கல்கியின் கையிலே வாள் எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது…?

கல்கியின் கையிலே வாள் எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது…?

 

விஞ்ஞான உலகில் உருவான நச்சுத் தன்மைகள் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியினை எடுத்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

1.உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளப் பத்திரிக்கையையோ டி.வியையோ பார்த்தாலும் போர் முறை தான்
2.வீட்டிலே பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை என்றால் போர் முறை தான்
3.வியாபாரம் செய்யும் இடத்திலும் கொடுக்கல் வாங்கலில் போர் நடக்கின்றது

இப்படி ஒவ்வொரு இடத்திலும் சங்கடம் சலிப்பு கோபம் ஆத்திரம் என்று நாம் எடுத்துக் கொள்ளும் போது அங்கே போர் நடக்கின்றது. கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை என்றால் வேதனை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகளுக்கும் உடல் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் போர் முறையாகி அம்மா… அப்பா… என்று மேல் வலி.. இடுப்பு வலி.. கை கால் வலி… என்று உடலுக்குள் மகாபாரதப் போர் நடக்கின்றது.

உடலுக்குள் நடக்கும் இத்தகைய போரிலிருந்து மீளும் நிலையில்லாது இருக்கும் இதற்கு மாற்றாக நாம் குருக்ஷேத்திரப் போரை நடத்தியே தீர வேண்டும்.

உயிர் தான் நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது. உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாகவும் இருக்கின்றது. ஆகவே
1.புருவ மத்தியில் உயிரான குரு இருக்கும் அந்தச் க்ஷேத்திரத்தில் “குருஷேத்திரப் போராக…”
2.அந்தக் குருவின் (உயிரின்) துணை கொண்டு மெய் ஒளியை நமக்குள் சேர்த்து
3.நமக்குள் இருள் சூழும் நிலையிலிருந்து அந்தப் போரிலே வென்று
4.குருவுடன் ஒன்றி… உயிரைப் போன்று ஒளியாக மாற்றி
5.மெய் ஞானிகள் சென்ற அருள் வழிகளில் நாம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

குருசேத்திரப் போரை நாம் நடத்த வேண்டும். அந்த பழக்கம் வர வேண்டும். உயிர் குருவை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நமக்குள் வந்த வெறுப்பு கோபம் ஆத்திரம் இவைகளை அகற்றிட வேண்டும்.

காரணம்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையில் இரக்கமற்ற நிலையில் ஒருத்தரை வீழ்த்திடும் அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சுவாசிக்கப்படும் பொழுது அது நல்ல உணர்வை வீழ்த்தும் தன்மையாக வருகிறது.

அது போன்ற நிலையை அகற்ற குருவிடமே வேண்டி அந்த மெய் வழி சென்ற அந்த மெய் ஞானியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அடிக்கடி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறுவோம் என்றால் இந்த குருக்ஷேத்திரப் போரில் விஞ்ஞானத்தை வென்று நாம் அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் விண் செல்ல முடியும்.

நாம் எல்லாம் சாதாரணமான மக்கள் என்று எண்ண வேண்டாம்.

இந்தப் பூமியில் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகளை வீழ்த்தி மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்ற ஆசையிலே தான் ஆற்றல்மிக்க வித்தை உங்களுக்குள் விளையச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

வயலைப் பண்டுத்தியது போல் உங்கள் மனதைப் பண்படுத்தி மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியின் வித்தை உங்களுக்குள் விதைக்கச் செய்கின்றேன். அந்த அருள் வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

யாம் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க
1.இடைவிடாது குரு அருளை நீங்கள் பெற்று
2.ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் ஒன்றி… அவனுடன் இணைந்து…
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடமே வேண்டி
4.உயிர் குருவின் துணை கொண்டு விஞ்ஞான விஷத்தின் தன்மை தனக்குள் இணையாது அதை வீழ்த்தி
5.மெய் வழியில் மெய் ஒளியாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து
6.கல்கியின் அவதாரமாகப் பறக்கும் நிலை பெற வேண்டும்.

குதிரையைப் போட்டுக் கையிலே வாளைப் போட்டுக் காட்டி இருப்பார்கள். வாளைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன..?

தானியங்கள் மற்ற காய்கறிகளை எல்லாம் வேக வைத்து அதிலிருந்து வரக் கூடிய காரலை நீக்கிவிட்டுப் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுகின்றோம்.

சுவையான உணவை உட்கொண்டாலும் நம் உடல் அதில் உள்ள விஷத்தைக் கழிவாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகிறது. ஆறாவது அறிவின் செயல் இது.

அந்த நஞ்சுகளை அகற்றுவது போன்றுதான் விஞ்ஞான அறிவினால் வரும் விஷத்தன்மை உடலுக்குள் போவதற்கு முன் உயிரான ஈசனிடம் வேண்டி குருக்ஷேத்திரப் போரை நடத்த வேண்டும்.

1.எப்போது இந்த உடலை விட்டுச் சென்றாலும்
2.இன்னொரு ஆத்மா நம்மைக் கவர்ந்து இழுத்து விடாதபடி அதை வீழ்த்தி (அதற்குத் தான் வாள்)
3.மெய் ஒளியின் தன்மையை விண்ணை நோக்கி அங்கே பறந்து செல்ல வேண்டும்.

பேரண்டத்தில் எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் ஒவ்வொன்றும் அது பல பல நச்சுத் தன்மைகளை உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது. நஞ்சுகள் வந்தாலும் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் அதைத் தன்னுடைய கதிர்வீச்சால் மாய்த்து இங்கே நல்லதாக மாற்றிக் கொடுக்கின்றது.

அதைப்போல
1.நம் உயிராத்மாவின் நிலைகள் அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் மாற்றும் ஆற்றலாக
2.தனக்கு தானே அந்த நச்சுத் தன்மையை மாற்றிடும் சக்தியாக
3.உணவுகளைச் சுவைமிக்கதாக ஆக்கி இந்த உடலில் எப்படி மகிழ்ச்சியாகின்றோமோ
4.அதைப் போல ஒளிச் சரீரத்தில் மகிழ்ச்சியாக என்றும் பதினாறாக நீடித்த நாள் வாழ முடியும்

ஆனால் இந்த உடலின் தன்மை “அற்ப நிலை தான்…!”

இருந்தாலும் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்தத் தகுதியை வளர்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளைச் சுவாசித்து… சுவாசித்து…
1.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு பேரண்டத்தில் விண்ணிலே சுழன்று
3.தீயதை வீழ்த்தி உணர்வின் ஒளிச் சுடராக மாற்றி நாம் பேரானந்த நிலை பெறலாம்.

Leave a Reply