இந்த மனித வாழ்க்கையில் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது நாம் அங்கே செல்கின்றோம்

Sapdharishi mandalam

இந்த மனித வாழ்க்கையில் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது நாம் அங்கே செல்கின்றோம்

 

மகரிஷிகளின் அருள் ஒளியான சக்தியும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து படர்ந்து கொண்டு இருக்கக்கூடிய அதனின் பேரருளும் பேரொளியும் உங்கள் ஈர்ப்புக்குள் நீங்கள் ஈர்க்கப்படும்பொழுது இங்கே அந்த ஒளி அலைகள் பரவுகின்றது.

அவர்கள் பிறவா நிலைகள் பெற்றவர்கள்…! ஒரு நெருப்பிற்குள் போய் ஒரு விட்டில் பூச்சி விழுந்தால் அது என்ன செய்யும்…? அது சுட்டுப் பொசுக்கிவிடும்.

இதைப் போன்று சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள் நாம்
1.அந்த ஞானியரினுடைய அருள் சக்தியை நேரடியாகப் பெற முடியாது.
2.காரணம்… அவர்கள் எல்லோரும் இந்த பூமியினுடைய பிடிப்பை அறுத்து விட்டுச் சென்றவர்கள்.

பூமியின் பிடிப்பை விட்டுச் சென்ற அந்த ஞானியரின் உயர்ந்த உணர்வலைகளைத் தூண்டச் செய்து… உங்களுக்குள் அதைச் செருகேற்றி…
1.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்தச் சக்தியை
2.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து இழுக்கப்படும் பொழுது
3/சிறு துளிகளாகச் சேர்ந்து பெரும் மழை போல அது அப்படியே படர்ந்து வருகின்றது.

அதன் மூலம் இப்பொழுது ஒவ்வொருத்தருடைய உடலுக்குள்ளும் சேர்க்கச் செய்வதுதான் முதலில் இருந்த தியானம். தியானம் இருந்த பிற்பாடு நம் முதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் மூதாதையரின் உடலின் உணர்வு கொண்ட சரீரம்தான் நாம். அந்த மகரிஷிகளின் சக்திகளைச் செருகேற்றிக் கொண்ட பின் நம் மூதாதையரின் உயிராத்மாக்களை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று உந்தித் தள்ள வேண்டும்.

அவர்கள் உயிராத்மா சூட்சும நிலையில் உள்ளது. நம் உடல் எந்திரம் போன்று உள்ளது. நாம் எந்திரமாக உந்தித் தள்ளும் போது மூதாதையரின் உயிராத்மாக்களை விண்ணிற்கே செலுத்தி விடுகின்றோம்.

இப்படி நாம் செலுத்திப் பழகினால் அவர்களும் பிறவா நிலைகள் பெறுகின்றனர். அவர்கள் தவமிருக்கவில்லை என்றாலும் நம் உணர்வின் துணை கொண்டு அவர்களுடைய சந்தர்ப்பம் விண் செல்ல நேருகின்றது.

மனித வாழ்க்கையில் ஒன்றும் அறியாத மூடர்களாக இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறக்கூடிய தகுதி பெற்றவர்கள் ஞானியாகின்றார்கள்.

இதைப்போலத்தான் நானும் (ஞானகுரு) ஒரு படிப்பறிவு இல்லாதவன்தான். சந்தர்ப்பம் என் மனைவியினுடைய உடல் நிலை சரியில்லாத போது என் குருவின் (ஈஸ்வரபட்டர்) சந்தர்ப்பம் அவரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவரால் மனைவி எழுந்து அது நடமாடும் நிலையும் வந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு…
1.குருவின் ஈர்ப்பிலே நான் சிக்கப்பட்டு
2.அவர் உணர்த்திய உணர்வின் ஆற்றல்தான் சந்தர்ப்பம் நான் இதைப் பெற முடிந்தது…
3.இதை எல்லாம் என்னால் பேசவும் முடிகின்றது.
4.ஏட்டுச் சுவடிகளிலோ மற்றவைகளைக் கற்றுணர்ந்தோ நான் இதைப் பெறவில்லை…. நான் அதைப் பேசவும் இல்லை.

குரு காட்டிய அருள்வழி கொண்டு உணர்த்திய அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அனுபவரீதியாகக் கண்டுணர்ந்து என் உடலில் அனுபவித்த இந்த உண்மையின் நிலைகள் கொண்டுதான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே இந்தச் சக்தி பெற்றவர்கள் அனைவருமே நாம் முதாதையர்களை முதலிலே விண் செலுத்தினால் நாமும் அங்கே செல்கின்றோம்.

இதைப்போன்ற வலுவை நாம் ஏற்றிக் கொண்ட பின் நமக்குள் எத்தகைய துன்பம் நேரினும்… எத்தகைய துன்பம் கஷ்டம் வந்தாலும்… அதை நாம் மறக்க வேண்டும்.

அதை மறக்கச் செய்வதற்கு ஈஸ்வரா…! என்று உயிரின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகும்போது… அந்த உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறக்கூடிய தகுதியினைப் பெறுகின்றீர்கள்.

அத்தகைய தகுதி பெறத்தான் இந்தத் தியானம்…!

இதே மாதிரி நாம் ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைவை மேலே விண்ணிலே செலுத்தி அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இழுத்து நம் உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வை வலுப்பெறச் செய்தால் இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்கள் நீங்குகின்றன… இந்த வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகள் எல்லாம் நீங்குகின்றது.

பின் நாம் எதையெல்லாம் நினைவில் வைத்தோமோ… கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் அங்கே…
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டுமென்று எண்ணும்போது அங்கே செல்கின்றோம்.

மனிதன் அடைய வேண்டிய எல்லை அது தான்…!

Leave a Reply