நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது

GLORIOUS HUMAN SOUL

நாம் எடுக்க வேண்டிய “உயர் மின் காந்த அலையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணத்தைக் கொண்டு தான் உணர்வை அறிகின்றோம். உணர்வைக் கொண்டு தான் எண்ணம் செயல்படுகின்றது.

இவ்வெண்ணமும் உணர்வும் இயங்க… இந்தப் பன்னிரெண்டு வகை குண அமிலங்களின் நிலையினால்
1.எண்ணத்தைக் கொண்டு உணர்வும்…
2.உணர்வைக் கொண்டு எண்ணமும்… இயங்கி வாழும் ஜீவாத்மாக்கள் எல்லாம்
3.இக்குண அமிலத்தையே ஒருநிலைப்படுத்தி எண்ணத்தைச் செயல்படுத்த வழி பெற்றால் தான்
4.இஜ்ஜீவ உடலுக்குள் உள்ள காந்த மின் அலையின் ஈர்ப்பை அதிகமாகச் சேமிக்க முடியும்.

காற்றிலும்… நீரிலும்… ஒளியிலும்… இக்காந்த மின் அலையின் சக்தி இருப்பதனால் தான் பூமியின் ஜீவித சக்தியே சுழன்று ஓடுகின்றது.

மின்சாரம் காண… “இச்சக்தி அலையை அதிகமாகக் குவித்து” அதனை ஒளியாக்கித் தருகின்றனர் செயலுக்குகந்தபடி எல்லாம். அதே காந்த மின் அலையின் சக்தி தான் ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் உள்ளது.

நம் ஜீவ உடலுக்குள் உள்ள மின் அலையைக் காட்டிலும் மின் அலையைக் குவித்து மின்சாரமாகச் செயலாக்க அந்தக் காந்த மின் அலை உடலில் ஏறும் பொழுது (CURRENT SHOCK) அந்த ஜீவ உடலில் உள்ள அலையையும் எடுத்துக் கொண்டு உடலை ஜீவனற்றதாக்கி விடுகின்றது.

காந்த மின் அலை இல்லாவிட்டால் ஜீவத் துடிப்பே இல்லை.

எந்த வீரிய சக்தி கொண்ட மின் அலையும் உலர்ந்த மரத்திலும் ஜீவ சக்தியைப் பிரித்துப் பல உஷ்ணங்களை ஏற்றி வடிவமைத்த கண்ணாடிகளிலும் பாய்வதில்லை.

இதுவே சிறிது ஈரச்சத்து அதிலிருந்தாலும் உடனே அம்மின் அலை பாய்கிறது. இம்மின் அலையின் சக்தி எல்லா ஜீவ சக்தியிலும் அதனதன் வளர்ச்சிக்கொப்பக் கூடியும் குறைந்தும் உள்ளது.

1.இம்மின் அலையை எடுக்கும் முறையைக் கொண்டு
2.நம் எண்ணத்தை ஞானத்தில் செலுத்தினால் தான்
3.ஞானத்தின் ஈர்ப்பு நமக்கு ஜீவ சக்தியின் சுவாச அலையில் தாக்கி
4.சுவாச அலையினால் நாம் எடுக்கும் எண்ணம் கொண்டெல்லாம் நம் உயிரணுவுடன் மோதி
5.நாம் எடுக்க வேண்டிய ஞான சக்தியின் ஒளி காந்த மின் அலையை
6.நம் ஜீவ உயிரும் இந்த உடலின் பல கோடி அணுக்களும் எடுக்க முடியும். (இது முக்கியமானது)

இதன் தொடர்ச்சியை மேன்மேலும் கூட்டிச் செயல்பட்டு இந்த உடல் என்ற கூட்டை அழியா உடலாகக் காயகல்பத்தை உண்டு தான் போகனும்… கொங்கணவனும்… இவர்களின் நிலையை ஒத்த பலரும் செயல்பட்டனர்.

இச்சக்தி மின் அலையைப் பெறவே சித்து நிலை பெற்ற சப்தரிஷிகளுக்குள் ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் சென்ற வழி முறையின் ஈர்ப்பு சக்தியில் மாற்றம் இருந்தாலும்
1.அவ்வழித் தொடர் ஞானத்தில் சுழன்ற பிறகு ஒரே நிலையில் தான்
2.”ஒரே நிலையில் தான்” என்பது ஒரு நிலையான காந்த மின் அலையின் தொடர்ச்சியுடன் தான் கலந்தார்கள்.

ஆண்டவனின் சக்தியை ஒன்றே குலம்… ஒருவனே தேவன்…! என்றும் அவ்வாண்டவனுடன் கலப்பதற்கு ஜோதி நிலை கண்டால் அச்சக்தியைப் பெறலாம் என்றும் அன்று உணர்த்தினார்கள்.

அஜ்ஜோதி நிலை பெறும் வழித் தொடர் என்னப்பா…? ஜோதி நிலை பெற்று விட்டால் ஆண்டவனாகி ஆண்டவனுடன் கலந்து நின்று முற்றுப் பெறுவதுவா…?

ஆண்டவனின் சக்தி ஒவ்வொரு ஜீவத் துடிப்பிலும் இக்காந்த மின் அலையின் சக்தியுண்டு. ஆனால் அச்சக்தியை உணர்ந்து நம் ஜீவாத்மா உயிர்ச் சக்தியை நாம் எடுக்கும் எண்ண ஜெபத்தால் கூட்டி இந்த உடலில் உள்ள எல்லா உயிரணுக்களும் (பன்னிரெண்டு குண அமிலங்களும்) அச்சக்தி அணுவை வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

ஆனால் நம்முள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தை அதனதன் குணத்தின் செயலுக்கே நம் உணர்வையும் எண்ணத்தையும் செலுத்தினோம் ஆனால் இதே சுழற்சி வட்ட வாழ்க்கையில் தான் சுழல முடியுமே அன்றி பூமியின் ஈர்ப்பிலிருந்து மீளும் வழி இல்லை.

ஆக.. இந்த உலக ஆத்மாக்களின் குன்றிய எண்ணச் சுழற்சி பேராசை வாழ்க்கையில் தன்னையே மரித்துக் கொள்வதோடு அல்லாமல்… மெய் ஞானத்தை உணர்த்தி உலகாயும் ஒளியாயும் நீராயும் காற்றாயும் நாம் வாழ வழி அமைத்த சப்தரிஷிகளின் சக்திக்கே… தன்னை வளர்த்துப் படைத்த சக்திக்கே… ஊறு விளைவிக்கின்றான் இன்றைய மனிதன்.

தன் ஞானத்தை இக்காந்த மின் அலையின் ஈர்ப்பைப் பெற வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு ஜீவனுக்கும் முடியும். ஆனால் ஞானத்தை வளர்க்கவும் செயலாற்றவும் முடியாத இயற்கையிலே பல சக்திகளை அறிந்த மிருக ஜெந்துக்களுக்கு நமக்குள்ள (மனிதன்) சந்தர்ப்பம் இல்லை.

ஆனால்….
1.நம்மில் நாம் எந்த ஆண்டவனைக் காணத் துடிக்கின்றோமோ
2.அவ்வாண்டவனால் நமக்குள் பல சக்தி அலைகளை படைக்கப் பெற்று வழி வந்த நாம்
3.நம் நிலையை உணராமல் இன்று வாழ்கின்றோம்.

Leave a Reply