ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

soul eswaran

ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

அகண்ட அண்டம் இருண்டதாக இருப்பினும் அண்டத்தின் நிலை கோளாகும்போது இருண்ட நிலை தான். ஆனால் அந்தக் கோளின் தன்மை
1.நட்சத்திரமாகும் போது ஒளியின் நிலை அடைகின்றது.
2.நட்சத்திரமாகும் போது உணர்வை வளர்க்கும் நிலைக்கு வருகின்றது.

இருண்ட நிலையில் இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கோள்களில் புழு பூச்சிகளாக உருவானால் அதுவும் இருண்ட நிலை தான். அதே சமயத்தில் அதிலே பரிணாம வளர்ச்சிகள் அடைந்து… அடைந்து…
1.உணர்வின் தன்மை கொண்டு அறிவின் தன்மை கொண்டு உடலாகும் போது நட்சத்திரம்
2.அதாவது நாம் மனிதனாகும் போது நட்சத்திரம்
3.மனித நிலையில் அனைத்தையும் பக்குவப்படுத்தி உணர்வை ஒளியாக மாற்றும் நிலை பெற்றால் நாம் இவ்வுலகின் சூரியன் ஆகின்றோம்.

ஆகவே உணர்வின் தன்மை உயிராக உருவாக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான நாம் ஒவ்வொருவரும் ஈசனாக மாற வேண்டும். நம் உணர்வு ஒவ்வொன்றையும் ஈசனாக மாற்றிடல் வேண்டும்.

உயிர் ஈசனாக இருந்து உணர்வின் அறிவை ஊட்டுகின்றது. ஆறாவது அறிவின் தன்மை இருளை அகற்றும் உணர்வாக வருகின்றது.
1.அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு இந்த உயிர் என்றும் அழியா நிலைகள் கொண்டு வந்தது.
2.உயிரின் துணை கொண்டு அருள் ஒளியின் உணர்வாக
3.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். ஆக

நாம் எண்ணியதை நமக்குள் உருவாக்குவது நமது உயிரே. எண்ணிய வழிப்படித் தான் இந்த உடலை உயிர் இயக்குகின்றது.

ஆகவே நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குவோம். அருள் ஒளியின் சுடராக மாறுவோம். பிறவியில்லா நிலைகளை அடைவோம். அண்டத்தில் அகண்ட அண்டத்தில் என்றும் பெரு வீடு என்ற நிலையை அடைவோம்.

1.இதைப் படித்துப் பதிவாக்குவோர் அனைவரும் மகானாக வேண்டும்… மகரிஷிகள் ஆக வேண்டும்.
2.உயிரின் தன்மை ஈசனாக மாற்ற வேண்டும்
3.ஒவ்வொரு அணுக்களையும் ஈசனாக மாற்ற வேண்டும்.

அருள் வழியில் அருள் ஞானத்தின் தன்மை உங்களுக்குள் வளர்த்தால் அந்த ஈசன் என்ற நிலை வரும்போது இதே உணர்வுகள் நோயுற்றவருக்குள் சென்றாலும் அங்கே ஈசனாக… அருள் ஒளி சுடரின் தன்மையாக அவர் நோயை நீக்கி… ஒளியின் உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

1.நம் உயிர் ஈசனாக இருக்கின்றது
2.நமது உணர்வுகள் அனைத்தும் ஈசனாக வேண்டும்.
3.நம்முடைய சொல் ஒவ்வொரு உடலிலும் பாய்ந்து ஈசனாக மாற வேண்டும்.

ஆகவே அருள் ஒளியின் சுடராக மாற்ற வேண்டும் என்று நிலை கொள்ளுங்கள். யாரோ செய்வோர்…! எவரோ செய்வார்…! என்று எண்ண வேண்டாம். யாருக்கோ காசு கொடுத்து இதைச் செய்ய வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உணர்வின் வலுவைக் கூட்டினால் அதுவே உங்களில் உருவாக்கும். உங்கள் வலுவின் தன்மை பிறரின் தீமையைப் போக்கும்.

பொருளுக்காக பல மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலங்களைச் செய்கின்றனர். அதனால் பொருள் அவனுக்கு வருகின்றது.

அனைவருக்கும் சொல்கின்றான். இருந்தாலும் அவன் அழிகின்றான். ஏனென்றால் அவன் வளர்த்த சொத்தை அவன் பிள்ளையே அழிக்கின்றான். இலட்சம் இலட்சமாகச் சம்பாரித்தார்… எல்லாம் போய் விட்டது என்று நம் கண் முன்னாடியே பார்க்கலாம்.

1.ஏனென்றால் தவறான வழிகளில் செல்வத்தைச் செலவழித்தால் தவறான மகனே பிறக்கின்றான்.
2.தந்தையின் உணர்வை பிள்ளை தனக்குள் அங்கே கலக்கின்றான்.
3.அந்த உணர்வின் தன்மையில் சொத்தை இவன் அழிக்கின்றான் என்ற இந்த நிலைகள் தான் வருகிறது.

யாருக்காக நீங்கள் போராடுகின்றீர்கள்…? என்று சற்று சிந்தியுங்கள்.

1.உங்கள் உயிரின் தன்மைக்காகப் போர் செய்யுங்கள்
2.அருள் வழியின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்
3.இருளை அகற்றும் ஆற்றலைப் பெறுங்கள்.
4.அருள் ஞானியின் உணர்வை உருவாக்கும் அதையே ஈசனாக மாற்றுங்கள்

உங்கள் உணர்வின் தன்மை மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து அவருக்குள்ளும் அந்த ஈசனின் உணர்வை அது உருவாக்கும்.

இதன் வழி உணர்வின் ஆற்றலைப் பெருக்குவோம்… குரு வழியில் செல்வோம்…. அருள் ஆனந்தம் பெறுவோம்…. அருள் வாழ்க்கையை நடத்துவோம்… இருளை அகற்றுவோம்…. மெய் உணர்வுடன் ஒன்றுவோம்… மெய் ஞானத்துடன் வாழ்வோம்…. மெய் உணர்வுடன் வாழ்வோம்…. மெய் உலகாக மாற்றுவோம்…. ஒவ்வொரு மனித உடலிலும் மெய்யை அறிந்திடும் உணர்வின் தன்மை பெற தியானிப்போம்… தவமிருப்போம்…!

நிறைந்த மனம் கொண்டு இதைச் செய்யுங்கள். அனைவரையும் நிறைவுபடுத்தும் மனமாக உயர்ந்த பண்புடன் சொல்லுங்கள். பண்பு கொண்ட உணர்வை வளர்த்திடுங்கள்.

இத்தகைய உயர்ந்த பண்புடன் அரவணைக்கும் நிலை கொண்டு நமக்கு மதம் அல்ல… இனம் அல்ல… என்று செயல்படுத்துங்கள். இனமும் மதமும் நம்மைப் பிரிக்கும்.

ஆனால் அருள் ஒளி நம்மை என்றும் ஒளியாக சுடராகப் போற்றும் என்ற இந்த நினைவு கொண்டு இந்த வாழ்க்கைப் பயணத்தை குரு வழியில் வழிபடுத்துவோம்.

நம் குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை அகற்றுவோம். அனைவரும் ஒன்றென்ற நிலைகளில் உருப்பெறச் செய்வோம்.
1.அனைவரையும் மகிழ்சி பெறச் செய்யும் உணர்வினை உருவாக்கும் ஈசனாக
2.நம் உணர்வின் தன்மை ஒவ்வொரு உடலிலும் ஈசனாக உருவாக வேண்டும்.

அருள் ஒளிச் சுடராக நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு நாம் எண்ணுவதே நமக்குள் ஈசனாகின்றது. அந்த அருள் வழியின் நிலைகள் வளர வேண்டுமென்ற நிலைகள் கொண்டு இதை மனதில் வைத்துக் குரு அருளின் துணை கொண்டு நாம் இதைச் செயலுக்குக் கொண்டு வருவோம் என்ற உறுதி எடுத்துக் கொள்வோம்.

Leave a Reply