சார்தாம் – இமயமலைப் பயணம்

chardham

சார்தாம் – இமயமலைப் பயணத்தில் பெற்ற இயற்கையின் பொக்கிஷ உணர்வுகள்

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் நம் ஞானகுரு அவர்கள் கேதார்நாத் பத்ரிநாத் ஜோஸ்மத் காசி ஹரித்துவார் ரிஷிகேசம் போன்ற பல இடங்களுக்குச் சென்று பல அனுபவங்களையும் பல ஆற்றல்களையும் பெற்றார். அதை எல்லாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தியும் உள்ளார்.

அவ்வாறு அவர் பெற்ற அந்த ஆற்றல்களை எல்லாம் பெறுவதற்காகவே இந்த இமயமலைப் பயணம் (சார்தாம் – நான்கு மலைகள் யமுனோத்ரி கங்கோத்ரி பத்ரிநாத் கேதார்நாத்) 19.08.19 முதல் 31.08.19 வரை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் பொழுதும்
1.மகரிஷிகள் பாதுகாப்பாக வழி நடத்தியதை உணர முடிந்தது.
2.விண்ணின் ஆற்றலை உணரும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
3.விண்ணின் ஆற்றல் மண்ணுலகில் எப்படி வந்து சேர்கிறது…? என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காசி கேதார்நாத் ஜோஸ்மத் உத்தரகாசி கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற இடங்களில் பல நல்ல அனுபவங்களும் ஆற்றல்களும் கிடைத்தது.

இமயமலையைப் பற்றிய இரகசியத்தையும் மகரிஷிகள் இங்கே செயல்படும் முக்கியத்துவத்தையும் அறிய முடிந்தது.
1.விண்ணின் ஆற்றல் நீராக மாறும் தன்மையைக் கங்கோத்ரியில் கண்கூடாகக் காண முடிந்தது.
2.கேதார்நாத்தில் விண்ணுலக சக்திகள் நமக்கு முன்னாடியே அங்கே உறைவதையும் ஆற்றலாக அலைகளாகப் படர்வதையும் காண முடிந்தது.
3.அதை நம் உயிராத்மாவில் சேர்த்து ஜோதியாக மாற்றும் உபாயமும் கிடைத்தது.

அந்த 14 நாட்களுமே மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை உடல் ஏற்றுக் கொண்டதும் பசியோ தாகமோ எல்லாமே ஒரு கட்டுக்குள் சீராக அமைந்ததும் ஒரு ஆச்சரியமான அனுபவம் தான்…!

இதன் மூலம் எந்த இடத்திற்குச் சென்றாலும் மாமகரிஷிகளின் அருளைப் பெற்று நாம் “நிலைத்திருக்க முடியும்…!” என்ற எண்ணம் வலுப் பெற்று விட்டது.

அங்கே உற்றுப் பார்த்து நுகர்ந்த இயற்கையின் பசுமையும்… மூலிகை வாசனைகளும்.. நீர் வளங்களும்… மலைகளும்… பனி படர்ந்த மலைகளும்… நீர் ஓடி வரும் வேகத்தில் அது கரைத்துக் கொண்டு வரும் ஸ்படிகக் கற்களும்.. மனதிலே ஆழமாகப் பதிவாகி விட்டது.

அதே போல் கந்தகப் பாறையில் நீர் ஓடி சுடு தண்ணீராக வருவதை யமுனோத்ரியிலும் கங்கோத்ரியிலும் காண முடிந்தது. குளிர்ந்த நீர் ஒரு பக்கம் ஓடினாலும் அதற்குப் பக்கத்திலேயே இந்தச் சுடு தண்ணீர் வருவது
1.நம் பூமித் தாயின் உள் சுவாச நிலைகளையும்
2.பூமியின் ஆற்றல்களையும் நேரடியாக அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவைகளை நினைக்கும் பொழுதெல்லாம் மலை உச்சிகளும் அவை கவரும் விண்ணின் ஆற்றல்களும் சுவாசத்தில் வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் உத்தரகாண்ட் மாநிலம் முழுவதுமே மலைகள் மட்டும் தான். சமமான பூமி அங்கே காண முடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் இன்றைய விஞ்ஞான உலகில் உள்ள செயற்கைகளை அந்த மலைப்பகுதிகளில் அதிகம் காண முடியவில்லை.
1.இயற்கையை முழுமையாக ஸ்பரிசித்த உணர்ச்சிகளும் இனம் புரியாத மகிழ்ச்சியும் கிடைத்தது.
2.ஒரு வேளை அன்று அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் பூமியெங்கிலும் இருந்திருக்குமோ…! என்ற உணர்ச்சிகளும் வந்தது.

நிறைவு நாளான 31.08.19 அன்று… இமயமலையில் பெற்ற சக்திகள் அனைத்தையும் குடும்பத்தைச் சார்ந்தோர்… இந்த நாட்டு மக்கள்… உலக மக்கள்… அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தோம்.

ரிஷிகேசத்தில் ஆயிரம் வருடத்திற்கு மேல் கடும் தவமிருந்த
1.அந்த ரிஷி விண் சென்ற ஆற்றலை
2.இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரான்மாவும் பெறவேண்டும் என்றும்
3.அந்த உயிராத்மாக்கள் அனைத்தும் விண்ணுலகம் செல்ல வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… என்று
4.விண் செலுத்தும் ஆற்றலைப் பெற தியானித்தோம்.

இந்தப் பயண அனுபவங்களைப் படிப்போர் அனைவரும் இமயமலையில் பாய்ந்து கொண்டிருக்கும் இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும்… விண்ணின் ஆற்றலும்… விண் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தியும் பெறவேண்டும்… அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும்…! என்று எல்லா மகரிஷிகளிடமும் வேண்டுகிறேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்

Lord vinayar

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்

 

ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது அதைச் சொன்னதும் நமக்கும் அந்தக் கோபமான எண்ணம் வருகின்றது. அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது. அது சமயம்…
1.ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொன்னோம் என்றால் ஒன்றுமில்லை.
2.ஏய்…ய்..! ஏண்டா இப்படிச் செய்கிறாய்…? என்றால் வெறுப்பு தன்னாலே வருகின்றது.
3.காரத்தின் தன்மை அதிகமாகின்றது.
4.ஆகவே சூடாகச் சொல்லும் பொழுது வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொல்லும் பொழுது அந்த உணர்ச்சி “ஏதோ தவறு செய்து விட்டோம்… போலிருக்கிறது…!” என்று வருகிறது.

சாதாரணமாகச் சொல்லும் பொழுது அரவணைக்கும் தன்மையாக வருகின்றது.
1.ஆக இந்தக் கோபம் சுவையை ஊட்டுகின்றது.
2.தன்னைத் திருந்தச் செய்கிறது.

இதைத்தான் நம்முடைய உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதைத் தெளிவாக்கப்படுகின்றது ஆலயங்களில். இந்த உடல் ஒரு ஆலயம். அதிலே எத்தனையோ குணங்கள் நமக்குள் இருக்கின்றது.

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை நாம் பார்த்தால் அந்த உணர்வு நமக்குள் வந்து பதிவாகி விடுகின்றது. உள்ளுக்குள் புகுந்து விடுகின்றது.

ஒருவன் கோபத்துடன் செயல்பட்டு மற்றவரை வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வைப் பார்த்ததும் அதே உணர்வு கோபத்துடன் அடுத்தாற்போல் வேதனைப்படும் சொல்லாகவும் வேதனைப்படும் செயலாகவே நமக்குள்ளும் மாறுகின்றது.

அங்கே சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல…! இங்கே நம் உடலிலேயும் வேதனையை உருவாக்கும் அணுவாகி உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லும் அணுவாக மாறுகின்றது.

எப்படிக் காடுகளில் புலி கரடி பாம்பு போன்ற பிராணிகள் மற்றவைகளைக் கொன்று சாப்பிடுகின்றதோ அது போல் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமை செய்யும் அணு மற்றதைக் கொல்கிறது.

ஏனென்றால் நம் உடல் ஒரு பெரிய காடு. எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை வளர்த்ததோ அதனின் மணம் அந்தக் குணம் அந்த அணுவின் தன்மையாகி ஒன்றுக்கொன்று போர் முறையாகி விட்டால்
1.ஐயோ… பளீர்.. என்று இங்கே (ஊசி குத்துவது போல்) மின்னுகிறதே
2.இங்கே உடலில் வலிக்கின்றதே… வயிறு வலிக்கிறதே… இது எல்லாம் வரும்.

போர் முறை வரப்படும் பொழுது அதைச் சீராக ஜீரணிக்கும் சக்தி இல்லாது போய்விடுகின்றது. உடல் உறுப்புகளின் இயக்கங்கள் தடைப்படுகின்றது.

ஒரு அரசன் ஒரு கிராமத்திற்குப் போகும் பொழுது அதை அடக்கி அங்கே தன் நிலைகளை எப்படிச் செயல்படுத்துகின்றானோ இதே மாதிரி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலுக்குள் அது போகும் பாதைகளில் அங்கே இருப்பதை எல்லாம் துரத்திக் கொண்டே செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதுகள் எல்லாம் எதிலிருந்து வந்தது..? என்று ஞானிகள் தெளிவாக்கியிருக்கின்றார்கள்.

எந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருகின்றதோ அது சீதாலட்சுமி… (சீதா என்றால் சுவை) அந்தச் சுவையை வளர்க்கும் சக்தியாக வளருகின்றது.

அதாவது கோப குணத்தை வெளிப்படுத்தினால் அது சீதா..! சூரியனின் காந்த சக்தி கோபத்தை எடுத்து வைத்துக் கொண்டு சீதாலட்சுமியாக மாறுகின்றது.
1.கோபிப்பவரைப் பார்த்ததும் சீதாராமா…
2.அந்தக் கோபத்தின் உணர்ச்சியின் வேகமாக அதே எண்ணங்கள் நமக்குள்ளும் வருகின்றது.

ஒருவன் கசப்பான செயலைச் செய்கின்றான். அந்த உணர்வுகள் சீதா லட்சுமியாக மாறுகின்றது. சுவாசித்ததும் சீதாராமனாக அதே கசப்பான வெறுப்பின் எண்ணங்கள் வருகின்றது. இது தனித் தன்மை.

அதே போல் பண்பு கொண்ட தெய்வீக உணர்வுகளை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்தால் சீதா…! அந்தத் தெய்வ குணங்களை… அந்தச் சுவையை எண்ணுகின்றோம். அப்பொழுது சீதாராமனாக நமக்குள் வருகின்றது.

அது எப்படி வருகிறது..?
1.இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.ஆலயத்தில் காட்டிய தெய்வ குணத்தை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இத்தகைய உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது அதே உணர்வலைகளை எடுத்து எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதைக் கலவையாக்கி நீங்களும் இதே மாதிரிச் சொல்கிறீர்கள்.

அப்பொழுது இந்த உணர்வலைகள் அந்த ஆலயம் முழுவதும் படர்கிறது. கோவிலுக்குள் இந்த உணர்வுடன் சென்றால் மகிழ்ச்சி ஊட்டும் உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.

ஆலயங்களை ஞானிகள் உருவாக்கியதன் நோக்கமே அது தான்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து.. அதிலே விட்ட குறைய இந்த ஜென்மத்தில் முடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Ultimate destination

பூர்வ ஜென்மப் பயனை வைத்து.. அதிலே விட்ட குறைய இந்த ஜென்மத்தில் முடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.