ஆண்டவன் என்பது ஒரு தனித்த சக்தியல்ல… ஒன்றுடன் இன்று கலந்தால் தான் அப்படிப்பட்ட சக்தியாக மாறும்

ஆண்டவன் என்பது ஒரு தனித்த சக்தியல்ல… ஒன்றுடன் இன்று கலந்தால் தான் அப்படிப்பட்ட சக்தியாக மாறும்

 

இந்தப் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியில்… அமில சக்தியின் அமில சக்தி மட்டுமல்ல “ஜீவ சக்தியினால் உராயும் நிலை கொண்டு தான்…” ஒவ்வொரு கோளங்களும் சுழல்கின்றது

1.ஒவ்வொரு கோளமும் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலை
2.இந்தப் பால்வெளி மண்டலத்துடன் “மோதுண்டவுடன் தான்…” ஒலி பிறகின்றது
3.அந்த “ஒலியினால் தான்” ஒவ்வொரு மண்டலமும் சுழல்கிறது.

பால்வெளி மண்டலமாக ஜீவனுடன் உள்ள வான மண்டலதையே நாம் பரந்த வெளியாகக் காண்கின்றோம். இந்தப் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே அனைத்து மண்டலங்களுக்குமே “உயிர் நாடி…!”

இந்தப் பூமியிலிருந்து நாம் காணும் பால்வெளி மண்டலமான இந்த வான் மண்டலத்தில் படர்ந்த மேகக் கூட்டங்கள் ஓடுவதைப் போல் காண்கின்றோம்.

அந்த மேகக் கூட்டங்கள் மட்டும் ஓடவில்லை நாமும் தான் ஓடுகின்றோம். அனைத்து மண்டலங்களும் தான் ஒரு நிலையில் நிலைத்து நில்லாமல் ஓடிக் கொண்டே உள்ளது.

இந்தப் பூமி சுழலும் வேகத்தைப் பொறுத்து இந்தப் பூமியில் நடக்கும் சீதோஷ்ண நிலைகள் உள்ளன. இந்தப் பூமியிலேயே பல பாகங்களில் பல நிலை கொண்ட சீதோஷ்ண நிலை கலந்துள்ளது.

இந்தப் பூமியிலிருந்து மற்ற மண்டலங்களில் உள்ள நிலை அறிய நம் சக்தியைச் செயலாக்குகின்றோம். ஆனால் இந்தப் பூமியிலேயே பூமத்திய ரேகையான அந்த மையப் பகுதியில் உள்ள நிலை என்ன…?

பூமி சுழலும் 24 மணி நேரக் கணக்கு விகித நிலைப்படி ஒரு நாளையும்… இரவு பகல் நிலை ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நிலையை எல்லாம்… இந்தப் பூமி சுழலும் வேகத்தையும் அங்கங்குள்ள நிலையையும் வைத்து அறிகின்றோம்.

ஆனால் இந்தப் பூமியின் மையப் பகுதியில் என்றுமே சூரியனின் ஒளிக் கதிர்கள் தாக்குவதில்லை…! என்பதைனை அறிந்துள்ளோமா…?

பூமத்திய ரேகையின் மையத்திற்கு சற்றுத் தள்ளிய இடத்தில் தான் பகலும் இரவும் சில காலங்கள் மாறி மாறி வருகின்றன. மையப் பகுதி என்றுமே இருண்ட நிலை தான்.

ஆனால் அந்த மையத்தினால் தான் இந்தப் பூமியில் நிறைந்துள்ள கடலின் நீர நிலைகள் எல்லாம் உள்ளது.

பூமி சுழலும் வேகத்தில் மற்ற இடத்தில் படும் ஒளிக் கதிரின் அமில சக்தியின் நிலையை இந்த மையப் பகுதி ஈர்த்துப் படிவங்களாக பாறையைப் போன்று அடர்ந்து பதிந்துள்ளன.

இக்சுழலும் நிலையிலேயே மென்மேலும் ஈர்த்து அந்தப் படிவங்களுடன் அந்த அமில நிலை வளர்ந்து கொண்டே உள்ளன.

எந்த நிலையில் உப்பு அமில சக்தி படிவங்கள் வளர்ச்சி கொண்டுள்ளனவோ அந்த நிலை போன்ற விகிதத்திலேயே இந்தப் பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள அமில சக்தி மோதுண்டு உருளும் நிலையில் ஆவியான உப்புக் கலந்த நீராக வடி கொண்டு தான் இன்று கடலாக வற்றாத நிலையில் பொங்கிக் கொண்டுள்ளது.

பூமத்திய ரேகையின் சிறிது தள்ளி உள்ள நிலையில் சில காலம் ஒளியும் இருட்டும் உள்ள நிலைப்படுத்தித்தான் அந்த நிலையின் தொடர்பு நிலை கொண்ட பூமிகளில் உள்ள கடலில் நீர் நிலை பொங்கி வருவதைக் கண்டிடுவீர்.

இந்த உப்புக் கலந்த அமிலத்திலிருந்து உற்பத்தி ஆகி வருவதே கடல் நீர் உப்புக் கரிக்கும் நிலை. ஆனால் கடற்கரை ஓரங்களிலேயே உள்ள கிணறுகளில் உள்ள நீரெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியுடன் அந்தப் பூமியின் நிலைக்கொப்பச் சுவை தருகின்றது.

இன்று கடலாகப் பொங்கி உள்ள இடத்திலேயே இந்தக் கடல் நீரின் மட்டத்திற்குக் கீழ் அந்தப் பூமியின் நிலையிலிருந்து தோண்டி எடுக்கும் நீரின் சுவை இந்தக் கடல் நீரின் சுவைக்கு மாறு கொண்டதாகத் தான் இருந்திடும்.

நம் பூமியின் இயற்கை சக்தியின் தெய்வமான சூரியனின் சக்தியில் இருந்து பல சக்தியை நாம் நேராகவும்… மற்ற மண்டலத்தில் மோதி அந்த மண்டலத்திலிருந்தும் ஒன்றின் துணையுடன் ஒன்றாகச் செயல்படவே… இந்தப் பால்வெளி மண்டலத்தின் சக்தியின் துணையினால் செயல் கொண்டுள்ளோம்.

இந்த இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்திட்டால் அந்த ஆண்டவனின் சக்தியின் நிலை ஒன்றுடன் ஒன்று செயல்படும் நிலையை அறிந்திட்டால் அந்த ஆண்டவன் என்ற சக்தியே தனித்ததல்லாமல் செயல்படுவதாக உணர முடியும்.

1.அனைத்துச் சக்தியுமே ஒன்றுடன் ஒன்று கலந்த சக்தியாகத்தான் அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது
2.அந்த ஒரே சக்தியான நிறைந்த தனித்த சக்தி… அச்சக்தியின் கலந்த சக்தி தான் நம் அனைத்து சக்தியுமே…!

Leave a Reply