பிறர் சொல் நம்மை இயக்காதபடி தடுக்கும் ஒரு பயிற்சி
ஒருத்தர் உடலில் ஆவி (ஆன்மா) இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போர் நாம் அவரிடம் பேசினால் அங்கே போகாதே… போகாதே…! என்று மற்றவர்களிடமும் சொல்லும்.
நாம் அவரிடம் பேசினால் போதும்… நம் உணர்வுகள் பட்டவுடனே… போகாதீர்கள்… போகாதீர்கள்…! என்று சொல்லும். காரணம்… அதற்கு ஆகாது.
அதே உணர்வை நாம் கேட்டோம் என்றால்…
1.மகரிஷிகளின் அருள்சக்தி அது பெற வேண்டும்
2.அது இருள் நீங்க வேண்டும்
3.பொருள் காணும் உணர்வு வளர வேண்டும் என்று எண்ணி
4.ஒரு பத்து தடவை செய்துவிட்டு உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.
அப்புறம் தன்னாலே மயங்கி விழுந்தாலும் விழும்…. போய் விடும்….! ஏனென்றால் சில சாப அலைகள் ஒருவருக்கொருவர் பாய்ந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது.
அந்த மகரிஷிகள் தனக்குள் கோடி… கோடி… கோடி…! என்று பல கோடி உணர்வுகளைத் தனக்குள் ஒளியாக மாற்றியவர்கள். ஆகவே அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் எடுத்து இதை அவருக்குள் புகுத்த வேண்டும்.
அப்படிப் புகுத்தினோம் என்றால் அவர்கள் உணர்வு நீங்கும். “புகுத்த வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் வலுப் பெறும். இந்த அலைகள் படரும். நம் நினைவு அங்கே மகரிஷிகள் பால் போகும்.
ஆகவே… எதை எடுத்தாலும்… நாம் அந்த விண்ணின் பற்றிற்கே வருகின்றோம்…!
இல்லையென்றால் நம் வாழ்க்கையில் இப்படி இருக்கின்றார்களே…! என்ற இந்த நிலைதான் இங்கே வரும். இதை மாற்ற வேண்டும்.
ஆகவே…
1.அந்த விண்ணின் பற்றுடன் ஒவ்வொரு நிமிடத்திலேயும் இதைப்போல எண்ணி ஆத்ம சுத்தி செய்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இந்த நினைவினை எடுத்து இங்கே கொண்டு வர வேண்டும்.
அதாவது… இங்கே பேசிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். எங்கே…?
பயிற்சி:
1.கண்ணின் நினைவினை விண்ணிலிருந்து சிந்தனையை எடுத்துப் பாருங்கள்.
2.அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்ற மாதிரி இருக்கும்
3.செவிகள் கேக்கும்…. இரண்டும் கலக்கும்…. அதை உணர்த்தாது…. வந்தாலும் அது நம்மை இயக்காது.
4.சரி…! என்று எதிர் பதில் சொல்லச் செய்யும்.
அவர்கள் பேச்சை நீங்கள் கேட்கும்போது நேராக மட்டும் அவர்களைக் கண்ணுற்று மட்டும் பார்க்காதீர்கள். (இது முக்கியம்)
சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டே இருங்கள். அப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதனுடன் இணைத்தீர்கள் என்றால்
1.அது உங்களை இயக்காதபடி அப்புறம் உங்கள் சொல்லால் சொல்லும்போது அது இயங்கும்.
2.அவர்களை இயக்கி மாற்றிவிடும்….! ஏனென்றால் இந்தப் பதிவுகள் நமக்கு அதிகம் தேவைப்படும்.