27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் தான் எதுவுமே நம்மை எதிர்மறையாக இயக்காதபடி சமமாக்க முடியும்

27 நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் தான் எதுவுமே நம்மை எதிர்மறையாக இயக்காதபடி சமமாக்க முடியும்

 

27 நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய சக்திதான் விண்வெளியில் இருந்து வரும் நஞ்சினை வென்று நம் பூமிக்குள்ளும் அந்தச் சக்திகள் பரவிக் கொண்டு வருகின்றது.

27 நட்சத்திரங்களின் உணர்வுகளைப் போன்றது தான் மனிதனுடைய எண்ணங்களும். மனிதனின் எண்ணங்கள் அனைத்துமே நட்சத்திரம்தான்.

நட்சத்திரங்களுடைய ஆற்றல்கள் மற்ற பாறைக்குள் புகுந்து தாவர இன சத்தாக அது விளைகின்றது. அந்தக் கதிரியக்கம் தான் மற்ற மணத்தைத் தூண்டி இயக்கச் செய்கின்றது.

அந்த 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு குணங்கள் கொண்டது. ஒவ்வொன்றுடன் அவை இணையும் பொழுது பல கோடிப் பிரிவுகளாக அது பிரிகின்றது.

1.அந்த 27 நட்சத்திரங்கள் எத்தகைய ஆற்றல் பெற்றதோ அதைப் போல அந்த உணர்வின் சக்தி நமக்குள் பெற வேண்டும் என்று
2.அந்த மெய் ஞானிகளின் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

நம் உடல் அனைத்தும் கோள்தான். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுகிறோம்… உயிர் சூரியன்.

உயிர் வழி அந்த ஞானியின் உணர்வை எண்ணும் பொழுது அந்த எண்ணம் வலுப் பெறுகின்றது. மகரிஷிகளின் அருள் சக்தி நம் ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உணர்வின் துணை கொண்டு தான் நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

ஆகையினால்தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எண்ணி அந்த 27 நட்சத்திரங்களைப் பற்றி எண்ணச் சொல்கிறோம்.

1.அந்த 27 நட்சத்திரங்களைப் பற்றி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டி
2.அதை எப்படி நீ தொட வேண்டும் என்ற பக்குவத்தைக் கொடுத்துள்ளார்.
3.அந்த 27 நட்சத்திரங்களின் சக்திகளை எதனுடன் இணைக்க வேண்டும்…?
4.அதை எடுத்தால் உன்னை எப்படி அது சுடாது இருக்கும்…?
5.அந்தக் கதிரியக்கங்கள் உன்னைப் பாதிக்காது எப்படி இருக்கும்…? என்ற நிலையைக் காட்டினார்.

ஆகவே குருவின் துணை கொண்டு அதனை நான் (ஞானகுரு) கவர்கின்றேன். அப்படிக் கவர்ந்த நிலைகள் கொண்டு
1.27 நட்சத்திரங்ளின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணச் சொல்லி விட்டு
2.இந்த இணைப்புடன் ஊழ்வினையாகப் பதிவு செய்கின்றேன்.

சிறுகச் சிறுகப் அந்த 27 நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்கிறோம். அந்த 27 நட்சத்திரங்கள் சக்தி கொண்டு சமப்படுத்தும் நிலையை நீங்கள் முழுமையாகப் பெற முடியும்.

1.அந்த 27 நட்சத்திரங்களின் உணர்வுகளை எடுத்துத்தான் மகரிஷிகள் அனைத்தும் தனக்குள் ஒன்றாக்கி
2.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியுள்ளார்கள்.

அதாவது
1.எதுவுமே இயக்கம் அல்லாது அதனின் உணர்வின் இயக்கமாக மாற்றி
2.நெகடிவ் பாசிடிவ் என்று கரண்ட் எப்படி உண்டாகின்றதோ இதைப்போல சமநிலைப்படுத்தி…
3.ஒரு நிலை கொண்டு ஒன்றைத் தனக்குள் இரையாக்கி… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.

அந்த மகரிஷிகள் பெற்றது போன்று நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இருபத்தியேழு நட்சத்திரத்தையும் நவக்கோளின் சக்தியையும் பெறச் சொல்வது.

மகரிஷிகள் இதையெல்லாம் வடித்துக் கொண்டவர்கள். அதனால்
1.அந்த உணர்வின் சத்தை இதனுடன் கலந்து புது எண்ணங்களாக உருவாக்கி
2.அதனை நீங்கள் பருகும் நிலைக்குத் தான் இதைச் செய்வது.

எதை எண்ணினாலும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் இருப்பீர்கள் என்றால்
2.அது ஊழ்வினையாகப் பதிவாகி அதனின் செயலாக உங்கள் உணர்வுகள் இயங்கி
3.மெய்ஞானியின் உணர்வை ஒளியாக நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.

ஆகவே அடிக்கடி உங்கள் உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ணி மேலே சொன்ன மாதிரி நினைவுக்குக் கொண்டு வந்து அந்த ஆற்றல்களைச் செயல்படுத்த வேண்டும். எமது அருளாசிகள்.

Leave a Reply