அன்றைய ஞானி எப்படித் தன் உயர் ஞானத்தால் ரிஷி சக்தி பெற்றான்..? இன்று நம் நிலை என்ன…?

WORLD PROTECTION

அன்றைய ஞானி எப்படித் தன் உயர் ஞானத்தால் ரிஷி சக்தி பெற்றான்..? இன்று நம் நிலை என்ன…?

 

அன்று பேராசையின் நிலைகள் கொண்டு… பொருளுக்காக ஏங்கி அரசனாக இருந்து ஆட்சி செய்தவன் தான் அத்திரி. தன் குடிமக்களினுடைய ஆசையை நிறைவேற்றித் தன் புகழுக்காக ஏங்கியவன் தான் அத்திரி

இருந்தாலும் தன்னுடைய மக்களின் ஆசை தன்னுடைய பிள்ளை என்ற நிலைகளை மறந்து தன்னுடைய ஆசையென்ற நிலையையே வளர்த்துக் கொண்டான்.

அவன் செய்யும் தவறின் நிலைகள் தாங்காது அங்கே குடிமக்கள் வாடி வதங்கிக் கொண்டிருக்கப்படும்போது பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளை உணரத் தொடங்குகின்றான்.

மனிதன் இறந்தபின் என்ன ஆகின்றான்…? என்ற நிலைகள் சிந்திக்கின்றான்… உணர்கின்றான். அரசைத் துறந்து காட்டுக்குள் சென்று கடுந்தவங்கள் செய்து அகஸ்தியரின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் பெறுகின்றான்.

1.ஒவ்வொரு மனிதனையும் மகிழச் செய்வதற்கு என்ன வழி…? என்று அறிந்து
2.மீண்டும் மக்கள் மத்தியிலே ஊடுருவி வந்து
3.தன் உணர்வின் நல் எண்ணத்தைப் பாய்ச்சி ஒவ்வொரு மக்களையும் மகிழச் செய்து
4.அந்த மகிழ்ச்சியான எண்ணத்தைத் தான் சுவாசித்து
5.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி
6.தன் உயிராத்மாவின் நிலைகளை ஒளியாக மாற்றி விண் சென்றார் அத்திரி மாமகரிஷி.

அன்று அரசனாக இருந்த நிலையில் எல்லை கடந்த நிலைகள் சென்ற பின் தான் தன்னை உணர்ந்து… அரசைத் துறந்து… உயர்ந்த ஆற்றலைப் பெற்று விண்ணுலகம் சென்றார் அத்திரி.

அது போன்று தான் இன்று மிகவும் விஷத் தன்மையான ஆற்றல்மிக்க நிலைகள் பரவிக் கொண்டுள்ளது. ரேடியோ டி.வி. இவைகளை எந்த அளவுக்குக் கவனிக்கின்றோமோ அந்த அலை வரிசைகள் எல்லாம் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞானிகள் பூமிக்கு வெளியிலே பல செயற்கைக் கோள்களை அமைத்துள்ளனர். அதன் மூலமாகத்தான் இன்று டி.வியும் ரேடியோவும் மற்றதும் நாம் பார்க்க கேட்க முடிகின்றது.

இருந்தாலும் அந்தச் செயற்கைக் கோள்களை அமைத்த நிலைகள் கொண்டு அதன் மூலம் மற்ற விண்ணிலிருக்கும் விஷத் தன்மையான நிலைகளும் அதிலே கலக்கப்பட்டு ஒலி/ஒளி பரப்படும்போது சிறுகச் சிறுகச் சேர்க்கின்றனர்.

செயற்கைக் கோளின் வழியாக வரும் அலைகளை வீட்டிலே அமர்ந்த இடத்திலிருந்து ரேடியோவும் டி.வி.யும் வைத்து ரசித்துக் கொண்டிருக்கின்றோம்.

உணர்வைத் தூண்டும் நிலைகளில் நாம் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில எதிர்நிலையான கதிர்வீச்சுகளை அவைகளில் கலந்து விட்டவுடனே கேட்டுக் கொண்டிருப்போரின் புத்திகள் சிதறிவிடும்.

என் பிள்ளை எது…? என் வீடு எது…? என்ற நிலையில் எல்லாவற்றையும் நொறுக்கி விட்டுத் தன் பிள்ளைகளையும் கொன்று விட்டு… இது என்ன உலகம்…? என்ற இருண்ட நிலைகளுக்குப் போகும் காலம் நெருங்கிவிட்டது.
1.கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
2.இது கூடிய சீக்கிரம் நம் விஞ்ஞானத்தில் நடக்கும்.

விஞ்ஞானிகள் எல்லாவற்றையும் கண்டு கொண்டார்கள்… பேரண்டத்தின் நிலைகளையும் கூடக் கண்டு கொண்டார்கள். இவர் (ஞானகுரு) என்ன பைத்தியக்காரர் மாதிரி எதையோ சொல்கிறார்…! என்று நினைக்க வேண்டாம்.

ஆனால் அந்த மாதிரியான அழிவின் நிலைகள் நெருங்கிவிட்டது…! இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மெய் ஒளியைப் பெற்றால் தான் முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காப்பதற்காக வேண்டி நமது குருநாதர் காட்டிய முறை கொண்டு சில உணர்வுகளினுடைய நிலைகளில் தொடர்பு கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

குருநாதர் எமக்குத் தெரியாமல் எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ அதே மாதிரித் தான் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தெரியாமலே பல சக்திகளை உங்களுக்குள் ஊட்டிக் கொண்டே இருக்கின்றேன்.

1.ஆகவே விஞ்ஞானத்தால் விளைந்த அந்த அலைகள்
2.உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது அதை மாற்றும் நிலைக்கு நாம் வர வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது தினசரி எடுத்துக் கொள்ளுங்கள்
4.நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டியபின் மகரிஷிகளின் ஒளியை நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் பெறுங்கள்.
5.அந்த அத்திரி மாமகரிஷியின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

Leave a Reply