எம்முடைய வழியைக் கடைப்பிடிப்போர் “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் – ஞானகுரு

எம்முடைய வழியைக் கடைப்பிடிப்போர் “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் – ஞானகுரு

 

சாமி… சாமியார் சொல்வதை எல்லாம் கேட்கின்றீர்கள் அல்லவா. அதே மாதிரி நல்லதை எண்ணி உங்களால் அதை வளர்க்க முடியாதா…?
1.உங்களுக்கு நான் (ஞானகுரு) பவர் கொடுக்கின்றேன்…!
2.இங்கே உபதேசம் கொடுக்கிறேன் என்றால் அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறுவதற்குண்டான
3.ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) புது வித்தாக எப்படி உருவாக்குகின்றார்களோ அதே மாதிரித்தான் உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

விவசாயப் பண்ணையில் விதைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றார்கள். வாங்கி விதைத்துவிட்டு அதைச் சரியாகக் கவனிக்கவில்லை என்றால் பயிர்கள் பட்டுப் போகின்றது.

விதைகள் கொடுத்தீர்கள்… பட்டுப் போய்விட்டது என்று அங்கே சொல்ல முடியுமா…?

அது போல் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உற்பத்தி செய்து உங்களுக்குக் கொடுக்கின்றோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்…?

1.அந்த ஆசையை மட்டும் வைத்துக் கொள்கிறீர்கள்
2.செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது இல்லை.
3.எப்படா பலன் கொடுக்கும்…? என்று அதையே எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள்…!

பயிர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் விட வேண்டும். உரம் கொடுக்க வேண்டும். சாப்பாடு கொடுக்க வேண்டும். அந்தந்தக் காலத்திற்கு அதைச் செயல்படுத்த வேண்டும்.

கஷ்டம் என்று வந்து விட்டாலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
1.இப்படிச் சாப்பாடு கொடுத்தால் கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்.
2.உங்கள் உணர்வின் எண்ணங்கள் சீராக வரும்
3.அதை வைத்து நீங்கள் நல்லதைச் செயல்படுத்த முடியும்.

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணும் பொழுது தீய வினைகள் நம் உடலுக்குள் செல்லாதபடி சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா தூய்மை அடைகிறது.

தீய வினைகளை இப்படி நிறுத்திப் பழகவேண்டும்.

கஷ்ட நஷ்டங்களை எண்ணாதபடி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று நுகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் பல பகைமை உணர்வுகளையும் விஷத் தன்மைகளையும் நோய்களையும் உருவாக்கக்கூடிய வினைகள் காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவி உள்ளது. அதை எல்லாம் நாம் இழுக்கவில்லை என்றால் சூரியன் எடுத்து மேலே கொண்டு சென்றுவிடும்.

பரமாத்மா தூய்மை அடைகின்றது நமது ஆன்மா தூய்மை அடைகின்றது நம் உடலில் ஜீவான்மா தூய்மை அடைகின்றது. நம்முடைய உணர்வுகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

டிச்சியிலே (சாக்கடை) நாற்றம் வருகிறது. அப்போது அதிலே கொசுக்கள் உண்டாகின்றது. கொசுவை அழிக்க விஷ மருந்துகளை அதிலே தூவிவிட்டுச் சென்று விடுகின்றார்கள். கொசுக்கள் அனைத்தும் இறந்து விடுகின்றது.

ஆனால் கொசுவின் கருவிலிருக்கும் முட்டைகள் அந்த விஷத்தின் தன்மைகளக் கவர்ந்து வெளியே வருகிறது. அப்படி விஷத்தைக் கவர்ந்து வரக்கூடிய கொசு ஒன்று நம்மைக் கடித்தால் போதும். சுரீர்… என்று இருக்கும். அந்த அரிப்பை நம்மால் தாங்க முடிவதில்லை.

1.விஷ மருந்தை அடித்துச் சென்றபின் அதற்கப்புறம் உருவாகக்கூடிய கொசுக்கள் இப்படித்தான் வீரியமாக இருக்கும்
2.அரிப்பு அதிகமாக இருக்கும்… உடலில் தடிப்பும் அதிகமாகிறது.

கொசுக்கள் எங்கே சாகின்றது…? இது போன்ற தீமையின் விளைவுகளை நாம் அறிந்திருக்கின்றோமா…?

இதை எல்லாம் மாற்றி அமைக்க
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை மொத்தமாக நாம் எடுத்து
2.அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது தீமைகளை அகற்றக் கூடிய சக்தி வலுப் பெறுகின்றது…!

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நாம் அனைவரும் ஏங்கி எடுத்து இந்தப் பூமியில் பரவச் செய்யும் பொழுது பூமியும் தூய்மை அடைகின்றது. ஆகவே இதை நாம் தெளிவாகக் கொண்டு வர வேண்டும்.

Leave a Reply