உருவத்தின் மூலம் அருவத்தின் சக்திகளை எடுக்கச் சொன்ன நிலைகள் காலத்தால் மாற்றப்பட்டு விட்டது

Sages power

உருவத்தின் மூலம் அருவத்தின் சக்திகளை எடுக்கச் சொன்ன நிலைகள் காலத்தால் மாற்றப்பட்டு விட்டது

 

மகரிஷிகள் அவர்கள் பார்வையில் தீமைகளை எப்படி அகற்றினரோ… எப்படி மகிழ்ச்சி பெறச் செய்தனரோ.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று அந்த உணர்வை ஒவ்வொருவரும் தனக்குள் சேர்த்துக் கொள்வதற்கே ஆலயம்.

மகரிஷிகள் அல்லாது நல்லதைக் காக்க முடியாது.

ஏனென்றால் அவர்கள் அத்தகையை பேராற்றல்களைத் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள். அதை நமக்குள் இணை சேர்க்கவில்லை என்றால் கோவிலில் நல்ல சக்திகளைப் பெற முடியாது.

அதற்காக வேண்டி ஒவ்வொரு கோவிலிலும் இன்ன ரிஷி செயல்படுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த ரிஷியைப் பற்றிச் சொல்கிறார்களா…? என்றால் இல்லை.

அன்று ஆண்ட அரசர்கள் மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையை எடுத்து ஆலயம் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

பழனியிலே “முருகா…!” என்று சொன்னால் அந்த ஆறாவது அறிவின் தன்மை தான் அது. ஆக உருவாக்கத் தெரிந்து கொண்டவன் போகன். அவனைப் பற்றி யாராவது நினைக்கின்றீர்களா…?

ஏதோ போய்ச் சாமியைப் பார்த்தோம் என்று வேடிக்கை பார்த்து வரும் நிலை தான். அங்கே பத்தோ ஐம்பதோ கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்தால் போதும்.

போகர் இங்கே தான் இருந்தார். அந்தக் காலத்தில் செப்புத் தகடில் எழுதி வைத்திருந்தார் என்பார்கள். ஆனால் போகன் வாழ்ந்த காலத்தில் எழுத்தே கிடையாது. ஆனால் இவர்கள் எழுதி வைத்திருப்பார்கள்.

1.ஏனென்றால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி எழுத்து கிடையாது.
2.அந்த எழுத்து எழுத வேண்டும் என்றால் கிரந்தம்.
3.கிரந்தம் என்றால் ஒரு செடி என்றால் அந்தச் செடியின் ரூபம்.

அந்தந்தச் செடியின் வடிவத்தைக் காட்டப்படும் பொழுது அதனதன் உணர்வை எடுத்து அதன் வழியே தான் இந்த உணர்வின் மணம்… எண்ணம் இதனுடைய குணம்… என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.

இதைத்தான் கிரந்தம் என்ற நிலையை அந்தக் காலத்தில் காட்டினார்கள்.
1.எதைக் கிரகித்ததோ அதனுடைய அந்தம்.
2.அதனின் இயக்கம் தான் கிரந்தம்.
3.அது தான் அதனுடைய முடிவு.

அந்தக் கிரந்தத்திற்கு இப்பொழுது வேறு வேறு வடிவம் (வட மொழி) கொடுப்பார்கள். கிரந்தம் என்று சொல்வதற்கு ஒரு செடியின் சத்து எங்கே எப்படி இருக்கிறது…? ஆக அதனின் மணம் குணம் தான் எண்ணம்.

1.மிளகாயைச் சாப்பிட்டால் ஆ…! என்ற சொல்லைச் சொல்கிறோம்.
2.அப்பொழுது அந்த எண்ணம் தான் வருகின்றது.
3.அந்தக் கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது
4.அதைச் சொன்னவுடன் அந்த எண்ணம் வருகின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…! கிரந்தம் என்றால் கிரகித்ததைப் பற்றி அன்று ஞானிகள் சொல்லியிருந்தால் இன்று அதை ஒரு மொழி என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

இப்படித்தான் ஞானிகள் கொடுத்த பேருண்மைகள் எல்லாம் காலத்தால் மாற்றப்பட்டு விட்டது. ஆக
1.ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணாது
2.உருவத்திற்குள் அவர்கள் காட்டிய அருவத்தின் சக்தியைப் பெற முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மறைந்த அந்த உண்மைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

Leave a Reply