விஞ்ஞான அறிவு கொண்டோரும் ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

விஞ்ஞான அறிவு கொண்டோரும் ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய இப்பூமியின் பூமத்திய ரேகையின் நேர் கோட்டை வைத்து அந்த நிலையில் இன்றைய விஞ்ஞானிகளால் மேலே வான மண்டலத்தில் வான இயல் நுட்பக் கருவிகளை வைத்து இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தைக் கண்டறிகின்றனர்.

அதைப் போல இப்பூமத்திய ரேகையின் மையத்தில் இப்பூமியின் உள் பாகத்தில் சில நிலைகளைச் செய்வித்தால் இப் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் தன்மையைக் கொண்டு…
1.இப்பூமியில் தற்பொழுதும் இனி நடக்கப்போகும் காலத்தின் இயற்கையின் சீற்றத்திலிருந்து
2.எந்தெந்த இடங்களில் நிகழப்போகும் பெரும் மாற்றத்தைக் கண்டறிந்து அந்த ஆத்மாக்களைக் காத்திடவும் முடிந்திடும்.

வான நிலையில்தான் இவர்களின் ஆராய்ச்சி நிலை எல்லாம் உள்ளது. பூமியின் உள் நிலைகளை அதிகமாகக் காண முயலவில்லை.

ஆனால் இப்பூமி கவர்ந்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்துதான் இப்பூமியைச் சுற்றியுள்ள வான நிலையும் உள்ளது.

வளர்ந்திட்ட விஞ்ஞானத்தின் சக்தி அறிந்த ஆத்மாக்களினால் அவர்களின் சக்தியையே செயல் கொண்டு காத்திடும் நிலைப்படுத்திடும் ஆத்மீக நெறியையும் கலக்க விட்டால் உலகைக் காக்கவும் முடிந்திடும்.

இவ்வுலகையே செயலாக்கிடும் சப்த ரிஷிகளின் சக்தி கொண்டு…
1.மனித உடலுடன் உள்ள விஞ்ஞான ஆத்மாக்களினால்
2.இவ்வுலகை இக்கலியின் கடைசி மாற்றத்திலிருந்து காத்திடும் சக்தி நிலையும் உண்டு.

ஒவ்வோர் ஆத்மாவிற்குமே ஆதி சக்தியின் செயல் சக்தி அனைத்தும் உண்டு. செயல்படுத்திட்டால் அந்த நற்சக்தியுடன் கலந்தே செயலாக்கிட முடியும்.

சக்தி பொதுவானதே…!

மெய் வழி செல்லும் பாதையைத் தான் எம்மால் காட்டிட முடியும்…. ஏற்றுக் கொள்வதும் அதன் வழி செயல்படுத்துவதும் அவரவர்கள் எண்ணத்தால் தான் அது முடியும்.

Leave a Reply