எந்த வகையிலும் (நன்மையோ தீமையோ) நாம் யாருக்கும் அடிமையாகிவிடக் கூடாது

எந்த வகையிலும் (நன்மையோ தீமையோ) நாம் யாருக்கும் அடிமையாகிவிடக் கூடாது

 

மீண்டும் மீண்டும் உங்களுக்குள் ஞாபகப்படுத்துகின்றோம். நாம் எடுத்துக் கொண்ட தியானத்தின் வளர்ச்சி நமக்குள் பேரின்பத்தை ஊட்டும் நிலையாக வரும்.
1.இந்த உடல் இருக்கும் பொழுதே அந்த அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால்தான்
2.நமக்கு அந்த வளர்ச்சி கிடைக்கும்.

ஆனால் யாரோ எவரோ செய்து கொடுப்பார்…! என்று எண்ண வேண்டாம்.

யாரோ செய்வார் என்று அந்த ஏக்கத்தில் செல்லப்படும் பொழுது தான் மகா சக்தி என்ற நிலைகள் கொண்டு அடுத்தவர்கள் வலையில் நாம் சிக்கி நம் புத்தி இழந்து அவருக்குள் அடிமையாகி விடுகின்றோம்.

அதற்குப்பின் அவர்களிடமிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று முயற்சி செய்ய வேண்டியுள்ளது.

உதாரணமாக ஆசைகளை ஊட்டி “இந்தத் தொழிலில் நீங்கள் லாபம் பெறலாம்…” என்ற உணர்ச்சிகளை ஒருவர் நமக்குள் தூண்டி விட்டால் அவரைப் புகழாரம் பாடத் தொடங்குவோம்.

அவர் உதவி செய்வார்… உதவி செய்வார்… என்று அதே எண்ணத்தில் ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு நூறு ரூபாய் வேண்டும் என்று புகழ்ந்து பேசி நம்மிடம் கேட்பார். கேட்டவுடன் கொடுத்துவிடுவோம்.

அடுத்தாற்போல் நாம் அதைக் கேட்கப் போனால் நல்ல நேரத்தில் அன்று உபகாரம் செய்தீர்கள் இன்னும் ஒரு 500 ரூபாய் கொடுத்தால் பரவாயில்லை…! என்று கேட்பார்கள்.

ஆக.. புகழ்ந்து பேசுபவருடைய நிலையில் நாம் அடிமையாகி விட்டால் அவர் புகழ்ந்து பேசியே காசை நம்மிடம் வாங்கிச் சென்று விடுவார்.

நமக்குக் கஷ்டமாக இருக்கும் பொழுது பணத்தைக் கேட்டால்
1.ஐயோ… என்னிடம் காசு இல்லையே…! என்பார்
2.ஆனால் நாம் கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்
3.ஆனால் கேட்பதை நிறுத்த மாட்டார்
4.நாம் இல்லை என்று சொல்லி விட்டால் பகைமையை ஊட்டிவிடுவார்
5.காசைத் திருப்பி கேட்பார் என்று அடுத்தவரிடம் சீண்டி விடுவார்
6.கற்பனையாக உருவாக்கி கற்பனையான சொல்களைச் செய்து இடையூறை ஊட்டி பணத்தை வாங்க இவ்வாறு செயல்படுத்தி விடுவார்
7.கடைசியில் எப்பொழுது நீ பணம் கொடுத்தாய்…? நம்மைக் கேட்கும் அளவிற்கு வந்து விடுவார்

புகழாரம் பாடுவோர் கையிலே நாம் சிக்கிவிட்டால் மனிதனின் வாழ்க்கை இப்படிக் கடுமையாகி விடுகின்றது. சிந்திக்கும் செயலும் இழந்து விடுகிறது

ஆகவே நாம் ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றால்
1.திருப்பிப் பெறும் நிலைகளுக்கு இருக்கக் கூடாது
2.திருப்பிப் பெறாத நிலையில் இருக்க வேண்டும்

“மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும்…” என்று அருள் வாக்கினைக் கொடுத்து விட்டால் திரும்பக் கேட்கும் நிலை வராது. ஆகவே திரும்பக் கேட்கும் நிலை அற்று இருக்க வேண்டும்.

உபகாரம் செய்வதில் கவனமாக இல்லையென்றால் நட்புக்குள் பகைமையும் வந்து விடுகின்றது இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுக் கருக்களாக… அதைக் கருவாக்கி நாம் வளர்த்தோம் என்றால் உடலுக்குள் அணுக்களாகப் பெருகி ஒளியான வளர்ச்சியின் தன்மை கூடிக் கொண்டே வரும்.

1.பிறிதொரு பகைமையோ உணர்வு ஏமாற்றும் உணர்வோ நமக்குள் வராதபடி அருள் உணர்வின் தன்மை வலிமை பெற்று
2.என் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்… சிந்திக்கும் தன்மை பெறச் செய்ய வேண்டும்
3.என்னைப் பார்க்கும் போதெல்லாம் மற்றவர்களுக்கு நல்ல எண்ணம் வரவேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கருவாக்கி வளர்த்துக் கொண்டால்
5.உற்று நோக்கி நம்மை ஏமாற்றுவார்கள் இதை நுகர்ந்த பின்
6.ஏமாற்றும் செயலே அவர் உடலில் இருந்து விலகிச் சென்று விடுகிறது.

இதைப் போன்று நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்

எப்போதுமே அடுத்தவரிடம் நாம் பழகும் போது… அவர் கஷ்டங்களைச் சொன்னால் “அவருடைய கஷ்டத்தை நீக்கும் உபாயங்களை…” நாம் சொல்லிப் பழக வேண்டும்.

இதன் வழி நாம் செல்லும் பொழுது
1.அந்த அருள் உணர்வுகள் நமக்குள்ளும் பெருகும்… துன்பத்தைப் போக்கும் உணர்வுகள் நமக்குள் விளைகிறது.
2.நம் எண்ணங்கள் கொண்டு அந்தக் கஷ்டங்களைப் போக்கும் தன்மை வரும்.
3.ஆகவே அருள் வழியில் இத்தகைய உபாயங்களை நீங்கள் சொல்லுங்கள்.

இவ்வாறு செயல்பட நாம் அந்த உணர்வுகளை எண்ணும் போதெல்லாம் நம் உடலுக்குள் வளர்ந்த அணுக்களுக்கும் இந்த நல்ல உணர்வை ஊட்டி அதை வளர்க்கும் தன்மையும் பெறுகின்றது நாம் வாழ்க்கையில் இப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்துப் பழகிக் கொண்டால் உடலை விட்டுச் செல்லும் போது நாம் மெய் ஒளி பெறுகின்றோம்.

Leave a Reply