நம் முன்னோர்கள் மோட்சம் பெறுவதை எப்படி உறுதிப்படுத்துவது…?

Ursa major - Sabdharishi mandalam

நம் முன்னோர்கள் மோட்சம் பெறுவதை எப்படி உறுதிப்படுத்துவது…?

 

முதலிலே மூதாதையர்கள் மனிதனாகப் பிறந்தார்கள். தாய் தந்தையரை உருவாக்கினார்கள். தாய் தந்தையர் நம்மை உருவாக்கினார்கள். அந்தக் குல வழியில் தான் நாம் இன்று வந்துள்ளோம்.

நம் உயிர் ஒளியாக ஆனது. நுகரும் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற மனித உடலைப் பெற்ற நாம் நம் மூன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்தச் சூட்சமச் சரீரங்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். இது தலையாயக் கடமை…!

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள். ஒளியின் அறிவாக நிலைத்தவர்கள். பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல அருள் ஒளியுடன் ஒன்றி வாழச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்திட நம்முடைய உணர்வுகள் உறுதுணையாக இருந்திடல் வேண்டும்.

உதாரணமாகச் சிலர் எண்ணலாம். இது எப்படிச் சாத்தியப்படும் என்று…!

இன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டரில் அதில் உள்ள நாடாக்களில் எதெனெதன் உணர்வைப் பதிவு செய்கின்றோமோ அதை எல்லாம் சீராக இயக்கிக் காட்டுகின்றது. மற்ற இயந்திரங்களையும் இயக்கும் ஆணைகளையும் அது இடுகிறது. இதை ஒரு இராக்கெட்டில் உள்ள செயற்கைக் கோளுடன் பொருத்திவிடுகின்றனர்.

உதாரணமாக ஒரு கோள் இருக்கிறது என்றால் அல்லது நட்சத்திரம் இருக்கிறது என்றால் எதன் திசைப் பக்கம் இந்தச் செயற்கைக் கோள் அது செல்ல வேண்டுமோ அந்த நாடாக்களில் இங்கே பதிவு செய்துவிடுகின்றனர்.

அந்த நாடாக்களில் பதிவு செய்து இயந்திரத்தில் போட்ட பின் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.எத்திசையின் தன்மை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றதோ
2.அந்தத் திசையில் உள்ள கோள்கள் உமிழ்த்தும் உணர்வுகள் இதற்குள் பட்ட பின்
3.அதன் பாதையிலே அது அமைத்து அந்தக் கோளைச் சென்றடைகின்றது இவர்கள் இராக்கெட் மூலம் அனுப்பும் செயற்கைக் கோள்.

அங்கே வட்டமிட்டு அந்தக் கோளின் உணர்வுகளை நுகர்ந்தறிகின்றது. அங்கே தனக்குள் பதிவு செய்யும் அந்த நாடாவின் மூலமாக
1.தரையிலிருப்போர்கள் அதை ஆண்டென்னா போன்று கவர்ந்து இங்கே பதியச் செய்து
2.அதனின் பாதையைச் சீராக அமைத்து உருவாக்குகின்றார்கள்.
3.இப்படித்தான் விஞ்ஞானிகள் செயற்கைக் கோள்களைச் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களுக்கும் அனுப்புகிறார்கள்.

இதைப் போன்று தான் நம் மூதாதையர்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் அதனின் துணை கொண்டு அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும்.

அந்த அருள் ஞானியின் சக்திகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் “உந்தித் தள்ளி…!” இணையச் செய்ய வேண்டும்.

அங்கே சென்ற பின் இந்த உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. வழி காட்டிடும் அறிவின் ஒளியாக நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு அதற்கு வருகின்றது.

1.அதன் வழி கொண்டு அதன் வழியில் நம் முன்னோர்கள் அங்கே வளர
2.அவர்களின் உணர்வுகளை நமக்குள் பெருக்க
3.அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் அருள் ஒளி கொண்டு நம் இருளைப் போக்க நமக்கு உதவுவார்கள்.

இதற்கு முன் நாம் செய்யத் தவறிய நிலைகள் இருந்தாலும் பாசத்துடன் பண்புடன் நம் உடலுக்குள் அந்த உயிரான்மாக்கள் புகுந்து இருப்பினும் அதனை நாம் இந்த வழியில்..
1.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்று
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.நமக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்களுக்கும் அது கிடைக்கின்றது.
4.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைய இதனின் வளர்ச்சி அருள் ஒளிச் சுடராக நம்மையும் வாழச் செய்யும்.
5.அதுவும் வளர்ந்து அதனின் உணர்வு கொண்டு நாம் வெளியே சென்ற பின் அந்த ஆன்மாவும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
6.நாமும் அந்த வழியிலேயே சப்தரிஷி மண்டலத்துடன் இணையும் தருணம் பெறுகின்றோம்.

இதிலே சொன்ன முறைப்படி செய்வோர் நிச்சயம் இதனை உணரும் பருவம் பெறுவார்கள்.

Leave a Reply