எண்ணத்தின் கூர்மை எது…! அதைப் பயன்படுத்த வேண்டிய முறை எது…? – ஈஸ்வரபட்டர்

எண்ணத்தின் கூர்மை எது…! அதைப் பயன்படுத்த வேண்டிய முறை எது…? – ஈஸ்வரபட்டர்

 

1.நம் செவியில் படும் ஒலி நாதத்தின் ஈர்ப்பிற்கொப்ப…
2.எண்ண உணர்வு சமைக்கப்படும் அணு வளர்ச்சி கொண்டு தான்
3.“உடல் வாழ்க்கை” நடக்கின்றது.

உடலின் இயக்கத்தால் எடுக்கக்கூடிய நம் எண்ண நிலையின் செயல் உணர்வு நிலைக்கொப்ப அணு வளர்ப்பின் முலாமைத் தான் (ஆத்மாவில்) நாம் பெறுகின்றோம்.

அதனால் வாழ்க்கையுடன் ஒன்றிய ஈர்ப்பு வட்டத்தில் ஒலி கொண்டு ஒலி பெறும் இச் சரீர இயக்கத்தை
1.உயர் நாத விந்து வளர்ப்பு நிலை பெறத்தக்க
2.ஒலி நிலை கொண்ட ஒளி பெறும் (மகரிஷிகளின்)
3.காந்த மின் அலைத்தொடர் வளர்ச்சிக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

உயர் ஞான சக்திகளின் வளர்ப்பாக உடலில் ஒளியான அணுக்களை உருவாக்கி… அதன் மூலம் உடலின் எலும்புகளின் ஊன்களை உறுதியாக்கும் தன்மை பெற்றால் நம் ஆத்மாவே ஒளி நிலை கொண்ட “ஜோதி நிலை” அடைகின்றது.

1.எதனின் ஈர்ப்புப் பிடியிலும் சிக்காத இந்த ஆத்மாவின் ஒளிப் படர்வின் செயலினால்
2.ஒளி பெற்ற ஆத்ம சரீர அலையிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகள்
3.ஒளி கொண்டு திக்கெட்டும் பாயும் உயர் ஞான ஒலிகளாக…!

ஒலி பாய்ச்சி ஒளி கொண்டு எத்தொடரில் உயர் ஞான சக்தியினால் எடுக்கப்பட்ட சொல் நாதம் ஒலிக்கின்றதோ அச்சொல்லின் செயல் “வாக்காகச் செயல் கொள்ளும்…”

“சொல் வாக்குப் பெற்ற சக்தி நிலை” என்பது விழி கொண்டு பாய்ச்சப்படும் ஒளியின் கூர்மை கொண்டு… ஒளி வழித் தொடர் அலையின் உயர்வு நிலை… “ஒளி பட்ட இடத்திலேயே செயலாக்கம் ஆகும்…”

அதாவது…
1.எரியும் பொருள்களில் சிறு நெருப்புப் பொறி பட்டவுடன்…
2.சிறு நெருப்புப் பொறியானது பெரும் நெருப்பாகச் சகலத்தையும் பஸ்பமாக்குகின்றது.

அதைப் போன்று இவ்வொளியைப் பாய்ச்சி உயரக்கூடிய வழி நிலைக்கும்
1.ஒலி கொண்டு ஒளி பெற்ற “விழி ஒளியின் கூர்மை கொண்டு”
2.எந்த அலைத் தொடரையும் மாற்றவல்ல “ஒளி நிலை பெறலாம்…” இந்த ஒளி நிலை ஞானத்தால்.

சரீரத்தின் எண்ண உணர்வைச் செலுத்தப்படும் செயல் கொண்டு
1.செயலின் வழி ஞானம் மிகவும் கூர் பாய்ச்சிய தன்மையில்
2.வாழ்க்கை வழி முறையில் அதை மிகவும் சாந்தத் தன்மையில் செயல்படுத்த வேண்டும்.

Leave a Reply