துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

 

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உயிர் வழி கவர்ந்து புருவ மத்தியில் ஏங்கி தியானியுங்கள்.

இப்பொழுது உயிரிலே அந்தச் சக்திகள் ஈர்க்கப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு மோதும் பொழுது அங்கே வெளிச்சம் வரும். இந்த உடலுக்குள் மகிழ்ச்சி வரும்.

1.உடலுக்குள் தீமை இருந்தால் எரிச்சல் வரும்… அது குறையும்… அந்தத் தீமை நீங்கும்.
2.எப்படி நெருப்பிலே ஒரு விஷத்தின் தன்மை பட்டால் அதிலிருந்து புகை வெளி வருகின்றதோ அதைப் போல
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் படும் பொழுது
4.தீமை என்ற உணர்வுகளைக் கருக்கி வெளி வரும்போது அந்த உணர்ச்சிகள் தெரியலாம்.
5.தீமைகள் அகலும்… நன்மைகளை உணர முடியும்… நன்மைகள் பெருகும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இவ்வாறு எண்ணி ஏங்கித் தியானியுங்கள். இது உங்களுக்கு ஒரு பயிற்சி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இத்தகைய வீரிய உணர்வுகள் பெருகும் பொழுது அது ஓரளவுக்கு நம் இரத்தத்தில் உள்ள தீய அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் குரோதம் பயம் ஆத்திரம் போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தால்
1.அது உமிழ் நீராக மாறி அதுவே இரத்தமாக மாறி
2.இரத்தத்தில் அந்தந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக – “கரு முட்டைகளாக…” விளைந்து விடுகின்றது.

ஏனென்றால் இப்படி அது எது விளைந்ததோ அதன் உணர்வை அது இயக்கும். தீமையான உணர்வாக அது இயக்கத் தொடங்கும்.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்தக் கருமுட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த… அண்ட நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு தட்டான் பூச்சி தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு எந்தப் பூ மீது அமர்ந்து தன் முட்டைகளை இடுகின்றதோ அந்தப் பூவைப் போல நிறம் கொண்ட ஒரு பட்டாம் பூச்சியாக வருகின்றது.

தட்டான் பூச்சி தான் பல வண்ணங்களில் பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. நெல் செடிகளில் தட்டான் பூச்சி முட்டை இட்டால் நெல் பூச்சிகளாக உருவாகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து
1.இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கருக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணையச் செய்தால்
2.அது நல்ல கரு முட்டையாக மாற்றி நல்ல அணுக்களாக நமக்குள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதன் வழியில் உடலிலே நோய் வராது தடுக்க முடியும். பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றிக் கொள்ள முடியும்.

Leave a Reply