நான் மிகவும் நல்லவன்.. உயர்ந்தவன்…! என்றாலும் பிறரின் குறை உணர்வுகள் வந்து விட்டால் நாம் எங்கே செல்வோம்…?

Protected cirlce of Polaris

நான் மிகவும் நல்லவன்.. உயர்ந்தவன்…! என்றாலும் பிறரின் குறை உணர்வுகள் ந்து விட்டால் நாம் எங்கே செல்வோம்…?

 

1.நாம் யாரையோ குறை கூறுகின்றோம்
2.எவரையோ குறை கூறுகின்றோம் என்று இருக்கலாம்.
3.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவாக அந்தக் குறையான உணர்வுகள நம் உடலில் உயிர் உருவாக்கிவிடும்.

யாரைக் குறையாக எண்ணினோமோ அந்தக் குறை உணர்வின் அணுக்களாக மாறுகின்றது. அது நாளடைவில் நம் இரத்தத்தில் கருவின் முட்டையாக மாறுகின்றது.

அது முட்டையாக மாறி…
1.எந்தெந்த உணர்வுகளில் எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
2.அதனின்றே உணர்வின் தன்மை இது இருப்பிடமாக வைத்து
3.அதன் துணை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டி இந்த இரத்தநாளங்களின் வழியாக உயிருக்கு அனுப்புகின்றது.

உயிருக்குள் தூவப்படும் பொழுது நாம் யாரைக் குறையாக எண்ணினோமோ அவை அனைத்தையும் உணவாகக் கொடுத்து இந்த உடலின் உறுப்புகளைக் குறையாக மாற்றி நம்மை வேதனைப்படச் செய்யும்.

பின் அந்த வேதனையிலிருந்து நாம் தப்புவதே மிகவும் கடினம். ஆகவே தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஒருவரைப் பற்றி அந்தக் குறையின் உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையிலேயும் ஒரு தொழில் செய்யும் பொழுதோ அல்லது மற்ற நிலைகளிலோ மேல் வலி… நோய்… மற்ற குறை… எல்லாமே இருக்கும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கின்றது.

அவரைக் குறையாக எண்ணிக் கொண்டிருந்தால் அந்தக் குறையைத்தான் இதிலிருந்து நாம் நுகர முடியும். அவர் முதலில் நம்முடன் அன்பு கொண்டு பாசம் கொண்டு பழகியிருந்தால் அந்தக் குறைகளை வேகமாக இழுத்துவிடும்.

ரேடியோ டி.வி.க்களில் ஒலி, ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது அதிலே எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ அந்த ஸ்டேசனைத் தான் எடுக்கும்.

அதைப் போல் தான் ஒருவருடன் நாம் பழகப்படும் பொழுது அந்தப் பதிவின் துணை கொண்டு நமக்குள் அவருடைய உணர்வுகள் எளிதாக வந்துவிடும்.

சுவை மிக்க பாலாக இருந்தாலும் அதற்குள் விஷத்தைக் கலந்து விட்டால் குடித்தால் அந்தப் பாலுக்கு வலு ஏது…? அந்த விஷத்தின் தன்மை போல் தான் உணர்வின் எண்ணங்கள் தூவப்பட்டு அங்கே விஷத் தன்மையை வளர்த்துவிடும்.

இன்றைய செயல் நாளைய சரீரமாகிவிடும். அதைத் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாக்குகின்றார்கள்.

நாம் எடுக்கும் உணர்வுகள் அணுவின் தன்மை அடைந்து விட்டால் தன் உணவின் தன்மையை அது எடுத்துத் தன் இனத்தின் தன்மையைப் பெருக்கப்படும் பொழுது அதன் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் அதிகரித்து நமக்குள் உருப்பெறும் உணர்வுகளை அது உருவாக்கி
1.நாம் எதை எண்ணினோமோ
2.அந்த எண்ணத்தின் வழியாகவே… அடுத்த சரீரத்தைப் பெறச் செய்யும்.

ஆகையினால் பிறரைப் பற்றிக் நாம் குறை கூறும் நிலையோ பிறருடைய நிலைகளை எடுத்து கொண்டால் “தான் உயர்ந்தவன்…!” (நல்லவன்) என்ற நிலைகள் இருப்பினும் அதை மாற்றிவிடும். அதாவது
1.பாதாம் உயர்ந்ததாக இருப்பினும்
2.அதை விஷத்தில் துவட்டி உணவாக உட்கொண்டால்
3.நம்மை மடியச் செய்துவிடும்… பாதாமிற்குச் சக்தியில்லை.
4.ஏனென்றால் விஷத்தின் தன்மையே ஆற்றல் கொண்டது.
5.ஒரு விஷத்தின் இயக்கமே உலகத்தின் இயக்கம்.

சூரியன் விஷத்தின் நிலையால் சுழற்சியின் வேகம் கூடினாலும் அதிலே உருவாகும் உணர்வுகள் நஞ்சினைப் பிரித்திடும் நிலை வருகின்றது.

சூரியன் தன் சுழற்சியால் ஏற்படும் உணர்வுகள் கொண்டு அந்த நஞ்சின் மேல் மோதப்பட்டு வெப்பத்தின் தணல் கூடப்படும் பொழுது விஷத்தைப் பிரித்து விடுகின்றது. (சூரியன் என்றால் நாராயணன்)

விஷத்தைப் பிரித்த பின் அது சிதறி ஓடினாலும் இந்த வெப்பத்தால் உருவான நிலைகள் “ஈர்க்கும் காந்தம்…” என்ற நிலைகள் வருகின்றது. அந்தக் காந்தத்திற்குப் பெயர் லட்சுமி.

காந்தமாகப்படும் பொழுது நகர்ந்து சென்று கோள்களின் விஷத் தன்மையைத் தனக்குள் (லட்சுமி) கவர்ந்து கொண்டாலும் விஷத்தை இந்தக் காந்தம் கவர்ந்து கொண்டால் அது “இலட்சுமணா…”. அது தான் ஒரு அணுவிற்குள் இருக்கும் இயக்கச் சக்தி…!

காந்தத்தால் கவர்ந்து கொண்ட நிலையாக இவ்வாறு ஒரு அணுவின் இயக்கமாகச் சூரியனிலிருந்து வெளிப்படுவதை (நாராயணன்) இந்த உலகத்தில் தன் ஒளியை அனுப்பிக் கொண்டேயிருக்கின்றது.

இப்பொழுது நான் (ஞானகுரு) பேசுகின்றேன் என்றால் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் சீதாலட்சுமியாக மாறுகின்றது. விஷம் அந்தச் சத்தின் (நாம் பேசியதை) மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அது ஞானமாகின்றது. அந்த ஞானத்தின் வழி கொண்டு தான் அந்த அணுவின் இயக்கம் இருக்கும்.

எதன் வழி கொண்டு எதனில் உருவானதோ அதன் வழி கொண்ட ஈர்ப்புக்குள் சென்று அதை வளர்க்கும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! ஒரு அணுவிற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இதைப் போல் தான் நாம் எண்ணும் எண்ணங்கள் நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.வேதனை என்ற உணர்வுகளோ
2.ஒருவரை வேதனைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு தன்னை மறந்து அதைச் சொன்னோம் என்றால்
3.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி இரத்த நாளங்களில் சுழலச் செய்கின்றது.

அதே போல்..
1.பிறரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணங்களோ
2.பிறரைத் துன்பப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களோ
3.பிறர் துன்பப்படுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணங்களை எவர் எடுத்தாலும் சரி
4.நானே பெரிய சக்தி பெற்றவனாக இருந்தாலும் அந்த விஷத்தை உருவாக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது
5.எனக்குள் இருக்கும் நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தும் நிலைகளே வரும்.

நல்லவைகள் எதைச் செய்தாலும் விஷத்தின் ஈர்ப்புக்குள் சென்று அந்த அணுக்களும் (விஷத்தை) உட்கொள்ளா நிலைகள் மறுத்து அந்த அணுக்கள் சோர்வடையத் தொடங்கிவிடும்.

அது சோர்வடைந்து விஷத்தின் தன்மை ஆட்கொண்டால் அனைத்தும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. விஷத் தன்மையாக மாறிய பின் நல்ல அணுக்கள் மடிந்து விட்டால் இந்த உடலை விட்டுச் சென்ற பின் விஷமான உயிரினங்களாகத் தான் பிறக்க நேரும்.

அதைப் போன்ற நிலைகள் ஆகாது தடுக்க வேண்டும் என்பதற்குத் தான்
1.விஷத்தை ஒடுக்கிய… நஞ்சினை வென்ற…
2.அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.உங்களுக்குள் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி எடுத்து உங்களுக்குள் சேர்த்து உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.
1.இது ஒன்றும் கஷ்டமில்லை.
2.சிறிது நாள் பழகி விட்டால் பின் தன்னாலேயே இது வரும்.

Leave a Reply