நல்லது நடக்கவில்லை என்று எண்ணி “நல்லதைப் பெறும் முயற்சியை விட்டு விடக்கூடாது” – ஈஸ்வரபட்டர்

நல்லது நடக்கவில்லை என்று எண்ணி “நல்லதைப் பெறும் முயற்சியை விட்டு விடக்கூடாது” – ஈஸ்வரபட்டர்

 

வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதையும் பெற வேண்டி ஆசைப்பட்டாலும் (ஆர்வம், விருப்பம்) நம் மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில் நல்லதைப் பெறும் உத்வேகம் எப்படி இருக்க வேண்டும்…?

அதைத் தான் “முயற்சி செய்வது…” என்று சொல்வது…! இருந்தாலும் அந்த முயற்சி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

அதாவது
1.செயல்படுத்த வேண்டியது எந்தப் பொருளோ அதிலேயே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளையே வீரியமாக வளர்க்கவும்
3.அப்படிச் செயல்படுத்தும் முறை எதுவோ அதுவே “முயற்சி…!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக
1.மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது
2.அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம்
3.தன்னுள் விழும் நிலையை அந்தக் கருத்தை அறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின்… வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்குக் கொண்டு வருகிறது.

இருந்தாலும்… சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம்… “ஊக்கம்” என்பது போல்
2.முயற்சி இருந்தால் நல்ல முத்தாக விளைவிக்கும்…
2.முத்தாக விளையவில்லை என்றால் என்ன செய்வது…? என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை…!
(இது மிகவும் முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) இந்த உலக… உடல் வாழ்க்கை மோதல்கள்… நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று… வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து தான்…!)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்கு… “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி “விதி வழி செல்லும்…” செயல் வாழ்க்கையில் அதிலே காட்டிலே பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

அதை எல்லாம் நாம் ஒரு பொருட்டாக எண்ணவே மாட்டோம்…!

Leave a Reply