நச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…?

Child care

நச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…?

 

உதாரணமாக ஒரு கருவுற்ற தாய் இருக்கிறது என்று வைத்துக் கொல்வோம். பக்கத்து வீட்டுக்காரர்களுக்குள் சண்டை போட்டார்கள் என்றால் அவர்கள் மேல் இந்தக் கருவுற்ற தாய் அன்பாக இருந்தால் அதைப் போய்ப் பார்ப்பார்கள்.

யார் மேல் பற்றுடன் இருக்கின்றதோ இன்னொருத்தர் அவரைக் கோபமாகப் பேசினனால் கருவுற்ற தாய் அந்தப் பாசமாக உள்ளவர்களை உற்றுப் பார்த்து அடப் பாவி…. அவர் சும்மா இருக்கிறார் இப்படி பேசிக் கொண்டே இருக்கின்றார்களே…! என்று அந்த உணர்வை எண்ணுகிறது.

1.இப்படிப் பேசுகின்றார்களே என்று வேதனையான உணர்வுகளை சுவாசித்து விட்டால்
2.தாய் நுகர்ந்த உணர்வுகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது பூர்வ புண்ணியமாக அமைந்துவிடுகின்றது.

இதைக் கேட்டறிந்த பின் தாய் என்ன செய்யும்…? வருபவர்களிடம் எல்லாம் சொல்லும். இந்த அம்மா சும்மா இருக்கின்றது… கோபமாகப் பேசுகிறார்கள் திட்டுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.

ஆனால் கருவுற்றிற்கும் பொழுது சாதாரணமாகவே தாய் உடலில் அந்த சோர்வின் தன்மை இருக்கும். சண்டை இடும் போது எந்தக் கடினமான வார்த்தையைத் தாய் கேட்டதோ மீண்டும் அந்த உணர்வே இயக்கிக் கொண்டிருக்கும்.

பலவீனம் அடையப்படும் போது அவர் கேட்டறிந்த உணர்வுகள் இந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு உணர்வாகும்போது பார்க்கலாம்… அந்த குழந்தைகள் துடித்துக் கொண்டே தான் இருக்கும்.

இந்த உணர்வின் நிலைகளை தாங்காது அப்பொழுது அந்த உணர்ச்சிகளை தூண்டும்போது தாயின் உடல் மேலும் சோர்வடையும் அதே சமயத்தில் பதிந்த உணர்வை நுகர அங்கே சண்டையிட்டோர் நினைவுகள் இது அதிகமாகக் கூடும்.

நாம் எல்லாப் பொருள்களையும் போட்டு அதிலே காரத்தை அதிகமாக இணைத்து விட்டால் நல்ல சுவையை இழக்கச் செய்து காரத்தின் தன்மையே முன்னணியில் இருக்கும்.

அதைப் போன்று தான் நாம் கேட்டறிந்த உணர்வுகள் நாம் சதா திரும்ப எண்ணும் போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் பதிந்து விடுகின்றது.

பின் அந்தக் குழந்தை பிறந்த பின் எப்படி அவர்கள் சண்டையிட்டு வேதனைப்பட்டாரோ இந்த வேதனையான உணர்வு கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குள் விளைந்து பிறந்தபின் நச்சு… நச்சு…! என்று அழுகும்.

நச்சு… நச்சு…! என்று அழுகப்படும்போது ஐயோ பாவமே…! இந்தக் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது…? என்ற நிலைகள் இதை அடிக்கடி எண்ணி அதே வேதனையின் உணர்வை நமக்குள் மீண்டும் வளர்த்திடும் சந்தர்ப்பமாகி விடுகின்றது. நம் நல்ல குணங்களைப் பலவீனமடையச் செய்கின்றது.

சண்டையிட்டதை நினைத்து தாயின் கருவிலே வளரும்போது அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்தாலும்… தாய் அவனைக் காத்திடும் நிலைகள் இன்னும் அதிகமாகக் கூடக் கூடக் கூட… இந்த உணர்வின் தன்மை தாயின் உடலுக்குள் உருவாகி… அல்லும் பகலும் முழித்திருந்து வேதனையின் வினையாக தனக்குள் வித்தாகி அடிக்கடி இந்த வேதனையை நுகர வேண்டி வரும்.

தாய் ஆரம்பத்தில் எதை உற்றுப் பார்த்ததோ அது தாய் உடலில் வினையாகச் சேர்கின்றது. கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது. பின் அந்தக் குழந்தை வளர்ந்தபின் அந்த உணர்வுகள் இயக்கும்போது ஏன் அழுகின்றது…? அது என்ன…? என்று தெரியாது.

சில குழந்தைகளைப் பார்க்கலாம். இந்த மாதிரி சண்டையிட்டோரைப் பார்த்திருந்தால் இனம் புரியாமல் நச்சு… நச்சு என்று அழுகும். சமாதானப்படுத்த நீங்கள் என்ன தான் கொடுத்தாலும் அதற்கு அந்த உணர்வுகள் தணியாது.

காலத்தால் தன் அறிவு என்று சிந்திக்கும் திறன் வந்து… மற்றவரை உற்றுப் பார்த்து அதை காணும் நிலை வரும்போது தான்… இது சிறுகச் சிறுக இது வந்து ஒடுங்கி இந்த உணர்வின் நிலைகள் மாறும்.

அது வரை எதுவும் அறியாத குழந்தையாக மூன்று மாதம் வரை அந்தக் குழந்தை இனம் புரியாமல் அழுது கொண்டே இருக்கும்.

ஆனால் சாதாரணமாக உள்ள குழந்தைகள் எல்லாம் ஒரு மாதம் ஒன்றரை மாதம் ஆனவுடன் தாயை உற்றுப் பார்க்கும். அதனின் செயல்கள் சீராக இருக்கும்.

கருவிலே இருக்கப்படும்போது பிறருடைய சங்கடங்களை எண்ணியிருந்தால் இது பூர்வ புண்ணியமாக அமைந்து பிறந்த பின்
1.குழந்தை தாயைக் கூட பார்க்காது
2.எங்கோ பார்த்து அது விக்கி விக்கி அழுகும். பயத்தின் நிலைகள் துடிக்கும் ஏங்கி அழுகும்.
3.இது போன்ற நிலைகளில் குழந்தைகளைக் காணலாம்

குழந்தை சில்லு… சில்லு என்று அழுகப்படும்போது நமக்குள் வெறுப்பின் தன்மைகள் கூடி… குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்தப் பாசத்தால் இந்த உணர்வுகள் அதிகமாக இதுவே வினையாகி நோயாக மாறுகின்றது.

குழ்ந்தை மேல் பாசம் கொண்ட நிலையில் இந்த உணர்வுகள் பதிவானபின் அவனில் இந்த நோய்கள் வளரப்படும்போது காத்திடும் தெய்வமாகத் தாய் இருப்பினும் அவனில் விளைந்த நோயினை தாய் அடிக்கடி எடுக்கும்போது இங்கேயும் அது வளர்கிறது.

இது வளர வளர பின் விளைவு அதிகமான வேதனையாக உருவானால் அந்த வேதனையின் தன்மை திரண்டு கேன்சராக மாறும்.

இதைப்போல ஒவ்வொரு நொடியிலும் அதனுடைய உணர்வு விளைந்து விட்டால் இதனுடைய பருவம் விளைந்தபின் தான் கேன்சரின் தன்மையே நமக்குள் தெரியவரும்.

1.ஆக நாம் தவறு செய்யவில்லை
2.சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது அந்த உணர்வின் தன்மை வந்துவிடுகின்றது.

ஒரு செடியிலே விளைந்த வித்தை மண்ணிலே ஊன்றினால் தன் உணர்வுக்குள் இருக்கும் சத்தை அதுவே ஏங்கித் தன் உணர்வால் கவர்ந்து கொண்டே இருக்கும்.

காற்றிலே மிதந்து வரும் உணர்வுகளை… அந்தத் தன் தாய் இனத்தில் இருந்து வெளி வருவதை அது உணவாக எடுத்து இந்தச் செடி வளர்கின்றது.

அந்தச் செடி மற்ற தாவர இனச் சத்தைத் தன் அருகிலே வராது தடுத்துக் கொண்டதோ இதைப் போன்றுதான்…
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வந்ததோ
2.மற்ற நல்ல குணங்கள் நம்மை அணுகாது
3.அந்த வேதனை என்ற உணர்வை தனக்குள் எடுத்து இங்கே விளைந்து விடுகின்றது.

தன் குழந்தைகளை எண்ணி அடிக்கடி இப்படி ஆகின்றதே என்று வேதனையை எடுக்க… அது நாளாக நாளாக இந்த தாய்க்கு கை கால் குடைச்சல்… ஒரு தலை வலி… முதுகு வலி… இடுப்பு வலி… இதைப்போன்ற நிலைகள் எல்லாம் வரக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் பார்த்தது வேடிக்கை என்றாலும் நுகர்ந்த உணர்வுகள் இத்தனை வேலையைச் செய்கிறது.

Leave a Reply