வெப்பம் காந்தம் விஷம் – இராமா சீதா இலட்சுமணா

வெப்பம் காந்தம் விஷம் – இராமா சீதா இலட்சுமணா

 

சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் விஷமும் மும்மலம் என்று சொல்வார்கள். அதிலே… தான் நுகர்ந்த மணம் என்ற நிலை இருந்தாலும் அந்த சுவை – சீதா ஒரு திடப்பொருளாக மாறுகின்றது.

திடப்பொருளாக மாறும்பொழுது அதனுடைய மணம் ஞானம் சரஸ்வதி என்றும் இதிலே இணைந்த சக்தியை சீதா என்றும் அதன் உணர்வின் தன்மை இந்த மூன்று நிலைகள்
1.வெப்பம் தனக்குள் உருவாக்குவதும்
2.காந்தம் தனக்குள் அரவணைப்பதும்
3.விஷம் இயக்கும் தன்மை வரப்படும்பொழுது
4.நாராயணன் (சூரியன்) லட்சுமி நாராயணனாக அங்கு உருவாகிறது.

சூரியன் விஷத்தின் தன்மையைப் பிரித்த பின் இங்கே அந்தக் காந்தம் இதை மீண்டும் கவர்ந்து கொள்ளும் போது லட்சுமணா. அதே சமயத்தில் சூரியன் மோதி இந்த உணர்வின் தன்மை வெப்பமாகும்போது நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு ஆகின்றான்.

ஆனால் அதனுடன் இணைந்த நிலையோ லட்சுமி ஆகின்றது. ஆக விஷ்ணு லட்சுமி இரண்டும் இணை சேர்க்கப்படும் பொழுது இதனால் பிரிக்கப்பட்ட விஷத்தின் தன்மை தனக்குள் இருக்கப்படும்போது அந்த விஷத்தின் தன்மை தான் லட்சுமணா.

1.ஆக… இந்த வெப்பம் அந்த இராமனாக எண்ணத்தின் நிலை உருவாக்கும் நிலைகள் பெற்றது.
2.காந்தம் தனக்குள் அந்த மணத்தை சீதா அந்தச் சுவையின் தன்மை தனக்குள் இணைத்து மற்றதை வளர்க்கும் தன்மை கொண்டது
3.விஷம் இலட்சுமணா இந்த உணர்ச்சியைத் தூண்டும் (மணத்தை) வல்லமை பெற்றது.

இப்படி மூன்று நிலைகள் கொண்டது.

நுகர்ந்த மணம் ஞானம் என்றாலும் சீதா என்றாலும் நான்காவது நிலை அடைகின்றது. இதனுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது இயக்கச் சக்தியாக மாறும் பொழுது காயத்ரி.. முழுமை பெறுகின்றது.

அதாவது இந்த அணு எதனைக் கவர்ந்ததோ அதன் வலுவாக அது மற்றொன்றுடன் புகப்படும்போது அதனின் செயலாக்கமாக மாற்றும் ஆகவே புலனறிவு ஐந்து என்ற நிலை.

சூரியன் (ஆதிசேஷன்) விஷத்தின் துணை கொண்டு விஷத்தின் உருவால் உருவாக்கப்பட்ட நிலைகள் ஐந்து புலனறிவாக ஐந்து நிலைகளில் இது உருவாக்குகின்றது. இதே விஷத்தின் இயக்க தொடராக…!

இந்த நிலையைக் காட்டுவதற்குத் தான் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டுகின்றார்கள்.

இதனின்று வெளிவந்த உயிரின் தன்மைகள் பல விஷத்தன்மை கொண்ட தாக்குதலில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உயிரின் துடிப்பின் நிலை வரப்படும்போது “உயிரணுவாக மாறுகின்றது…”

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை என்பது ஆண்பாலை உருவாக்கும் தன்மை பெற்றது. ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால் ஒன்றுடன் இணைந்து ஒன்றை வளர்க்கும் திறன் பெற்றது

இயக்கச்சக்தி ஒன்றுடன் ஒன்று மோதும்போது… அதாவது உராயப்படும்போது பூமி சுழற்சியாகி அதனால் வெப்பமாவதும் ஒரு பக்கம் ஈர்த்து தனக்குள் ஒன்றை கருவாக உருவாக்கிறது அல்லவா…!

அதைப் போன்று தான் கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் இரண்டு மோதலும் ஏற்படும்போது இந்த மோதலினால் துடிப்பின் நிலை வருவதும் அந்தத் துடிப்பால் தனக்குள் ஈர்க்கும் சக்தியும் பெறுகின்றது

அத்தகைய ஈர்க்கும் சக்தி பெறுவதற்கு…
1.கதிரியக்கப் பொறிகளை உருவாக்கும் வியாழன் கோளால் உருவான நிலைகள் இதனைத் தாக்கப்படும்பொழுது
2.துடிப்பின் நிலைகளாகி மும்மண்டலங்களாக மாறுகின்றது.

ஒன்று விஷம்… ஒன்று ரேவதி நட்சத்திரம் வளரும் பருவம் பெற்றது… மற்றொன்று உறையும் தன்மை பெற்றது. இந்த மூன்று நிலைகள் பெற்று துடிக்கப்படும்போதுதான் இயக்கமாகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு எடுத்தாலும் இன்று பெரும் பெரும் சக்திகளை இயக்கப்பட வேண்டுமென்றால்
1.மூன்று நிலைகள் கொண்ட மூன்று வயர்களை வைத்துத்தான் இயக்குவார்கள்
2.இதைச் சக்தி வாய்ந்த அழுத்தம் (THREE PHASE CURRENT) என்று கூறுவார்கள்.

அதைப் போலத்தான் இந்த உணர்வின் சத்து மூன்றும் சக்தி வாய்ந்த அழுத்தமாக எதனையும் தனக்குள் ஜீரணித்து அணுவின் தன்மை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

துடிப்பால் ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் தன்னுடன் இணைத்து உணர்வின் தன்மை தனக்குள் ஒளிக்கதிராக மாற்றும் திறன் பெறுகின்றது.

ஏனென்றால் பௌதீக நிலையில் உங்களுக்குள் விளக்கத்தைக் கொடுத்து உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

Leave a Reply