காற்றே தான் கடவுள்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காற்றே தான் கடவுள்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காற்றேதான் கடவுள்…! காற்றையே தெய்வமாக்கி நாம் எடுக்கும் சுவாசத்தில் கலக்கவிடுங்கள் என்றெல்லாம் இப்பாடநிலை உணர்த்திய நாள் தொட்டே செப்பி வருகின்றோம்.

ஆனால் மனித ஆத்மாக்களுக்கு…
1.மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதையும் சர்க்கஸில் ஆடும் கோமாளியின் லீலையில் மகிழவும்தான் பேராவல் உள்ளது.
2.மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை மந்திரக்காரன் செய்கிறானே…
3.அதில் உள்ள உண்மை என்ன…? என்று அறியும் நிலை கொண்ட எண்ணமுடையோர் மிகச் சிலர் தான்.

இவ்வுலகமே வேடிக்கையான உலகம் தான்.

உலகம் என்பது இவ்வுலகின் ஜீவ ஆத்மாக்கள்தான்.
1.இக்காற்றைச் சுவாசமாய் ஈர்க்கும் ஒவ்வோர் ஆத்மாவுக்குமே
2.இக்காற்று எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் சுவாசத்தினாலேயே அங்குள்ள நிலையினை உணர்த்திட முடியும்.

சுழலும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் அம் மண்டலத்தின் உருவ அளவைக் கொண்டு அம்மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் காற்று மண்டலம் (அடர்ந்த காற்று மண்டலம்) அம்மண்டலத்தின் அளவைப் பொறுத்து உள்ளது.

நட்சத்திர மண்டலங்களுக்கும் அதன் சுழற்சியைக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள அதன் சுவாச நிலை கொண்ட காற்று மண்டலம் உண்டு. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் அததற்குகந்த அமிலக் காற்று மண்டலமுண்டு.

நம் பூமியிலிருந்து பத்து மைல் சுற்றளவில் கொஞ்சம் கூடவும் குறையவும் நம் பூமிக்குகந்த காற்று மண்டலமுண்டு. அனைத்திற்கும் பொதுவான “சூனிய மண்டலம்” என்று உணர்த்துகிறார்களே அங்கும் உண்டு காற்று. அதன் தன்மை வேறு…! மண்டலங்கள் வெளிப்படுத்தும் காற்று மண்டலத்தின் தன்மை வேறு.

இப்பூமியில் பல இயற்கைத் தாதுப் பொருட்கள் தானாகவே வளர்கின்றன. இத்தாதுப் பொருள் வளர அதற்கு மூலப் பொருளாய் இவ் இரசமணி ஒன்று வளர்ந்தால்தான் பல தாதுப் பொருள்கள் வளர முடியும்.

இந்த இரசமணியின் சக்தி நிலை மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் சிங்கத்திற்கும் நாய் நரி பூனை இவற்றிற்கும் வாழை மரத்திற்கும் இந்நிலை அதிகம்.
1.நம் முன்னோர்கள் வாழை இலையில் சூடான உணவைப் படைத்து
2.நம்மை உணவாக உட்கொள்ளச் செய்ததன் இரகசியம் இது தான்…!

இம் மனித ஆத்மாவினால் இயற்கையில் வளரும் தாதுப்பொருளையே செயற்கையில் இவ் இரசமணியின் சேர்க்கையினால் சில குறிப்பிட்ட தாவரங்களின் இலையின் சாறு எடுத்து இவ் இரசமணியின் கலவையுடன் இவ் எண்ணத்தை அவ்வமில சக்தியுடன் ஜெபப்படுத்தினால் எவ்வுலோகத்தையும் பூமியில் இருந்து எடுக்காமலும் பணம் தந்து வாங்காமலும் செய்விக்க முடியும்.

அந்தத் தாவரங்களின் நாமம் மறைக்கப்பட்டதின் நிலை மனித ஆத்மாக்கள் இப்பேராசையில் சிக்கிடாமல் இருப்பதற்கே.

தன் ஆத்மாவையே… தன் ஆத்மாவுடன் உடலுடன் கலந்துள்ள இரசமணியின் ஈர்ப்பினால் நம் எண்ணம் தங்கமாகவும் நம் செயல் வைரமாகவும் ஆக்கிடலாம்.

1.நம்முள்ளேயே அனைத்துப் புதையலும் உள்ளன…
2.அழியாச் செல்வப் புதையல் இச்சக்தியை உணர்ந்து
3.நம் சக்தியை வளரவிடும் சத்தியமாக வாழ்ந்திடுங்களப்பா…!

Leave a Reply