சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கேள்வி:
விஞ்ஞானத்தில் அவர்கள் கண்டுபிடிப்பிலிருந்து சந்திர மண்டலத்தில் உயிரணு இல்லை… நீர் நிலையும் இல்லை…! இந்தச் சூழ்நிலையில் உயிரினங்கள் எப்படி எப்படி வாழ முடியும்…?

ஈஸ்வரபட்டரின் பதில்:
காற்றுடன் நீர் இல்லா விட்டால் அந்த மண்டலத்தின் சுழற்சியில் ஒளி ஏது…? உயிரணு இல்லா விட்டால் மண்டலத்திற்கு வளர்ச்சி ஏது…?

அந்த மண்டலமே உருப்பெற உயிரணுக்களை உண்டல்லவா அதன் கழிவை உஷ்ண அலையாய் வெளிப்படுத்தி அதன் வழியில் தொடர் கொண்டு வளர்ச்சி கொண்டு வளர்கின்றது.

பால்வெளி மண்டலத்தில் காற்றும் உண்டு நீரும் உண்டு உயிரணுக்களும் உண்டு.

வானமாகப் பரந்து விரிந்துள்ள பால்வெளி மண்டலத்திற்கே ஜீவன் உண்டு என்ற நிலையில் சந்திரனுக்கு ஏனப்பா நீரும் உயிரணுவும் இல்லையென்று விஞ்ஞானத்தில் செப்புகின்றனர்…?

1.காற்றுடன் கலந்துள்ள ஜீவனான நீர் இல்லா விட்டால்
2.அந்த மண்டலத்திற்குச் சுழற்சி ஏது…?
3.அதிலிருந்து பௌர்ணமி நிலவாகக் காண்கின்றோமே அந்த ஒளியும் ஏது…?

நம் பூமியைப் போல் அடர்ந்த கடல் நிலைகள் நிறைந்த நீர் நிலை அங்கே இல்லை. நீர் நிலையிலிருந்து வெளிப்படும் அமில சக்தியினால் நம் பூமி முழுவதுமே செயல் கொண்டு ஆங்காங்கு பெய்திடும் பருவ மழையினால் உண்டான நீர் நிலைகள் ஆறு ஏரி குளம் குட்டைகள் இப்படி சந்திரனில் இல்லை.

சந்திரனில் கண்டுபிடித்த நிலை போல் நம் சூரியனிலும் எந்த நிலையில் நீர்நிலை உள்ளது…? என்று உணர்த்தினார்களா…?

ஆனால் வரப்போகும் மாற்றத்திலிருந்து அடர்ந்த நீர் நிலைச் சக்தி சந்திரனுக்குக் கூடப் போகின்றது. நம் பூமியைப் போல் பருவ மழைகளைக் காணாத மண்டலம் அது. சந்திரனில் இன்றளவும் மழை பெய்ததில்லை.

சந்திரனில் நீர் இல்லாவிட்டால் சந்திரனிலிருந்து தோண்டி எடுத்து வந்தார்களே அந்தக் கல் எப்படி வளர்ந்தது…?

1.பனியான நிலை என்றுமே சந்திரனுக்கு உண்டு
2.குளிர்ந்த மண்டலம் அது…!
3.அதன் சுற்றலில் பனித்துளி போன்ற நீர் நிலைகள் படிந்து அதன் கசிவில்
4.நசநசப்புத் தன்மையில் சுழன்று கொண்டுள்ள குளிர்ந்த மண்டலம்தான் சந்திரனின் இன்றைய நிலை…!

நம் பூமியில் கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதைப் போல் சந்திரனுக்கு அந்தச் சக்தி நிலையில்லை. நீர் நிலை அடர்ந்து உள்ள மண்டலத்திலத்தில்தான் அந்த மண்டலத்துடன் கூடிய எந்த இடத்திலும் நீரைக் கண்டிட முடியும்.

1.நம் பூமியிலிருந்து விண்கலத்தை அங்கே ஏவி இந்த மனித சுவாசத்தை அங்கு விட்டு வந்துள்ளானே
2.அச்சுவாச நிலையின் வெக்கையில் தோன்றிடும் உயிரணுவிற்கு
3.இப்பூமியில் இருந்து சென்ற சக்தி நிலைதானே வேண்டும்…!

அன்று வியாழனிலிருந்து பூமிக்கு உயிரினங்கள் வந்தது போல் தான் இதனின் நிலையும் இருந்திடும்…

Leave a Reply