இன்பங்கள் தான் நமக்குச் சொந்தம் என்றால் துன்பங்கள் எல்லாம் ஆண்டவனின் சோதனையா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

lord-eswaran-god

இன்பங்கள் தான் நமக்குச் சொந்தம் என்றால் துன்பங்கள் எல்லாம் ஆண்டவனின் சோதனையா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்தில் உள்ள இந்தப் பூமியின் எண்ண உணர்வு
1.செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்
2.விஞ்ஞானத்தை நம்பி வாழும் உரு நிலை பெறாமலும் இருந்திருந்தால்
4.வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித் தொடரினால்
5.நம் அனைவரது ஞானமும் உயரும் நிலை பெற்றிருந்திருக்கும்.

அப்படிப் பெற்றிருந்தது என்றால்.. இந்தப் பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே “மிகவும் உன்னத சக்தியாக…” இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களை வளர்த்து… மிக உயர்ந்த குணச் சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட… இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையாகப் பெற்றிருக்கும்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு மனிதனை மனிதனே அழித்திடும் தன்மைக்கு வந்து விட்டான்,

அழித்து என்பதன் பொருள்…
1.இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்களுக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வரவிடாமல்
3.பல காலமாகச் சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
4.இந்த மனிதனே அந்த மனிதக் கருவை அழித்து (கருத்தடை)
5.அதனை ஞானம் வளரவிடாமல் இழி நிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

மேலும்… தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில்…
1.இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும்
2.துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் தான்
3.எண்ணத்தில் கொண்டு வாழுகின்றர்கள் இன்றைய மனிதர்கள்.

இப்படிப்பட்ட வாழும் ஓட்ட நிலையினால்… எண்ணத்தில் ஏக்கமுடனும்… பேராசை எதிர் நிலையிலும் தான்… மக்களை வழி நடத்திச் செல்லும் “மத வழி போதனைகளும்… அரசியல் சுழற்சிகளும்…” சுழன்று கொண்டுள்ளன.

ஆனால் தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு உலகையே சிருஷ்டிக்க வல்ல “ஆதி முதலாம்… விநாயக சக்தி கொண்ட…” சொல் செயல் ஞானம் கொண்டவர்கள் தான் மனித ஆத்மாக்கள்.

பூமியில் இந்தச் சரீர வாழ்க்கையிலிருந்தே தன் ஆத்ம ஞானத்தை வளர்க்கும் தகுதி கொண்டவர்கள் தான்…!

எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் சேர்க்கையில் கருவாகி சரீரம் பெற்று வாழ்க்கை வழித் தொடருக்கு வந்தோமோ அதே தொடரில் ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும்
1.தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
2.உடல் இயக்க உறவு நிலையில் கரு தோன்றி வளர்வதைப் போல்
3.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையிலிருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு
4.ஞான வட்டமாக அவ்வலைத் தொடரை எந்த மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ
5.அந்த மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்…
6.ஜீவ சக்தியை வளர்க்கவல்ல வழி முறை ஆத்ம சக்தியை…
7.”ஆத்மச் சேர்க்கையைக் கொண்டு” செயல்படுத்த முடியும்…!

இதைத் தான் அன்றைய இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வான்மீகி மகரிஷியால் சூட்சமத்தால் லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தப்பட்டது.

அதே போல் காந்தர்வன் என்றும்… கன்னி என்றும்… கன்னி நீரில் வாழும் பொழுது மேகக் கூட்டத்தில் இருந்து விந்துகள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞானத் தெய்வக் குழந்தை பிறந்தது என்றும் அன்றைய சித்தர்களால் காட்டப்பட்டது.

கார்த்திகைப் பெண்கள் தான் முருகனை வளர்த்தனர் என்ற கதையில் சொல்லப்பட்ட உண்மைதனை…
1ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சமத்தை உணர்ந்தீர்கள் என்றால்
2.சிவ சக்தி கருத்தரிக்கவில்லை… சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
3.மறைக்கப்பட்ட பல உண்மைகளை எல்லாம் அறியலாம்… உணரலாம்.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்தி தான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ணம் தான் உலாவிக் கொண்டுள்ளதேயன்றி இன்று நடப்பவையும் அத்தன்மை தான் என்று அறிய வேண்டும்.

ஏனென்றால் ஜீவக் கரு எத்தனை கோடி ஆண்டுகள் எந்த மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும்… இங்கே உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்று தான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால் தான்
2.ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும் ரிஷித் தன்மையும் கொண்ட
3.ரிஷிபத்தினி… ரிஷித் தன்மையைக் கொண்டு தான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவ வித்து விருட்சகம்…!

Leave a Reply