தீமைகளை நேர்முகமாக எதிர்த்து மாற்ற முடியாது… மறைந்திருந்து தான் மாற்ற வேண்டும்

தீமைகளை நேர்முகமாக எதிர்த்து மாற்ற முடியாது… மறைந்திருந்து தான் மாற்ற வேண்டும்

 

1.இந்த உலகில் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருந்தாலும்
2.அதன் வழி அவர்கள் உணர்வை நுகர்ந்தறிந்தாலும்
3.நுகர்ந்த உணர்வை நம் உயிர் அணுவாக மாற்றி நம் உடலுக்குள் இணைத்து விடுகின்றது.
4.அதிலே தீங்கு விளைவிக்கும் நிலையாக இருந்தால்
5.அந்தத் தீமை செய்யும் அணுக்களிலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டும்.

அதைத் தான் வாலி என்று சொல்வது.

இப்படி அனைவரின் உணர்வுகளும் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாது விளையும் அந்த அணுக்களை அருள் மகரிஷிகளின் உணர்வக் கொண்டு அந்த இருளை அகற்றிடும் சக்தியாக அந்த வாலியை வென்றிடும் தன்மை பெற வேண்டும்.

ஏனென்றால் “ஒரு நோயாளியின் உணர்வை” மீண்டும் மீண்டும் பதிவாக்கிக் கொண்டால்… அல்லது “ஒருவன் எனக்குத் தீமை செய்தான்…” என்று அவனை அடிக்கடி நினைவு கொண்டால் அது வாலியாகின்றது…! நம் நல்ல உணர்வின் வலுவைச் சரி பகுதி அது எடுத்துக் கொள்கிறது. அதனால் வேதனப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகின்றோம்.

இந்த வகையில் பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வு வருகின்றது. தீமையோ கஷ்டமோ தொழிலில் நஷ்டமோ உடல் நோயோ நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் இப்படி எத்தனையோ வருகிறது.

இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே நம் நினைவினை வானை நோக்கிச் செலுத்தி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… இருளை அகற்றிய அருள் ஒளியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
1.வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை…
2.மறைந்திருந்தே வாலியைத் தாக்கினான் என்று இராமாயணத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் அருள் மகரிஷிகளின் ஒளியை நமக்குள் சேர்த்து அந்தத் தீமை செய்யும் உணர்வை… அந்த வாலியை நாம் வலுவிழக்கச் செய்ய வேண்டும்.

இராமன் என்றால் எண்ணம். நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தச் சுவையின் உணர்வு எதுவோ உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலியாக பல பல எண்ணங்கள் நமக்குள் வருவதும்… அதற்குத்தக்க இந்த உணர்ச்சிகள் நம் உடலை இயக்குவதும்… எந்தெந்த உணர்வை எடுக்கின்றோமோ அவை ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது நல்ல குணங்களை மாற்றுகின்றது.

சாயப் பட்டறைகளை எடுத்துக் கொண்டால் பல கலவைகளை (நிறங்கள்) உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்திகளை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அந்த நிறமாக மாறுகின்றது.

சமையல் செய்யும் போது சுவையாகச் செய்ய வேண்டும் என்றால் அதிலே பல சரக்குகளைப் போடுகின்றோம். அது ஒவ்வொன்றும் பல பல சுவை கொண்டது… தனியாகச் சாப்பிட்டால் பல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. இருந்தாலும் அந்த உணர்வுகளை எல்லாம் சமப்படுத்தித் தான் சுவை மிக்கதாக உருமாற்றுகின்றோம்.

இதைப் போல் தான்…
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அதனதன் எண்ணத்தை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி இருந்தாலும்
3.அருள் ஒளிச் சுடர் கொண்ட அருள் ஞானத்தின் நிலையை நமக்குள் எடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்து விட்டால்
5.நமக்குள் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் பலவீனம் அடைகின்றது.

அப்பொழுது அது வாலி என்ற நிலைகளை வீழ்த்துகின்றது. இதைத் தான் இராமன் மறைந்திருந்து வாலியை வீழ்த்தினான் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இராமாயணக் காவியங்களைப் பார்க்கப்படும் போது இராமன் கடவுள் என்றால்… அவன் ஏன் வாலியை மறைந்திருந்து தாக்க வேண்டும்…? என்று சில படித்த வர்க்கத்தினர் வாதம் செய்கிறார்கள்.

ஏனென்றால் தீமை செய்யும் உணர்வை நேரடியாகப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சிகள் தான் நமக்குள் தூண்டப்படுகின்றது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்து விடுகின்றது. அதனின் செயலாக்கங்களைக் குறைத்துவிடுகின்றது.

ஆகவே
1.மனிதன் வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…?
2.எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…?
3.மனிதன் என்ற நிலையில் எந்த வலிமை மனிதனை மாற்றுகின்றது…? என்பதை எல்லாம்
4.காவியத் தொகுப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியுள்ளனர் ஞானியர்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் பார்ப்போர் அனைவரும் என்னைப் பார்ப்போர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்தப் பேரானந்த நிலை பெற வேண்டும் என்ற உணர்வைத் துருவ தியானத்தில் அனுதினமும் எடுக்க வேண்டும். எடுத்தால் பிறரின் உணர்வுகள் நமக்குள் வாலியாக இயக்காது…!

Leave a Reply