கடலின் உப்புத் தன்மையும் மனித உடலின் உப்புத் தன்மையும் ஒன்று தான் – ஈஸ்வரபட்டர்

empowering nature

கடலின் உப்புத் தன்மையும் மனித உடலின் உப்புத் தன்மையும் ஒன்று தான் – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியின் நிலை இரண்டும் பாகம் நீரும் ஒரு பாகம் நிலமும் உள்ளது. அவற்றிலும் ஒரு பாகத்தில் ஏரி குளம் கிணறு ஆறு இப்படி நீர் நிலைகள் உள்ளன.

இன்று நில அதிர்வு ஏற்படுவது நிலத்தில் மட்டுமல்ல. பூகம்பமும் எரிமலையும் இப்பூமியின் நீர் நிலை இல்லாத இடங்களில் மட்டும் ஏற்படுவது அல்ல. பூமியுடன் கலந்த கடலிலும் இப்பூகம்ப நிலை அதிகமாக ஏற்பட்டுக் கொண்டேதான் உள்ளது.

கடலில் சில நிலைகளில் இப்பூகம்ப நிலை ஏற்பட்டு அதனால் அக்கடலுக்குள் திடீர் திடீரென்று மலைகள் வளர்கின்றன என்கின்றனர். கடலுக்கடியில் வளர்ந்திடும் மலையின் நிலையென்ன…?

இப்பூமித்தாய் வெளியிடும் உஷ்ண அலைகள் வெளிப்படும் தன்மையினால் பூமியில் ஏற்படுவதைப் போன்ற நில அதிர்வு இக்கடலிலும் ஏற்படுவதினால் அந்நிலையில் பொங்கும் நிலையில் வளர்வது தான் இப்படி திடீர் திடீரென்று தோன்றிடும் மலைகளின் நிலையெல்லாம்.

கடல் நீரிற்கும் இம்மனித ஜீவ ஆத்மாவின் உடல் தன்மைக்கும் அநேக ஒற்றுமை நிலைகள் உண்டு.
1.இம் மனித உடலின் சுவாசத் தன்மை உப்புக் கலந்த அமிலத்தைத் தான் அதிகமாக ஈர்த்து சுவாசிக்கின்றது.
2.கடல் நீரின் உப்புத் தன்மையும் இம் மனித ஜீவாத்மாவின் உடல் தன்மையும் ஒன்றுபட்டதே
3.இம்மனித உடலைப் புதைத்தால் அவ்வுடலின் மேல் மற்றத் தாவர இன வர்க்கங்கள் வளர்ந்திடாது.

இன்று தாவரங்களுக்குப் பல இரசாயன உரங்களைச் செய்வித்து வளரச் செய்கின்றனர். அவற்றினுள் இம் மனிதனின் உடல் தன்மையை ஓர் இரசாயனத்திற்கும் பயன்படுத்திட முடியாது.

இன்று சில இடங்களில் சில தாவர வர்க்கங்களுக்கு நாய் நரி இவற்றின் உடல்களை அத்தாவரங்களின் வேர்களுக்கு உரமாக இட்டால் அத்தாவரம் செழித்து வளர்ந்திடும் என்ற நிலையில் பயிர் செய்கிறார்கள்.

1.ஆனால் மனித உடல் உப்புக் கலந்த அமிலத் தன்மை பெற்றதினால் எத்தாவரமும் இவ்வுடலில் இருந்து வளராது
2.இவற்றைப் போன்றே தாவரங்களுக்கு இப்பூமியில் மூன்றில் இரண்டு பாகமாக உள்ள கடல் நீரைப் பயன்படுத்திட முடிவதில்லை.

கடலிலேயே அச் சுவாசமுடனேயே வளர்ந்திடும் சில தாவர வர்க்கங்கள் உண்டு. ஆனால் அதே இனம் கொண்ட இத்தரையுடன் உள்ள நீர் நிலையில் வளர்ந்திடாது. இயற்கையிலேயே இப்படிப் பல பல மாற்றங்கள் கலந்தே உள்ளன.

இயற்கையின் சக்திக்குட்பட்ட… இயற்கை எய்தும் ஜீவ ஆத்மா பெற்ற நாம்… நம் சக்தியை இயற்கையுடன் கலக்கவிடும் நிலை பெற வேண்டும்…!

Leave a Reply