மனிதனாக வாழ்ந்து ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் மண்டலங்களை (சூரியக் குடும்பங்கள்) உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்

creations-of-humanity

மனிதனாக வாழ்ந்து ரிஷித் தன்மை பெற்றவர்கள் தான் மண்டலங்களை (சூரியக் குடும்பங்கள்) உருப்பெறச் செய்கின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

இயற்கை சக்தியில்…
1.ஆவியாக இருப்பது அணுவாக உயிர் பெற்று
2.அவ் ஆவியிலே உள்ள சக்தியினை உயிரணுவிற்கு ஊட்டமாக்கி
3.அவ்வாவியின் பிம்பமாய் ஜீவ ஆத்மாவிற்கு வந்து
4.ஜீவனாய் மனித பிம்பம் பெற்று பிம்பமாய் வாழ்ந்திட்டு
5.ஆத்மா பிரிந்து பிறகும் அவ்வாத்மாவுடன் ஆவியான சக்தியை ஈர்த்தே
6.இப்படி மாறி மாறி ஆவி உலகம்… பிம்ப ஜீவன் கொண்ட… ஜீவ ஆத்மா வாழ்க்கை வாழ்ந்திடும் உயிரணுக்கள் யாவற்றுக்குமே
7.அனைத்து சக்திகளும் அடைந்திடும் சக்தி (தகுதி) உண்டு.

எவ்வுயிரணு எவ்வழியில் தன் சக்தியினை வளர்த்துக் கொள்கின்றதுவோ அவ்வழியில் சென்றிடலாம்.

ஆனால் தன் சக்தியைத் தான் உணர்ந்திடாமல் இருந்திடும் மனித ஆத்மாக்களாகத்தான் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை நிலைகள். சக்தியினைச் சிதறவிட்டு இப்பேராசை நிலையையே வளர்த்துக் கொண்டு வாழ்வதின் வினையினால் வந்ததது தான் இன்றைய வாழ்க்கையின் நெறி முறைகளாக உள்ளன.

பல மகான்கள் இப்பூமியில் அவதரித்து ஆண்டவனாய் இன்றும் அருள் புரிகின்றனர். ஆனால்
1.இன்றைய மனிதர்களோ தன் சக்தியினை வீண் விரயம் செய்து
2.இந்த உடலுடன் கூடிய ஆத்மார்த்த ஆத்மீக நெறி உடைய அன்பு கொண்ட வாழ்க்கைதனை
3.இம்சையிலும் பேராசையிலும்… பல நெறி கெட்ட காமச் சூழ்நிலையிலும்… தன்னடக்கம் இல்லா வாழ்க்கையிலும்
4.குரோதம் விஷமம் இப்படி நமக்குள் பல தீய சக்தியினை வளர விட்டு
5.நல்லொழுக்கம் எற்றிடும் நற்பயன் கொண்ட வாழ்க்கைதனைச் சிதற விட்டு
6.இவ்வாத்மீக நெறி கொண்ட இல்வாழ்க்கைதனை இன்பமுடன் வாழ்ந்திடாமல் வாழ்ந்து என்ன பயன்…?

நம்மைப் போன்ற உயிரணுவாய் உதித்திட்டு உயிர் ஆத்மா கொண்டு ஜீவ ஆத்மாவாகி இஜ்ஜீவ வாழ்க்கைக்கும் வந்து இவ் உலகில் உதித்ததின் உண்மை சக்தியினை உணர்ந்து தன் ஆத்மாவின் சக்தியினால் இவ்வுலக சக்தி அனைத்தையும் எந்நிலையில் பெற்றனர் பல மகான்கள் என்பதனை இப்பாட நிலையில் வெளியிடுகின்றேன்.

பல ரிஷிகள் நம்மைப் போல் வாழ்ந்த வாழ்க்கையில் பல இன்னல்களில் வாழ்ந்துள்ளார்கள். வாழ்க்கைச் சுற்றலில் குடும்பப் பற்றுடன்தான் வாழ்ந்தார்கள்.

அந்நிலையில் இருந்து கொண்டே அவர்கள் எடுத்த ஜெப நிலையால்
1.ஜெப நிலை என்பது… எவ்வெண்ணத்திற்கும் அடிமை ஆகாமல்
2.எவ்வெண்ணத்திற்கு என்பது வாழ்க்கைக்குகந்த நெறிமுறையில் மாற்றம் காணாமல்
3.வரும் இன்னலுக்குச் சோர்வு நிலைப்பட்டோ சந்தோஷ நிலைக்கு அடிமைப்பட்டோ
4.பாசத்திற்குத் தன்னைக் கட்டுபடுத்தியோ வாழ்ந்திடாமல்
5.இவ்வெண்ண சக்தியினை வாழும் காலத்திலேயே அனைத்து சக்திகளையும் தன்னுள் ஈர்க்கும் பக்குவ நிலை பெற்று
6.ஆத்மீக நெறிக்குகந்த ஞான வழிக்கு வித்திட்ட வழியில் வந்தவர்கள் தான் அனைத்து மகான்களும்.

வாழ்க்கை நிலையில் ஞான நிலை பெற்ற முதல் நிலைக்கு வந்தவர்கள்… அந்நிலையின் தொடர் நிலையை வளர்த்தே சித்து நிலை பெற்றிடலாம்.

சித்து நிலை பெற்றவர்கள் மகரிஷியாய் சப்தரிஷியாய் வந்திடலாம்.

இவ்வழியில் வந்தே தன் உயிரணுவாய் உதித்து ஆத்ம நிலைக்கு வந்தவர்கள் பெற்ற சக்தியினால் எவ் உலகில் உதித்தனரோ அவ் உலகில் இருந்து எவ் உலகிற்கும் (மற்ற சூரியக் குடும்பங்களுக்கு) சென்றிடும் நிலை பெற்றுள்ளனர்.

மேலும் மற்ற சூரியக் குடும்ப மண்டலங்களின் நிலையிலிருந்து பல சக்தியினைத் தன் உயிராத்மாவுடன் சேமித்து… தனக்குகந்த பல சக்தியினை ஈர்த்துத் தன்னுள்ளே சுழலச் செய்து… தனி ஒரு மண்டலமாக உருப்பெறச் செய்தும்… அந்நிலையிலிருந்து தனி ஓர் உலகமாகத் தன் மண்டலத்தினுள்ள பல ஜீவன்களின் வளர்ச்சியைத் தானே வளரச் செய்தும் மண்டலங்களாக உருப் பெறுகின்றனர்.

1.இவ்வியற்கையின் சக்தியில் எண்ணில் அடங்காப் பல உண்மைகள் உள்ளன.
2.உயிரணுவாய் நம்மைப் போல் உதித்திட்டவைதான் இன்றுள்ள பல மண்டலங்கள்.

இந்நிலைக்கு வருவதற்கு உயிரணுவாய் இருந்து… உயிர் ஆத்மா கொண்ட செயலாற்றும் நிலைபெற்ற இம் மனித உடலினால் மட்டும்தான் முடிந்திடும்.

இந்நிலையில் இருந்து வந்தவர்கள் தான் நாம் சொல்லும் பல பல ரிஷிகளும்…!

Leave a Reply