
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உங்கள் உயிருடன் ஒன்றி உங்கள் கண்களின் நினைவினை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.குருநாதர் காட்டிய அந்த உணர்வின் நிலையை
3.உங்களுக்குள் குருவாக வேண்டும் என்று ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தி அதை இரத்தநாளங்களில் கருவுறச் செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் தியானியுங்கள்.
இப்பொழுது…
1.அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியும்
2.நம் குருநாதர் பெற்ற அந்தச் சக்தியும் கலந்து நீங்கள் நுகரும் பொழுது
3.அருள் சக்தியாக… புதுப் புது தாவர இனங்களின் மணங்களை
4.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக நீங்கள் பெறுவீர்கள்.
5.உங்கள் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் இப்பொழுது உருப்பெறும்.
6.நஞ்சினை வென்றிடும் அபூர்வ மணங்கள் வரும்… அதை நீங்கள் நுகர்வீர்கள்
7.அதை உங்கள் உடலுக்குள் அணுக்கருவாக மாற்றுவீர்கள்.
8.உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவுவதை உங்களால் உணர முடியும். மணத்தை நுகர்ந்தறிய முடியும்…!
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!
முக்கியமான உபதேசங்கள்
தியானத்தின் மூலம் பெறும் வலுவால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும்
வாழ்க்கையே தியானமாக்கினால் மகரிஷிகள் அடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்
இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருமே நீங்கள் அகஸ்தியராக ஆக வேண்டும்
இங்கே போதனை கொடுப்பது சாதாரணமாகவும்… விளையாட்டுக்காகவும் அல்ல…!! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
நம் பூமியின் முக்கியத் தாதுப் பொருள் இரும்பு. இதன் நிலையில் ஒத்த ஜீவ ஜெந்துக்களும் தாவர இன வளர்ப்புகளும் இதன் தொடர் வளர்ச்சியுடையதாகத்தான் வளர்ந்து வந்துள்ளன இன்றளவும்.
எப்படி உலோகங்களிலேயே ஒவ்வொரு உலோகத்திற்கும் அதன் கன அளவுக்குக் கொள்ளளவு நிறையில் வித்தியாசம் உள்ளதோ… அதாவாது ஒரு எடை போடும் தராசில்
1.இரும்பின் கனம் ஒரு கிலோவுக்குள்ள எடையின் கொள்ளளவைக் காட்டிலும்
2.பிற உலோகங்கள் அதிகமாக நிறை தெரிகின்றது அல்லவா…! (உருவ நிலை)
இதன் நிலைக்கொப்ப “நம் பூமியின் நிறை” கனம் பொருந்திய ஜீவ ஈர்ப்பில் நீர் சக்தி வளர்ந்துள்ள இரும்புத் தாதுப் பொருளின் கூடுதல் நிறை கொண்டது அத்தகைய வளர்ப்பில் தான் பூமியில் உள்ள வளர்ப்பு யாவும் உள்ளன.
இன் வரும் காலத்தில் இம்மண்டலச் சேர்க்கைக் காலத்தில் பூமியைப் பாதிக்கவல்ல சில நிலைகள் ஏற்படப் போகிறது.
அத்தொடரிலிருந்து நாம் தப்ப இந்தப் பூமி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய தன்மைக்கு நம் சுவாசத்தில் மேல் நோக்கிய தொடர்புடையதாக சூரிய அலை வட்டத்தில் நுண்ணிய காந்த அலையை நாம் எடுக்கப் பக்குவப்பட வேண்டும்.
அந்த விண்ணின் ஆற்றலை நம் உடல் உறுப்பான எலும்புகளில் சேர்த்து அவ்வலைத் தொடரான குண ஈர்ப்பு வார்ப்பு அணுக்களை இவ்வெலும்புக்குள் ஒளியான அணுக்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒளியான அணுக்களை வளர்க்க வளர்க்க…
1.இச்சரீரக் கூட்டையே பூமியின் பாதிப்பு நிலை ஏற்பட்டாலும்
2.விண்ணின் ஆற்றலை நாம் எடுக்கும் சுவாச அலையின் சுவாச அலை வளர்ப்பினால்
3.இவ்வுடல் வாழ்க்கை இந்தப் பூமியில் வாழ்ந்தாலும்
4.நம் எண்ணத்தில் எடுத்த சுவாசத்தால் தன் ஆத்ம வலு கூடி
5.சூரியக் குடும்பத்திற்குச் சொந்தப்பட்டதாகச் செயல்படத்தக்க பக்குவ ஆத்மாவாகின்றது.
இங்கே பாடத்தில் உணர்த்துவதும்… போதனை தருவதும்… சாதாரண நிலையிலும் விளையாட்டுப் போன்ற உணர்விலும் இருக்கலாம்.
ஆனால் நடக்கப் போகும் காலத்தில்…
1.இனி நிகழ்பவை எல்லாமே ஞானத்தைச் செயலாக்கும் மனிதனின் சித்தமெல்லாம் கலங்கி
2.சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது.
மனிதன் தன்னைத் தான் உணர்ந்து.. ஆத்ம வலுவை உயர் ஞான ரிஷிகளின் அலையுடன் தொடர்பு படுத்தினால் அன்றி… இந்தப் பூமிப் பிடிப்பு சாதாரண வாழ்க்கை நிலையில்.. “தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்…!”
1.ஆத்மாவின் உண்மை அறிந்து
2.ஆத்மாவைக் காணவும்
3.ஆத்மாவுடன் நாம் பேசவும்
4.ஆத்மாவைக் கொண்டே அகிலத்தையும் அறியும் ஆற்றலையும் நாம் பெறும் பக்குவத்திற்கு
5.இச்சரீர எண்ணத்தின் சுவாசத்தை இதுநாள் வரை சொன்ன முறைக்கொப்ப தியானத்தால் வலுக்கூட்டுங்கள்.
சநதிர மண்டலத்தின் ஒளி பிரகாசமாக ஒளிராமல் இருப்பதற்கு அதன் ஈர்ப்பில் பூமியை ஒத்த கனம் பொருந்திய இரும்புத் தாதுப் பொருள் குறைவாக உள்ளது தான் காரணம்.
சந்திர மண்டலத்தைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே மண்ணும் நீரும் கலந்த கனத்த காற்றாக அங்கு வீசிக் கொண்டிருப்பதனால் அதன் ஒளி வீச்சு குறைவாக உள்ளது.
அதைப் போன்று ஒவ்வொரு மண்டலத்திற்குமே தனித் தனி மாறு கொண்ட ஈர்ப்பு நிலை உள்ளது. சூரியக் குடும்ப மண்டலங்களிலேயே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வளர்ப்பிலேயே “பல மாற்றங்கள் உண்டு…”
அதைப் போன்று மனிதனின் எண்ண குணத்திலும் மற்றெல்லா வளர்ப்புத் தன்மையிலும் மாற்றங்கள் உண்டு…!
ஒலி கொண்டு ஒளியான உயிரணு அமிலக்கூட்டு நிலைக்கொப்ப வளரப்பெற்ற வளர்ப்பில்… ஞான வளர்ச்சி கொண்ட மனிதக் கரு வார்ப்பு மனிதன்
1.ஒருவரைப் போன்று ஒருவருக்கு ஞான வழிச் சித்து அமையும் என்று எண்ணாமல்
2.மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பு வலுவினால்
3.தன் ஆத்ம வலுவை தன் அமிலக் கூட்டின் நிலைக்கொப்ப உயர்வாக்கிக் காணுங்கள்.
உங்களால் வரப் போகும் மாற்றத்திலிருந்து விடுபட முடியும்…!
உன் உயிரை நீ ஏன் நேசிக்க வேண்டும்…? என்று கேட்டார் ஈஸ்வரபட்டர்
“ஓ…ம்” என்பது பிரணவம் என்று, நமது சாஸ்திர விதிகள் கூறுகின்றன. நமது உயிர் “ஓ…” என்ற நிலைகளில் நமக்குள் பிரணவமாகி ஜீவனாக இயங்குகின்றது.
“ம்…” என்கிற போது, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் உடலாக அமைகின்றது. அதனால் “ஓ…ம் ஈஸ்வரா…!” நமக்குள் இயக்க சக்தியாக நம் உயிர் இருக்கின்றது, என்ற நிலையை குருநாதர் தெளிவாக உணர்த்தினார்.
ஆகவே நாம் “ஓம் ஈஸ்வரா…” என்று வெறும் வாயில் சொல்வதற்குப் பதில் நாம் எண்ண வேண்டியது நம் உயிரை…! நமக்குள் ஜீவனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும், இச்சக்தியை (“உயிரை”) நீ எப்படி நேசிக்க வேண்டும்? என்று நமது குருநாதர் முதல் நிலையிலே எனக்கு உணர்த்தினார்.
நமக்குள் இருந்து இயக்கும் உயிர், நம்மை எப்படி இயக்குகின்றது என்ற நிலையைத் தெரிவதற்கு, நாம் மனிதனானபின் இந்த உயிரின் நிலைகளை, நாம் அறிந்து கொள்ளக்கூடிய நிலைகள் ஏற்படுகின்றது.
“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” என்று எண்ணும்போது நம் உயிரை, நினைவில் கொண்டு தான் இந்த சொல்லை நாம் சொல்ல வேண்டும். நம் உயிரை நேசிக்கும் நிலையாக அவர் சொன்ன முறைப்படித்தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்.
தள்ளுபடி (OFFER – DISCOUNT) என்ற பெயரில் எதிலே ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்…! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
செல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது
ஞானிகளை அணுகுவோர் உடலுக்கும் செல்வத்திற்கும் தான் கேட்கின்றார்களே தவிர “ஞானத்தைக் கேட்க முற்படவே இல்லை
காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பைப் போல் உயர் ஞான வசத்தின் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
1.ஆத்மாவாகித்தான் சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்
2.சரீர பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.
சரீர எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே தான் செல்லும்.
அத்தகைய சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…
1.எண்ணத்தின் உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்
2.மேல் நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை
3.உடலில் உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்
4.அந்த வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.
இப்படி… சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.
1.இவ்வுடலின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி
2.பால்வெளி மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி
3.உடல் ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.
ஆகவே இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக் கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி… உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.
உடலைச் சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது…!
1.ஆத்மாவின் அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை
2.உடலின் இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்
3.”சகல சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.
ஒரு காந்தமானது எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர் குணத்தை மனிதனே அறிய முடியும்…!”
ஆனால் பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை பெறும் ஞான வழித் தொடர் அறியும் “உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன் ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…?
1.மாறு கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்
2.மண்டலச் சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்
3.ஞானத்தின் ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே
4.மண்டல ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு
5.மனிதனின் எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்
6.மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).
இதிலிருந்தெல்லாம் தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின் உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.
ஞானம் பெற ஆயுசு பத்தாது என்று குருவிடம் சொன்னேன்
நீங்கள் சொல்லும் உயர் ஞானத்தை எல்லாம் பார்ப்பதற்கு எனக்குத் திறன் இல்லை. எனக்கு இந்த ஆயுள் பத்தாது என்று குருவிடம் சொன்னேன்.
ஆயுள் பத்தாது என்ற நிலைக்கு நீ சொல்ல வேண்டியதில்லை, நான் அல்லவா சொல்ல வேண்டும் என்று திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டு வந்தார்.
ஒருவர் திட்டினால் மட்டும் நீ கூர்ந்து கவனித்து, “இருடா, நான் பார்க்கின்றேன் என்று சண்டைக்குப் போகத் தெரிகின்றது. அவனை நீ நினைக்கும்போதெல்லாம், எப்படி உன் உடல் பதறுகின்றது?
அதே மாதிரி நான் சொல்வதை நீ கேட்டுக்கொண்டே வா. நீ அதைப் பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வா. அந்த சக்தி உனக்குள் ஆழமாகப் பதியும்.
அதை நீ திருப்பி எண்ணும்போது, உனக்குள் எப்படி சக்தி கிடைக்கிறது என்பதை மட்டும் நீ தட்டாது கேட்டுக் கொண்டே வா என்று உபதேசித்தார் ஈஸ்வரபட்டர்.
தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி
ஒரு தொழிலை நாம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அதிலே வியாபாரத்தைக் கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து வரும் நிலையில் வேதனை என்று வந்துவிட்டால்
1.பின் தொழிற்சாலைக்குள் நுழையும் பொழுதே நம்முடைய பார்வை
2.அதே வேதனை கொண்ட உணர்வுடன் தொழில் செய்வோரைப் பார்க்க நேரும்.
இந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் நமக்கென்று உற்பத்தியாகும் அந்தப் பொருள்களில் நம்முடைய சோர்வைப் போன்றே உணர்வுகள் இயக்கப்பட்டு தரமற்ற பொருளை உருவாக்கும் நிலை வரும்.
நம்முடைய பார்வையே… இதைப் போன்ற நஷ்டத்தை.. ஒரு இழப்பை ஏற்படுத்தும் தன்மை வருகின்றது. இது இயற்கையின் நியதிகளில் இவ்வாறு வழிப்படுகின்றது.
இது எப்படி நிகழ்கின்றது…?
உதாரணமாக ஒரு பலகாரக் கடையில் கொடுக்கல் வாங்கலில் ஒருவருடன் கொஞ்சம் முறைப்பாகிவிட்டால் அதே உணர்வுடன் பதார்த்தம் செய்யும் வேலைக்காரரிடம் ஒரு வேலையைச் சொனனால் போதும்.
இந்த வெறுப்படைந்த உணர்வுகள் அங்கே அவருக்குள் சேர்ந்து
1.பலகாரம் செய்யும் வேலையை வழக்கமாகச் செய்வதைக் காட்டிலும்
2.ஒரு பிடி உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்
3.அல்லது காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்
4.அதனால் அந்தப் பலகாரம் சுவை கெட்டுவிடும்.
முதலாளியினுடைய உணர்வுகள்… எந்த அளவுக்கு அந்த வெறுப்புடன் இருந்தாரோ… “சரி பணம் எப்படியோ போய்விட்டது…! இனி நாம் கடை வேலையைப் பார்ப்போம்…” என்ற உணர்வுடன் உள்ளுக்குள் செல்வார்.
அங்கே பலகாரத்தைத் தயாரிக்கும் இடத்தில் வேலை செய்வோரிடம் பேசும் பொழுது அன்றைய தினம் பொருள்களில் சுவை கெட்டுப் போய்விடும்… இதைப் பார்க்கலாம்.
ஒரு நான்கு நாளைக்கு இப்படிப்பட்ட பார்வை பட்டால் உற்பத்தியாகும் பொருள்களில் நிச்சயம் சுவை கெட்டுவிடும்.
ஏனென்றால்… நம்மை (முதலாளியை) எதிர்பார்த்துச் செயல்படக்கூடியவர்கள் அவரின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து செயல்படக் கூடியவர்களுக்குள் இந்த வெறுக்கும் உணர்ச்சிகள் பதிவாகி விடுகின்றது.
அப்பொழுது நம்முடைய வெறுப்பான உணர்வே அவர்களை இயக்கத் தொடங்கிவிடுகின்றது. அதனால் நமக்கு நஷ்டமாகின்றது.
இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் தப்புவதற்கு இந்தக் காலை துருவ தியானத்தில்
1.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி தொழில் வளாகம் முழுவதும் படர வேண்டும்
2.இங்கே தொழில் செய்வோர் அனைவருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.இங்கே தயாரிக்கும் உணவை உட்கொள்வோர் அனைவரும்
4.அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் செயல்ப்டுத்த வேண்டும்.
அங்கே தொழிலாளிகள் தொழில் செய்கிறார்கள் என்றால் அவருக்கு இப்படி ஒரு பழக்கத்தைக் கொடுக்க வேண்டும்.
அவர்கள் உயிரை எண்ணச் செய்து…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.இங்கே செய்யப்படும் உணவு வகைகள் அது சீராக அமைய வேண்டும்…
3.இந்த உணவை உட்கொள்வோர் அனைவரும் உடல் நலம் பெறவேண்டும் என்று
4.நாம் எண்ணச் செய்தல் வேண்டும்.
இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் அந்தச் சுவையும் கிடைக்கின்றது. அவர்களும் எல்லோரும் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதை எண்ணும் பொழுது உங்களிடம் வேலை செய்பவர்களுக்கும் உயர்ந்த சக்தி கிடைக்கின்றது.
1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் எண்ணும் உணர்வுகளை
2.இப்படி அருள் வழியில் செயல்படுத்தும் பொழுது அனைவருக்கும் உயர்ந்த நிலை உருவாகின்றது.
3.அதற்காகத்தான் காலை துருவ தியான நேரத்தில் தன் தொழிலை எண்ணி அந்த உணர்வுகளைப் பாய்ச்சச் சொல்வது.
அதே சமயத்தில் தன் குடும்பத்தில் குழந்தைகளுக்கும் சொல்லி அவர்கள் கல்வியையும் நல்லதாக்க வேண்டும்.
முதலில் தாய் தந்தையரை எண்ணச் சொல்லி என் அம்மா அப்பாவின் அருள் வேண்டும் என்று ஆசி வாங்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பின்… தனக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியரை எண்ணி…
1.அவர் சொல்லிக் கொடுப்பது அனைத்தும் என் மனதில் நிலைக்க வேண்டும்
2.அது எல்லாம் மீண்டும் என் நினைவுக்கு வர வேண்டும்
3.எனக்குள் அந்த ஞானம் வளர வேண்டும் என்று
4.அதி காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி குழந்தைகளைத் தியானிக்கப் பழகிக் கொடுக்க வேண்டும்.
ஆசிரியல் தனக்குள் அந்த உயர்ந்த நிலைகளை எப்படிக் கற்றுக் கொண்டாரோ அவருக்குள் விளைந்து… சிந்தித்து வெளிப்பட்ட அந்த நல்ல உணர்வுகள் உண்டு. அதைக் குழந்தைகள் எண்ணி எடுத்தால் இவர்களுக்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கின்றது.
இது தான் விநாயகர் தத்துவத்தில் உள்ள முழுமை.
ஆகவே… அதிகாலை அந்த நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து… நமக்கு எதை எல்லாம் நன்மை பெறவேண்டுமோ அதை எல்லாம் நல்லாதக்க இப்படி எண்ண வேண்டும்.
வண்டல் மண், சாணம், சாம்பல், உப்பு விஷத்தை முறிக்கும் பண்டைய கால உரங்கள்
விஞ்ஞான வளர்ச்சி, காணாமல் போகும் செயற்கை கொள், தீவிரவாதம்
விஞ்ஞானிகள் பெரும்பகுதி தற்கொலை செய்கிறார்கள் – வெளி வருவதில்லை…!
“ஒருவருக்கு விபத்து…” என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் பாசம் கொண்டவரை அது எப்படி இயக்குகிறது…? நடந்த நிகழ்ச்சி
ஒரு சமயம் எனது (ஞானகுரு) மருமகளுக்கு ஒரு விபத்து வந்தது. அவர்களுடைய சகோதரி அமெரிக்காவில் உள்ளது.
இங்கே விபத்தான செய்தியை அமெரிக்காவில் இருக்கும் சகோதரி கேட்ட உடனே என்ன ஆனது…?
அடுப்பில் எண்ணெயை வைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தன் செயலை இழந்து… அந்த வேலையில் தனக்குத் தெரியாதபடி ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடமோ தாமதமான பின்… கொதிக்கும் எண்ணையைத் தூக்கும் பொழுது அறியாதபடி தன் உடலிலே ஊற்றிக் கொண்டது… !
சகோதரிக்கு ஒரு விபத்து ஆனது…! என்ற உணர்வுகள் தெரிந்த பின் இப்படி ஆனது. ஏனென்றால் இருவருமே ஒன்றாகப் பாசமாகப் பழகியவர்கள்… நடந்த நிகழ்ச்சி இது.
எண்ணெய் மேலே கவிழ்ந்த பின் அங்கே நெருப்பும் பிடித்து விட்டது. ஏனென்றால் அமெரிக்காவில் வீட்டிற்குள் உறைபனியின் குளிர் தாக்காமல் இருப்பதற்காக மரங்களை உள்ளே வைத்துத்தான் வீடு கட்டியிருப்பார்கள்.
அதாவது வெளியிலிருக்கும் குளிர் சுவற்றின் வழியாக வீட்டுக்குள் வராதபடி மரப்பலகைகளை வைத்திருப்பார்கள். அது எல்லாமே தீப் பிடித்து எரிய ஆரம்பிக்கின்றது.
1.ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒன்றாக இணையப்படும் பொழுது
2.விபத்துகள் எப்படி உருவாகிறது…? என்று பல முறை யாம் சொல்லியுள்ளோம்.
இது நடந்ததும்… “தீ பிடித்துவிட்டது..” என்று அங்கே அமெரிக்காவிலிருந்து ஃபோன் இங்கே வருகிறது.
1.சகோதரிக்கு ஒரு விபத்தாகி விட்டது…! என்று அந்தப் பாச உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதட்டமான உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
3.அங்கே “தான்” பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் கவனத்தை இழக்கச் செய்து… தன்னையே மறக்கச் செய்கிறது.
4.உடனடியாக அந்த உணர்வுகள் (எங்கே இருந்தாலும்) இப்படி இயக்குகிறது.
பாசத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிறருடைய நிலைகளை இயக்கப்படும் பொழுது தன்னை அறியாமலே இதைப் போன்ற நிகழ்ச்சிகளைச் செயல்படுத்திவிடுகிறது.
மனிதனின் வாழ்க்கையில் அறியாமல் இயக்கும் இதைப் போன்ற தீமைகளிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… என்பதற்காகத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்ட பின் அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கி
1.உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
2.அதனின்று வரக்கூடிய உணர்வுகளை உங்கள் கண்கள் இழுத்து உடலுக்குள் பாய்ச்சச் செய்கின்றது.
அப்பொழுது ஏற்கனவே உங்களுக்குள் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சுவாசித்து உங்கள் உடலுக்குள் பரவச் செய்கிறது. அப்படிப் பரவச் செய்யும் பொழுது… அந்த அணுக்களின் தன்மை…
1.எம்முடைய உபதேசத்தின் மூலம் நீங்கள் கேட்டுணர்ந்த உணர்வுகள் எல்லாம்
2.உங்கள் உடலில் கருவுக்குள் முட்டையாகின்றது.
துருவ நட்சத்திரத்தைப் பற்றிச் சிறுகச் சிறுகத் தியானிக்கும் பொழுதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்தக் கருக்கள் எல்லாம் அணுவாகப் பிறக்கின்றது.
அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தியை எடுத்து எங்கள் உடலில் உள்ள இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானித்துச் சுவாசித்து உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படி நீங்கள் உணவைக் கொடுத்து அதை வளர்க்க வேண்டும். தினமும் செய்து வரும் பொழுது இது சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
முதலில் சொன்ன நிகழ்ச்சி போன்று நம் உடலுக்குள் ஏற்கனவே சந்தர்ப்பத்தால் எத்தனையோ தீமைகள் பதிவாகி இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து வலுவாக்கிய நிலைகள் கொண்டு அந்தத் தீமைகள் நமக்குள் வளர்ச்சி ஆகாதபடி தடைப்படுத்த வேண்டும்,
அதற்குத்தான் இதைச் சொல்வது.
ஈஸ்வரபட்டருடன் ஏற்பட்ட முதல் அனுபவம்
எமது மாமனார் இறந்துவிட்டார். சாமியம்மாவோ (என் மனைவி) இன்றோ நாளையோ என்ற நிலையில் இருந்தார். இவ்வளவு மோசமான நிலையில் அந்தக் கூட்டத்தில் குருநாதர் எம்மைப் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த எமது உறவினர்களும் எம்மைப் பார்த்து அசிங்கமாகப் பேசும் நிலை ஆகிவிட்டது. தெருவில் குடியிருந்தவர்களும் எம்மை ஒரு பைத்தியக்காரன் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்படிப் பல வகையிலும் குருநாதர் எம்மை ஒரு குற்றவாளி ஆக்கிக் கொண்டு வந்தார். எமது மாமனாருக்கான இரண்டாம் நாள் சடங்கு முடிந்து உறவினர்கள் எல்லோரும் அவரவர் ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.
குருநாதர் எம்மிடம் “நீ என்னுடன் வரவேண்டும்” என்று கட்டாயப்படுத்தினார். அவருடன் சென்றேன்.
சாமியம்மாவிற்கு ஏற்பட்டுள்ள நோயையும் அதற்கு டாக்டர்கள் கூறிய மருந்துகளையும் நோயின் தன்மைகளையும் குருநாதர் எப்படியே எம்மிடம் கூறினார்.
“உனது மனைவி பிழைக்க மாட்டார், அவரை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று டாக்டர்கள் கூறியதைக் கூறி “உனது மனைவியைக் காப்பாற்ற ஆண்டவனே வந்துவிட்டான்” என்று சொல்லி சில விஷயங்களைக் கூறினார் குருநாதர்.
உடலை ஆலயமாக மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஞானத்தின் சுழற்சி வட்டச் செயலில் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட சித்து நிலை பெற்றோரின்… .செயல் சித்தைப் பெற்றவர்கள் (பின் வந்தோர்) எப்படியப்பா செயல்பட்டார்கள்…?
1.உண்மை வழி ஆத்ம வலுவை வளர்க்கும் செயல் சித்தை உணராமல்
2.சுயநல ஈர்ப்புப் பிடியில் விருப்பு வெறுப்பு ஏற்பட்ட காலங்களில்
3.ஜெப முறை பக்தி மார்க்கம் சிலை வைத்துப் பூஜித்ததின் செயல் வழி இவற்றின் பிடியிலே சென்று
4.உருவக நாமகரண வேதாந்த பாராயணத்தால் (பல மொழிகளில்) புரிய முடியாத தன்மையில்
5.இறை சக்தியின் உண்மை ஆத்ம வலுவை ஒவ்வொரு ஆத்மாவும் உணர முடியாமல் சென்று
6.இச்சரீரப் பிடிப்பின் அலைத் தொடரில் தான் இன்று வரையும் வாழ்க்கை பந்தம் உள்ளது.
பெற முடியாத பொக்கிஷமான ஞான வளர்ப்பின் சரீரத்தை… (மனித உடலை) அதன் உண்மை நிலையை அறியவில்லை… அறிய முற்படவும் இல்லை…!
1.சரீரம் என்பது நாம் தங்கி எடுக்கும் புனிதமான கோவில் தான்…!
2.அவ்வாத்மாண்டவனை வளர்க்கும் இல்லமாக எண்ணாமல்
3.சரீரத்தைத்தான் “நான்…!” என்ற சுகபோகச் சுவையில்
4.உண்டு கழிக்கும் நிலையில் நாம் வைத்துள்ளோம்.
ஆக… உண்மையான பேரானந்தத்தை வளர்க்கும் ஆலயத்தை செயற்கை இயந்திர கதியைப் போன்ற… “உண்டு கழிக்கும் இயந்திரமாகத் தான்” நாம் வைத்துள்ளோம்.
இவ்வுலக ஈர்ப்பில் உள்ள நன்மை தீமை என்ற வட்டத்தில்… தீமையில் நன்மையைக் காண்பதைப் போன்று உணர்வில் மோதும் செயலில் ஏற்படும் எண்ணக் கோவையில் நாம் எடுக்கும் உணர்வானது… நல்வழிப்படுத்தும் செயல்வழி சேமிப்பாக இச்சரீர ஈர்ப்பு சமைத்து… இவ்வாத்ம வலுவின் வலுக்கூடிய தன்மையை செயல் சித்திற்கு ஆரம்பக் காலங்களில் செயல்படுத்தலாம்.
உயிரை விட்டு ஆத்மா பிரிந்து செல்லுமா…? உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது. இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா…? முடியும்.
எப்படி நிலைக்கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்த்தால் எதிர்பிம்பம் தெரிகின்றதோ… அதைப் போன்றே இவ்வாத்ம பிம்பத்தைப் பார்க்கவும்… இவ்வாத்ம அலையைச் செலுத்தி எச்செயலிலும் ஊடுருவி ஒவ்வொரு நிலையையும் அறிய முடியும் என்பதை ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.
இச்சரீர பிம்ப செயலில் நற்குண அலைத் தொடரினால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வளர் தன்மையின் செயல் சித்தின் செயல் முறையினால் தான் ஞானத்தின் தொடரைப் பெற முடியும்.
1.விருப்பு வெறுப்பற்ற உண்மை வலுவின் அலைத் தொடரின் வளர்ச்சி கொண்டு
2.வேறு எந்த ஒரு ஈர்ப்பின் பிடியில் சிக்காமல் உயர் வழியில் சென்று
3.“என்றுமே அழியாத் தொடர் வழி வளர்ப்பை வளர்க்க முடியும்…!”
4.இந்தச் செயல்வழியின் உண்மைச் சித்தறியும் வழி பெற்ற ஆத்மாக்கள்தான்
5.உயர் வழித் தொடர் கொண்ட “ரிஷித் தன்மை” பெற முடியும்.
பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி நல்ல உணர்வை ஊட்ட வேண்டும்
குடும்பத்தை அருள் வழியில் நடத்துங்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும் முறைகள்
விஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி
நெசவுத் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு கணவன் மனைவி அவர்களுக்கு நான்கு குழந்தைகள். ஒரு சமயம் ஆஸ்த்மா நோயால் கணவர் மிகவும் அவதிப்பட்டார்.
ஓரளவுக்குச் செல்வத்தைச் சம்பாரித்து எளிய குடும்பமாக இருப்பினும் தன் மனைவி மீது இருந்த அந்தப் பற்றின் தன்மையும் குழந்தை மீது இருந்த பற்றின் தன்மையும் கொண்டு தான் அவர் வாழ்ந்தார்.
ஆனால் தன் நோயினால் அதைத் தாங்காத நிலைகள் கொண்டு விஷத்தை உணவாக உட்கொண்டு விட்டார். அவரின் ஆன்மா பிரிந்து விட்டது.
பிரியும் பொழுது தன் மனைவியின் நினைவாகவே ஆன்மா சென்றதால் மனைவியின் உடலுக்குள் சென்றுவிட்டது.
ஆன்மா மனைவி உடலுக்குள் சென்ற பின் அவர் விஷத்தைக் குடித்த பின் அவர் உட எப்படித் துடி துடித்ததோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடி துடிப்பு வந்துவிட்டது.
1.அந்த ஆன்மா மனைவியின் இரத்தநாளங்களில் சுழன்று வரப்படும் பொழுது
2.சிறுமூளை பாகம் சென்ற பின் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அ
3.தே உணர்வு அதே சொல் அதே செயலாக வருகின்றது.
இப்படித்தான் அந்த உடலை இயக்கிக் கொண்டிருந்தது.
என்னிடம் (ஞானகுரு) அவரை அழைத்து வந்தார்கள். தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.
இதற்கு முன்னாடி ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிறிது நேரம் அந்த உணர்வின் இயக்கம் இருக்கும். பின் சரியாகப் போகும் ஆனால் இப்பொழுது இந்த இரண்டு நாட்களாக மிகவும் மோசமாகிவிட்டது என்றனர்.
ஆவிகளை ஓட்டுபவர்களிடம் எல்லாம் சென்று நாங்கள் பார்த்தோம். செல்வங்களை எல்லாம் செலவழித்தோம். வறுமைக் கோட்டில் மிகவும் வாடிக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் என்னிடம் சொல்கிறார்கள்.
அப்பொழுது அந்த அம்மாவுக்கு நினைவு இல்லை. குழ்ந்தைகளும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
குடும்பத்தைச் சார்ந்தோருக்கு விவரத்தைச் சொல்லி இந்த முறைப்படி தியானமிருங்கள் என்று சொன்னேன்.
1.அந்த உடலில் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும்.
2.அந்த உடலில் உள்ள ஆன்மா அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்.
3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்லச் சொன்னேன்.
அதன் வழியிலே அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் செய்தார்கள். என்னிடம் வந்திருக்கும் பொழுது ஒரு அரை மணி நேரம் இதைச் சொல்லிச் செய்தார்கள்.
அந்த அம்மாவிற்குச் சிறிது தெளிவாகியது. பின் எழுந்த பின் இதே போன்று அவர்களிடமும் விவரத்தைச் சொன்ன பின் அவர்களும் இதே போல் நினைவைச் செலுத்தினார்கள்.
பின் பரிசுத்தமாகியது…!
பின் அந்த அம்மாவுக்கு நல்ல நிலைகள் வந்து அவர்கள் குடும்பத்தைப் பேணிக் காக்கும் நிலையும் வந்தது.
கடைசியில் இறந்த பின்…
1.அந்த ஆன்மாக்கள் இரண்டுமே ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது. ஒளி பெறும் சரீரம் பெற்றது.
இது இருபத்தைந்து வருடம் முன்னாடி நடந்த நிகழ்ச்சி. (ஞானகுரு உபதேசம் செய்தது 1997).
ஆரம்ப நிலைகளில் நான் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றி வரும் பொழுது இத்தகைய நிலைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வந்தது.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் இப்படி எளிதில் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப முடியும்.
காசு கொடுத்துத் தான் சாமி கும்பிடுகின்றோம்…
சாமி போட்டிருக்கும் நகையைப் பார்த்தால் வீட்டில் நகை இல்லையே என்று அழுகை வருகிறது. குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் அங்கே சொல்லி முறையிட்டு காசைக் கொடுத்து அர்ச்சனையோ அபிஷேகமோ செய்தால் அந்தத் தெய்வம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம். விநாயகரைக் கும்பிடாமல் போனால் ஆலயத்திற்குள் சென்றால் பலன் இல்லை என்றால் குறைந்த பட்சம் அதையாவது ஞானிகள் சொன்ன வழியில் அறிந்திருக்கின்றோமா என்றால் இல்லை.
எண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.
இவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.
1.”ஐம்புலனை அடக்கி…!” நாம் பெறும் தியானம் என்பது
2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்
3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்
4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை
5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.
உறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.
ஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்
1.ஒளி
2.ஒலி
3.உணர்வு
4.எண்ணம்
5.சுவாசம் என்ற
6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்
7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.
8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.
எண்ணத்தின் உணர்வை
1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க
2.இனிது வாழும் வாழ்க்கையில்
3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு
4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக
5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.
இனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…
1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்
2.உண்மையான இறை நிலையை வளர்க்க
3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.
போகர் தண்டாயுதபாணி சிலையை உருவாக்கியதன் “மகத்துவம்…”
https://omeswaragurudeva.blogspot.com/2020/01/blog-post_23.html
அதிகம் கோபப்படுபவர்களின் செயலும் முடிவும்
ஒரு இலட்சம் லாட்டரியில் கிடைத்தால் உணர்வின் இயக்கம் எப்படி இருக்கும்…?
கோப உணர்வு நம் உடலுக்குள் எப்படிப் பரவுகின்றது…?
பிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”
ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தன் தாய் தந்தையரின் அரவணைப்பிலேயே வளர்ந்து வந்தாலும் அவன் இளம் குழந்தையாக ஐந்து வயது இருக்கப்படும் பொழுதே தாய் தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றனர்.
அவர்கள் ஆன்மாக்கள் பிரியும் பொழுது தன் குழந்தையின் பால் நினைவைச் செலுத்தி அதே ஏக்கத்திலேயே பிரிந்ததால் அகஸ்தியன் உடலில் புகுந்து விட்டனர்.
அகஸ்தியன் உடலுக்குள் வந்த நிலையில்
1.அகஸ்தியன் தாய் தந்தையர் எந்தெந்த வழியில் அவர்கள் தங்கள் செயல்களைச் செயல்படுத்தினார்களோ
2.அதை எல்லாம் அகஸ்தியன் உடலிலிருந்து அந்த உணர்வைப் பெறும்படி செய்து அந்த உடலை இயக்கினார்கள்.
அகஸ்தியன் அவன் வளர்ந்த நிலையில் பதினாறாவது வயதில் திருமணமான பின் இருவரும் கணவனும் மனைவியுமாக நம் பூமியின் துருவத்தின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டார்கள்.
துருவத்தின் ஆற்றலைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு வளர்ச்சி அடைந்த பின்
1.அவர்கள் இருவரது ஆன்மாக்களும் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது
2.அவருடைய தாய் தந்தை ஆன்மாக்களும் கலந்தே விண் செல்கிறது.
3.இப்படி நான்கு பேருடைய உணர்வுகள் கலந்து உருவானது தான் “துருவ நட்சத்திரம்…”
அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி நுகர்ந்தறிந்த ஆன்மாக்கள் ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது ஒளியாகப் பெற்றவர்கள் துருவ நட்சத்திரதின் ஈர்ப்பு வட்டதிற்குச் சென்று என்றுமே ஒளியின் சரீரமாக “சப்தரிஷி மண்டலங்களாக” வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
1.இப்படி அந்த அகஸ்தியன் காலத்தில் அவனுடன் இணைந்த நிலையில் விண் சென்றவர்கள் ஏராளம்…!
2.அது தான் முப்பத்து முக்கோடி தேவர்கள் – சப்தரிஷி மண்டலம் என்று சொல்வது.
உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் குடும்பங்களில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பற்றுடன் வாழும் நிலையில் மனைவி மேல் பற்று கொண்ட நிலையில் கணவன் உடலை விட்டுப் பிரிந்தால் மனைவியின் உடலில் சேர்ந்து இந்த உணர்வுகள் ஒன்றி வாழும்.
அதே போல் கணவன் மீது பற்று கொண்ட நிலையில் மனைவி உடலை விட்டுப் பிரிந்தால் அந்த ஆன்மா கணவன் உடலுக்குள் சேர்ந்து ஒன்றி வாழும்.
இப்படிப் பற்று கொண்டு வாழும் நிலையில் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானம் செய்து ஒன்று சேர்ந்தால் அடுத்து…
1.கணவன்/மனவியின் ஆன்மா பிரியப்படும் பொழுது
2.கணவனுடன்/மனைவியுடன் இணைந்தே சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படுகின்றது.
3.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைக்கப்பட்டு
4.இரண்டு ஆன்மாக்களும் ஒன்றாக இணைந்து
5.விண்வெளியிலிருந்து வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றார்கள்.
6.என்றும் பிறவியில்லா நிலை அடைந்து அகண்ட அண்டத்தில் “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைய முடிகின்றது.
கணவன் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மா மனைவியின் உடலுக்குள் செல்வதும் மனைவியின் ஆன்மா பிரிந்த பின் கணவனின் உடலுக்குள் செல்வதும்
1.இதைப் போன்ற பற்றுதல் இருந்தால்
2.அந்த ஆன்மாக்கள் எளிதில் ஒளியின் சரீரங்களைப் பெற்றுவிடுகின்றது.
ஆனால் இன்றைய வழக்கப்படி செய்யும் சாங்கிய சாஸ்திரங்களால் இந்த நிலையை அடைய முடிவதில்லை. பற்று கொண்ட நிலையில் மீண்டும் பிறவிக்கே வருகின்றது.
ஆகவே இதைக் கேட்டுணர்ந்தோர் ஒவ்வொருவரும் கூட்டுத் தியானத்தில் இருக்கும் பொழுதும் சரி… அதிகாலை துருவ தியானத்திலும் சரி…
1.கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும்
2.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வது மிகவும் நலம்…!
நல்லவரைக் கெட்டவராகவும் கெட்டவரை நல்லவராகவும் காட்டும் விசித்திரம்
நல்லதை நம்மால் ஏற்றுக் கொள்ளாத பண்புகள் சில நேரம் நம்மை இயக்குகிறது. இதன் காரணம் என்ன…? என்று சிந்திக்கின்றோமா…? நம்மை நாம் பக்குவப்படுத்துகின்றோமா…? நல்லவரைக் கெட்டவராகவும் கெட்டவரை நல்லவராகவும் விடாத நிலைகளில் நம் மனம் தான் அப்படிச் செயல்படுகின்றது…!
செயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
அன்றைய ஞானிகள் காட்டிய “ஞானச் சித்தின் செயல் வளர்ப்பு…” வளர்ந்துவிட்ட மனித ஆத்மாவின் சரீர வளர்ச்சியின்
பெருக்கத்தால் இன்றளவும் வளரவில்லை. உயர் ஞானத்தின் செழிப்பைக் காண முடியவிலை.
இன்று பக்தி மார்க்கம்… மத வழி போதனை… விஞ்ஞானச் செயல் எல்லாமே செயற்கை உருவாகத் தான்… செயற்கை உல்லாசப் பிடிப்பு வாழ்க்கையுடன் ஒன்றியதாகத் தான் உள்ளது.
இவாத்மாவின் உண்மை நிலை அறியாத தன்மையில்… உலக நிலையே மாசு கொண்ட நிலையில்… எண்ணத்தின் ஈர்ப்பு வட்டமே பேராசைப் பிடியில் சிக்குண்ட நிலையில் உள்ளது.
இப்பூமியில் உள்ள சத்து நிலையையே செயற்கையின் செயலுக்காக வளர்ப்பின் தன்மை குணங்களை இம்மனித விஞ்ஞானம்… தொடர்ந்து பிரித்துக் கொண்டே உள்ளது.
சூரிய இயக்கத்தின் நுண்ணிய கதிரியக்க வலுவைப் பிரித்து அதை வைத்து பல பல வேலைகளைச் செய்கிறார்கள். இப்பூமியில் சில பாகங்களில்
1.இவ்வரசியல் நாட்டுப் பற்றின் விஞ்ஞான வேவு செயலுக்காக
2.ஒருவரை ஒருவர் அழிக்க அந்தச் சூரிய அலைக் கதிரின் சக்தியைக் கொண்டே
3.செயற்கை நிலையில் நில அதிர்வுகளையும் எரிமலை வெடிப்புகளையும்
4.இன்றைய விஞ்ஞானச் செயல் செய்விக்கின்றதப்பா…!
பிற கோளங்களுக்கு ஏவப்படும் ஏவுகணையில் வீரியமான கதிரியக்கச் சக்திகளைச் சேமிக்கப்பட்டு அனுப்புவதால் அதன் இயக்கத்தின் அலை வீச்சின் தொடராகத் தான் பூமியில் இன்றைய மனிதனின் விஞ்ஞானச் செயல் செல்கின்றது.
இத்தகைய தொடரினால் மனித உணர்வின் எண்ணங்கள் அனைத்தும் சிதறுண்ட குண வட்டங்களாக இன்றைய பூமி ஆத்மாக்களின் தன்மை உள்ளது.
இதன் இயக்க வட்டத்திலிருந்து தன் ஞானத்தால் ஆத்ம வலுவைப் பெருக்கிக் கொண்டால் இவ்வாத்ம வலுவானது எவ்வீர்ப்புப் பிடியிலும் சிக்காமல் இருக்கலாம்.
ஞான ஈர்ப்புத் தொடர்பில் பெற்ற ஆத்ம பலத்தைக் கொண்டு இப்பூமியின் நிலையே மற்றெந்த செயல் பிடிப்போ எவற்றிலுமே இவ்வாத்மா சிக்காமல் உயர் சக்தி கொண்ட ரிஷி அலையுடன் தொடர்பு கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல்…
1.இந்தச் சூரியக் குடும்பமல்லா மற்ற சூரியக் குடும்ப அலைத் தொடரிலும்
2.நம்மைக் காட்டிலும் ஞான வலுக் கொண்ட ஆத்மாக்களின் மனித வாழ்க்கை முறையையும் காண முடியும்.
மேலும் ஆதிசக்தியின் சக்தி வார்ப்பின் தொடர் அனைத்தின் கூட்டுச் சேர்க்கை வார்ப்பையும்… மாற்றத் தன்மையையும் வளர்த்துக் கொள்ளும் சக்தி வலு அனைத்தையும் காண முடியும்.
பிறவா வரம் என்பது… ஞான வார்ப்பின்… சித்து நிலை வளர்ப்பின் வளர்ப்பை வளர வைக்கும் அந்த வலு சக்தி தான் “பிறவா நிலை…!
ஆகவே
1.மனிதனின் உண்மையை மனிதனே அறியாமல்
2.தன்னைத் தானே செயற்கைக்கு அடகு வைத்து
3.மீளமுடியா வட்டிச் சுமையாக மூழ்கி விடும் தன் நிலை இழக்கின்ற இன்றைய கலி காலத்திலிருந்து
4.இந்த உடலின் உண்மைத் தத்துவ உயர்வை உணரும் ஆத்மாவாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆகுங்கள்.
கண்ணணான கண்களின் இயக்கங்களையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி வியாசக பகவான் உணர்த்தியது
நம் நினைவாற்றல் கொண்டு கண் வழியாக அருளைப் பாய்ச்சி மற்றவர்களின் தீமைகளைத் தடுக்கும் பயிற்சி
உங்கள் கண்ணின் கருவிழிக்கு யாம் கொடுக்கும் உயர்ந்த ஆண்டென்னா பவர்
நாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் சத்தெடுத்து இவ்வுடல் பிம்ப ஆத்மாவிற்குச் சித்தாக்கி ஒளி பெறும் வளர்நிலையாகி வளரின்பம் நாம் பெற முடியும். இருந்தாலும்…
1.இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் சத்தானது
2.ஞான வளர்ப்பு கொண்ட நிலை பெற்றால் தான்
3.சித்து நிலையைப் பெற முடியும்.
மனித எண்ண ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்த அன்றைய அரசர்கள் காலத்தில் சித்து நிலை பெற்றவர்களின் செயல்கள் எப்படி இருந்தது..?
தான் பெற்ற சித்தைக் கொண்டு அரசைக் காக்கவும்… தன் குடும்பச் சுழற்சியின் ஈர்ப்புப் பிடியிலும்… தன் சித்து நிலையின் சக்தியைச் சிலர் செயல்படுத்தினர். தான் பெற்ற சித்தை இயற்கையை வளர்க்கும் நன்மைக்குப் பயன்படுத்தவில்லை.
இயற்கை என்பது என்ன…?
அதாவது… இப்பூமியின் வளர் நிலைத் தொடர் அணு வளர்ச்சியின் செயலில் எல்லாம் அணுவுக்குள் அணுவாக… உயர் அலைத் தொடரில் சூரிய அலையின் அலைத் தொடர்புடன்.. தன் ஆத்ம அலையைச் செயல்படுத்தவில்லை.
மாறாக… தன் ஜீவ சரீர இயக்கத்திலேயே சித்துக்களைச் செயல்படுத்தினர்.
1.உடலைக் காக்கும் சித்துக்களையும்
2.அதற்குண்டான ஞானங்களையும் தான் செயல்படுத்தினர்.
இன்றளவும் அந்த ஆத்ம உணர்வு ஞானச் சுழற்சியில் தான் அத்தகைய சித்து நிலை கொண்டோரின் நிலையுள்ளது. உயர் ஞானச் சித்தை எட்டிப் பார்க்கும் நிலை இல்லை.
ஏனென்றால்…
1.காரிய சித்துடனே தன் ஞானச் சித்தை இவ்வீர்ப்புப் பிடியில் சுழல விடாமல்
2.அணுவுக்குள் அணுவாக இவ்வுலக வளர்ப்பு வளர்ச்சி அணுவுடனும்
3.இவ்வுலகையே வளர்க்கும் சூரியக் குடும்பமான நாற்பத்தி எட்டு மண்டலத் தொடர்பிலும்
4.இந்நாற்பத்தி எட்டின் வளர்ப்பான வளரும் பன்னிரெண்டு கோள்களிலும்
5.ஒவ்வொன்றின் தொடர் வளர்ப்பிலும் தன் காரிய சித்து ஆத்ம செயலைச் செயல்படுத்தி
6.இதைப் போன்று சுழலுகின்ற ஏனைய எண்ணிலடங்காச் சூரியக் குடும்பங்களில் செலுத்தப்பட்டு
7.அங்கிருக்கும் பல கோளங்களின் உண்மையையும் இந்த ஞானத்தால் பெற்று
8.காரிய சித்தை மேல் நோக்கிய ஈர்ப்பு வட்டத்தில் (இது முக்கியம்) இவ்வுயிராத்மாவை வளர விட வேண்டும்.
சித்தான நிலையில் தான் பெற்ற வளர்ப்பு நிலையை எவ் ஈர்ப்புப் பிடியிலும் நிலைக்கச் செய்யும் செயலாக இக்காரியச் சித்தை நிலை நிறுத்தக் கூடாது.
அதைப் பெறுவதற்காக வேண்டி.. குடும்பத்தை விட்டுவிட்டோ… காட்டிற்குச் சென்றோ… துறவு பூண்டோ… செல்லாமல் இந்தப் பூமியின் வாழ்க்கைப் பிடியின் சத்தெடுக்கும் வழியிலேயே தான் அந்த ஆத்ம சித்தைப் பெறவேண்டும்.
தினசரி வாழ்க்கையில் ஏற்படும் தொடர் நிலைகள் ஒவ்வொன்றிலும்
1.தீயவை… நல்லவை… என்ற தன் ஈர்ப்பின் எண்ணத்தை
2.துவேஷத்திற்கோ புகழுக்கோ செலுத்தாமல்
3.முள்ளை (வேலி முள்) நாம் பாதுகாப்பிற்கு வேலியாக உபயோகித்துச் செயல்படுத்துவதைப் போன்று இருத்தல் வேண்டும்.
அதாவது…
1.தீயவை என்ற நிலையிலிருந்து… அதிலிருந்தே…
2.நாம் அறிந்த முறை கொண்டு… மீண்டும் அதில் போய்ச் சிக்காமல்
3.அதன் செயலின் உண்மையை உணர்ந்து
4.நமக்குப் பாதுகாப்பு வேலியாக – அதை நன்மைப்படுத்தும் பக்குவத்தை நாம் பெறல் வேண்டும்.
இனிமை உண்மை நிலையிலேயே இவ்வெண்ணத்தின் செயலைச் சுழலவிடாமல்… “செயல்படும் ஒவ்வொரு செயலையுமே… இனிமை ஆனதாக…” இவ்வாத்ம அலை பெறகூடிய தன்மைக்குத் தன் ஞானம் செல்ல வேண்டும்
1,இனிமைக்காக ஏங்கும் ஏக்கத்தின் வார்ப்பாக இவ்வுடலின் அமில உராய்வு இல்லாமல்
2.இனிமையை வளர்க்கும் அமிலமாக
3.இவ்வெண்ணத்தின் உணர்வைச் சுவை கொண்ட சத்தாக இப்பூமி ஈர்ப்பு வாழ்க்கையிலிருந்து சத்தெடுத்து
4.ஞானச் சித்தை வளர்க்க வேண்டும்.
தெய்வத்திற்குச் சக்தி ஏற்றுகிறார்கள் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன…?
நேற்று வரை ஒரு கோவில் பழமையாக இருந்தாலும் அங்கே யாகங்களையும் மற்ற அபிஷேகங்களையும் செய்து கூட்டங்களைக் கூட்டி மந்திரங்களை ஜெபிக்கின்றார்கள். பின் இந்தத் தெய்வத்திற்கு இன்னென்ன செய்தால் அது உனக்கு அதை எல்லாம் செய்யும் என்று இப்படிப்பட்ட ஆசையைத் தான் ஊட்டுகின்றார்கள். தெய்வத்திற்கு எதையாவது செய்து வரம் வாங்கும் நிலையில் தான் இருக்கின்றோம். கடைசியில் இந்தத் தெய்வத்திற்காக எல்லாம் செய்தேன்… ஆனால் தெய்வம் என்னைக் கைவிட்டு விட்டது… என்னைச் சோதிக்கின்றது…! என்று சொல்கிறோம். உண்மையின் நிலைகளை அறிய முடியவில்லை.
அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி
நம் உயிர் குருவாக நின்று… நாம் எண்ணியதை எல்லாம் ஈசனாக இருந்து… அந்த உணர்வுகளை எல்லாம் நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றிக் கொண்டேயிருக்கின்றது.
அதே சமயத்தில் அத்தகைய கருவின் தன்மை பெறச் செய்வதற்கு உயிரே குருவாக இருக்கின்றது.
அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்பொழுது ஏங்கித் தியானிப்போம். நமது குரு ஈஸ்வரபட்டரின் அருள் சக்தி பெற்று வழியில் இதை நாம் எண்ணி நுகர வேண்டும்.
அப்படி நுகரப்படும் பொழுது…
1.குரு வழியில் அகஸ்தியன் அருளை எளிதில் பெறலாம்.
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான
3.அந்த உணர்வின் வழி நடந்து சென்ற ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சென்ற
4.சப்தரிஷி மண்டலமாக அடையும் நிலையை நீங்கள் பெறலாம்.
1.அவன் பெற்ற சக்திகள் உங்கள் அருகிலேயே வந்தது போல் இருக்கும்.
2.அவன் நுகர்ந்த அந்த மகா பச்சிலையின் மணங்கள் உங்களுக்குள் வரும்.
3.அந்த மணங்கள் உங்கள் உடலுக்குள் புதுமையான நிலைகளில் ஊர்ந்து செல்லும்.
உங்கள் உடலில் உள்ள தீமைகளை அகற்றும் வல்லமை பெற்ற சக்தியாக… நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வாக… நீங்கள் நுகரும் தன்மை பெறுகின்றீர்கள். அந்த அணுவின் தன்மையை உடலுக்குள் கருவாக உருப்பெறச் செய்யும் சக்தியும் பெறுகின்றீர்கள்.
கருவுறும் அந்த உணர்வின் கருவிற்கு ஞானிகளின் உணர்வைச் செருகேற்றி… ஞானிகளைப் பற்றி யாம் உபதேசித்த பல கலவைகளையும் சேர்க்கும் பொழுது அதுவும் அணுக்கருக்களாக உங்கள் இரத்தநாளங்களில் கலந்து பரவும்.
இப்படிப்பட்ட அரும் பெரும் சக்திகளை உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து இயக்கிடும் சக்தியாக வருகின்றது.
அகஸ்தியன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது. நினைக்கும் பொழுதெல்லாம் அந்தச் சக்திகளை நீங்கள் பெறலாம்.
அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்பொழுது யாம் (ஞானகுரு) பதிவு செய்த எண்ணத்தால் உருவாக்கப்பட்டது அனைத்தும் உங்களுக்குள் நின்று அது வலுவாக இயக்கும்.
1.அந்த உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது
2.அகஸ்தியனைப் பற்றிய எண்ணங்கள் கண்ணிற்கே நினைவு வருகின்றது.
அதாவது… யாம் சொல்லும் சொல்லின் நிலைகளை உங்கள் கண் பதிவாக்கி அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது கண்ணால் தான் பதிவாகின்றது.
1.அது தான் ஹரி…! – அறியக் கூடிய அறிவு
2.சூரியனால் இயக்கப்படுகின்றோம் – ஹரி கிருஷ்ணா
3.கிருஷ்.. என்றால் பதிவாக்கக்கூடிய நிலை.
அப்படிப் பதிவான பின் அந்த உணர்வுகள் எண்ணமாகும் பொழுது “ஹரிராமா” அந்த எண்ணத்தை எண்ணி மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வந்தால் “ஹரிகிருஷ்ணா”
1.கண்ணின் நினைவு கொண்டு எண்ணத்தால் உள்ளுக்குள் பதிவாகி
2.மீண்டும் எண்ணத்தில் வரப்படும் பொழுது அந்தப் பதிவின் நிலையே நுகர்ந்து
3.உடலுக்குள் அணுவின் கருவாக மாற்றும் திறன் வருகின்றது.
அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா எனறு ஏங்குங்கள்
உபதேசிக்கும் உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கும் எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கபப்டும் பொழுது கண் வழி அதை நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.
நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி உணர்வின் அணுவாக மாறி இரத்தநாளங்களிலே கருத்தன்மை அடையும் கருக்களாக அது உருவாக்கப்படுகின்றது.
அந்த அகஸ்தியமாமகரிஷ்யின் அருள் சக்திகளை ஏங்கிப் பெறும் நோக்கத்துடன் தியானிக்க வேண்டும்.
1.தியானம் என்பது வெறும் சொல்லாகச் சொல்லி அப்படியே விட்டிடாது
2.அவருடைய அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.
அந்த அருள் மகரிஷி நஞ்சினை வென்றிடும் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் அணுவின் தன்மையாக விளைந்து
1.அவனின்று வெளிப்பட்ட மூச்சலைகள்…
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவும் பொழுது
3.உயர்ந்த சக்திகளின் உணர்ச்சிகளை ஊட்டி
4.அதை நுகர்ந்தறியும் அறிவின் ஆற்றலாகப் பெறுவீர்கள்.
அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதையே திரும்பத் திரும்ப ஏங்கி உங்கள் உடலுக்குள் இரத்தநாளங்களில் கருவாக உருவாக்குங்கள்.
உங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.
1.அவன் உணர்வுகள் உங்களுக்குள் படும் பொழுது – அந்த உணர்வின் அலைகள் உங்கள் வாழ்க்கையில்
2.நுகரும் சக்தியும்
3.அறியும் சக்தியும்
4.வளர்க்கும் சக்தியும்
5.வளர்ந்திடும் சக்தியும் கிடைக்கும்.
அந்த அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்தி உங்கள் அருகிலே சுழன்று… நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்திற்குள் சென்று.. உங்கள் உடலுக்குள் செல்லும் நிலையை இப்பொழுது இந்தச் சந்தர்ப்பம் உருவாக்குகிறது.
அகஸ்தியன் நுகர்ந்த அந்த மணத்தின் தன்மையைக் கவர்ந்து அந்த உணர்வின் ஆக்கச் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அகஸ்தியன் நுகர்ந்த மணத்தை இப்பொழுது நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.
அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் கணவனும் மனைவியும் வானுலக ஆற்றலைத் தனக்குள் பெருக்கி துருவ மகரிஷியாகி அவர்கள் உருவாக்கிய சக்தி இங்கே பரவி இருக்கிறது.
அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.. அது எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் உள்ள அணுக்களில் மோதும் பொழுது
1.புருவ மத்தியில் அந்த ஒளிக்கதிர்கள் தெரியும்
2.உங்கள் உடலுக்குள் அந்த உணர்வின் ஒளி அலைகள் பாயும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் நினைவனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அதனுடன் தொடர் கொண்டு… அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கி அதை இழுத்துக் கவர்ந்து கவர்ந்து சுவாசியுங்கள்… உடலுக்குள் செலுத்துங்கள்…!
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்
2.அந்த உணர்வின் அலைகள் உங்களை அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே சேர்க்கும்.
தன்னையறியாமல் பகைமையாக்கும் சில உணர்வின் இயக்கங்கள்
குறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதை விட அதிலிருந்து விலகிச் செல்வதே நல்லது
மற்றவர்கள் நம்மைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் “தவறுகள் கூடும்… நல்லவைகள் மறைந்துவிடும்..!”
கூடு விட்டுக் கூடு பாயும் சித்து நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
கூடு விட்டுக் கூடு பாயும் நிலை என்பது…
1.தன் நிலை வளராத
2.ஆத்ம பலமின்றி
3.ஆரம்ப ஆவி நிலைத் தொடர்பு நிலையில் பெற்ற
4.பக்தி வாய்ந்த… மந்திர… தந்திர.. செயல் கொண்ட
5.உடலின் ஆத்மாவைக் காட்டிலும் பிறிதொரு சக்தி வாய்ந்த வலுவான இயக்கத்தின் செயலாகும்.
சக்தி வாய்ந்த… என்பது அதற்கு மேல் வலுக் கொண்ட ஆத்ம அலையின் தொடரின் ஈர்ப்புப் பிடி… ஞானச் சித்து பெற்ற… இயக்க வழிச் சித்தில்தான்… இக்கூடு விட்டுக் கூடு பாயும் செயல் செயல்படுவது.
அதாவது தன் சரீர இயக்கத்தைச் செயல்படாத வண்ணம் அந்தச் சரீரத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டுத் தன் ஆத்ம உயிரைப் பிறிதொரு சரீரத்தின் பாலோ.. மற்ற ஜீவ ஜெந்துக்களின் பாலோ செலுத்தி… அதற்குள் நின்று இயக்குவது.
அப்படி இயக்கப்படும் தன்மையில் சிறிது இசகு பிசகான நிலை கொண்டு மாறுபடும் தன்மை ஏற்பட்டாலும் மீண்டும் சரீர இயக்கத்திற்கு வந்து செயல்பட முடியாத நிலை ஆகிவிடும்.
அது மட்டுமல்ல…!
1.இப்படிப் பிரிந்த ஆத்ம உயிர் வேறு ஒரு பிடிப்பலையில் சிக்கிச் செயல்படுத்தப்பட்ட ஈர்ப்புப் பிடியின் செயலினால்
2.மீண்டும் சரீர நிலையும் பிறப்பும் அற்று ஆத்ம வளர்ச்சியே இல்லா நிலையாக
3.தான் வளர முடியாத வேறு ஒரு ஈனமான விஷம் கொண்ட ஈர்ப்பு நிலைக்குச் சென்று விடுகின்றது.
ஆனால் சப்தரிஷிகளின் வளர் சித்து நிலை எல்லாம் எப்படிப்பட்டது…?
தன்னைத் தான் உணர்ந்து… இச்சரீர பிம்பச் சேர்க்கை அமிலக் கூட்டின் வலுவிலிருந்து ஆத்ம வலுவைக் கூட்டி… இவ்வாத்மாவைச் சரீர பிம்பத்திற்கு மேல் சக்திவாய்ந்த செயலாகச் செயல் கொள்ளும் தன்மைக்கு இவ்வாத்ம வலுவை வலுவாக்கிக கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.
1.தன் ஆத்மாவைத் தானே இயக்கக்கூடிய இயக்கச் செயலின் செயல் சித்தாக
2.ஜீவ பிம்ப சரீர இயக்கத்தின் தொடர்புடனே இவ்வாத்மாவைத் தனித்து நிறுத்தி
3.தன் ஆத்ம அலையை எவ் அலைக்கும் செலுத்தும் திறன் பெற்றவர்கள்.
எவ்வலைக்கும் என்பது என்ன…?
1.சரீர பிம்ப தொடர் கொண்டவர் அலைக்கும் சக்தி வாய்ந்த சித்தர்களின் அலைக்கும் செயல்படுத்தவும்
2.இவ்வாத்மாவின் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு எந்நிலையையும் அணுவுக்குள் அணுவாக இவ்வாத்ம அலையை அனுப்பி
3.அணு வளர்ச்சியின் உண்மையையும் உருவாகும் சக்தி அனைத்தையுமே உணரக்கூடிய அலைத் தொடர்பு யாவைக்குமே
4.இச்சரீர பிம்ப நினைவு மாறாமலும்…
5.இஜ்ஜீவத் துடிப்போ மற்றெந்தத் தன்மையும் மாற்றம் கொள்ளாத் தன்மையில்
6.இவ்வாத்மாவைத் தனித்து எச்செயலுக்கும் செலுத்திச் செயல் சித்தைச் செயல்படுத்துப்வர்களே சப்தரிஷிகள்.
அந்த நிலையை நீங்கள் பெற என் ஆசிகள்…!
கடவுளுக்காகக் கோர்ட்டுக்கு சென்று இன்றும் சண்டை போடுபவர்கள்…!
இன்று கோர்ட்டில் கேஸ் போட்டுக் கடவுளுக்காக வாதாடிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மைன பக்தி எது..? என்று உணரும் நிலை இல்லை. விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் இல்லை என்று தெரிகின்றது இருந்தாலும் ஞானிகள் உணர்த்திய மூலத்தை அறிய முடியவில்லை.
நம்மைப் புகழ்ந்து பேசுவோரிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்… ஏன்.…?
இந்த வாழ்க்கைக்குத் தேவையானவற்றை மற்றவர் (யாரோ) நமக்குச் செய்வார்கள் என்ற ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் “அவர்கள் மகா சக்தி பெற்றவர்கள்” என்ற நிலைகள் கொண்டு அவர் வலையில் சிக்கி… நம் புத்தியை இழந்து… அவர்களிடம் நாம் அடிமையாகின்றோம்.
பாதிப்படைந்த பின்… “தப்ப வேண்டும் தப்ப வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வருகின்றோம்.
உதாரணமாக இந்தத் தொழிலைச் செய்தால் அதிலே நீ அதிகமான லாபம் பெறலாம் என்ற உணர்ச்சிகளை ஒருவர் தூண்டிவிட்டால் போதும். அவர்களைப் பற்றிய புகழாரம் அனைத்தும் பாடத் தொடங்குவார்கள்… அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று…!
அவர் உதவி செய்வார் என்ற எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்பார்கள். அதாவது புகழ்ந்து பேசிய பின் இப்படிக் கேட்பார்கள்.
கொடுத்து விடுவீர்கள்…!
சிறிது நாள் கழித்து கொடுத்ததைக் கேட்கலாம்… என்று சென்றாலும் “நீங்கள் தக்க நேரத்தில் உதவி செய்தீர்கள்…! இன்னும் ஒரு நூறு ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…” என்பார்.
இப்படிப் புகழ்ந்து பேசுபவருடைய நிலைகளுக்கு நாம் அடிமையாகி விட்டால் இப்படிப் பேசிப் பேசியே நம்மிடமிருந்து காசை வாங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் கஷ்டமாக இருக்கும் பொழுது நாம் கேட்டால் நம்மைப் புகழ்ந்து பேசியவர் “ஐயோ…!” இப்பொழுது என்னிடம் காசில்லையே…! என்பார்.
1.ஆனால் நாம் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்க மாட்டார்.
2.நம்மிடம் பணம் கேட்பதையும் நிறுத்த மாட்டார்
3.நாம் பணம் இல்லை… என்று சொன்னாலோ உடனே பகைமையை ஊட்டிவிடுவார்.
4.காசைத் திருப்பிக் கேட்கிறார் என்றும் அடுத்தவரிடம் நம்மைப் பற்றிச் சொல்லிச் சீண்டிவிடுவார்.
5.இவருடைய செயல்கள் இப்படி…! என்று கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் சொல்லி இடையூறுகளை ஊட்டுவார்.
கடைசியில் கொடுத்ததை எல்லாம் கேட்டால் என்னிடம் எப்பொழுது பணம் கொடுத்தீர்கள்…! என்பார். இப்படியெல்லாம் புகழாரம் பாடுவோர் கையில் நாம் சிக்கிவிட்டால் இந்த மனித வாழ்க்கையில் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.
ஆகவே…
1.நாம் ஒருவருக்கு உபகாரம் செய்வது என்றால் திருப்பிப் பெறும் நிலைகள் இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலைகள் செயல்படுத்த வேண்டும்
3.ஒன்று இரண்டு ஏதோ அவர்களுக்கு.. எப்படியோ நன்றாக இருக்கட்டும்…! என்ற நிலைகளில்
4.புகழ் பாடுவோர் கையில் கொடுத்து விட்டால் போதும்…!
5.கொடுத்ததைத் திரும்பக் கேட்கும் நிலையற்ற நிலையில் இருக்க வேண்டும்.
ஏனென்றால் ஒரு தரம் உதவி செய்தாலும் மீண்டும் அவர்கள் கேட்பார்கள். உதவி செய்யவில்லை என்றால் பழியைச் சுமத்துவார்கள். அதனால்…
1.நம்மை அறியாமலே நண்பர்களுக்குள் பகைமை உருவாகின்றது.
2.இன்றைய உலகம் இப்படித்தான் இருக்கின்றது…!
இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…?
ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற உணர்வினைச் சுவாசித்து உடலுக்குள் கருவின் தன்மையை உருவாக்கி அந்தக் கருவை நமக்குள் அணுவாக வளர்த்திட வேண்டும்.
அதன் வளர்ச்சி கொண்டு இந்த அருள் உணர்வின் வலிமை பெற்று
1.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்
2.சிந்திக்கும் தன்மை அவருக்கு வர வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு நல்ல உணர்வு தோன்ற வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட உணர்வினைக் கருவாக்கி உணர்வின் தன்மை பெற்றுவிட்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவோரும் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
6.அந்த ஏமாற்றும் தன்மையே அவர் உடலிலிருந்து மறைந்து விடுகின்றது.
ஆகவே இன்றைய உலகில்… பிறிதொரு பகைமையோ ஏமாற்றும் உணர்வுகளோ வராதபடி நாம் மாற்றியமைத்தல் வேண்டும்.
அதே சமயத்தில் நாம் நுகரும்… அல்லது நுகர்ந்த அருள் சக்திகள் நமக்குள் வளர்ந்து அரும் பெரும் சக்தியாக மலர்கின்றது.
இதையே நமக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் மெய் ஒளி பெறுகின்றோம்.
புரையேறும் உணர்வால் எத்தகைய பாதிப்பு வரும்..?
நம்முடைய கேஸ் நீதிமன்றத்திலே ஜெயமாக வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?
இந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…?
சித்து வழியில் முதல் சித்து எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
அல்லி மலர் சூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பி விடுகின்றது. இன்னும் சில மலர்கள்… சூரிய ஒளியின் அலை பாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து “அதன் ஒளி திக்கிலேயே…” அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடிவிடுகின்றது.
இவை எல்லாமே “இயற்கை…” என்கிறான் மனிதன்…!
1.எல்லாச் சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவுவது சூரிய சக்தி தான்…! என்ற உண்மையைத் தெரிந்தும்
2.சூரியனின் சக்தியைச் செயற்கைக்குப் பாழ்படுத்தும் இன்றைய மனிதன்
3.அடுப்பான இந்தப் பூமியில் – பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்திகளைப் போட்டு
4.இவன் சமைக்கும் கலவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி
5.”இச்சரீர ஜீவனின் உள்ளதை” மனிதன் அறியவில்லை.
இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன்…
1.தன் எண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு…
2.எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாகத் தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
3.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு தொடர்புபடுத்தி
4.அதன் மூலம் செயலாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஆத்ம ஞானத்திற்குண்டு…! என்பதை உணர வேண்டும்.
இவ்வுடலின் செயலுக்கொப்ப… இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி… இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை… இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்திற்கு வர வேண்டும்.
இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
1.இவ்வாத்மாவைச் சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
2.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்ல இயக்க நிலையை
3.இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.
இச்சரீரக்கூடு ஜீவத் துடிப்புடன் (உயிர் உடலில்) இருந்தால் தான் இவ்வியக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு “ஆத்ம பலத்தை நாம் பெருக்க முடியும்…”
அதன் மூலம்… ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப் பிடிப்புக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகளானாலும் சரி… இவ்வீர்ப்பு வட்டத்தில் சிக்காமல் இருக்க முடியும்.
அதாவது ஒரு எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பமாகி விடுவதைப் போல்
1.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட
2.இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்துக் காண முடியும்
3.வலுப் பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும்
4.தன்னைத் தான் உணர்ந்து… தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல் தான் “சித்து வழியில் முதல் சித்து…!”
ஆகவே ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.
வாழ்க்கைப் பந்தத்தில் சுவைக்கும்… மற்ற பொருள் நிலை எவற்றுக்கும் இவ்வெண்ணமானது பேராசைக்கோ… ஏக்கத்திற்கோ… சஞ்சல சலிப்பு நிலைக்கோ… செல்லும் வழி முறை சிறிது இருந்தாலும்
1.இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க
2. இச்சரீர பிம்பத்தின் உணர்வில் செயல் நிலை தடைப்படும்.
எவ் ஈர்ப்பலையின் பிடிப்பிலும் இவ்வெண்ணச் செயலின் உணர்வு ஞானத்தின் வளர்ச்சியானது செயல் கொள்ளும் பக்குவம் கொண்டு தான் இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்
1.நாம் ஜெபித்த… தியானித்த… சித்தர்களின் வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு கிடைத்து
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் “பதம் பார்த்து” நம்மை வழி நடத்துவார்கள்.
ஆத்ம வலுவை மட்டும் இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்துதான்… இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும். “வெறும் சரீர பிம்ப இயக்கத்தால் பெற முடியாது…!”
முதல் சித்தான ஆத்ம பலம் பெற… இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு… ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்…!
விஷ்ணு வரம் கொடுக்கின்றான். பிரம்மா உருவாக்குகின்றான்.. சிவன் அரவணைக்கின்றான்…!
இந்த முத்தொழில் நடக்கவில்லை என்றால் எங்கேயும்… எதுவும்… உருவாக முடியாது…! என்று சாஸ்திரங்கள் உணர்த்துகின்றது, ஆனாலும் அதில் மறைந்துள்ள மூலக்கருத்து என்ன…? என்பதை நாம் அறிந்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எளிதில் நீக்க முடியும்.
தியானத்தின் மூலம் பெறும் வலுவால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும்
நாம் மக்கள் மத்தியில் வளரப்படும் பொழுது அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களைக் கேட்கும் சந்தர்ப்பம் இருந்தாலும் அதை நீங்கள் கேட்காமல் இருக்க முடியாது.
என் வீட்டில் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது என்று ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். “அதெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்…! நீங்கள் போங்கள்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?
என்ன… பெரிய இவர்…? இந்த மாதிரிப் பேசுகிறார்…! என்று சொல்லிப் பகைமையை உருவாக்கி எதிரியின் தன்மையைத் தான் உருவாக்க முடியும்.
அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் வெறுப்பான உணர்வை நமக்குள் வளர்த்து நாம் கற்றுணர்ந்த நல்ல உணர்வுகளும் வளராது தடைப்படுத்தப்படும்.
ஆகவே ஒருவர் சொல்வதை நீங்கள் அணுகிக் கேளுங்கள். கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி “ஈஸ்வரா…!” என்று நினைவினை உயிருடன் ஒன்றுங்கள்.
அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெறவேண்டும்…! என்று ஏங்கிப் பெறுங்கள்.. அந்த அருள் உணர்வைச் சுவாசியுங்கள்.
அந்தத் தீமையான உணர்வை நுகர்ந்தாலும்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தக் கருவுக்குள் இணைந்து அடுத்த நிமிடம் வட்டமிடும்.
2,அப்படி வட்டங்கள் இடும் பொழுது இந்த அணுக்களின் தன்மைகள் இது கருவாக உருவான பின் உடலுக்குள் அதிகமாகின்றது.
3.இந்த வீரிய சக்தி உருவான பின் அதை அடக்கி அருள் ஒளி பெறும் அணுவின் தன்மையாக இது உருபெறுகின்றது.
அந்தக் கருவின் தன்மை அடைந்த பின் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் செலுத்தி உடலுக்குள் சுழல விடப்படும் பொழுது இந்த வீரிய சக்தியால் அடைப்பட்டு இதையே (அருள் உணர்வுகளையே) அது நுகர நேரும்.
அப்பொழுது அந்தத் தீமையான உணர்வுகளை நுகராது தடைப்படுத்திவிடும்.
1.வேதனை என்ற உணர்வு வராது
2.நமக்குள் அந்த உயர்ந்த ஞானியின் உணர்வுகளை அறிவுடன் தெளிவாக நடந்திடும் அணுக்கருவாக அது மாற்றிவிடும்.
பின் அணுவின் தன்மை அடைந்த பின் அதன் உணர்வை நுகர்ந்து தனக்குள் வேதனையை அகற்றும் உணர்வின் எண்ணங்கள் தான் வரும்.
இப்படி வலுவாக்கிக் கொண்டு… இந்த நோய் உங்களை விட்டுப் போய்விடும்…! என்ற வாக்கினை யாருக்காவது சொன்னால் அது அங்கே கருவாகி அந்த நோயை நீக்கிடும் அணுவாக மாறுகின்றது.
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறவேண்டும் என்று நாம் தியானித்துவிட்டு… இந்த உணர்வை அடைத்துவிட்டு… நோயுள்ளவரிடம்…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்
2.உன் நோயின் தன்மை நீங்கும்
3.அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கு
4.அந்த உணர்வின் தன்மை உனக்குள் பெற்றுக் கொள். – நோயிலிருந்து விடுபடுவாய்… என்ற உணர்வைச் சொல்லி
5.அவர் உணர்வின் நினைவை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தச் செய்யுங்கள்.
நீங்கள் ஊட்டிய உணர்வுகள் அங்கே கருவாகி அந்த உணர்வுகள் அவருக்குள் விளைந்தால் அதன் உணர்வைப் பெறும் தகுதியாக அதன் கருவாக உருவாக்கப்படும்.
அதன் நினைவாற்றல் அணுவாக மாறி அந்த உணர்வை நுகர்ந்தோர் உடலில் அது நல்வபழிப்படுத்தும் நிலையும்… துயரத்தையும் வலியையும் குறைக்கும் நிலையும்… அருள் ஒளியின் உணர்வைத் தன் உடலுக்குள் பரப்பும் சக்தியும் பெறுகின்றது.
இப்படி உங்கள் வாக்கும் அந்த நோயை நீக்கச் செய்யும்…!
அந்த அகஸ்தியமாமகரிஷி காட்டிய அருள் நெறிகளை நீங்கள் நுகர்ந்து அவரின் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகி அதன் உணர்வின் தன்மை கொண்டு அவர் நினைவாக.. நோயுற்றோரை நீங்கள் நலம் பெறுவீர்கள்…! என்றும் அதற்கப்புறம் நீங்கள் உதவி செய்யும் நிலைகளில் நீங்கள் நலம் பெறுவீர்கள்… அருள் பெறுவீர்கள்… அருள் ஒளி பெறுவீர்கள்…! என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.
இந்த உணர்வுகள் அவருக்கும் கருவாகும். அவர்கள் நினைவு கொண்டால் அதை அடைகாக்கும் நிலை கொண்டு அதை வளர்த்துத் தனக்குள் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையை அவர்கள் பெறுகின்றார்கள்.
1.ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்.
2.அருள் ஒளிச் சுடராக துருவ மகரிஷியாக வேண்டும்.
துருவ மகரிஷி என்ற நிலையை உருவாக்கி விட்டால் ஒருவருக்கு நீங்கள் சொல்லி அவர் மகிழ்ச்சி பெற்றால் அவர்களை மீண்டும் எண்ணும் பொழுது… “மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் உங்களுக்குள் விளைகின்றது…”
இதைப் போன்று ஒவ்வொருவரையும் மகிழச் செய்யும் உணர்வுகள் வரும் பொழுது..
1.ஒவ்வொருவர் உடலில் உருவாகும் அந்த உணர்வின் தன்மை அங்கே விளைந்து
2.அந்த உணர்வின் தன்மை மணங்களாக வரும் பொழுது அதை நுகர்ந்தால்
3.உங்களுக்குள் அருள் சக்தியாக “ஒளிச் சுடராக” மாற்றும் தன்மை வருகின்றது.
உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்…!
கடவுளை அறிய வேண்டும் என்ற வீரிய எண்ணம் விவேகானந்தருக்கு எப்படி வந்தது…?
இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்படுத்திய ஆச்சரியப்படும் செயல்களை குருநாதர் காட்டினார்
இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?
உடலை விட்டுச் சென்றால் பறக்கும் நிலையை நாம் பெறவேண்டும்
உதாரணமாக ஒரு புழு தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் மணத்தால் உருவாகும் மலத்தை நூலாம்படை போல் தனக்குள் சுற்றுகின்றது.
அந்தப் பட்டுப் புழு… இவ்வாறு தனக்குள் சுழற்றிக் கொண்ட பின்
1.தன்னை அறியாமலே ஒரு பாதுகாப்புக் கூடாகக் கட்டிக் கொள்கின்றது.
2.பாதை இல்லாத நிலைகள் அடைபட்டுக் கொண்ட பின்
3.”வெளியிலே செல்ல வேண்டும்…” என்ற உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது.
வெளியே செல்ல வேண்டும்…! என்ற உணர்வுகள் ஊட்டப்படும் பொழுது தன் உடலிலிருந்து வெளிப்பட்ட மலத்தால் கட்டப்பட்ட கூட்டின் நிலைகளிலிருந்து தன் உணர்வின் தன்மையை வளர்த்து
1.இந்த நினைவின் ஆற்றல் “வெளியிலே பறக்க வேண்டும்…” என்ற உணர்வுகள் முதிர்ந்து
2.அது இறக்கைகளாக வளர்கின்றது.
பின் தன் மலத்தால் கட்டப்பட்ட அந்தக் கூட்டைக் கத்திரித்து வெளியே வரப்படும் பொழுது பூச்சியாக வருகின்றது.
பின் அந்தப் பூச்சி முட்டையிடும் பொழுது அதன் கருவாகத் தன் இனங்களாகப் பெருக்குகின்றது. இதைப் போல் அது கூடு கட்டி மீண்டும் பறக்கும் பூச்சியாக மாறுகின்றது.
இதைப் போல் தான் அருள் மகரிஷிகளின் உணர்வு கொண்டு நமக்குள் இந்தக் கூட்டைக் கட்டி இந்த உணர்வின் தன்மை அருள் வட்டமாக நமக்குள் சேர்க்கப்படுகின்றது.
1.எந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்க்கின்றோமோ
2.இந்தக் கூட்டை விட்டு வெளியிலே செல்லும் பொழுது
3.அந்த அருள் ஞானியின் அருள் வட்டத்திற்குள் சென்று
4.நாம் என்றும் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.
ஒரு பட்டாம்பூச்சி அது இடக்கூடிய முட்டையிலிருந்து புழுவின் தன்மை விளைவித்தாலும் வளர்ச்சியில் இதே பூச்சி பறந்து சென்று ஒரு பூவின் மீது அதன் தேனின் சுவைக்காகச் சென்றால் அந்தச் சுவையின் தன்மையில் அதிலே முட்டைகளை இடுகின்றது.
முட்டைகள் அந்தத் தேனுக்குள் சிக்கப்பட்டு அந்த அமுதத்தை அதற்குள் செருகப்பட்டு இந்த உணர்வின் தன்மை அதன் கருவை அது வளர்த்து அதனுடைய நிலைகள் பட்டாம்பூச்சியாகப் பிறக்கின்றது.
1.பட்டாம்பூச்சியாக வரப்படும் பொழுது
2.அந்தப் பூவியின் நிறம் எதுவோ அதைப் போல் பட்டாம்பூச்சியின் இறக்கைகள் வளருகின்றது.
இது எல்லாம்…
1.அதனதன் நுகர்ந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது இடும் முட்டைகள் அது “கருவிலே சேர்க்கும்” நிலைகள் கொண்டு
3.பல பல நிறங்களில் இவ்வாறு வருகின்றது.
நாம் ஒரு வேதனையான உணர்வை நுகரப்படும் பொழுது அது அணுக்கருவாக நம் உடலிலே உருவானாலும் அடுத்த கணம் அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்ற உணர்வை நுகரப்படும் பொழுது அந்தக் கருக்களின் வட்டத்தில் இது சேர்ந்து விடுகின்றது.
பின் அந்த வேதனைப்படும் உணர்வை நுகராது இந்த அருள் உணர்வுகளையே அது நுகர்ந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு அருள் ஒளியை நுகரும் அணுவாக இது உருப்பெற்று விடுகிறது.
நாம் நுகர்ந்த மகரிஷிகளின் உணர்வின் அணுக்களாக வெளிவரப்படும் பொழுது
1.அந்த உணர்ச்சிகளை நமக்குள் எழுப்பி
2.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.
இது எல்லாம்…
1.நம் எண்ணத்தால் உருவாக்கும்… உணர்வால்… இயக்கும் உணர்வுகள்
2.ஒவ்வொருவரும் மறக்காது இதன் வழி செயல்படுத்த வேண்டும்.
பிரகலாதன் கதை
கருவில் பெற்றுப் பிறக்காதபடி உணர்வின் மோதலில் பிறந்தவன் என்றும் பிறக்காமல் பிறப்பது அதாவது பெறாமலே பெறுவது என்று நரசிம்ம அவதாரத்தில் காட்டுகின்றார்கள். அவன் ஹரி ஓம் நமோ நாராயணா என்று அவன் உணர்த்துகின்றான்.
என்னை நீ காண்… உன்னை நீ காண்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
இது நாள் வரை நீங்கள் தியானத்தில் அறிந்த மார்க்கம் “ஞானத்தால் அறியும் மார்க்கம்…” நீங்கள் எடுத்துக் கொண்ட பக்தி முறை ஜெபவழி தியான வழி முறையில் ஞானம் கொண்ட ஞான வழித் தொடரினால்
1.உம் எண்ண அலைத் தொடரில்
2.எம் அலைத் தொடரின் தொடர்புடன்
3.ஞானத்தில் அறிந்த உண்மைகள் யாவையும்
4.செயல் முறையில் சித்துடன் காணப்படும் உண்மையையும்
5.செயல்படும் வழித் தொடர் நிலையையும் பாட முறைக்கு அறியுங்கள்.
காட்சி:-
ஒரு புட்டியில் தேன் உள்ளதைப் போன்றும் அத்தேனை உள்ளங்கையில் சிறிது விட்டுச் சுவைப்பதைப் போன்றும் தெரிகின்றது. இதன் விளக்கம் என்ன…?
விளக்கம்:-
பல தேனீக்கள் தன் உழைப்பால் சேமித்ததைச் சேமித்து வைத்த நிலை தான் புட்டியிலுள்ள தேன். அதைப் போன்று… சுவையான ஞானத் தேனின் சேகரிப்பு தான்… சக்தி பூண்ட ஞானிகளின் செயல் சேகரிப்பு…!
1.அவர்களின் ஞான அலைத் தொடரின் எண்ணமுடன்…
2.அவர்களின் அலைசக்தியான ஞான முறையை
3.இந்தத் தொடர் உபதேசத்தில் நீங்கள் அறிந்துள்ள தன்மையில்…
4.சேகரிக்கப்பட்ட இந்த ஞான அலையின் உண்மைதனை
5.புட்டியிலுள்ள தேனைச் சிறுகச் சிறுகக் கையில் ஊற்றிச் சுவைத்துப் பருகும் இனிமையான செயல் தன்மையில்
6.உங்களின் ஞானத்தால் அறிந்த நிலையின் செயல் வழிச் சித்து நிலை இருக்க வேண்டும்.
புட்டியிலுள்ள தேனை அப்படியே பருகினால் அதன் சுவையே தித்திப்பு திகட்டக்கூடிய எதிர்க்கும் தன்மை ஏற்படும். இதை உணர்ந்து ஞானத்தால் அறிந்து உண்மைதனைச் சித்து வழியில் அறிந்திட
முதல் நிலை தான் “என்னை நீ காண்…!”
1.உன்னுள் உள்ள இறைவன் யார்…? என்பதை நீ முதலில் அறிந்து கொள்
2.நான் என்பது யார்…?
இச்சரீர பிம்பக் கூட்டில் ஒளி அலைகள் மோதலில் காணப்படும் நிழல் பிம்பம் ஒன்று.
1.நீரிலோ நிலைக் கண்ணாடியிலோ காணப்படுவது எதிர்பிம்பம்.
2.செயலாக உண்ணுவது கழிப்பது உறங்குவது செயல் பிம்பம்.
3.இதனை இயக்க்கூடிய ஆத்ம பிம்பம் தான் இப்பிம்பத்தையும் இப்பிம்ப எண்ணத்தையும் வழி நடத்திச் செல்வது…!
இதில் நான் என்பது யார்…?
ஆத்மாவாகித்தான் இச்சரீர பிம்ப எண்ணம் செயல் கொள்கின்றது. இச்சரீர பிம்ப செயலைத்தான் “நான்…” என்று உணர்ந்து நாம் எதனையுமே செயல்படுத்துகின்றோம்.
இச்சரீர பிம்பத்தில் ஓடும் எண்ணங்கள் யாவும் இச்சரீர சுழற்சியின் மோதலின் உணர்வுடனே செல்கிறது. செவி ஈர்த்து… கண் பார்க்கும் ஒளி வட்டத்தின் உணர்வுடனே… இவ்வெண்ணத்தைப் பாய்ச்சி “வாழ்க்கை” என்ற சூழலில் சுழலும் வட்டத்தின் செயலுக்காகவே வாழ்கிறோம்.
1.இச்சரீர பிம்பத்தின் நினைவுக்கும் – பிம்பத்தை அழகுபடுத்த ஆடை அணிகலன்களையும்
2.இப்பிம்பத்தின் வார்ப்பைப் பாதுகாக்க அதற்குகந்த சொகுசு முறையிலும் – பிம்பத்தின் சுவை ருசிக்காகவும்
3.இப்பிம்பத்தின் செயலை ஒத்த எண்ண ஓட்டமும் – பந்த பாசச் சுற்றுபுறச் சூழல் இவற்றின் செயல் வழிக்கொத்த உணர்வையும்
4.அதைப் போன்ற சரீர பிம்பச் செயல்களில் தான் இவ்வெண்ண ஓட்டங்கள் செயல்படுகின்றது.
அதிலிருந்து வடுபட்டு இச்சரீரத்தில் உள்ள உண்மை ஜீவ சக்தியான “ஆதிசக்தியின் உண்மைச் சக்தியை” ஆத்மா பெறவல்ல தன்மைக்கு நம் ஞானங்கள் செயல்பட வேண்டும்.
“ஆதி சக்தியான… நீர் சக்தியின் சக்தித் தொடர்பு தான்… சர்வ சக்தியையும் வளர்க்கவல்ல சக்தி…!”
1.ஆத்ம உயிருக்கு… இவ்வாத்மாண்டவன் வளரவல்ல தொடருக்கு
2.ஜீவத் துடிப்பு இயக்கத்தில் இருந்தால் தான்
3.அதன் வலுத் தன்மை கூட முடியும்.
காட்சி:-
கீழே ஒரு அடுப்பை எரிப்பதைப் போன்றும் பானை ஒன்றை அந்த அடுப்பில் ஏற்றி அந்தப் பானைக்குள் எதுவோ வெந்து கொண்டிருப்பது போன்றும் வேகப்படும் பொருளின் ஆவி வெளிப்படுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்:-
இந்தப் பூமி அடுப்பைப் போன்றது. இச்சரீரம் பாத்திரம் போன்றது. அதில் வேகப்படும் பொருள் எவ்வெண்ணத்தை எல்லாம் கொண்டு இச்சரீரத்தில் நாம் போடுகின்றோமோ… அதன் சுவை தான் சொல்லாகவும் செயலாகவும் வெளிப்படும்.
பாத்திரத்தில் போட்டு வேகப்படுவதைப் போன்று இவ்வெண்ணத்தால் போடப்படும் நிலையின் சுவைதான் “இச்சரீரத்தை இயக்கும் உயிராத்மா பெறுகின்றது…”
பாத்திரத்தில் வேகப்படும் பொருளின் சுவை… மணம்… எப்படி ஆவியான தன்மையில் வெளிப்படுகின்றதோ அதைப் போன்று தான் இப்பால்வெளி மண்டலத்தின் சூரியனின் வளர்ப்புப் பிடியின் மோதலினால் இந்தப் பிம்ப இயக்கம் உள்ளது.
1.நீங்கள் பெற்ற ஞானத்தின் செயல் தொடர்பில்..
2.ஆத்மாவின் உண்மை இயக்கத்தை…
3.“உன்னை நீ காண்…!” என்ற பொருளின் உண்மையை செயல் அறிந்திடுங்கள்…!
நாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…?
கடையில் வியாபாரம் ஆகும் பொழுது பக்கத்துக் கடை வியாபாரத்தை எப்படிப் பார்க்கின்றோம்..?
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நமக்கு நோய் எப்படி வருகின்றது…?
வாழ்க்கையே தியானமாக்கினால் மகரிஷிகள் அடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்
நம் சகஜ வாழ்க்கையில் எப்பொழுது தீமையும் கொடுமையும் நாம் நுகர நேர்கின்றதோ… அறிய நேருகின்றதோ… “அறிந்துணர்ந்தாலும்…” நமக்குள் அது வளராது தடுத்துப் பழக வேண்டும்.
தடுக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும். அதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் பகைமை என்ற உணர்வுகள் வளராது நல்லதாக்க முடியும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அடிக்கடி நாம் கூர்மையாக எண்ணி ஏங்கிப் பெறும் பொழுது அது கூர்மை அவதாரமாகி… ஒளியான உணர்வின் அணுக்களாக மாற்றி ஒளியின் சரீரமாக முடியும்.
1.எதன் வலிமையைப் பெற்றோமோ…
2.இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.
அங்கே அதனின் உணர்வின் தன்மை கொண்டு இருளை வென்று உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஒளியின் சரீரமாகப் பெறுகின்றது.
நாம் எண்ணத்தால் உருவாக்கிய உணர்வுகள்… எண்ணம் சீதாராமா. எந்தச் சுவை கொண்டு நாம் நுகர்கின்றோமோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக நமக்குள் தூண்டுகின்றது.
அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகள் நமக்குள் சேரும் பொழுது சீதா…! உணர்ச்சிகள் சீதாராமனாகத் தோன்றுகின்றது.
1.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நம்மை இயக்கி
2.அந்த உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும் பொழுது இராமலிங்கம்.
சீவலிங்கமாகக் கோள்கள் உருவாகின்றது. ஆனால் அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக ஜீவ ஆன்மாவாக நாம் விளைகின்றோம். ஜீவ ஆன்மாக்களாக எதை விளைவிக்கின்றோமோ சிவமாக (உடலாக) மாறுகின்றோம்.
உயிரின் தன்மை நமக்குள் இயக்கவில்லை என்றால் இந்த உடல் சவமாகின்றது. எந்த உணர்வை எடுத்தோமோ அதற்குத் தகுந்த அடுத்த ரூபத்தை உயிர் மாற்றுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.
மனிதனாக ஆன பின் கார்த்திகேயா… இதை அறிந்திடும் பக்குவம் பெற்றவர்கள் நாம்… இந்த உடலினின்றே இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அணுவாக மாற்றுதல் வேண்டும்.
ஆகவே தான்…
1.அந்த ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாக்குகின்றோம்.
2.அந்த உணர்வின் சத்தாக உங்களை நுகரச் செய்கின்றோம்.
3.அந்த அணுவின் கருவாக உங்களுக்குள் உருவாகச் செய்து
4.உங்கள் இரத்தநாளங்களில் பெருக்கும்படி செய்கின்றோம்.
இதையே நீங்கள் அடைகாத்தது போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று காலை துருவ தியானத்தில் ஏங்கினால் அந்த உணர்வின் அணுக்கருக்களுக்கு ஜீவன் ஊட்டுகின்றீர்கள். ஒளியான அணுக்களின் பெருக்கமாகின்றது.
நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர வேண்டும் என்று எண்ணினோமோ அந்த அணுக்கள் தனக்கு வேண்டிய உணவைப் பற்றி ஏங்கும் பொழுது
1.அதே அருள் உணர்வுகளை நுகரச் செய்து
2.ஞானத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்குவதும்
3.ஞானிகள் சென்ற வழியில் செயல்படும் தன்மையும் வருகின்றது.
அதே சமயத்தில் நம் உடலில் உள்ள எல்லாம் அணுக்களும் அதைப் பருகி அந்த ஒளியின் சுடராகத் தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.
தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிட்டால் இதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலிலே ஏற்கனவே இருந்த இருள் சூழ்ந்த நஞ்சு கொண்ட அணுக்கள் மடிந்துவிடுகின்றது.
1.அது மடியும் தன்மை வரும் பொழுது ஒளியின் அணுவாக மாறுகின்றது
2.மாறிய உணர்வு கொண்டு வெளியே சென்றால்
3.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்.
அதற்குத்தான் இந்த உபதேசமே…!
காலையில் எழுந்தவுடன் எண்ண வேண்டிய நல்ல எண்ணங்கள்
கண்களை விழித்ததும் ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… நாங்கள் பார்த்த அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் இணைந்து வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும். மற்றவரகள் உணர்வுகள் தீய வினைகளாக உடலுக்குள் இருப்பினும் இவ்வாறு பிரார்த்தனை செய்தால் அவைகள் அனைத்தும் அடங்குகின்றது. நம் மனம் தூய்மையாகின்றது. அன்றைய நாள் முழுவதுமே புத்துணர்வாக இருக்கின்றது.
“சப்தரிஷி” என்பவன் எப்படி உருவானான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஆத்ம சக்தியின் உண்மையை உணர்ந்து ஞானத்தைப் பெருக்கும் உயர் ஞானச் செயலை அறிய ஏக்கம் கொண்டவர்கள்… இச்சரீர பிம்ப ஆத்ம எண்ண அலையை மகரிஷிகளின் பால் செலுத்தினால் சகலத்தையும் அறியும் ஆற்றல் பெற முடியும்.
அந்த அலைத் தொடரைப் பற்றிடல் வேண்டும். மகரிஷிகளின் அலைத் தொடர் என்பது என்ன…?
1.சகலத்தையும் அறியவல்ல.. சகலத்திலும் கலந்துள்ள… உயர் சக்தி கொண்ட சப்தரிஷிகளின் தொடர்பலையின் தொடர்பாக
2.இச்சரீர எண்ணமானது செலுத்தப்படும் தொடர் கொண்டு
3.இச்சரீர உணர்வு அமிலக்கூட்டின் வளர்ச்சி நிலைக்கு உகந்த அலைத் தொடர்பின் சக்தி தியானத்தால்
4.இச்சரீர பிம்ப உணர்வுகளோ.. இயக்கங்களோ… தன் நிலை மறந்த மயக்க நிலையோ அன்றி…
5.இந்த ஞான ஆத்ம பலத்தின் எண்ண ஞானத்தால் – உயர் தொடர்புடைய அலைச் சக்தியின் தொடரினால்
6.இந்தப் பிரபஞ்ச உண்மைகளையும் இதன் தொடர்பு கொண்ட பால்வெளி மண்டல வளர்ப்புத் தொடர் யாவையுமே
7.தன் நிலை மறக்கா உணர்வுடனே ஒவ்வொருவரும் காண முடியும்.
“சித்து நிலை” பெறுவது என்பதுவும் இதன் தொடர் அலை வழித் தொடரினால் தான்.
ஆகவே அத்தகைய ஆத்ம வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்றால் இச்சரீர பிம்ப வளர்ப்பிற்கு நல் உர சக்தியைப் போட வேண்டும்.
நல் உர சக்தி என்பது… எது…?
1.தனித்த ஆத்மாவாக எண்ணத்தாலும் செயலாலும் பிற ஆத்மாவின் தொடரில் இருந்தெல்லாம் விலகி
2.தன் குணத்தின் நற்குணம் எது…? என்று அறிந்து
3.அதன் சுழற்சியில் பக்தி கொண்ட ஜெப ஞான தியானத்தால் மட்டும்
4.உயர் சக்தியை இவ்வாத்மாவுக்கு உரமாகச் செலுத்த முடியாது,
நறுமணமான நிலையிலிருந்தோ… அமைதியான சுற்றுச் சூழல் தனித்த வாழ்க்கை முறையிலோ… அதிலும் இவ்வாத்ம ஞானம் வலுக் கூடாது.
அதே சமயம்… பல மனிதர்களுடன் மத்தியில் வாழக்கூடிய தொடர் வாழ்க்கையில்… (இப்பொழுது வாழும் நிலை) அவர்களின் அலை ஈர்ப்பின் பிடிப்பில்… அவர்கள் செய்யும் குரோத வஞ்சனை உல்லாச கேளிக்கைகளுக்குள்… நம் உணர்வால் எடுக்கக்கூடிய எண்ன மோதலின் பிடியில் சிக்கி விட்டாலும்… இவ்வாத்மாவிற்கு நாம் போடக்கூடிய உரம் தடைப்படுகின்றது.
மனித ஆத்மாவிற்கு வலு உரம்… பின் எங்கிருந்து எப்படி எடுக்க முடியும்..?
ஒரு உயர்ந்த குண உலோகமான தங்கம் அது வளரக்கூடிய பகுதியில் மண்ணுடன் மண்ணாக ஒவ்வொரு இடத்திலும் அதன் வளர் தனமை வளர்ச்சி நிலை கூடிக் கூடி உயர்ந்த வார்ப்புப் படிவமாகின்றது.
அதாவது…
1.மண்ணின் சத்துப் படிவத்துடன் அடுக்கடுக்கான படிவமாக வளர்ந்து வலுக் கொண்ட உலோக வார்ப்பாக அத்தங்கம் வளர்வதைப் போன்றும்
2.நெருப்புடன் நாம் எப்பொருளைப் போட்டாலும் போடப்படும் பொருள் யாவையுமே அந்த நெருப்புடன் பஸ்பமாகும் நிலை போன்றும்
3.இந்த உலகச் சுழற்சி பந்த வாழ்க்கையில் இச்சரீர பிம்பம் சிக்குண்ட பிடியிலிருந்து தங்கத்தின் படிவமான வளர்ப்பைப் போன்று
4.இம்மண்ணான பிரபஞ்சத் தொடரின் உயர் உரமாக இச்சரீர பிம்ப ஆத்மாவிற்கு நாம் அளிக்கக்கூடிய உரமானது
5.தங்கத்தின் படிவமான வளர்ப்பை ஒத்த வளர்ப்பைப் போல் நாம் எடுக்கக்கூடிய சத்துத் தன்மை
6.திரவகத்தில் செலுத்தப்படும் செம்பு பித்தளை இரும்பு போன்று கரைந்தாலும் இத்தங்கம் கரையாத நிலை பெறுவதைப் போலவும்
7.நாம் அளித்த உரத்தின் தன்மை கொண்டு இந்த ஆத்ம சக்தி எவ்வீர்ப்புப் பிடியிலும் போய்ச் சிக்காமலும்
8.வந்து மோதும் பிரபஞ்சத் தொடர்பு வேண்டப்படாத தீய எண்ணங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு இவ்வாத்மா வலு தங்கத்தைப் போன்றும்
9.இப்பிரபஞ்ச திரவகக்திலிருந்து கரையப்படா தங்கமாக ஜொலிக்கக்கூடிய தன்மைக்குக் கொண்டு வர வேண்டும்.
இப்பொழுது வாழும் இந்தச் சுழற்சி வாழ்க்கையில் நம்முடன் தொடர்பு கொண்ட ஆத்மாக்களின் எண்ண உணர்வின் ஈர்ப்பு அலைத் தொடர்பை இச்சரீர பிம்ப எண்ணத்தில் நாம் எடுத்துத் தான் நம் ஆத்மாவிற்கு உரம் போட்டு உரமாக்க முடியும்.
ஆத்மத் தொடர்பின்றி ஆத்ம வலுவை நாம் பெருக்க முடியாது என்ற உண்மையைத் தெளிவாக உணர்ந்திடல் மிகவும் அவசியம்.
ஆனால் எந்த எண்ணத்தைப் பிற எண்ணத்தின் பால் நாம் செலுத்துகின்றோமோ அதே எண்ணத்தின் பிரதிபிம்ப அலை உணர்வின் எதிர் நிலைதான் நம் எண்ணத்திற்குள்ளும் வந்து அந்த அலை பாயும்.
பெண்மைக்கு ஆண்மைத் தொடர் அமில குணவார்ப்பு சக்தி இல்லாவிட்டாலும்… ஆணிற்குப் பெண்ணின் ஜீவ ஈர்ப்பு வளர்ப்பு இல்லாவிட்டாலும்… இவ்வாத்ம வலுவைத் தனித்த உணர்வு எண்ணத்தைச் செலுத்தி வளர்த்துக் கொள்ள முடியாது.
இவ்வாத்மாவிற்கு உரமே…
1.பிற ஆத்மாக்களில் செலுத்தும் எண்ண உணர்வின் தொடர்பலையிலிருந்து
2.இந்த ஞானத்தின் வலு செயல் கொள்ளத் தகக முறையால்
3.அமில உணர்வு வளர்ப்பு அணு வளர்ச்சியின் வலுக் கொண்ட உராய்வால் தான்
4.இவ்வாத்ம வலுவின் வளர் தன்மை உயரும்.
அத்தகைய உயர்வினால்… இச்சரீர ஜீவத் துடிப்பலையின் தொடர்பு கொண்ட வளர்ச்சியிலிருந்துதான்… “சகலத்தையும் அறியும் வளர்க்கும் சப்தரிஷியே… உருவானானப்பா…!”
இறந்தபின் யாருக்கும் ஒன்றும் தெரியாது என்பார்கள், தெரிந்து கொள்ளுங்கள்
உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களின் நிலைகள்
நம் உயிர் பக்கம் வரும் பிற உயிரான்மாக்களின் இயக்கங்கள்
தனக்குள் உள்ள இறை சக்தியை உணர வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
1.ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து தான் ஆத்ம உயிர் வலுப் பெறவேண்டும்.
2.ஆத்ம உயிர் வலுப் பெற ஜீவ சக்தி வேண்டும்.
“நீரின் சக்தியைக் கொண்டு” ஆவியாகும் காற்றும்… நெருப்பும்… கொண்ட தொடர் வளர்ச்சி இப்பூமியைச் சுழல வைப்பதைப் போல் எச்சக்தி வளரவும்… “இஜ்ஜீவ சக்தி தேவை…”
இஜ்ஜீவ சக்தி ஆவியாகிச் சமைக்கப்படும் சத்து நிலை தான் சரீரக் கூறின் எலும்புகளின் வளர்ச்சியைக் கொண்டு பிம்பத்தின் வார்ப்பு ஆரோக்கிய நிலை பெறுகின்றது. அதன் வலுச் சக்தியைச் சரீரத்தைச் சுற்றியுள்ள ஆத்ம வலுவேற்றிக் கொள்கின்றது.
இந்தச் சரீரக் கூடு சமைக்கும் சத்தெடுத்து வளரும் ஆத்மாவிற்கு இந்த உலகப் பந்தத்தில் சுழலில் விஷமாகக் கலந்துள்ள இன்றைய எண்ண குரோத நிலையிலிருந்து நம் ஆத்மா வலுப் பெறும் மார்ர்க்கம் என்ன…?
எப்படி விஷமான நாக சர்ப்பத்தின் உடலில் மாணிக்கக்கல் வளர்கிறதோ… அதைப் போன்று
1.இவ்விஷ உலகப் பிடியிலிருந்து உயர் ஞான அலைத் தொடருக்கு நாம் சென்று
2.அந்த அலைச் சக்தியையே நம் உணர்வின் எண்ணச் சுவாசம் வளர்க்கும் நிலை கொண்டு
3.அவ்வளர்ப்பின் சக்தி வலுவை இவ்வுயிர் ஆத்மா பெறப் பெற
4.ஆத்மா வலுப் பெற்ற ஞான வளர்ச்சி நிலைக்குப் பிறகு
5.தன் வலுவைத் தானே வளர்க்கக்கூடிய :ஆத்ம சித்து” நிலையின் செயல் முறையும் அடையலாம்.
எண்ணத்தின் வீரியத்தில் ஜெப முறையின் பக்தி மார்க்க ஆவேச அலைத் தொடரில் அதே அலைத் தொடர் கொண்ட ஆத்ம குடியிருப்புக்கு இந்தச் சரீரத்தில் குடியிருக்க இடம் தந்து அவ்வலை ஞானத்தை இச்சரீரத்தின் உதவி கொண்டு அவற்றின் ஞானத்தால் பெயரும் புகழும் அடைந்தாலும் இந்த உலகச் சுழற்சிக்குள் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.
1.எக்கவி பாடினாலும்…
2.எவ்விஞ்ஞானத்தை அறிந்தாலும்…
3.தன்னைத் தான் உணர்ந்து
4.தனக்குள் உள்ள இறை சக்தியைத் தான் வளர்த்து
5.ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயர் ஞான ஈர்ப்பலையின் தொடர் அமிலத்தை வளர்க்கவல்ல
6.சுவாச ஈர்ப்பு மின் காந்த வளர்ச்சி ஓட்ட வளர்ப்பினால் மட்டும் தான் உயிர் ஆத்மா வலுக்கூடும்
7.எவ் ஈர்ப்பலைக்கும் சென்று இந்த உடலை விட்டு எந்த நிமிடத்திலும் உடலிலிருந்து இயக்கவும்
8.உடல் அற்ற நிலையிலும் வலுக் கொண்ட ஆத்மா எவற்றிலும் சிக்காவண்ணம்
9.செயல்படுத்தும் சித்து நிலையும்… இதன் வளர்ச்சித் தொடர் யாவையுமே பெற முடியும்.
ஆனால் சில அலைத் தொடர்பின் பக்தி முறை ஜெப வழியில்… கூடு விட்டுக் கூடு பாயும்… உடலை அடக்கி ஆத்மாவைப் பிற உடலுக்குச் செலுத்தி செயல்படுத்திய பல மாந்திரீகத் தொடர்பு கொண்டவர்கள்… அதன் தொடர்பால் வேறு ஒரு ஈர்ப்பலையில் சிக்குண்டு… “தான் பெற்ற சித்துகளின் சக்தியையே அழித்துக் கொண்டனர்…”
உயர் ஞானத் தொடர்பின் அலைத் தொடரில்…
1.“தன்னைத் தான் நம்பி… தனக்குள் உள்ள இறை சக்திக்குப் பூஜிப்பு நடத்தி வளர்த்தால் அன்றி
2.வளர் சக்தி பெறுவது… மற்றெந்த நிலையிலும் கடினம்.
“தன் ஆத்ம உயிரைக் கொண்டு…” ஆத்மாவின் சக்தி தான் இந்த உடல். இந்த உடலை இயக்குவதே இவ்வாத்மா தான் என்பதை முதலில் உணர வேண்டும்.
1.தன் உயிராத்மா வளர… வலுப் பெற…
2.ஜீவ சக்தி தரவல்ல இச்சரீர கோளத்தின் உண்மை உணர்ந்து
3.உயிர்த் துடிப்பின் செயலுக்கு வலுத் தந்த
4.தாய்மைச் சக்தியின் தொடர்பைப் பூஜித்தே
5.ஒவ்வொரு ஆத்மாவும் இதன் உண்மையின் வழித் தொடரைப் பெறுங்கள்.
முதல் தெய்வங்களுக்குச் செய்ய வேண்டிய கடமை
என் கடவுளுக்கும் குருவுக்கும் தெய்வத்திற்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். என்னால் பட்ட துன்ப நிலைகள் மாறவேண்டும். அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும்… மகிழ்ச்சி பெறவேண்டும் என்று அதிகாலை தியானிக்க வேண்டும்.
நோய்வாய்ப்பட்டவரை நோயிலிருந்து விடுபடச் செய்யும் பயிற்சி
ஒருவர் கடுமையான வியாதியுடன் இருந்தால்… கடைசியில் அந்த ஆன்மா வெளி வந்த பின் அவர் மீது பற்று கொண்ட உணர்வு நமக்குள் அதிகமாக இருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
பின் அந்த உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பெருகத் தொடங்கிவிடுகின்றது. நம் நல்ல குணங்களை எல்லாம் மறையச் செய்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்..?
உடலுடன் இருக்கும் பொழுதே அவருக்குள் இருக்கும் தீமையான குணங்களை மறையச் செய்ய
1.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஓங்கி வளரச் செய்து
2.நம் உடலுக்குள் அது வராது முதலில் தடுத்துக் கொள்ள வேண்டும்.
3.பின் அருள் ஒளியின் உணர்வைச் சொல்லாக வெளிப்படுத்தி
4.செவி வழி பாய்ச்சி அவர்களை உற்று நோக்கும்படி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தல் வேண்டும்.
நுகர்ந்த உணர்வுகள் அங்கே நோயை நீக்கும் அணுவின் தன்மை வளர்ச்சி அடையத் தொடங்கும். அந்த நினைவை அவர்கள் கூட்டக் கூட்ட அவர்கள் நோயிலிருந்து விடுபடுகின்றனர். இதை நாம் செய்தல் வேண்டும்.
தியானம் இருப்போர்கள் இப்படி நாம் வழி நடத்தி… மற்றோருக்கு இந்த உண்மையின் நிலைகளை உணரச் செய்தல் வேண்டும்.
உதாரணமாக ஒருவன் ரோட்டில் அனாதையாகக் கிடக்கின்றான் அவன் துடிப்பதை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் உதவி செய்யவில்லை.
யார் பெற்ற பிள்ளையோ..! இப்படிக் கிடைக்கின்றானே…! என்று இரக்க உணர்வு கொண்டு நுகர்கின்றோம். அவன் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் அதே உணர்ச்சிகள் தூண்டுகின்றது. ஆனால் அறியச் செய்கின்றது.
ரோட்டில் கிடப்பவனுக்கு நாம் எப்படி உதவி செய்வது…? என்று சிலர் கூச்சப்பட்டுச் சென்றுவிடுவார்கள்.
ஒரு சிலர் அவரை எடுத்து எப்படியும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் ஜீவ அணுக்களாக மாறும் கருக்களாக உருவாகின்றது.
மீண்டும் அந்த நினைவை அடிக்கடி எண்ணப்படும் பொழுது அது அணுவாக மாறி அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்து அவன் எப்படிச் சிரமப்பட்டானோ அந்தச் சிரமத்தை உருவாக்கும் அணுக்கள் வந்து விடுகின்றது.
அப்படிப்பட்ட அணுக்கள் பெருகி விட்டால்…
1.அதற்கு உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அதை நுகர்ந்தால்
2.அவனைப் போன்ற நமக்குள் சிரமப்படும் உணர்வுகளும்
3.அவன் செய்த அந்த உணர்வின் தன்மையை நமக்குள்ளும் வளர்க்கத் தொடங்கிவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை நாம் உற்றுப் பார்த்தாலும் உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தி கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… என்ற அந்த உயர்ந்த சக்தியினைக் கொண்டு அவன் கண்டுண்ந்த வேதனை உணர்வு நமக்குள் வராதபடி அதை அடக்கும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
அந்த அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரும் பொழுது
1.இது தான் விநாயக தத்துவத்தில் கூறியபடி அங்குசபாசவா..
2.அதாவது… அங்குசத்தைக் கொண்டு அடக்கத் தெரிகின்றது.
3.ஆறாவது ஆறிவால் நோய்… என்று தெரிகின்றது
3.அந்த மகரிஷிகள்… “நோயை வென்றவர்கள்” என்றும் தெரிகின்றது.
4.நோயை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
5.ஆறாவது அறிவைக் கொண்டு முருகு…! நமக்குள் உருவாகும் சக்தி பெறுகின்றது.
அப்படி உருவாகும் சக்தி பெறும் பொழுது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். அருள் ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கி வளர்க்கப்படும் பொழுது நஞ்சை அடக்கிடும் உணர்வுகளாக விளைகின்றது.
நமது ஆறாவது அறிவால் தீமைகளை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றோம் என்பதைத் தெளிவாக்க சாஸ்திரங்கள் எத்தனையோ கூறியுள்ளது.
ஏனென்றால்… ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
1.எதை எப்படி நுகர வேண்டும்..?
2.எதை அடக்க வேண்டும்…?
3.எதன் வழி நினைவுபடுத்த வேண்டும்…? என்று..!
மீண்டும் மீண்டும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது உங்களுக்குள் அந்தக் கருவின் தன்மை வலுப் பெறுகின்றது. அப்பொழுது அந்த அணுவின் தன்மையாக உடலுக்குள் வலுப் பெற இது உதவும்.
அணுவின் தன்மை வலுப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து உணவாக எடுத்து வளரப்படும் பொழுது
1.நாம் மெய் உணர்வுகளை நுகரும் அறிவும்
2.அது வழிக் கொண்டு நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை வளர்க்கும் நிலை வருகின்றது.
உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தின் பயனை ஒவ்வொருவரும் இப்படிச் செயல்படுத்த வேண்டும்.
நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்
மின்னலைப் பேரொளியாக மாற்றிக் கொள்ளும் பக்குவம்
1500 ஆண்டு மனிதனை வாழ வைக்க முடியுமா…?
குப்பையிலிருந்து சத்தெடுக்கும் வித்தைப் போல் உலக வாழ்க்கையிலிருந்து நல் மணிகளை ஆத்மாவுக்கு உரமாக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
கை வண்டியில் பல மூட்டைகளைப் போட்டு வண்டியை இழுத்துச் செல்வதைப் போல் ஒரு காட்சி தெரிகின்றது.
அந்த மூட்டையில் உள்ள பொருள் எது..? என்று அறியாமல் அந்த மூட்டையைப் பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் உதயமாகின்றது.
1.அரிசியாக இருக்கும்… பருப்பாக இருக்கும்…! என்று சில எண்ணங்களும்
2.சிலருக்கு அதே தொடர்புத் தொழிலில் ஊறிய நிலை பெற்றவர்கள்
3.அந்த மூட்டையின் கோணத்தைக் கொண்டே பருப்பு மூட்டை சர்க்கரை மூட்டை அரிசி மூட்டை என்று யூகிப்பவர்களும் உண்டு.
ஆனால் அந்த மூட்டையைக் கட்டியவனுக்கும் இழுத்துச் செல்பவனுக்கும் “அதில் என்ன உள்ளது…?” என்று தெரியும்.
இதைப் போன்றே இந்த உடல் மூட்டையில் எந்த எண்ணத்தைப் போட்டு வளர்த்திருந்தாலும்… அந்த மனிதனின் புற உருவத்தைக் கொண்டு… செய்யும் தொழில் உற்ற பந்தங்களின் தொடர் பொருளாதார நிலை இதனைக் கொண்டு… ஒரு மனிதனின் நிலையை யூகிக்கும் தன்மை தான் புற உலக எண்ணங்களில் பருப்பாக இருக்குமோ… அரிசியாக இருக்குமோ… என்ற நிலைப்படி….!
கலந்துறவாடித் தொடர்பு கொண்டவர்கள் தொடர்பு நிலையால் மூட்டையின் வடிவ நிலையைக் கொண்டு அதனதன் பொருள் தான்… என்று எப்படி உணர்த்துகின்றோமோ இதைப் போன்று தான் கலந்து வாழ்பவர்கள் “ஒரு மனிதனின் குணத்தை இந்தக் குணமுடையவன் தான்…” என்று உணர்கின்றார்கள்.
1.ஆனால் இந்த உடல் என்ற மூட்டையில்..
2.எதை எண்ணத்தால் ஒரு மனிதன் போடுகின்றானோ
3.அதன் நிலை போடுபவனுக்கு எப்பொருள் என்று தெரிகின்றதோ அதைப் போன்றே
4.ஒரு மனிதனின் எண்ண குணம் அவ\னுக்குத் தான் தெரியும்.
அவன் எண்ணத்தால் போட்டதன் பொருள் நிலை அறிந்து… அவனை இயக்கிச் செல்லக்கூடிய அவன் எண்ணத் தொடர்பு கொண்ட உயர் சக்திகளுக்கும்… அவ்வண்டியோட்டியின் நிலையை ஒத்த நிலையில் அறிய வாய்ப்பு உண்டு.
இந்தச் சரீர பிம்ப மூட்டையே பல எண்ணத்தில் சுழல்கின்ற உருவ மூட்டை தான்…!
இச்சரீர பிம்பத்தில் ஓடக்கூடிய எண்ண ஒலியின் உணர்வலைகள் இப்பொழுது வாழும் வாழ்க்கையும்… முந்தைய காலச் சேமிப்புத் தொடர்பையும்… சுழன்று ஓடும் இந்த எண்ண ஓட்டத்தின் செயலில் வாழ்ந்தது… உண்டது… கழித்தது… ஆகிய
1.எல்லா நிலைப்பட்ட குப்பையின் மத்தியில் தான்
2.உயர் ஞானத்தை வளர்க்கவல்ல உயிர் ஆத்மா உள்ளது.
3.இந்த உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்டிக் கொள்ள…
4.இந்தக் குப்பையான சரீர எண்ணத்தில் உள்ள சத்து நிலையை உரமாக இவ்வாத்மா எடுத்து
5.உயர் ஞான வித்தாக பிறிதொரு ஈர்ப்புச் சுழற்சியில் சிக்காவண்ணம் உயர் ஞானம் பெறல் வேண்டும்.
குப்பையின் மத்தியில் வளரும் மணியான வித்து தன் வளர்ப்பில் அக்குப்பையின் சத்தை எடுத்து பல வித்துக்களைத் தரவல்ல சக்தியைப் போன்று நாம் பிரிக்கும் சக்தி பெற வேண்டும்.
இச்சரீர பிம்ப மூட்டையில் சேமித்துள்ள குப்பையான பல வாழ்க்கைத் தொடர்புகளையும் இவ்வுலகப் பந்தச் செயல் எண்ண உருவத்தில் எல்லாம் இந்த எண்ண ஓட்டத்தை எப்படியும் செலுத்தி வாழலாம் என்று இருக்கக் கூடாது.
ஏனென்றால் வாழ்க்கையில் எந்தெந்த நிகழ்ச்சி ஓட்டத்தில் எல்லாம் நம் எண்ணங்கள் மோதுகின்றதோ அதன் வழித் தொடர் பெற்ற [இன் அதன் அலை ஈர்ப்பு வார்ப்பாகத்தான் இச்சரீர பிம்பம் வளர்க்கும் ஆத்ம நிலையும் செல்லும்.
அவ்வாறு ஆகாதபடி… நமக்குத் தொடர்பு கொண்ட இச்சரீர எண்ண மோதலின் வாழ்க்கை தொடர்பு நிலையிலுள்ள செயலில்
1.குப்பையான உணர்வை எடுத்து இந்தச் சரீரத்தை மேலும் குப்பையாக்காமல்
2.நம்மைச் சுற்றியுள்ள நாம் செல்லும் செயல் வழியிலும் இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் முறையே
3.குப்பையில் உள்ள சத்தை எப்படி அவ்வித்து தனக்கு உரமாக எடுத்து வளர்கின்றதோ
4.அதைப் போன்ற எண்ணமுடன் நம் ஞானம் செல்லுமானால்
5.நம் உயிராத்மாவின் வலு வலுவாகும் சக்தி நிலையை நாம் பெற முடியும்.
மின்சாரத்தை எடுத்து அதன் சக்தியைப் பல சாதனையாக ஒளி பெறவும் நாம் இயக்கக்கூடிய இயந்திர ஓட்டங்களுக்கும் அதன் உபயோகத்தைக் கொண்டு குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சாதனைக்குகந்த செயலாக உபயோகப்படுத்திக் கொள்கின்றோம்.
சக்தி கொண்ட அந்த மின்சாரம் ஒரு நொடிப்பொழுது இந்த மனித ஜீவனுடன் மோதினால் மனிதனையே அழிக்கக்கூடியது. அப்படிப்பட்ட வலுக் கொண்ட மின்சாரத்தைத் தனக்குச் சாதகப் பக்குவத்தைக் கையாண்டு பல செயல்களை அதன் உதவி நிலையில் பெறுகிறோம்,.
அதைப் போல் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் ஓடக்கூடிய மின் அலையின் வீரிய சக்தியே விஷமான உணர்வுடன் சுழல்வதால்… இவ்வெண்ணத்தின் ஈர்ப்பை ஒரு நொடி அவ்வலையில் செலுத்தினாலும்… மின்சாரத்தின் தாக்குதலைப் போன்று அழிவு நிலைக்குத் தான் செல்ல முடியும்.
1.அதனையே நாம் அந்த மின்சாரத்தின் செயலை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழி முறை போன்று
2.நம் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்… நம்மால் முடியும்…!
அதிகாலையில் கவர வேண்டிய துருவ நட்சத்திரத்தின் சக்தி
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினவை உயிருடன் ஒன்றி சுவாசித்தால் தீமைகள் நம் உடலுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது. அந்தச் சக்தியை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது உடலில் உள்ள அணுக்களும் அதை ஈர்க்க மறுக்கின்றது. அது வலுவான பின் நம் ஆன்மா இங்கே சுத்தமாகின்றது
ஒரு தெய்வத்தை வணங்குவோர்… அடுத்த தெய்வத்தை வணங்க நான் மாட்டேன் என்று சொல்வதில் என்ன உண்மை உள்ளது…?
அரசர்கள் காட்டிய நெறி கொண்டு மதங்களாகவும் இனங்களாகவும் பிரிக்கப்பட்டு ஒரே மதத்திற்குள் பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு போர் முறை கொண்டு தான் இன்று வாழ்கின்றோம்.
ஒருவரை ஒருவர் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு தான் வருகின்றது.
ஒரு தெய்வத்தை வணங்குவோர்…
1.நான் மற்ற தெய்வத்தை வணங்க மாட்டேன் என்று
2.காலையில் பள்ளி எழும் பொழுதிலேயே
3.உன்னை அல்லாது நான் யாரையும் வணங்க மாட்டேன்…! என்று அங்கேயே விஷத்தை ஊட்டுகிறார்கள்.
முருகன் கோவிலுக்குச் சென்றால் உன்னை அல்லாது நான் யாரையும் வாயைத் திறந்து பாட மாட்டேன் என்று முருகனை வணங்குவோர் சொல்வார்கள்.
அதே மாதிரி சிவனைப் பாடுவோரும் அதன் நிலை. காளியைப் பாடுவோரும் இதே மாதிரி. பெருமாளைப் பாடுவோரும் இதே மாதிரி. உன்னைப் பற்றிப் பேசிய வாயில் நான் வேறு எந்தத் தெய்வத்தையும் பேச மாட்டேன்.
இப்படி இங்கேயே ஒவ்வொரு குணத்தின் சிறப்பை ஓங்கி வளர்த்து
1.அடுத்த குணத்தைப் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
2.வெறுக்கும் உணர்வுகளை வளர்க்கும் பண்புகளைத்தான் ஆலயங்களிலும் தோற்றுவிக்கின்றார்கள்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் உண்மையின் உணர்வுகளை எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்காக வேண்டித்தான் நமது குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அருள் ஞானத்தின் உணர்வுகளைத் தொடர்ந்து பதிவாக்குகின்றோம். பதிவான பின் அது கருவின் தன்மை அடையும் தன்மையை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.
உருவாக்கிய உணர்வு கொண்டு நீங்கள் அதை மீண்டும் நினைவாக்கினால் அதுவே குருவாக நின்று அருள் ஒளிச் சுடராக உருவாக்கும் அருள் ஞானமமாக உங்கள் எண்ணங்களில் தோற்றுவிக்கும்.
அருள் உணர்வின் தன்மை சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலில் ஞானத்தை வளர்க்கும் அருள் ஞானக் கருக்களாகி அணுக்களின் தன்மையாக உருவாகு.
அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது இந்த மனித வாழ்க்கையில் மகிழச் செய்யும் தன்மை வரும். அந்த மகிழும் தன்மையை வளர்க்க வேண்டும் என்றால் இந்த உண்மைகளை.. ஆலயங்களின் பண்புகளை பிறருக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்புகளையும்…
1.அங்கே வைத்திருக்கக்க்கூடிய தெய்வங்கள் யார்…?
2.அந்தத் தெய்வம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளையும்
3.ஆலயம் என்பது நம் உடல் என்றும்
4.அதிலே உள்ள நம் நல்ல குணங்கள் காக்கப்பட வேண்டும் என்றும்
5.நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறையப்படும் பொழுது சிவம் என்றும்
6.நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் வினை என்றும்
7.நாம் தெளிவாக எடுத்துச் சொல்லி மக்களை அறியாமையிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும்
இதன் வழியில் மகரிஷிளின் அருள் ஒளியின் சுடரை உங்களிலே வளர்த்துக் கொண்டால் இந்த உணர்வுகள் விளைந்து சொல்லாக உங்களிடமிருந்து வரும் பொழுது கேட்போர் உணர்வுகளில் ஊழ்வினை என்ற வித்தாக மாறும்.
அதை அவர்களும் நினைவுபடுத்தினால் அவர்கள் குடும்பத்தில் வரும் சிக்கல்களையும் அவர்கள் உடலில் வரும் நோய்களையும் மாற்றும் வல்லமை நீங்கள் பெறுகின்றீர்கள்.
ஆகவே நாம் ஒவ்வொருவரும் அகஸ்தியன் அவன் வாழ்வில் கண்டுணர்ந்த அருள் வழியில் தியானிக்க வேண்டும்.
அகஸ்தியனாகி துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான பின் அதன் வழியில் சென்றவர்கள் அனைவருமே ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக பிறவியில்லா நிலைகள் அடைந்துள்ளனர்.
1.அவர்கள் வழியில் நாம் சென்றோம் என்றால்
2.அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் ஊட்டினோம் என்றால்
3.அதன் வழியில் நம்மையும் இந்த மனித நிலையிலிருந்து விடுபட்டு
4.அருள் ஞானியின் அருள் வட்டத்தில் இணைத்துவிடும்.
நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டேயுள்ளது. நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தும் நமக்குள் கடவுளாக நின்று இயங்கி… உள் உணர்வையும் ஊட்டி… உயிருடன் ஒன்றச் செய்து… அதுவே அருள் ஒளியின் சரீரமாக உருவாக்கும்.
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை எதை எடுத்தோமோ அதுவே மின் அணுவாக மாற்றும்.
2.என்றும் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் தன்மை பெறுகின்றது.
3.இது எளிதான நிலைகள்…!
அகஸ்தியன் கண்ட பேருண்மைப்படி அதனை ஒவ்வொரு நாளும் நாம் நுகர்தல் வேண்டும். அப்படி நுகரும் பருவம் பெறுவதற்குத் தான் அதிகாலையில் துருவ தியானத்தில் அரும் பெரும் சக்தியைக் கூட்டச் சொல்கிறோம்.
கர்ப்பமான தாய் சண்டையிட்டவர்களை உற்றுப் பார்த்தால் குழந்தையினால் குடும்பம் எப்படிச் சிதறுகிறது
கர்ப்பமான புலி மானையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி இரண்டுங்கெட்டானாக எப்படி உருவாக்குகிறது
நம் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகிறது என்று நாம் அறிந்திருக்கின்றோமா
செல்வத்தைச் சேர்த்துப் புகழைச் சம்பாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இன்றைய மனிதனுக்கு உள்ளது
பித்த சுரப்பிகள் ஒரு சிலருக்கு அதிகமாக உமிழ்த்தப்படும் பொழுது மாமிசங்களை அதிகமாக உட்கொள்வார்கள். அதை உணர்வாக்கப்படும் பொழுது அவர்களுடைய தசைகள் வலுக் கொண்டதாக மாறுகின்றது.
அதே சமயத்தில் அதனுடைய வளர்ச்சியில் பித்த சுரப்பிகளின் சுரப்பும் அதிகமாகின்றது. அதனால் விஷத் தன்மை கொண்ட அரக்கத்தனமும் வருகின்றது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.
புலியோ யானையோ மற்ற மிருகங்கள் முரட்டுத்தனமாகத் தாக்குவது போன்று அசுர குணம் கொண்ட வளர்ச்சி அடைகின்றது. இதை எதற்காகச் சொல்கிறோம்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
விஞ்ஞான அறிவு வளர்ந்த இந்தக் காலத்திலேயும் தன் நாட்டிற்குப் புகழ் தேட அசுர உணர்வு கொண்ட மனிதனை உருவாக்குகின்றார்கள். அவன் புகழ் பெறுகின்றான்… கோடிக்கணக்கில் பணம் பெறுகின்றான்…! ஆகையினால் அந்த ஆசையில் அங்கே செல்கின்றார்கள்.
1.தன் நாட்டிற்குப் புகழ் பெறவேண்டும் என்று அசுரத்தனமான செயல்களைச் செய்து சிந்திக்கும் செயல் இழந்து
2.கிரிக்கெட் போன்ற விளையாட்டுத் தன்மைகளும் கொண்டு வருகின்றார்கள்.
அசுரத்தனமான நிலைகளில் தாக்கப்பட்டு அதிலே பொருளை ஈட்டிப் புகழ் பெறும் நிலைகளை உருவாக்குகின்றார்கள்.
1.அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை உற்றுப் பார்த்த பின்
2.அந்த ஆசையை நமக்குள் ஏற்று நம் வாழ்க்கையையும் கெடுத்துவிடுகின்றோம்.
இந்த விளையாட்டை விளையாண்டால் அதன் உணர்வுகள் முன்னணியில் வந்தால் எனக்குச் செல்வம் வரும்… செருக்கு வரும்…! என்று தான் வருகின்றோம்.
1.இதைப் போன்று தன் வாழ்க்கையில் புகழ் தேடி பொருள் தேடும் நிலைகளே
2.இன்றைய விஞ்ஞான அறிவால் உருவாகின்றது.
நம் நாட்டில் மட்டுமல்ல… இந்த உலகம் முழுவதும் நடக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
இந்த உலகம் குறுகிக் கொண்டு வருகின்றது. இந்த மனித வாழ்க்கையே நமக்குச் சதமானது அல்ல. சதமாக்கப்பட வேண்டியது எது என்றால் இந்த உடலிலிருந்தே நாம் உயர்ந்த சக்திகளைப் பெறவேண்டும்.
உயர்ந்த சக்திகளை நாம் பெறவேண்டும் என்றால்… “அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்…!” என்ற எண்ணத்தை உயர்த்த வேண்டும்.
ஒவ்வொரு நொடியிலும்…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
4.எங்கள் இரத்தநாளங்கள் முழுவதும் அந்தச் சக்திகள் பெருக வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அதே சமயத்தில் நம் அருகிலே இருப்போருக்கும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்றும் அவர்களும் உயர வேண்டும் என்று எண்ணினால்
1.நமக்குள்ளும் உயரும் சக்தி வருகின்றது.
2.எதிரியல்லாத நிலைகள் நமக்குள் வளர்க்கப்படுகின்றது,
இப்படி நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பாதுகாக்கும் நிலைகள் வருகின்றது. நமக்குள் விளையும் உயர்ந்த உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாற்ற உதவுகின்றது.
விநாயகருக்கு வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் வைத்ததன் நோக்கம்
வாழ்க்கையில் நமக்கு முன்னாடி வருவது கசந்த நிலை. அதைக் காட்டவே வேப்ப மரம். பாழடைந்த கட்டடமாக இருந்தாலும் காற்றிலிருக்கும் ஈரப்பதத்தை எடுத்து ஒரு அரச மரம் வளர்கிறது. அதைப் போல தீமைகளை வென்று நஞ்சினை வென்று அழியாத நிலைகளில் அரசைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றோம் என்றால் வாழ்க்கையில் வந்த கசந்த நிலைகளை மாற்றியமைக்கலாம் என்பதையே ஞானிகள் அவ்வாறு காட்டினார்கள்.
தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதை மறந்து வாழும் மனிதர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
1.தன்னைத்தான் நம்பாமல்…
2.தனக்கு மேல் வலுவான பூஜிப்பு முறையால்…
3.பல அலைத் தொடர்புகளின் சக்தி அலையை நம்பி…
4.அதன் தொடர்புடன் தான் இன்றளவும் “பக்தி பூஜிப்பு வழி முறை…“ இருக்கின்றது.
நமக்கு மேல் சக்தி கொண்ட தெய்வங்களை அடிபணிந்து… அருள் வேண்டி… அவ்வலையின் வசத்தில் நாம் வளரும் பக்குவத்திலேயே இன்றளவும் காலம் சென்று விட்டது.
தன் வலுவைத் தான் கூட்டி தன்னையே தான் நம்பி தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதையே மறந்து வாழ்கின்றனர்.
மற்றொன்றிடம் யாசித்து… பக்தி உணர்வு கொண்டு வேண்டிப் பெறும் குண வழிச் செயலாகத் தான் இன்றளவும் செயல்கள் உள்ளது.. ஞானத்தை எட்டிப் பார்க்கும் தன்மை இல்லை…!
ஒவ்வொரு ஜீவ சக்தியிலுமே தன் வலுவை வளர்க்கக்கூடிய வலுத் தன்மை உண்டு.
1.உடல் வேறு… ஆத்மா வேறு…!
2.ஆத்மா பிரிந்து விட்டால் உடல் செயல் இழந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்த மனிதன்
3.தன் ஆத்ம இயக்கத்தின் உண்மையை உணரவில்லை.
உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கும் ஆத்ம உயிர் உண்டு. சரீர பிம்ப உடலை இயக்குவதும் அவ்வாத்ம பிம்பம் தான். உடலைச் சுற்றி இவ்வாத்மாவின் இயக்கம் செயலாற்றும் தன்மைக்கு… “ஜீவத் துடிப்பு கொண்ட” இயக்க இயந்திரம் தான் இவ்வுடல் கோளம்.
எண்ணம் எப்படி உதயமாகின்றது…?
மூளையின் பதிவு நிலையிலோ… மற்ற சரீர பிம்ப உடல் உறுப்பின் நெஞ்சிலிருந்தோ… எண்ணம் உதயம் பெறவில்லை…!
இவ்வாத்மாவின் உந்தலின் எண்ணம் கொண்டுதான்… இவ்வுடல் இயந்திரத் துடிப்புக் கோளத்தின் ஆத்ம உயிரின் மோதலினால்.. இச்சுவாசம் எடுத்த உயிர்த் துடிப்பின் மோதல் இருந்தால்தான் சுவாசம் எடுக்க முடியும்.
1.ஆத்மாவின் செயலாக இந்த உயிர்த் துடிப்பு ஏற்பட்டு
2.உயிர்த் துடிப்பின் உந்தலுக்கு இச்சுவாசத்தின் மூலமாக
3.ஆத்மாவின் எண்ண செயல் கவன நரம்பில் மோதி
4.சிறு மூளையின் இயக்கத்தால் செவி ஒலி ஈர்த்து எண்ணச் செயல் நடக்கின்றது.
5.ஆத்மாவின் உந்தலுக்குகந்த எண்ணச் செயலை
6.உடல் கோளத்தைக் கொண்டு செயலாக்கிக் கொள்கின்றனர்.
காற்றலையில் கலந்துள்ள ஒலி அலையை வானொலிப் பெட்டி மின் தொடர்பு ஏற்படுத்தியவுடன் எவ்வலைத் தொடரில் அம்முள்ளை வைக்கின்றோமோ அவ்வலையின் ஒலி கேட்பதைப் போல்
1.இவ்வாத்மா அலையின் உந்தல் இவ்வுயிர் சிரசில் பட்டு
2.உயிர்த் துடிப்பைக் கொண்டு… சுவாசத்தின் எண்ணச் செயல் நடக்கின்றது.
இவ்வெண்ணத்தின் செயலை மாற்றியமைக்கும் நிலை… வளர்க்கும் நிலை… குறைக்கும் நிலை… எதுவாக இருந்தாலும்
1.இஜ்ஜீவத் துடிப்பு கொண்ட சரீர இயக்க அணு வளர்ப்பின் வளர்ப்பில் இருந்து தான்
2.இவ்வாத்மாவின் வலுவையே வலுவாக்கக்கூடிய வழித் தொடர் பெற முடியும்.
ஆத்மாவின் செயலான எண்ணத்தை உயர் அலையின்பால் செலுத்தி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
உயர் அலை என்பது இந்தப் பூமியின் பிடிப்பலையில் இந்தப் பூமியின் சுழற்சியுடன் சுழலும் அலைத் தொடர்பின் வட்ட ஈர்ப்பில் வாழும் நிலையிலிருந்து மகரிஷிகளின் அலைத் தொடர்பு ஞானத்தை மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கப் பழகுதல் வேண்டும்.
எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் முறை வழியால் அந்த உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் எடுக்க எடுக்க இந்த உடலில் இருந்தே சரீர அணுக்களின் ஈர்ப்பு வளர்ப்பலையால் ஆத்மாவின் வலுவைக் கூட்டி இவ்வாத்மாவை எந்த நிலைக்கும் செலுத்திச் செயலாக்ககூடிய வலுவை இந்த மனிதச் சரீரம் பெற முடியும்.
தன்னைத் தான் நம்பி…! தனக்குள் உள்ள இறை சக்தியின் உயர் அலையைப் பிற அலைகள் தங்க இடம் தராமல் நல்லதாக மாற்றிட முடியும்.
ஏற்கனவே நம் உடலில் குடிவந்துள்ள எந்த வகையான குண வலு கொண்ட ஆத்மா இருந்தாலும்… நம் ஆன்மா வலு கூடக் கூட… நம் வசப்பிடி வலுவாக… அதனையும் செயலாக்கும் வலுவாக்கி… நம் ஆத்ம சக்தியை நாம் வளர்த்து… “ஒவ்வொருவருமே இறைவனாகலாம்…!”
எங்கோ இல்லை இறைவன்…! இங்குள்ள இறைவனை நாம் தூசிக்காமல் ஒவ்வொருவருமே நாம் இறைவனாகலாம்.
மனிதனும் தெய்வமாகலாம் என்பது… போற்றலில் பிறர் போற்றி வணங்கும் தெய்வமல்ல…!
1.மனிதன்தான் தெய்வ சக்தியைப் படைக்கவல்லவன்.
2.தெய்வ குண வழி முறை செயல்பாடு உருவக குண செயலையே உருவாக்க வல்ல சக்தி… “மனித சக்தி தான்…”
ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலை பெறலாம்.
ஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…?
ஜாதகம் மனிதனுக்கு இல்லை – பூ வைத்துப் பார்த்தல்… நியூமராலஜி…!
திருமணத்திற்கு மணப் பொருத்தம் தேவை – ஜாதகம் இல்லை
மற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்
பதார்த்தங்கள் அனைத்தையும் நாம் சுவையாகச் செய்து வைத்து கடைசியில் ஒரு விஷம் கொண்ட பொருளை அதிலே இணைத்து விட்டால் உட்கொள்வோரை நிச்சயம் மடியச் செய்துவிடும்.
அது போல் உலகில் தோன்றிய மகான்கள் எல்லோருமே உயர்ந்த தத்துவங்களைக் கூறியிருந்தாலும்
1.அங்கே அந்த மகான் காட்டிய உணர்வுக்கு மேல் இன்னொன்றாக
2.தீமை செய்வோர்களை அழித்திடும் கடுமையான உணர்வைத்தான் கடைசியில் சேர்க்கின்றோம்.
இது எல்லாம் காலத்தால் அரசர்களால் உருவாக்கப்பட்டது…!
ஏனென்றால் மகான்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த நிலைகள் அனைத்தும் அரசு காலங்களில் அந்தப் பேருண்மைகள் மறைந்து விட்டது… இன்று நமக்கு அதைக் கிடைக்கவிடாதபடியே செய்து விட்டார்கள்.
அந்த மகான் காட்டிய வழிகள் வரப்படும் பொழுது அன்றைய அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்…?
1.தீமை என்ற நிலை வந்தால் அதை உடனே அழித்துவிட வேண்டும் வேட்கைகள் தூண்டுகின்றது.
2.தனக்கு அல்லது தன் மதத்திற்கு விரோதமானவர்கள் எல்லாம் “நம் கடவுளுக்கு விரோதமானவர்கள்…!”
ஞானிகள் காட்டிய வழி தவறி… கடைசி நிமிடத்தில் நீ எதிரிகளை (கடவுளுக்கு விரோதமானவர்களை) வீழ்த்திட வேண்டும்… தவறு செய்பவர்களை அழித்திட வேண்டும்… என்ற உணர்வு கொண்டு இந்தத் தாக்குதல் வரப்படும் பொழுது அந்தத் தாக்கிடும் உணர்வே கடைசியில் விளைகின்றது.
“கடவுளுக்கு விரோதமானவர்கள்…” என்று சொல்லிக் கொண்டு அந்தக் கடவுளின் தன்மையில் தான் பல மதங்களை உருவாக்கி விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் இப்படித்தான்…!
இந்து மதமானாலும் சரி முஸ்லிம் மதமானாலும் சரி புத்த மதமானாலும் சரி கிறிஸ்தவ மதமானாலும் சரி இதைப் போல “தனது கடவுளுக்கு எதிரியானவர்கள்…” என்று எதிரிகளை உருவாக்கி
1.நல்லவைகளைப் பேசினாலும்
2.மற்ற மதங்களைச் சாடும் பொழுது எதிரி என்ற நிலையும்
3.பிசாசு என்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றனர்.
இப்படி உலக நிலைகளில்… மற்றவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று சாரார் சொல்லப்படும் பொழுது மற்ற மதங்களும் இதைப் போல “அவர்களும் பிசாசை வணங்குபவர்கள்…” என்று சொல்வதும்
1.உயர்ந்த குணங்களை எல்லாம்
2.அந்த ஆவேச உணர்வு கொண்டு தான் வளர்த்துக் கொள்கின்றோம்.
அன்று நபிகள் சொன்னது:-
1.மனிதனை மனிதன் நீ மதித்து நட
2.மனிதனை உயர்த்த வேண்டும் என்று நீ எண்ணினால் நீ உயர்வாகின்றாய்.
3.மனிதன் பேரன்பைப் பெற்று அனைவரின் தன்மையும் உயர வேண்டும்
ஒரு மனிதன் பசியால் வாடப்படும் பொழுது… அந்தப் பசியைத் தீர்க்கும் எண்ணங்கள் உனக்குள் வந்தால்… அந்தப் பசி தீர்க்கும் உணர்வே உனக்குள் விளையும்… பசி தீர்க்கும் உபாயம் உனக்குள் கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் உண்மையின் சொரூபம் கொண்டு
1.பொய் பேசாதே
2.பொய்யான செயல்களைச் செய்து பிறரை ஏமாற்றாதே
3.தவறான உணர்வுகளை உனக்குள் சேர்க்காதே
4.தவறின் உணர்ச்சிகளை உனக்குள் இயக்கி விடாதே என்று நபிகள் தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் வெளிப்படுத்திய பேருண்மையை யாரும் அதைத் தெளிவாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் வந்த அரசர்கள் அவர்கள் நியாத்தை முன் வைத்து அதன் வழிகளில் தான் இவர்கள் ஆட்சி புரிந்தனர்
நபிகள் காட்டிய அந்தக் கடவுளைக் காணும் நெறியை இவர்கள் முன் வைத்துக் கொள்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் இயற்றும் சட்டத்தைக் கொண்டு இதற்கு மாறாக நடந்தால்
1.அவர்களை ஆண்டவனின் எதிரி என்று மக்கள் மத்தியில் பலியிடுவார்கள்.
2.ஆண்டவனுக்கு விரோதமாக இருந்ததனால்… நீ தவறு செய்ததனால்.. நீ பொய் பேசியதனால்…
3.உன் கைகள் துண்டிக்கப்படும்.. உன் அங்கங்கள் அவமதிக்கப்படும்… உன் சிரசு துண்டிக்கப்படும்…! என்று
4.இப்படி அரசு சட்டங்களை நீதியாக்கி அதை “ஆண்டவன் கட்டளை…” என்று செய்தார்கள்.
அதே உணர்வுகள் தான் இன்றும் உள்ளது.
ஆனால் அந்த அருள் ஞானிகள் தீமைகளைப் பற்றிக் கூறியது என்ன…?
தவறான உணர்வுகள் உனககுள் இருந்தால் அந்த உணர்வின் தன்மை அரக்க உணர்வுகளாக உனக்குள் விளைந்துவிடும். அதனால் உன் அங்கங்கள் சீர்கெடுகின்றன… உன் குணங்கள் மாறுபடுகின்றது… நீ எண்ணிய உணர்வுகள் உனக்குள் மாறுபடச் செய்கின்றது..!
1.உனக்குள் இருக்கும் அந்தத் தவறின் நிலைகளை எல்லாம் அகற்றிவிடு… அருள் ஒளியைக் கூட்டி விடு…
2.ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ வேண்டும் என்று நீ எண்ணு.
3.அவன் பசியைத் தீர்க்கும் உணர்வை ஏங்கு
4.அந்த உணர்வு உனக்குள் இருந்து பேரன்பாக வளர்கின்றது என்று தான் மகான்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
ஞானிகள் கூறியதை யாரும் பின்பற்றவில்லை…! இன்றைய உலக நிலை இது தான்.
ஓமுக்குள் ஓ..ம்…. ஓமுக்குள் ஓ..ம் என்றால் என்ன…?
சாந்தமாக நாம் இருந்தாலும் ஒரு கோபப்படுவோரின் உணர்வை நுகர்ந்தால் ஓ…. என்று அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை ஊட்டிக் நம்மையும் கோபப்படச் செய்கின்றது.. சாந்தமான இசைகளை மாற்றி நம்மையும் காரமான இசைகளாக சொல்களாகச் சொல்லச் செய்கிறது. இனிமையான இசைகளை வாசிகின்றார்கள் என்றால் எல்லோரும் அதனுடன் இணைந்து இசைத்தால் இனிமையாகின்றது. இணையவில்லை என்றால் அபஸ்வரமாகி இனிமையைக் கெடுத்துவிடுகின்றது… உடனே சலிப்படைகின்றோம்.. நம் முகமும் மாறுகின்றது.. செயல்களும் மாறுகின்றது..!
பக்தியை வளர்த்து ஞானத்தை மறந்த காலம் எப்பொழுது வந்தது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஆதிசங்கரர் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இப்பூமியில் பல மகான்கள் வளர்ந்தார்கள். தன் ஞானத்தால் தெய்வசக்தி பெற்று சப்தரிஷியின் தன்மைக்குத் தன் வலுவையும் வலுவாக்கிக் கொண்ட மகான்களை வளர்த்த பூமி தான் “நம் தாய் பூமி…”
1.அதன் தன்மையின் தொடர் வளர்ப்பு நிலையற்று
2.அந்த ஞானச் செயலே விஞ்ஞானச் செயலாக
3.ஞானத்தின் தொடர் அலையின் செயல் “செயற்கை ரூபத்தில்…”
4.ஏட்டுப் படிப்பு வழி முறையிலும் இவ்வொலி அலை மின் சாதனத் தொடர்பலையிலும் சென்றுவிட்டது.
இதுவல்லாமல் தன் ஞானத்தால் வளர்ந்த சக்தியைச் செயல்படுத்த வந்தவர்கள் எல்லாம் தன் வலுத் தன்மையின் வலுவை எடுக்கவல்ல ஆத்ம வளர்ச்சி ஞானம் குன்றிய தன்மையில்
1. கல்லில் சிலை செய்து ரூப வழிபாட்டு முறைப்படுத்திக் கொண்டு
2.தன் பக்தியைக் காட்ட “வணங்கும் தொடரை” ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அதுவுமல்லாமல் இந்தப் பூமியின் வளர்ப்பில் சுழற்சி ஓட்ட கதியில் மண்டல ஈர்ப்பு சந்திப்பு நிலைகளிலெல்லாம் இப்பூமியின் வளர்ப்புத் தன்மையினால் பல மாற்ற “பிரளய காலங்கள்” ஏற்பட்டது.
ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இப்பூமியின் ஈர்ப்பு வளர்ப்பு செயல் ஓட்டமானது வளர்ப்பின் நிலைக்குகந்த மாற்றச் செயலினால் அந்தந்த மாற்றத்திற்குப் பிறகு வளரக்கூடிய அணு வளர்தன்மையும் மாறியே வந்தது.
1.குண ஈர்ப்பின் அமிலமே பிரளய மாற்றத்திற்கு முன் இருந்த நிலை வேறு…
2.மாறிய பிறகு வளரும் நிலை வேறாக
3.இப்பூமியில் படியும் அமில வலு மாறிவிடுகின்றது.
தங்கத்திலோ மற்ற உலோகத்திலோ செய்யப்படும் பொருள்களை மாறி மாறி அதை அழித்து நாம் மற்றொன்றாக உருவாக்கும் பொழுது அதனுடைய தரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதல்லவா.
அதைப் போன்ற நிலை தான் இத்தொடரில் வந்துள்ள ஞான வளர்ப்பு நிலை வளர்ச்சி தொடர் அலையே இப்பூமி வெளிக்கக்கும் அமில வளர்ப்பின் நிலைக்கொப்பத்தான் ஞானமும் வளர்கின்றது இன்றளவும்.
இந்த ஞானத்தின் செயல் முறை வழித் தன்மையே ஆதிசங்கரரின் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அவரின் காலம் வரைக்கும் ஞான சக்தி வளர்ச்சியின் பாதையில் இருந்தது.
அவருக்குப் பிந்தைய காலத்தில்…
1.அரசர்களின் போற்றலின் பேராசை உணர்வு நிலை அதிகப்பட்டு விட்டதாலும்
2.மனித இன (மக்கள் தொகை) வளர்ச்சிப் பெருக்க நிலையினாலும்
3.மனிதனின் எண்ண ஈர்ப்பே இப்பேராசை உணர்வில் சிக்கி
4.அரசர்கள் ஆண்ட கால உணர்வில் அவர்களின் ஆதிக்க ஈர்ப்புப் பிடிப்பில் சிக்கிய தொடர்பலை வளர்ப்பாக
5.ஒன்றின் தொடர் கொண்ட தொடர் வட்டச் சுழற்சியில் சுழன்று வருகின்றது இன்றளவும்.
அரசர்களின் காலத்தில் தான் இப்பக்தி வழி முறை அதிகமாக வளர்ந்தது.
அதுவுமல்லாமல் இவ்வரசர்களினால் சில அலைத் தொடர்களைச் சில சக்தி வாய்ந்த பக்தி கொண்ட தெய்வ குண சித்து நிலை கொண்ட அலைத் தொடர்புடைய தெய்வ ஆவி அலைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.
தன் ஆதிக்க அரசு வாழ பிற அரசர்களின் போர்த் தொடர்புகளுக்கு இவ்வாவி அலை தெய்வ குணச் சக்திகளை இவர்களின் பூஜாபலனால் உருவேற்றிக் கொண்டார்கள்,
விக்கிரமாதித்தன் காலத்திலும் அசோக சக்கரவர்த்தி காலத்திலும் அதைப் போன்றே வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலும் பல அரசர்களும் இப்பூஜை வழிபாட்டுச் சித்து முறை பெற்று ஆவிகளின் தெய்வ குண தேவதைகளின் தாய் சக்தியை வணங்கி வந்தார்கள்.
1.அவர்கள் நாட்டை அரசாண்ட காலத்தில்
2.அரசர்களின் வலுவுக்கு வலுவாக இச்சக்திகள் தான் ஆண்டன.
புராண இதிகாச நூல்களில் சித்தர்கள் பால் தொடர் கொண்ட காவியங்களில் எல்லாம் ஆண் பெண் குண சக்தியின் தொடர்பில் உணர்த்தித்தான் உண்மை நிலைகளை எல்லாம் காட்டினார்கள்.
சிவ சக்தி… விநாயகன்… முருகன்… விஷ்ணு… என்றும் நாரதர் என்றும் ஆணின் தொடர்பு முறையை வலியுறுத்திய தெய்வ குணங்களாக இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இராமரின் குண சக்தியையே பல ரூப அலை ஞான செயல் குண இராமனாக உணர்த்தினார்கள்.
சீதாராமன்… பலராமன்… பரசுராமன்… இப்படிக் கால மாற்றத்தின் குண நிலை வளர்ப்பு அமில எண்ணத்திற்குகந்த செயல் உருவ வளர்ப்பிற்கு அந்தந்தக் காலங்களின் வீரியத் தன்மைக்குகந்த நாமகரணங்களைச் சூட்டி ஆண் குண அமிலத் தன்மைக்குகந்த தெய்வச் செயலைத்தான் “சப்தரிஷிகளின் சித்தர்களின் காலங்கள்” உணர்த்தின.
“அரசர்கள் காலத்தில்” வணங்கிய தெய்வங்கள் யாவையுமே பெண் சக்தியான காளி மாதா… என்றும் அதன் தொடர்புடைய ரூபத்தில் பராசக்தி… என்றும் ஜக்கம்மா… என்ற தாய் சக்தியும் உஜ்ஜயினி காளி சக்தியும்… சௌண்டம்மனின்.. தொடர்பும் இத்தொடரால் வந்தவை தாம்.
1.மனித சக்தியின் தெய்வ சக்தி பெற்ற
2.சித்து நிலை கொண்ட தாய் குணத்தின் பூஜிப்பின் அலைத் தொடர் வசச் செயலினால் தான்
3.அரசர்கள் பலர் அத்தொடர்பினால் தன் வலுவுக்கு வலு கூட்டிக் கொண்டு அரசர்களின் காலம் நடந்தது.
அந்தத் தொடர்பின் வழி முறையில் தான் “இக்கலியே நடக்கின்றது…!”
கொடுமையான தீங்கை ஒருவன் செய்தால் பதிலுக்கு என்ன செய்கின்றோம்..?
இரக்கத்துடன் உள்ளவர்களுக்குள் புகும் சாப அலைகள்
செல்வம் இருந்தாலும் சாபங்களால் குடும்பங்கள் அழியும் நிலை உருவாகின்றது
பேய்.. பிசாசு… இரத்தக் காட்டேரிகள் உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
பெரியோர்களின் வாக்குப்படி மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற சொல் கூற்று உள்ளது… அதன் தொடர் யாவை…?
1.பேயைப் பார்க்க முடியுமா…?
2.பிசாசு உண்டா…?
3.இரத்தக் காட்டேரிகள் வாழ்கின்றனவா..? என்பது யாவையும் உண்மைதான்.
தற்கொலை செய்து கொண்ட ஆவேச அலை உணர்வுடன் ஜீவன் பிரிந்த ஆவி உலக உயிர் ஆத்மாக்கள் சில இல்லங்களிலும் அவை வாழ்ந்த பழக்கப்பட்ட இடங்களிலும் அதன் எண்ண ஆசையைச் செயல்படுத்த வேண்டியவர்களின் தொடர் வட்டமுடன் இந்தக் காற்றலையின் சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கும்.
அத்தகைய ஆவி உலக ஆத்ம உயிரின் அமிலக்கூறானது உள்ள இடங்களுக்கு சரீர ஜீவ பிம்ப உடல் கொண்ட எண்ண உணர்வுடைய மனிதன் பயம் கலந்த அச்ச நிலையுடன் பல உணர்வுகளில் செல்லும் பொழுது
1.ஆவி உலக ஆத்மாவின் அலைத் தொடரும்
2.சரீர பிம்ப உடலின் அலைத் தொடரும்
3.இவ் ஈர்ப்பலையில் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில்
4.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு நிலை பெற்ற எண்ண உணர்வுடன் அவ்வெண்ணம் மோதியவுடன்
5.இக்காந்த ஈர்ப்புக் குண மின் அலைத் தொடர்பு கொண்ட இச் சரீர கோள நிலையுடன் மோதியவுடனே
6.எந்தப் பயமுடன் இந்த ஆத்மா சென்றதோ
7.அந்தத் தொடர் அலைக்குகந்த எண்ண குண ஆவி ஆத்மாவின் அமிலக் கூற்றை
8.நிழல் படம் போல் இவ்வொலி நாத் சக்தி கொண்ட சரீர சுவாச மோதல் அதன் அலை மேல் பாய்ந்தவுடன்
9.அது பேசிய நாதத்தையும் (வாழ்ந்த காலத்தில்) அதன் நிழல் உருவை மனிதனால் பார்க்க முடியும். (இன்று காணும் ஒளிக்காட்சி ஒலி அலையைப் போல்)
இதைப் போன்ற தொடர் அலையில் இருந்தெல்லாம் மனித உணர்வுப் பிடி சிக்காவண்ணம் தன் ஆத்ம வலுவை… ஞான ஈர்ப்பு வழித் தொடர்பு கொண்ட “மகரிஷிகளின் தொடர் அலையுடன்…” வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய வலுக் கொண்ட ஜீவத் துடிப்பு ஆத்ம நிலை பெற்றுவிட்டால் நம் எண்ணமே நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.
எண்ணத் தொடர் அலையின் செயல் இல்லா நிலை (மனிதனுக்குள்) ஒரு நொடிப் பொழுதும் இல்லை.
நித்திரை உணர்வுகளிலும்… இச்சரீரச் செயல் நடைபெறும் வழித் தொடரில்… சுவாசமுடன் கூடிய உணர்வு எண்ண அலை ஈர்ப்பில் தொடர் கொண்ட நிலையுடன் தான் எண்ணச் சுழற்சி கொண்ட இயந்திரக் கோளமாக இந்த உடல் உள்ளது.
பிரபஞ்சத்தில் மற்ற கோளங்கள் எல்லாம் எப்படி நிற்காமல் ஓடிக் கொண்டே உள்ளனவோ அதைப் போன்றே
1.ஓடிக் கொண்டே உள்ள இவ்வெண்ண உணர்வு வளர்ப்பு நிலை
2.ஜீவ சக்தி கொண்ட மனித உடலுக்குத்தான் உண்டு.
ஆவி உலக ஆத்மாக்களின் எண்ண ஓட்டத்தின் வலு எப்படி உள்ளது…?
இன்று நாம் எப்படி சில ஒலிப் பதிவுகளை நாடாக்களில் பதிய வைத்து ஒலி பரப்புகின்றோமோ… அதைப் போன்று அவை சரீரக் கூறுடன் வாழ்ந்த காலத்தில்… தன் ஆத்மாவில் பதிய வைத்த அலைத் தொடர் நாதச் சேர்க்கையுடன் தான்… அதே தொடர்பு சுழற்சியுடன் அதே சுற்றலில் சுற்றிக் கொண்டுள்ளது.
அந்த நிலையில்… வளர் நிலை கொண்ட எண்ண சரீர உணர்வு இயந்திர மின் அலைத் தொடர்பு அவ்வலைத் தொடர்புடன் பொருந்தும் பொழுது தான் இவ் இயந்திரக் கோளப் பெட்டியின் (மனித உடல்) செயலைக் கொண்டு அதன் நிலை பெறுகின்றது.
இவ்வாவிகளின் சுழற்சி வலுக் கூடி அதன் தொடர்பு விட்ட செயலாகச் செயல் கொண்டுள்ள வழித் தொடர் ஜீவ ஆத்மாக்கள் தான் “இன்று பிறப்பில் வரும் ஆத்மாக்களின் தொடர் அலையே உள்ளது…!”
1.தன் ஞானத்தை வளர்த்து சித்து நிலை கொண்ட ஆத்மாக்களின் நற்சக்தியின் தொடர் அலையை அறியாவண்ணம்
2.பல வலுக் கொண்ட வெறி கொண்ட பக்தி இயக்க ஆத்மாக்களின் தொடர்பு தான் இன்று வலுவாகியுள்ளது.
தெய்வத்திற்குப் பலி கொடுப்பது நல்லதா…?
உயர்ந்த குனங்களை நுகர்ந்தறிந்து அதை உன் உடலாக்கு என்ப்து தான் ஆலயத்தின் பண்பு. நாம் அந்தத் தத்துவப்படி செல்கிறோமோ…? இல்லை. விநாயகருக்கு எலியை வாகனமாகக் காட்டி நாம் சுவாசிப்பது (மூச்சு – மூஷிகவாகனா) தான் நம்மை வழி நடத்துகிறது என்று காட்டினார்கள் ஞானிகள். ஆனால் விநாயகரை நீ தூக்கிச் சுமந்தாய் அதனால் உனக்கு இரண்டு இலையைப் போடுகிறேன் என்று இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றோம். அதே போல் காளிக்கு வாகனம் புலி என்றால் அதற்குப் பலி கொடுத்தால் நமக்கு அந்தக் காளி செய்யும் என்றால் எதைச் செய்யும்…?
தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!
கொடூரத் தெய்வங்களை வணங்கித் தன் பாவத்தைப் போக்கவும் தன் எதிரிகளை வீழ்த்தவும் ஆடு கோழிகளைப் பலியிட்டு அந்தத் தெய்வங்களை வழிபட்டு அதே சிந்தனையிலிருந்து விட்டால் அந்த உணர்வின் அலைகள் வெளிப்படுவதை நுகர்ந்த பின் எப்படிக் கொடூரத் தன்மை பெற்றதோ இந்த உணர்வின் தன்மை வழிபட்டோர் உடல்களுக்குள் சென்றுவிடும்.
அந்த உணர்வுகளைப் பெற்ற பின் அவர் இறந்துவிட்டால் பயத்தால் இத்தகைய ஆவியின் தன்மைகள் ஒரு உடலுக்குள் புகுந்து விட்டால் அவர்களுக்குக் காட்சி தரும்.
எப்படி…?
1.அந்தக் கொடூரப் பற்கள் கொண்ட அந்தத் தேவி வந்துவிட்டாள்…!
2.இந்த அச்சத்தால் வரும் பொழுது நரம்புகள் இயங்காது. பேசவும் வராது.
3.என்ன…? என்ற நிலைகள் வரப்படும் பொழுது..
4.கொடூரப் பற்கள் கொண்டு என்னைத் தாக்க வருகின்றது…! என்று அவர் ஒரு வார்த்தை சொன்னாலும்
5.அடுத்த கணம் இந்த உணர்வின் தன்மை வாய் அடைத்துவிடும்.
தெய்வத்திற்குப் பலி கொடுத்துப் பல உணர்வுகளை வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நமக்குள் இப்படித்தான் வரும்.
இதைப் போன்று எந்த மதத்திலும் சரி…! அவர்கள் வழிப்படுத்திய நிலைகள் கொண்டு அது ஏங்கிப் பெறும் உணர்வுகள் இவ்வழியில் அங்கே சென்றுவிட்டால் இதே நிலை வரும்.
இதைச் சைத்தான் என்பார்கள் பல நிலைகளில். நாம் பேய் என்போம். இப்படிப் பல உணர்வுகள் நமக்குள் திரண்டு அதன் வலுவாக நமக்குள் இயக்குகின்றது.
1.நாம் எண்ணியது எந்த உணர்வோ அதன் உணர்வு கடவுளாக நின்று
2.அந்தச் சக்தியாக நம் உடலில் இயக்கி
3.நாம் மடிந்த பின் இந்த நிலைகளை உருவாக்குகின்றது.
நாம் பார்க்கும் ரூபங்களில் எந்தத் தெய்வமும் அப்படி இல்லை…!
நாம் உணர்வதற்காகத்தான் அவரவர்களின் மதத்தின் அடிப்படையில் இன்னென்னது என்ற நிலைகளை உருவாக்குகின்றார்கள்.
மெக்காவில் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் மெக்காவிற்குச் சென்ற பின் சைத்தானை ஓட்ட வேண்டும் என்று கற்களை எடுத்து வீசுவார்கள்.
தாக்கும் உணர்வு கொண்டு வரும் பொழுது போர் முறை கொண்டு இதிலே போட்டி கொண்டு தாக்குவார்கள்.
1.அந்தச் சைத்தானை விரட்டும் நிலைகள் கொண்டு கற்களைக் கொண்டு எறியப்படும் பொழுது
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரப்படும் பொழுது அதிலே சிலர் மடிவார்கள்.
வருடா வருடம் மெக்காவிற்குச் செல்லப்படும் பொழுது அந்த ஞானிகள் காட்டிய உணர்வை மறந்து விட்டு
1.வெறியின் ஆசை கொண்டு நான் தீமைகளை வெல்லப் போகிறேன் என்று
2.இத்தகைய தீமையின் வெறி கொண்ட உணர்வுகளை இவர்கள் சுவாசிக்கும் பொழுது
3.அறியாமலே வெறி கொண்ட உணர்வுகள் வந்து அது இயக்கும் தன்மை வருகின்றது.
பாவத்தைப் போக்கவும்.. அருள் ஞானத்தைப் பெறவும்… அங்கே சென்றாலும் கடைசியில்…
1.வெறி கொண்டு தாக்கும் பிசாசுகளை ஒட்டும் உணர்வு கொண்டு
2.அந்தக் கற்களை எடுத்து வீசப்படும் பொழுது
3.இந்த உணர்வின் “வேகத் துடிப்பு…” வருகின்றது.
நம் நாட்டிற்குள் எடுத்துக் கொண்டாலும் இது போல சில நிலைகள் உண்டு. ஒருவனின் நிலைகளில்…
1.இவன் ஆண்டவனுக்கு விரோதமானவன்.. இவனைத் தாக்கிவிடவேண்டும்… அழித்துவிட வேண்டும்.
2.இல்லை என்றால் ஆண்டவனைப் பறைசாற்றுபவனை இவன் அழித்துவிடுவான்… என்ற
3.வெறி கொண்ட உணர்வுகளிலும் சில நிலைகள் உருவாகின்றது.
ஆகவே இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அது உள் நின்று அதன் வழியே செயல்படுத்துகின்றது.
அருள் ஞானியான அந்த நபிகளோ…
1.“தீமைகள் தனக்குள் வராதபடி…”
2.தன் எண்ணத்தின் தன்மை கொண்டு
3.தன் அருகிலே வராதபடி தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தன் பாவங்களைப் போக்கி அந்த அருள் ஒளிகளைத் தமக்குள் கூட்டி அந்த உணர்வு கொண்டு “இந்த உலகமே உய்ய வேண்டும்…” என்று விரும்பினார். அந்த அருள் ஞானி ஊட்டியபடி மெக்காவிற்குச் சென்றால் அது நலமாக இருக்கும்.
ஆனாலும் பின் வந்தோர்கள் அவருக்குப் பின் அதை உருவங்களாக வடிவமைத்துப் பிசாசு என்ற எண்ணங்களை ஓங்கி கற்களால் அதை நீ எறிய வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.
மெக்காவிற்குச் சென்று திரும்பும் பொழுது இதே உணர்வுகள் தான் கடைசியில் தாங்கி வருகின்றார்கள்.
நாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…?
மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு
சந்தோஷத்தை உருவாக்கித் தரும் இடத்தில் நாம் குறைகளை முறையிட்டுக் கொண்டிருந்தால் எப்படிச் சரியாகும்…?
வலுக்கொண்ட ஆத்மாக்களைப் பற்றியும் வலு குறைந்த ஆன்மாக்களைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது
உயிரணுவாகத் தோன்றிய பின் அவ்வுயிரணுவின் வளர்ப்பு முலாம் ஒவ்வொரு செயலிலும் வளர்ப்பு செயல் மோதுண்டு மோதுண்டு… அவ்வுயிரணுவின் மோதலின் வளர்ப்பு வலுக் கொண்டு… ஆத்ம நிலை பெறும் நிலையை முந்தைய பாடத்தில் உணர்த்தினேன்.
உயிரின் ஆத்ம நிலைக்கு எப்படி அதன் உராய்வுத் தன்மையால் வலுக் கூடுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒரு தென்னை மரத்தின் பலனாக அதன் உச்சியிலே பல காய்கள் வருகின்றது.
1.அந்தக் காய்களில் இளநீர் வளர்ந்து
2.அந்த நீரானது அதன் உஷ்ண அலையில் அம்மட்டையில் உள் பாகத்தில் உராய்ந்து
3.வேடு கட்டி… வேடு கட்டி… நீரின் நிலை சுண்டி… பருப்பு வளர்ந்து… பின் முற்றி…
4.அதன் பலனான எண்ணை வித்தை வளர்க்கின்றது
தென்னை மரத்தின் வேர் நிலையிலிருந்து அது சத்து எடுப்பதில்லை.
மேல் நோக்கிய சுவாசம் கொண்டு தாவர இனத்தின் ஈர்ப்பு நிலையில் மோதலில் ஒளி பட்டு அது ஈர்த்துக் கீழிருந்து மேல் வளரும் வளர்ப்பின் பலனின் தன்மையில் பல வித்துக்களைத் தென்னை மரம் வளர்த்துக் கொள்கிறது.
இதைப் போன்று தான் ஒவ்வொரு வளர்ப்பின் வித்தின் தொடர் வளர்ப்பும். அதாவது ஒரு அணு வளர்ச்சியின் முலாம் ஒன்றில் மோதி வலுக்கொண்ட தன்மை பெறுவது போன்றே
1.இந்த மனித ஆத்ம உயிரின் வளர்ப்பு நிலையின் வலுவை
2.இவ்வாத்மா சேமித்துக் கொள்கின்றது.
சேமித்த வலுவின் தன்மை எத்தகையது…?
1.நீரில் மிதக்கும் மரங்களைப் போன்ற வலுக் கொண்ட நிலையை
2.இந்த ஆத்ம உயிர் பெற்றதென்றால்
3.எவ்வீர்ப்பின் பிடிக்கும் சிக்காமல்
4.இச்சரீர பிம்பமே காந்த மின அலை ஒளி சக்தி பூண்ட உயர்வு நிலை கொண்ட ஆத்மாவாகலாம்.
அன்றைய சித்தர்களும் சப்தரிஷிகளும் தன் சரீர பிம்பத்தையே இந்நிலைக்குகந்த வளர் நிலைக்கு உட்படுத்தித்தான் தன் வளர்ப்பின் வளர் நிலையைப் பெற்றார்கள்.
நல் வழியின் ஒளி நிலை கொண்ட உயர் ஆத்ம வழித் தொடர் பெறாத நிலையில் பல எண்ண நிலையுடன் வாழக்கூடிய தன்மையில் பிரிந்து சென்ற ஆன்மக்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றலையில் படர்ந்தே உள்ளது.
அத்தகைய பல எண்ணங்கள் கொண்ட ஆத்மாக்கள் அதற்குகந்த அதன் செயலைச் செய்விக்க அதற்குச் சொல்லாற்றலும் செயல் திறமையும் இல்லாத தன்மையில் அதன் எண்ண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடலுடன் வாழும் மனித உடலில் சாடுகிறது.
1.அப்படிச் சாடும் பொழுது தான் சிலருக்கு வாதத் தன்மையும் இதன் தொடர்பு கொண்ட சில வியாதிகளும்
2.அந்த அலைகள் உடல் மேல் பாய்ந்தவுடன் அதன் தன்மையை உடல் ஏற்காத பட்சத்தில்
3.எந்த இடத்தில் எவ்வலை சாடியதோ அவ்விடத்தில் வளரும் அணு வளர்ச்சி குன்றி
4.பாய்ந்த பிற ஆன்மாவின் குணத் தன்மைக்குகந்த அணுவை வளர்ப்பதனால்
5.அந்த வளர்ப்பின் வலுவை உடலுக்குகந்த ஆத்மா ஏற்காத பொழுது
6.உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானது அவ்விடங்களுக்குத் தன் அலையை அனுப்ப முடியாதததனால்
7.அந்த இடங்களில் உள்ள உறுப்புகள் செயலிழந்த நிலை ஆகின்றது
இளம்பிள்ளை வாதங்களில் செயலற்ற தன்மையிருந்தாலும் அங்கங்களின் நரம்பு மண்டலத்தில் உதிர ஓட்டங்களும்… துடிப்பு நிலையும் உள்ளது.
உதிர ஓட்டம் இல்லாவிட்டால் உடல் அழுகிய தன்மையல்லவா பெற்றிருக்கும். உடல் முழுமைக்கும் தொடர்பு கொண்டல்லவா அச்செயல் இருக்க வேண்டும்.
சந்தர்ப்பத்தால் பாய்ந்த மாறு கொண்ட அணு வளர்ப்பின் நிலையினால் இவ்வாதத் தன்மை கொண்ட வியாதியின் வளர்ப்புகள் வளர்ந்துள்ளன.
சமமான வாழ்க்கையற்றவர்களின் வாழ்க்கையில் எல்லாம்… அவரவர்களின் குண நிலைக்குகந்த சுவாசத்தால்… அதற்குகந்த பலனான தொடர் அலை செயலைத்தான்… இந்தக் காற்று மண்டல ஈர்ப்பிலிருந்தும் பெற முடியும்.
அதாவது காற்றில் கலந்துள்ள ஆத்மாக்களுக்கு நாம் தரும் இடத்திற்குகந்த வலுவாகத்தான் நம் சரீர பிம்பத்தின் ஆரோக்கிய நிலையே வளர்கின்றது.
1.எதனையும் செயலாக்கக்கூடிய எண்ண சக்தியின் வலுவைக் கொண்ட மனித ஆத்மாக்கள்
2.ஆவி உலக ஆத்மப் பிடியில் தான் இன்றைய காலத்தில் சிக்கியுள்ளது (இது தான் உண்மை)
3.அதிலிருந்து மீளும் நிலையில்லாத செயலாகத் தான் தொடர்ந்து கொண்டுள்ளது.
இந்த ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத்தான் ஆத்ம சுத்தி பயிற்சியே கொடுக்கின்றோம்.. இந்தப் பாட நிலைகள் அனைத்துமே அதற்குத்தான்…!
இரத்தக் கொதிப்பு
தெரிந்தோ தெரியாமலோ பிறர் செய்யும் தீமைகளை நாம் திரும்பத் திரும்ப எண்ணி அடிக்கடி கோபப்பட்டோம் என்றால் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது. ஆக… பிறர் செய்யும் தவறுக்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமா…?
முருகன் காட்சி கொடுப்பானா…? எந்த வழியில் கொடுப்பான்…?
முருகன் சிலையை அழகாக வடித்து அலங்காரமாகச் சித்தரித்துக் காட்டுகின்றார்கள். முருகனை வழிபட்டு வந்தால் “அவன் நமக்கு வேண்டிய வரங்களைத் தருவான்… நம்மைக் காப்பான்…!” என்ற ஆசையையும் ஊட்டுகின்றார்கள்.
அதே சமயத்தில் முருகன் அருளைப் பெற வேண்டும்…! என்றால் என் மனைவி மக்களுடன் நான் சாராது அவர்களை ஒதுக்கிவிட்டுக் கடும் ஜெபங்கள் இருந்து அந்த ஜெபத்தின் வழி கொண்டு செயல்பட வேண்டும் என்று முயற்சிக்கின்றார்கள்.
அங்கே சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த முருகனின் படத்தை உற்று நோக்கி அதற்கு மலர்களும் ஆடைகளும் உணவுகளும் பதார்த்தங்களும் இடப்பட்டு மந்திரங்களைச் சொல்லி அவன் அருள் பெறவேண்டும் என்று செயல்படுத்துகின்றனர்.
முருகனைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது இந்த உணர்வுகள்…
1.அந்தப் படத்திலிருந்து வரக்கூடிய அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வருகிறது.
2.அந்தப் படத்தை எனக்குள் ரூபமாகக் காட்டுவதும் என் கண்களே.
3.படத்தில் என்னென்ன கலர்கள் இருக்கின்றதோ அதை நுகர்ந்து “படம் இருக்கின்றது…” என்ற ரூபத்தைக் காட்டுவது என் கண்கள்.
4.சூரியன் கவர்ந்து வைத்துள்ள அந்த ரூபத்தின அலைகளை என் உடலுக்குள் பரவச் செய்து ரூபமாக எனக்குள் காட்டுகின்றது.
அந்த உணர்வுகளை எனக்குள் அலைகளாக மாற்றப்படும் பொழுது அதையே பல காலம் ஜெபித்தால் உடலிலே வலுவாகின்றது.
“இன்னென்னெ மந்திரங்களைச் சொன்னால் அந்த முருகனையே கைவல்யப்படுத்தலாம்…!” என்று சிறு சிறு புத்தகங்களைக் காட்டி அதிலே விளக்க உரைகளைக் கொடுத்திருப்பார்கள்.
கைவல்யம் செய்வதற்குண்டான பொருள்களை இட்டு நூற்றியெட்டு ஆயிரெத்தெட்டு இலட்சத்தியெட்டு என்ற நிலைகளில் இந்த மந்திரங்களை “நீ ஜெபித்தாய் என்றால்… முருகன் வசப்பட்டு உன்னிடம் அருகில் வருவான்…!” என்று புத்தகத்தில் காட்டப்பட்டிருக்கும்.
அதில் சொன்னபடி அந்த எண்ணம் கொண்டு நான் செய்யும் பொழுது
1.முருகன் படத்தை உற்றுப் பார்த்து அதில் என்னென்ன பொருள்களைப் போட்டேனோ… மந்திரம் சொன்னேனோ…
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு கவர்ந்தது அனைத்தும் எனக்குள் அலைகளாகப் பெருகிவிடுகிறது
3.என் கடைசிக் காலத்தில் நான் இறந்துவிட்டால் இந்த உடல் அழிந்த பின்
4.இந்த உடலுக்குள் எடுத்துக் கொண்ட ரூபங்கள் அந்த முருகனைப் போல் உணர்வுகள் எனக்குள் நிற்கும்.
இதே மந்திரத்தை மற்றவர் ஜெபிப்பார்கள் என்றால் படர்ந்திருக்கும் அலைகள் கொண்டு அவன் ஈர்ப்புக்குள் குவிந்து முருகனாகவே தெரியும்.
டி.வி. நிலையத்திலிருந்து எந்தெந்த அலைகளைப் பரப்பி வைத்திருக்கின்றனரோ அதே அலை வரிசையில் வரப்படும் பொழுது ஒலி பரப்பாகும் படங்கள் அலைகளாக மாறி வருவதை டி.வி மூலம் ரூபங்களாகப் பார்க்கின்றோம். இதைப் போல்
1.நான் ஜெபித்த உணர்வுகளை நீங்களும் ஜெபிக்கத் தொடங்கினால்
2.அதே உணர்வலைகளாகப் படரப்பட்டுக் குவிக்கப்படும் பொழுது
3.நான் முருகனாகவே (காட்சியாக) வருவேன்.
ஒரு கேமரா மூலம் எடுக்கப்பட்ட பட அலைகளின் தொகுப்பை மீண்டும் அதற்குண்டான சாதனைத்தை (PLAYER) வைத்து இயக்கப்படும் பொழுது அதிலே பதிவான உருவங்களின் அசைவுகளும் செயல்களும் நிஜமாக நடப்பது போல் தெரிகின்றது. ஆனால் நிறுத்தி விட்டால் பொம்மையாகத் தெரிகின்றது.
இதைப் போல்…
1.நம் உணர்வின் ஓட்டங்களில் நுகரப்படும் பொழுது அந்த உணர்வுகள்
2.அந்த முருகனே நடந்து வருவதாகவும் செயலாக்கங்களைச் செயல்படுத்துபவனாகவும்
3.அந்த உணர்வின் ஒலிகள் எனக்குள் பட்ட பின் எனக்குள் நேரடியாக வந்து உணர்த்துகின்றான் என்ற நிலைகளும்
4.கவிகள் பாடுகின்றான்..! என்ற நிலையும் எனக்குள் தெரியும்.
ஆனால் என் அருகிலே மற்றவர்கள் இருந்தாலும் இதைப் போல் நான் கவர்ந்து கொண்டது அருகில் இருப்போருக்கு இது தெரியாது.
1.என்னிடம் முருகன் பேசுகின்றான் என்றாலும்
2.எங்கே பேசுகின்றான்…? என்று உற்றுப் பார்த்தாலும் தெரியாது.
3.ஜெபித்த மந்திரத்தின் உணர்வு கொண்டு ஆழமாகப் பதிவாக்கி விட்டால்
4.அதே உணர்வைக் கவர்ந்து அதே எண்ணம் தான் வளரத் தொடங்கும்.
எந்த ஆசைகளை வைத்து மனைவி மக்களைத் துறந்து விட்டு முருகனை அடையப் போகின்றேன் என்ற உணர்வை வளர்த்துக் கொள்கின்றனரோ இதே மந்திரத்தை ஜெபித்த பின் அவன் பெண்டு பிள்ளைகளைத் துறந்து விடுகின்றான்… சொத்து சுகத்தையும் துறந்து விடுகின்றான்…!
1.சாட்சாத் முருகனே என்னிடம் வந்துவிட்டான்… அவனே கொடுப்பான் என்று
2.துறவறம் பூண்டு அவன் ஊர் ஊராகச் சுற்றி அலையத் தொடங்குகின்றான்.
இருந்தாலும் “பிச்சாந்தேஹி…!” (உணவு) என்ற நிலைகள் கொண்டு இந்த உடலை வளர்க்க இன்னொருவரிடம் யாசகம் கேட்டுத் தான் ஆகவேண்டும்.
முருகனைப் பற்றி எண்ணி வளர்ந்த உணர்வின் தன்மை… வலிமை மிக்கதாக இருக்கும் பொழுது அடுத்தவருக்கு அருள் வாக்காகச் சொல்லப்படும் போது அவருடைய துயரங்களோ அல்லது சில ஆவியின் நிலைகள் இருந்தால் அது எல்லாம் அகன்று விடும்… நல்லதாக மாறும்.
இப்படி மற்றவர்களுக்கு நல்லதாகும் பொழுது “இவனைக் கடவுளின் தூதுவன்…!” என்று நாம் புகழ் பாட ஆரம்பித்துவிடுகின்றோம்.
எந்த மந்திரத்தால் அவன் மந்திரத்தை ஜெபித்து அந்த உணர்வின் தன்மையைக் கொண்டானோ அதே உடலில் வளர்ந்த அந்த உணர்வுகள் வரப்படும் பொழுது மற்றவர்களும் இவனை அணுகி வருவார்கள்.
1.எங்கள் குறைகளை எல்லாம் நீக்க வேண்டும்
2.நீங்கள் தான் கடவுள்…
3.முருகன் அருளைப் பெற்றவர் நீங்கள் தான்…! என்ற உணர்வின் ஒலிகளை
4.அவன் செவிகளில் ஓதப்படும் பொழுது அவன் உயிரிலே பட்ட பின் அது உடலுக்குள் அணுவாக மாற்றிவிடுகின்றது.
இவ்வாறு சில காலம் அவரின் சக்திகள் செயல்படும்.
அந்தச் சில காலத்திற்குள் அவன் கேட்டுணர்ந்த பிறர் கஷ்டங்களை எல்லாம் இவன் உடலுக்குள் உருவாக்கும். உடலிலே தீய அணுக்கள் வளரும்.
முருகன் அவனுக்குச் சக்தி கொடுத்தான்…! என்று எண்ணுவார்கள். ஆனாலும் அதை வைத்துப் பிறருடைய தீமைகளை நுகரப்படும் பொழுது கடைசியில் இவனுக்குள் நோய்கள் வரும்.
நோய் வந்ததும் இவர் சொல்வார்..
1.எனக்குள் முருகன் வந்தான்…
2.அருளைக் கொடுத்தான்…
3.எத்தனையோ காட்சிகளையும் கொடுத்தான்…
4.ஏனோ என்னைச் சோதிக்க… என் உடலுக்குள் நோய்கள் வருகின்றது…!
5.முருகன் என் மீது இப்பொழுது இரக்கப்படவில்லை…! என்று இவன் துடிப்பான்.
ஏனென்றால் முருகன் இவ்வாறு வரவில்லை…! சாதாரண மனித உணர்வுக்குள் சுழன்றிடும் உணர்வின் அலைகள் தான் இது. கடைசி முடிவு இப்படித் தான் இருக்கும்.
சிவ தனுசு விஷ்ணு தனுசு முழுமையான விளக்கம்
வாலியை இராமன் கொல்லவில்லை கல்லைப் போட்டு மூடிவிட்டான்…!
உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்குக் கணபதி ஹோமம் செய்யலாமா…?
பிம்ப உடலைப் பற்றியும்… ஆத்மாவின் இயக்கத்தைப் பற்றியும்… ஈஸ்வரபட்டர் சொன்னது
மனிதன் எடுக்கும் குண நிலையில்…. அவன் எண்ண உணர்வில் சமைக்கப்பட்ட ஆவியின் வலு தான்
1.ஆத்மாவின் உராய்வுக் கவசமாக உராய்ந்து உராய்ந்து
2.அதன் வலுத் தன்மையைக் காந்த ஈர்ப்பு வளர்ப்பாக
3.இந்தப் பிம்ப உடலின் அச்சான எலும்புகளின் வளர்ப்பின் உராய்வு வலுக்கூடி ஆத்மாவின் வலுவும் வளருகின்றது.
இந்தப் பிம்ப உடலின் நிலை கொண்டு பல செயல்களைச் செயல்படுத்த முடியும். பல கோடி ரூபத்தில் வளர்ப்பின் வளர்ப்பாக… பல கோடி மண்டலங்களை வளர்க்கக்கூடிய… “வளர் நிலைக்குகந்த வலுவான வித்துத்தான் இந்தப் பிம்ப உடல்….!”
சப்தரிஷிகளின் செயலை வளர்க்கவும் இவ்வொளி நாதச் செயல் கொண்ட… “ஜீவத் துடிப்பு உள்ள எண்ணத்தின் சரீரத்தினால் தான்” முடிகின்றது.
1.பல கோடிச் சக்திகளை உருவாக்கும் சப்தரிஷிகளே…
2.இப்பிம்ப உடலின் தொடர்பு கொண்டு தன் வலுவை வளர்க்கின்றார்கள்.
அதனின் உண்மைப் பொருள் தான் நாம் இன்றளவு காணும் இயேசு கிறிஸ்து ஐயப்பன் முகமது நபி ஆதிசங்கரர் போன்ற தெய்வீக வளர் நிலையின் உண்மைத் தன்மை கொண்டவர்கள்.
ஆகவே…
1.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு ஆத்மாவினால் தான்
2.இச்சரீரம் சமைக்கும் உணர்வின் வலுவைக் கொண்டு
3.பல வலுவான வளர்ப்பின் வளர்ப்பாக இச்சரீரக் கூட்டின் தொடருடன் வளர்க்கலாம் என்ற
4.இச்சரீர பிம்பத்தின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.
ஜீவன் பிரிந்த ஆத்ம உயிருக்குத் துடிப்பு நிலையும் நாத ஒலி வெளிப்படுத்தும் ஜீவத் தொடர்பும் இல்லாததனால் அதன் எண்ணத்தின் ஈர்ப்பைத் தன் எண்ண அலைக்குகந்த ஆத்ம உடலில் ஈர்க்கப்பட்டு தன் ஆத்மாவின் உயிரையே தன் குண நிலைக்கொத்த உணர்வு நிலை கொண்ட ஜீவ சரீர ஈர்ப்பிற்கு (தாய் உடலில்) வந்து பிறப்பெடுக்கும் ஆத்மாவும் உண்டு.
ஆனால் இப்படி
1.இயல்பாகப் பிறப்பிற்கு வரும் ஆத்மாவிற்கு மேல்
2.வலுவான எண்ண வேட்கை கொண்ட ஆத்ம உயிர் பிற உடலுடன் உள்ள ஆத்மாவின் மேல் படரும் பொழுது
3.அதனின் வலுவுக்கு மேல் வலுவான ஆத்மாக இது செயல்பட்டு
4.அதனால் சிலருக்குப் புத்தி பேதலித்த நிலையும்
5.சிலருக்குக் கொடூர எண்ணங்களின் வெறி நிலை கொண்ட குண நிலையும் அமைகின்றது.
இந்தக் குண நலத்தின் எண்ண மாற்ற உணர்வினால் சில அலைத் தொடர்புகளின் ஆத்ம உணர்வின் ஈர்ப்பினால் மனிதன் தன் நிலையையே மறக்கின்றான்.
பேய் பிடித்து விட்டது… பிசாசு பிடித்தது…! என்றெல்லாம் இதைத்தான் சொல்வது…!
நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று ஞானிகள் ஏன் சொன்னார்கள்…?
உடல் சிவம்… உயிர் ஈஸ்வரன்… நாம் சுவாசிப்பது நந்தீஸ்வரன்…! நாம் வலிமையானவர்களாக இருந்தாலும் சந்தர்ப்பத்தில் நம் வீட்டிற்குள் ஒரு பாம்பு வந்துவிட்டால் திடுக்… என்று பயந்து விடுகின்றோம். பின் பாம்பின் நினைவே அதிகரிக்கின்றது. ஒரு கயிறைப் பார்த்தாலும் அது பாம்பாகத் தான் தெரிகின்றது. அதனால் தான் நாம் சுவாசிப்பதை நந்தீஸ்வரன் என்று பெயரை வைத்து நாம் நுகர்ந்தது நம்மை எப்படி இயக்குகிறது எப்படி நம்மை மாற்றுகின்றது என்பதைக் கணக்குப்பிள்ளையாகக் காட்டினார்கள் ஞானிகள்.
ஞானிகளை அணுகுவோர் உடலுக்கும் செல்வத்திற்கும் தான் கேட்கின்றார்களே தவிர “ஞானத்தைக் கேட்க முற்படவே இல்லை…!”
இராமனைக் கண்ணிலே கண்டார்… ஆஞ்சநேயரைக் கண்டார்… அதன் உணர்வின் நிலைகளை ஆட்டிப் படைத்தார்… கண்ணனைப் போன்று அவன் செயலாக்கங்களைச் செய்தார்… “அத்தகைய அருள் சக்தி பெற்றவர் தான் இராமகிருஷ்ணர்…!” என்று அவரின் புகழ் பாடி அதன் வழி கொண்டு பின் வந்தோர் இதை மக்களின் மத்தியில் பறைசாற்றி இந்த உணர்வின் தன்மையை இவருக்குள் சாகாக்கலையாக வளர்த்துக் கொண்டார்கள்.
1.அதன் வழியில் தான் பெரும் பகுதியானோர் வருகின்றனரே தவிர
2.அந்த ஞானி காட்டிய உண்மைகளைக் கூட இன்று வளர்க்க முடியவில்லை.
இந்த நூற்றாண்டில் இராமகிருஷ்ணர் கீதையைப் பற்றிச் சொல்லி வெளிப்படுத்தியதை எல்லாம் அதன் சார்புடையோர் கீதை நூல்களைப் படித்து “அவரவர்கள் விளக்க உரைகளைக் காட்டி…” அதன் வழி தான் மக்களுக்கு உபதேசித்துள்ளார்கள்.
பேரண்டத்தின் உண்மையின் உணர்வுகளை இராமகிருஷ்ணர் அறிந்தாலும் அந்த உணர்வின் துணை கொண்டு விவேகானந்தரும் அறிந்தாலும் அவர்கள் வழிப்படுத்திய நெறி… செயல்படச் சொன்ன முறை..
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்துப் பழகு
2.நீ எண்ணும் எண்ணத்தை உனககுள் அது உள் நின்று இயக்குவதை
3.அந்த உன் எண்ணமே கடவுளாகின்றது என்று தெளிவாக்கியுள்ளார்கள்.
இதை எல்லாம் நமக்கு யாரும் எடுத்துச் சொல்லவும் இல்லை.. அதன் வழி நாம் செல்லவும் இல்லை.
காலத்தால் நாம் ஆசையில் சிக்கப்பட்டு இன்று
1.இதன் வழிகளிலே சென்றால் நம் வியாபாரத்தைப் பெருக்கலாம் ஆண்டவன் அருளைப் பெறலாம் என்று சிலர் செல்கின்றனர்.
2.இன்னொரு சாரார் நாம் இந்த வழிகளில் சென்றால் சாது என்ற நிலைகளை அடையலாம்
3.ஆசை என்ற நிலைகளில் விடுபடலாம் என்றும் தனக்குள் விடுபடும் உணர்வுகளை வளர்த்து
4.கடைசியின் விரக்தியின் தன்மையை வளர்த்து அடங்கிடும் நிலை வருகின்றது.
செல்வம் இருந்தாலும் அடங்கி வாழலாம்…. செல்வம் இல்லை என்றால் உணவுக்காகத் தன் உணர்வின் தன்மையை மற்றவருக்குப் பறைசாற்றி அதன் வழியில் பொருளை ஈட்டி இந்த உடலை வளர்க்கலாம்.
இப்படித்தான் வாழ முடிகிறது…!
மடாதிபதிகள் தான் எடுத்துக் கொண்ட கொள்கையிலே
1.அவர்கள் உருவாக்கிய மடாலயங்கள் கொண்டு செல்வங்களை ஈட்டுவதும்
2.அதன் துணை கொண்டு பெரும் செல்வத்தை அடைய
3.அதிலே முன்னணியிலே இருப்பவரைக் குற்றவாளியாக்குவதும்
4.பின் அந்தச் செல்வத்தைக் கைப்பற்றிச் சுகபோகங்களை அனுபவிக்கும் நிலைகள் தான் மடாலயங்களில் வருகின்றது.
இப்படி… அன்றைய ஞானிகள் வெளிப்படுத்திய அருள் ஞானங்களை எல்லாம் பக்தி கொண்ட சிலர் அதற்குள் புகுந்து… பக்தியும் பற்றும் கொண்டு நடந்தால்… “தெய்வம் உனக்குச் செய்யும்..” என்ற இந்த நம்பிக்கையைத் தான் பெரும்பகுதி மடங்களிலிருந்து வெளிவரும் நிலைகள் ஊட்டுகின்றார்கள்.
இது தான் இன்றைய நிலை…!
சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுகிறது… ஏன்…?
வாழ்க்கையில்… கஷ்டம் என்று நினைத்தால் எல்லாமே கஷ்டம் தான்
சாப அலைகள் எங்கள் குடும்பத்தில் இயக்கிய நிலைகள் – ஞானகுரு
இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் வேண்டாம்..! என்று சொன்னவர்கள் தான் “இராமகிருஷ்ணரும்… விவேகானந்தரும்…”
ஒரு மந்திரவாதியிடம் சீடனாக இருந்தவன் “ஒரு பெரிய மகான் இங்கே வருகின்றார்…” என்ற நிலையில் கேள்விப்பட்டு விவேகானந்தரைக் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்கள் அருள் வேண்டும்…! என்று அவரிடம் கேட்கின்றான்.
“நீ ஏங்கி வந்த நல்வழி நடக்கட்டும்… என்றும் அதன் வழி நீ உயர்வாய்…!” என்றும் விவேகானந்தர் அவனை ஆசீர்வதிக்கின்றார்.
இந்த ஆசியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட பின் தன்னுடைய மந்திரவாதியான குருவிடம் சொல்கிறான். நான் அந்த மகானிடம் சென்றேன்… அவர் எனக்கு நல்வாழ்த்து கூறினார்..! என்கிறான்.
அப்படியா..! அவர் நாளை மடியப் போகின்றார். இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றார்…! அதன் வழியில் அவர் சொன்னதை நீ செய்தாய் என்றால் நீயும் இரத்த இரத்தமாக வாந்தி எடுத்து மடியப் போகின்றாயா…? என்று சிஷ்யனிடம் கேட்கின்றான்.
அதைக் கேட்டதும் இவனும் நடுங்குகின்றான்.
அந்த மந்திரவாதி சொன்னபடி விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது பேச முடியாதபடி இரத்த வாந்தி எடுக்கின்றார். முச்சுத் திணறல் ஆகிப் பேச முடியாது தடுக்கின்றது.
அப்பொழுது தன் குருவை நினைக்கின்றார். ஒவ்வொரு நிமிடமும் தடைப்படும் உணர்வை உணர்கின்றார்.
1.மற்ற மந்திரவாதிகள் என்ன செய்கின்றனர்..?
2.நல்ல செயல் செய்வதை ஏன் தடைப்படுத்துகின்றனர்…? என்று சிந்திகின்றார்.
இருந்தாலும் தான் சாந்த உணர்வு கொண்டாலும் கொடூர உணர்வின் செயலுலிருந்து “தான் மீளவில்லையே…” என்று உணர்கின்றார். அப்படி உணரப்படும் பொழுதுதான் தன்னுடைய சிந்தனை மேலிட
1.இனி வாழ்க்கை என்ன…? என்ற நிலையில்
2.தன் உணர்வின் தன்மை வெளியாக்கி உயிரான்மாவை வெளியேற்றிக் கொள்கின்றார்.
எத்தனை காலம் நாம் போரிடுவது..? நன்மையின் தன்மைகளைச் செய்தாலும் விஷத்தின் தன்மை தனக்குள் கலக்கப்படும் பொழுது குரு காட்டிய வழியிலிருந்து நாம் பின் தங்கிவிடுவோமோ…!
இந்த உடல் நமக்கு எதற்கு..? என்ற உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு கொதிகலனாக மாற்றித் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்றார் விவேகானந்தர்.
ஒரு சமயம் இராமகிருஷ்ண பரமகம்சரும்.. அவருடைய சீடர்களும்.. ஞானத்தை அறிய வேண்டும் என்ற ஆவல் கொண்ட மற்ற பக்தர்களும்.. மாலை நேரத்தில் நடந்து வருகின்றார்கள்.
அதே சமயத்தில் இராமகிருஷ்ணரின் செயலாக்கங்களை அறிவதற்காக மந்திரத்தால் ஜெபித்துப் பொருளை வரவழைத்தும் சில ஆவி நிலைகளை இயக்கும் மந்திரவாதி ஒருவனும் இந்தக் கூட்டத்துடன் கூட வருகின்றான்.
அப்பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது.
அப்படி இடறிக் காயம் அடைந்த பின் “ஐயோ… இருட்டாகிவிட்டதே…, விளக்கு எடுத்து வர மறந்து விட்டோமே…” என்ற ஏக்க உணர்வுடன் கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார்.
அப்பொழுது அங்கே அந்த இடத்தில் இராமகிருஷ்ணரால் வெளிச்சத்தைக் கொடுக்க முடியவில்லை…! என்ற இறுமாப்பு கொண்டு இவர்களுடன் வந்த அந்த மந்திரவாதி “ஜெய் பவானி…!” என்று தொடையைத் தட்டினார். “சலோ…!” என்று சொன்னவுடன் “ஒரு வெளிச்சம்” முன்னால் சென்றது.
மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார்.
அப்பொழுது அதைப் பார்த்ததும் இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்து விடுகின்றார்.
மந்திரவாதி… தனக்குள் சகலமும் கற்றுள்ளேன் என்ற உணர்வுடன்… பிறிதொரு ஆவியின் வலிமை கொண்டு செயலாக்கும் வலிமை எனக்கு உண்டு…! என்ற எண்ணத்தில் இதைச் செய்து காட்டுகின்றான்.
நான் “இந்த வெளிச்சத்தை” விரும்பவில்லை என்கிறார் இராமகிருஷ்ணர். ஏனென்றால்
1.என் உடலில் அக வெளிச்சமான… அறிவின் தெளிவு வரவில்லை
2.இருளை அகற்றிச் செயல்படும் “முன் சிந்தனை…” என்ற இந்த உணர்வு இல்லாது போய்விட்டது
3.இங்கே வந்தோருக்கும் வரவில்லை.
ஆகவே சிந்தித்துச் செயல்பட்டால் இத்தகைய குறையிலிருந்து விடுபடலாம் அல்லவா…! அந்த அறிவின் ஒளி எனக்குள் வளர வேண்டும் இந்த ஒளி தான் எனக்குப் பெறவேண்டும்…!
சலோ… சல்…ஜாவ்…! என்று நீ சொல்லும் உணர்வுகள்… நீ ஏவல் செய்து குட்டிச் சாத்தான் மூலம் எனக்கு வழி கொடுப்பதை… இன்னொரு ஆவியைக் கொண்டு அடக்கி இதன் உணர்வு கொண்டு மாயாஜாலம் செய்தாலும்… இந்த ஒளி கறிக்கு உதவாது… இந்த உடலுக்கும் உதவாது.
அறிவின் ஒளியாகத் தெரிந்து நடந்தால்.. இந்த உணர்வுகளையே ஒளியின் சரீரமாக மாற்ற முடியும்… “அது தான் எனக்குத் தேவை…!” என்று அங்கே தெளிவாக உபதேசிக்கின்றார்.
இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்ததைக் கண்டு பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே…! என்று அந்த மந்திரவாதி ஏவல் செய்தார்.
எந்த வாயினால் கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து… பேச முடியாதபடி.. உணவு உட்கொள்ள முடியாதபடி… பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.
ஆனால் மற்றவர்கள் எல்லோரும் இராமகிருஷ்ணருகுக் கேன்சர் நோய் என்ற நிலையில் முடிவுக்கு வருகின்றார்கள். அதற்கு மருந்து கொடுக்கவும் துணிகின்றார்கள்.
ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரமும் தெரியும். உடலில் உள்ள உணர்வுகளும் தெரிகின்றது. இது வந்த நிலை வேறு…!
இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டபின் மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல் உடலைக் காக்க மற்ற எதையும் முயற்சிக்காது
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல…
2.இந்த உடலைச் சொந்தம் கொண்டாட வேண்டாம்…
3.அருள் ஒளியைச் சொந்தம் கொண்டாட வேண்டும்.
4.எனக்குள் நடந்த இந்த நிகழ்ச்சி இந்த உடலுடன் போகட்டும்…
5.எனக்குள் எடுத்துக் கொண்ட அறிவு என்னுடன் என்றுமே வளரட்டும்…
6.இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் எனக்கு வேண்டாம்….
7.அருள் ஒளி பெற்ற அருள் ஒளியின் உடல் எனக்குத் தேவை…
8.ஒளியின் சரீரம் தான் எனக்கு தேவை…! என்று
9.அவரை வைத்தியம் பார்க்க வந்தோருக்கெல்லாம் உபதேசித்துள்ளார்.
இதை எல்லாம் குருநாதர் எனக்கு (ஞானகுரு) நேரடியாகக் காட்டிய உண்மைகள். அன்று நடந்த சம்பாஷணைகளை அப்படியே காதில் கேட்கும்படிச் செய்தார்.
ஆனால் இராமகிருஷ்ணர் உபதேசித்த இந்தப் பேருண்மைகள் எதுவும் வெளியிடப்பட்ட நூல்களில் வரவில்லை என்பதையும் குருநாதர் உணர்த்தினார்.
அகஸ்தியன் ஸ்டேசன் (அலைத் தொடர்பு)
அகஸ்தியன் ஸ்டேசனை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம். இதன் மூலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்ட இயற்கையின் இரகசியங்களை நீங்களும் அறியலாம். அவனுடைய நினைவுகள் உங்களுக்குள் வரும்.
உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.
சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.
ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.
இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.
மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.
அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது…” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.
அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.
தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.
அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.
இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.
1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.
இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?
விக்கிரமாதித்தன் தன் மனைவியை வைத்துப் பெற்ற சக்தியின் கடைசி நிலைகள்
தியான அன்பர் உயிரை மதிக்கும் பண்புகளை வளர்த்துக் கொண்ட விதம்
தியான அன்பர் தன்னுடைய கோபத்தைக் குறைத்த அனுபவம்
நர மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் அகோரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
வட இந்தியாவில் ஏராளமான அகோரிகளைப் பார்க்கலாம். சுடுகாட்டில் வேகும் பிணத்தை அவர்கள் கைப்பற்றி அதை உணவாக உட்கொள்வார்கள்.
அதாவது அவர்கள் அபப்டி உட்கொள்வதன் மூலம் அந்த ஆண்டவனுக்கு இந்தத் தசையை அனுப்பி அவனுக்கு அர்ப்பணிப்பதாகச் சொல்வார்கள்.
பிணங்களை இவன் உணவாக உட்கொண்டு அதை ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பதால் ஆண்டவன் இரக்கப்பட்டுத் தனக்குள் செயல்படுகின்றான் என்று இப்படிச் செய்கிறார்கள்.
இத்தகைய தீய செயலே உருவான பின் அகோர உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்த பின் யாரிடமாவது வந்து நின்றால் பணம் கேட்டால் கொடுக்க வேண்டும்.
அதாவது அகோரிகள் வீடு வந்து கேட்டால் பணத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிப் பணம் கொடுக்கவில்லை என்றால் சுட்டெரிக்கும் பார்வையைக் காட்டுவான்.
அவன் இப்படிப் பார்க்கிறானே… நம் குடும்பம் கெட்டுவிடுமோ… நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ…! என்று பயந்து அந்த அகோரி விரும்பிய பொருளைக் கொடுத்துவிடுவார்கள்.
ஆண்டவனை நான் நேசிக்கின்றேன்… ஆண்டவன் அருளை எல்லோருக்கும் பெறச் செய்ய அவனை நான் தியானிக்கின்றேன். அதற்காக வேண்டி நீங்கள் எனக்குப் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பார்கள் அந்த அகோரிகள்…!
ஆகவே அவர்கள் பணம் கேட்டால் கொடுத்தே தீர வேண்டும். பெரும் பெரும் செல்வந்தர்களும் அவன் முன்னாடி வந்தாலே பணத்தைக் கொடுத்து விடுவார்கள். கோடிக்கணக்கில் பணத்தைக் வாங்கிச் சென்று விடுவான்.
ஆனால் அவர்கள் பிணத்தைத் தின்பவர்கள் தான்…!
இதைப் போன்ற அகோரத் தன்மையான செயல்களை ஆரம்பத்தில் நான் (ஞானகுரு) வெளியிலே சொல்லும் பொழுது (நாற்பது வருடம் முன்) யாரும் நம்பவில்லை. உலகில் இப்படி நடக்கிறது.. மறைமுகமாக நடந்து கொண்டிருகின்றது என்று தான் சொன்னேன்.
பின் பத்திரிக்கையில் வெளி வந்த பின் தான் ஓகோ…! இப்படியும் இருக்கின்றதா…? என்று அதற்குப் பின்னாடி நம்புகிறார்கள்.
ஏனென்றால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டிய வழிகளில் பல பல உண்மைகளை அப்பொழுது வெளிப்படுத்திக் காட்டினோம். அதையே குருநாதர் என்னைப் பரிசோதிக்கும் விதமாக கங்கையில் மையத்தில் உள்ள மணல் திட்டுக்குப் போகச் சொன்னார்.
அங்கே சில காலங்களில் அந்த அகோரிகள் வருவார்கள். “நீ தவத்திற்காகப் போனால்.. உன்னை அறிந்து கொன்று புசிக்க வருவார்கள்…!” என்று இப்படிச் சொல்லி அங்கே போகச் சொன்னார் குருநாதர்.
குருநாதர் சொன்ன முறைப்படி அங்கே தியானமிருக்கப்படும் பொழுது பல அகோரிகள் வருகின்றனர். உடல்களில் கம்பிகளால் வளையம் இடப்பட்டு பாடல்களைப் பாடிக் கொண்டு வருகின்றனர்.
“ஓ.. ஓ… ஓ.. ஹோ… ஹோ…! என்ற சுருதிகளை வைத்துப் பாடுகின்றனர். கைகளில் கத்தியையும் வைத்துக் கொண்டு என்னைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுகின்றார்கள்.
அந்த நேரத்தில் குருநாதர் கொடுத்த அலைகளின் துணை கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். இவர்கள் அந்த ஒலிகளை எழுப்ப… எழுப்ப… “ஓங்காரக் காளி…!” என்ற நிலையில் அவர்களுக்கு முன் ரூபமாகக் காட்சி தெரிந்தது.
அதைப் பார்த்த பின் மாதாஜி…! மாப் கரோஜி..! என்று அந்தத் தாளச் சப்தங்களைப் போட்டு அப்படியே பின்வாங்கினார்கள்.
அவன் (அகோரி) காளியைப் பார்த்திருக்க மாட்டான்… என்றார் குருநாதர். அந்த உணர்வுகளைக் கண்ட பின் நடுக்கமாகி என்னை விட்டு ஓடிவிட்டார்கள்.
குருநாதர் அவர் ரூபமாகச் (காளி) சில இதுகளைக் காட்டி என்னை விடுவித்தார். நடந்த நிகழ்ச்சி இது..!
முதலில் நான் இங்கே மணல் திட்டிற்குப் போவதற்கு முன் நாதுராம் என்ற அங்கே இருக்கும் காவாலாளி.. நீங்கள் அங்கே சென்றால் உங்களைக் கொன்று தின்று விடுவார்கள்…! என்று ஏற்கனவே சொல்லியிருந்தான்.
இல்லை… இதைப் பரிசோதிக்கத்தான் என் குரு அனுப்பினார்…! என்று அவனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். குரு வழியில் செல்லப்படும் பொழுது தான் அகோரிகளைப் பற்றிய உண்மைகளையும் அறியக்கூடிய தன்மை வந்தது.
காயத்ரி மந்திரம்
சூரிய சக்தியைச் சேர்ப்பது காயத்ரி என்று சொல்கிறோம். ஆனால் அதற்குப் பின்னாடி உள்ள உண்மை நிலைகளை அறிந்துள்ளோமா…?
“உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது. நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.
அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.
அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து.. சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.
பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.
தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.
இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!
இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.
ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்… அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்… இக்காற்று மண்டலத்தில் பலவிதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள். இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.
ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.
1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று,..!
தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!
விமான விபத்திலிருந்து காத்த அனுபவம் நடந்த நிகழ்ச்சி
உடல் பற்றினால் வரும் விளைவுகளை இமயமலையில் வைத்துக் காட்டினார் குரு
எல்லாவற்றிலிருந்தும் தப்பும் சக்தி மனிதனுக்குண்டு
இராமகிருஷ்ண பரமகம்சரிடம் கடவுளைப் பற்றி விவேகானந்தர் கேட்டது என்ன…?
விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்தாலும் அவர் மற்றவர்களின் குணங்களையும் செயல்களையும் அது எப்படியெல்லாம் அவர்களை இயக்குகிறது…? என்று அறியத் தொடங்கினார்.
1.ஒரு மனிதன் கொலை செய்துவிட்டு அதிலிருந்து அவன் மீள வேண்டும் என்பதற்காக வேண்டி
2.பணத்தைக் கொடுத்து வாதிடச் சொல்வதும்
3.தவறைச் செய்துவிட்டு பணத்தைக் கொண்டு அந்தத் தவறை மறைப்பதற்காக இவர்களை அணுகி வருவதையும்
4.வழக்கறிஞராக மாறிய பின் விவேகானந்தர் நேரடியாகக் காணுகின்றார்.
ஆனால் அவருடைய தாய்… “தெய்வமோ… கடவுளோ… எப்படி இருக்கின்றது…?” அந்த உண்மையின் உணர்வைக் கொண்டு உணர்த்திய உணர்வுகள் இவருக்குள் இயக்கப்பட்டு… தன் தொழிலில் வரக்கூடிய சமுதாயத்தையும் உணர்கின்றார்.
கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் மற்றவர்களுக்குத் தோன்றப்பட்டு… கொலையையும் செய்துவிட்டு.. கொலையிலிருந்து மீள்வதற்காக
1.பணத்தைக் கொடுத்து அவன் எப்படி மாற்றுகின்றான்..? என்ற நிலைகளையும்
2.அவன் எண்ணியதை அவன் உயிர் எப்படி இயக்குகின்றது..? என்ற நிலைகளையும் விவேகானந்தர் உணர்கின்றார்.
“ஒருவனைக் கொலை செய்ய வேண்டும்…!” என்று எண்ணும் போது அதே உயிர் அந்த உணர்வை ஊட்டிக் கொலை செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டி… ஆளை வைத்துக் கொல்லும் நிலை வருகின்றது.
அதே சமயம் “ஒருவன் வாழ வேண்டும்…!” என்று பல உயர்வினைக் காட்டி அதற்கென்ற உகந்த நிலைகளைச் செய்கின்றான் என்று சொல்லப்படும் பொழுது அந்த உணர்வுகள் இவனுக்குள் விளைந்து வாழ வைக்க வேண்டும்…! என்ற எண்ணங்களை ஊட்டி வாழச் செய்கின்றது.
ஆகவே இப்படி எண்ணியதை எல்லாம் உருவாக்குவது யார்…? “உயிரே கடவுள்…” என்ற நிலையை உணர்கின்றார் விவேகானந்தர்.
1.எண்ணியதை உருவாக்கும் உயிர் ஒவ்வொரு உடலிலும் இருக்கும் பொழுது
2.அங்கே ஆட்சி புரியும் சக்தியே பெரும் சக்தி என்றும்
3.அவர்கள் எதை நுகர்கின்றனரோ அதையே இயக்குகிறது.
உதாரணமாக ஒருவர் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வை எண்ணினால்… அந்த உயிரே அங்கே அந்த நிலைகளைச் செய்கின்றது என்பதையும் உணர்கின்றார் விவேகானந்தர்.
இருந்தாலும் இதை எல்லாம் எப்பொழுது உணரத் தொடங்கினார்…? “நீ கடவுளை எங்கே பார்க்க வேண்டும்..?” என்ற இந்த உணர்வு விவேகானந்தருக்கு எப்பொழுது வருகின்றது…?
இராமகிருஷ்ண பரமகம்சரிடம் வருகின்றார்…!
1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.நீ கடவுளைக் காட்டுகின்றாய்…! என்று சொல்கின்றார்கள்.
3.கடவுளை நீ பார்க்கின்றாயா…?
4.நானும் அந்தக் கடவுளை எனக்குள் பார்க்க வேண்டும் என்று
5.இப்படிப்பட்ட வினாக்களை இராமகிருஷ்ணரிடம் எழுப்புகின்றார் விவேகானந்தர்.
அப்பொழுது பரமகம்சர் விவேகானந்தரிடம் கூறுகின்றார்…!
கடவுளைக் காண முடியாது…!
1.நீ எண்ணும் உணர்வுகள்… உன் உள் நின்று… அதுவே கடவுளாக நின்று உணர்த்துகின்றது…
2.அதன் வழியே நீ செயல்படுகின்றாய்..! என்று இராமகிருஷ்ணர் தெளிவாக அவருக்கு உணர்த்துகின்றார்.
உடலை ஆட்டிப்படைக்கும் சக்தி எங்கிருந்து வருகிறது…?
நாம் நினைக்கின்றோம்…! கடவுள்… எங்கே இருக்கின்றான்..? நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்…? அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…! ஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…! நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும் நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும் நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி…! என்று தான் நம்மைச் செலுத்துவான்.
திரைப்படம் போல் நம் மனதிற்குள் எப்படி ஒலி ஒளி வருகிறது…? அதன் இயக்க நிலை என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.
1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.
இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.
இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.
இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.
மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.
பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.
1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.
ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.
ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.
இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.
எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல்முறைப்படுத்தும் நிலையில் காண முடியும். ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!
இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.
அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?
உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)
கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து/…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.
ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…!
இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.
ஆஸ்த்மா நோய் எப்படி வருகிறது…?
உடல் உறுப்புகள் எப்படிப் பாழாகின்றது…?
பரம்பைரை நோயை மாற்றி ஒளியான பரம்பரையாக எப்படி உருவாக்குவது…?
இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்படுத்திய ஆச்சரியப்படும் செயல்களை குருநாதர் காட்டினார்
இராமகிருஷ்ன பரமகம்சர் காளி கோவிலில் பூஜை செய்து வரும் வேளையில் அங்கே இரவிலே நடக்கும் சம்பவங்களை அறிய நேர்ந்த பின் தனக்குள் உண்மையையும் சத்தியத்தையும் எண்ணி ஏங்குகின்றார்.
ஏற்கனவே இந்த உண்மைகளை எல்லாம் உணர வேண்டும் என்று நல்லதுக்காக ஏக்கம் கொண்டு மடிந்தவனின் ஆன்மா அதே ஏக்கம் கொண்ட இவரின் உடலில் புகுகின்றது. அதன் பின் அவரை அறியாமலே சில செயல்களைச் செய்கின்றார்.
இராமாயணத்தைக் எடுத்துக் கொண்டால் குரங்கு எப்படித் தாவுகின்றதோ இதைப் போல் தன் எண்ணத்தின் தன்மை கொண்டு எப்படி இயக்குகிறது என்ற நிலைகளை உணர்த்திக் காட்டுவார்.
அதாவது குரங்கின் ரூபம் இட்டு
1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு எக்குணத்தைக் கொள்கின்றோமோ
2.அதன் வழி தான் அது நமக்குள் இயக்குகிறது என்பதைக் குரங்கைப் போன்று ஆட்டிக் காட்டுவார்.
மரத்தில் ஏற்றிப் பார்ப்பார்… ஆக…
1.நம் உணர்வின் தன்மை எதைப் பறிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ
2.அதன் உணர்வின் தன் எண்ணத்தால் வரும் போது அதை அவ்வாறு ஏற்றிக் காட்டினார் இராமகிருஷ்ணர்.
இதைப் போல் இறந்த சரீரங்களைப் புதைத்திருந்தால் அங்கே அமர்வார். அதனின் எண்ணங்கள் எவ்வாறு…? என்ற நிலையை உணர்வார்.
இப்படித் தன்னை அறியாமலேயே தனக்குள் இயக்கும் இன்னொரு ஆன்மாவின் தன்மை கொண்டு… அங்கே… ஏங்கி எடுக்கும் பொழுது… தான் கண்ட உண்மை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.
அவரை அறியாமலே “பல ஆச்சரியப்படும் செயல்களை…” இயக்கிக் காட்டினார்.
அதைக் கேள்விப்பட்ட பெரும் பெரும் மந்திரவாதிகளும் பிறரைக் கைவல்யப்படுத்தக்கூடிய சாமர்த்தியசாலிகளும் இங்கே தேடி வருகின்றனர்.
1.ஒரு பித்தன் போல் இருக்கின்றான்… இவனுக்கு எப்படி இந்தச் சக்திகள் வந்தது…?
2.உண்மைகளை உரைக்கின்றான்…. அவை அனைத்தும் நடக்கின்றது.
3.இவன் செயலாக்கங்கள் எல்லாம் தெளிவாகின்றது என்ற நிலைகளில் அவரை நாடி வருகின்றார்கள்.
இமய மலைச்சாரலில் ஒரு பெண்… அது மகா மந்திர சக்திவாய்ந்தது. மனிதனையே தன் மந்திர சக்தியால் மாய்க்க வல்லமை பெற்றது. மனிதனுக்குள் தன் உணர்வைப் பாய்ச்சப்பட்டு அவன் உடலில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தச் செய்து அதை அறியக்கூடிய வல்லமை பெற்றது.
அந்தத் தாயும் ராமகிருஷ்ண பரமகம்சரை அணுகி அவரின் உண்மையை உணர்வதற்காக வருகின்றது. ஆனால் அவரால் இவரின் உண்மைகளை அறிய முடியவில்லை.
1.அவரின் அறியும் சக்தியை இவருக்குள் (ராமகிருஷ்ணர்) பெற்ற சக்தி அதைத் தடுக்கும் சக்தியாக வரப்படும் பொழுது
2.அறியும் வன்மை கொண்டு அந்தத் தாயிடம் மாறுகின்றது.
3.பின்.. “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்றும்
4.உண்மையின் நிலைகள் கொண்டு “இப்படித்தான் வாழ வேண்டும்…” என்றும் புத்தி கூறுவது போல உணர்வுகள் வந்த பின்
5.எந்த மந்திரத்தால் அறிய வேண்டும் என்று வந்த அந்த மந்திர சக்தி கொண்ட தாயும் மனம் மாறுகின்றார்.
இப்படி பல தீமைகளை விளைய வைக்கும் உணர்வுகள் கொண்டவர்களும்… அன்று இராமகிருஷ்ண பரமகம்சரைச் சந்தித்த பின்
1.அவரின் செயலைப் பார்க்கும் பொழுது… அவருக்குள் விளைந்த உணர்வை நுகர்ந்த பின்
2.மாற்றம் அடைந்தே அவர்கள் சென்றார்கள்.
இது எல்லாம் ஈஸ்வரபட்டர் எம்மைக் (ஞானகுரு) கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்று நேரடியாக காட்டிய நிலைகள்.
நாம் கோப குணத்தை அதிகமாக எண்ணினால்… அதையே அடிக்கடி பட்டால்.. அதுவே குரு வழியில் கணங்களுக்கு அதிபதியாகி நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கி ஆட்சி புரியத் தொடங்கிவிடும். ஒவ்வொரு குணங்களும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது…!
இன்று யாகம் நடத்துவதற்கும் அன்று யாகம் நடத்தியதற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள யாக பூஜை முறை மேற்கொண்டார்கள்.
இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாக குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.
1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.
வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.
1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மையைகளை அறிய முடியாத விகிதத்தில் தான் இன்று நாம் உள்ளோம்.
இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.
நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும் சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள் என்றும் அறிந்திருப்பீர்கள்.
1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
2.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.
இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும் இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.
அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.
இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்து
3.இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது.
4.அப்பொழுத் பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.
ஏனென்றால் பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.
இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.
இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.
1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.
நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் வித்தியாசம் – இளம் நீல நிறத் துருவ நட்சத்திரம்
கணவன் மனைவி சேர்ந்து மின்னலை நுகரலாம், துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் சப்தரிஷி மண்டலம்
வேதனையை ஒடுக்கச் செய்யும் துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக்கற்றைகள்
“ஓ…ம்…” என்ற நாதத்தின் சூட்சம சக்தியின் ரகசியத்தை உணர்ந்த அன்றைய ஞானிகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!
பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.
அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு தானப்பா…
3.இப்புவி நாத வளர்ப்பு யாவையுமே…!
விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.
அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.
புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா இவ்வளர் நிலை யாவையும்..?
இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.
இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.
மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.
காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?
இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர்நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.
1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.
சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லாநிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும் “இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”
வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!
1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை
3.வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்.
எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்ம சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.
இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.
3.இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!
அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.
அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!
விண் செல்லச் செய்யும் ஈஸ்வரபட்டரின் அருள் சக்தி
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வை நமக்குள் குருவாக ஏற்றுக் கொண்டால் அதுவே நம்மை விண்ணுக்கு அழைத்துச் செல்லச் செய்யும் அரும் பெரும் சக்தியாக உருவாகும்.
நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும் சக்தி எது…?
ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்றால் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் நுகரும் அனைத்தையும் ஓ… என்று ஜீவ அணுவாக இயக்கி ம்… என்று தன் உடலாக இணைத்து விடுகின்றது.
நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உணர்வின் அணுக்களுக்கும் நம் உயிரே குருவாக இயக்குகின்றது.
அதே சமயம் நம் குரு… “ஈஸ்வரபட்டர்…”
1.வானுலக ஆற்றலையும்
2.நம் பூமியின் ஆற்றலையும்
3.மனித உடலில் உயிரியல் ஆற்றலையும்
4.மனிதனாக உருப்பெற்ற பின் மனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும்
5.மனிதனான பின் இனி பிறப்பே இல்லாது “இந்த உடலே ஒளியாகும் முறையை..” அவர் கண்டுணர்ந்தார்.
அந்த உணர்வின் வழிப்படி அவர் கூறும் உணர்வினை நாம் நுகர்ந்தறிந்தோம் என்றால் அதன் வழிக் கொண்டு நாமும் அருள் வழி கொண்ட பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.
அதை அடையச் செய்யும் அந்த ஆற்றல் வழிக்கு நமது உயிர் குருவாக இருப்பினும் நம் குருநாதர் ஈஸ்வரா (ஈஸ்வரபட்டர்) என்று அவர் இத்தகைய சக்தியை உருவாக்கினார்.
அவர் உருவாக்கிய அந்த அருள் ஞான வித்தை நமக்குள் அதைப் பதித்து அதன் உணர்வை நாம் நுகர்ந்து செயல்படுவோம் என்றால் அதன் வழி
1.அதுவே நமக்குள் குருவாக இருந்து
2.இந்த மனித வாழ்க்கையில் இருளை அகற்றி
3.மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகள் நமக்குள் குரு வழியாக இந்த வாழ்க்கையில் நமக்குள் உருவாக்கி
4.அடுத்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யும் அதன் குருவே நமது குரு..!
நம் உயிர் குருவானாலும் இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றி அருள் ஒளி பெறச் செய்யும் அவர் (ஈஸ்வரபட்டர்) அருள் வழியில் நாம் எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால் அதுவே நமக்குள் குருவாக இருந்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்கிறது.
மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.
வேகா நிலை – உயிரில் நஞ்சு அணுகாமல் காத்தவர்கள் மகரிஷிகள்
நண்பர் மேல் பதிவாகும் நல்ல உணர்வும் குறை உணர்வும் குற்ற உணர்வும் மும்முனையாக இயங்கும் நிலை
நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு திரைகளைக் கிழித்தெறிய வேண்டும்
அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…?
மாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…! தீமை செய்யும் சக்திகள் நமக்குள் ஜீவன் பெறாது தடுக்கப்படுகின்றது. அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கும்.
தெய்வீக இசையின் மூலம் நாம் பெறக்கூடிய ஆத்ம சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
எங்குமே… எதிலுமே… “எல்லாமே” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் நற்சக்தியும் தீய சக்தியும் எதுவாக இருந்தாலும்.. இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.
இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.
நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.
ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!
அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.
இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!
இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”
1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”
இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.
இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ…ம் என்ற நாதத்தை உள் நாதமான ஓமுக்குள்.. ஓமாக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.
ஓமுக்குள் ஓமாக இருந்து அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால் எச்சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.
எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.
அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.
தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.
“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும் – “இவ்வெண்ண நாதத்தால்…!”
ரிஷிகளின் சக்தியைப் பெறக்கூடிய ஆரம்பப் படியே தெய்வீக இசைகள் மூலம் நாம் சுவாசிக்கும் உயர் ஞான நாதத்தின் சுவாசங்களாகும்.
அக்னி குண்டம் எதற்காக இறங்க வேண்டும்…?
மாரியம்மன் கோவிலில் அக்னி குணடம் இறங்குவது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்திவிட்டால் அந்தத் தீமை என்ற நிலை வராது கருக்கி விடும்… அதன் வலுவை இழக்கச் செய்யும்…! தீமை செய்யும்.
தள்ளுபடி (OFFER – DISCOUNT) என்ற பெயரில் எதிலே ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்…! என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
1.உண்மையின் உணர்வைப் பெறவேண்டும் என்றும்
2.தெய்வீகப் பண்பையும் கடவுளை அடைய வேண்டும் என்றும்
3.அவனிடமே இணைந்து வாழ வேண்டும் என்று தான்
4.எல்லா மதங்களும் சட்டங்களை இயற்றிச் செயல்படுகின்றது.
அதன் வழி கடைப்பிடித்துக் கொண்டு வந்தாலும் “கடவுள்…” எங்கே… எப்படி இருக்கின்றான்…? என்று யாருக்கும் தெரியாது.
மதங்கள் காட்டிய உணர்வை வளர்க்கப்படும் பொழுது அதே போல் அந்த மதத்தின் சார்புடையவர்களாகப்படும் பொழுது மற்ற மதத்தினைக் கொன்று குவிக்கும் நிலைதான் இன்று வருகின்றது.
ஒரு மதத்தின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அதை வழி நடத்திச் செல்வோர் நிலைகளில் மக்கள் இருவரோ நான்கோ ஆகி விட்டால் அதைப் பங்கிடப்படும் பொழுது அதற்குள் “தன் இனம்…” என்ற நிலைகள் இனப் போர்களே துவங்குகிறது.
அந்த அரச சாம்ராஜ்யம் அழிந்த பின் அடுத்து அது ஒரு இனமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுத் தனது சாம்ராஜ்யத்தைத் தொடர்கின்றது.
மற்றவர்களைக் கொன்று குவித்துத் தனக்குக் கீழ் கொண்டு வந்து
1.“தான் ஆட்சி புரியும்…!” அந்த ஆசையின் தொடர் கொண்டே செயல்படுகின்றனர்.
2.ஞானிகள் கொடுத்த உணர்வுகளை எல்லாம் மறையச் செய்துவிட்டனர்.
இராமாயணம் மகாபாரதத்தைப் போன்ற காவியங்களில் ஞானிகளால் காட்டப்பட்ட உணர்வுகள்
1.ஒன்று ஒன்றுடன் இணைத்தால் ஒன்றின் செயலாக்கங்கள் எப்படி உருவாகின்றது…?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே எப்படிக் கலக்கின்றது…. உடலில் அணுவாக எப்படி மாறுகின்றது…?
3.தாவர இனங்களின் வித்துக்களில் மற்ற வித்துக்களின் உணர்வைக் கலக்கப்படும் பொழுது தாவரங்கள் எப்படி உருமாறுகின்றது…?
4.அதிலே சுவைகளை மாற்றுகின்றது…? வித்துக்களை எப்படி மாற்றுகின்றது என்று உணர்த்தியுள்ளார்கள்.
அதை எல்லாம் அரசக் காலங்களில் மனித உடலில் உருவாக்கிய இந்த மந்திர ஒலி கொண்டு தான் அறிந்து இந்த உணர்வின் தன்மை கொண்டு மாற்றியமைக்கும் தன்மையாக வந்து விட்டது.
இப்படி வளர்ச்சி அடைந்து வந்த இந்த உலகம் தான் ஆசையின் உணர்வாக வளர்த்த உணர்வுகள் இங்கே அதிகமாக வளர்ந்து அரசனுக்குக் கீழ் வந்த மக்களும்… “தானும் வளர வேண்டும்…” என்ற ஏக்கம் கொண்டு வந்து விட்டனர்.
1.தான் வாழ தன் அருகிலே உள்ளவர்களை வீழ்த்தினால் தான் சரிப்படும் என்றும்
2.ஒருவர் வியாபாரம் செய்தால் ஆரம்பித்தால் அந்த வியாபாரத்தைக் கெடுத்துவிட வேண்டும் என்றும்
3.அவனை வீழ்த்தினால் தான் என் வியாபாரம் பெருகும் என்றும்
4.வியாபார முறையிலே போர் முறை வந்தது.
அதிலே நெருக்கடி வளர வளர இன்று எடுத்துக் கொண்டால் தள்ளுபடி (DISCOUNT) என்ற பெயரில் கணக்கு வழக்கு இல்லாமல் கொடுத்து மக்களை ஏமாற்றிடும் நிலை வந்து விட்டது.
தள்ளுபடி என்ற பெயரில் மக்களைக் கவர்ந்து தன் வியாபாரத்தைப் பெருக்குவதும் மற்ற வியாபாரத்தை வீழ்த்துவதும் உண்மைகளை உணரவிடாதபடி “வியாபாரமே இன்று தலைகீழாக மாறிவிட்டது…!”
ஆசையின் உணர்வின் தன்மை வளர்ந்து கொண்ட பின் அந்த ஆசைகளாலேயே தான் நாம் இன்று வாழ்கின்றோம்.. வளர்கின்றோம்.
1.அங்கே போனோம்.. போனதற்கு 50% தள்ளுபடி கிடைத்தது
2.தள்ளுபடியில் வாங்கிய சேலை கிழிந்தால் பரவாயில்லை… போனால் போகிறது போ..
3.அதற்கு இனாமாக இன்னொரு சேலை கொடுத்தார்கள் அல்லவா..! என்று
4.இப்படித்தான் பெண்கள் அங்கே மடிகின்றார்கள்.
1.சரக்கின் தன்மையைத் தெரிந்தே… அவன் குறைவாகக் கொடுக்கின்றான்…! என்றால்
2.எதன் அடிப்படையில் அப்படி நல்ல சரக்கைக் கொடுக்க முடியும்..! என்று இல்லாதபடி
3.நாம் ஏமாற்றமே அடைகின்றோம்…! இன்றைய மனிதனின் வாழ்க்கையில்..!
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்…!
பலவிதமான நோய்களைப் போக்கும் நொச்சி இலையின் குணங்கள்
டி.பி. கேன்சர் நோயை நீக்கும் வழி
செவி வழி உணர்ச்சிகளை உந்தச் செய்து உடல் நோய்களைப் போக்கும் வழி
பழையன கழிதலும்… “புதியன வளர்தலும்…!” என்ற இயற்கையின் நியதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
அணு தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.
1.அந்த இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு
2.அவ்விலை ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை
3.தண்டுப் பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு
4.அந்த முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…!”
வித்திட்ட அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி
1.அவ்விழுதின் வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி
2.வித்தின் வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.
ஆக சிறு வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.
இப்படி ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே உள்ளது…!
சூரியக் குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே தான் உள்ளது. அதாவது
1.மனித இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே
2.ஒவ்வொரு செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.
சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே
1.வளரும் தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட
2.வளர்ச்சியின் தன்மை வலு அதிகமாகின்றது.
தங்கத்தின் வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத் தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில் கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது.
அதைப் போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…
1.இந்த உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்
2.சுவாசத்தால் எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்
3.வளர்ச்சி பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.
எண்ணத்தால் எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.
1.செடியின் ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல
2.எண்ண ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.
இந்த ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு ஏறுவது என்பதல்ல.
இவ்வாத்ம உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.
ஆக… தீய வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்… இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.
அதே போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச் செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.
இதை உணர்ந்து..
1.இந்த மனித உடலில் நாம் வாழும் காலத்தில்
2.நம் ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து
3.அந்த முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.
ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து நம் உடலிலே அதை விளையச் செய்து இந்த மனித உடலைக் கழித்து “ஒளி உடலைப் பலனாக்க வேண்டும்…!”
படிப்படியாக நமக்குள் சக்தியைக் கூட்டும் முக்கியமான பயிற்சி
துருவ மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது ஒரு வெல்டிங்கைத் தட்டினால் எப்படி அந்தப் பளீர்…ர்ர் பளீர்…ர்ர்…! என்று அந்த ஒளிக் கற்றைகள் வருமோ அதாவது மின்னலைப் போன்று ஒளி தெரிவதைப் போன்று உங்கள் புருவ மத்தியில் இளம் நீலமாக நீலக் கலரில் அந்த ஒளிகள் உங்களுக்குள் கிளம்பியிருக்கும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து எண்ணும் பொழுது உங்கள் புருவ மத்தியில் குறு குறு என்று உணர்ச்சிகளை ஊட்டி இளம் நீலமாகத் தெரிந்திருக்கும்.
கடவுளை அறிய வேண்டும் என்ற வீரிய எண்ணம் விவேகானந்தருக்கு எப்படி வந்தது..?
விவேகானந்தரின் தாய் கருவிலே அவர் சிசுவாக வளரப்படும் காலத்தில் உலகம் முழுமைக்குமே அரசர்களால் அன்று அராஜகங்கள் ஏற்படும் நிலை இருந்து வந்தது.
அதை எல்லாம் கண்ணுற்றுப் பார்க்கும் விவேகானந்தரின் தாய்
1.கடவுள் இருக்கின்றானா.. இல்லையா..? என்றும்
2.அமைதி கொண்டு வாழ்வோரையும் இரக்கமற்றுக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில்
3.கடவுள் என்று கூறும் அப்படி வணங்கும் “அந்தக் கடவுள்” எங்கே இருக்கின்றான்…?
4.அந்தத் தெய்வ சக்திகள் எல்லாம் எங்கே போய்விட்டது..? என்ற வினாக்களை எழுப்பி
5.உண்மையின் நிலைகள் கொண்டு அங்கே பரிதவிக்கும் உணர்வுகளிலிருந்து
6.”மக்கள் எல்லாம் மீள வேண்டும்…!” என்று அந்தத் தாய் எண்ணுகின்றது.
பல காவியப் படைப்புகளையும் இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அன்று விவேகானந்தருடைய தாய் அதை எல்லாம் உற்றுப் படிக்கின்றது.
அன்று அரசர்களால் நாட்டிலே பேரழிவு வரும் பொழுது.. பல மத இனங்கள் போர் செய்யும் நிலையில் இரக்கமற்றுக் கொன்று போர் செய்து கொண்டிருக்கும் பொழுது.. நாம் வணங்கும் தெய்வங்கள் எங்கே போய்விட்டது…? என்ற உணர்வின் ஒலியைக் கூட்டி “அதன் உண்மையின் உணர்வுகலைப் பெறவேண்டும்…” என்று ஏங்கிக் கொண்டிருந்தது அந்தத் தாய்.
தாய் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் எல்லாம் கருவிலே இருக்கக்கூடிய அன்று வளர்ந்த விவேகானந்தருக்குப் பாய்கின்றது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியனுக்கு எப்படிப் பல விஷத் தன்மைகளை வென்றிடும் உணர்வுகள் தாய் கருவிலே கிடைத்ததோ… அதை வைத்து அண்டத்தையும் அளந்தறியும் உணர்வின் தன்மையை அகஸ்தியன் பெற்றானோ…! இதைப் போல தாய் கருவிலே ஒரு சந்தர்ப்பம் விவேகானந்தருக்குக் கிடைக்கின்றது.
அரசர்களால் ஏற்படும் அராஜகங்களும் மக்கள் ஒவ்வொருக்குள்ளும் மொழி பேதம் இன பேதம் மத பேதங்கள் கொண்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அதிலிருந்து கடவுள் எப்படி இயங்குகின்றார்..?
2.அனைவரும் கடவுளைத்தான் நேசிக்கின்றார்கள்… கடவுளை நேசிக்கும் பொழுது இந்தத் தவறுகள் ஏன் ஏற்படுகின்றது..?
3.ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலைகள் அவர்கள் வணங்கும் கடவுள் ஏன் இதை அனுமதிக்கின்றான்…?
4.ஒருவனைக் கொல்ல அவன் வணங்கும் அந்தக் கடவுள் அனுமதிக்கின்றானா..? என்று
5.இந்த வினாக்களை எல்லாம் (விவேகானந்தர்) கருவிலே வளரப்படும் பொழுது அந்தத் தாய் எண்ணி ஏங்குகிறது.
அது எங்கிய உணர்வுகள் தாய் கருவிலிருக்கும் சிசுவான விவேகானந்தருக்கும் அது படுகின்றது. இவ்வாறு கருவிலே பெற்ற வீரிய உணர்வுகள் கொண்டு அவர் பிறந்த பின் “தாய் எண்ணிய அதே உணர்வைப் பெற்று…” கடவுளின் தன்மையை அவர் அறிய விரும்புகின்றார்.
கல்வியில் இந்த அறிவின் தன்மை கொண்டு வாதிக்கும் வக்கீலாக அவர் தேர்வு பெறுகின்றார். கல்வியில் தேர்வு பெற்றாலும் கடவுள் என்ற நிலைகள் தேர்ந்தெடுக்கக் கடவுளை அறியத் தன் ஞானத்தைச் செலுத்துகின்றார்.
1.கடவுள் எப்படி இருக்கின்றான்…?
2.அவன் எங்கே இருக்கின்றான்..?
3.எவ்வாறு இயக்குகின்றான்…? என்ற நிலையை வினாக்கள் போட்டு
4.அதற்கு விடைகள் கிடைக்காத் தவித்துக் கொண்டிருந்தார்.
இராமகிருஷ்ணரைச் சந்தித்த பின் தான் அவருக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது.
கடவுளைக் காண முடியாது… கடவுளை உணரத் தான் முடியும்..! என்ற உண்மைகளை அங்கே உணர்கின்றார். எல்லா உயிரையும் கடவுளாக மதிக்கும் பண்புகளும் அவருக்குள் வளரத் தொடங்கியது.
அனைவரும் கடவுளைத்தான் நேசிக்கின்றார்கள்… கடவுளை நேசிக்கும் பொழுது தவறுகள் ஏன் ஏற்படுகின்றது..? ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் நிலைகள் அவர்கள் வணங்கும் கடவுள் ஏன் இதை அனுமதிக்கின்றான்…? ஒருவனைக் கொல்ல அவன் வணங்கும் அந்தக் கடவுள் அனுமதிக்கின்றானா..? என்று இந்த வினாக்களை எல்லாம் (விவேகானந்தர்) கருவிலே வளரப்படும் பொழுது அந்தத் தாய் எண்ணி ஏங்குகிறது.
நம் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” என்ன செய்ய வேண்டும்…?
மழை பெய்யச் செய்யும் ஆற்றல்கள்
சப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் ஒளியான உயிராத்மாக்கள்
சிறு வயதிலிருந்தே பின் தொடர்ந்து என்னைக் காத்துக் கொண்டே வந்தார் “ஈஸ்வரபட்டர்”
என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு சமயம் நான் (ஞானகுரு) குளத்தில் நீச்சலடிக்கும் பொழுது திடீரென்று புரையோடி விட்டது.
புரையோடிய பின் தண்ணீர் உள்ளுக்குள் போனவுடனே என்னால் சுவாசிக்க முடியாத நிலை ஆனது. எனக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் தண்ணீரைக் குடித்த பின் நீரிலே மூழ்கும் தன்மையே அப்பொழுது வருகின்றது.
என்னுடைய கை கால்களை அசைக்க முடியவில்லை. புரையேறிய பின் அந்த உணர்வே இயக்குகிறது… கை கால்களை இயக்க முடியவில்லை.
இந்தச் சம்பவத்தைக் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) பின்னாடி நான் அவருடன் பழகும் பொழுது எனக்கு உணர்த்துகின்றார்.
1.உன்னை இளமையிலிருந்தே நான் பின் தொடர்ந்து வந்தேன்.
2.உனக்குப் புரையோடும் பொழுது உன்னைக் காத்தேன்…! என்று சொல்கிறார்.
என்னுடைய இளமைப் பருவத்தில் குரு என்னைக் காத்தார் என்று சொல்கிறார். ஆனால் ஈஸ்வரபட்டர் யார்..? என்றே எனக்கு அப்பொழுது தெரியாது. எப்பொழுது… எப்படிக் காத்தார்…? என்று எனக்குத் தெரியாது.
ஆனால் உன்னை நான் தான் காத்தேன்…! என்று அவர் சொல்கிறார். ஏனென்றால் எப்பொழுதோ நடந்த அந்த நிகழ்ச்சியைச் சொல்கிறார் குரு.
சிறு வயதில் குளத்திற்குச் சென்றால் கொஞ்ச தூரம் நீச்சலடித்துப் போவது தான் எனக்கு வழக்கம். ஆனால் உள்ளே சென்ற பின் திடீரென்று புரை ஆகி ஹ்ஹா…! என்று சுவாசிக்கப்படும் பொழுது கை கால்களை அசைக்க முடியவில்லை.
எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் புரையோடி விட்டால் தண்ணீருக்குள் மூழ்க நேரும். இதைக் குருநாதர் உணர்த்துகின்றார்.
உனக்குப் புரையோடும் பொழுது உன்னுடைய நினைவுகள் எங்கெங்கெல்லாம் சென்றது…?
1.உன் தாயை எண்ணினாய்.. மூழ்கப் போகின்றேன்… என்று உணர்ந்தாய்..
2.ஆனால் உன் தாய் உன்னைக் காக்கப்பட வேண்டும் என்று உன்னிடம் பதிவு செய்த உணர்வுகள்…
3.“அம்ம்மா…!” என்று உன்னால் கத்த முடியவில்லை. வாயைத் திறந்தால் நீர் உள்ளே சென்றுவிடும்.
4.ஆனால் நீ எண்ணிய அம்மா…! என்ற நினைவலைகள் அங்கே செல்லப்படும் பொழுது
5.தாயின் உணர்வுகள் அந்தச் சந்தர்ப்பத்தில் உன்னைத் தொடர்ந்து வந்த உணர்வுகள்
6.நான் உன்னை எப்படியும் கைவல்யப்படுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்த நிலைகள் கொண்டு உன்னை இது வரையிலும் காத்தேன்…!
7.சரியான பருவம் வரும் பொழுது உன்னைக் கைவல்யபடுத்தினேன்.
8.உன்னை என் வசம் இழுத்துக் கொண்டேன்
9.அதன் உணர்வே உனக்குள் ஞானத்தின் சக்திகளாக விளைகின்றது…! என்று பின்னாடி என்னிடம் குருநாதர் கூறுகின்றார்.
இப்படி என் (ஞானகுரு) வாழ்க்கையில் ஈஸ்வரபட்டர் பின் தொடர்ந்தே வந்தார் என்ற நிலையைத் தெளிவாகச் சொல்கின்றார். இது என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி.
அகஸ்தியன் அருளைப் பெற எப்படி முயற்சிக்க வேண்டும்
அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களுக்கு உங்கள் நினைவைச் செலுத்தி அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்தப் பச்சிலையின் மணங்கள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அந்தப் பச்சிலையின் மணங்கள் இப்பொழுது வரும். சிலர் கிடைக்கவில்லை என்றால் “எனக்குக் கிடைக்கவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள். நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அகஸ்தியன் பெற்ற மூலிகைகளின் மணங்கள் கிடைக்கும். அதை நீங்கள் எப்படியும் பெறவேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும். உங்களுடைய சொல்லும் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் நோய்கள் பறக்க வேண்டும். அருள் ஞானம் அங்கே உதயமாக வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் தீமைகள் பரவி வரும் நேரத்தில் தீமைகளை அகற்றும் சக்தியும் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியும் நீங்கள் பெறவேண்டும் என்ற நோக்குடன் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
“நாதத்தின் முக்கியத்துவம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
இப்புவியின் நாதம் ஓ…ம்… என்ற நாதம் அமிலமானது… சுவை கொண்டு பால்வெளி மண்டலத்தில் மிதந்துள்ள அமிலத்தின் சுவை சேர்க்கையின் கனம் கொண்டு தன் ஈர்ப்பின் சுழற்சி சக்தியிலேயே அந்தச் சுவையின் ஒளி பிறக்கின்றது.
அமிலச் சுவையின் ஒளி ஈர்ப்பாகி ஒளியாகின்றது. உயிர் அணு பிறக்க சுவையின் ஒளி கொண்ட ஒளியான அணு பிறக்கின்றது.
இந்த வழித் தொடரின் நிலைக்கொப்பச் சுவை.. குணம் வளர்ச்சியின் ஒலி கொண்டு ஒளியாகி… வழி பெறும் ஒவ்வொரு தன்மையிலுமே… இயற்கை வளர்ச்சி ஒவ்வொன்றின் ஈர்ப்பிற்கும் அந்தத் துடிப்பின் நாதம் பிறக்கின்றது.
சுவையில் எப்படி ஒன்றை ஒத்து ஒன்று இல்லையோ அதைப் போன்றே இவ்வொலியும் ஒன்றுக்கொன்று மாறிய நாதமாகத்தான் பிறக்கின்றது.
செயற்கையின் சேர்க்கைப் பொருள் கொண்டு வாகனங்களில் அதனதன் உலோகச் சேர்க்கையின் நிலைக்கொப்ப மாட்டு வண்டிக்கும் புகை வண்டிக்கும் மிதி வண்டிக்கும் விமானத்திற்கும் நாத ஒலி மாறுபடுகின்றது.
இது ஒவ்வொன்றையும் பிரித்துக் காட்டுவதன் பொருள்…
1.செயற்கைச் சேர்க்கைப் பொருளைப் போன்றே
2.இயற்கைச் சேர்க்கையின் ஒலி நாதமும் மாறுபடுகின்றது.
ஞான வளர்ச்சிக்கு ஆத்ம ஜெபத்தால் உயர் ஞான தியானமாக ஒவ்வொரு சக்தி அலையின் ஒலி அலையையும் இந்த ஆத்ம உயிருக்கு எடுக்க வேண்டியுள்ளது.
அணுவுக்குள் அணுவாக பல சுவை முலாமைச் சித்தர்கள் தன் உயிராத்மாவிற்குச் சேமிக்கின்றனர் என்று ஏற்கனவே சொன்னேன்.
அதே போல் எண்ணத்தால் எடுக்கும் ஒலியின் நாதத்தை தியானத்தில்
1.சப்தரிஷிகளின் அவரவர்களுக்கு உகந்த சூட்டப்பட்ட நாமகரணத்தின் நாதத்தை
2.அகஸ்தியர் போகர் வியாசகர் வான்மீகி கொங்கணவர் கோலமாமகரிஷி இவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் ஜெபத்தால் அவர்களின் நாத ஒலியை நம் ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.
மேலும் நம் சூரிய குடும்ப வளர்ச்சி கொண்ட உயர் சக்திகளின் மண்டல ஈர்ப்பின் ஒலியையும் எண்ணத்தின் ஈர்ப்பு கொண்டு எடுக்கும் சுவாசத்தால் அந்தந்த மண்டலங்களின் அதற்குகந்த ஒலிகளையும் நம் ஆத்ம உயிர் சேமித்துக் கொள்கின்றது.
நாம் எடுக்கும் ஜெபத்தால் இவ்வுயிராத்மாவின் சக்தி கூடினால் தான் எந்த மண்டலத்திற்கும் செல்லலாம் என்று ஏற்கனவே சொன்னேன்.
ஆக எண்ணத்தால் எடுக்கும் ஒலி சேமிப்பின் தொடர் வளர்ச்சி விகிதத்திற்கொப்பத்தான் இந்தப் புவி ஈர்ப்பி பிடியிலிருந்து எந்த மண்டலத்திற்கும் செல்லத்தக்க சக்தி இவ்வொளி ஈர்ப்பினால் (தியானத்தில்) கிட்டுகின்றது.
மெய் ஞான ஈர்ப்பின் பக்தி பூண்ட பெரியோர்களின் ஆத்ம உயிரின் சேமித ஒளி சக்தியினால் தான் சிலரின் சொல்லாற்றல் சக்தியே… உயர்ந்த சொல்லாக வெளிப்பட்டு அந்தச் சொல்லின் செயல் நடப்பது பலிதம் கொள்வது எல்லாமே…!
சுவையின் தன்மைக்கே இவ்வொலிச் சேர்க்கை கொண்டு தான் வலுக்கூடுகின்றது.
1.எந்தெந்த எண்ணத்தில் எல்லாம் சுவாசம் எடுக்கின்றோமோ
2.அச்சுவாசத்தால் பிறக்கும் ஒலி.. ஒளியைக் கொண்டுதான்
3.இவ்வாத்ம உயிரின் நிலை உயருகின்றது.
இதன் நிலைக்கொப்பத்தான்… ஜெப முறை கொண்டு தியானத்தில் எண்ணத்தை எவ்வலை ஈர்ப்பு செயலில் செலுத்துகின்றார்களோ… அதன் ஒலி ஈர்ப்பைச் சித்து நிலை பெற்ற தன்மை கொண்டு… உடலுடன் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு மண்டலத்தின் ஒலி ஈர்ப்பையும்… தன் எண்ணத்தால் செலுத்தும் தியானத்தால்… ஆத்ம உயிரின் வளர்ச்சிக்கு ஒலி முலாமை ஏற்றார்கள் அன்றைய சித்தர்கள்.
இப்பொழுது உணர்த்தப்படும் முறைகள் எல்லாமே… ஒவ்வொரு மனிதனும் இந்தப் புவி வாழ்க்கைதான் வாழ்க்கை என்ற “இச்செயற்கைப் பிடியிலிருந்து மீண்டிடக் காட்டப்படும் முறைகள் ஆகும்…!”
நம்மால் நன்மை பெற்றவர்கள் நமக்கு எதிர்ப்பதமானால் என்ன செய்யவேண்டும்
நான் ஒன்றும் உங்களை மாற்ற முடியாது – நீங்கள் தான் எடுத்து மாற்ற வேண்டும்
தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!”
நம் எண்ணத்தால் எந்த மண்டலத்திற்கும் செல்ல முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
விக்கிரமாதித்தனின் கதையில் வரும் நிலை யாவையுமே கதையல்ல… உண்மைத் தன்மை உடையது…! விக்கிரமாதித்தன் பூஜித்த உஜ்ஜயினி காளியானவள்… பெண்ணாகப் பிறப்பெடுத்து ஞானத்தால் வளர்த்த சப்த காளியப்பா அவள்.
அவளின் வழித் தொடரைப் பிடித்தவன் தான் விக்கிரமாதித்த மகாராஜா. அக்கதையில் உள்ள யாவையுமே ஒரு சில மாறியிருந்தாலும் உண்மை நடப்புகள் தானப்பா அவை யாவுமே…!
அரசாண்டவனின் ஞானம்… சித்து நிலை பெற வழி வந்ததின் தன்மை பக்தி பூண்டு… பூஜித்துப் பூஜிப்பின் பலனால் அக்காளியின் ஞான அலைத் தொடர்பைப் பெற்று… அக்காளியின் செயலாகவே சித்து நிலை பல பெறும் தன்மைக்கே விக்கிரமாதித்தன் ஆளானான்.
காடாறு மாதம்… நாடாறு மாதம்… என்ற நிலையில் காடுகளில் வாழ்ந்த காலத் தன்மையில் தன் ஆத்ம உயிருக்கு வேண்டிய வலுத் தன்மையை… ஞானத்தின் வழியான சித்து மார்க்கம் பெறுவதற்காகவும் பல செயல்களை அறியவும் அணுவுக்குள் அணுவாக அணுவின் தன்மை முலாமை எல்லாம் தன் உயிராத்ம வலுவுக்கு ஏற்றிக் கொண்டான்.
இந்தப் பூமியின் கனி வள விகிதமானது ஏழு குணத் தன்மை கொண்டது. அதன் வளர்ச்சி கனி வளங்களின் தன்மை ஒவ்வொன்றில் பலவாக வளர்ந்துள்ளது.
வண்ணமும் ஏழு… சுவை குணங்களும் ஏழு… என்று சொல்கிறோம். இந்த ஏழின் தன்மை எதன் குண நிலை அடிப்படையில் கலவை பூண்டது…?
ஆவியாகிக் கனம் கொண்டு ஜீவனாகிச் சுழலும் இயற்கைத் தன்மையில் இவ் ஈர்ப்பின் இயற்கை நிலைச் செயலுக்கொப்ப
1.பால்வெளியின் கூட்டுக் கலவை அமிலத்தின் “குறிப்பிட்ட செயல் சேர்க்கையின் தன்மையில்”
2.சக்தி பெற்ற சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றார்கள் அல்லவா…!
3.அவர்களின் ஈர்ப்பு வளர்ப்பு நிலை தான் (படைப்பு) இந்தப் பூமியின் தன்மை குணம்.
சுவையும்… வண்ணமும்.. மணமும் ஏழாக… ஈர்ப்புக் கூட்டுக் கலவைச் சேர்க்கை ஜீவன் கொண்ட சிவ சக்தி என்ற ஆண் பெண்ணின் செயல் கொண்டு உருவானது தான் இந்தப் பூமி.
பூமியின் குணத்தைச் சிருஷ்டித்து வழி நடத்தும் ரிஷிக் குணத்தில் ஒவ்வொருவர் பெற்ற தனித் தன்மையின் சக்தியை ஒன்றாக்கி வளர்த்த தன்மை தான் இந்தப் பூமியின் தன்மை.
1.இப்படி எத்தன்மை பூண்டு இந்தப் பூமி உருவானதோ…
2.அதன் கலவைக் கூட்டில் எல்லாம் தன் ஆத்ம உயிரைச் செலுத்தி
3.தன் வலுவை இந்தப் புவி ஈர்ப்பின் வலுவிலேயே தன் வலுவைக் கூட்டி
4.எந்த வலுத் தொடர்பைத் தந்து ஏழு குணச் சேர்க்கையில் இந்தப் பூமி உருவானதோ – அந்த ஏழில் முலாம் பெற்ற சித்தன்
5.இவ்வேழுக்கு மேல் சக்தி கொண்ட வலுச் சக்தியான பிற மண்டலங்களின் சக்தியுடன்
6.எந்தச் சக்தியையும் உருவாக்க வல்ல பத்தாவது நிலையான ரிஷித் தன்மை கொள்கின்றான்.
கங்கைத் தீர்த்தம் புனிதமானது… என்றும் இதை ஒட்டிய ஒவ்வொரு தீர்த்தத்திலும் தான் குளித்தெழுந்தால் புண்ணியம் என்றும்… புண்ணியத் தீர்த்தங்களை நாடி மனிதன் சென்று அங்கே குளித்து இந்த உடல் பிம்பத்திற்குப் புனிதம் என்று நீராடி வருகின்றான். இது பக்தி மார்க்க முறை.
ஆனால் இந்த எண்ணத்தை
1.இந்தப் பூமியின் சக்தி அலையான அமிலத் தீர்த்தத்தில்
2.தன் ஆத்ம உயிரையே குளிக்கச் செய்தானப்பா அன்றைய சித்தன்.
பக்தி மார்க்கமும் ஜெப முறையும் வழி காட்டிகள் தான். வழியின் வலு அறிந்து தியானத்தால் ஞானம் பெற வேண்டும்.
ஆகவே இந்தப் புவியில் பிறந்த பல கோடி எண்ண ஆத்ம உயிர்களின் ஈர்ப்புப் பிடி அலைச் சுழற்சியில் இருந்து…
1.இந்தப் புவி ஈர்ப்பின் உணர்வில் சிக்காத வண்ணம்
2.தன் ஆத்ம உயிரின் ஈர்ப்பிற்குத் தன் உணர்வின் எண்ணமானது
3.நாம் எடுக்கும் தியானத்தால் உயர் ஞானம் கொண்டு மாமகரிஷிகளின் அலை ஈர்ப்பின் செயலாக ஒன்றிட வேண்டும்.
இந்த மனித பிம்ப ஆத்ம உயிரின் நுண்ணிய காந்த ஈர்ப்பின் அலை சக்தி வளர்ப்பினால் இந்தப் புவி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வலுத் தொடர்பு கொண்ட பின்
1.தன் எண்ணத்தைக் கொண்டு
2.எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்.
அகஸ்தியன் நுகர்ந்த அபூர்வ மூலிகை மணங்கள்
அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது உங்கள் உணர்வுகளில் “பச்சிலை மணங்களும்… அபூர்வ மூலிகைகளின் வாசனைகளும் கிடைத்திருக்கும். அந்தப் பச்சிலைகளின் மணங்கள் உங்கள் உடலுக்குள் சென்ற பின் உங்கள் உடலில் ஏற்கனவே இருந்த கை கால் குடைச்சல் அல்லது மேல் வலி அசதி மனச் சோர்வு இருந்தால் அது எல்லாம் குறையும். உங்கள் உடலில் மற்ற ஏதேனும் குறையான உணர்வுகள் இருந்தால் அது இப்பொழுது குறையும்.
சிவனைச் சக்தி ஆட்டிப் படைக்கின்றது… என்று காட்டியதன் உண்மை நிலை என்ன…?
மீன்களை ரசித்துச் சாப்பிடுவார்கள். சில மீன்களை வாங்கிச் சமையல் செய்யும் பொழுது பெண்கள் அதை அப்படியே உயிருடன் உராய்வார்கள்… போட்டுச் சுரண்டி அதை நரக வேதனைப்படுத்தி பின் வேக வைத்துச் சாப்பிடுவார்கள்.
1.எவ்வளவு தூரம் மீனை உராய்ந்து அதை இம்சை செய்தோமோ
2.உற்றுப் பார்த்துச் சுவாசித்ததை நம் உயிர் சும்மா விடுவதில்லை…!
3.அதன் உணர்வின் கருவாக நம் இரத்தத்தில் முட்டையாகி அது நாளடைவில் அணுவின் தன்மை அடைந்தால்
4.உராயும் பொழுது அதற்கு (மீனுக்கு) எப்படி எரிச்சலானதோ அந்த எரிச்சல் பெண்களுக்கு நிச்சயம் வரும்.
மீன் குழம்பை வைத்தவர்களுக்கு எல்லாம் பெரும்பகுதி மீனை உயிருடன் உராய்ந்திருந்தால் உடலில் எரிச்சல்… கை காலிலும் எரிச்சல் வரும்.
எம்மா… எரியுதே…எரியுதே…! என்று சொல்லிக் கொண்டு டாக்டரிடம் சென்றாலும் அதற்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்துச் சரி செய்ய முயன்றாலும் மீனை உயிருடன் போட்டுச் சுரண்டி உராய்ந்தவர்களுக்கு வரும் எரிச்சலை எந்த மருத்துவத்தாலும் நிறுத்த முடியாது.
நான் இந்த டாக்டரிடம் சென்றேன்… கேட்கவில்லை.. அடுத்த டாக்டரிடம் போனேன்…! அதுவும் கேட்கவில்லை.. என்று தான் சொல்வீர்கள்.
ஆக நம்மை அறியாமலே எரிச்சல் ஊட்டும் நிலைகள் கொண்டு நாம் ரசித்ததை இந்த உடலில் நாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
அத்தகைய உணர்வின் அணுக்கள் உடலிலே பிறந்து விட்டால் இதன் வழி உடலை விட்டு நாம் வெளியிலே சென்ற பின் அதற்குத் தகுந்த உடலைத் தேடி நம் உயிர் அழைத்துச் சென்று அதன் படியே அங்கே வளரும். அந்த உருவாகத் தான் உயிர் நம்மை உருவாக்கும்.
நாம் நினைக்கின்றோம்… கடவுள்… எங்கே இருக்கின்றான்..? நாம் திருட்டுத்தனமாகச் செய்வதை அவன் எப்படிப் பார்ப்பான்…? அவனுக்கு என்ன தெரியப் போகிறதா என்று…!
ஆனால் நமக்குள் இருந்து ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே…!
நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குவதும் அதை ஆண்டு கொண்டிருப்பதும்
1.நாம் எண்ணிபடி இந்த உடலை இயக்குவதும்
2.நாம் எதை வளர்க்கின்றோமோ அதன் வழி நீ அனுபவி…! என்று தான் நம்மைச் செலுத்துவான்.
அதே சமயத்தில் ஆறாவது அறிவு பெற்று வளர்ந்த நாம் இதைப் போன்ற கொடிய தீமைகளை எல்லாம் அப்புறப்படுத்தி அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்ப்பித்தால் அதையும் நம் உயிரே உருவாக்குகின்றான்.
நாம் எண்ணியது எதுவோ அந்த அருள் ஒளிகளை உருவாக்கி நமக்குள் சொர்க்கலோகத்தையே அமைக்கின்றான். இந்த உடலிலேயே சொர்க்கலோகத்தை உருவாக்குகின்றான்.
இந்த உடலை உருவாக்கிய பின்…
1.பழைய உடலைப் பிளந்து விட்டு
2.என்றும் பதினாறு என்ற நிலையை ஒளியின் சரீரமாக உருவாக்குகின்றான்.
இதை யார் உருவாக்குவது…? நம் உயிர் தான்,
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நோய்கள் வரும். அது எல்லாமே நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைவதனால் வருவது தான்…!.
1.தெரிந்து செயல்படும் உணர்வுகளும் நமக்குள் அணுக்கருவாக மாறுகின்றது.
2.நம்மை அறியாமல் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததும் அணுக்கருவாக மாற்றுகின்றது நம் உடலில்.
3.இப்படி நுகர்ந்தது (சுவாசித்தது) அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்றது தான் நம் உயிர்.
ஆகையினால் “விஷ்ணு…” வரம் கொடுக்கின்றான் என்று இதைக் காட்டுகின்றார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை கருவாகி விட்டால் அணுவாகின்றது.
அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அது தன் உணவை எடுக்கின்றது. பின் தன் இனத்தைப் பெருக்குகின்றது. இது தான் “பிரம்மா…” உருவாக்குகின்றான்.
அதே சமயத்தில் உடலான “சிவன்..” அரவணைத்துக் கொள்கின்றான். உடலுக்குள் எது எல்லாம் வருகின்றதோ அந்த உணர்வுகள் அனைத்தையும் அது அரவணைத்துக் கொள்கின்றது.
1.எக்குணத்தின் செயலாக நாம் எடுத்தோமோ அந்த அணுவின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது.
2.ஆகவே இந்த சக்தியின் தொடர் கொண்டு தான் சிவனின் இயக்கமே இருக்கின்றது.
உடலில் வலி ஏற்பட்டால் அம்மம்மா… அப்பப்பா..! என்று நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அப்பொழுது சக்தி சிவனை ஆட்டிப் படைக்கின்றது என்று சிவ நடனத்தைக் காட்டுகின்றனர்.
நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அதன் வழி உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது
1.சக்தியின் கீழ் தான் சிவன் அடிமையாகி இருக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.
2.சிவனைச் சக்தி தன் திரிசூலத்தால் தாக்குகின்றாள் என்றெல்லாம் உருவாக்கிக் கொடுத்திருப்பார்கள்.
நாம் ஒருவரைத் தாக்கும் உணர்வு (எண்ணம்) கொண்டு நுகர்ந்தால்.. நம் உயிரின் தன்மை அதை உருவாக்கும் அந்தச் சக்தியாக உருவாகி நம் உடலான சிவமாக அது மாறியே விடும்.
பின் அதனின் கடுமையான வேகங்கள் கூடப்படும் பொழுது.. இந்த உடலைச் செயலற்றதாக மாற்றி… அதன் கீழ் தாக்கும்..! என்ற நிலையையும் “படமாக்கிச் சித்தரித்து…” அதன் காவியத் தொகுப்பையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.
கேன்சர் நோய் வரக் காரணம் என்ன…?

பல கோடி அகஸ்தியராக
வளர்ந்து காட்டிட வேண்டும்