குழந்தை விளையாடப் போகும்போது ஏதோ ஞாபக சக்திக் குறைவால் படிப்பு குறைவாகி விடுகின்றது.

படிக்க முடியவில்லை என்றால் அவனுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மாறாக நாம் என்ன செய்கின்றோம்…?

அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவன் படிக்கவில்லை என்றால் உடனே அந்த இடத்தில் வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படுத்துகின்றான் என்றால் “அவனுக்கு நல்லதை எடுத்து எப்படிச் சொல்வது…?” என்று புரியவில்லை. உனக்கு எவ்வளவு காசு செலவு செய்கின்றேன்…! நீ இப்படிச் செய்கின்றேயே…! என்று திட்ட ஆரம்பிக்கின்றோம்.

வேதனையாகச் சொல்லப்படும்போது அவனுக்குள் இது பதிவாகிறது. இந்த உணர்வு அங்கு என்ன செய்கின்றது…? அது ஓ…ம் நமச்சிவாய அவன் உடலாகின்றது.

அப்புறம் திட்ட ஆரம்பித்தால் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் “எப்பொழுது பார்த்தாலும் என்னை இப்படியே திட்டுகின்றார்கள்..” என்று இந்த உணர்வு படிக்கப்போகும் போதெல்லாம் அவனுக்கு இந்த நினைவு வரும்.

அடுத்தாற்படி புத்தகத்தை எடுத்தாலே அம்மா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நிலை வராது. இல்லையென்றால் அப்பா திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நினைவு வராது.

அப்போது அது வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்….?

குகையிலிருக்கும் வாலியை இராமன் கல்லைப் போட்டு மூடி அவன் வெளி வராது செய்கிறான் என்று காவியத்தில் காட்டியுள்ளார் வான்மீகி. வேதனை என்ற உணர்வு வந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…?

சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டுமென்றால் அந்த குழந்தையின் மேல் இருக்கும் வேதனையை எடுத்த உடனே உள்ளுக்குள் போகாதபடி அதை மூடி விட வேண்டும்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த நிலைகளைத் தனக்குள் எடுக்க வேண்டும்.

குழந்தை எண்ணி வேதனைப்படுவதை நேர்முகமாகத் தள்ளிவிட்டுப் போக முடியாது. அதற்குத் தான் புருவ மத்தியில் அடைக்க வேண்டும் என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வளர்த்த பின் என்ன செய்கின்றது…? இதோடு (வெளியிலே) நின்று விடுகின்றது.

அதாவது ரிஷியின் மகன் நாரதன்…! அங்கே உருவான உணர்வு உயிரிலே பட்டபின் சக்திவாய்ந்த நிலைகள் கொண்டு அந்தத் தீமைகளை நீக்கும்.

அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே கொண்டு வரவேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…? எல்லாரிடமும் போய்ச் சொல்வான்.

1.இந்திரலோகத்தைக் காட்டி இங்கிருக்கின்ற செய்தியை அங்கே சொல்கின்றான்
2.அங்கிருக்கின்ற செய்தியை இங்கே சொல்கின்றான்… எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கின்றான்
3.இந்தக் கண்களின் இயக்கங்கள் தான் அது…!

அதாவது நம் உடலுக்குள் அந்த கண்ணின் நினைவைச் செலுத்தி என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இந்த உணர்வைக் கொண்டு வந்து இங்கே அடைத்துவிட வேண்டும்.

ஆனால் வேதனையான உணர்வுகளை உள்ளே விட்டால் உடலிலுள்ள அணுக்கள் என்ன செய்யும்…? சாப்பாடு கிடைக்கின்றது என்றால் சும்மாவா இருக்கும்..? முந்திக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உணர்வு அதிகமாக இருந்தால் நம் உணர்ச்சிகள் அனைத்தும் நம் செயல்கள் அனைத்தும் வேதனையும் ஆத்திரமும் கோபமுமாக மாற்றிவிடுகின்றது.

அப்படி ஆகாமல் தடுக்க வேண்டும் என்று தான் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று எண்ணி இங்கே நிறுத்திவிட வேண்டும் என்று சொல்கிறோம்.

அது உடலுக்குள் வலுப்பெற்றபின் என்ன செய்கின்றது…?
1.கெட்ட அணுக்கள் இருக்கிறது அல்லவா…!
2.அதற்கு சாப்பாடு கிடைக்காது செய்கிறது
3.இழுக்கக்கூடிய சக்தி இல்லாது ஆக்குகிறது.

அது தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான் என்பது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்துக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் படைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

மற்ற அணுக்களுக்கு அதனதன் சத்தை இழுக்கக்கூடிய சக்தி இல்லை. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்கே வலுவாக எண்ணும்போது நம் ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளை படிப்படியாக சூரியன் எடுத்துக் கொள்கின்றது. தீமைகளைத் தள்ளி விடுகின்றது.

துணியில் அழுக்குப் பட்டால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கைத் தள்ளி விடுவதைப்போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும்போது இந்த உணர்வு வலிமை பெற… வலிமை பெற… குழந்தை மேல் வரக்கூடிய வேதனையான உணர்வை இங்கே தள்ளிவிடுகின்றது.

தள்ளிவிட்ட பின் என்ன செய்கின்றோம்…? இந்த இடத்தில் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம். அவனுக்கு நல்ல சொல்லையும் சொல்கிறோம்.

நீ படித்துக் கொண்டால் நல்லதப்பா… நீ படிக்கவில்லை என்றால் உன்னை நீ எப்படிப் பாதுகாத்துக் கொள்வாய்…? நீ படித்துத் தெரிந்து கொண்டால் உனக்கு நல்லது. நீ தான் உன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எதிலே குறைவாக இருந்தாயோ அதை நீ இப்படிப் படித்தாய் என்றால் நன்றாக இருக்கும். நீ இப்படிப் படித்து பார்…! இந்த நிலையை இந்த உணர்வைச் சொல்லாகச் சொன்னால் இந்த உணர்வை குழந்தை நுகரும்போது ஓ…ம் நமச்சிவாய.

ஆக… தீமைகளை நீக்கி அந்த அருள் ஒளியை எடுக்கப்படும்போது அங்கே நாரதனாக வந்து சேர்ந்து நம் குழந்தைக்கு ஞானத்தைப் போதிக்கும் தன்மையாக வருகின்றது.
1.அவனைக் கல்வியில் சிறந்தவனாக்குகின்றோம்
2.நம் சொல் அவனை நல்வழிப்படுத்தும் செயலாக வரும்.

சப்தரிஷிகளின் செயல் யாவும் ஆதி சக்தியே…! – ஈஸ்வரபட்டர்

ஆதி சக்தியின் ஜீவசக்திதான் அனைத்துமே…! அந்த ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி வளரவிடுகின்றாள். வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருட்சக்தியின் அச்சக்தியுடனே ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.

இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கு ஒருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பல்ல
2.அவரவர் எடுத்த சுவாச நிலைகொண்டு அமையப் பெற்றது தான் அது.

நல்லவரின் எண்ணத்தை… அச்சக்தியின் நிலையுடன் அச்சக்தியை ஈர்த்து… அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி… அதன் வழித் தொடரிலேயே அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கூடி… அப்பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு… ஆண்டவனின் அருள் பெற்றவனாய்… ஆண்டவனாய்… இன்று சப்தரிஷி நிலைபெற்ற பக்குவம் பெற்ற மகான்கள் பலரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

அவர்கள்
1.இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெறச் செய்து
2.நல் ஆத்மாக்களாய்த் தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக
3.மனித ஆத்மாக்களின் அவ் ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து
4.மற்ற மனித ஆத்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி
5.நல்லுணர்வுகளை அருள் ஞானம் என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.

அந்த நிலை பெற்று வழி வந்த பல மனித ஆத்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு செயல்படுகின்றன…?

ஏசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் ஞானம் கொண்டு வெளி வந்தவர்களின் நிலையெல்லாம் உணர்த்தி வந்தேன். அதாவது அவர்களின் உடலை ஒரு சப்தரிஷி நிலை கொண்டவரின் ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.

பிற உடலில் அவ்வாதிசக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால் இவ்வுலகிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட அவ்வுடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி அருள் புரிந்த பிறகு அவ்வுடலின் ஆத்மாவின் நிலையென்ன…?

ஒவ்வோர் உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில உடல்களை அவ்வுடலில் இருந்து அவ் உயிராத்மா பிரிந்த பிறகு அக்கட்டையான ஜீவனற்ற உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.

உயிராத்மாவுடன் உள்ள உடல்களில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில் அவ்வுடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?

இராமகிஷ்ண பரமஹம்ஸர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்குகந்த ஆத்மாவாய்த் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?

அதற்குப் பிறகு இவரின் உயிராத்மாவின் நிலையென்ன…?

இவரின் உடலிலிருந்து அவ்வுடல் நிலை கெட்ட பிறகு… அவ் உடலில் இருந்து கொண்டு அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்…
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர் சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்வாத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை இவ்வுயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்துக்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல… அந்த ரிஷி வேறல்ல…! என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல் நிலை கொள்கின்றது.

இப்படித்தான் இச் சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன் வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்.

போகருக்குக் குருவாய் அருள் பெற்ற காளியங்கராய சித்தரின் நிலையும் இன்று அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாய் கலக்கப் போகருக்குத் தீட்சை தந்து அவர் நிலையில் முருகா என்ற அருள் உணர்வுடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளி வட்டமாய் தனதாகப் பல சக்தியை ஈர்த்து இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக் கதிர்களைச் சேமித்துச் செயல் கொண்டு வருகின்றார்.

மனித ஆத்மாக்களில் மட்டும எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை. சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலையுண்டு. ஆனால் அவர்களின் நிலையில் நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல் கொள்கின்றது.

1.மனித ஆத்மாக்களுக்குத்தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத் தெரியவில்லை
2.நல்லுணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசையில்லை
3.அன்பென்னும் நிலையைச் சிதறவிட்டு வாழ்கின்றனர்.

உடல் என்ற விதிக்கு இனி செல்ல வேண்டாம்…!

 

ஞானிகள் தெய்வங்களை உருவமாக்கி அதன் மூலம் அருவத்தின் நிலைகளை நாம் எப்படி நுகர்தல் வேண்டும்…? இருளை எப்படி அகற்றுதல் வேண்டும்…? என்று தான் ஆலயங்களை அமைத்தனர்.

இந்த உடலின் இச்சைக்குத் தான் அர்ச்சனை அபிஷேகம் இதை எல்லாம் நாம் செய்கின்றோமே தவிர ஞானிகள் சொன்ன வழியை நாம் எடுக்கவில்லை.

1.அருள் ஞானத்தை நாம் நுகர்ந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கி அதை அர்ச்சனையாக்கி
3.அந்த ஒளித் தன்மையை நமக்குள் கூட்டி நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருள் காண வேண்டும் என்ற உணர்வை நீங்கள் ஆலயங்களிலே தியானியுங்கள்.

இந்த அருள் ஒளியின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரான ஈசனிடம் படப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது. மெய்ப் பொருளை உணர்த்துகின்றது.

இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள்.

ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதிக்கின்றோம். எவருக்கோ காசைக் கொடுத்து அவர் எல்லாம் செய்து கொடுப்பார்… வாங்கித் தருவார்…! என்ற நிலையில் தான் நம்பிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானத்தின் வழி எட்டிப் பார்க்கும் நிலை இல்லை… அதைப் பெறும் நிலையும் இல்லை…!

உயர்ந்த நிலைகளைச் சொன்னால் அதைப் பின்பற்றி அந்த உயர்ந்தது எனக்குள் வளர வேண்டும் என்ற இதைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.

ஒருவன் தீமை என்ற நிலையைச் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அவன் தீமை செய்கின்றான் என்று எண்ணும் போது
1.அதே தீமையை எண்ண எண்ண நமக்குள்ளும் அது வளர்கின்றது.
2.நாமே தீமை செய்வோராக மாறிவிடுகின்றோம்.

அதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஞானிகள் காட்டிய வழி சென்றால் நாம் தெளிவான வாழ்க்கை வாழ முடியும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்.

கடலிலே நீந்திச் செல்லப்படும் பொழுது எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது. நாம் எந்தக் கரையை எல்லையாக வைத்தோமோ அதை அடைய வேண்டும் என்ற மன உறுதி கொண்டால் நாம் அங்கே செல்கின்றோம்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் நம் எல்லை எது…?

உயிருடன் ஒன்றி இனி உடல் இல்லை என்ற நிலை கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியான அந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வுடன்
2.ஒவ்வொரு நொடியிலும் இங்கே வரும் துன்பங்களை அந்த அருள் ஞானம் என்ற துடுப்பை வைத்துத் தள்ளிவிட்டு
3.நம் எல்லை அந்தத் துருவ நட்சத்திரம் தான் என்ற நிலை வரும் பொழுது சங்கடங்களோ மற்ற துயரங்களையோ நாம் நீக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பற்றுடன் பற்ற வேண்டும்.

இந்த வாழ்க்கையில் பாச அலை வரும்… அன்பு அலைகள் வரும்… சங்கட அலைகள் வரும்… வெறுப்பு அலைகள் வரும்… மற்ற குரோத அலைகள் நம்மை எத்தனையோ மோதிக் கொண்டிருக்கும்.

இதில் எதிலே சிக்கினாலும் நாம் மூழ்கிவிடுவோம்.

1.ஆக அதிலே சிக்காதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் துடுப்பாக வைத்து
2.அந்த எல்லையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானமே…!

அத்தகைய அரும் பெரும் சக்தியை நம் குருநாதர் அருளால் உங்களுக்குள் பதிக்க முடிந்தது. அந்த ஞானத்தை உங்களுக்குள் விதிக்க முடிந்தது. இதைப் பெறவேண்டும் என்ற அந்த மதி கொண்டு தீமைகளை மாற்றிட முடியும்.

வாழ்க்கையில் சங்கடம் வேதனை என்று இது அதிகமானால் இந்த விதிப்படி மீண்டும் பிறவிக்குச் செல்கிறது.
1.மதி வழி இனி உடல் வேண்டாம்.
2.மதி என்றாலே ஒளி…! அந்த மதி கொண்டு விதியை வெல்லுங்கள்
3.இனி உடல் என்ற விதிக்குச் செல்ல வேண்டாம்…!

மதி கொண்டு என்றும் நிலையாக இருக்கச் செய்யும் ஒளி என்ற நிலைக்கு வாருங்கள். உங்களால் அதைப் பெற முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். இந்தக் காற்றிலே மகரிஷிகள் உணர்வுகள் உண்டு. அதை நாம் நுகரப் பழக வேண்டும். அந்த வலுவைப் பெறுவோம்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம். அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்வோம். அந்த உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுவோம்.

மற்றவர்களின் தீமைகளை நீக்கி அவர்களையும் மெய்ப் பொருளைக் காணச் செய்வோம்…!

படைக்கும் போதே ஆண்டவன் எல்லாவற்றையும் நல்லதாகப் படைக்கலாம்… ஆனால் ஏன் அப்படிப் படைக்கவில்லை…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கேள்வி:
சர்வ ஜீவ ஜெந்துக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை. மனிதனும் அவ்வண்ணமே படைக்கப்பட்ட பொருள்களில் ஒருவன். மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்கின்றார் என்பது சான்றோர்கள் வாக்கு. அந்நிலையை நாம் அனுசரித்து வருகிறோம்.

1.அப்படி இருக்க தீய எண்ணங்கள் மனதில் ஏன் தோன்ற வேண்டும்…?
2.எப்பொழுதும் நல்லெண்ணமே ஏன் இருக்கக் கூடாது…?

எண்ணத்தை வைத்துதான் செயல்படுகின்றோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களே ஏற்படுமானால் நற்செயல்களே செய்வார்கள் அல்லவா…! தீய செயல்களுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா…! ஏன் அப்படி நடப்பதில்லை…?

ஈஸ்வரபட்டரின் பதில்:
இறைவன் படைத்த படைப்பே நாம். நாம் மட்டுமல்ல, சகலமுமே அதிலே ஐக்கியப்படும். இந்த நிலையில் இயற்கையிலேயே பல மாற்றங்கள் உண்டு.

நீர் மனிதராய்ப் பிறந்துள்ளீர். நாயுமுள்ளது பாம்புமுள்ளது மாங்கனியும் வளர்கின்றது. நச்சுச் செடியும் வளர்கின்றது. மனித ஆத்மாக்களின் நிலையை மட்டும் ஏன் கேள்வியாக்கினீர்…?

இவ்வுலகில் உதித்த உயிர் அணுக்கள் யாவுமே ஏன் ஒன்றைப்போல் ஒன்றில்லை. எண்ண நிலையும் மாறு கொள்கின்றது. உருவ நிலை மற்ற எல்லா நிலைகளுமேதான் மாறு கொண்டுள்ளது. ஒன்றைப்போல் ஒன்றில்லை… ஆண்டவன் படைப்பில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு…? என்ற எண்ணம்தானே உம் எண்ணம்…!

சூரியனிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள் நம் பூமியின் மேல் படும் நிலையில் ஒவ்வொரு நொடிக்குமே மாறு கொண்ட அணுக்கதிர்கள்தான் நம் பூமியில் வீசுகின்றது.

நம் பூமிக்கும் மேல் நம் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள காற்று மண்டலத்திற்கும் மேலுள்ள பால்வெளி மண்டலத்திற்கும் ஜீவனுண்டு… இயற்கைத் தன்மையுண்டு. பால்வெளி மண்டலத்தில் பல நிலை கொண்ட அமிலங்கள் உண்டு.

எல்லாவற்றுக்கும் பொதுவான மண்டலம் தான் பால்வெளி மண்டலம். சுழலும் நிலையில் அப்பால்வெளி மண்டலத்தில் உள்ள அமிலங்கள் பல நிலை கொண்டதாகப் படர்ந்து சுழன்று அதன் ஜீவ சக்தியில் விளையாடுகின்றது.

நம் பூமி சுழலும் வேகத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அப் பால்வெளி மண்டலத்திலுள்ள அமிலத்தில் பட்டு பூமியின் காற்று மண்டலத்திற்கு வருகிறது.

இக்காற்று மண்டலம் சுழலும் நிலையில் பூமியின் ஈர்ப்பு சக்திக்குகந்த அமிலத் தன்மை அவ்வொளிக்கதிர்கள் வீசிப் படர்ந்தவுடன் அந்தந்த நிலையில் அந்நிலைக்குகந்த அமிலங்கள் படர்ந்து அதைப் பூமி ஈர்த்து பூமி விடும் சுவாசத்தைக் கொண்டு அந்நிலையின் உயிர் அணு பிறக்கின்றது.

அதன் தன்மையில் ஏற்படும் அமில சக்தி நிலை கொண்டுதான் பூமியின் இயற்கையில் வளர்ந்திடும் தாவரங்கள்… மற்றக் கனிவளங்கள் எல்லாமுமே.

எந்த அமிலத்தை பூமி ஈர்த்ததோ அந்த நிலைக்கொப்ப சக்தி நிலை வெளிப்படுகிறது. பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மா நிலை பெறுவதற்குள் மனித ஆத்மாக்களுக்குப் பல எண்ண நிலைகள் கூடிவிடுகின்றன.

எந்த எண்ணத்தை அச்சுவாச நிலையுடன் ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டதோ அந்த நிலை கொண்ட அமிலத்தையே ஒவ்வோர் உடலுமே சேமித்துக் கொள்கின்றது.

1.பல ஜென்மங்கள் எடுத்தாலும்
2.உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் உருப்பெறும் நிலையில்
3.அமில சக்தியைக் கொண்ட தொடர்பின் எண்ணமும் அதன் தொடர்ச்சியின் குண நிலையும்தான் அவ்வாத்மாவுக்கு உண்டே ஒழிய
4.அப்பரம்பொருளான ஆண்டவன் அனுப்புவதல்ல நல்லவனை(ளை)யும் கெட்டவனை(ளை)யும்.

இயற்கையின் ஆதி சக்தியின் நிலை பொதுவான சக்திதான். அதிலிருந்து உதித்த உயிரணுக்கள் எடுக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் அதனதன் சக்திதான்.

பரம்பொருள் ஒன்றே…! அப்பரம்பொருளின் பொருட்கள் தான் நாமெல்லாம். அப்பரம்பொருளின் நிலையுடனே ஐக்கியப்பட்டு ஜெபப்படுத்தும் நிலையினால் நம்மையே அப்பரம்பொருளாக்கிடலாம்.

அவரவர்கள் எண்ணும் எண்ணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை…!

இக்காற்றுடன் பல நிலைகளும் கலந்துள்ளன.
1.நல்லெண்ணத்தின் சுவாசமும் இக்காற்றினில்தான் உள்ளது
2.துவேஷ எண்ணத்தின் மூச்சுக் காற்றும் இக்காற்றினில்தான் உண்டு.

நம் வாழ்க்கையுடன் மோதுண்டு வாழும் நிலையில் பல செயல்கள் நடக்கின்றன. அந்நிலையில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு பல நிலைகள் நடக்கின்றன.

நம் ஆத்மாவுடன் நாம் மட்டும் வாழவில்லை. பல கோடி உயிரணுக்கள் வாழ்கின்றன. ஆனால்
1.நமக்குத்தான் நம் ஆத்மா சொந்தம்
2.நம் உடலில் மற்ற உயிரணுக்கள் இருந்தாலும் அதற்கு நம் உடலும் நம் ஆத்மாவும் சொந்தமல்ல.

அதைப் போல் நாம் எடுக்கும் எண்ணமுடன் இக்காற்றிலுள்ள பல அலைகளும் நம் எண்ணமுடன் மோதுகின்றன. இதனால் நம்மை அறியாமலேயே நம்முள் பல எண்ணங்கள் மோதுண்ட நிலையில் பல செயல்கள் நடக்கின்றன.

மனித ஆத்மாவாய் வாழ்வதுவே பெரும் பொக்கிஷம்…!

நம்மையே நாம் மற்றத் தீய அணுக்களுக்கு அடிமைப்பட்டு வாழ்வதினால்தான் நல்லவன்… கெட்டவன்… என்ற நிலை வருவது.

1.ஐந்தறிவு ஆறறிவு என்பதெல்லாம் நம்மால் ஏற்படுத்திய நிலைதான்.
2.மனிதனிலிருந்து நம் அறிவின் நிலையைச் சிதறவிடுவதினால் மிருக ஜெந்திற்குச் செல்கின்றோம்.

நம்மைக் காட்டிலும் நுண்ணிய அறிவு மிருகங்களுக்குண்டு. ஆறறிவு ஐந்தறிவு என்பதல்ல வாழ்க்கையே…!

தீமைகள் நமக்குள் புகாது அடைக்க வேண்டிய இடம் எது…?

 

இராமன் வாலியை மறைந்திருந்து ஏன் தாக்குகின்றான் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

நம் குழந்தை தவறு செய்கின்றான். அதனால் நமக்கு வேதனை வருகின்றது. அந்த வேதனை நம் உடலுக்குள் போனால் இது ஓ…ம் நமச்சிவாய என்று உடலாகின்றது (சிவமாகின்றது).

அந்த உணர்ச்சியின் உணர்வுகள் அங்கே எண்ணங்களாகின்றது சொல்லாக வரப்படும் பொழுது இந்த உணர்ச்சிகள் அங்கே எப்படித் தூண்டுகின்றது…? உணர்வின் தன்மை அணுவாகும்போது நமக்குள் அந்த அணுத்தன்மை எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் அங்கே இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றான்.

இதெல்லாம் நான் (ஞானகுரு) எதற்குச் சொல்கின்றேன் என்றால் பெண்கள் குடும்பப் பற்றுடன் இருக்கப்படும் போது இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாசத்தால் நாம் எப்படியோ நினைக்கின்றோம். ஆனால் சில குழந்தைகளால் எத்தனையோ சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இதே மாதிரி தொழில் நடத்தும்போது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நன்றாக நடக்க வேண்டுமென்று நினைக்கப்படும்போது நம்மை அறியாமலேயே வியாபாரம் கம்மியாகிவிட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.
1.இந்த வாலி உள்ளே புகுந்துவிடுகிறான்.
2.இது நம் நல்ல குணத்தையே கெடுக்கின்றது.

வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். ஒருத்தர் மேல் அதிகமான அன்பையும் பண்பையும் பெற வேண்டும்… சிநேகிதமாக வாழ வேண்டும்… ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம்.

ஆனால் அது சரியாக வரவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. அந்த வாலி என்ற நிலைகள் புகுந்து விடுகின்றான். அந்த வலிமை உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணத்தைப் பாதுகாக்கும் நிலை இல்லை.

ஆக பாதுகாக்க முடியவில்லை என்றால்…
1.நாம் நுகர்ந்த உணர்வோ அது நம் உடலுக்குள் வேதனைப்படுத்தும் கருவாக உருவாகி
2.வேதனை என்ற உணர்வு பிரம்மமாகி அது தன் வேதனையை உருவாக்கும் அந்தச் சக்தியாக
3.தன் இனத்தைப் பெருக்கும் சக்தியாக மாற்றிவிடுகின்றது.

இயற்கையின் நியதிகள் இவ்வாறு தான் இருக்கின்றது. ஆனால் நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது இராமயாணம்.

ஒரு பாறையை வைத்து மேலே கல்லை வைத்திருப்பான். படம் போட்டுக் காண்பித்து அதாவது துவைதம் உருவ நிலையைக் காட்டி அருவ நிலையை நமக்குள் புரிய வைக்கின்றான்.

குகைக்குள் இருக்கின்றான் வாலி…! அரக்கர்களிடம் இருந்தான் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கின்றது.

அப்போது இராமன் என்ன செய்கின்றான்..?

அவன் (வாலி) செயலைப் பார்க்கவில்லை. அந்தக் குகைக்கு மேல் இருக்கும் பாறையை எடுத்து மூடிவிட்டான். மூடி விட்டால் வாலி வெளியில் வருவானா…? முடியாது…!

நம் குழந்தை தவறு செய்கின்றது அல்லது கடையில் நஷ்டமாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அது வலிமை பெற்றுவிடுகிறது.

1.அப்பொழுது சிந்திக்கும் திறமை வருகின்றதா…? வியாபாரத்தைச் சீராக நடத்த முடிகின்றதா…?
2.இந்த உணர்வின் தன்மை நாளை என்ன ஆகுமோ…! என்ற பயம் வருகின்றது
3.நடுக்கம் ஆகின்றது… சிந்தனை இல்லாமல் போகின்றது…!

இந்த எண்ணங்கள் நமக்குள் எப்படி உருவாகின்றது…? நமக்குள் தீமையின் வலிமை எப்படிக் கூடுகின்றது…? நம் மகிழ்ச்சி என்ற உணர்வு எப்படி தடைப்படுகின்றது…?

நாம் இதை எல்லாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

அதாவது வேதனையை நுகர்ந்தால் அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தினை அங்கே நிலை நிறுத்தினால்
3.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.

நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.

நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது… வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது. வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது…! நம் சிந்தனையும் தெளிவாகும்.

அப்போது தொழிலைச் சீராக்கும் உணர்வுகளும் குழந்தைக்கு எப்படி நல் வழி காட்ட வேண்டும் என்ற தெளிந்த உணர்வுகளும் நமக்குள் தோன்றும்.