“செயற்கை அறிவு” கொண்ட மனிதர்களாகவே மாறிக் கொண்டிருக்கும் இன்றைய மனித இனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

silicon-valley

“செயற்கை அறிவு” கொண்ட மனிதர்களாகவே மாறிக் கொண்டிருக்கும் இன்றைய மனித இனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இக்கலியின் கடைசிக் காலத்தில் மனித ஆத்மா உயரும் ஞான போதனை வழித் தொடர் அற்று மனித எண்ணங்களும் ஆவி உலகில் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களும் செயற்கை விஞ்ஞான ஒலி ஈர்ப்பில் உணர்வைச் செலுத்தியே இன்று இயங்கி வருகின்றது.

ஆகையினால் இன்றைய மனித உணர்வின் சுவாசமே இயந்திர கதியின் ஒளி ஈர்ப்பில் உணர்வெடுக்கும் எண்ண சுவாச அணுக் கதிர்களாகத் தான் சுவாசத்திலிருந்து வெளி வந்து கொண்டுள்ளது.

இப்படி…
1.அன்றைய இயற்கைத் தாவர நறுமண மூலிகைகளின் தொடர்பற்ற நிலையில்
2.இயந்திர ஓட்டச் செயற்கை மனித நிலையில் வெளிப்படும் சுவாச அலையின் அணுக் கதிர்களிலிருந்து
3.அதிலிருந்து வளரவல்ல உயிரணுக்களே கலி மனிதன் வெளிப்படுத்தும் அலைக்குகந்த
4.புதிய புதிய குறுகிய எண்ண ஆசைகள் கொண்ட ஞானச் செயலற்ற ஜீவ ஜெந்துக்கள் தான்
5.தற்பொழுது வளரும் ஜீவ அணு உயிர் வளர்ப்புகளும் தாவர இன வளர்ப்புகளும்…!

இந்தத் தொடரிலேயே செல்லும் நிலை தான் இன்றைய காலமும் இனி வரும் காலமும்…!

பல நூறாண்டுகளுக்கு முன்… மனித உருவங்களும் மனிதனைக் காட்டிலும் மிருக உருவங்களும் இன்றுள்ள நிலையைக் காட்டிலும் உருவத்தில் வளர்ந்து வண்ணமும் பொலிவும் மிக்க ஒளியுடன் மிளிர்ந்தன.

இராமாயணக் காவியத்தில் வான்மீகியார் எழுதிய குணத்தின் அடிப்படைக் கதாபாத்திரமே அந்தந்தக் குணத்திற்கொப்ப எண்ணத்தில் குறுகியவருக்குக் “கூனி” என்றும் “சகுனி” என்றும் (வியாசர்) காட்டினார்கள்.

எண்ணத்தில் உயர்ந்தவருக்கு அவரின் உருவ அழகை இராமனாகச் சித்தரித்துக் காட்டினார் வான்மீகியார்.

ஆனால் இன்றைய கலி ஓட்டத்தில் “இயந்திரத் தொடர்பு கொண்ட… செயற்கை ஒலி ஈர்ப்பில்…” வாழக்கூடிய மனித எண்ணங்களின் உணர்வுகள் தான் அதிகமாகச் சுழன்று கொண்டுள்ளது.

இதன் தொடர்பில் செலுத்தப்படும் வழித் தொடர் வளர்ச்சியின் வழி முறையில் எந்தச் செயற்கை ஒலியை அதிகமாகக் கேட்டு அவ் ஒலி ஈர்ப்பின் சுழற்சியில் சுழல் கொண்டு மீண்டும் பிறப்பிற்கு வரும் பொழுது…
1.ஞானத்தின் வளர்ச்சி கொண்ட மக்கள் பிறப்பதைக் காட்டிலும்
2.தன் ஞானமற்று விஞ்ஞான வேட்கை வழி தந்த உணர்வு ஈர்ப்பில் கர்ப்பம் கொள்ளும் சிசு நிலையிலேயே
3.விஞ்ஞான செயற்கை நிலைக்கொத்த கலி மக்கள் தான்
4.இனி வரும் காலப் பிறப்புகளும் கலி மாற்றப் பிறப்புத் தொடர்புகளும்.

அன்றைய காலங்களில் “ஆயகலைகள் அறுபத்தி நான்கு” என்று பிறக்கும் மக்களுக்குப் பயில்விக்கும் பயிற்சி ஞான போதனைகள் இருந்தது.

இன்றைய செயற்கைப் போதனையோ… தன்னைத் தான் நம்பாமல் செயற்கைப் பிடியில் நம்பிக்கை கொண்டு அந்தச் சுழற்சி ஓட்ட கதியுடன் மனிதனின் எண்ணம் சென்று கொண்டுள்ளது.

இதிலே சிக்குண்டு அந்த ஏக்கமுடனே இன்பத்தின் எல்லை எது…? என்று அறியாதபடி… வாழ்க்கையின் வேட்கையில் சுழன்றிடும் தன்மையை மாற்றி
1.ஆத்ம பலத்தின் உயர்வைக் கொண்டு
2.ஜீவ மனித எண்ண உணர்வின் ஞானம் கொண்டு அடையும் இன்ப நிலையின் வழித் தொடரை
3.இங்கே உபதேச போதனையாக உயரும் வழியைக் காட்டி
4.ஒவ்வொரு ஆத்மாவும் மனிதனுக்கடுத்த நிலையான “தெய்வ நிலை” பெறவல்ல வழித் தொடருக்கு வழி காட்டுகின்றோம்.

Leave a Reply