எலும்புக்கூடு(ம்) ஔஷதம் – ஈஸ்வரபட்டர்

எலும்புக்கூடு(ம்) ஔஷதம் – ஈஸ்வரபட்டர்

 

பெண்கள் அணியும் கால் சிலம்பு ஆடவர் கற்பு நெறி காக்கும் கவசம். பெண்கள் பூப்படையும் பிராயத்தில் கால் சிலம்பை அணிவித்துப் பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு வளையமிட்ட செயல் எல்லாம் பண்டைய காலம் முதல் வழி வந்த நற் குண நிலைகள்.

ஆண்களின் கற்புக்குப் பாதுகாப்பு அரண் அது தான்..!
1.பூப்படைந்த பெண்மணிகள் வீதி வழி செல்லும் பொழுது – எதிர்படும் வீரமகன்
2.சிலம்பொலியைக் கேட்டதுமே விலகிடுவான்
3.அங்கே கற்பு நெறி காக்கின்றது.

ஆனால் வீரத்தில் விவேகத்தைக் கலந்து வாழ்ந்த மக்கள் மனம் இன்று அனைத்துமே மாறிவிட்டது.

திருமணம் முடிவுற்று நல்லறத்தின் நல்வழியில் கால் சிலம்பு கழன்றுவிடும். பூப்படைந்த பெண்கள் அணியும் நகை கணவனால் காவலனாகக் காக்கும் நிலை வந்துவிட்டால் விலக்கிடுவான் சிலம்பணிய.

கண்ணகின் வாழ்க்கையில் சிலம்பை அணிவித்தான் மாசாத்துவான். பெண்களுக்கு அணிவிப்பதோ பொன்.. வெள்ளி நகை தானே. காலத்தின் செயல் இன்று போல் இருந்திடுமோ…? என்றெல்லாம் எண்ணிட்ட மாசாத்துவான் மாணிக்கமாக அளித்துவிட்டான்.

இல்லறத்தில் இரு மனங்கள் கலக்கும் வைபோகமாகக் கோவலனும் கண்ணகியும் நறுமணங்கள் கலந்தது போல் வாழ்வாங்கு அங்கே வாழ்ந்து சிறப்பித்தனர்.

ஆனால் அதன் பின் ஊர் விட்டு ஊர் மாறிப் பெயர் மாற்றிச் செல்லும் பொழுது “தலை போகும்…!” என்றெல்லாம் மெய்யறிவு பெற்றிருந்தால் கோவலன் விதி வழி செல்வானா…?

உடல் வேறு தலை வேறு ஆன நிலையைக் கண்டதுமே எலும்புக்கூடு மூலிகை அகப்பட்டால் எலும்பின் குணம் கூடிவிடுமே. கண்ணகிதான் அதைப் பெற்றாளா..?

1.கண்ணகியின் கற்பு நிலை கொதித்தெழுந்த செயற்திறத்தால் எலும்புக்கூடு கிடைத்ததா…?
2.சூட்சமப் பொருள் பல உண்டு…!

கண்ணகியின் சாபமுண்டு எலும்புக்கூட்டு மூலிகைக்கு…! எலும்புக்கூட்டின் சாறுபட்டவுடன் அறுபட்ட உடல் கூடிவிடும். அந்த மூலிகை கிடைக்குமா…?

பாறை மேல் படர்ந்து வரும். நீரில்லாமல் உயிர் வாழும். தண்டு அதன் நிறம் சிவந்து கணுவிலோர் இலையும் பசுமை காட்டும். அந்த எலும்புக்கூடு (ஔஷதங்கள்) கிடைத்து விட்டால் எண்ணிடுவார்கள் பணம் காசை…!
1.எலும்புக்கூடு எதற்கு என்ற சூட்சமம் பின் சொல்கிறேன். (ஈஸ்வரபட்டர்)
2.எலும்புக்கூடு கிடைக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொள்ளுங்கள்…!

Leave a Reply