தெய்வத்தின் ஆணை நமக்குள் எப்படி ஒலிக்கும்…?

தெய்வத்தின் ஆணை நமக்குள் எப்படி ஒலிக்கும்…?

 

இந்த மனித வாழ்க்கையில்…
1.அன்றாடம் நாம் எத்தனை பேரைச் சந்திக்கின்றோமோ
2.எத்தனை பேர் துயரங்களைக் கேட்டோமோ
3.அவர்களுக்கெல்லாம் நாம் உதவி செய்தாலும் அந்த உணர்வுகள் (துயரம்) எல்லாம் நமக்குள் இயக்கமாகிறது.
4.நமக்குள்ளும் அந்தத் தீமையின் உணர்வுகளாக விளைந்து விடுகிறது.

ஆகவே நம் உடலான ஆலயத்திற்குள் எதைச் சேர்க்க வேண்டும்…?

எத்தனையோ உணர்வுகளை நாம் நுகர்ந்தோம். அதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெறவேண்டும்
2.அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். என்று
4.இந்த உணர்வுகளை உட்செலுத்தி வலுவாக்கிக் கொள்ள வேண்டும்,

பின்… எங்கள் வாழ்க்கையில் எத்தனை பேரைச் சந்தித்தோமோ பார்த்தோமோ… அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெறவேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் வளம் பெறவேண்டும்… அவர்கள் வாழ்க்கை எல்லாம் வளம் பெற வேண்டும்… அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்று எண்ணி எல்லோரையும் (எல்லா உணர்வுகளையும்) ஒன்று சேர்க்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றாக ஆன பின் என்ன ஆகிறது…?

1.ஒரு வேம்பின் உணர்வைக் கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் எப்படி ஓடுகின்றதோ
2.ஒரு விஷமான செடியின் மணத்தின் தன்மை கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் சுழற்சி ஆகின்றதோ
3.இதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்கும் பொழுது
4.தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவிலிருந்து அகன்று ஓடிவிடும்.

ஒவ்வொருவரும் இதே போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டு
1.அனைவருக்கும் அந்த நற்பயன்கள் கிடைக்க வேண்டும்
2.அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3.அனைவரும் அரவணைத்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.அனைவரும் பேரன்பு கொண்டு பெரு வாழ்வு வாழ வேண்டும்
5.அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று எண்ணி இந்த மூச்சலைகளை வெளிப்படுத்த வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு இப்படி வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள் எல்லாம் அலைகளாக மாறினால் நமக்கு முன் இருக்கும் மற்ற நஞ்சான தீமை செய்யும் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளிவிடும்… பரமாத்மா (காற்று மண்டலம்) தூயமையாகும்..!

இந்தப் பூமியின் நிலைகளை மாற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் ஞானிகள் இதைச் செய்தார்கள்.

ஆகவே தீமையை நீக்கிய உணர்வை இந்த முறைப்படி வினைக்கு நாயகனாக ஆக்கப்படும் பொழுது இது நமக்குள் இணைந்து வலிமை மிக்க சக்தியாக மாறுகின்றது.

இதே உணர்வை வைத்து…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று உயிரிலே மோதச் செய்தால்
2.அது எப்படித் தீமைகளை நீக்கியதோ அந்த உணர்வுகள் தெய்வ ஆணை…! தீமையை நீக்கிய அந்த எண்ணங்கள் நமக்குள் வருகிறது
3.அந்த ஆணைப்படி செய்தால் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி.

நம் ஞானிகள் மிகவும் அற்புதமாக சாதாரண மனிதனும் புரிந்து தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்ற இவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் அன்றாடம் செய்கின்றோமா…? இல்லை…! ஞானிகள் சொன்ன முறைகளுக்கு மாறான நிலைகளைத்தான் நம் வாழ்க்கையில் அமைத்துக் கொள்கிறோம்.

Leave a Reply