நம் ஆன்மாவைச் சுத்தம் செய்யும் “ஆத்ம சுத்தி” – செயல் முறை

Soul serene cleaning

நம் ஆன்மாவைச் சுத்தம் செய்யும் “ஆத்ம சுத்தி” – செயல் முறை

சூரியன் மற்றொரு பிடிப்பில் இல்லாததை எல்லாம் தனக்குள் கவர்கின்றது. கவர்ந்து தன் அருகிலே கொண்டு சென்றால் அதைப் பஸ்பமாக்கி விடுகின்றது. மீண்டும் பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பற்றி விசாரித்து அவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அது நமது ஆன்மாவில் நிற்கும். அதைச் சுவாசிக்கும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டும். (ஆன்மாவிலிருப்பதைத்தான் நாம் சுவாசிக்க முடியும்)

அவர் நோயால் வேதனைப்படுகின்றார். ஆனால் அவரின் வேதனையான உணர்வை நுகர்ந்து நாமும் வேதனைப்படத் தொடங்குகின்றோம்.

அந்த வேதனை நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு ஏங்கி எடுத்தால்
5.நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் இருப்பதை இழுக்காது…
6.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கவரப்படுகின்றது
7.வேதனப்படும் உணர்வின் ஈர்ப்புத் தன்மை குறைந்ததனால் நாம் ஈர்க்காமல் விட்ட
8.நம் ஆன்மாவில் இருக்கும் அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை
9.சூரியன் காலையில் அழைத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது
10.நமது ஆன்மா தூய்மையாகின்றது… தீமையான அணுக்கள் வளராது தடுக்கின்றது
10.தீமையான அணுக்களுக்கு உணவு போகாமல் தடுக்கின்றது.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்கிவிட்டு அந்த நோயாளியைப் பார்த்து.. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீ பெறுவாய்… உன் நோய் நீங்கிவிடும்… நீ நலமாவாய்…! என்று சொல்ல வேண்டும்.

இந்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழியாக எண்ணி எடுக்கும் போது
1.தீய அணுக்களுக்குப் போகும் வேதனையை உருவாக்கும் உணர்வுகள் தடைப்படுத்தப்படுகின்றது.
2.நம் ஆன்மாவிலிருந்து விலக்கித் தள்ளியதைச் சூரியன் காலை ஆறு மணிக்கெல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றது.

தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல் தடைப்படுத்தப்படும் போது தீய அணுக்களின் வளர்ச்சி குறைந்துவிடும். பரமாத்மாவும் தூய்மை ஆகின்றது.

இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தடுத்து நிறுத்த…
1.நீங்கள் எண்ணும்போதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றீர்கள்.
2.உங்கள் உயிர்… துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலில் அணுக்களாக உருவாக்குகின்றது.
3.தீமைகளில் இருந்து நீங்கள் விடுபடும் ஆற்றலைப் பெறுகின்றீர்கள்.

இதைத்தான் ஆறாவது அறிவு… (முருகன்) “பிரம்மாவை சிறைப்பிடித்தான்…! என்று சொல்வது. நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக நின்று அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தோமென்றால்… நமக்குள் தீமையை நீக்கிடும் அத்தகைய நிலைகள் பெறுகின்றது.

தீமையை நீக்கிடும் ஒளியான அணுக்களை நமக்குள் பெருக்கினால் “துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியாக இருக்கின்றதோ…” அதைப்போல நாமும் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் அரும்பெரும் சக்தி அதிகாலையில் இந்தப் பூமியில் பரவுகின்றது. ஆகவே கணவன் மனைவியும் காலை துருவ தியான நேரங்களில் இதைப் போன்று எடுத்துப் பழகுங்கள்.

அந்தக் காலை நேரத்தில் உங்கள் உணர்ச்சிகளை… உங்கள் எண்ணங்களை… துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி… அந்த உணர்வினை உங்கள் கண்களால் பதிவாக்கி நுகருங்கள்,

கண் வழி நுகர்ந்ததை உயிர் வழி சுவாசிக்கும் பொழுது உயிர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யும். அந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம் என்பது.

1.உயர்ந்த உணர்வினை உங்களுக்குள் உருவாக்கினால் இருளை அகற்றும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்.
2.வானுலக ஆற்றலைப் பற்றுடன் பற்றினால்
3.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

Leave a Reply