“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” – ஈஸ்வரபட்டர்

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” – ஈஸ்வரபட்டர்

 

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” இப்படிப் பல மணிகளைத் தன் ஜெபத்தினால் செய்வித்துச் சித்து நிலை பெற்றவர்கள் தம் உடலில் இந்த மணிகளை அணிந்து கொண்டு அவற்றின் ஈர்ப்பு சக்தியின் நிலையினால் தன் ஆத்மாவிற்குச் சில நிலைகளை அறிந்திட இப்படிப் பல நிலைகளை ஜெபம் கொண்டு செய்வித்தனர்.

சந்திர மண்டலத்தில் இருந்தும் சூரிய மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் தொடர்புடைய மற்ற மண்டலங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் அணுக்கதிர்களின் சக்தியை உணர்ந்து அமாவாசையில் சந்திரனின் சக்தி இல்லாமல் சூரியனின் ஒளிக்கதிரையே பெற்றிடும் இப்பூமியை நிலைப்படுத்தி மூலிகைகளை வளரச் செய்யும் நாள் கணக்குப்படி அதை நீர் மட்டத்தின் தூர விகிதப்படுத்தி இம் மூலிகைகளை ஒன்றுக்கு நேர்ப்படுத்தி மற்றவற்றை வைத்து அதன் நாள் கணக்கில் வளரும் நிலைப்படுத்தி பக்குவமுடனே இரசமணியுடன் கலந்த ஜெபம் செய்கின்றார்கள்.

துளசி நாமத்தையும் அகஸ்தியர் நாமத்தையும் எம்மணியை உருவாக்குகின்றார்களோ அம்மணிக்குகந்த நாமத்தை ஜெபித்து தம் உடலுடன் ஜெபம் கொண்ட அந்த மணிகளை அணிந்து கொண்டு அதன் ஈர்ப்பு சக்தியின் தொடரினால் பல நிலைகளைச் செய்கின்றார்கள்.

1,இவ்வுடலையே ஒருவர் கண்ணுக்கும் காணாத நிலையெல்லாம் செய்விக்கின்றனர்
2.இவ்வுடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துப் பல சக்தி நிலைகளை அறிந்திடும் நிலைக்கும் பல நிலைகளைச் செய்கின்றனர்.
3.இயற்கையுடன் வளர்ந்திட்ட இம் மூலிகையின் நிலையறிந்து
4.இயற்கையின் சக்தியினாலேயே ஞான வழியில் சித்து பெற்றவர்கள் செய்திடும் நிலை இவையெல்லாம்.

ஆனால் சூனிய நிலை கொண்ட தீய சக்தியிலும் இந்நிலைகள் செயல்படுகின்றன.

குடுகுடுப்பு ஆண்டிகளும் இன்னும் சில சூனிய சாமியார்களின் நிலையிலும் மை போட்டு மந்திரித்து கறுப்புக் கயிற்றில் தாயத்துக்களை அளித்துப் பல நிலைகளை அவர்கள் செய்கின்றனர்.

இந்தியாவிலும் சீனாவிலும் திபெத்திலும் இன்னும் ஒரு சில நாடுகளிலும் இச்சூனியக்காரர்களின் ஆதிக்க நிலை நிறைந்துள்ளது.

குறைப் பிரசவத்தில் போன சிசுக்களையும் பிறந்த சிசுவையும் அதைப் புதைத்த நிலையிலிருந்து எடுத்துச் சென்று… அதன் ஜீவ சக்தியைத் தன் உடலுடன் ஏற்றிக் கொள்ளும் மந்திர ஜெபங்கள் செய்து தன் உடலுடன் ஏற்றிக் கொள்கின்றார்கள்.

குட்டிச் சாத்தான் வேலையும் இதுவே…!

கூடுவிட்டுப் பறந்து செல்லும் நிலையும் தன் உடலையே பிறர் கண்ணிற்குக் காணாமல் ஆவி உருவப்படுத்தும் நிலையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

இவர்களினால் பல தீய நிலைகள் இன்றும் நடந்து வருகின்றன. தீய எண்ணத்திற்கு இத்தீய சக்தியின் தொடர்பும் கிட்டுகின்றது.

நல்வழிக்கும் தீய வழிக்கும் இந்நாடு கலந்த நிலையில்தான் உள்ளது.

இவ்வெண்ண சக்தியை மேம்படுத்தி இவ்வுலக சக்தியில் ஆத்ம சக்தியை ஒன்றச் செய்தால் நம் ஆத்மாவுடன் நாம் வளர விடும் நற்சக்தியின் பயனால் நாம் வாழ்ந்திடும் காலத்தில் இக் காற்றுடன் கலந்துள்ள தீய சக்திகளின் அணுக்கதிர்களை வளரவிட்டு சோர்வும் நலிவும் இவ்வுடலை அண்டாமல் இவ்வுடல் அகால மரணம் எய்திடாமல் அன்பு கொண்ட ஜீவாதார அறம் கொண்ட நல் வாழ்க்கை வாழ்ந்தே சூட்சும உலகிற்குச் சென்றிடும் பக்குவ நிலைக்குச் சென்று வாழ்ந்திடலாம்.

தீயோரின் சக்தி நிலை வளர்ந்து நற் சக்தியைக் குறைத்துக் கொண்டு வருவதினால் நம் சக்தியையும் நம்மைச் சார்ந்தோரின் சக்தியையும் அவர்களின் தொடர்பு கொண்டோரின் சக்தியையும் கீழான நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தன் இனத்துடன் தன் இனத்தைச் சேர்த்தே ஒவ்வொரு மண்டலமும் ஈர்த்து எப்படி வளர்ந்ததுவோ அந்த நிலை போன்றே…
1.இவ்வுலகில் உதித்த ஆத்மாக்கள் அனைவருமே ஒன்றுடன் ஒன்றை நற்சக்திகளாக்கி
2.இவ்வுலகையே நல் உணர்வு கொண்ட நல் பூமியாக வாழ்ந்திடும் பக்குவம் பெற்ற ஆத்மாக்களாய் வந்திட
3.நல்லுணர்வையே நலமாக்குங்கள் என்றே வழிப்படுத்தி வாழ்த்துகின்றேன் நல் வாழ்த்துக்களை…!

Leave a Reply