மை… தாயத்துக்கள்…! உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மை… தாயத்துக்கள்…! உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மலைப் பிரதேசங்களில் வாழ்ந்திடும் மந்திரவாதிகள் பல மண்டை ஓடுகளை வைத்துப் பூஜிப்பர். அதுவும் அல்லாமல் அம்மண்டை ஓட்டின் சொந்தம் கொண்ட உடலின் நிலையிலிருந்து மை எடுத்து அதனையும் இம்மண்டை ஓட்டையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

மையை யார் யாருக்கெல்லாம் தாயத்துகளாய்த் தருகின்றார்களோ அவர்களின் நிலையும் மந்திரவாதியின் நிலைக்கும் தொடர்பு பட்டு சில நிலைகளை அறிந்திடத்தான் இவர்கள் பூஜையில் அம்மண்டை ஓட்டை வைப்பது.

இவர்கள் மை தயாரிப்பது எந்நிலையில்…?

மயானத்தில் அர்த்த ஜாமத்தில் சில உடல்களை கூடிய வரை கருச் சிசுக்களைத்தான் (இறந்த சிசுக்களை) இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். வளர்ந்து ஆசைப்பட்டு குடும்பப் பற்றுடன் நீத்தாரின் உடல்கள் இவர்கள் செயலுக்கு செயல்பட்டு வராது.

அவர்களின் ஆத்ம எண்ணமே தன் குடும்ப நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும். அதனால்தான் இக்கரு வித்தை மந்திரவாதிகள் எல்லாரும் தாயின் கர்ப்பத்தில் தோன்றும் முதல் சிசுவை அது இறந்துவிட்டால் (தலைச்சன்) அதனுடைய உடலை புதைத்துச் சென்ற பிறகு அதைத் தோண்டியெடுத்து இவர்களின் செயலுக்காக அவ்வுடலை ஈடுபடுத்துகின்றனர்.

நம் மூதாதையர் காலத்தில் முதல் தலைச்சன் சிசு காலமானால் அதன் உடலை சிறிது பின்னப்படுத்தித்தான் அடக்கம் செய்வார்கள். பின்னப்படுத்திய அச்சிறு சதையை இவர்கள் தாயத்தாக்கி பூஜிப்பார்கள். அந்நிலையில் அச்சிசுவின் ஆவி இங்கு செயல்கொள்ளும் ஏவலின் நிலைக்கு ஒத்து வராது.

இப்பின்னப்ப்டா இறந்த சிசுவை எடுத்துச் சென்று பெரிய மண் பானையில் அச்சிசுவின் உடலை இட்டு அப்பானைக்கும் கீழ் இரண்டொரு பானைகளை வைத்து பெரும் நெருப்பிட்டு எரியவிட்டு கீழ் எரியும் நிலையிலிருந்து மேல் பானைக்கு அவ்வுஷ்ணம் பட்டு அச்சிசுவின் உடலில் இருந்து கசியும் அதன் அமில நீர் சக்தி எல்லாம் எரிய எரிய வடிந்து இக்கீழ்ப் பானையில் மெழுகு போன்ற மை பதத்தில் ஒட்டிக் கொள்ளும்.

சிசுவை இட்டுள்ள பானைகளில் துவாரம் வைத்திருப்பார்கள். இச்சிசுவின் மைக்கு வேண்டிய அமில நீர் சக்தியெல்லாம் ஈர்த்த பிறகு அச்சிசுவின் சக்கை உடலை அதே நெருப்பிலிட்டு அதன் அவயங்களையும் சேகரித்து அதன் அவயவத்தை வெந்த நிலையில் வைத்து மண்டை ஓடுகளுடன் அங்கங்களையும் சேர்த்துப் பூஜிப்பார்கள்.

இவ்வமில நீரில் அவ்வுடலின் வெந்த சாம்பலையும் சேர்த்து மைபோல் மசிய வைத்து பூஜித்து பில்லி சூனியம் ஏவல் மையிடுதல் போன்ற நிலைக்கெல்லாம் இச்சிசுவின் நிலையை ஏவுவார்கள்.

கருப்பு நிறம் கொண்ட இந்த மையையே தன் நெற்றியில் இட்டுக் கொண்டும் தாயத்துக்கள் செய்து மையை அதனில் வைத்துத் தன் உடலிலும் அணிந்து கொள்வார்கள்.

இவர்களின் பொருளாசைக்குகந்த நிலைப்படுத்திட இக்குட்டிச்சாத்தானை ஏவுவார்கள். ஒவ்வொரு மந்திரவாதியும் ஒரு சிசுவிலிருந்து மட்டும் தன் ஏவலைச் செயல்படுத்துவதில்லை. பல சிசுக்களையும் இந்நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.

இவர்கள் ஏவிய நிலைக்கெல்லாம் அக்குட்டிச்சாத்தான்கள் ஆவி உருவில் சென்று பல உண்மைகளை அறிந்து வரும்.

1.“மாரியம்மாள் காளியம்மாள்…” என்று மனிதர்கள் மத்தியில் இச்சக்தியின் நாமத்தைச் செப்பியே பேய் ஓட்டுவதைப் போலவும்
2.“மாரியாத்தா ஆடு கேட்கிறாள்… கோழி முட்டை கேட்கின்றாள்…!” என்றெல்லாம் சொல்லி
3.அவர்கள் வைத்திருக்கும் குட்டிச்சாத்தான்களின் ஆசைக்கு உகந்த உணவுகளைப் படைத்து
4.இவர்கள் தங்களுக்குகந்த செயலை முடித்துக் கொள்கின்றனர்.

எந்த மாரியம்மனும் காளியம்மனும் உயிரைப் பலி கேட்பதில்லை…! மனிதன் தன் ஆசைக்குத் தான் இது போன்ற செயலைச் செய்கின்றான்.

Leave a Reply