சூரியனிலிருந்து மீண்டும் மீண்டும் விஷமான கதிர்வீச்சுகள் (CME) வெளி வரக் காரணம் என்ன…?

சூரியனிலிருந்து மீண்டும் மீண்டும் விஷமான கதிர்வீச்சுகள் (CME) வெளி வரக் காரணம் என்ன…?

 

இன்று விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு மற்ற நட்சத்திரங்களில் ஏற்படும் கதிரியக்கப் பொறிகளை அடக்கி அணு சக்தியாக (ஆயுதங்களாக) மாற்றுகின்றார்கள்.

அணு ஆயுதங்களை வெடிக்கச் செய்யும் பொழுது அது உலோகத்திற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியை அதாவது
1.அந்த உலோகத்தில் இருக்கும் அணுக் கதிரியக்கங்களில் இந்த இரண்டும் மோதிய பின்
2.அந்தக் கடினமான உலோகமே ஆவியாக மாறி விடுகின்றது

இது போன்ற நிலைகள் விஞ்ஞானத்தால் கவர்ந்த விண்ணுலக ஆற்றல்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சூரியனுடைய காந்தப் புலனறிவு அதைக் கவருகின்றது… கவர்ந்தபின் அதை ஜீரணிக்கும் சக்தியும் இழக்கின்றது.

நட்சத்திரங்கள் பிற மண்டலங்கள் வெளிப்படுத்தும் சக்திகளைக் கவர்ந்து தூசிகளாக மாறி வரும் நிலையில்… சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் அது வரப்படும் பொழுது தனக்குள் உருவாக்கப்பட்ட பாதரசத்தின் சக்தி கொண்டு எதிர்த்துத் தாக்கி நெருப்பாகி அதில் உள்ள விஷத்தைப் பிரிக்கின்றது. இது இயற்கை.

ஆனாலும் மனிதன் விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த நிலைகள் அணுக்கதிரியக்கங்களாக உருவாக்கப்பட்டு அதைப் பரவச் செய்யப்படும் பொழுது பூமியைக் கடந்து வெளி செல்கிறது. அதைச் சூரியனுடைய காந்தசக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

இருந்தாலும் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது செல்லப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகள் சூரியனுக்குள் ஊடுருவி விடுகின்றது… சூரியன் அதை ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது
1.மனிதனால் உருவாக்கப்பட்ட இத்தகைய நிலைகள் சூரியனுக்குள் ஊடுருவப்படும் போது
2.நடு மையம் அடைந்தபின் கொதிகலனாக மாறுகின்றது.

ஆனால் சூரியனோ ஐஸ் பாறைகளால் உருவாக்கப்பட்டது. அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது பாதரசங்களாக உருவாகும் குளிர்ந்த சாதனம் போன்று உண்டு. பாதரசத்தை எடுத்துக் கொண்டால் விறு விறு விறு என்று இருக்கும்.

ஆக… கதிரியக்கப் பொறிகளால் பாதரசத்தை உருவாக்கும் சூரியனுடைய நிலைகள் மாறி கொதிகலன்கள் ஆக மாறுகிறது.
1.இன்று பத்திரிக்கைகளிலும் டி.வி.க்களிலும் பார்க்கலாம்…
2.சூரியனின் கரும்புள்ளிகளிலிருந்து கடுமையான கதிர்வீச்சுகள் வெளி வருகிறது என்று – CORONAL MASS EJECTION “CME”)

கடல் நீருக்குள் இருக்கும் ஹைட்ரஜனை வைத்து விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட அணுகுண்டுகளை அடக்கி வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல சூரியனும் தனக்குள் அடக்கும் சக்தி இருந்தாலும் அந்தச் சக்தி இழக்கும் தன்மை வந்து விட்டது. செயற்கையில் உருவாக்கப்பட்டது பெருகப் பெருக நாளடைவில்
1.அந்தக் கதிரியக்கப் பொறிகள் சூரியனையே மாற்றி அமைக்கும் சக்தியாக வந்து விட்டது.
2.அதே உணர்வுகள் ஊடுருவிய பின் நம் உலகத் தன்மையும் மாறுகின்றது.
3.தாவர இனங்கள் மரம் செடி கொடிகளில் இந்த உணர்வுகள் படரப்படும் மரங்கள் கருகும் தன்மை வருகின்றது… காடுகள் கருகுவதையும் பார்க்கலாம் (FOREST FIRE).

அதே சமயத்தில் இந்த உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது மேகங்களில் ஊடுருவி மேகங்கள் மறைந்துள்ள அணுக் கதிரியக்கங்களைத் தன்னுள் இணைத்த பின் மேகக் கூட்டத்தை கலைத்திடும் நிலை வருகின்றது. இன்னொரு பக்கம் அது குவிந்து கடுமையான மழை பெய்து ஊரையே அழிக்கிறது (CLOUD BURST).

இதைப் போன்று இந்தக் கதிரியக்கங்கள் மழை நீரின் வழி வரப்படும் பொழுது மற்ற உலோகங்களில் கலக்கப்பட்டுத் தாவரங்களிலும் சேர்கின்றது.

உணவுப் பயிர்கள் வழி இது மனிதனின் உணர்வுக்குள் கலக்கப்படும் பொழுது மனிதனுடைய உடலில் உள்ல அணுக்களிலும் இது கலக்கப்படுகின்றது.

இப்படி வானுலக ஆற்றல் கதிரியக்கப் பொறிகளாக விஞ்ஞான அறிவில் வந்தபின் அணு ஆயுதங்கள் வெடித்தால் எல்லாமே அதன் தொடர் வரிசையில் கருகிவிடும்.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
1.அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அகஸ்தியன் உணர்வின் தன்மை கொண்டு
2.கதிரியக்கப் பொறிகளை வெடிக்காத வண்ணம் “நீர் நிலைகள் உருவாக வேண்டும்…” என்ற உணர்வினை
3.உங்கள் எண்ணத்தால் பாய்ச்சினால் அந்தச் சாதனங்கள் செயல் இழக்கப்படுகின்றது.

காரணம்… அந்த நீரின் வன்மையை
1.அகஸ்தியன் அவன் அமர்ந்த இடங்களில் மேகங்களைக் கூட்டச் செய்து நீராக வடியச்செய்து ஜீவ நதியாக ஓடும் நிலைகள் பெற்றது.
2.ஜீவனுள்ளதாக அனைத்தையும் உருவாக்கும் நிலைகள் ஆஅதியிலே அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது.

அகஸ்தியன் பெற்ற நீர் சக்தி மிக மிக முக்கியமானது

தாவர இனச் சத்தை உணர்வின் ஒளியாகத் தனக்குள் வளர்க்கப்பட்டவன்… தாய் கருவிலே அத்தகைய சக்தியைப் பெற்றவன். அந்த அகஸ்தியன் அவன் வெளிப்படுத்திய பேருண்மைகளை… இயற்கையின் தன்மைகளை மாற்றி விட்டார்கள்.

மறைந்த நிலைகளைத் தான் குருநாதர் காட்டிய வழியில் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

Leave a Reply