ஆலயத்திற்குள் நுழைந்தாலே உயர்ந்த பண்புகளைப் பெறும் வண்ணம் தான் ஆலயங்களை நம் முன்னோர் அமைத்துள்ளனர்

ஆலயத்திற்குள் நுழைந்தாலே உயர்ந்த பண்புகளைப் பெறும் வண்ணம் தான் ஆலயங்களை நம் முன்னோர் அமைத்துள்ளனர்

 

மனிதனாக உருப்பெற்ற நிலையில் நாம் எத்தகைய தீமைகளையும் தடுத்து நிறுத்தும் சக்தி பெற்றவர்கள் என்பதை அக்கால ஞானிகள் காட்டிய அருள் வழியில்உணர்தல் வேண்டும்.

ஏனென்றால்… இந்த உயிர் இந்த உடலை வளர்த்த பின்
1.பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்டுத் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை வளர்த்து
2.அதற்கொப்ப உறுப்புகள் உருவாகி… உணர்வுகள் உருவாகி… உணர்ச்சிகள் உருவாகி… எண்ணங்கள் உருவாகி…
3.அதன் வழி நாம் நம்மைக் காக்கும் உணர்வுகள் ஆற்றல் பெற்றது.

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான அறிவால் நமது பிரபஞ்சத்தில் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

முந்தைய நிலைகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இயற்கையின் உணர்வை நுகர்ந்து அதன் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று உணர்ந்தவர்கள். அவர்கள் தான் பெருக்கல் வாய்ப்பாடு கழித்தல் வாய்ப்பாடு எல்லாம் கொண்டு வந்தனர்.
1.அந்தப் பதிவால்… தன் நினைவு கொண்டு
2.ஒரு நொடிக்குள் கூட கணக்குப் பார்க்கும் திறன் அவர்களிடம் இருந்தது.

ஆனால் இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை கொண்டு ஒன்றை மாற்றி ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு நொடிக்குள் அதை அறிந்திடும் அறிவாகக் கம்ப்யூட்டர் என்றும் கால்குலேட்டர் என்றும் வருகின்றது.

முந்தைய கணக்கின் நிலைகளை எடுத்துக் கொண்டால் கால்… மாகாணி என்றெல்லாம் கொடுத்தார்கள் அத்தகைய மெய் ஞானிகள்
1.ஒரு கோயிலின் தன்மையையோ அல்லது ஒரு கோபுரத்தின் தன்மையையோ ஒரு கட்டிடத்தின் தன்மையோ அமைக்க வேண்டும் என்றால்
2.துரித நிலை கொண்டு அந்தக் கோபுர கட்டிட அமைப்பையும் (PLAN) அதன் உண்மையை அறிந்துணர்ந்து
3.அவருடைய மெய் ஞான அறிவு கொண்டு அழகாக வடிவமைத்து நிர்மாணித்தனர்.

வான இயல் சாஸ்திரத்தை உணர்ந்து சூரியனும் மற்ற கோள்களும் மற்ற மண்டலங்களும் எவ்வாறு வானிலே இயக்குகிறது…? என்றும் அதிலே சில கோள்களின் தீமைகள் இங்கே இவர்கள் அமைத்த அந்த ஆலயத்தில் புகாத வண்ணம் அமைத்து… உயர்ந்த குணங்களுக்குத் தக்க தெய்வ ஆலயங்களை அமைத்தனர்.

அந்த ஆலயத்தில்… நல்ல உணர்வுகளை எடுக்கும் நல்ல குணங்களின் தன்மையை தெய்வச் சிலைகளை வைத்து உருவகப்படுத்தினார்கள்
1.தீமையை நீக்கும் உணர்வு கொண்டு.. அந்த எண்ணத்துடன் நாம் அங்கே சென்றோம் என்றால்
2.தீமைகளை நுகராது அந்தத் தெய்வீக உணர்வை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

அதன் மூலம் பிறிதொரு கோளின் தன்மையோ மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்களின் உணர்வுகளையோ கவராத வண்ணம் அந்தத் திசையை நோக்கி ஆலய அமைப்பை (கோபுரம்) ஏற்படுத்தினார்கள். சூரியனின் ஒளிக்கதிர்கள் இதன் மேல் படும்படி செய்து (சந்துகள் விட்டிருப்பார்கள்) உயர்ந்த உணர்வின் தன்மையை நாம் எப்படிப் பெற வேண்டும் என்றும் காட்டினார்கள்.

1.27 நட்சத்திரங்களின் உணர்வையும் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு
2.அந்த ராசியின் திசை கொண்டு மற்ற மூன்றின் தன்மை எந்தெந்தக் கோள்கள் சேர்கின்றதோ
3.அதன் வழி ஒரு குணத்தின் தன்மை – இணைந்து வாழும் தன்மையாக அந்த அமைப்பின் தன்மை கொண்டு தான்
4.அன்று மாகாணி என்று வைத்து அதிலே கூட்டல் கழித்தல் என்று கணக்கின் நிலைகள் கொண்டு
5.தெளிவாக எடுத்தனர் கணக்கிட்டனர்… அதன் வழி அமைத்தனர்.

அவர்கள் ஆலயங்களில் உணர்த்தப்பட்ட உயர்ந்த சக்திகளை நாம் நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிட முடியும்.

ஒவ்வொரு ஆலயங்களுக்கும் இந்த எண்ணத்தின் அடிப்படையில் நீங்கள் சென்றால் அந்த ஆலய அமைப்பில் சித்தரிக்கப்படுள்ள தெய்வ குணங்களை வளர்த்துப் பகைமை உணர்வுகளை அகற்ற முடியும்.

1.மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில்
2.மகிழ்ந்து வாழும் சக்திகளை அதன் மூலம் ஒவ்வொருவரும் பெற வேண்டும் பெற முடியும் என்ற
3.மெய் வழிகளை உணர்த்தினார்கள் அக்கால மெய் ஞானிகள்…!

Leave a Reply