ஆண் பெண் பருவ கால வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

youth power

ஆண் பெண் பருவ கால வளர்ச்சியின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமியின் ஈர்ப்புக்குள் சரீர வாழ்க்கை உணர்வின் எண்ணத்திற்கு உட்பட்ட ஒரு உயிரணு அதன் வளர்ச்சியில் “வித்தாக… முற்றிய தன்மை” எத்தருணத்தில் அதற்கு ஏற்படுகின்றது…?

மனித உடல் பெற்ற பின்… ஆண் பெண் அமில ஜீவனின் கூட்டுடன் வளர்ச்சி கொள்ளும் அணு வளர்ப்பின் வலு நிலையானது கர்ப்பக் காலத்தில் தாயின் உதிரத்தில் சிசுவாக உருப் பெறுகின்றது.

பிறந்த பின்… உண்டு… உறங்கி… சுவாசித்து… மனித ஓட்ட நடைமுறை யாவையும் வளர்ச்சி கொண்டு பார்த்து… கேட்டு… சுவைத்து… வளரும் அந்தந்தக் கால வளர்ச்சி முற்றிய முதிர்வுக்குகந்த தவழ்ந்து… நடந்து… ஓடி.. பேசி… வளர்ச்சியுற்றுத் தன் அறிவின் ஞானத்தை உயர்த்திக் கொள்கின்றது.

அதே சமயத்தில் உடலின் உருவக வளர்ச்சியும்… உணர்வின் எண்ண அணு வளர்ப்பினால் எடுக்கவல்ல… வலுவின் முற்றிய தன்மையின்… ஆண் பெண் இரு பாலரின் எண்ணத்தின் வலு நிலைக்குகந்த உணர்வின் எண்ணத்தின் சமைப்பு நிலையில் “மாற்று வளர்ச்சி நிலையும்” பெறுகின்றது.

மாற்று நிலையின் காலம் என்பது… பருவ கால வளர்ச்சியே ஆகும்.

1.மனித இனம்.. வளர்ச்சியின் நிலையை அடையும்
2.அந்தப் பருவ காலங்களில் எடுக்கும்
3.உணர்வின் எண்ண குண உந்தலின் அணு வளர்ப்பு அமிலச் சேர்க்கையால்
4.மனித வாழ்க்கையின் ஆயுட்காலம் அமைந்து
5.அதுவே மனிதப் பிறப்பின் “பிறப்புப் பலன் தரவல்ல” காலமாகின்றது.

பிறப்பின் பலன் தரவல்ல காலம் என்பது உடலில் அணு வளர்ச்சியின் வலுக்கூடிய நிலையில்… பிறப்பின் பிறப்பு நிலையை வளர்க்கவல்ல அமிலக் கூறுகள் வளர்ச்சியுற்ற நிலையில்… ஜீவ சக்தியை ஜீவிக்கச் செய்யும் அந்த வளர்ச்சிப் பருவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் “பதினான்கிலிருந்து பதினெட்டு வயதிற்குள் தான்…!”

இரு சாராரின் ஞானத்தை எடுத்துச் செயல்படும் காலமும் அதே காலம் தான்…! அந்த வயதில் மனித உணர்வின் எண்ண வேட்கை (ஆசை) செலுத்தும் நிலைக்கொப்ப
1.உடலின் வலுத் தன்மையும்
2.ஆத்மாவின் வலுத் தன்மையும் கூடப் பெறும் தருணத்தில்
3.உணர்வின் எண்ணம் கொண்டு செயலாக்கும் ஆத்மாவின் பதிவு நிலை வலுத் தன்மை எல்லாமே அமையப் பெறுகின்றன.

அணுவின்… அணு வளர்ப்பின் வளர் தொடர் அணு சமைப்பு… சரீர மலம் தான் இந்த உடல் பிம்பக்கூறு. இக்கூறின் வலுவை எடுத்துக் கொள்வது ஆத்மா தான்.

1.ஆத்மாவின் உண்மை வலுவைக் கூட்டிக் கொள்ள
2.உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் பதிவு நிலை தான் “மனித வாழ்க்கை…!”

ஆகவே வாழ்க்கைக்கடுத்த மனிதச் சக்தியின் உயர் தெய்வ சக்தியான ஆத்மாவைக் கொண்டு உடலை இயக்கும் வழித் தொடர் ஞான அலையை வளர்க்கும் பக்குவத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

ஆனால் ஆரம்ப கால உணர்வின் உந்தலால் உட்படும் உயிரணு… தன் வளர்ச்சியின் வளர் நிலையின் சரீர எண்ண ஓட்ட உணர்வுப் பிடியில் வாழும் வாழ்க்கை கதியின் பிடிப்பிலேயே வாழ்ந்தால்… பாடத்தில் இது நாள் வரை உணர்த்திய படி…
1.உணர்வின் எண்ன வேட்கை (ஆசை உணர்வுகள்) சமைப்பில் எத்தனை காலங்கள் வாழ்ந்தாலும்
2.கண் காது மூக்கு வாய் இவற்றின் செயல் உணர்வு அணு வளர்ச்சி வார்ப்பாகச்
3.இந்தச் சரீர இயந்திர ஓட்டத்தின் இச்சையின் எண்ண ஓட்டத்திற்கு அடிமைப்பட்டே தான் வாழ்ந்திட முடியும்.

அதை மாற்றி அமைக்கும் நிலையாக… வாழ்க்கையின் வழித் தொடரிலேயே “சமமாக ஏற்கும் எண்ண உணர்வுடன்… மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பால்… உயர் ஞானிகளின் அலை ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்தி…” அதைப் பெறும் பழக்கம் வர வேண்டும்.

இந்தப் பூமி சமைக்கும் அலையுடன் ஒன்றி வாழும் இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பான நாம் வளர்ப்புடன் ஒன்றிய நிலையிலிருந்து காந்த மின் அலை ஒளித் தன்மையை ஆத்மாவின் வலுவாக வலுப்படுத்தும் வளர்ச்சி ஞானத்தைக் கொண்டிடல் வேண்டும்.

ஆகவே…
1.சரீர உணர்வு எண்ணத்தில் வாழும் வழி முறையிலிருந்து
2.ஆத்மாவின் இயக்க வலுவாகச் இச்சரீரத்தை இயக்கவல்ல வாழ்க்கை நிலைக்கு
4.வாழ்க்கை நிலை மட்டுமல்ல…! வளர்ச்சியின் வளர்ப்பான ஆதிசக்தியின் நிலைக்கே உயரலாம்.

Leave a Reply