நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் மின்கதிர்களின் பேராற்றல்கள்

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் மின்கதிர்களின் பேராற்றல்கள்

 

பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.

அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி… மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.

இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.

மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்… அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது…!”

பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் ஈசன் என்றும்… அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்… மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்… நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது…
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.

எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.

நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.

தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்… தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.

மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.

அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக… முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்… தவமிருப்போம்.

Leave a Reply