இக்ஷ்வாகு வம்சம் என்றால் என்ன…?

Ikshvaku

இக்ஷ்வாகு வம்சம் என்றால் என்ன…?

உயிரணு தோன்றி இப்பொழுது நாம் பரசுராமனிலிருந்து நவமி… ஒன்பதாவது நிலைகளில் இருக்கிறோம். எது…? அதாவது பத்தாவது நிலையை அடையக்கூடிய மனித உடலில் நாம் இருக்கிறோம். அதுதான் தசரதச் சக்கரவர்த்தி என்பது.

மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு நோயாளியைப் பார்க்கிறோம். அல்லது ஒரு கோபப்படுபவனைப் பார்க்கிறோம். பார்த்தவுடனே என்ன… ஏது…? என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்.

அதுதான் வசிஷ்டர்… (வசிஷ்டர் என்றால் கவர்ந்து கொண்ட சக்தி)
1.தசரத சக்கரவர்த்திக்குத் தான் தெரிந்து கொள்ள விரும்பிய உணர்வுகள்
2.அது கவர்ந்து கொண்ட சக்தியாக – வசிஷ்டர்
3.உயிரிலே பட்டு உணரும் தன்மை ஆகும்போது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்ம குரு.

கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலே பிரம்மமாகி அவன் எதைப் பேசினானோ
1.அவன் கோபமாப் பேசினால் நாமும் கோபமாகப் பேசும் சக்தி வருகிறது
2.அவன் வேதனைப்பட்டால் அந்த வேதனை உணர்வைத் திருப்பிச் சொல்வோம்.
(அது தான் வசிஷ்டர் பிரம்மகுரு)

பிரம்மகுருவின் மனைவி யார்…?
1.வசிஷ்டர் – கவர்ந்து கொண்ட உணர்வுகள் அணுவாக உருவானால் அதன் சக்தியாக அருந்ததி…!
2.கோபமாப் பேசிய உணர்வு இருந்தால் அதனுடன் இணைந்து
3.அந்தக் கார உணர்வுகளை நம் உடலிலே உருவாக்கும் என்பதைத் தான் இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

அதனால் தான் தசரதச் சக்கரவர்த்தி என்கிற போது ஒவ்வொரு தீமையிலிருந்தும் நாம் இச்சைப்பட்டுத் தப்பவேண்டும்… அதாவது
1.இச்சைப்பட்டு அந்த உணர்வைச் சேர்த்து இயங்கும் நிலைகள் என்பதை
2.”இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவன் தசரதச் சக்கரவர்த்தி…” என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

நம் சாஸ்திரங்களில் எவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள் என்று புரிந்து கொண்டால் போதும். மனிதன் உயர்ந்த நிலை பெற இராமாயணத்தில் எவ்வளவு பெரிய உண்மைகள் உள்ளது என்பதையும் உணரலாம்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரும் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று இச்சைப்பட்டு அப்படித் தப்பி வந்தது தான் இந்த உயிர்… “பத்தாவது நிலை அடையக்கூடியது…!”

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே கடவுள் யார்…? நம் உயிர் தான் கடவுள்…! நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ உள் நின்று அதை இயக்குகின்றது.

Leave a Reply