சாகாக்கலை பெரிதா… வேகாநிலை பெரிதா…!

Subtle state

சாகாக்கலை பெரிதா… வேகாநிலை பெரிதா…! 

நிறையப் பேர் சொல்லுவார்கள். “நாங்கள் சாகாக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு சாகாக்கலை தெரியுமா…?” என்று எம்மிடமே கேட்கின்றார்கள்.

போகர் சொன்னாராம்… சாகாக் கலையைப்பற்றி…! சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில் சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன்.

ஆகையால் அந்த மருந்தெல்லாம் போட்டு மந்திரங்களைச் சொல்லி போகர் காட்டிய வழியில் நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன். உங்களுக்கு என்ன தெரியும்…? என்பார்.

இவ்வாறு நான் சாகமாட்டேன் என்று சொன்னவர் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால் என்னமோ.. எதிலோ குறையாகி விட்டது… எனக்கு இப்படி வந்துவிட்டது…! என்பார்கள். இது சாகாக் கலை.

இப்பொழுது யார் இதை உணர்த்தினாரோ அவர் இறந்த பிற்பாடு இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வில் எண்ணிவிட்டு அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு இவர் போவார்.

அங்கு போனவுடன் சாகாக் கலையில் அவரும் இதே கதியாக அதைச் செய்தேன்.. இப்படியாகி விட்டதே…! என்று பைத்தியம் பிடித்த மாதிரி இரண்டு உணர்வும் சேர்ந்தவுடனே இருக்கின்றவனை எல்லாம் பைத்தியமாக்கி விடும்.

அவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் என்ன ஆவார்கள்…? இதைக் கண்டுபிடித்தேன்… என்று
1.கடைசியில் நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில்
2.மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக நீயும் வாயேன்…! என்று இழுத்துக் கொண்டு போகும்.
3,இது சாகாக் கலை.

யாம் (ஞானகுரு) இப்பொழுது உபதேசிப்பது கல்கி… – பத்தாவது நிலை. அடுத்து ஒளியாகி விட்டது. இனிப் பிறவி இல்லை. இது வேகாக்கலை

1.ஒரு மனிதன் எவ்வளவு முழுமையாக இருக்கட்டும்.
2.தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது…?
3.உடல் கருகிறது. உயிர் அழிவதில்லை

அணுகுண்டு போட்டுக்கூட வெடிக்கச் செய்கின்றான். ஒரு அணுவின் ஆற்றல் கதிரியக்கம். பாறைக்குள்ளிருப்பதும் கதிரியக்கம் தான்.

கதிரியக்கத்தினால்தான் தன் சக்தி எந்தப் பாறை மண்ணுக்குள் இருக்கின்றதோ எண்ணி இழுத்துத் தன் இனமான சத்து எதனுடன் கலந்து இருக்கின்றதோ அந்த உணர்வைத் தனக்குள் எடுத்துப் பாறையாக விளைகின்றது.

அதற்குள் தன் இயக்கத்தின் வலுக்கொண்டு அதனுடன் எது விளைந்து உருவானதோ அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரும்பு உலோகமும் உருவாகின்றது.

1.இதுவே அந்த நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய மற்ற பொருட்களுடன் கலந்து
2.மற்ற பொருள் உருவாக்கப்படும் பொழுது அந்த அணுவின் தன்மையைப் பிளந்து
3.கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டவன் விஞ்ஞானி.

அந்தக் கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துச் சேமித்து மீண்டும் வெடிக்கச் செய்யப்படும்பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தன் இனமான நிலைகள் எதுவோ அதிலெல்லாம் மோதும்.

அது மோதியபின் புயலைப் போன்று தான் எதனை உருவாக்கியதோ அதனுள் இருக்கும் உணர்வைக் கரியாக்கிவிட்டு தன் கதிரியக்கச் சக்தியுடன் இணைந்து சத்தை ஒளியாக எடுத்துக் கொள்ளும். இது கதிரியக்கச் சக்தி.

இதைப் போலத்தான் மெய் ஞானிகளின் உணர்வலைகளைக் கொண்டு வரப்படும் பொழுது உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து விட்டு அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றி
1.எத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் வந்தாலும் இந்த உணர்வின் தன்மை பிளந்து
2.உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது… இதுவே “வேகாக்கலை…!”

தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால் தீயிலே கருகிவிட்டாலும் அணு குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து அதனின் உணர்வு தசைகளைக் கருகச் செய்தாலும் அந்த உடலில் இருக்கும், உயிரை ஒன்றும் செய்ய முடியாது. “உயிர்” வேகாக் கலை பெற்றது.

அதனின் உணர்வு கொண்டு நமது உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை அணுவைப் பிளந்து அணுவின் தன்மை ஒன்று சேர்த்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது தன் இனத்தைப் பெருக்கும்

அதைப் போல அந்த மெய் ஞானி தன் உணர்வின் சக்தியை உணர்வின் எண்ணங்களை மாய்க்கச் செய்து உணர்வின் தன்மையை தன் ஒளியாக மாற்றி இந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு வேகாக்கலையாக
1.இன்றும் எதனின் நிலையாக நஞ்சுகள் வந்தாலும் அதனைப் பிளந்து
2.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வேகாநிலை அடைந்து
3.சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அணுகுண்டை வெடித்தபின் எந்த உலோகத்திற்குள் இருந்தாலும் அதை பிளக்கச் செய்து தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது.

இதைப்போலத்தான் அந்த மெய் ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை இந்த உணர்வுக்குள் இருப்பதைப் பிளந்து உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து அணுவின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.

மெய் ஞானிகள் அனைவரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து வேகாக்கலை என்ற நிலையை அடைந்தவர்கள்.
1.எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது,
2.எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும் தீயில் இட்டாலும் அவர்களைப் பாதிக்காது.

அவ்வாறு உணர்வின் தன்மை ஒளிச் சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும் அதனின் துணை கொண்டு
1.நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற வேண்டும்
2.ஒவ்வொருவரும் இந்த மனித உடலில் இருந்துதான் பத்தாவது நிலை அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் எமக்கு உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசித்து இந்த உணர்வைக் கேட்டறிந்த அனைவரும் அடுத்து கூட்டுத் தியானங்கள் இருந்து இந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் தகுதி பெற்றவர்கள் ஆகின்றோம். வேகா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம்.

Leave a Reply