“ஈஸ்வரபட்டர் சொன்னது…” என்று இங்கே பதிவாக்கும் கருத்துக்களைப் பற்றிய உண்மைகள்

Sages network connection.jpg

“ஈஸ்வரபட்டர் சொன்னது…” என்று இங்கே பதிவாக்கும் கருத்துக்களைப் பற்றிய உண்மைகள்

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (ஈஸ்வரபட்டர்) சொன்னது…!” என்று அவருடைய கருத்துக்களை இங்கே தொடர்ந்து பதிவு செய்து கொண்டு வருகின்றோம்.

இதைப் படிக்கும் அனைவருக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியதுள்ளது.

1.சிலர் தமிழில் புரியும்படியாக எளிய நடையில் பதிவு செய்யுங்கள் என்று அடிக்கடி கேட்கிறார்கள்.
2.அதே சமயத்தில் எந்தப் புத்தகத்திலிருந்து இதைப் பதிவு செய்கிறீர்கள் என்றும் கேட்கின்றார்கள்.

இந்தக் கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அவரால் வெளிப்படுத்தப்பட்டது தான். 1977லிருந்து 1985 வரையிலும் ஈஸ்வரபட்டரால் தியானத்தின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தான் இவை எல்லாம்.

கருத்துக்கள் கடினமாக உள்ளதே…! என்று அவரிடம் கேட்ட வினாவிற்கு
1.மெய் உணர்வுகளையும் சித்தர்கள் மகரிஷிகள் கண்ட இரகசியங்களை அப்படித்தான் கொடுப்போம்.
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி தியானத்தின் மூலம் என்னிடம் (ஈஸ்வரபட்டரிடம்) நினைவைச் செலுத்தினால்
3.எந்தக் கேள்வியாக இருந்தாலும் தக்க விடை கொடுக்கப்படும்..
4.நானே வந்து உணர்த்துவேன்…! என்று அவரே சொல்லியுள்ளார் (1985 ஆம் ஆண்டு)

ஆகவே புரியவில்லை… தமிழாக இல்லை… சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளது… என்று யாரும் குழம்ப வேண்டியதில்லை. தெரிய வேண்டும்… புரிய வேண்டும்… உணர வேண்டும்.. என்ற எண்ணம் வலுவாக இருந்தால் நிச்சயம் ஈஸ்வரபட்டருடைய தொடர்பு கிடைக்கும்.

அவருடைய நேரடித் தொடர்பு கிடைத்தால் தெரிந்து கொள்ள வேண்டிய எல்லா விஷயங்களையும் உணரலாம்.

ஆகவே அவருடைய கருத்துக்களை இங்கே பதிவு செய்வதன் நோக்கமே இதைப் படிப்போர் அனைவருக்கும்
1.ஈஸ்வரபட்டரின் தொடர்பு கிடைக்க வேண்டும்
2.அந்த மகரிஷிகளின் தொடர்பு கிடைக்க வேண்டும்
3.அவர்களுடன் ஒவ்வொருவரும் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பது தான்.
4.இந்தக் கருத்தும் அவர்கள் சொன்னது தான் (நான் சொல்லவில்லை)

அவர்களுடைய தொடர்பு வேண்டும் என்பவர்களுக்கு இதனுடைய உட்பொருளை நிச்சயம் உணர முடியும். படித்து அறிய வேண்டிய விஷயம் அல்ல. சுவாசித்து அறிய வேண்டிய விஷயம்.

அதாவது வாசித்து அல்ல… சுவாசித்து…!

பதிவு செய்யப்படும் ஈஸ்வரபட்டரின் கருத்துக்களை நான்கு அல்லது ஐந்து முறை வாசித்து அதன் பின் பதிவாக்கி அதன் பின் சுவாசித்து அதன் பின் தியானித்தால் “கடும் தவமிருந்தாலும் உணர முடியாத விஷயங்களை இங்கே காணவும் உணரவும் முடியும்…!”

என்னுடைய அனுபவம் இது தான்…!

Leave a Reply