தினசரி நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை

தினசரி நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை

 

குலதெய்வங்களான நம் மூதாதையர்களின் குல வழியில் தான் நாம் வந்தோம். அவர்கள் உணர்வுகள் தான் நம் உடல். அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அத்தகைய மூதாதையர்களை அதிகாலை துருவ தியானமிருந்து விண் செலுத்த வேண்டும்.

அந்த உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விட்டால் “பரம்பரை நோய்…!” என்று நம் குடும்பத்தில் வராது.

ஏனென்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அவர்கள் உயிரான்மாக்கள் செல்லும் பொழுது
2.அடுத்து உடல் இல்லாது கருக்கிவிட்டு உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நிலைத்திருக்கும்.
3.அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நம் மூதாதையரின் உயிரான்மாக்கள் உணவாக உட்கொண்டு
4.அதன் ஈர்ப்பு வட்டத்தில் பெருவீடு பெருநிலை என்ற நிலைகள் அடைந்து
5.பிறவியில்லா நிலை அடையவும் அழியா ஒளிச் சரீரம் பெறவும் இது உதவும்.

ஆகவே தியானம் இருப்போர் அனைவரும் நம் முதாதையரை அவசியம் விண் செலுத்த வேண்டும்.

மூதாதையர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொருத்தரும் சாப அலைகளை விட்டிருப்பார்கள். அந்த வேதனை உணர்வுகள் நம் குடும்பத்தில் பரம்பரை நிலைகளில் அது தொடர்ந்து வரும்.

அனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைப்போன்று மூதாதையர்களை விண் செலுத்தி விட்டால் சாப அலைகளோ தீய அலைகளோ நம்மைச் சாடாது பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.

ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் உங்கள் குடும்பத்தில் வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை ஒரு இரண்டு நிமிடமாவது எண்ணி அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து உடல் பெரும் உணர்வுகளைக் கரையச் செய்தல் வேண்டும்.

பிறிதொரு ஆன்மாக்களை நம் பழக்கவழக்கங்கள் காரணமாக அதிகமாக நேசித்து இருந்தால் அந்த ஆன்மாக்கள் நம் உடலிலே புகுந்திருக்கும்.

துருவ தியானத்தில் நாம் இருக்கும்போது…
1.என் உடலில் உள்ள அத்தகைய ஆன்மாக்களும் அது பிறவியில்லா நிலைகள் அடைந்து
2.எனக்குள் நல்லது செய்யும் தன்மைக்கு வர வேண்டும்…! என்று இப்படி எண்ணி ஏங்குதல் வேண்டும்.

காரணம் ஒரு உடலில் உருவான உணர்வுகள்தான் நம் உடலிலே வந்து அது இயக்கும். ஆனால் அதற்கு மேல் வளர்ச்சி இல்லை.

நம் இரத்த நாளங்களில் தான் பிறிதொரு ஆவியின் தன்மைகள் இருக்கும்.
1.அது நம் உயிரின் தன்மையில் உராயப்படும் பொழுதுதான் அதனின் உணர்ச்சிகளை ஊட்டும்
2.இரத்தங்களில் சுழன்று கொண்டே வரும்
3.இரத்தத்தின் வழியாக நம் கவன நரம்பு இருக்கும் பக்கம் சென்றபின்
4.அதன் நினைவாற்றல் தூண்டி அந்த உணர்வுகளை இயக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்பிக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

நம் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும்போது அந்தத் தீய உணர்வு கொண்ட உணர்வின் அணுக்களையும் நம்மால் மாற்ற முடிகின்றது.

அந்த ஆன்மாக்கள் நமக்குள் இருந்து பிறவியில்லா நிலையும் அடையும் தகுதியும் பெறுகின்றது. நாமும் பிறவியில்லா நிலை அடைய இது உதவுகின்றது.

நாம் எத்தனையோ நண்பர்களிடம் பழகுகிறோம். அப்படிப் பழகிய நண்பர் திடீரென்று அகால மரணம் அடைந்தார் என்றால் இறக்கும் சமயம் நம் மீது அவர் எண்ணங்களைச் செலுத்தினால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

வந்து விட்டால் அவர்கள் உடலில் வாழும் காலத்தில் எப்படி அவஸ்தைப்பட்டனரோ அதையெல்லாம் நம் உடலுக்குள் வந்து சேர்த்துவிடும்.

இது போன்ற நிலைகளைத் தடுக்கவும் காலை துருவ தியானத்தில்
1.எங்களுடன் நண்பர்களாகப் பழகி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள்
2.அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து
3.பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து அவர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற்று
4.பிறவி இல்லா நிலை அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

Leave a Reply