அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் போதெல்லாம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.
1.ஈஸ்வரா… என்று சொல்லும் போதெல்லாம் உயிரை எண்ணி
2.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ…
3.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அதை ஏங்கிப் பெற வேண்டும்…
4.அப்படி ஏங்கினால் நல்ல முறையில் அது பதிவாகும்.

அகஸ்தியர் பிறந்த பின்… குழந்தைப் பருவத்தில் மல்லாந்து படுத்திருக்கும் போது விண்ணை நோக்கிப் பார்த்து எந்தெந்த உணர்வுகளை நுகர்ந்தாரோ… “அதை எல்லாம் பெற வேண்டும்…” என்று நீங்கள் ஏங்கித் தியானியுங்கள்.

அவர் கருவிலே இருக்கும் போது… தாய் தந்தையர்கள் எதை எதை எல்லாம் எண்ணிப் பெற்றனரோ அது அனைத்தும் அவருக்குள் வளர்ச்சி பெறுகிறது.

அவருடைய தாய் தந்தையர்கள் விஷமான அணுக்கள் தங்களை அணுகாதபடி பாதுகாத்துக் கொள்ள அவர்கள் உடலில் பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துப் பூசிக் கொண்டனர்.

1.அவர்கள் உடலிலிருந்து அந்த மணம் வெளிப்படும் போது
2.நுகர்ந்து தன் உணவுக்காகத் தேடி வரும் மற்ற உயிரினங்களோ கொசுவோ விஷ ஜெந்துக்களோ
3.அவை அனைத்தும் அவர்களை அணுகாது இருந்தது.

அவர்கள் சூரியனைக் கண் கூசாது உற்றுப் பார்க்கின்றனர். சூரியன் தன் முகப்பில் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்களைப் பிரித்து உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களாக வீசுகிறது.

பிரிக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகளை சூரியனின் வெப்ப காந்தங்கள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் உடலிலே விஷ முலாம்களைப் பூசியதால் அதைக் காண்கிறார்கள்.

1.அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் உடல்களில் பதிவானாலும்
2.கருவில் வளரும் அகஸ்தியனுக்குத் தாய் ரூபத்தில் அது பதிவாகிறது.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற அந்தச் சிசுவோ பிறந்த பின் தாய் கண்ட உணர்வுகள் அனைத்தையும் மல்லாந்து படுத்திருக்கப்படும் போது அந்தச் சூரியனின் இயக்கங்களைப் பார்க்கின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவதை மற்ற கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் போது சூரியன் அதை எல்லாம் தனக்குள் கவர்ந்து முகப்பில் அந்த விஷத்தைப் பிரித்துவிட்டுத் தனக்குள் ஒளிக்கதிராக மாற்றி அமைக்கிறது.
1.பிறந்த குழந்தையும் அதைப் பார்க்கின்றது… ஆனால் சொல்ல முடியவில்லை.
2.தனக்குள் கவர்ந்து கொண்ட இந்த உணர்வுகளைச் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில்…!

அதே சமயத்தில் பிறந்த குழந்தை தனியாக இருந்தாலும் கொசுக்களோ விஷ வண்டுகளோ இவன் அருகில் வருவதில்லை.
1.இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது அந்த வண்டுகளும் பூச்சிகளும் மயங்கி விழுகிறது.
2.விஷ ஜெந்துக்களோ மற்ற மிருகங்களோ அப்பால் விலகிச் சென்று விடுகிறது.
3.மயக்கத்திற்கு அஞ்சி எல்லாமே விலகி ஓடுகிறது.

குழந்தை உடலிலிருந்து நிகழ்த்தக் கூடிய இந்த நிலைகளை அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பார்த்தபின் அவனைக் கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…! என்றே எண்ணுகின்றனர்.

அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியே தான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன் (ஞானகுரு). இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகும்.
1.இந்த நினைவுடன் மீண்டும் தியானிக்கும் போது அவர் கண்டதை…
2.நம் பூமியில் பதிந்துள்ள அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நுகர்ந்து அதைப் பார்க்க முடியும்
3.அகஸ்தியனின் அருள் ஆற்றல்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும்.

Leave a Reply