உங்கள் வாழ்க்கையில் எதிர்படும் சந்தேகங்களைப் போக்குவதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

உங்கள் வாழ்க்கையில் எதிர்படும் சந்தேகங்களைப் போக்குவதற்குத்தான் மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றேன்

 

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை நீங்கள் கேட்டு அதைக் கடைப்பிடித்து வழி நடந்து கொண்டிருந்தாலும் உங்கள் உடலுக்குள் எத்தனையோ குணங்கள் எதிர்ப்பு உணர்வுகளைக் காட்டும்.

1.உங்களுக்குள் அவ்வாறு எழும் நிலைகளை மாற்றி
2.அந்தச் சந்தேக உணர்வுகளை நீக்கும் நிலைக்காகத்தான்
3.திரும்பத் திரும்ப யாம் உபதேசிப்பது.

அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அந்த மெய் ஞானிகள் பெற்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவு செய்யும் பொழுது
1.இதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய உள் பொருளைக் காண முடியும்.
3.உங்களுக்குள் நல்லதைப் பெற முடியும்.

அந்த நம்பிக்கையில்தான் இதை உபதேசிக்கின்றேன்.

குருநாதர் எமக்குக் காட்டிய அருள் வழிப்படி “என்னை விழித்திருக்கச் செய்த அந்த நிலையை…” நீங்களும் என்றும் விழித்திருந்து… தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்துப் பழக வேண்டும்.

காரணம்… உங்களுக்குள் தீமைகளை அறிவிக்கச் செய்யும் நிலையில் “தீமை இது தான்…” என்று அது காட்டினாலும் அந்தத் தீமைகள் உங்களுக்குள் விளையாது நல்ல உணர்வின் தன்மையை வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் விளைய வேண்டும்.

ஆகவே… தீமையை அகற்றிட்ட இருளைப் போக்கிட்ட அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் பொருள் கண்டுணர்ந்திடும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்களுக்குள் வளர வேண்டும் என்றுதான் எமது குரு அருளாசிப்படி
1.நீங்கள் அனைவரும் அதை அவசியம் பெற வேண்டும்…
2.நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள் என்ற தன்னம்பிக்கையில்
3.காலமானாலும்… கால நேரம் பார்க்காது உயர்ந்த சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
4.உங்கள் நல்ல உணர்வுடன் அருள் ஞானிகளின் உணர்வை இணைத்து இணைத்து
5.ஈஸ்வரப்பட்டர் அருள் ஆசைப்படி உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

Leave a Reply