பேய்.. பிசாசு… இரத்தக் காட்டேரிகள் உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul and body

பேய்.. பிசாசு… இரத்தக் காட்டேரிகள் உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பெரியோர்களின் வாக்குப்படி மிரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற சொல் கூற்று உள்ளது… அதன் தொடர் யாவை…?
1.பேயைப் பார்க்க முடியுமா…?
2.பிசாசு உண்டா…?
3.இரத்தக் காட்டேரிகள் வாழ்கின்றனவா..? என்பது யாவையும் உண்மைதான்.

தற்கொலை செய்து கொண்ட ஆவேச அலை உணர்வுடன் ஜீவன் பிரிந்த ஆவி உலக உயிர் ஆத்மாக்கள் சில இல்லங்களிலும் அவை வாழ்ந்த பழக்கப்பட்ட இடங்களிலும் அதன் எண்ண ஆசையைச் செயல்படுத்த வேண்டியவர்களின் தொடர் வட்டமுடன் இந்தக் காற்றலையின் சுழற்சியில் சுழன்று கொண்டே இருக்கும்.

அத்தகைய ஆவி உலக ஆத்ம உயிரின் அமிலக்கூறானது உள்ள இடங்களுக்கு சரீர ஜீவ பிம்ப உடல் கொண்ட எண்ண உணர்வுடைய மனிதன் பயம் கலந்த அச்ச நிலையுடன் பல உணர்வுகளில் செல்லும் பொழுது
1.ஆவி உலக ஆத்மாவின் அலைத் தொடரும்
2.சரீர பிம்ப உடலின் அலைத் தொடரும்
3.இவ் ஈர்ப்பலையில் மோதும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில்
4.ஜீவ சக்தி கொண்ட துடிப்பு நிலை பெற்ற எண்ண உணர்வுடன் அவ்வெண்ணம் மோதியவுடன்
5.இக்காந்த ஈர்ப்புக் குண மின் அலைத் தொடர்பு கொண்ட இச் சரீர கோள நிலையுடன் மோதியவுடனே
6.எந்தப் பயமுடன் இந்த ஆத்மா சென்றதோ
7.அந்தத் தொடர் அலைக்குகந்த எண்ண குண ஆவி ஆத்மாவின் அமிலக் கூற்றை
8.நிழல் படம் போல் இவ்வொலி நாத் சக்தி கொண்ட சரீர சுவாச மோதல் அதன் அலை மேல் பாய்ந்தவுடன்
9.அது பேசிய நாதத்தையும் (வாழ்ந்த காலத்தில்) அதன் நிழல் உருவை மனிதனால் பார்க்க முடியும். (இன்று காணும் ஒளிக்காட்சி ஒலி அலையைப் போல்)

இதைப் போன்ற தொடர் அலையில் இருந்தெல்லாம் மனித உணர்வுப் பிடி சிக்காவண்ணம் தன் ஆத்ம வலுவை… ஞான ஈர்ப்பு வழித் தொடர்பு கொண்ட “மகரிஷிகளின் தொடர் அலையுடன்…” வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய வலுக் கொண்ட ஜீவத் துடிப்பு ஆத்ம நிலை பெற்றுவிட்டால் நம் எண்ணமே நம்மைக் காக்கும் சக்தியாக வரும்.

எண்ணத் தொடர் அலையின் செயல் இல்லா நிலை (மனிதனுக்குள்) ஒரு நொடிப் பொழுதும் இல்லை.

நித்திரை உணர்வுகளிலும்… இச்சரீரச் செயல் நடைபெறும் வழித் தொடரில்… சுவாசமுடன் கூடிய உணர்வு எண்ண அலை ஈர்ப்பில் தொடர் கொண்ட நிலையுடன் தான் எண்ணச் சுழற்சி கொண்ட இயந்திரக் கோளமாக இந்த உடல் உள்ளது.

பிரபஞ்சத்தில் மற்ற கோளங்கள் எல்லாம் எப்படி நிற்காமல் ஓடிக் கொண்டே உள்ளனவோ அதைப் போன்றே
1.ஓடிக் கொண்டே உள்ள இவ்வெண்ண உணர்வு வளர்ப்பு நிலை
2.ஜீவ சக்தி கொண்ட மனித உடலுக்குத்தான் உண்டு.

ஆவி உலக ஆத்மாக்களின் எண்ண ஓட்டத்தின் வலு எப்படி உள்ளது…?

இன்று நாம் எப்படி சில ஒலிப் பதிவுகளை நாடாக்களில் பதிய வைத்து ஒலி பரப்புகின்றோமோ… அதைப் போன்று அவை சரீரக் கூறுடன் வாழ்ந்த காலத்தில்… தன் ஆத்மாவில் பதிய வைத்த அலைத் தொடர் நாதச் சேர்க்கையுடன் தான்… அதே தொடர்பு சுழற்சியுடன் அதே சுற்றலில் சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையில்… வளர் நிலை கொண்ட எண்ண சரீர உணர்வு இயந்திர மின் அலைத் தொடர்பு அவ்வலைத் தொடர்புடன் பொருந்தும் பொழுது தான் இவ் இயந்திரக் கோளப் பெட்டியின் (மனித உடல்) செயலைக் கொண்டு அதன் நிலை பெறுகின்றது.

இவ்வாவிகளின் சுழற்சி வலுக் கூடி அதன் தொடர்பு விட்ட செயலாகச் செயல் கொண்டுள்ள வழித் தொடர் ஜீவ ஆத்மாக்கள் தான் “இன்று பிறப்பில் வரும் ஆத்மாக்களின் தொடர் அலையே உள்ளது…!”

1.தன் ஞானத்தை வளர்த்து சித்து நிலை கொண்ட ஆத்மாக்களின் நற்சக்தியின் தொடர் அலையை அறியாவண்ணம்
2.பல வலுக் கொண்ட வெறி கொண்ட பக்தி இயக்க ஆத்மாக்களின் தொடர்பு தான் இன்று வலுவாகியுள்ளது.

Leave a Reply