உச்சியில் ஏற்றும் அண்ணாமலையார் தீபம்

உச்சியில் ஏற்றும் அண்ணாமலையார் தீபம்

 

என்னை வேதனப்படுத்தினான்… துன்பப்படுத்தினான்… என்று ஒரு புறம் நாம் மற்றவர்களை எண்ணினாலும் அன்புடன் பாசத்துடன் ஒருவருடன் பழக்கப்படும் பொழுது “அவர் நோயால் வேதனைப்படுகின்றார்…” என்றால் அந்த வேதனையை நாம் நுகர்ந்தால் வாலியாகி விடுகின்றது.

அந்தச் சமயத்தில் நமக்குள் இருள் தான் சூழ்கிறதே தவிர நல்லதை எண்ண முடியவில்லை. இந்த நஞ்சின் தன்மை நமக்குள் ஆன பின் உணர்வின் ஒளியின் (வெளிச்சத்தை) நிலையை நாம் காணும் நிலைகள் மறைக்கப்படுகின்றது.

1.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எதைப் பெற வேண்டும்…?
2.எந்த வழியில் நாம் வாழ வேண்டும்…?
3.எதன் வழிகளில் இந்த வாழ்க்கை வழி நடத்த வேண்டும்…? என்ற நிலையைத் தெளிவுபடுத்தும் நன்னாள் தான் திரு அண்ணாமலை தீபம்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று நம் உயிரின் தன்மை கொண்டு வேண்டும் போதெல்லாம் மலையின் உச்சியில்… அதாவது உடலின் உச்சியில்… உயிரான அண்ணாமலையிடம் தான் வேண்டுகின்றோம். அவன் புருவ மத்தியில் தான் அமைந்துள்ளான்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றும் நாம் பார்ப்போர் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்றும்
1.நம் நினைவாற்றலை இங்கே கொடுக்கப்படும் போது
2.நமக்குள் பகைமையூட்டும் உணர்வின் தன்மைகளை அது மறைத்து விடுகின்றது… அதை அடக்கிவிடுகிறது.
3.இப்படித்தான் நமக்குள் ஒளியின் சுடராக… வளர்க்கும் ஜோதியாக… நாம் தீபமாக முடியும்.

ஆனால் அங்கே (உச்சியிலே) வெறும் ஜோதியைப் பார்த்து அருள் ஒளியாக நாம் மாற முடியாது…!

ஆகவே அனைவரது குடும்பங்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர் செயல்கள் ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் எண்ணம் ஜொலிக்க வேண்டும்… அவர்கள் சொல்லில் இனிமை பெற வேண்டும்… என்று
1.அனைவருக்காகவும் நாம் இப்படி எண்ணும் போது
2.;அனைவரின் உணர்வுகளையும் நமக்குள் ஒன்றாக ஒளியாக இணைத்துக் கொள்கின்றோம்.

சாதாரணமாக காரம் உப்பு கசப்பு துவர்ப்பு இவை எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சுவைகள் தான் ஆனால் அதே சமயத்தில் சாதமோ ஒன்றாக வெண்மையாக இருக்கின்றது.

மாறுபட்ட சுவை கொண்ட பலசரக்குகளை ஒன்றாக இணைத்து அவைகளைச் சுவையின் உணர்ச்சியாகத் தூண்டி சப்… என்று இருக்கும் பொருளுடன் கலக்கப்படும் போது அது உணர்ச்சியின் தன்மை கொண்டு நாம் உணவாக ஏற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான்…
1.நம் வாழ்க்கையில் பிறருடைய தீமையின் உணர்வுகள் நமக்குள் வந்தாலும்
2.அந்த அருள் ஒளியின் சுடரைக் கொண்டு பகைமை உணர்வை மாற்றி
3.நமக்குள் சுவை கொண்ட உணர்வாக மாற்றியமைத்தல் வேண்டும்.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உணர்வின் தன்மை நம் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது… உடலில் உள்ள முந்திய நிலைகள் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டும் அந்த அணுக்களை… நமக்குள் நோயாக மாற்றி நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கும் அத்தகைய நிலைகளிலிருந்து மாற்றிட முடியும். அத்தகைய நன்னாள் தான் கார்த்திகை தீபம்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் கலந்த நிலையில் அது பகைமை ஊட்டும் உணர்வின் அணுக்களாக விளைந்ததனால் தான் நமக்கும் நோய் வருகிறது.

இதை போன்று நீங்கள் ஒவ்வொருவரும் நாம் பார்த்த அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணங்களைச் சொன்னால் போதும்…!

1.அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்… அவர்கள் செயலும் ஜொலிக்க வேண்டும்…
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
3.எங்கள் செயல் ஜொலிக்க வேண்டும் சொல் ஜொலிக்க வேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்போர் ஜொலிக்க வேண்டும் என்று இந்த உணர்வினைக் கலந்து பாருங்கள்..

வாலி என்ற வேதனைப்படுத்தும் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் தான் உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களை அழிக்கின்றது… நல்ல செயலையும் ஓடுக்கின்றது.

ஆனால் மேலே சொன்னபடி அனைவரது வாழ்க்கையிலும் ஜொலிக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அந்த வாலியை நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை.

அருள் ஒளியின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அனைவரும் ஜொலிப்பின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அதே சமயத்தில் அவர்கள் உடலிலிருந்து வெளிப்படும் இதே உணர்வுகள் அவர்களும் இதைப் போல அருள் ஒளியின் சுடரை எண்ணும் போது நமக்குள் அறியாது வரும் நோயைத் துரித நிலைகள் கொண்டு மாற்றும்.

1.ஏனென்றால் தீமைகளை நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் எண்ணும் பொழுது எல்லாம் சரியாக இருக்கும்…!

Leave a Reply