நமக்குள் பிரணவமாக்க வேண்டிய சக்தி

நமக்குள் பிரணவமாக்க வேண்டிய சக்தி

 

ஓ…ம் என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்.

நாம் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் நிலைகளை எல்லாம் உயிர் ஓ..ம்… ஓ…ம்… என்று பிரணவமாக்குகின்றது. பிரணவம் என்றால் அதை ஜீவன் பெறச் செய்து உடலுக்குள் ஜீவணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது உயிர்.

அதே சமயத்தில் நுகர்ந்த உணர்ச்சிகள் கொண்டு நம்மை இயங்கச் செய்வதும்… அந்த உணர்வே தன்மை நம் உடலை இயக்குவதும்… அதன் வழி நம் வாழ்க்கை வழி நடத்திச் செல்வதும்… நுகர்ந்தது எந்தக் குணமோ அக்குணமே நம்மை ஆள்கின்றது.

அதனால் தான் ஓ…ம்…! என்ற நாதமாய் எங்களை இயக்கும் உயிரை எங்களை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம் என்று சொல்வது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நுகர்கின்றோமோ பார்க்கின்றோமோ… நாம் எண்ணிய அந்தந்தக் குணங்களை வைத்து நம்மை ஆள்கின்றது. உயிர்… ஆண்டவனாக ஆளச் செய்கின்றது.

1.நமது உடல் ஒரு அரங்கம்
2.நாம் நுகரும் உணர்வுகள் ஒரு நாதம் (உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலிகள் கிளம்புகிறதல்லவா…”
3.கோபமான நாதங்களை எடுத்தால் அந்த உணர்வின் தன்மை நம்மை ஆளுகின்றது… நமக்கும் கோபம் வருகிறது.

அதைத் தான் “அரங்கநாதன்” என்று உயிருக்குக் காரணப் பெயர் வைத்து உடலுக்குள் அந்த நாதங்களை (எண்ணங்களை) எழுப்பிக் கொண்டே இருக்கின்றது உயிர் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஆனாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை ஆளுகின்றது என்பதற்கு “ஆண்டாள்” என்று காரணப் பெயர் வைத்து
1.நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை நடத்த…
2.பண்படும் உணர்வுகளை நாம் வளர்க்க ஞானிகள் காவியமாகப் படைக்கின்றனர்
3.ஸ்தல புராணங்களாகவும் வடித்து வைத்துள்ளனர்.

அந்த ஸ்தல புராணங்களில் உள்ள உண்மையின் உணர்வுகளை நுகர்வோமேயென்றால் அந்தப் புராணத்திற்குள் மறைந்துள்ள உணர்வுகள் கொண்ட் நமக்குள் தெளிந்த மனதை ஊட்டவும் நம்மை அறியாது பிறருடைய தீமையின் உணர்வுகள் நம்மை இயக்கினால் அதை இயக்காது தடைப்படுத்திடவும் கொடுத்துள்ளார்கள்.

1.ஏனென்றால் அருள் உணர்வை நாம் பெருக்கி
2.அதன் வழி நமது உணர்வே நம்மை ஆள வேண்டும்
3.நமது செயலும் நமது எண்ண வழிப்படி செயல்படுத்திட வேண்டும் என்பதற்குத்தான்…!

ஆனால் தீமையின் உணர்வுகள் நமக்குள் சென்று விட்டால் தீமையின் செயலும் தீமையான சொல்லும் சொல்லைக் கேட்போர் உணர்வுகளும் நம்மை எதிரியாக்கும் தன்மையும் பகைமையானவனாக மாற்றிவிடும்.

ஆகவே அருள் உணர்வு அனைவரும் பெற வேண்டும் என்று நாம் இத்தகைய நல்ல உணர்வை எண்ணும்போது நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி ஜீவன் பெறுகின்றது.

அதே சமயத்தில் இந்த உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும்போது
1.நமக்குள் தெளிந்த மணமும்..
2.நாம் எதிரிலே நம்மைப் பார்ப்போரை நல்லவராகவும் பண்புள்ளவராகவும் உருவாக்கும் உணர்வுகள் நமக்குள் உருவாகி
3.நம் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும் அத்தகைய நிலைகளை மாற்றியமைக்கும்.

அதனால் தான் ஓ..ம் என்ற நாதமாக இயக்கும்… நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரை வணங்க வேண்டும்… உயிரின் துணையால் அருள் உணர்வுகளை நமக்குள் பிரணவமாக்க வேண்டும்…! என்று சொல்வது.

Leave a Reply